Monday, October 31, 2011

கலைஞரின் ஏமாற்றும் வாக்குறுதிகள்

கடந்த முறை இலவச கலர் டிவி வழங்கப்பட்டதைப் போல, இம்முறை தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். 

தாய்மார்கள் தங்கள் விருப்பம் போல் கிரைண்டரையோ அல்லது மிக்ஸியையோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் சனிக்கிழமைதி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதி வெளியிட்டு அதனை வாசித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* கல்வியை மாநில அரசின் பட்டியலில் கொண்டு வர வலியுறுத்துவோம்.

* கிராமத்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை எக்காலத்திலும் நடத்த அனுமதியோம்.

* மத்திய அரசில் இருந்து மாநில அரசுக்கு கிடைத்து வருகின்ற வரி வருவாய் நியாயமான முறையில் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* செம்மொழியாயான தமிழை மத்திய ஆட்சிமொழியாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை.

* மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை தமிழில் எழுத வலியுறுத்துவோம்.

* திருக்குறளை தேசிய நூலாக்க பாடுபடுவோம்.

* ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஆட்சியில் பங்கு கிடைக்க மத்திய அரசை வலியுறுத்தக் கூறுவோம்.

* வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.

* விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு செல்லாத வகையில் பாதுகாப்போம்.

* நகர்புறங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும்.

* படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

* வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களை குறிப்பிட்ட காலங்களுக்கு பொருளாதார ஏற்றம் பெற நடவடிக்கை.

* அரசு கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி. எஸ்.சி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

* மகளிர் சுய உதவி கடன் தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். இதில், ரூ.2 லட்சம் மானியம்.

* மீனவர் நலனுக்கு சிறப்பு காப்பீடு திட்டம் கொண்டுவரப்படும்.

* தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை காண மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* திருச்சி, மதுரையில் மன நல மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* மதுரையில் காசநோய் மருத்துவமனை.

* மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

* எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட வசதிகள்.

* நடக்க முடியாத முதிய நோயாளிக்கு வீட்டிலேயே மருத்துவர் மூலம் சிகிச்சை பெற சிறப்பு நடவடிக்கை.

* தரமான இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்கும் வகையில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

* அரசு பள்ளி மாணவர்களுக்கு மூன்று சீறுடை.

* அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை அறிமுகம் செய்து, கல்வித் தரத்தை உயர்த்துவோம்.

* தமிழகத்தில் பல்கலைக்கழகமே இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை எட்டுவோம்.

* தமிழகத்தில் வெளிநாட்டு மொழிகளை கற்றுத் தர ஏற்பாடு.

* சேது கால்வாய் திட்டத்தை முடிக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

* முல்லைப் பெரியாறு, காவிரி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு தீர்வு கண்டு தமிழக உரிமைகளுக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம்.

* மாநகர போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோவை, மதுரை நகரில் புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரை நீட்டிப்போம்.

* மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு அரசு உள்ளூர் பேருந்தில் கட்டணமில்லா பயணம்.

* முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிக்கு மாத உதவித் தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.

* தலித் கிறிஸ்தவர்கள் ஆதிதிராவிடர் பிரிவில் இடம்பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* சிறுபான்மையினருக்கு சிறப்புக் கல்வித் திட்டம்.

* திருநங்கைகள் சுய உதவிக் குழு அமைக்கப்படும்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி வர்த்தகர்கள் ஈடுபட அனுமதி இல்லை.

* கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.75 ஆயிரம் மானியம் இனி ரூ.1 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும்.

* கலைஞர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி.

* புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.

* பரம ஏழைகளுக்கு ரூ.1 அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டம் தொடரும்.

* தாய்மார்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மாதிரி நீங்க என்ன தான் வாக்குறுதி கொடுத்தாலும் அதுக்காக நீங்க வெளில தான் கடன் வாங்குவீங்க. ஏற்கனவே ஒரு லட்சம் கோடிக்கு மேல கடன் நம்ம மாநிலத்துக்கு இருக்கு. அதா பத்தி நீங்க கவலைபடலேனாலும் நாங்க படனும்ல. எங்களுக்கு உண்மையாவே சுயமரியாதை இருக்கு. இந்த சலுகையெல்லாம் நாங்க உழைச்சி சொந்தமா வாங்கிகுறோம். அதுலேயும் நீங்க கமிஷன் அடிச்சி சம்பாதிப்பீங்க. தி.மு.க.வினர் வெற்றி பெற்ற இடங்களில் அ.தி.மு.க.வினர் வென்றதாக அறிவிப்பு;
கருணாநிதி அறிக்கைஅதுனால நாங்களே எங்கள பாத்துக்குறோம் நீங்க வீட்டுக்கு போங்க.

ஏமாந்த விஜயகாந்த் !


சிந்தியுங்கள் மக்களே, கடவுளோடும், மக்களோடும் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் மக்களே என்று தமிழகம் முழுவதும் வீதி,வீதியாக பட்டி தொட்டியெங்கும் வலம் வந்து கெஞ்சாத குறையாக வாக்கு வேட்டையாடியும் விஜயகாந்த்,  பிரேமலதா ஆகியோரின் கோரிக்கையை மக்கள் நிராகரித்து விட்டது தேமுதிகவினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த மக்கள்தானே 29 எம்.எல்.ஏக்களை நமக்குக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது அதே மக்கள் நமக்கு ஏன் பட்டை நாமம் போட்டுள்ளனர் என்ற குழப்பத்தில் விஜயகாந்த் அண்ட் கோ உள்ளனர்.

ஆனால் மக்கள் கணக்கு எப்போதுமே வேறு மாதிரி தான். தேமுதிகவை ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல் கட்சியாக மக்கள் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.

மக்களே, மக்களே என்று விஜயகாந்த்தும், பிரேமலதாவும் ஊர் ஊராகப் போய்க் பிரச்சாரம் செய்தும் மக்கள் வாக்களிக்காமல் போனதற்கு முக்கியக் காரணங்களை ஆராய்வோம்.

1. முதலில் தேமுதிகவை மக்களுக்கான கட்சியாக, அதாவது மக்கள் கட்சியாக இன்னும் விஜயகாந்த் மாற்றவில்லை. 

2.மக்களுக்கான போராட்டங்களை தேமுதிக முறையாக சரியான நேரங்களில்  நடத்தத் தவறி விட்டது.

3. தனக்கென்று வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றே விஜயகாந்த் செயல்பட்டது.

4. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வர வேண்டும் என்ற மக்களின் அடிப்படை எதிர்ப்பார்ப்பை அவர் மதிக்கத் தவறி விட்டார்.

5. அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக சாடி வந்த விஜயகாந்த், மறுபடியும் அதிமுகவிதாமே கூட்டணி வைத்தது மக்களுக்கு பிடிக்கவில்லை.

6. சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு அமோகமான வாக்குகள் கிடைக்க திமுக மீதான மக்களின் கடும் அதிருப்தியும், கோபமுமே காரணம். அதை சரியாக கணிக்காமல் தன்னுடைய கூட்டணிதான் இந்த வெற்றிக்கு காரணம் என நினைத்தது.

7. திமுகவை விட மேலான கட்சியாக தேமுதிக உருவெடுத்த போதிலும், சரியான எதிர் கட்சியாக சட்டமன்றத்தில் செயல் படாதது.

8. நடக்கும் ஜெ தலைமையிலான ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே பேசுவேன் என்று தெனாவெட்டாக விஜயகாந்த் பேசியது.

9. ஒரு எதிர்க்கட்சியாக பொறுப்பாக நடந்து கொள்ளாமல் இருந்தது.

10. யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாக ஒரு நல்ல அங்கீகாரத்தை மக்கள் கொடுத்தும் கூட அதை சற்றும் பொருட்படுத்தாமல் தேமுதிக செயல்பட்டதால் தான் மக்கள் ஒதுக்கிதள்ளியுள்ளனர்.

தேமுதிக ஒரு பொறுப்பான மக்கள் கட்சி, மக்களாகிய நம் குரலே தேமுதிகவின் குரல், நமக்கான கட்சிதான் தேமுதிக என்ற நிலை வரும் போதுதான் அந்தக் கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும். அந்த ஆதரவும்  நிரந்தரமாகும், அப்போதுதான் தேமுதிக உண்மையான மாற்றுக் கட்சியாக மாற முடியும் என்பதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உணர வேண்டும். 

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்………..


இந்தியாவில் உள்ள சாணக்கிய அரசியல்வாதி கலைஞர் ஒருவர் தான் என்றால் மிகையில்லை. இதை உணர்ந்து தான் ஒருமுறை அறிஞர் அண்ணா கழக மேடையில், திமுகவை காப்பாற்ற கருணாநிதி உள்ளார் என்றார். அவர் கூறியது 100 சதவிதம் உண்மை. 50 ஆண்டுகாலத்தில் திமுக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்துள்ளது. பல சோதனையான காலக்கட்டம் திமுக அழிந்தே விட்டது பலரும் முடிவு செய்த நிலையில் பினிக்ஸ் பறவையாக பலமுறை அழிவில் இருந்து கழகத்தை காத்த சாணக்கியர் கலைஞர்.

