Monday, March 28, 2011

இழந்த சொர்க்கம்‏

உல்லாசப் பயணிகளை மட்டுமல்லாமல், உலக பணக்காரர்களையும் கவர்ந்த நாடு சுவிட்சர்லாந்து. உலக நாடுகளின் கருப்பு பண முதலைகள் பலர், சுவிஸ் வங்கியில் ரகசிய கணக்கை துவக்கி,ஏராளமான பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்தியாவின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கிகளில் பல லட்சம் கோடி உள்ளதாக, அரசியல் கட்சிகளும், பொருளாதார நிபுணர் களும் அலறிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை, கூட்டுறவு வங்கி எங்கிருக்கிறது என்பதை அறியாத, நம் பாமர ஜனங்கள் கூட, சுவிஸ் வங்கிகளையும், அதில் காட்டப்பட்டிருக்கும் இந்திய பணத்தையும் அறிந்து, டீக்கடைகளில் சூடாக விவாதிக்கின்றனர்.

அரசியல்வாதிகளும்,பணமுதலைகளும் ......







சுவிஸ் வங்கிகளை நாட காரணம், "வெரி சிம்பிள்... ரகசியம் காப்போம்!' என்ற அவர்களின் தாரக மந்திரமே. சுவிஸ் வங்கிகளில் கணக்குத் துவக்க, நம்மூர் வங்கிகளில் கேட்கப்படும், பான் கார்டு, ரேஷன் கார்டு, லொட்டு, லொசுக்கு என, எவ்வித ஆதாரமும் தேவையில்லை; குண்டக்க, மண்டக்க கேள்விகளுக்கும் பதில் கூற அவசியமில்லை. பணம் இருந்தால் மட்டும் போதும்; கணக்கு, "ரெடி!' ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏழைகள் அதிகம் வசிக்கும் நாடு என்ற பெயர் பெற்ற நம் பாரத தேசம், சுவிஸ் வங்கிகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்துள்ள நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது தான். அரசியல்வாதிகளையும், கருப்பு பண முதலைகளையும் கவர்ந்த சுவிஸ் வங்கி, 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. அப்போதே, வங்கி உரிமையாளர்கள், தங்களது வாடிக்கையாளர்களின் விவரத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள, ரகசிய குறியீட்டை பயன்படுத்தினர்.

வாடிக்கையாளர் விவரங்களை முறையாக பதிந்து, ரகசியமாக வைத்து கொள்ள, 1713ல், "கிரேட் கவுன்சில் ஆப் ஜெனீவா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் பணத்தை பாதுகாப்பதில் சிறந்த வங்கி என்ற பெயர், சுவிஸ் வங்கிக்கு ஏற்பட்டது. சுவிஸ் வங்கிகளில் பிரதானமானது, "சுவிஸ் பாங்க் கார்ப்பரேஷன்!' 1854ல், ஆறு வங்கிகள் ஒன்றிணைந்து, "பேஸ்லர் பேங்க்வேரின்' என்ற பெயரில் இயங்கி வந்தன. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பல வங்கிகள் இணைந்தன. பின்னர், 1917ம் ஆண்டு தற்போதைய பெயரான, "சுவிஸ் பாங்க் ஆப் கார்ப்பரேஷன்' என பெயர் மாற்றப்பட்டது. இது தவிர, யூனியன் பாங்க் ஆப் சுவிஸ், கிரடிட் ஸ்யூஸே, சுவிஸ் நேஷனல் பாங்க் போன்ற பல வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நாட்டில் உள்ள வங்கி செயல்பாடுகளை வரையறுக்க, "சுவிஸ் பாங்க் அசோசியேஷன்' 1995ல் ஏற்படுத்தப்பட்டது. இன்றைய கால கட்டத்தில் சுவிஸ் நாட்டில், 327க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன.

வாடிக்கையாளர்களின் ரகசியத்தை காப்பதில், சுவிஸ் நாடு உறுதியாக இருக்கிறது. வாடிக்கையாளர்களின் கணக்கு விவரத்தை யாராவது வெளியிட்டால், அவருக்கு, ஆறு மாதம் சிறை, 50 ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதம் என்கிறது சுவிஸ் நாட்டு சட்டம். கடந்தாண்டு, "விக்கிலீக்ஸ்' இணைய தளத்திற்கு, சுவிஸ் வங்கி வாடிக்கையாளர் ரகசியத்தை வெளி யிட்ட முன்னாள் வங்கி ஊழியருக்கு, ஆறு மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், சுவிஸ் வங்கி அசோசியேஷன், 2004ல் கொண்டு வந்த டெபாசிட்டர் பாதுகாப்பு ஒப்பந்தப்படி, வங்கி மீது வாடிக்கையாளர்கள் வழக்கு தொடுத்து, ஒரு பெரும் தொகையை நஷ்ட ஈடாக பெற முடியும். அதே சமயம், ஒருவர் வங்கி கணக்கு துவக்க கெடுபிடி காட்டும் ஷரத்துக்களும், சுவிஸ் நாட்டு சட்டத்தில் உண்டு. ஒருவர் வங்கியில் செலுத்தும் பணம், எந்த வழியில் வந்தது என்பதையும், சட்ட விரோதமாக வந்ததல்ல என்பதற்கான உறுதியும் அளிக்க வேண்டும். சுவிஸ் வங்கி, பணக்காரர்களுக்கோ, கிரிமினல்கள், பதுக்கல்காரர்களின் புகலிடமாக இருப்பதாக கூறுவது தவறு.5,000சுவிஸ் பிராங்க் இருந்தாலேகணக்கு துவக்கிக் கொள்ளலாம்.கணக்குதுவக்கஏஜென்டுகளைநாடவேண்டியதில்லை.நேரடியாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ துவக்கிக் கொள்ளலாம். வெளிநாட்டுக்காரர் கள் என்றால்,பாஸ்போர்ட் அவசியம் என சுவிஸ் வங்கி கூட்டமைப்பு கூறுகிறது. இருப்பினும், சுவிஸ் வங்கிகள் இவற்றை கண்டு கொள்ளாமல், டெபாசிட் வசூலிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. இதனால், பலரும், கோடிக்கணக்கான ரூபாய்களை சுவிஸ் வங்கிகளில் குவித்து வருகின்றனர். இன்றைய கால கட்டத்தில், பணத்தை பாதுகாக்கும் சொர்க்கமாக திகழ்வது சுவிஸ் வங்கிகள் தான்.

* இரண்டாம் உலகப் போர் சமயத்தில், (1939-1945) ஜெர்மன், 400 மில்லியன் டாலர் தங்கத்தை (இன்றைய மதிப்பில் நான்கு பில்லியன் டாலர்) பெர்னில் உள்ள தேசிய சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்தது குறிப்பிடத்தக்கது.

* இங்குள்ள வங்கிகளில் பல, 200 ஆண்டு கள் பழமை வாய்ந்தவை.

* மற்ற வங்கிகளைப் போலவே, சுவிஸ் வங்கிகளும், கிரடிட், டெபிட் கார்டுகளை வழங்குகிறது.

*"யு.பி.எஸ்.,' வங்கி, தங்களது முக்கிய வாடிக்கையாளர்களுக்கு, தங்க பிஸ்கெட் டாலான சாவி வழங்குகிறது; இதன் எடை ஒரு கிலோ.

* அரசு மற்றும் தனியார் வங்கிகளும் இங்கு உள்ளன. தனியார் வங்கி துவங்க, அவர்களிடம், 7.15 பில்லியன் டாலர் இருக்க வேண்டும்.





தமிழக சட்டசபை கருத்துக் கணிப்பு - Part - 2

லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...



160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

Sunday, March 27, 2011

ருத்ராட்ச பூனை கருணாநிதி....

இனி வரும் காலங்களில் கருணாநிதி என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடினால் ஏராளமான விளக்கங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. முரண்பாட்டு மூட்டையாக காட்சி அளிக்கும் அந்த மனிதரின் (மன்னிக்கவும்) செயல்களை அலசி பார்த்தால் வெட்கக் கேடு. எனினும், தமிழனின் தலைவிதி, அந்த மனிதனை பற்றி பேச veண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.

பண்டாரம். ரதேசி என்று சகட்டுமேனிக்கு திட்டிய கும்பலோடு கைகோர்த்து அதிகாரத்தில் பங்கு எடுத்தும், 'நான் இருக்கும் இடத்தில மதவாதம் இருக்காது' என்று உறுதி கூறினார். சுமார் எட்டு ஆண்டு காலம் மத்தியில் அதிகாரத்தை சுவைத்த பிறகு, அந்த கும்பலால் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்ததும் 'மதவாத சக்திகளுடன் கூட்டணி முறிந்தது' என்றார்.

கருணாநிதியின் அந்தர் பல்டிக்கு 'இது ஒரு சின்ன உதாரணம்'. ஆனால், சில கொள்கைகளில் மட்டும் அவர் விடாப்பிடியாக இருந்து வருகிறார். 'ஆட்சி-அதிகாரத்தில் இல்லா விட்டால் தமிழனுக்காக போராடுவது, ஆட்சியில் இருந்தால் தன்னுடைய குடும்பத்துக்காக போராடுவது, சினிமா நடிகைகளின் குத்தாட்டத்தை பல மணி நேரம் ஆனாலும் 'ஜொள்ளு' விட்டு ரசிப்பது' இப்படி சில கொள்கைகள் அவருக்கு உண்டு.

ஒரு விஷயம். எந்த நேரமும் அவர் பேசிக்கொண்டு இருக்கும் நாத்திக கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்று யாராவது நினைத்தால் அது மிகவும் தப்பு. மஞ்சள் துண்டு போடுவதில் இருந்து அவருடைய மூட நம்பிக்கைகளை பட்டியல் இட்டால் கணக்கில் அடங்காது. எனினும். அது பற்றி கொஞ்சம் பேச விட்டால் நன்றாக இருக்காது. அவற்றை இப்போது பேச விட்டால் எப்போது பேசுவது?

ஜெயலலிதா என்றால் பச்சை நிறம், 9 என்ற எண் பற்றி அனைவரும் பேசுவது வழக்கமாகி விட்டது. இந்த காரணநிதி கூட, தன்னை நல்லவர் போலவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வந்தவர் போலவும் காட்டிக் கொண்டு ஜெயலலிதாவை விமர்சித்தது உண்டு. ஆனால், கருணாநிதி பற்றிய ரகசியம் தெரியுமா?

