Wednesday, February 29, 2012

ஏளனத்தை புறக்கணி! ஏறிடு வெற்றி ஏணியில்!

உலகப் புகழ்பெற்ற கதாசிரியர், சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் இவர் இளவயதில் தனது கதை பிரசுரமாகாதா? என்று ஏங்கித் தவித்ததும் உண்டு.

சிறுவயதில் இவர் ஏராளமான கதைகள் எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புவார். ஆனால் அவற்றில் ஒன்றுகூடப் பிரசுரமாகாது.

அதனால் சார்லஸ் டிக்கன்ஸை கண்டவர்கள் எல்லாம் கேலி செய்தனர்.
famours writer

'பிரசுரமாகாத சிறுகதைகளை எழுதிப் புகழ் பெற்றவர்' என்று பலர் அவரைப் பார்க்கும்போது ஏளனமாகப் பேசினர்.

அந்த ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.ஏளனத்தை தவிர்க்கும் பொருட்டு எழுதிய கதைகளை நள்ளிரவில் தபால் பெட்டியில் சேர்ப்பார்.


Charless-Dickence

அவர் எழுதிய கதைகள் திரும்பி வந்துகொண்டே இருந்தனவேயன்றி ஒன்று கூட பிரசுரமாகவில்லை.

ஒரு நாள் டிக்கன்ஸ் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பத்திரிகையில் அவரது கதை பிரசுரமாகிவிட்டது.

அந்த மகிழ்ச்சி காரணமாக சார்லஸ் டிக்கன்ஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டவாறு இரவெல்லாம் உறங்காமல் தெருக்களைச்சுற்றிக் கொண்டிருந்தார்.

சார்லஸ் டிக்கன்ஸ் முதலில் எழுதிய எட்டுக் கதைகளுக்கு அன்பளிப்பாக எந்தச் சிறுதொகையும் வரில்லை.

அவர் பெயரும் புகழும் அடைந்தபிறகு அதே கதைகளுக்கு, பத்திரிக்கை ஆசிரியர்களும்(authors), பதிப்பகங்களும்(Publications) அவரது வார்த்தை ஒன்று மூன்று பவுண்டு சன்மானம் கொடுத்து வாங்கிப் பிரசுரிக்கப் போட்டி போட்டனர். (இதைத்தான் வசதி வந்த பிறகு உறவுகளும்,நட்புகளும் தானே தேடிவரும் என்பதோ?)

இவ்வாறு தனது எழுத்துலக வாழ்வில் ஆரம்பத்தில் பல இழிநிலைகளை, தாழ்வுகளையேப் பாரத்த டிக்கன்ஸ் தொடர்ந்து எழுதியமையாலும், முயற்சியை கைவிடாமல் இருந்ததாலும், எதிர்காலத்தில் பெரும் புகழ்,செல்வம் அடைந்தார்.

கேலி செய்த அனைவரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட , சிறந்ததொரு திறமை அவரவருக்குள்ளே இருக்கிறது.

அதைத் தொடர்ந்து முயற்சி செய்து வெளிக்கொணர்ந்தால் இவரைப் போல நாமும் உலகப் புகழ் அடையலாம் என்பதே இப்பதிவின் வழியாக சொல்லிக்கொள்வது.

உங்களுக்கு எழுத்தாளராக விருப்பம் எனில், கற்பனைத் திறம் மிகவும் செறிந்து கிடக்கிறது எனில், அதை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்தி வாருங்கள்.. !! ஏற்ற இறக்கங்கள், வாக்கியப் பிழைகள்(sentence error), வார்த்தைப் பிழைகள்(words error) என எதையும் முதலில் கண்டுகொள்ள வேண்டாம்.

எழுதிய பிறகு மீண்டும் மீண்டும் அதை நீங்கள் வாசிக்கத்தொடங்குங்கள்.. அப்போது நீங்கள் எழுதியது அபத்தமாக இருக்கிறதா? நன்றாக இருக்கிறதா? என்று ஒரு வாசகராக உங்கள் எழுத்துக்களை நீங்களே படித்து, சிந்தித்து தரமேற்றலாம். எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள் போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரலாம். கருத்துச் செறிவிருக்கிறதா? என்பதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம்.

சொல்ல வந்த கருத்துகள் உங்கள் எழுத்தில் இருக்கிறதா? என்பதை மீண்டும் ஒரு முறை படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். எழுத்துகளின் இறுதி வடிவம் வந்த பிறகு பிறருக்கு, நண்பருக்கு, அருகில் இருப்பவர்களுக்கு படிக்கக்கொடுக்கலாம்.

அவரது கருத்துகளை கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எக்காரணம் கொண்டு கேலி செய்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். அவ்வாறானவர்களிடம் மீண்டும் உங்கள் படைப்புகளை கொடுக்காமல் உங்களை உற்சாகப்படுத்துபவர்கள், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் என இருப்பவர்களிடம் மட்டுமே உங்கள் படைப்புகளை படிக்கக்கொடுங்கள். பிறகு பத்திரிகைகளுக்கு அனுப்பலாம்.