திமுக தோன்றிய காலத்தில் இந்தியாவில் பல கட்சிகள் தோன்றியது, ஆண்டது, அழிந்தது, தோன்றிய வேகத்திலேயே அழிந்ததும் உண்டு. ஆனால் திமுக மட்டும் சேதராங்களோடு தப்பியது. அதற்க்கு காரணம் கலைஞர், கழகத்தின் கொள்கைகள், அதன் தொண்டர்கள். கழகத்திற்காக தொண்டர்கள் புயல் போல் புறப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று பம்முகிறான் காரணம்மென்ன?.

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் திராவிட பற்றாளர்களை, விசுவாச கழக தொண்டர்களை புறக்கணித்தனர். பணம் உள்ளவனுக்கே பதவி என்ற நிலையை கழகத்தில் கொண்டு வந்துவிட்டார்கள். தொண்டர் பலம், மக்கள் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவதில்லை. கடந்த 20 ஆண்டுகளத்தில் கழகம் போட்டியிட்ட தேர்தல்களின் வேட்பாளர் பட்டியலை நோக்கினால், சில இரண்டாம் கட்ட தலைவர்களை தவிர, மற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு பின் தங்களது பிள்ளைகளுக்கு, இளவல்களுக்கு சீட் வாங்கி தந்து சட்டமன்றத்துக்கும், பாராளமன்றத்துக்கும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியத்தின் பதவிகளில் வைத்து அழகு பார்க்கிறார்கள். கட்சி பதவிகளிலும் இதே நிலை தான்.

திமுகவில் உழைப்பவனுக்கு பதவியில்லை. பதவியில் இருப்பவனுக்கு பிள்ளையாய் பிறந்தால் பதவி என்ற நிலை. திமுகவில் இருந்து ஓடியவர்களால் உருவான அதிமுகவை பாருங்கள், டீ கடை நடத்திய பன்னீர்செல்வம் முதலமைச்சராகிறார். மாடு மேய்த்தவர் எம்.எல்.ஏவாகிறார். இன்று சட்டமன்றத்தில் உள்ள பல எம்.எல்.ஏக்கள் ஏழைகள். மாநகர மேயர்களாக, நகரமன்ற தலைவர்களாக உள்ளவர்கள் அந்த பதவிகளுக்கு புது முகங்கள். அவர்களுக்கு சீட் தந்து ஜெயிக்க வைத்து அந்த கட்சி தலைமை அழகு பார்க்கிறது. இதை பார்த்து அதிமுகவுக்கு போனால் என்றாவது ஒருநாள் பதவி நிச்சயம், உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு என எண்ணுகிறான் அங்கு போகிறார்கள். கட்சி பதவியாவது கிடைக்கிறது.


திமுகவில்?. எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு. மழைக்காக ஒதுங்கியவன் வீடே எனக்கு சொந்தம் என்பதை போல கலைஞரின் வாரிசுகள் என்ற அடைமொழியோடு பதவிக்கு வருவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்சிக்காக ஸ்டாலின் உழைத்தார், உழைக்கிறார். அவருக்கு பதவிகள் தருவது நியாயம். ஆனால் கட்சிக்காக உழைக்காத அழகிரி, கனிமொழி, தயாநிதிக்கு எதற்காக பதவிகள். ஸ்டாலின்க்கு அமைச்சர் பதவி தந்ததும், மூத்த மகன் அழகிரி பதவியில்லாமல் இருந்தால் மதிக்கமாட்டார்கள் என்று தென் மண்டல அமைப்பாளர் பதவியை உருவாக்கி தந்ததோடு, மத்திய அமைச்சராக்கப்பட்டார். மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு பதவி தந்தோமே என துணைவியானரின் மகளுக்கு எம்.பி பதவி தரப்பட்டது. கழகத்தின் தூண் என வர்ணிக்கப்பட்ட முரசொலிமாறன் இறந்ததும் அவரது பிள்ளையான தயாநிதிக்கு மத்திய அமைச்சர் பதவி.

இந்த மூவரும் கட்சி வளர்ச்சிக்காக எப்போதாவது பாடுபட்டார்களா?, பிரச்சனைக்குரிய சமயத்தில் கட்சியை தாங்கி பிடித்தார்களா?, கட்சிக்காக சிறை சென்றவர்களா?, கட்சிக்காக அடி உதை பட்டவர்களா? ஏதற்காக இவர்களுக்கு பதவி திமுகவில் பதவி வாங்க இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது. பிரச்சனை என்றதும் ஒடிஒலிந்துக்கொண்ட அழகிரி, கட்சிக்கு துரோகம் செய்த தயாநிதியை கட்சி தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியுமா?. இவர்களை விட தடியடிப்பட்டு, சிறையில் சித்ரவதைகளை அனுபவித்து கட்சிக்காக கொள்கைக்கா இன்றும் உழைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சீட் தந்திருந்தால் கழகம் இக்கட்டான நிலையை சந்தித்திருக்காது. ஆனால் எதையும் கலைஞர் செய்யவில்லை.

திமுகவின் இளைஞர் அணி அமைப்பாளராக இன்னும் ஸ்டாலினே கோலோச்சுகிறார். கட்சியின் பொறுளாளர் என்ற பதவி தந்ததும் இளைஞர் அணி பதவியை வேறு ஒரு இளைஞரிடம் தந்துயிருக்க வேண்டாமா?. மகளிரணி, மாணவரணி, தொண்டரணி செயல்படுகிறதா என்பது பூத கண்ணாடி வைத்து தேட வேண்டிய நிலையில் உள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள அந்த அணியினரிடம் ஒரு உத்வேகம் தரப்படுகிறதா என்றால் அதுவும்மில்லை. புதியவர்கள் கட்சியில் சேர்ந்து கட்சியின் பொறுப்புகளுக்க வர நினைப்பவர்களுக்கு அணிகளிலாவது பதவி தரப்படுகிறதா என்றால் அதிலும் சீட் புக்கிங் நடக்கிறது.

இதையெல்லாம் கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் மாற்று கட்சியிலிருந்து பணத்தை, சொத்தை காப்பாற்றிக்கொள்ள கழகமே கோயில் என ஓடிவருபவர்களுக்கு பதவிகள் தருவதில், சீட்கள் தருவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அப்போ கட்சிக்காக உழைப்பவன் முட்டாளா?. இப்படியிருந்தால் கழகத்தில் எந்த ஒரு விசுவாச தொண்டனும் சேரமாட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கலைஞரே, முதலில் கட்சியில், குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வாருங்கள். அதன்பின் அணி அணியாக இளையோர்களை சேர்க்க வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுங்கள்.
 

Sunday, October 30, 2011

திமுக வாக்கு சதவிகிதம் வளர்ந்துள்ளதா..?

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டதில் திமுக வாக்குச் சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்று கலைஞர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ்,பாமக,விடுதலைசிறுத்தைகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்து பெற்ற வாக்குகள் 82 லட்சத்து 49,991 ..அதாவது 22.30 சதவிகிதம்.ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 26.09 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளோம்.22 சதவிகிதத்திலிருந்து 26 சதவிகிதம் அதிகரித்ததற்கு காங்கிரஸ் இல்லாததுதான் காரணம் என சொல்லமுடியாது.வாக்குகள் அதிகம் கிடைத்ததால் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றுள்ளார்.

நமக்கு புரியாதது..



உள்ளாட்சித் தேர்தலில், சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்திருந்தக் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம்..

திமுக -     26.1
காங்கிரஸ்-  5.71
பாமக -  3.55
         
மொத்தம் 35.36
சட்டசபைத் தேர்தலில் திமுக,காங்கிரஸ்,பாமக ஆகியவை பெற்ற வாக்கு சதவிகிதம்

திமுக - 22.4
காங்கிரஸ்-9.3
பாமக -5.2
விடுதலை-1.5
முஸ்லீம் லீக்-1.00

 மொத்தம்-  39.4

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வாக்குகள் குறைந்துள்ளதா..இல்லையா என்பதை நீங்களே சொல்லுங்கள்

கலைஞர் இளைத்து வரும் பூனையா?

திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய பரிதி இளம்வழுதி..பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளது..



"கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் பற்றி கருணாநிதியிடம் கூறினேன்.உண்மையைப் புரிந்து நடவடிக்கை எடுத்தார்.அதற்கு முன்பாக ஸ்டாலினிடம் புகார் தந்தேன் நடவடிக்கை எடுக்கவில்லை.இன்னமும் கருணாநிதியை நான் நம்புகிறேன்.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் உள்ளதா இல்லையா என்பதை நீங்களே அறிவீர்கள்.மாநிலம் முழுதும் தொண்டர்களிடம் மனக்குமுறல் உள்ளது.என் மீதான வழக்குகளுக்கு பயந்து நான் இந்த முடிவை எடுக்கவில்லை.நான் பார்க்காத வழக்கு இல்லை.தனி ஆளாக சட்டசபையில் போராடினேன்" என்றுள்ளார்.

கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

"துரோகச் சிந்தனையினர் தம் சுகவாழ்வு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர்.கையிலே காசில்லாத போது, திமுக விற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள் கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கட்சியையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்." என்றுள்ளார்.

நம் சந்தேகம்...