உலக அளவில் அனைத்து மக்களும் அஞ்சி நடுங்கும் எண்கள் எது வென்றால் 8 மற்றும் 13 . மேலும், இந்தியாவை பொறுத்தவரை சனிக்கிழமை என்றால் யாருக்கும் ஆகாது. இந்த எண்களும், கிழமையும் கருணாநிதிக்கு பிடித்த ராசியனவை ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளாக அவர் தொடங்கும் எந்த முக்கிய காரியமாக இருந்தாலும் இந்த எண்கள் அல்லது சனிக்கிழமை வருமாறு அமைப்பதே வழக்கமாக வைத்துள்ளார். 2006 -ம ஆண்டு அவர் பதவி ஏற்ற நாள் (சனிக்கிழமை) முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் (அவருடைய பதவியை காப்பாற்றுவது தொடர்பான நிகழ்வுகள்) எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் இப்படி ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

தேர்தல் தேதிகளில் கூட, அவருக்கு ராசியாக அமையுமாறு பார்த்துக்கொள்கிராரோ என்ற சந்தேகம் உள்ளது. இத்தாலி அம்மையாரின் ஆசியுடன் எதுவும் நடக்கலாம்.

பாராளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் வாக்குபதிவு நடந்த நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை நாள். சமீப காலமாக தமிழ் நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் ஒவ்வொரு இடை தேர்தலின் வாக்குபதிவு நாள் அல்லது வாக்கு எண்ணிக்கை இவற்றை ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மை புரியும். எட்டு அல்லது பதிமூன்றாம் தேதியில் இருக்கும் அல்லது சனிக்கிழமையில் இருக்கும்.

இவை எல்லாம் முடிந்து போனவை. தற்போதைய சூழ்நிலையில் ஒரு முக்கிய நிகழ்வை பார்த்தால் என்னுடைய கருத்து நிதர்சனமான உண்மை என்பது விளங்கும். புதிய சட்டசபை கட்டிடம் திறப்பு விழா - மார்ச் 13 (சனிக்கிழமை) நிரந்தர முதல்வராக இருக்கலாம் என்பதற்காக இந்த திட்டமோ என்னவோ?

அந்த கட்டத்தை கட்ட தொடங்கும்பொது நவரத்னா கற்களை பூமியில் கொட்டி பூஜை போட்டதும இங்கே குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், அண்ணா பல்கலை வளாகத்தில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பூமி பூஜை போடப்பட்ட்ட பொது இந்த நிகழ்வுகள் எல்லாம் நடை பெற்றதக்கு கடும் கண்டனம் எழுப்பியது இந்த கருணாநிதி தான். அப்போது பகிரங்கமாக நடந்ததும், தற்போது கமுக்கமாக நடந்ததும் தான் வித்தியாசம்.

அதாவது, எதை பகிரங்கமாக வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றவாறு பத்திரிகைகளை அன்பாக (?) வேண்டி கொள்பவர் கருணாநிதி. தமிழ் நடிக பட்டாளம் சார்பாக. அவரோட சாதனைகளை (?) பாராட்டி சென்னையில் பிப்ரவரி 7 -ம தேதி பாராட்டு விழா நடந்தது. அட அது கூட, சனிக்கிழமை தாங்க.
இந்த ருத்ராட்ச பூனையின் மூட நம்பிக்கைகள் பற்றி இனிமேலாவது அனைவரும் அறிந்து கொண்டால் சரி.

காங்கிரஸ் தோழர்களுக்கு... நினைவூட்டுகிறார் நெல்லைக்கண்ணன்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. ஐந்து தடவை, நான்கு தடவை பதவி வகித்தவர்கள் தான், மீண்டும் போட்டியிடுகின்றனர். மகிழ்ச்சி. தங்கபாலுவின் மனைவி போட்டியிடுகிறார். ஏன் கோபப்படுகிறீர்கள்? இதுதானே காங்கிரசின் வழக்கம். அதற்காக, உங்கள் கோபத்தை, தன்னிகரில்லாத் தலைவர் காமராஜர் வாங்கி, அவர் அன்புத் தலைவர் சத்தியமூர்த்தி பெயரில் கட்டி வைத்திருக்கிற கட்டடத்தைத் தாக்குவதிலா காட்டுவது? அது என்ன பண்பு...?


தங்கபாலு வைத்திருக்கிறாரே வீடுகள், தொலைக்காட்சி அலுவலகம்... அங்கே போய் ஆர்ப்பாட்டம் நடத்தினால் புரிந்துகொள்ள முடியும்! குலாம் நபி ஆசாத் டில்லியில் இருக்கும் வரை தங்கபாலுவை ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழே தெரியாத, தமிழகத்தில் எந்தத் தொகுதி, எங்கேயிருக்கிறது என்று தெரியாத அகமது படேல்களும், குலாம்களும் இருக்கிற வரை இது தான் நிலைமை.


தி.மு.க., கூட்டணி இல்லை என்றவுடன் வெடி போட்டுக் கொண்டாடினீர்களே... என்ன ஆயிற்று? குலாமும், தங்கபாலுவும் தான் வேலையை முடித்துவிட்டனரே. உங்களால் சோனியா அவமானப்பட்டது தான் மிச்சம். யாரைப் பதவியில் அமர்த்த? நேருவை, கர்நாடக இசைப் புலி, எம்.எஸ்.சுப்புலட்சுமியோடு, இணைத்து மேடைகளிலே அசிங்கமாகப் பேசிய, கருணாநிதியைப் பதவியில் அமர்த்த! இந்திராவை, "கொடிய அரக்கி' என்று மேடைதோறும் பேசி மகிழ்ந்த கருணாநிதியை பதவியில் அமர்த்த! இந்திரா, வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டபோது, அதை "சாதாரணச் சாவு' என்று அசிங்கப்படுத்திய கருணாநிதியைப் பதவியில் அமர்த்த!


இந்திராவைக் கடுமையாக எதிர்ப்பவர்களா இருந்தும், வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் எல்லாம் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது, அஞ்சலி செலுத்தாத, இந்திராவின் சாம்பல் வந்தபோது, அதற்குக் கூட அஞ்சலி செலுத்தாத, கருணாநிதியை பதவியில் அமர்த்த. பிரதமர் ஆவதற்காக, ராஜிவ் மீது பெரிய பழி சுமத்தி, பதவி போகப்போகிறது என தெரிந்ததற்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக வேடம் போட்ட வி.பி.சிங்கைத் தமிழகத்துக்கு கூட்டி வந்து, ராஜிவிற்கு எதிராக அசிங்கம் அசிங்கமாகக் குற்றம் சுமத்திய கருணாநிதியைப் பதவியில் அமர்த்த!


வாசனுக்கு நினைவுபடுத்துகிறேன்... மூப்பனார் தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தைத் திறந்துவைத்த ராஜிவ், அன்று தமிழக மக்களுக்கு வைத்த வேண்டுகோள் என்ன என்று... பழைய பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில், பத்திரிகைகளின் பழைய இதழ்களை எடுத்துப் பாருங்கள். "தி.மு.க.,வை வேரோடு, வேரடி மண்ணோடு பிடுங்கி எறியவேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' இதுதான் தமிழகக் காங்கிரசாரிடம், ராஜிவ் வைத்த கடைசி வேண்டுகோள். ராஜிவ் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி, சென்னை கத்திப்பாரா சந்திப்பில், எம்.ஜி.ஆர்., தலைமையில், நேரு சிலையைத் திறந்து வைத்தது. அந்தச் சந்திப்பில், காங்கிரசின் மீதும், நேரு, இந்திரா, ராஜிவ் மீதும், காமராஜர் மீதும் உண்மையான பற்று வைத்திருந்தவர், எம்.ஜி.ஆர்., என்பதால் தான் நேரு சிலை வந்தது. கருணாநிதி என்றால் நேரு சிலை வந்திருக்குமா? அதை, அவரின் பேரனை வைத்தே திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.,


அங்கே எம்.ஜி.ஆர்., சொன்ன வரி ஒன்றே தான், "என் உயிர் காத்த தலைவனே! நான் உன் தாத்தா நேருவின் தொண்டன். இந்திராவின் அன்புத் தோழன்; உனது உற்ற நண்பன். உனக்கும், உனது குடும்பத்திற்கும், உனது காங்கிரஸ் இயக்கத்திற்கும், நானும், எனது ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களும் என்றும் நன்றியாக இருப்போம்' என்றார். அந்த ராஜிவின் சாம்பல் சென்னை வந்ததே. அதற்கு அஞ்சலி செய்யப்போனாரா கருணாநிதி? இன்று, "எம்.ஜி.ஆர்., எனது நண்பர். என்னை முதல்வராக்கியவர்' என்கிறாரே. அன்று தமிழகத்தின் ஏழை, எளிய மக்களெல்லாம் எம்.ஜி.ஆரைக் காப்பாற்ற கோவில் கோவிலாக சென்றார்களே அவர்களின் வேண்டுதலாலும், ராஜிவின் சீரிய கவனிப்பாலும் தமிழகம் வந்தாரே எம்.ஜி.ஆர்., தேர்தலில் தோற்றதும், அந்தக் கொடிய நோயை, சாவு நோவு என்று கேலி செய்தவர் தானே கருணாநிதி. ராஜிவ் வேண்டுகோளை நீங்கள் மறந்தீர்கள்; எம்.ஜி.ஆரின் உத்தரவாதத்தை, அ.தி.மு.க., மறந்தது. தமிழகம் துடியாய்த் துடிக்கிறது!

சாதிக் குடும்பத்தை சந்தித்த 'மனிதர்கள்'!

உடல் இங்கே... உறவுகள் எங்கே?
2G மர்மச் சுழல்


சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சாதிக் பாட்சாவின் உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் நடந்த நேரம். சாதிக் பாட்சாவின் நண்பர்களும், ஊழியர்களும் பதைபதைப்புடன் காத்திருந்த சமயத்தில், சாதிக் பாட்சாவின் மரணம் பற்றி விசாரித்தோம். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளை அப்படியே இங்கே தருகிறோம்...

1. மார்ச் 16-ம் தேதி காலை நேரத்தில், சாதிக் பாட்சாவை காரில் யாரோ ஒருவர் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவரே திருப்பிக் கொண்டுவந்து விட்டதாகவும் தெருவாசிகள் சொல்கிறார்களே? அது, உண்மையா... அழைத்துச் சென்றவர் யார்?

2. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள சாகித் பால்வாவுக்கும் சாதிக் பாட்சாவுக்கும் நெருக்கம் உண்டு. அந்த வகையில், பண பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய சூழ்நிலையில் சாதிக் இருந்தார் என்றும், அதனால் மும்பையில் இருந்து சில நிழல் மனிதர்கள் கிளம்பிவந்து சாதிக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?

3. கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை சாதிக் வெளிநாடுகள் போய் வந்திருக்கிறார். அந்த நேரங்களில் நடந்த சந்திப்புகளை விசாரிக்க மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவுசெய்து, விசாரணைக்காக அழைத்ததாகச் சொல்கிறார்கள். அதற்குள் என்ன நடந்தது?

4. சாதிக்கை சுதந்திரமாக உலவவிட்டு இருந்தாலும், அவரை எந்த நேரமும் கண்காணிப்பு வளையத்தில்தான் சி.பி.ஐ. வைத்து இருந்ததாக சொல்கிறார்களே? அப்படியானால், அவர் இறந்த அன்றும் அவரது வீட்டு வாசலில் நிச்சயமாக சி.பி.ஐ. இருந்திருக்குமே... அவர்கள் ஏன் அசம்பாவிதத்தைத் தடுக்கவில்லை?

5. சாதிக்கின் உடலை அவரது வீட்டிலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பிய அவரது குடும்பத்தினர், வீட்டின் வெளியே பூட்டுப் போட்டுவிட்டு எங்கே கிளம்பிப் போனார்கள்? பிற்பகல் 1.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் அவர்கள் வீட்டிலும் இல்லை, மருத்துவமனையிலும் இல்லை. எங்கே போனார்கள்? அவர்களை யாரோ அழைத்துச் சென்று 'நடந்ததை இப்படித்தான் சொல்லவேண்டும்' என்று ரிகர்சல் நடத்தியதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா? யார் அவர்கள்?

6. மாலை 5 மணி வரை சாதிக் வீட்டு வாசலில் நிருபர்களும் போலீஸாரும் தடய அறிவியல் துறை அதிகாரிகளும் காத்துக் கிடந்தனர். இந்த நிலையில், திடீரென மாலை 5 மணிக்கு சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹானா பானு தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகித் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தது யார்?

7. தேனாம்பேட்டை போலீஸ், 'சாதிக் பாட்சா இறந்தது எப்போது தெரியும்? யார் முதலில் பார்த்து? நீங்கள் அப்போது வீட்டில் இருந்தீர்களா? வெளியில் எங்கே போனீர்கள்?' என்றெல்லாம் குடும்பத்தினரிடம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்ததாகச் சொல்கிறார்களே, உண்மைதானா?

8. பெரம்பலூரில் இருந்து வந்திருந்த சாதிக் பாட்சாவின் நண்பர் ஒருவர், ''சி.பி.ஐ-யின் தீவிர விசாரணை, ரெய்டுகளால்தான் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார் சாதிக் என்கிறபோது, அவசரஅவசரமாக தமிழக அரசு இந்த வழக்கை மீண்டும் சி.பி.ஐ-யிடமே ஒப்படைக்க முடிவு செய்தது ஏன்? சாதிக் பாட்சாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சி.பி.ஐ-யின் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது குற்றம்சாட்ட அவரது உறவினர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே...'' என்று வருந்துகிறார். ஏன் இந்த வழக்கு அவசரமாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது?

8. சாதிக்கின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மருத்துவர் குழுவினர்,''சாதிக் பாட்சாவின் உடலில் எந்தக் காயமும் இல்லை. கழுத்து இறுக்கப்பட்டதால், மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவரது கழுத்துப் பகுதி சதையை பரிசோதனைக்கு எடுத்து அனுப்பி இருக்கிறோம். அந்த ரிசல்ட் வந்தபிறகுதான், மற்ற விவரங்களைச் சொல்லமுடியும்'' என்கிறார்கள். இதன்படி பார்த்தால், கழுத்து இறுக்கப்பட்டு இறந்த நிலையில், சாதிக் பாட்சா தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது, தூக்கு மாட்டியதால் கழுத்து இறுகி, மூச்சுத் திணறி இறந்தாரா?

9. சாதிக் பாட்சா இறந்தது எப்போது என்கிற கேள்விக்கு மருத்துவர்கள் தரப்பில், 'ஆஸ்பத்திரிக்கு கொண்டுவருவதற்கு 12 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்திருக்கலாம்’ என்று பொத்தாம்பொதுவாக சொல்கிறார்கள். ஆனால், சாதிக்கின் குடும்பத்தினர் மதிய வேளையில்தான் தூக்கு மாட்டி இறந்தார் என்று சொல்கிறார்கள். இதில் ஏதோ முரண்பாடு தெரிகிறதே? சாதிக் இறந்த நேரத்தில் வீட்டில் வேறு யாரும் இருந்தார்களா?

10. சாதிக் எழுதி வைத்ததாகச் சொல்லப்படும் கடிதங்களில் காணப்படும் கையெழுத்து அவருடையதுதானா? சாதிக் பாட்சா இறப்பதற்கு முன், சுதந்திரமான சூழலில் எழுதினாரா? மிரட்டல் ஆசாமிகள் எழுத வைத்தார்களா? மனதில் குழப்பத்துடன் இருக்கும்போது எழுதினாரா? இவற்றைப் பழைய கையெழுத்துடன் ஒப்பீடு செய்தால் கண்டுபிடிக்க முடியும்தானே? கடிதத்தில் இருந்தது 15-ம் தேதி என்கிறார்களே, உண்மையா?

11. சாதிக் இறந்தது முதல், அவரது அடக்கம் வரை அவரது முகத்தை மூடிக் கொண்டுபோனது ஏன்? இறந்தது சாதிக் பாட்சாதானா?

இந்தக் கேள்விகளுடன், டெல்லியில் இருந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியைத் தொடர்புகொண்டு, சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து கருத்துக் கேட்டோம்.

''2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கத் துவங்கியதும், எனக்கு நம்பகமான சோர்ஸில் இருந்து வந்த தகவல்படி, 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்கள் சிலரை இந்தியாவில் சுட்டுக் கொல்ல துபாயில் இருந்து இரண்டு வெள்ளைக்காரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியப் பிரமுகரான ஆ.ராசாவுக்கும் ஆபத்து நேரிடலாம். அவர் வெளியில் இருப்பதைவிட ஜெயிலுக்குள் இருப்பதுதான் நல்லது' என்று அன்றே சொன்னேன். நல்லவேளை! ராசா தற்போது திகார் ஜெயிலில் மிகவும் பாதுகாப்பான வார்டில் இருக்கிறார். வெளியே சென்றால் ஆபத்து என்பதை உணர்ந்து, காவல் நீட்டிப்புக்குக்கூட கோர்ட்டுக்குப் போகாமல் சிறையில் இருந்தபடியே, வீடியோ கான்ஃபரன்ஸை பயன்படுத்துகிறார். சாதிக் பாட்சாவுக்கு கீழக்கரை, துபாய், மலேசியா நாடுகளுடன் ஹவாலா தொடர்பு உண்டு.

ஆ.ராசா பணத்தை இவர் மூலம் டீல் பண்ணியிருக்கலாம் என்பது சி.பி.ஐ-யின் சந்தேகம். ஆனால், சாதிக் பாட்சா ரொம்ப தைரியமானவர். மனக்குழப்பம் இல்லாமல் வெளியில் நடமாடி வந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனோநிலையில் இல்லை. சாதிக்கின் மனைவியும் வக்கீலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் சாதிக்கை 'அப்ரூவர்' ஆகிவிடும்படி அட்வைஸ் பண்ணி இருக்கிறார்கள். இந்தத் தகவல் எப்படியோ வெளியில் கசிந்திருக்கிறது. அதன்பிறகு, யார் அவரைத் தொடர்பு கொண்டார்கள், என்ன பேசினார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென சாதிக் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் நடந்ததை முழுவதுமாக விசாரிக்கவேண்டும்.
இப்போதெல்லாம் ஹார்ட் அட்டாக்கைக்கூட, திடீரென உண்டாக்கும் அளவுக்கு கிரிமினல்கள் வளர்ந்து விட்டார்கள். காலி சிரிஞ்ச் ஒன்றை ஒருவரின் கையில் குத்தி, வெறும் காற்றை அழுத்திவிட்டால், அது காற்றுக் குமிழியாக ரத்தக் குழாய் வழியாக இதயத்துக்குப் போய் வெடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதுபோன்று எத்தனையோ நவீன வழிகளைக் கையாள்கிறார்கள். அதனால், சாதிக்கின் தற்கொலை சம்பவத்தையும் அந்தக் கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்!'' என்கிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். தமிழக மக்களும் விடை தேடி காத்திருக்கிறார்கள்.

பதில் சொல்லுமா சி.பி.ஐ.?

‘‘இதுதான் தி.மு.க.வின் சாதனையா?’’

உறவுகளை இழந்த விஜயலட்சுமியின் சென்ட்டிமென்ட் பிரசாரம்

சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்போம் என தி.மு.க.வினர் புறப்பட்டிருக்கும் நிலையில்... ‘‘என் குடும்பத்தில் ஒருத்தர் கூட இல்லாமல் மொத்தபேரையும் குத்திக் குதறி கொன்று போட்டீர்களே..? இதுதான் உங்கள் சாதனையா?’’ என்று மேடை போட்டு பேசத் தயாராகிவிட்டார் விஜயலட்சுமி.

யார் இந்த விஜயலட்சுமி?

கடந்த வருடம் ஆகஸ்ட் 12&ம் தேதி சேலம் சீல்நாயக்கன்பட்டியில் 78 வயதான ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ், அவரது மனைவி சந்திரம்மாள், மகன் ரத்தினம், மருமகள் சந்தானலட்சுமி, பேரன் கௌதம், 12 வயதே ஆன பேத்தி விக்னேஸ்வரி ஆகியோர் சொத்துத் தகராறில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட குப்புராஜின் மகள்தான் இப்போது நியாயம் கேட்கப் புறப்பட்டிருக்கும் விஜயலட்சுமி.

சொத்துக்காக நடந்த இந்த கொலையில் தொடர்பிருப்பதாக அமைச்சர் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்ப்பட்டதும்... அவரை சிறைக்கே சென்று வீரபாண்டியார் பார்த்துவிட்டு வந்ததும் ஏற்கனவே சர்ச்சையைக் கிளப்பின.

இந்த நிலையில்... கொலை செய்யப்பட்ட குப்புராஜின் மகள் விஜயலட்சுமி, ஆரம்பம் முதலே ஆறு பேர் கொலை விஷயத்தில் தீவிர எதிர்ப்பு காட்டி வந்த பி.ஜே.பி. வக்கீல் மணிகண்டன் ஆகியோர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

‘அடுத்தது அ.தி.மு.க-. ஆட்சிதான். உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள்’ என்று ஜெயலலிதா தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து, ‘என் குடும்பத்துக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியை சேலத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சொல்வேன்’ என்று புறப்பட்டிருக்கிறார் விஜியலட்சுமி.