'பரிதி...இடைப்பட்ட காலத்தில் காசு அதிகம் சேர்த்துவிட்டாரா..கலைஞர் மறைமுகமாக பரிதி முறைகேடான வழியில் பணம் சேர்த்துவிட்டார் என்று சொல்கிறாரா?(முறையான சேர்ப்பு என்றால் கட்டிக் காக்க போரிடவேண்டாமே!)

இதற்கிடையே..திமுகவின் முன்னாள் எம் எல் ஏ வும்..திருநெல்வேலி மாநில செயலாளருமான என்.மாலைராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

டிஸ்கி- வைகோ..கலைஞரையும்,ஜெ யையும் பற்றி ஒரு அறிக்கையில் இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்றுள்ளார்..

அதற்கு கலைஞர்..'திமுக விற்கு ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கைவிட்ட ஜெயலலிதாவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் தெரிகிறார்கள் என்றால் அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

பூனை இளைத்தால் எலி கூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழி அல்லவா " என்று சாடியுள்ளார்.

கலைஞர் தன்னை பூனை என்றும்..தான் தற்போது இளைத்துவிட்டதாகக் கூறுகிறாரா.

அப்படியானால்..இளைத்தது..இவரது கட்டுப்பாட்டை திமுகவில் இழந்து வருவதாகப் பொருளா?

Friday, October 28, 2011

AIADMK



கட்சிமாநகராட்சி/10நகராட்சி/125பேரூராட்சி/529
அதிமுக1089285
திமுக023121
சுயேட்சை0564
காங்கிரஸ்0024
பாஜக0213
மதிமுக017
பாமக002
தேமுதிக023
கம்யூனிஸ்டு(மா)025
கம்யூனிஸ்டு002
மற்றவை000


கட்சிமாநகராட்சி/10நகராட்சி/125பேரூராட்சி/529
அதிமுக1089285
திமுக023121
சுயேட்சை0564
காங்கிரஸ்0024
பாஜக0213
மதிமுக017
பாமக002
தேமுதிக023
கம்யூனிஸ்டு(மா)025
கம்யூனிஸ்டு002
மற்றவை000

என்ன சொல்லப்போகிறார் மருத்துவர்..?

ந்த தேர்தலாக இருந்தாலும், என்னதான் தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்டினாலும் அரசியல் கட்சிகளின் 'கொடுபிடி'களை மட்டும் பெரும்பாலும் தடுக்க முடிவதில்லை. இப்படி வாக்களர்களுக்கு கையூட்டு கொடுத்து ஒட்டு வாங்குவதி ஆளுங்கட்சி- எதிர்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அவரவர் சக்திக்குட்பட்டு பணமாகவோ, பொருளாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்களர்களுக்கு திணிப்பதில் அதீத கவனம் செலுத்துகின்றனர். அதையும் தாண்டி தேர்தலில் தோற்ற கட்சிகள், ''அதிகாரபலம் படைபலம் பணபலம் ஜெயித்து விட்டது.'' என்ற ஸ்லோகத்தை மறக்காமல் சொல்லிவிட்டு தங்களின் தோல்வியை மறைத்து விடுவர். அதே போல, ''நாங்கள் எந்த அணியில் இருக்கிறோமோ அதுதான் வெற்றி அணி.'' என்று ஒரு மாயை உருவாக்கி தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை வளர்த்துக் கொண்ட கட்சி பாமக., இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து இந்த உள்ளாட்சியில் தனி ஆவர்த்தனம் கண்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதை விட, சுமாரான வெற்றியை மட்டுமே ஈட்டியது. உடனே மருத்துவர் ராமதாஸ், ''திராவிட கட்சிகளின் பண பலம், அதிகார பலம் இவற்றையெல்லாம் தாண்டி பா.ம.க. பெற்றுள்ள இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.'' என்று அறிக்கை வெளியிட்டார். அதாவது இவரது கட்சியை சேர்ந்தவர்கள் வாக்களர்களுக்கு பணமே கொடுக்கவில்லை என்ற ரீதியில் இவரது அறிக்கை சொல்கிறது. இவரது அறிக்கை வெளியான சூடு அடங்குவதற்குல்ளாகவே அவரது கட்சியை சேர்ந்த ஒருவர் வாக்களர்களுக்கு சேலை கொடுத்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர சபைக்கு உட்பட்ட 28 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க. சார்பில் லதாராசாத்தி போட்டியிட்டார். இவர் தன்னை தேர்தலில் வெற்றிபெற செய்யுங்கள் என்று கூறி அந்த வார்டுக்கு உட்பட்ட வாக்காளருக்கு அன்பளிப்பாக புடவை வழங்கி உள்ளார். ஆனால் நேற்று வெளியான தேர்தல் முடிவில் வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமதுஜியாஉதீன் வெற்றி பெற்றார். லதாராசாத்தி தோல்வியை சந்தித்ததை அடுத்து, அவர் வாக்காளர்களை சந்தித்து நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லையே பிறகு எதற்கு நான் வழங்கிய புடவையினை ஏன் வைத்துள்ளீர்கள் என்று கூறி அதனை திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மின்நகரில் உள்ள லதாராசாத்தி வீட்டின் முன்பு கையில் புடவையுடன் திரண்டனர். அந்நேரத்தில் வேட்பாளர் லதாராசாத்தி அங்கு இல்லாத காரணத்தினால், நாங்கள் அவரை சந்தித்து புடவையினை கொடுத்துவிட்டு தான் செல்வோம் என்று கூறினார்கள்.'' என்று செய்திகள் கூறுகின்றன.
 
பணபலம்-படைபலம்- அதிகார பலத்தால் வெற்றியின் சதவிகிதத்தை  சற்று உயர்த்த வாய்ப்புண்டே தவிர, இதைக்கொண்டு முழுமையான வெற்றியை அடைந்துவிட முடியாது என்பதையும், மேலும் வெற்றி பெறுவதற்காக வாக்களர்களை 'கவனிக்கும்' வேட்பாளர்களில் தனது கட்சி வேட்பாளர்களும் விதிவிலக்கல்ல என்பதையும் மருத்துவர் புரிந்து கொள்ளட்டும்.

Wednesday, October 26, 2011

கனிமொழியின் தோற்றத்தைப் பார்த்து அழுத கருணாநிதி

ழுகை, வருத்தம், கெஞ்சல், ஆறுதல் என உணர்ச்சிகரமாக நடந்து முடிந்துள்ளது கருணாநிதி-கனிமொழியின் மூன்றாவது சிறைச் சந்திப்பு. இந்தமுறை கொஞ்சம் பிடிவாதமாக, மகளுடன்தான் சென்னை திரும்புவேன் என டெல்லியிலேயே தங்கியிருக்கிறார் கருணாநிதி.


உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த இறுகிய முகத்துடன், கடந்த 21-ம் தேதி மாலை கனிமொழியை சந்திக்க டெல்லி சென்றார் கருணாநிதி. அவருடன் து ணைவி ராஜாத்தி அம்மாளும், பேரன் ஆதித்யாவும் சென்றனர். வழக்கமாக தங்கும் ‘லீலா பேலஸ்’ நட்சத்திர விடுதியில்தான் தங்கினார். டெல்லி சென்றாலே மீடியாக்களை சந்திக்கும் கருணாநிதி அன்று விமான நிலையத்தில் மீடியாக்களிடம் பேசவேயில்லை. 2ஜி விவகாரத்திற்குப் பிறகு டெல்லி சென்றாலே, துரத்தித் துரத்தி கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களும் அன்று கருணாநிதியைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், அழகிரி ஆகியோர் விமான நிலையத்திற்குள் வந்து கருணாநிதியை அழைத்துச் செல்வார்கள் என தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டது. ஆனால், அழகிரி விமான நிலையத்திற்கு வரவேயில்லை. மற்ற இருவரும் வந்து கருணாநிதியை அழைத்துச் சென்றனர்.


இருமுறை டெல்லி சென்றபோதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையோ, பிரதமர் மன்மோகன் சிங்கையோ சந்திக்காத கருணாநிதி இந்தமுறை இருவரையும் சந் திக்க அனுமதி கேட்டிருந்தார். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷீத் ஆகியோர் கருணாநிதியை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வந்து சந்தித்தனர். கனிமொழி ஐந்து மாதங்களுக்கும் மேலாய் சிறையில் இருப்பது பற்றி அவர்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி. பதிலுக்கு, ‘‘2ஜி வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க கட்டாயம் ஏற்பாடு செய்கிறோம்’’ என அமைச்சர்கள் இருவரும் ஆறுதல் சொல் லியிருக்கிறார்கள்.

மேலும், ‘‘சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் இருந்து இப்போதுதான் குணமாகி வருகிறார். அதனால் 2ஜி விவகாரம் குறித்தெல்லாம் அவரிடம் அதிக நேரம் பேச வேண்டாம்’’ என இரு அமைச்சர்களும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்கள். 2ஜி வழக்கில் தயாநிதி மாறனின் பெயரும் இருப்பதால் சோனியாவையும், பிரதமரையும் சந்திக்கும்போது அவரை உடன் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதையும் கருணாநிதி ஏற்றுக் கொண்டார்.

மறுநாள் சனிக்கிழமை காலை மனைவி ராஜாத்தி அம்மாள், டி.ஆர்.பாலு ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் கருணாநிதி சந்தித்தார். சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் உணர்ச்சிகரமான காட்சிகளால் நிறைந்திருந்தது.

சோனியாவின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த கருணாநிதி, அடுத்துப் பேசியது முழுக்க தன் மகள் குறித்தும், 2ஜி வழக்கு குறித்தும்தான். கனிமொழி சிறையில் படும் துன்பங்களை சோனியா காந்தியிடம் சொன்ன ராஜாத்தி அம்மாள் தாங்க முடியாமல் அழுது விட்டாராம். அவருக்கு ஆறுதல் சொன்ன சோனியா காந்தி, ‘வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். அவர் தரப்பில் ஜாமீன் குறித்தும் உறுதிமொழி எதுவும் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

கருணாநிதியின் வருகைக்காக சோனியா வீட்டின் முன் பத்திரிகையாளர்கள் காத்திருக்க, வீட்டின் பின்வாசல் வழியாக வெளியேறினார் கருணாநிதி. பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், சில ரகசிய சந்திப்புகளுக்கும் மட்டுமே இந்த வாசல் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி மீதான வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்ததால், சோனியா காந்தியின் வீட்டில் இருந்து நேராக நீதிமன்றத்திற்குச் சென்றார் கருணாநிதி. ஆனால் அவரது தள்ளு வண்டி உள்ளே செல்வதற்கான சரியான வசதிகள் நீதிமன்றத்தில் இல்லையென்பதை தி.மு.க. அமைச்சர்கள் கருணாநிதியிடம் தெரிவிக்க, ராஜாத்தி அம்மாளை நீதிமன்றத்தில் விட்டு விட்டு ஹோட்டலுக்குச் சென்றார் கருணாநிதி.

மகளுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையோடு நீதிமன்றம் சென்ற ராஜாத்தி அம்மாளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நீதிபதி ஓ.பி.சைனி. ஆயுள் தண்டனை வழங்க வகை செய்யும் நம்பிக்கை மோசடிக்கான பிரிவு 409-யை ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா மற்றும் ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் மீது சேர்த்த தோடு, மீதமுள்ள அத்தனை குற்றவாளிகளுக்கும் பொது ஊழி யர்கள் நம்பிக்கை மோசடி செய்ய ஏதுவாக கூட்டுச் சதியில் ஈடு பட்டனர் என்ற பிரிவையும் சேர்திருந்தார்.

409-ஐச் சேர்த்துள்ளதாக ஓ.பி.சைனி அறிவித்ததைக் கேட்ட கனிமொழியும், அவர் தாயார் ராசாத்தி அம்மாளும் கண் கலங்கினர். ஆனால் அமைதியாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆ.ராசா மட்டும், தன் மனைவியிடம் புன்னகை மாறாமல், “போராட வேண்டும், இறுதி வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டும்’’ என்று சொன்னார்.

குற்றச்சாட்டுகள் பதிவில், மேலும் ஒரு திருப்பமாக டி.பி. ரியாலிட்டீசின் ஷாகித் பல்வா, குசேகான் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜீவ் அகர்வால், ஆசீப் பல்வா, சினியுக் ஃபிலிம்ஸின் இயக்குநர் கரீம் மொரானி, மற்றும் கலைஞர் டி.வி.யின் சரத்ரெட்டி மீது போலி சாட்சியங்களை தயாரித்தற்காக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 193 சேர்க்கப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.க்கு கொடுத்த 200 கோடி லஞ்சப் பணத்தை கடன் போல சித்திரிக்க முயற்சி செய்ததற்காக இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் ஆணை 467 பக்கங்களைக் கொண்டிருந்ததால், குற்றவாளிகள் அனைவருக்கும் ‘சிடி’ யில் கொடுக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு குற்றவாளியிடமும், ‘நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா’ இல்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டு, அவர்கள் பதில் பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பிறகு நவம்பர் 11 முதல் விசாரணை தொடங்கும் என்று உத்தரவிட்டார் ஓ.பி.சைனி.

2ஜி ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியது ஆ.ராசாதான் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் ஓ.பி.சைனி. “ராசா 2007, மே 16-ல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றது முதலே சதித்திட்டம் தொடங்கியது. இச்சதித் திட்டம் அதே ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முழு வடிவம் பெற்று, கலைஞர் டி.வி.க்கு 2009 ஆகஸ்ட் 7 அன்று இறுதி தவணையாக 50 கோடி லஞ்சம் கொடுத்தது வரை இச்சதித்திட்டம் தொடர்ந்தது. எளிமையாக மக்களுக்கு செல்போன் கிடைக்கச் செய்ததைக் காரணம் காட்டி, பொது ஊழியர்கள் தங்கள் பாக்கெட்டுகளை லஞ்சப் பணத்தால் நிரப்பிக் கொள்வதை அனுமதிக்க முடியாது’’ என்று சொன்ன நீதிபதி, ரிலையன்ஸ் நிறுவனத்தையும் ஒரு பிடி பிடித்தார்.

‘‘ஸ்வான் டெலிகாமுக்கான மொத்த முதலீடும் ரிலையன்ஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகமூடியாகவே ஸ்வான் டெலிகாம் செயல்பட் டுள்ளது’’ என்றும் குற்றம் சாட்டினார் நீதிபதி ஷைனி.

ஹோட்டல் அறையில் டி.வி.யில் வழக்கு விசாரணைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதி, 409 பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தாராம். மாலையில் கனிமொழியை சந்திக்க திகார் சிறைக்குச் சென்றார் கருணாநிதி. ஆ.ராசா, சரத்ரெட்டி, கனிமொழி ஆகியோரிடம் சுமார் பதினைந்து நிமிடங்கள் பேசிய கரு ணாநிதி, கனிமொழியிடம் தனியாக நாற்பது நிமிடங்கள் பேசியிருக்கிறார்.

கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்த கனிமொழியின் தோற்றத்தைப் பார்த்து உடைந்து அழுதிருக்கிறார் கருணாநிதி. கடந்த முறை பார்த்ததை விட கனிமொழி மிக மெலிந்து போயிருந்ததுதான் காரணம். கருணாநிதி அழுவதைப் பார்த்த ராஜாத்தி அம்மாளும் உடைந்து அழ, அந்த இடமே உருக்கமாகப் மாறிப்போனது.

உனக்கு ஜாமீன் கிடைக்கிற வரைக்கும் நான் டெல்லியிலேயே இருக்கிறேன் என கருணாநிதி உருக, ‘‘நான் சமாளிச்சுக்குவேன். நீங்க கவலைப்படாதீங்க. இங்க டெல்லியில் குளிர் அதிகம், உங்களுக்கு ஒத்துக்காது’’ என ஆறுதல் சொல்லியிருக்கிறார் கனிமொழி. மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் கரு ணாநிதியுடன் சிறைக்குச் சென்று கனிமொழியை சந்திக்கச் சென்றார்கள். ஆனால் முன் அனுமதி பெறாததைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தது சிறை நிர்வாகம்.

தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது வீட்டில் சந்தித்தார் கருணாநிதி. டி.ஆர். பாலுவும், மத்திய அமைச்சர் நாராயண சாமியும் அப்போது உடனிருந்தனர். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை மற்றும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அவர்கள் பேசியதாகச் சொல்லப்பட்டாலும் பிரதமரிடமும் கனிமொழி ஜாமீன் குறித்தே அவர் பேசியதாக சொல்கிறார்கள்.

கனிமொழி கைதுக்குப் பிறகு பிரதமரையோ, சோனியா காந்தியையோ சந்திக்காத கருணாநிதி, இந்தமுறை சந்தித்தற்கு ராஜாத்தி அம்மாள்தான் காரணமாம். கனிமொழி கைதின்போது, ஒரு மாதத்தில் ஜாமீனில் வந்துவிடுவார் என்ற நம்பிக்கை கருணாநிதிக்கும் இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை போய்விட, ‘‘என் மகளை நீங்கள் கைவி ட்டு விட்டீர்கள்’’ என ராஜாத்தி அம்மாளும் புலம்பிய நிலையில்தான் இந்த சந்திப்புகள் நடந்து முடிந்துள்ளன.

மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கனிமொழி மற்றும் சரத்ரெட்டி ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்த பிறகு அந்த நீதிமன்றத்திலேயே ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிடப் பட்டிருந்தது. தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் பணி முடிவடைந்து விட்டதால், கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 409 கனிமொழியின் ஜாமீனுக்கு சிக்கலை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கிறது.

கனிமொழிக்கு 409 பிரிவால் சிக்கல் என்றால், சரத்ரெட்டிக்கு சேர்க்கப்பட்டிருக்கும் 193 பிரிவும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். பொய்யான சாட்சிகளை உருவாக்கிய குற்றச்சாட்டுக்கு அவர் உள்ளாகியிருப்பதால், ஜாமீனில் வெளியே சென்றால், இதேபோல வேறு பொய்யான சாட்சிகளை உருவாக்கக்கூடும் என்று சி.பி.ஐ வாதிடுமேயானால், அவருடைய ஜாமீனும் நிராகரிக்கப்படக் கூடும்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், மகளோடு தான் சென்னை திரும்புவேன் என டெல்லியில் காத்திருக்கிறார் கருணாநிதி. காத்திருப்பு பலனளிக்குமா எனத் தெரியவில்லை.