அவரிடம் பேசினோம்.

‘‘எங்கள் குடும்பத்து நபர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதையும், அதில் சேலம் தி.மு.க. கட்சி ஆட்கள் தலையீடு இருப்பதையும் அம்மாவிடம் சொன்னபோது கலங்கிப் போனார். ‘உங்களுக்கு நியாயம் கிடைக்க என் ஆதரவு உறுதி’ என்று சொல்லி எங்களை ஆறுதல் படுத்தினார். இன்று நான் சொந்த, பந்தங்களை பலி கொடுத்துவிட்டு அநாதையாக நிற்பதற்கு தி.மு.க ஆட்சியும், அதன் ஆட்களும்தான் காரணம். அதற்காகத்தான் இத்தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளேன்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் சேலத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்வேன். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரி தொகுதியில் என் குடும்பத்துக்கு நடந்த கொடுமையை அதிகமாக பரப்புரை செய்வேன். அம்மா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும் தி.மு.க. ஆட்சியால் எனக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை பற்றி பேசுவதற்கு தயாராக உள்ளேன். அம்மாவை சந்தித்துவிட்டு வந்ததையடுத்து எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு சேலம் மாவட்ட தி.மு.க.வினர்தான் காரணம்’’ என்றார் உருக்கமாக.

வக்கீல் மணிகண்டனிடம் பேசினோம்.

‘‘ எனக்கும் செல்போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சப்போவதிலை. சேலத்தில் அமைச்சர் வீரபாண்டியார் பலப்பல கோடிக்கு மேல் சொத்து சேர்த்து உள்ளார். இதெல்லாம் நியாயமாக சேர்த்த சொத்தா? இல்லை. பல பேரை மிரட்டி சம்பாதித்த சொத்து. இதை அம்மா ஆணைப்படி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் மனதில் படும்படி சொல்வேன். சொத்துக்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த தி.மு.க. நிர்வாகிகள் அட்டூழியத்தை எடுத்துச் சொல்வேன்.

ஆரம்பத்தில் சரியாக சென்றுகொண்டிருந்த கொலை வழக்கு, இன்று செயலிழந்துவிட்டது. சி.பி.சி.ஐ.டி. ஏதோ வழக்குத் தொடுத்து விட்டோமே என்ற நினைப்பில்தான் விசாரித்து வருகிறது. உண்மையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அடாவடி, அராஜகம், ஏமாற்றுல், பித்தலாட்டம், ரவுடித்தனம் இதுதான் தி.மு.க. ஆட்சியில் சேலத்தில் நடந்தது. ஆறு பேர் கொலை வழக்கு பற்றிய அத்தனை கொடூரமான விஷயங்களையும் சேலம் தொகுதிக்குட்பட்ட மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்வேன். இதுதான் அம்மா எனக்களித்த வேலை.

தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அத்தனை தொகுதி-களிலும் படுதோல்வி அடைய எங்களது ‘ஆறு பேர் கொலை’ பிரசாரத்தை தீவிரப்படுத்தப் போகிறோம். அமைச்சர் வீரபாண்டியார் போட்டியிடும் சங்ககிரியில் இந்தக் கொடூரத்தைப் பற்றி வீட்டுக்கு வீடு எடுத்து சொல்லி அவரை தோல்வியடையச் செய்வோம்’’ என்றார் உறுதியாய்.

இதுபற்றி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜிடம் பேசினோம். ‘‘ஏற்கனவே இந்த விஷயத்தில் நாங்கள் தெருவுக்குத் தெரு கூட்டம் போட்டு மக்களுக்கு சொல்லி வருகிறோம். இதைக்கண்டு பயந்துதான் அமைச்சர் வீரபாண்டியார் சங்ககிரிக்கு மாறிவிட்டார்’’ என்றார் உற்சாகமாய்.

அ.தி.மு.க. பிரசார வியூகத்தைப் பற்றி சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கத்திடம் பேசியபோது, ‘‘எதைப்பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. கலைஞரின் நல்லாட்சி திட்டங்கள் எங்களது வெற்றியை எப்பொழுதோ எளிதாக்கிவிட்டது’’ என்றார் போல்டாக.

ஆனாலும், ‘‘ஜாமீனில் வெளிவந்திருக்கும் பாரப்பட்டி சுரேஷை தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டங்களில் தலைகாட்ட வேண்டாம் என்று அமைச்சரே உத்தரவிட்டிருக்கிறார். பிரசாரத்தில் சுரேஷ் இருந்தால் அதை வைத்தே அ.தி.மு.க. எங்கள் பெயரை மேலும் டேமேஜ் ஆக்கிவிடும் என்பதால்தான் இந்த உத்தரவாம்’’ என்கிறார்கள் தி.மு.க.வினர்.

அப்போது ராடியா; இப்போது கபூர்!

ஆட்சியை கைப்பற்ற தேர்தலில் லஞ்சம் கொடுப்பது ஒரு வகை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கே லஞ்சம் கொடுப்பது மற்றொரு வகை. முதல்வகையில் பயனாளிகள் பொதுமக்கள். இதில் சில ஆயிரங்கள் மட்டுமே வீசப்படும். இரண்டாம் வகையில் பயனாளிகள் எம்.பி.,க்கள். தொகையும் அதிகம். அதாவது சில, பல கோடிகள். அதுவும் கட்டுக்கட்டாக பணம் காட்டப்பட்டு வலைவீசப்படும்.

இந்த உலகத்திற்கே பெரும் நல்ல காரியம் செய்து வரும் விக்கிலீக்ஸ், மன்மோகனின் கடந்த ஆட்சியின் கடைசி காலத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற ஏமாற்றுவேலையின் பின்னால் எப்படியெல்லாம் எம்.பி.,க்கள் விலைபேசப்பட்டனர் என்ற நாற்றத்தை நாட்டுக்கு சொல்லியுள்ளது.

கேப்டன் சதீஷ் சர்மா என்பவரும் அவரது உதவியாளர் நச்சிகேதா கபூர் என்பவரும் அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரியை அழைத்து, ‘‘பாருங்கள்...’’ என்கின்றனர். கத்தை கத்தையாக பணம். ‘‘எதற்கு இந்த பணம் எல்லாம்?’’ என அதிகாரி கேட்கிறார். ‘‘கவலைப்படாதீர்கள்.. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும். எப்பாடுபட்டாவது அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்’’ என்கிறார் சர்மா. அந்த அதிகாரி இந்த தகவல்களை எல்லாம் வாஷிங்டனில் இருக்கும் தனது எஜமானர்களுக்கு அனுப்புகிறார். இதுதான் கேபிளில் உள்ளது.

சரி. சதீஷ் சர்மா யார்? ஆந்திராவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் டூன் ஸ்கூலில் ராஜிவ் காந்தியோடு ஒன்றாக படித்தவர். இந்த நெருக்கத்தை வைத்தே காங்கிரஸ் வளர்ந்தவர். அதன்பிறகும் நேரு குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்தவர். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1993 லிருந்து 1996 வரை மத்திய அரசில் பெட்ரோலியத்துறைக்கு மந்திரியாக இருந்தவர். ஏகப்பட்ட ஊழல்கள், வெளிநாட்டு வங்கிகளில் பணம் பரிவர்த்தனை... என நிறைய சர்ச்சைகளில் சிக்கியவர். நிறைய எம்.பி.,க்களுக்கு பெட்ரோல் பங்க் அனுமதி, கேஸ் ஏஜென்சி என அள்ளி வழங்கியவர். தமிழ்நாட்டில்கூட பல காங்கிரஸ்காரர்கள் இன்றைக்கும்கூட பெட்ரோல்பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் என வைத்து ஜாம் ஜாம் என கொழித்துக் கிடக்கின்றனர் என்றால் அது, அந்த காலத்தில் இவர் செய்த புண்ணியத்தில்தான் என்பது பலரும் அறியப்படாத செய்தி.

இந்த சர்மாவிடம் அரசியல் எடுபிடியாக இருந்ததாக விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ள நச்சிகேதா கபூர் யார்? டெல்லியின் அதிகார வட்டாரங்களில் உலா வரும் பல ‘எடுப்பு’களில் இவரும் ஒருவராக இருந்துள்ளார். காங்கிரசில் உள்ள பிரபல பெண் தலைவர்களில் முக்கியமானவராகவும், அதிரடியான ஆளாகவும் கருதப்படுபவர் ரேணுகா சவுத்ரி. இவருடன்தான் இந்த கபூர் வளைய வந்தார். முந்தைய ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேணுகா பொறுப்பேற்றபோது அவருடனேயே அமைச்சகத்துக்குள்ளும் வந்துவிட ஆசைப்பட்டார். அதாவது அமைச்-சரின் சிறப்பு அதிகாரியாக கபூரை நியமிக்க ரேணுகா முயற்சி செய்ய, அதற்கு மத்திய அமைச்சரவை செயலகம் முட்டுக்கட்டை போட்டு-விட்டது. எந்தவொரு முக்கிய அலுவல்-களும் இவருக்கு அளிக்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்-கப்பட்டுவிட்டது. ஆனாலும் அறிவிக்-கப்படாத உதவி அதிகாரியாக வளைய வந்துள்ளார்.

அந்த அதிகார பவுஸை கொண்டுதான் இவர் அடிக்கடி பார்ட்டிகளை வைத்துள்ளார். அந்த பார்ட்டிகளில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்-தர்களும் பலமுறை பங்கேற்-றுள்ளனர். அப்போதே கபூரின் செயல்-பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

2009&ம் ஆண்டு தேர்தலில் ரேணுகா சவுத்ரி தோற்றுப் போய் விட்டதால் அமைச்சராக முடியவில்லை. இதனால் கபூரின் நிலைமை கேள்விக்-குறியானது. அப்போதுதான் ஒரு சர்ச்சையில் சிக்கினார். ரேணுகா இருந்த அமைச்சகத்தை விட்டு வெளியேறியபோது அலுவலக கம்ப்யூட்டரில் இருந்து சில முக்கிய தகவல்களை அழித்துவிடும்படி கீழ்நிலை பணியாளர் ஒருவரை கபூர் மிரட்டியுள்ளார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கும் ஆளானார். தவிர இவரது கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டு டிஸ்க்கே காணாமல் போய்விட்டது. இதுகுறித்து அமைச்சகம் சார்பில் திருட்டு புகார் அளிக்கப்பட்டு எப்.ஐ.ஆர். கூட போடப்பட்டது.

இதற்கிடையில், காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கவே, அதில் அடைக்கலம் புகுந்தார் கபூர். 2009 ஜுலையில் ஆர்கனைசிங் கமிட்டி டைரக்டராக சேர்ந்துள்ளார். பிறகு 2010 பிப்ரவரியில் புரோட்டோகால் மற்றும் மீடியா தொடர்பு பிரிவிற்கு டெபுடி டைரக்டர் ஜெனரலாக பதவி உயர்வும் கிடைக்கப் பெற்றுள்ளார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய்.

தற்போது குடையோ குடையென குடைந்து வரும் சுரேஷ் கல்மாடிக்கு மிகவும் நெருக்கமாகவும் இந்த கபூர் இருந்துள்ளார். இவருடன் பணியாற்ற முடியாது என்று பல மூத்த அரசு அதிகாரிகள் மறுப்பும் தெரிவித்துள்ளனர். கபூரின் வரம்புமீறிய செயல்பாடுகளை கல்மாடியாலேயே நிறுத்த முடியாதநிலை கூட ஏற்பட்டது. இதனால் ஒரு சில அதிகாரிகளே கூட தங்கள் பொறுப்புகளில் இருந்து வெளியேறவும் செய்துள்ளனர்.

இத்தனை சக்தி வாய்ந்தவரா கபூர் என்று கேட்பதற்கு முன் இன்னும் ஒரு கூடுதல் தகவல். இவரது கல்வி தகுதி என்ன என்பது பற்றி ஆராய்ந்தால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் பலருக்கும் ஏற்படுகிறது. காமன்வெல்த் ஆர்கனைசிங் கமிட்டிக்கு இவர் அளித்த ஆவணங்களின்படி பி.ஏ. (ஹானர்ஸ்) படித்தவர். ஆனால் இவர் இணைத்து அளித்ததோ டெல்லி பல்கலைக்கழக ரெகுலர் பி.ஏ. டிகிரி சான்றிதழ். அதில் எந்த காலேஜ் அல்லது எந்த கோர்ஸ் என்பது பற்றியோ விவரம் ஏதும் இல்லையாம்.

இவர் என்னதான் படித்தவர் என்று தெரிய, முகமது யூனுஸ் சித்திக் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் தகவல் கேட்டபோது அதிகாரிகளால் தகவல் தர இயலவில்லை. கபூர் வெறும் பத்தாம் கிளாஸ் படித்தவர். அதில் கூட அவர் பெயில் ஆனவர் என்று கூறும் சித்திக், இதுகுறித்து விசாரிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். போர்ஜரி சான்றிதழ்களை காட்டி உயர் அதிகார வளையம் வரை நுழைந்துள்ள இந்த கபூர் பற்றிதான் விக்கிலீக்ஸ் கேபிளில் கூறப்பட்டுள்ளது. எம்.பி.,க்களை விலைபேசும் காரியங்களில் ஈடுபட்டதாக இந்த இருவர் மீதும் எழுந்துள்ள சர்ச்சை இப்போது அடங்காது போல தெரிகிறது. எப்படியோ மன்மோகன் ஆட்சி என்பது புரோக்கர்களின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். முன்பு ராடியா இப்போது கபூர்!

Saturday, March 26, 2011

அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?

சமூக அவலங்களை வெளிப்படுத்த கலைஞர் பராசக்தி எடுக்கலாம்,நான் சட்டப்படி குற்றம் எடுக்கக்கூடாதா? எஸ்.ஏ.சந்திரசேகர்

மழைவிட்டாலும் தூவானம்விடாத குறை​யாக 'காவலன்’ படப்பஞ்சாயத்துகள் முடிந்து, 'ஸ்ஸ்ஸ்... அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருந்த நேரத்தில், விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அடுத்த டார்ச்சர் ஆரம்பம்!

அவர் தயாரித்து இயக்கிய 'சட்டப்படி குற்றம்’, மார்ச்-25 ரிலீஸ் என்று அறிவிப்புகள் வந்தன. 'ஆளும் கட்சி சார்ந்த சில விஷயங்களை படம் அம்பலப்படுத்தும்’ என்ற பேச்சு இருந்தது. இப்போது, ''அந்தப் படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறார்கள்...'' என்று குற்றம் சாட்டுகிறார் எஸ்.ஏ.சி. அவரை சந்தித்ததுமே பொங்கி எழுந்து​விட்டார்.

''நான் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசையும் அமைச்சர்களையும் கடுமை​யாகத் தாக்கித்தான், 'நீதிக்குத் தண்டனை’ என்ற படம் எடுத்தேன். எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால், தடுத்து இருக்கலாம். ஆனால், அவர் என்னை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்தார். 'படத்தை அஞ்சு தடவை பார்த்தேன்... சமூக அக்கறையோட எடுத்திருக்கே, சபாஷ்!’ என தோளில் தட்டிப் பாராட்டி, 'எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்ல படம் எடுத்து நாளாச்சு... நீ ஒரு படம் பண்றியா?’ என்று பாசமாகக் கேட்டார்.

ஆனால் இப்போது, 'சட்டப்படி குற்றம்’ படத்தை யாரும் இன்னும் பார்க்கவே இல்லை. அதற்குள் தேர்தல் கமிஷனிடம் தடை கோரிக் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். ஏன் இந்தப் புத்தி? எந்த நோக்கத்துக்காக கலைஞர் 'பராசக்தி’ படம் எடுத்​தாரோ, அதே நோக்கத்தில்தான் நானும் 'சட்டப்படி குற்றம்’ எடுத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதைச் சுட்டிக்காட்டி, எப்படி சரிசெய்யலாம் என தீர்வையும் சொல்லி இருக்கி​றேன். அதற்கு ஏன் தடை?'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

''நான் படத்தைப் போட்டுக் காட்​டிய​போது, விநியோ​கஸ்தர்​கள் உடனே வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால், அதற்கு அடுத்த சில நாட்களில் என்ன உள் குத்து நடந்ததோ? சொல்லி​வைத்தமாதிரி திடீரென்று பின்வாங்கிவிட்டார்கள்! அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அதேபோல, அந்தப் படத்தைத் திரையிட விரும்பிய தியேட்டர் அதிபர்களை மிரட்டியது யார்? இந்தப் படம் எடுக்க நான் பட்ட கஷ்டங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லி முறையிடுவேன். அந்தச் சங்கத்தில் துணைத் தலைவர் பதவியில் இருக்கும் எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்களும் அலட்சியம் செய்தால், எனக்கு சாவதைத் தவிர, வேறு வழி இல்லை! அதையாவது செய்யவிடுங்கள்!'' என்று கோபமும் ஆவேசமுமாகக் கொந்தளித்து அடங்கினார் எஸ்.ஏ.சி.!

நாய்கள்,பன்றிகள்,கழுதைகள் இவைகள்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள். எஸ்.வி.சேகர்

நாய்கள்,பன்றிகள்,கழுதைகள் இவைகள்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள். எஸ்.வி.சேகர்