Monday, October 24, 2011

சிபிஐ ஆய்வில் சன் டி.வி முறைகேடுகள்

திமுகவின் சார்பில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக  இருந்த தயாநிதிமாறன் தனது பதவிக்காலத்தில், அதிகாரத்தைப் பயன்படுத்தி முந்நூறுக்கும் மேற்பட்ட தொலைத் தொடர்பு இணைப்புகளை தனது வீட்டிற்குப் பெற்றதாகவும், அவை வெளிநாடுகளிலிருந்து செய்திகளையும் படங்களையும் தருவிக்க சன் டிவிக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் முறையீடுகள் வந்தன. இவை குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை தீவிரமாக ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்திடம் இருந்து, தேவையான  ஆவணங்களைப் பெற்று அவற்றை தற்போது  மத்தியப் புலனாய்வுத் துறை பரிசீலித்து வருகிறது. இந்த ஆய்வு நடவடிக்கைகள் இரண்டு மாதங்கள் வரை தொடரும். அதன் பின்னரே முறையான வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று  ம.பு.து தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் வீட்டிற்கு  அதிக அளவில் பன்னாட்டுத் தொலைபேசி இணைப்புகள் எப்படி வழங்கப்பட்டன என்றும் அவை எப்படி 'சன் டிவி'க்கு இணைக்கப்பட்டன என்ற விவரங்களைத் தருமாறு தகவல் தொடர்புத் துறையை மத்தியப் புலனாய்வுத் துறை கோரியுள்ளது. இந்த அத்துமீறலால், BSNL  நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு என்பது குறித்தும்  மத்தியப் புலனாய்வுத் துறை  ஆய்வு செய்கிறது.
நான்காண்டுகளுக்கு முன்பே 2007ல் இந்த முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி தகவல் தொடர்புத் துறையின் செயலருக்குச் சொல்லப்பட்டும், எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ம.பு.து தன் செய்திக் குறிப்பில்  தெரிவிக்கிறது.

Sunday, October 23, 2011

கட்சிகளும் காட்சிகளும் - தேர்தல் முடிவுகள் குறித்த ஓர்

அ.தி.மு.க.
  • உள்ளாட்சி தேர்தல் முடிந்து அம்மாவின் கட்சி அறுதிப் பெரும்பான்பை பெற்று தனித்து நின்றாலும் அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இது குறுகிய காலத்தில் அவரின் அரசுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவதற்கான முகாந்திரம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் கடந்த அரசை மைனாரிட்டி அரசு என்று மாத்திரமே விளித்து வந்த அம்மா யாரும் மறந்தும் கூட அந்த வார்த்தையைப் பிரயோகிக்க முடியாத படி வெற்றியைப் பறித்திருக்கிறார். இதனால் அவருக்கு கூடுதலான பொறுப்புணர்வு சேர்ந்திருக்கிறது. இதைச் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு அவர் சொல்லியிருப்பது போலவே அனைத்து மாநிலங்களிலும் முதன்மையான மாநிலமாக இதை மாற்றிவதிலே கவனம் செலுத்த வேண்டும். முன்பு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த்திருந்த போது அவரின் பேச்சுகளில் இருந்த ஆணவம் இப்போது முற்றிலும் இல்லை என்று சொல்லுவது கடினம் என்றாலும் கொஞ்சம் குறைந்தே காணப் படுவது கவனிக்கப்பட வேண்டியிருகிறது. மரணம் எதிர் நோக்கியிருக்கிற தமிழர்களுக்கான தீர்மானம், மற்றும் அணு உலைக்காக அவர் மக்கள் பக்கம் சார்ந்த்திருக்கிற அணுகுமுறை என்று சிலவற்றைச் சொல்லலாம். ஆனால் அவைகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மக்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கான சாணக்கியத் தனம் என்று  சிலர் கூறும் குற்றச் சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வண்ணம் அவரின் முடிவுகள் இருப்பதில்தான் இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று மெய்ப்பிக்க இயலும். "வெற்றி பெற்றவர்கள் அனைவரும் வீதி வீதியாகச் சென்று நன்றி சொல்ல வேண்டும்" என்ற அவரது அறிக்கை அதற்கான முதல் செயல் என்று எடுத்துக் கொள்ளலாம். [ஆனால் சமச்சீர் கல்வி மற்றும் சட்டமன்ற இட மாற்றம் தொடர்பான சில விஷயங்கள் அவரின் அணுகுமுறை மாற வில்லை என்று சொன்னாலும் மக்கள் சார்பான மேற்சொன்ன இரண்டு விஷயங்கள் முன்பு அவை அடிபட்டுப் போய்விடுகின்றன]. இந்த வெற்றி காங்கிரசுக்கு மற்றும் கலைஞரின் கட்சிக்கு எதிரான மக்களின் கோபம் இன்னும் தீர வில்லை என்பதோடு அ. தி. மு.வுக்கான ஆதரவையும் அதிகமாக சேர்த்திருக்கிறது என்பதில் மெஜாரிட்டி ஆட்சி என்பது மக்களும் மேம்பாட்டுக்கான உழைப்பில் இறங்குவதற்கான உத்திரவாதம் என்பதால் மக்களின் வெறுப்புக்குள்ளாகாமல் இருக்க வேண்டியது அவசியம் - அப்படி வெறுப்புக்குள்ளானால் என்ன ஆகும் என்பதை கலைஞரின் கண்ணீரைப் பார்த்திருக்கும் அம்மா மறக்க மாட்டார் என்றே கருதுகிறேன். அதை மறக்கும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை அவர் நன்கு அறிவார்.

தி.மு.க.
  • கலைஞர் வெறும் வாயிலே அம்பெய்துவார் - அதாவது வாய்ச்சொல்லில் வீரர் என்கிறேன். சில சமயங்களில் பேசிக் கெடுப்பார், பல சமயங்களில் பேசாமல் கெடுவார். இத்தனைக்குப் பிறகும் கடந்த தேர்தலில் தி.மு.க தொண்டர்களால்தான் தி.மு.க. தோற்றது என்று கலைஞர் பேசியதன் விளைவோ என்னவோ ஒரு மாநகராட்சியைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. தமிழ் மக்களுக்கு இன்னல்கள் நடந்த போது பேசாமல் இருந்ததன் விளைவு இப்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.  தான் ஆட்சியில் இருந்த போதெல்லாம் இத்தகைய போராட்டங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது அ.தி.மு.க அரசு இவைகளைக் கண்டு கொள்வதில்லை என்ற அவர் வைக்கிற குற்றச் சாட்டை பாமர மக்கள் கூட நம்ப வில்லை என்பதையே இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஆளும் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது எப்போதும் நடப்பதுதான் என்று அறிக்கை வேறு. அது எந்த அளவுக்கு என்றால் - மு. க. அழகிரி வார்டிலேயே தி. மு.க. நான்காவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கின்றது என்பதிலிருந்து நாம் புரிந்தது கொள்ளலாம். மத்தியில் இன்னும் பதவியில் அமர்ந்திருக்கும் அவர் மக்கள் பிரச்சனைக்காக தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டு வெறும் அறிக்கையில் இல்லாமல் - இறங்கி வேலை செய்தால் ஒழிய அவரால் ஒன்றும் பேச முடியாது - ஏனெனில் வெறும் பேச்சைக் கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை அவர் அறிவார் - வரிசையாகத் தோற்றுக் கொண்டிருந்த கால கட்டங்களிலேயே அவர் சொல்லுவார் - பேச்சைக் கேட்க இங்கே வருகிறீர்கள் ஆனால் வாக்கை மட்டும் அவருக்குப் போட்டு விடுகிறீர்கள் என்று - இருந்தாலும் அதுதான் அவரைக் காப்பாற்றிக் கொண்டும் வந்திருக்கிறது. ஆனால் இனியும் அந்த நிலை நீடிக்காது என்றே கருதுகிறேன். இருந்தும் அவர் பேசுவதை யாரும் தடுத்து விட முடியாது என்கிற விஷயமும் எட்டிப் பார்க்கின்றது.
காங்கிரஸ்
  • அதைப் பற்றி எழுத வேண்டுமா என்ன? பதினைந்து மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்டு மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இதில் அ.தி,மு.க - முன்னூற்றி ஐம்பது உறுப்பினர்களையும், தி.மு.க. நூற்றி ஒன்று உறுப்பினர்களையும் [மொய்] பெற்றிருக்கிறது. அவைகளோடு ஒப்பிடும் போது இந்தப் பதினைந்து பெற்றதற்கு ஒன்று வாங்கிய பா.ம. க. வே மேல். இத்தனை ஆண்டு கால வரலாறு உள்ள கட்சி தமிழர்களை அழித்தொழிக்க ஆவன செய்துவிட்டு அவர்களிடமே ஆட்சி பீடத்திற்கு அனுமதி கேட்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மமதை இனியாவது மாற வேண்டும். ராகுல் காந்தி அமெரிக்கப் பெண்ணை மணக்க இருப்பதாக வரும் வதந்திகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் - [தனி நபர் சொந்த விஷயங்களை உள்ளிழுப்பதற்கு மன்னிக்கவும் - வாக்குக்காக கிராமங்களுக்குச் சென்று மதியம் கஞ்சி குடித்துவிட்டு மாலையில் அரண்மனையில் படுத்துறங்கும் நடிப்பே இப்படிப் பேச வைக்கிறது] - இலங்கைக்கு ஆயுதம் வழங்கி தமிழரை கொன்றது உறுதிப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் - தமிழ் மீனவர்களை கொன்றொழிக்கப் படுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் - தமிழக முதல்வரின் கூடங்குளம் பற்றிய கடிதத்தைக் கூட பிரதமரிடம் சேர்க்காத நிலையில் - எந்தத் தைரியத்தில் இங்கே வந்து இன்னும் போட்டி போடுகிறார்கள் [அவர்களுக்குள் நடக்கும் போட்டியல்ல]. இனிமேலாவது மிச்சமிருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதே வேண்டுகோள்.
பா.ஜ.க.
  • ஒரு கட்சியின் மேல் இருக்கும் வெறுப்பும் கோபமும் அதனுடைய எதிர் கட்சியின் வெற்றிக்கு நிச்சயம் வலுச் சேர்க்கும் - அ.தி.மு.க. வின் வலு கூடியது போல. எனவே காங்கிரசின் மேல் இருக்கும் கோபம் எட்டுத் திக்கும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த ஒன்றே அடுத்த முறை பா. ஜ.கவை ஆட்சி பீடத்தில் அமர்த்தும். [ஆருடம்] - எனவே அத்வானி அவர்கள் யாத்திரையை முடித்துக் கொண்டு வீடு திரும்பலாம். உள்ளாட்சித் தேர்தலில் இது எதிர்க் கட்சி என்கிற நிலையில் இல்லாமல் இருப்பதால் பா.ஜ.க. எப்போதும் தோற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இரண்டு நகராட்சித் தலைவர் பதவியைத் தட்டிப் பறித்திருக்கிறது. ஒன்று கோவை மாவட்டத்தில் மற்றொன்று நாகர் கோவிலில். இரண்டிலும் மதக் கலவரங்களை மையப் படுத்தி அதைக் கூர்மைப் படுத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டது. இது இன்னும் தனது செல்வாக்கைப் பயன் படுத்த இந்த வெற்றிக்குப் பிறகு இதே ஆயுதத்தை மீண்டும் எடுக்கலாம் என்பதால் தமிழ் மக்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
தே.தி.மு.க
  • விஜயகாந்த் கட்சி சில படிப்பினைகளுக்குப் பிறகு - இந்தத் தேர்தலில் ஐந்து மாநகராட்சி உறுப்பினர்களையும் இரண்டு நகராட்சித் தலைவர்களையும் பெற்றிருக்கிறது என்பது அவருக்கென்று இருக்கிற வாக்கு வங்கியையும் அதோடு சேர்த்து மிகப் பெரிய கொள்கை ஒன்றும் இல்லையென்றாலும் சினிமா தருகிற புகழை வைத்துக் கொண்டே வெற்றி பெற முடியும் என்பதற்கே அவர் உதாரணம். மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்று மில்லை. விஜய் தாராளமாய் தேர்தலில் குதிக்க அவரது அப்பா அவருக்கு அனுமதி அளிக்கலாம்.
ம.தி.மு.க. 
  • சட்டமன்றத் தேர்தலில் தனித்து விடப்பட்ட கட்சி - தன்மானத்தோடு ஒதுங்கி நின்ற வை. கோ வின் புகழ் சற்றே கூடியிருக்கிறது... மாநகராட்சியில் எட்டு கவுன்சிலர்களை பெற்றிருக்கிறார்கள். ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும் பெற்றிருக்கிறார்கள். இது தொடர்ச்சியாக மக்கள் பிரச்சனைகளையும் தமிழர்கள் சார்பாக அவர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டிற்கான வெற்றியாகக் கருதுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பா.ம.க
  • தனித்துப் போட்டியிட்டதற்காக அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு மாநகராட்சி உறுப்பினரைப் பெற்று மானத்தைக் காப்பாற்றிக் கொண்டார்கள். இனிமேலும் தனித்துப் போட்டி போடுவார்களா - மன்னிக்கவும் போட்டியிடுவார்களா?
ம.ம.க.
  • நேற்றையக் கட்டுரையில் பிரபாகரனின் வருத்தத்தைப் போக்கும் விதமாக மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு வெற்றி - கோவை மாவட்ட என்பத்தி ஆறாவது வார்டில் கிடைத்திருக்கிறது. எந்த மாவட்டம் என்பதைக் கவனிக்க.

எனவே
தனித்து நின்று தங்கள் கட்சிகளின் பலத்தை அறிந்து கொள்ளவே என்று எல்லாராலும் சொல்லப் பட்டாலும் நடந்த முடிவுகள் வெறும் கட்சியைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. கட்சி சார்பு என்பதையும் தாண்டி - ஒரு கட்சியின் மீதான வெறுப்பு, ஒருவரின் அணுகுமுறை மாற்றம் - மத்திய அரசின் தமிழர்களின் மீதான வெறுப்பு - போன்ற பல்வேறு காரணிகள் இந்தத் தேர்தலில் அடித் தளமாய் இருந்திருக்கின்றன. 

இனிமேலாவது மக்களின் உணர்வுகளை - கொள்கைகளை முன்னிறுத்த வேண்டிய கட்சிகளே தேவை என்பதையே இது உணர்த்துகிறது. 
இதுவே உண்மைஎன்றால் வாழ்க ஜன நாயகம்!

Saturday, October 22, 2011

உள்ளாட்சி தேர்தல் ஒரு ஆய்வு முடிவு.


2011 உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தங்களது பலத்தை இந்த தர்தலில் காட்டியுள்ளன. முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டதை போல இதன் மூலம் கட்சிகளின் ஓட்டு வங்கியை அவ்வளவாக கணக்கிட முடியாது என்று குறிப்பிட்டுயிருந்தோம். தற்போதும் அதேநிலை தான். ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வெற்றி நிலவரத்தை கொண்டு ஓரளவு மட்டும் கட்சிகளின் பலத்தை தீர்மானிக்க முடியும்.

அப்படிப்பார்த்தால் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சி, 150 நகராட்சி, 559 பேரூராட்சி தலைவர் பதவிகளில் 10 மாநகராட்சியை தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் 3ல் இரண்டு பங்கை ஆளும் கட்சியான அதிமுகவும், 1 பங்கை திமுகவும் கைப்பற்றியுள்ளது. அதேபோல் மாநகர, நகர, பேருராட்சிகளுக்கான கவுன்சிலர்கள் போட்டியில் ஆளும் கட்சியான அதிமுக போல் திமுகவும் பரவலாக சம பலத்துடன் வென்றுள்ளது.

இதில் நாங்கள் தனித்து நின்றால் வடமாவட்டம் எங்கள் கையில் என்ற பாட்டாளிகள், எங்கள் மக்கள் சீறுபவர்கள் என்ற சிறுத்தைகள், கூட்டணி போடும்போதுயெல்லாம் ஆட்சியில் பங்கு கேட்கும் தேசிய கட்சி என பீற்றிக்கொள்ளும் கோமகன்கள் உள்ள காங்கிரஸ், மறுமலர்ச்சி ஏற்படுத்துவோம் என முழங்கும் மதிமுக, நான் தான் அடுத்த முதல்வர் என்ற கனவில் உள்ள சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ‘சில்லறை’கள் என்பதை இந்த தேர்தல் களம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த தேர்தல் களம் திமுக-அதிமுக இடையே தான் சண்டைக்களம். இதில் ஆளும் கட்சியான அதிமுக யானையாக வெற்றி பெற, திமுகவோ அங்குசமளக்குவுக்கு வெற்றி பெற்றுள்ளது. (உள்ளாட்சி தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்பது வரலாறு. காரணம் அதிகார பலம், மக்களின் ஆளும் கட்சிக்கான சாதக பலம் போன்றவையே. 2001, 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலோடு 2011 தேர்தலை ஒப்பிட்டு பார்த்தபின்பே இந்த கணிப்பு).

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக மீதுயிருந்த எதிர்ப்பு இன்னும் குறையவில்லை என்பதையே இந்த தேர்தல் நிலவரம் காட்டியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்து 6 மாதத்தில் சமச்சீர்கல்வி, புதிய சட்டமன்ற வளாகம் விவகாரம், பரமக்குடி கலவரம் போன்ற பல பிரச்சனைகள் இருந்தும் எதுவும் எடுபடவில்லை என்பது கண்கூடு.

அதற்க்கு காரணம், அதிமுக நிறுத்துவம் வேட்பாளர்கள் பிரச்சனையில்லாதவர்கள், அதிகம் சம்பாதிக்காதவர்கள் என்ற இமேஜ். அதோடு மக்கள் நிரம்ப யோசிக்கின்றனர். அதனால் தான் அதிமுக மீது பலப்பல குற்றச்சாட்டுகள் இருந்தும் அதை ஆதரித்துள்ளனர். அதேபோல் மாற்றத்துக்கு திமுகவை தவிர்த்து மற்றொரு இயக்கத்தை காணவும் மக்கள் தயாராகயில்லை என்பதும் தேர்தலில் திமுக பெற்றுள்ள வாக்குகள் வெற்றிகள் கொண்டு காண முடிகிறது.