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கடைசி​யாக ரிலீஸ் ஆவதும் அதில் குளறுபடிகள் குத்தாட்டம் போடுவதும் தேர்தலுக்குத் தேர்தல் அரங்கேறும் சம்பிரதாயம். இருந்தாலும், இந்தத் தேர்தலில் கொஞ்சம் ஓவர்!
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட... உடனடி எதிரொலியாக பாடை கட்டுவது, கொடும்பாவி எரிப்பு, கொடிக் கம்பங்கள் சாய்ப்பு, சத்தியமூர்த்தி பவன் சூறை​யாடல் என்று கதர் வேட்டிகள் கபடி ஆடு​கின்றன. 'கூட்டணி சேரவும் தெரியலை... ஸீட் ஒதுக்​கவும் தெரியலை’ என்று கொந்தளிக்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.
இந்தப் பட்டியலில், இப்போது இருக்கும் 28 எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போலவே பட்டியலில் ஜி.கே.வாசனின் 'கை’யே ஓங்கி இருக்கிறது. அவர் ஆதரவாளர்கள் 22 பேருக்கும், தங்கபாலு ஆதரவாளர்கள் 13 பேருக்கும், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 12 பேருக்கும், இளைஞர் காங்கிரஸுக்கு 9 பேருக்கும் பங்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு போன்றவர்களுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளே!
மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு​வின் மனைவி ஜெயந்தி தங்கபாலுக்கு ஸீட் கொடுக்கப்​பட்டதற்குதான் உச்சகட்டக் கோபத்தைக் காட்டிவிட்​டனர் காங்கிரஸ்காரர்கள். சில மாதங்கள் முன்பு காங்கிரஸில் சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான எஸ்.வி.சேகர், அதே தொகுதியைக் குறிவைத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலைகள் பார்த்து வந்த கராத்தே தியாகராஜன் இருவரும் செம அப்செட்!
வேட்பாளர் குளறுபடிபற்றி காங்கிரஸ் புள்ளிகளிடம் பேசினோம். ''எஸ்.வி.சேகருக்காக ஜி.கே.வாசனும், இளங்கோவனும் பரிந்துரை செய்தனர். பொதுவாக, டெல்லி தலைமை வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பு, மாநில காங்கிரஸ் கமிட்டியிடம் ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர்கொண்ட பட்டியலைக் கேட்கும். அதில் சம்பந்தப்பட்ட தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. இருந்தால், அவர் பெயர்தான் முதலில் இடம் பெறும். ஆனால், மயிலாப்பூர் தொகுதியில் தன் மனைவி ஜெயந்தி பெயரை முதலில் போட்டிருந்தார் தங்கபாலு. கடைசியாகத்தான் எஸ்.வி.சேகர் பெயர். எப்படியோ, தங்கபாலுவின் ஆசை நிறைவேறிவிட்டது...'' என்கிறார்கள்.
எஸ்.வி.சேகருக்காக வேறு சிலர் வயலார் ரவியிடம் சொல்லி இருக்கின்றனர். 'கவலைப்பட வேண்டாம். அவர் பெயர் பட்டியலில் உள்ளது’ என்று சொன்னாராம். விடியல் சேகர் பெயரைப் பார்த்து அதான் எஸ்.வி.சேகர் என்று வயலார் ரவி புரிந்துகொண்டதாகச் சொல்கிறார்கள். 'புதுசாக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு ஸீட் தரக் கூடாது’ என்று நாமக்கல் ஜெயக்குமார் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தாராம். ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. ஆகி, பிறகு பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய், அங்கு இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த செல்வப் பெருந்தகைக்கு செங்கம் தொகுதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, பி.ஜே.பி-யில் இருந்து வந்த திருநாவுக்கரசருக்கு, அறந்தாங்கி தொகுதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதை எல்லாம் சொல்லிப் புலம்புகிறது எஸ்.வி.சேகர் கோஷ்டி.
''தமிழக காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் செல்வாக்கு அதிகரிக்கக் கூடாது என்று, அவரைக் கவிழ்ப்பதற்காக எதிர் எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்த தங்கபாலுவும், ஜி.கே.வாசனும் கரம் கோத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்கள்!'' என்கிறார்கள்.
''சத்தியமூர்த்தி பவன் பக்கம் தலை வைத்துக்கூட படுக்காதவர்களுக்கும் ஸீட். கிரிமினல் வழக்கில் பேசப்பட்ட ஒருவர் ஸீட் வாங்க 1.50 கோடி 'கை’ மாறியதாம். வேட்பாளர் தேர்வில் நடந்த முயற்சியில் ஒரு செல்போன் உரையாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வேட்பாளரின் அழகைப்பற்றி வர்ணிக்கிறார்கள். 'நைஸ் லுக்கிங் லேடி’ என்று போகும் அந்த உரையாடல் ஆபாச ரகம். இதை எல்லாம் டெல்லியில் சொல்லி ஸீட் வாங்கி இருக்கிறார்கள். அந்த அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்டதுதான் கொடுமை. இப்போது ஸீட் வாங்கியவர்களில் முக்கியமான சிலர்தான் ஜெயிப்பார்கள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, 'கருணாநிதி காங்கிரஸ்’ கோஷ்டி ஒன்று செயல்படுகிறது. அவர்களை எப்படியும் வெற்றி பெறச் செய்துவிட வேண்டும் என்று தி.மு.க. தலைமை உத்தரவு போட்டு இருக்கிறது. மெஜாரிட்டிக்கு நெருக்கத்தில் போட்டியிடும் தி.மு.க. எப்படியும் அறுதிப்பெரும்பான்மை பெறாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால், கருணாநிதி காங்கிரஸ் கோஷ்டியினர் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களைவைத்து ஆட்சி அமைக்க வசதியாக இருக்கும் என்று தி.மு.க. நினைக்கிறது!'' என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் கூட்டமாக நின்று பேசுகிறார்கள்.
காங்கிரஸின் சீனியர்கள் சிலர், ''பெருந்​தலைவர் காமராஜ், 'கட்சிப் பணிக்கு மூத்தவர்கள் வர வேண்டும். அரசியல் பதவிகள் புதியவர்​களுக்குத் தர வேண்டும்’ என்று அறிவித்து முதல்வர் பதவியை துறந்தார். இதுதான் காமராஜரின் 'கே பிளான்.’ ஆனால், அதை எல்லாம் மறந்துவிட்டு, தொடர்ந்து எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்களுக்குதான் ஸீட்களை வாரி வழங்குகிறார்கள். யசோதா நான்கு ஐந்து முறை எம்.எல்.ஏ. அதோடு, சில தேர்தல்களில் போட்டி​யிட்டு தோல்வியும் அடைந்தார். கே.ஆர்.ராமசாமி 1989 முதல் தொடர்ந்து ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். வேலூர் ஞானசேகரன், 1991-ல் இருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ. இவர்களுக்கு இப்போதும் ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். ஜெயந்தி தங்கபாலு, அருள் அன்பரசு, விஷ்ணு பிரசாத் என்று வாரிசுகளுக்கு ஸீட்களை வாரி வழங்கி இருப்பதைவைத்தே காங்கிரஸ் கட்சி சல்லடையாகப் போய்க்கொண்டு இருக்கிறது!'' என்று சலிப்போடு சொன்னார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைப்பற்றியும், அவர்களின் பின்னணிபற்றியும் நிலவும் அதிருப்தியை வி.ஐ.பி. புள்ளிகள் என்ன சொல்கிறார்கள்?
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கேட்டோம். ''உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் நிச்சயமாக ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே, எம்.எல்.ஏ-வாக இருந்த ராணி வெங்கடேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நான் பரிந்துரை செய்த யாருக்கும் ஸீட் கிடைக்கவில்லை. எனது வருத்தம், உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஸீட் கிடைக்கவில்லை என்பதுதான். தங்கபாலு தன் குடும்பத்தினரும் எடுபிடிகளும் போட்டியிட வழி செய்திருக்கிறார். ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்றவர்கள் ஏன் இவற்றைத் தட்டிக் கேட்கவில்லை என்று தெரியவில்லை?'' என்றார் காட்டத்துடன்.
''அகில இந்திய காங்கிரஸ் போராடி 63 தொகுதிகளை வாங்கியிருக்​கிறது. ஆனால், தமிழக காங்கிரஸ் தங்களுக்குள் ஒரு பங்கீட்டை வைத்துக்கொண்டு ஸீட்களைக் கூறு போட்டு இருக்கிறார்கள். 12 நாய்கள், 18 கழுதைகள், 16 பன்றிகள் என்று பிரித்துக்கொள்வதா உள் கட்சித் தொகுதிப் பங்கீடு? சில மாதங்களுக்கு முன்பே, 234 தொகுதி​களுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்துவிட்டு, காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை அறிவித்தால் பிரச்னை ஏற்படாது. கடைசி நேரத்தில் நடக்கிற குதிரை பேரமாக வேட்பாளர் பட்டியல் மாறிவிட்டது. வேட்பாளர் தேர்வில் நடந்த பிரச்னைகளால், 12-ல் இருந்து 18 தொகுதிகள் வரையில்தான் காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஜெயித்தால், தி.மு.க. அமைச்சரவையில் மனைவிக்கு மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பது தங்கபாலுவின் திட்டம். எது எப்படியோ, மயிலாப்பூரில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலெட்சுமிதான் ஜெயிப்பார்!'' என்கிறார் எஸ்.வி.சேகர்.
கராத்தே தியாகராஜனை சந்தித்தோம். ''மயிலாப்பூரில் மட்டும் இளைஞர் காங்கிரஸுக்காக 5,000 பேரை சேர்த்தோம். ஓர் உறுப்பினரைக்கூட சேர்க்காத ஜெயந்திக்கு ஸீட் கொடுத்து இருக்கிறார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் ப.சிதம்பரத்தை வைத்து பட்ஜெட் விளக்கக் கூட்டம், இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கூட்டம், கடந்த எம்.பி. தேர்தலில் தீவுத் திடலில் கூட்ட ஏற்பாடு, சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுலுக்கு வரவேற்பு என்று கட்சியை வளர்ப்பதற்காக எத்தனையோ வேலைகளைச் செய்திருக்கிறோம். கொடி கட்டவும், போஸ்டர் ஒட்டவும், மேடை போடவும் மட்டும் நாங்களா? எங்கள் உழைப்பைச் சுரண்டி, அதில் அவர் மனைவிக்கு ஸீட் வாங்கிக் கொடுத்திருக்கும் உழைப்புத் திருடர்தான் தங்கபாலு. அவரது செல்போனைத் தூக்கிக்கொண்டு வரும் தாமோதரனும், அவருக்கு கார் கதவைத் திறந்துவிடும் சிவலிங்கமும் வேட்பாளர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள்...'' என்றார் சீற்றத்துடன்.
இதில் எத்தனை பேர் தேறுவார்​களோ?

Mar 26 எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் மீட்டுக் கொடுத்த வீடுதான் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு.

Mar 26 எம்.ஜி.ஆரும்,ஜெயலலிதாவும் மீட்டுக் கொடுத்த வீடுதான் கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு.

அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளராக, தமிழகம் முழுக்க சூறாவளி பிரசாரத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தார் ராதாரவி. பத்தே பத்து தகவல்கள் சொல்கிறேன் என்று மடமடவென கொட்டத் தொடங்கினார். ''தமிழ்நாட்டு மக்களிடம் நான் சொல்லப்போகும் விஷயங்கள் இவைதான்'' என்கிறார்!
ஐம்பெரும் தலைவர்கள்
''ராபின்சன் பூங்காவில் தி.மு.க-வை ஆரம்பித்தபோது, அறிஞர் அண்ணாவால் சுட்டிக்காட்டப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள்... நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ஈ.வே.கி.சம்பத், கே.ஏ.மதியழகன், அன்பழகன் ஆகியோர்​தான். இவர்களில் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி, நடராசன் மகன் என்.வி.என்.செல்வம், மதியழகன் தம்பி கிருஷ்ணசாமி, மகன் முகிலன், சம்பத் மனைவி சுலோசனா என்று நான்கு பேரின் வாரிசுகளும் இப்போது அ.தி.மு.க-வில் அம்மாவுடன்தான் இருக்கிறார்கள்!
கோபாலபுரத்து வீடு
'மக்களுக்கு தானமாகக் கொடுத்துவிட்டேன்’ என்று கோபாலபுரத்து வீட்டைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்கிறார், கருணாநிதி. தனது மேகலா பிக்சர்ஸ் சினிமா கம்பெனிக்காக கருணாநிதி, அந்த வீட்டை அடகுவைத்தார். வெளிவந்த படங்கள் தோற்றன. அதனால், வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மா ஜெயலலிதாவும் சம்பளமே வாங்காமல் வெறும் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 'எங்கள் தங்கம்’ படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். படம் பிரமாதமாக வியாபாரம் ஆனது. அந்தப் பணத்தில்தான் ஏலத்துக்குப் போன வீட்டைத் திரும்பப் பெற்றார். எம்.ஜி.ஆரும், அம்மாவும் மீட்டுக்கொடுத்த கோபாலபுர வீட்டைத்தான், இப்போது பொது மக்களுக்கு தானமாகத் தருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் கருணாநிதி!
கருணாநிதி கமென்ட்
கோடானுகோடி ரூபாய்களை விழுங்கி, திகார் சிறையில் இருக்கும் ஆ.ராசாவை, 'குற்றவாளி இல்லை...’ என்று பிதற்றும் கருணாநிதி, பொய் வழக்குப் போடப்பட்ட அம்மாவை வாய் கூசாமல் 'குற்றவாளி’ என்பது எந்த விதத்தில் நியாயம்? டெல்லியில் சோனியாவை சந்தித்தபோது, 'எதிரியை நம்பலாம். ஆனால், துரோகியை நம்பக் கூடாது!’ என்று ராமதாஸ்பற்றி தன்னிடம் சோனியா சொன்னதாக கருணாநிதி கூறினார். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவரோடு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்?
சினிமா விளம்பரம்
நான், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், டப்பிங் கலைஞர்கள் அமைப்பின் தலைவர், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர். தினசரிப் பத்திரிகைகளில் கால் பக்கத்துக்கு மேல் சினிமா விளம்பரம் தரக் கூடாது என்பது சட்ட விதி. திடீர் என்று ஆளும் கட்சி ஆட்கள் தயாரிக்கும் படங்களுக்கு ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்தால், என்ன அர்த்தம்? தங்களைத் தட்டிக்கேட்க ஆள் இல்லை என்கிற கர்வம்தானே காரணம்?
சாவைத் தேடிய சாதிக் பாட்சா
சாதாரண ஜவுளி வியாபாரம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்தார், சாதிக் பாட்சா. அவர் செய்த ஒரே பாவம்... ராசாவுக்கு நண்பராக இருந்ததுதான். சகவாசம் சரியில்லேன்னா சாவுகூட வீடு தேடி வரும் என்பதற்கு சாதிக் பாட்சாவின் மரணமே சாட்சி!
விஜயகாந்த் வளர்ச்சி
நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே என்னுடைய நெருங்கிய நண்பன் விஜயகாந்த். கட்சி தொடங்கிய அஞ்சு வருஷத்தில் நல்ல வளர்ச்சி. இது வரை விஜயகாந்த் இரண்டு படிக்கட்டுகள்தான் ஏறி இருக்கிறார். எப்போது எங்கள் அம்மாவுடன் கூட்டணி சேர்ந்தாரோ, இனிமேல்தான் 98 படி உசரத்துக்கு அசுர வளர்ச்சி காணப்போவது உறுதி!
கருணாநிதி மாளிகை
ராணி மேரி கல்லூரியில் தலைமைச் செயலகம் அமைக்க ஆசைப்பட்டார், அம்மா. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி வாசலில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராட்டத்தில் இறங்கினார் ஸ்டாலின். இப்போது அந்தக் கல்லூரிக்குள் கருணாநிதி மாளிகை என்று பெரிய வளாகத்தை யாரைக் கேட்டு கட்டி இருக்கிறார்கள்? பொதுவான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் இருக்கும் கட்டடத்துக்கு கருணாநிதி பெயரை எப்படிப் பயன்படுத்தலாம்?
ரிஜிஸ்டர் ஆபீஸ் வில்லன்கள்
சென்னை மட்டும் அல்ல... தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆளும் கட்சி ஆட்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் காசு இல்லாமல், உறவினர்களுக்கு ஆபரேஷன் செய்யப் பணம் இல்லாமல் பரம்பரையாக வாழ்ந்த வீட்டை விற்கிறார்கள், அப்பாவி மக்கள். அந்த வீட்டுக்குத் துளிகூட சம்பந்தமே இல்லாத ஆளும் கட்சி ஆட்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு, ''எங்களுக்கு இரண்டு பெர்சன்ட் கொடு!'' என்று மிரட்டி வாங்கும் கொடூரம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டுவிட்டு பல லட்சத்தை மிரட்டிப் பிடுங்குகிறார்கள்!
கான்கிரீட் வீடு டோக்கன்
அவசரத்துக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொண்டுபோகிறவர்கள் காரை மறித்து, சோதனை போடும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் கேட்கிறேன்? 'கான்கிரீட் வீடு கட்டித் தருகிறேன்’ என்று இப்போது டோக்கன்களைக் கொடுக்கிறார்களே. இது லஞ்சம் இல்லையா, உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?
பிராணிகளுக்கும் பாதுகாப்பு இல்லை
சென்னை நந்தனத்தில் 'வெட்னரி அண்ட் அனிமல் சயின்ஸ் யுனிவர்சிட்டி’ உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் கல்லூரியில் நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள். வெளிநாட்டுக் கோழிகள், அபூர்வ வகை மான்கள், விசித்திரமான பிராணிகள் ஆகியவற்றை வளர்க்கிறார்கள். இந்த இடத்தை தமிழக அரசு பறக்கும் ரயில் திட்டத்துக்குத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கிறது. உண்மையில் ரயில்வே நிர்வாகம் தேவர் சிலைக்கு எதிரில் இருக்கும் இடத்தையே கேட்டது. ஆனால், வம்படியாக இந்த இடத்தை வாரி வழங்கி இருக்கிறார்கள். இங்கு வாழும் வாயில்லா ஜீவன்களை வேறு இடத்துக்கு மாற்றினால், இறந்துவிடும் என்று எடுத்துச் சொல்லியும் பிடிவாதம் பிடிக்கிறது, தமிழக அரசு. ஏன் இத்தனை பிடிவாதம்?''

பட மோசடியில் கருணாநிதி - ஜெயலலிதா குற்றச்சாட்டு !




தவறு என நான் சுட்டியதை மறுக்க, பிழையான படமொன்றைக் காட்டி தமிழக முதல்வர் கருணாநிதி மோசடி செய்துள்ளார் என எதிர்கட்சித்தலைவர் செல்வி: ஜெ.ஜெயலிலதா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
நான் வணக்கம் தெரிவித்தால், கருணாநிதிக்கு அஞ்சி பதில் வணக்கம் தெரிவிக்கக்கூட பேரவைத் தலைவர் மறுக்கிறார் என்று 13.1.2010 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். எனது அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், பேரவைத் தலைவரின் நடவடிக்கையை நியாயப்படுத்தி, சப்பைக்கட்டும் வகையில் ஓர் அறிக்கையை கருணாநிதி வெளியிட்ட கருணாநிதி, தனக்கும், தன் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப் பெயரை நீக்கும் நோக்கத்தில், நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவிப்பது போலவும், அதற்கு பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிப்பது போலவும் ஒரு வண்ணப் புகைப்படத்தை வெளியிட வைத்துள்ளார்.
20.1.2010 தேதியிட்ட 'மாலை மலர்' நாளிதழிலும், 21.1.2010 தேதியிட்ட 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', 'டெக்கான் கிரானிக்கல்' போன்ற ஆங்கில நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. வண்ண புகைப்படத்தில் நான் அணிந்திருக்கும் புடவையின் நிறம் கருஞ் சிவப்பு. ஆனால், 11.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவையில் விவாதத்தில் கலந்து கொள்ளும் போது கருநீல நிறம் கொண்ட புடவை அணிந்திருந்தேன். நான் அன்று சட்டமன்றத்தில் பேசிய காட்சிகள் அனைத்துத் தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.
சட்டமன்றப் பேரவையின் மூலம் தான் என்னுடைய பேச்சுக்கள் அடங்கிய உரை தொலைக்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தால், நான் கருநீலப் புடவை அணிந்திருப்பது தெளிவாகத் தெரியும். அனைத்து நாளிதழ்களிலும் புகைப்படம் வெளியானது. கருணாநிதியால் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம். இதிலிருந்து கருணாநிதியின் மிகப் பெரிய மோசடி வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

11.1.2010 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நான் பேரவைக்குள் நுழைந்த போதும், வெளியே வந்த போதும் பேரவைத் தலைவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அதற்கு அவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை. இது தான் என்னுடைய குற்றச்சாட்டு. இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது பேரவைத் தலைவர் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அப்பொழுதெல்லாம் நான் வணக்கம் தெரிவித்த போது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவித்து இருக்கிறார். 8.1.2010 அன்று நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது கூட பேரவைத் தலைவருக்கு நான் வணக்கம் தெரிவித்த போது, அவர் பதில் வணக்கம் தெரிவித்தார். இவ்வாறு பதில் வணக்கம் தெரிவித்ததற்காக பேரவைத் தலைவரை கருணாநிதி கடுமையாக கடிந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் 11.1.2010 அன்று நான் வணக்கம் தெரிவித்தபோது பேரவைத் தலைவர் பதில் வணக்கம் தெரிவிக்கவில்லை.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் தற்போது பத்திரிகைகளில் வெளியாகியுள்ள புகைப்படம் இதற்கு முன் நான் சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம். 8.1.2010 அன்று நான் சட்டமன்ற பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகக் கூட இது இருக்கலாம். இது மிகப் பெரிய மோசடி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கிணங்க, அனைத்து விஷயங்களிலும் கருணாநிதி இது போன்று தான் மோசடி செய்கிறார்.

இந்த மோசடியையும் கருணாநிதிக்கு சரியாக செய்யத் தெரியவில்லை. பத்திரிகைகளுக்கு வண்ணப் படத்தைக் கொடுத்து மாட்டிக் கொண்டுவிட்டார். இது போன்ற மலிவான மோசடிக்கு கருணாநிதி வெட்கித் தலைகுனிய வேண்டும். இது போன்ற அற்ப விஷயங்களில் கூட மோசடி செய்து பொய் சொல்லும் முதலமைச்சர் நமக்கு வாய்த்திருக்கிறாரே என்று நினைத்து தமிழக மக்கள் வெட்கப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காக்க காக்க கனிமொழியை காக்க….. நோக்க நோக்க திஹாரை நோக்க

Friday, March 25, 2011

தமிழகம்...கருத்து கணிப்பு முடிவுகள் - Part-1

தமிழகம்...கருத்து கணிப்பு முடிவுகள் - Part-1

ளிதில் கணிக்க முடியாத தேர்தல் களத்தை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் திடீர் திருப்பங்கள் ஏற்படும் அரசியல் சூழலை கடைசி வாக்காளரும் தெரிந்து கொள்ளும் வகையில் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக் கின்றன. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான தி.மு.- .தி.மு. இரண்டுமே  இந்தத் தேர்தல் களத்தைத் தங்களுக்கு வாழ்வா-சாவா என்றே பார்க் கின்றன.


பெரிய கட்சிகளுடன் கூட்டணி கண்டுள்ள மற்ற கட்சிகளும் இத்தேர்தலை தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கான அளவுகோலாகவே கருதுகின் றன. அதனால் அதிகத் தொகுதி கள், அதிலும் விரும்பும் தொகுதி கள், ஆட்சியில் பங்கு என்பது உள்ளிட்ட பல நெருக்கடிகளைக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி களுக்கு கொடுத் தன. இரண்டு கூட் டணிகளிலும் அதிருப்தி.. ஆவேசம்.. சமாதானம்.. சரண்  போன்ற நிலைமைகள் உருவாகின. அதனால் எந்த அணிக்கு ஆதரவு என்பது ஒவ்வொரு நாளும் திசைமாறி வாக்காளர்களைக் கடுமையாகக் குழப்பிவருகிறது இந்தத் தேர்தல் களம்.