ஆனாலும், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுகவினர் மீது மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருந்தார்களோ அதே நிலைப்பாட்டில் தான் இன்றும் மாநகரம், நகராட்சி, பேரூராட்சி, சிற்றுரூராட்சிகளில் உள்ளார்கள் என்பது தெரிகிறது. அதை மாற்ற நடவடிக்கைகள் திமுக தலைமை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் ஆளும் கட்சிக்கு பயந்துக்கொண்டு போய் பதுங்கிய அதிகாரத்தில் ஆட்டம் போட்டவர்கள், கட்சி முக்கியஸ்தர்களான மு.கஅழகிரி, பழனிச்சாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், சுரேஷ்ராஜன், வீரபாண்டி ஆறுமுகம், நேரு, முரட்டு பக்தர் பெரியசாமி, என்.கே.கே.பி.ராஜா போன்ற பலரை கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் இல்லையேல் எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு போய்விடும்.

அரசியலைக் கற்றுக் கொடுத்த எதிரிகள்! :: கனிமொழி எக்ஸ்க்ளூசிவ்


அப்டேட்டுக்கு ஒரு சிறு அப்டேட்!
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்றைக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட பதினேழு பேர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாகத் தீர்ப்பளித்து, குற்றங்களைப் பதிவு செய்திருக்கிறது. 

 ஆ.ராசா, கனிமொழி, மற்றும் மூன்று நிறுவனங்கள் உள்ளிட்ட பதினேழு பேர் மீதும்ந சிபி ஐ சுமத்தியிருக்கும் புதிய குற்றச் சாட்டையும் நீதிபதி ஏற்றுக் கொண்டு, நம்பிக்கை மோசடிக் குற்றத்தையும் சேர்த்துப் பதிவு செய்திருக்கிறார்.
 
பிரிவு 409 இன் கீழு சுமத்தப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டு ஜாமீனில் வெளியில் வரமுடியாததாகும்.

இனி நேரே வழக்கு விசாரணைக்கு வரும். சிபிஐ எண்பதாயிரம் பக்கங்களில் போட்டுக் குழப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டி இருக்கும்! போபார்ஸ் முதல் சமீபத்தில் ஹாசன் அலி வரை சிபிஐ வழக்குகளை  நடத்திய லட்சணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் தானே!!



கனிமொழிக்காக உருகி உருகி எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையில், கடைசியாக பூனைக்குட்டி வெளியே வந்தே விட்டது!

சீக்கிரமே வெளியே வந்து விடுவாராம்! சிறைக்காவலர்கள் அப்படிச் சொல்வதாக ஒரு பிட்டு.

அடுத்து அறுபது சதவிகிதம் வைத்திருக்கும் தயாளு, கலைஞர் டிவியின் நிர்வாகியாக இருந்து வாக்குமூலத்தில் கனிமொழியை சிக்க வைத்த அமிர்தம் இருவரையும் கொஞ்சம் மிரட்டலாகத் தட்டி வைக்க எத்தனித்திருப்பது போல....!

அடுத்து தான் எடுக்கப்போகும் அரசியல் அவதாரம்!தன்னுடைய ஆதரவாளர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியலில் தொடர்ந்து இருக்கப் போவதாக...!

இப்படி மறைமுகமாகத் தன்னுடைய தந்தையின் முதல் குடும்பத்துக்கு செக் வைக்கிற மாதிரியே ஜூனியர் விகடனில் வெளியாகி இருக்கும் இந்தபிரத்யேகக் கட்டுரைகள் இரண்டு பகுதியாக, இன்றைக்கு கோர்ட்டில் நீதிபதி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது அறிவிக்கப்படாத நிலையில், வெளி வந்திருப்பதாகவே  தோன்றுகிறது.

கனிமொழி தொடர்பாக, இன்றைக்கு நீதிமன்றம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது தெரிந்ததும், இன்னொரு அப்டேட் இன்றைக்கே வரலாம்!இது கனிமொழி என்ற தனிநபர் மீது கவனம் இல்லை!ஒரு ஊழல், விசாரணை, வழக்கு எப்படி எப்படியெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது என்பதன் மீதான கவன ஈர்ப்பு மட்டுமே. 


அரசியலைக் கற்றுக் கொடுத்த எதிரிகள்!


கனிமொழி எக்ஸ்க்ளூசிவ்


''னிமொழி என்ற பெயரைச் சொன்னால்கூட பிரச்னையாகி விடுமோ எனப் பலரும் தயங்கும் நேரத்தில், என்னைப்பற்றி சிலாகித்து எழுதியவர் அவர். 'தமிழுக்கு அவரால் தகவுகள் அமைய இருக்கையில் அரசியல் அவரை ஆட் கொண்டுவிட்டதில் எம்மனோர்க்குச் சிறிது வருத்தம்தான்என அவர் எழுதி இருந்த வரிகள் மனதுக்குள் திரும்பத் திரும்ப எதிரொலிக் கின்றன. முடிந்தால், அவருக்கு என் நன்றியை மறக்காமல் சொல்லுங்கள்!'' - கனிமொழி கசிந்துருகுவது கவிஞர் வாலியின் வரிகளுக்காக. 5.10.11 ஆனந்த விகடன் 'நினைவு நாடாக்கள்பகுதியில் கவிஞர் வாலி, கனிமொழி குறித்து எழுதி இருந்தார். அந்த வரிகளுக்குத்தான் இந்த நன்றி! 

''முடிந்தால் கனிமொழியை நேரில் பாருங்க சார். அப்போதான், அவங்க எவ்வளவு தைரியமா இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் சிறுசிறு சங்கடங்களையோ... விமர்சனங் களையோ... தாங்கிக்க முடியாதவர்தான் கனிமொழி. ஆனால், இன்றைய நிலையில் எத்தகைய சங்கடமும் அவரை இம்மியளவுகூட பாதிக்காது. பத்திரிகைச் செய்திகளையோ, பிறரின் புறக்கணிப்பைப்பற்றியோ அவரிடம் சொன்னால், மெலிதான புன்னகைதான் பதிலாக வருகிறது. அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். மென்மையான மனம்கொண்ட அந்த இலக்கிய வாதியை, எதையும் கடக்கத் துணிந்த இரும்பு மனுஷியாக திகார் மாற்றிவிட்டது என்பதுதான் உண்மை!'' - சிறைக்குள் கனிமொழி இருக்கும் பகுதியில் சில நாட்கள் பாதுகாப்பு பணியாற்றிய தமிழக போலீஸ்காரர் ஒருவரின் பகிர்வு இது.

''தன்னை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் என்கிற மனநிலையில் கனிமொழி வருந்துவதாகச் சொல்கிறார்களே...'' என அவரிடம் கேட்டால், சத்தம் போட்டுச் சிரிக்கிறார். தமிழக அரசியல் நிலவரங்களையும் கனிமொழியின் மன ஓட்டத்தையும் மிகத் தெளிவாக அறிந்தவராக நமது கேள்விக்குப் பதில் சொன்னார்.

''200 கோடி கடன் பெற்ற விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை. கட்சியின் கடைக்கோடி தொண்டர் களுக்கு இது தெரியுமோ தெரியாதோ... ஆனால், தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளுக்கு இது அப்பட்டமாகத் தெரியும். கலைஞர் டி.வி.க்காக 200 கோடி கடன் வாங்க யார் முடிவெடுத்தது, 200 கோடியை முன்னின்று வாங்கிக் கொடுப்பதாக யார் சொன்னது, 200 கோடி வாங்குவது குறித்து யார் யார் கலந்து பேசினார்கள், உண்மையில் அந்தக் கடனுக்குப் பொறுப்பேற்று இருக்க வேண்டியவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில், மேலிடத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
கலைஞர் டி.வி-யில் 60 சதவிகிதப் பங்குகளை வைத்திருப்பவர் தயாளு அம்மாள். கலைஞர் டி.வி-யின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர் அமிர்தம். இவர்களுக்குத் தெரியாமல், 20 சதவிகிதப் பங்குகளை வைத்திருக்கும் கனி மொழியும் சரத்குமாரும் எப்படி 200 கோடி கடன் விவகாரத்தில் ஈடுபட்டிருக்க முடியும்? சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணையில் இதுபற்றி எப்போதாவது கனிமொழியும் சரத்குமாரும் சொல்லி இருக்கிறார்களா? இல்லை, வெளியிலாவது புலம்பி இருக்கிறார்களா? 

 செய்யாத தவறுக்கு அவர் சிக்கி இருக்கிறார் என்கிற பரிதாபத்தைக் கூட பலரும் திட்டமிட்டு மறைத்து விட்டார்கள். அவரைத் திகாருக்குள் தள்ளிவிட வேண்டும் எனப் பகீரத முயற்சி நடந்தபோதும், தன் தரப்பு நியாயத்தால் அப்படி நடக்காது என கனிமொழி நம்பினார். அதையும் தாண்டி கைது அரங்கேறியபோது, 'சீக்கிரமே நாம் மீட்கப்படுவோம்என நம்பியதும் உண்மை. 'ஒரு வாரத்தில் நிச்சயமா ஜாமீனில் எடுத்திருவோம்என்று சிலர் நம்பகமாகச் சொன்னதும் உண்மை. ஆனால், 150 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிற நிலை வரும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை. சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு நாளுமே அவருக்குத் துயரமானதுதான். ஆனால், அதற்காக யார் மீதும் வருத்தப்படும் நிலையில் அவர் இல்லை. 'கனிமொழியின் பெயரைச் சொன்னாலே சிக்கலாகிவிடுமோ?’ எனக் கட்சிக்காரர்கள் தயங்குவதைக்கூடத் தாங்கிக் கொள்ளும் மனநிலையில்தான் அவர் இருக்கிறார்!'' என்கிறார் அந்தக் காவலர்.

கனிமொழியின் நிஜ மனவோட்டம் எப்படி இருக்கிறது?

''சிறை வாழ்க்கை நிறைய விஷயங்களை உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்குமே...?'' எனக் கேட்ட ஒரு நண்பரிடம், ''ஆமாம்... முன்னை விட இப்போ இந்தி நல்லாப் புரியுது. உள்ளே இருக்கிறவங்ககிட்ட பேசணும்னா, இந்தியில் பேசுறதுதான் ஒரே வழி. யாரோடும் பேசாமல் எப்படி இருக்க முடியும்? அதனால், ஓரளவுக்கு இந்தி கத்துக்கிட்டேன்!'' என்றாராம்.

கனிமொழியின் வெல்விஷர் ஒருவர் சொல்வது இதுதான்...

திகார் வாழ்க்கை கனிமொழியின் உடல் எடையை ரொம்பவே குறைத்திருக்கிறது. முதல் பார்வை யிலேயே, உடல் அநியாயத்துக்கு இளைத்திருப் பது தெரிகிறது. அடிக்கடி மாறும் சீதோஷ்ணம் முகத்தையும் நிறத்தையும் பாதித்து இருக்கிறது. பூச்சிகளும் கொசுக்களும் தூக்கத்தைக் காவு வாங்கிவிடுகின்றன. ஒட்டிப்போன கன்னங்களில் கவலை தெரிகிறது. ஆனால், அவருடைய டிரேட் மார்க் அடையாளமான எளிய புன்னகை மட்டும் எப்போதும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.

''இந்த ஜெயில்ல எத்தனையோ பேர் இருக்காங்க. அவங்களோட ஒப்பிட்டால், என்னோட சிரமங்கள் பெரிசு இல்லை. உட்கார ஒரு சேர்கூட இல்லாதது தான் கஷ்டமா இருந்தது. ஆனால், அதுவும் பழகி விட்டது. தரைதான் இப்போது என் தோழி!'' என்கிறாராம்.

''ரொம்ப உடைஞ்சிட்டீங்களே...'' என வருத்தம் காட்டினால், ''உடம்பை ஸ்லிம்மாக்க விரும்புறவங்க ஒரு வாரம் இங்கே இருந்தாப் போதும்!'' என்பதுதான் பதிலாம். கூடவே, சிறைக்குள் இருக்கும் சிரமங்களைச் சொல்லாமல் சொல்லும் விரக்தியான சிரிப்பும்.

ஏற்கெனவே சிறைக்கு வந்து கனிமொழியை பார்த்துவிட்டுப்போன கருணாநிதி மறுபடியும் மகளைப் பார்க்க விரும்பினாராம். ஆனாலும், கனிமொழியே தந்தையின் வரவைத் தவிர்த்து விட்ட தாகச் சொல்கிறார்கள் சிறை வட்டாரத்தில்.

''வீல் சேரில் வந்துபோறது சிறைக்குள் சிரமம். இங்கேவைத்து என்னைப் பார்க்கிறப்ப அவருக்கு ரொம்ப கஷ்டமாகிடும். அந்த சிரமம் என்னை இன்னும் கஷ்டப்படுத்திடும்!'' என்பது கனிமொழியின் விளக்கம். ராஜாத்தி அம்மாளையும் அடிக்கடி வந்து சிரமப்பட வேண்டாம் எனச் சொல்லி விட்டார். கனிமொழியைப் பெரிதாக வருத்துவது மகனின் பிரிவுதான். சென்னையில் படிக்கும் மகனுக்கு இது பரீட்சை நேரம் என்பதால் டெல்லிக்கு வர முடியாத சூழல்.

''தீபாவளிக்குப் பிறகு நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும். விசாரணை அதிகாரிகள் சிலரே இதனை உறுதிப்படுத்திச் சொல்கிறார்கள். வெளியே வரும் கனிமொழியை கட்சியும் அவரது சொந்தங்களும் எப்படி நடத்தப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!'' என்கிறார்கள் சில டெல்லி வாலாக்கள்.

''கட்சியில் இனி கனிமொழியின் இடம் எதுவாக இருக்கும்?''

அவரை வாரத்துக்கு ஒரு தடவை சந்தித்துப் பேசும் நண்பர் ஒருவர் அவருடைய மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்.

''டெல்லியில் உள்ள தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலர் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தார்கள்.அதைப்பற்றி எல்லாம் கனிமொழி கவலைப் படவில்லை ஆனால், பார்க்காமல் தவிர்த்ததற்கு 'தளபதி கோவிச்சுக்குவார்’, 'அண்ணன் திட்டுவார்என அவர்கள் சொன்ன விளக்கங்களைத்தான் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சமீபத்தில் பாட்டியாலா கோர்ட்டில் சந்தித்த ஒருவரிடம் முன்னாள் அமைச்சர்களின் கைது குறித்து கவலையோடு கேட்டுக்கொண்டு இருந்தார் கனிமொழி. 'வீரபாண்டியார் பாவம்’, 'நேருவுக்கு என்னாச்சு’, 'சுரேஷ்ராஜன் வெளியே வந்துடுவாரா’ 'சாமி மேல என்னென்ன வழக்குஎன ஒவ்வொருவரைப்பற்றியும் கவலையோடு கேட்டார். 'நீங்கதான் எல்லோரையும் கேட்குறீங்க... ஆனா, உங்களைப்பற்றிக் கேட்கத்தான் இந்தக் கட்சியில் ஆள் இல்லைஎன அந்த நண்பர் சொன்னபோது கனிமொழியால் விரக்தியோடு சிரிக்க மட்டுமே முடிந்தது.

துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்ளிட்ட சிலருக்குக் கடந்த ஆட்சியில் சில பிரச்னைகள் வந்தபோது, அவர்களுக்காக கனிமொழி எந்த அளவுக்குப் போராடினார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், கையறு நிலையில் தவிக்கும் அவருக்காக இன்றைக்கு யார் போராடுவார்கள்?

ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க அவர் பெரிதாகப் போராடியதாக சித்திரிப்பு செய்தவர்கள், கட்சியில் இருக்கும் எத்தனையோ பேருக்காக அவர் போராடியதை ஏன் மறைத்தார்கள்? பெரம்பலூர் மாவட்டக் கூட்டங்களுக்குகூட அழைக்காமல் அப்போதே கனிமொழியைப் புறக்கணித்தவர் ராசா.  

பலருடைய உண்மையான முகங்களைப்பற்றி கனிமொழி பேசத் தொடங்கினால்... கட்சியால், அவரது சொந்தங்களால் அதற்குப் பதில் சொல்ல முடியுமா?

சமீபத்தில் ஒரு செய்தி வந்தது. கனிமொழியின் ஆதரவு பெற்ற நகராட்சி வேட்பாளர் அவர். ஆனால், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர் அந்த வேட்பாளரை ஆதரித்து வேலை செய்யவில்லை. 'அந்த வேட்பாளர் ஜெயித்தால், தளபதி கோபித்துக்கொள்வார். அவருக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?’ என அந்த மாவட்டச் செயலாளர் வெளிப்படையாகவே சொன்னாராம்.

கட்சிக்குள் கனிமொழிக்கு எப்படியான இக்கட்டுகள் காத்திருக்கின்றன என்பதற்கு இந்த ஒரு சம்பவமே உதாரணம். அவலங்களையும் அனுபவங்களையும் கடந்து வெளியே வரும் கனிமொழி இத்தகைய இக்கட்டுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ..?'' என்கிறார் அந்த நண்பர்.

சிறை வேதனைகளைத் தாண்டி சீக்கிரமே வெளியே வர இருப்பவர், அரசியலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார்? 'இனி எதுவுமே வேண்டாம்; ஒதுங்கி இருத்தலே நலம்என முடங்கப் போகிறாரா? எதையும் கடந்துவிட்ட நெஞ்சுரத்தோடு அரசியலில் நீடிப்பாரா? - தி.மு.க. வட்டாரத்தை மட்டும் அல்லாது, தமிழக அரசியல் அரங்கையும் எதிர்நோக்கி இருக்கும் கேள்விகள் இவை.

இதற்கு கனிமொழியின் பதில் என்ன?

''எவ்வளவோ தாங்கிட்டேன். இனி என்னைக் கஷ்டப்படுத்த என்ன இருக்கு? கட்சியில் தொடர்ந்து என் கடமைகளைச் செய்துட்டு இருப்பேன். அரசியல்னா என்னன்னே தெரியாத எனக்கு ,எதிரிகளே எல்லா விதமான அரசியலையும் கற்றுக்கொடுத்துட்டாங்க. எல்லோரும் புறந்தள்ளிய இந்த நேரத்திலும் எனக்காக சிலர் நிற்கிறாங்க. அவங்களுக்காகவாவது நான் அரசியலில் நின்னு தான் ஆகணும்; நிச்சயம் நிற்பேன்!''

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...