எந்த அணிக்கும் ஆதரவு அலையும் இல்லை. எதிர்ப்பு அலையும் இல்லை. விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், மின்வெட்டு, ஊழல் ஆகிய நான்கும் ஆட்சி மீதான அதிருப்திகளாக சொல்லப்படுகிறது. ஆனால், அது எதிர்க்கட்சிக்கு சாதகமாக  மாறுவதைப் பார்க்க முடியவில்லை. 2ஜி உள்ளிட்ட விவகாரங்கள் அறிவுஜீவிகளின் மட்டத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு பாமர வாக்காளர்களிடம்  தாக்கத்தை உருவாக்கவில்லை. அதேநேரத்தில் தனிப்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடைந்த திட்டங்களும் பாதித்த விஷயங்களும் தேர்தல் களத்தில் முக்கிய வினை ஊக்கியாக செயல்படும் வாய்ப்பு உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், அரசியல் கட்சிகளின் வாக்கு சேகரிக்கும் கணக்கிற்கு கடுமையான கடிவாளத்தைப் போட்டுள்ளது. இதனால் கட்சிகளின் வியூகமும் வாக்காளர்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறுவது கடினமாகவே இருக்கும்எனவே, எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும், அதனைத் தொடர்ந்துவரும் அடுத்த 5 ஆண்டுகாலமும் தமிழகத்தால் மட்டுமின்றி, இந்தியா முழுமையும் எதிர்பார்ப்பிற்குரியதாக இருக்கிறது.
பழிவாங்கும் வெறியோடு பயங்கரமான முகத்தைக் காட்டும் மத்திய அதிகார வர்க்கத்தின் பார்வை தமிழகத்தின் மீது நிலை குத்தியிருக்கிறது.
தமிழகத்தில் 42 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திராவிட இயக்க ஆட்சியை உடனடியாக அகற்றமுடியாவிட்டாலும், திராவிட இயக்க சித்தாந்தங்களின் மீது கறை படியவைத்து, அதனை நிர்மூலமாக்கும் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.
புதிய கட்சிகள், சிறிய கட்சிகள், சாதிய கட்சிகள், மதரீதியான கட்சிகள் இவைகளின் பேரத் திறன் கூடியிருப்பதால் பெரிய கட்சிகள் தங்கள் சொந்த பலம் மீது நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமையைக் காண முடிகிறது.

பழைய தலைமுறை வாக்காளர்கள் தங்களுக்குப் பிடித்த-பழக்கமான கட்சிக்கு வாக்களிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் இளையதலை முறையினரும் புதிய வாக்காளர்களும் பெரியளவில் எந்தக் கட்சியுடனும் தங்கள் மனதை இணைத்துக் கொள்ளாமல் உடனடித் தீர்வு என்ற அடிப்படையில், சூழலுக்கேற்ப ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் தன்மையினராய் இருக்கிறார்கள்.


இருபது ஆண்டுகளுக்கு முன் நிலவிய அரசியலும், கட்சிகளுக்கான ஆதரவும் இன்று கிராமங்களிலும் நகரங்களிலும் பெரும் மாறுதலைக் கண்டிருக்கின்றன. பெண்களின் வாக்குகள் மிகுந்த முக்கியத்துவத்தை எட்டியுள்ள தருணம் இது. ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ள தொகுதிகளை பல மாவட்டங்களிலும் காண முடிகிறது.
நுட்பமான எந்த அம்சத்தையும் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம். இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிப்பது சவாலான பணி. எனினும், உங்கள் நக்கீரன் எப்போதுமே சவால்களை சந்தோஷத்தோடு எதிர்கொள்வது வழக்கம். ஒவ்வொரு தேர்தலிலும் நக்கீரனின் சர்வே முடிவுகள் தமிழக மக்களின் நாடித் துடிப்பைத் துல்லியமாக வெளிப் படுத்தக்கூடியவை என்பதை வாசகர்களும் பொதுமக்களும் மட்டுமின்றி, அரசியல் பிரபலங்களும் அறிந்தே இருக்கிறார்கள்
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மார்ச் 10, 11, 12, 13 ஆகிய நாட்கள் சர்வே எடுக்கப்பட்டது.
நக்கீரன் நிருபர்களின் ஒருங்கிணைப்பில் தன்னார் வலர்கள், ஊடகவியல் பயிலும் கல்லூரி மாணவ-மாணவியர், சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் என  ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேர் வீதம் 234 தொகுதிகளில் 1170 பேர் களமிறங்கி இந்த மெகா சர்வேயை மேற்கொண்டனர்.

ஒரு தொகுதிக்கு 400 வாக்காளர்கள் என்ற அடிப் படையில் ஆண், பெண், படித்தவர்கள், பாமரர், கிராமத்தினர், நகர்ப்புறத்தினர், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர், சொந்தத் தொழில் செய்வோர் என பல தரப்பிலான வாக்கா ளர்களையும் சந்தித்து மிக கவனமாக இந்த சர்வேயை எடுத்துள்ளனர். எந்த வாக்காளரையும் அவசரப்படுத்தாமல் அவர்களின் சிந்தனையோட்டம் தெளிவாகப் பதிவாகும் விதத்தில் 20 கேள்விகள் அடங் கிய  படிவத்தில், வாக்காளர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.  234 தொகுதிகளில் நக்கீரன் சர்வே டீம் சந்தித்திருக் கும் வாக்காளர்களின் எண் ணிக்கை 93 ஆயிரத்து 600 பேர்.
தேசிய அளவிலான கருத்து கணிப்பு என்றால் அதிகபட்சம் 10ஆயிரம் பேர் என்றும் மாநில அளவிலான கருத்து கணிப்பு என்றால் 2000 பேர் என்றும் பல ஊடகங்கள் கருத்து கணிப்புகளை நடத்தும் நிலையில், உங்கள் நக்கீரன், கள நிலவரத்தை துல்லியமாகத் தருவதற்காக சுமார் 1 லட்சத்துக்கு நெருக்கமான வாக்காளர்களை சந்தித்துள்ளது. ஒற்றையா, இரட்டையா போடுவதுபோல ஒரு சில கருத்து கணிப்புகள் வெளியாகும் நிலையில், 234 தொகுதிகளில் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது என்பதை மிக அதிக சாம்பிள்கள் மூலம்  விஞ்ஞானபூர்வமான ஆய்வு முறையில், சர்வே முடிவுகளை வெளியிடுகிறது.
.தி.மு.. கூட்டணியில் .தி.மு.. இருக்கும் போது எடுக்கப்பட்ட இந்த சர்வே முடிவில் .தி.மு.. தேர்தலை புறக்கணித்துள்ள இந்த சூழலில் நாம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பிற என்பது வாக்களிக்க விரும்பாதவர்கள், இன்னும் முடிவு செய்யாதவர்கள், சுயேச்சை, பாரதிய ஜனதா உள்ளிட்ட சில உதிரி கட்சி களின் ஆதரவு நிலையாகும். தேர்தல் முடிவுகள் வெளி யாகும்போது, நக்கீரன் சர்வேயின் துல்லிய தன்மையை தமிழகம் மீண்டும் உணரும் என்ற நம்பிக்கையுடன் இதனை வெளியிடுகிறோம்.




அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி-ஆனந்த விகடன் கருத்து கணிப்பு முடிவுகள்
தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சுமார் 2081 வாக்காளர்களிடம் ஆனந்தவிகடன் தனது மாணவ பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது...இன்றைய ஆனந்த விகடனில் அதன் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது.....

அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள்;

ஜெயலலிதாவின் ஆணவ போக்கால் வெற்றியின் சதவீதம் குறைந்திருக்கிறது..ஆனால் தோல்வி அடையும் அளவு இல்லை.

ஜெயலலிதா கூட்டணி கட்சியினரிடம் நடந்து கொண்ட விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது...

தலை நகரை விட்டு தலை தப்பிச்சா போதும் னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுகிறார்...அவருக்கே எலெக்சன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு அதை பயன்படுத்திக்காம வெற்றி பெறுவோம் என்கிற மமதையில ஜெயலலிதா தப்பான முடிவுகளை எடுத்திட்டார்..அவரை பார்த்து இப்போ பரிதாபப்படக்கூட முடியலை என்றாராம் ஸ்ரீரங்கத்துகாரர்....

ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த தேர்தலில் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தும்...ஸ்பெக்ட்ரம் விவாகாரத்தை நினைத்து சுமார் 46 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்றார்களாம்...

உசிலம்பட்டியில்,அந்தம்மா வந்தா சட்டம் ஒழுங்கு சரியா இருக்கும்,அதிகாரிங்க பயப்படுவாங்க...நிர்வாகம் சரியாக இருக்கும் அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்..கலைஞர் வந்தா மிக்ஸி கிரைண்டர் கிடைக்கும் அவருக்கு தான் ஓட்டு போடுவோம் என்றார்களாம்

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு கலைஞரை விட ஜெயலலிதாவே அதிக மதிப்பெண் பெறுகிறார்....
சர்வே ரிசல்ட்

ஐந்து ஆண்டு கால தி.மு.க அர்சின் இலவச திட்டங்கள்..சாதனைகள்..?

1.எல்லாமே மக்கள் வரிப்பணம்தானே..?-47.09 சதவீதம் மக்கள்
2.பயனுள்ள திட்டங்கள்-27 சதவீதம் மக்கள்


அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்திருப்பது..?

கூட்டணிக்கு பலம்..-70.78 சதவீதம் மக்கள்

எந்த மாற்றமும் நடக்காது -20 சதவீதம் மக்கள்


யார் நல்லாட்சி தருவார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

கருணாநிதி-28.54 சதவீதம் மக்கள்

ஜெயலலிதா-33.25 சதவீதம்

இருவருமே இல்லை-38.25

யாருக்கு வாக்களிப்பீர்கள்..?

தி.மு.க கூட்டணி-34.60 சதவீதம் மக்கள்

அ.தி.மு.க கூட்டணி-44.26 சதவீதம் மக்கள்.

வைகோ .தி.மு. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களிடையே பெரிய
அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது..பலர்,இது வைகோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றே கருத்து தெரிவித்துள்ளனர்

இப்படி எல்லாம் கருத்துக்கணிப்பு எடுத்து தங்களுக்கு வேண்டிய கழகங்கலின் எண்ணத்தை மக்களுக்கு பத்திரிக்கைகள் திணிக்கிறார்கள். இந்த ஈனப்பிழைப்பு தேவையா... காசு சம்பாரிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

மக்களின் தீர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என இவர்கள் தீர்மானிக்க முடியுமா.. ஏன் இப்படி ஒரு பிழைப்பு. தினமலர், விகடன். மற்றும் இந்து மதவாத பத்திரிக்கைகள் அ.தி.மு.க.வையும். நக்கீரன், குமுதம் போன்றவை தி.மு.க.வையும் முன்வைக்கின்றன. ஆனால் மக்களாகிய உஙகல் தீர்ப்பு எல்லோருக்கும் பாடமாக அமைய வெண்டும்

உங்களுடைய கருத்து எண்ணங்க....? கருத்த பதிவு செய்யலாமே....

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...