எழுத்தில் மட்டுமல்ல.. உங்களுக்குப் பிடித்த துறைகள் எதுவாயினும் அதில் சிறந்தவர்களாக பரிமளிப்பீர்கள்..கவலையைவிடுங்கள்..!!

நம்பிக்கை ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வெற்றிப்பெற்றவர்கள் உலகத்தில் பலர்.. அவர்களில் நீங்களும் ஒருவராக ஏன் இருக்க முடியாது? சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்..!!!

Acidity...

Acidity refers to a set of symptoms caused by an inequity. More names for acidity are hyperacidity or acid dyspepsia. Acid reflux or Acidity is one of the most normal diseases that cause heart burns in the upper body 

Acidity can be a result of inappropriate dietary regimen or stress. It is a problem which when left unattended to, results in peptic ulcer and other complications. It is quite a simple problem when it begins, but it can get out of hand easily if not taken critically. It means the excess secretion of acid by the gastric glands of the stomach.  
The usual signs of heartburn are a burning sensation or pain in the stomach after one to four hours of a meal. The too much secretion of hydrochloric acid in the stomach causes acidity. Acidity can be a result of improper dietary regimen or stress
The too much secretion of hydrochloric acid in the stomach causes acidity. Some causes of acidity include Alcohol, caffeine, nicotine, chocolate, citrus, tomato, peppermint, fried and fatty foods, over-eating, stress, some medications, and being overweight. Acid Reflux Disease causes harms to the esophagus as the acidic contents from the stomach, containing acids and pepsin, pushes back to the esophagus since the sphincter develops into weak and can no-more prevent the contents from stomach from gushing back in esophagus 
Skipping meals, not eating on time, fried and spicy food, stress, anxiety, insomnia, obesity, pregnancy, smoking, alcohol, and wearing tight clothes can give you hyperacidity and heartburn
Acidity is a problem that occurs very commonly; so going in for allopathic medications every time doesn't seem to be a very good thought. Some herbal remedies are very effective in the treatment and prevention of acidity


Symptoms of Acidity

The main symptoms of acidity are:
  • Dyspepsia and heartburn
  • Discomfort, burning sensation in the upper part of the gut area, especially after eating.
  • Regurgitation of the gastric contents
  • loss of appetite
  • nausea, vomiting
  • feeling of sickness
  • flatulence accompanied by burping
  • constipation
Causes of Acidity

Acidity may be caused by many conditions such as:
# Medical conditions, such as gastroesophageal reflux disease, stomach ulcers
# Hyperthyroidism - excessive secretion of the thyroid gland.
# Anxiety, anger and stress.
# Constipation, flatulence or intestinal gases.
# Artificial stimulants or the thought of nearing the food time can create acidity.
# Excessive intake of stimulants like tea, coffee etc.
# Excessive intake of fried foods, spicy or pungent food,
# As a side-effect of some drugs used for treating other illnesses
# Overeating along with bad food combinations. Overeating puts extra load on the stomach, liver, kidneys.
# Eating too rapidly, therefore improper salivation of food.
# Excessive smoking, intake of alcohol
# Tendency to eat and drink together
# Insomnia
# Lack of exercise.
# Long gaps between meals leads to acidity, as it gives the acid in the stomach more time to act.

Home Remedies for Acidity

1) Eat a cup of vanilla ice cream or drink a glass of cold milk to get rid of acidity. This is an easy Home Remedy for Acidity.
2) Raita prepared with fresh curd, grated cucumber, fresh coriander, tomato is a sure shot remedy in aiding digestion, and helps eliminate acidity.
3) Mint: Fresh mint juice taken every day or fresh mint leaves boiled in a cup of water and sipped slowly after meals also helps to keep the stomach acids at bay
4) Mint juice before meals keeps acidity at bay. This is another good Home Remedy for Acidity.
5) Chewing 5-6 basil leaves relieves flatulence and acidity.
6) Half a glass of fresh pineapple juice should be taken after a meal for treating and preventing acidity
7) A piece of jaggery or gur after lunch and dinner prevents acidity
8) A very simple remedy for acidity is thin butter-milk mixed with 1/4 teaspoon of black pepper powder
9) One of the common Home Remedies for Acidity - Onion (pyaz): The juice of onions is an excellent remedy for acidity.
10) Habitual eating habits and a healthy diet can prevent acidity
11) Drink plenty of water (at least 6 to 8 glasses per day) and other fluids to maintain the acid balance in the stomach
12) A sherbet made with kokum and jeera gives relief from acidity.
13) Lemon rind can also be eaten to prevent heartburn
14) A glass of cold milk provides instant relief. This is an effective Home Remedy for Acidity.
15) Eat almonds to give relief to symptoms of acidity
16) Chew a few holy basil (tulsi ) leaves to get relief
17) Bananas, watermelon and cucumber have protective action against the acidity and heart burn
18) Lemon: Juice of one lemon mixed in half glass of water and ½ teaspoon sugar if consumed before meals helps to relieve acidity
19) When suffering from acidity, drink five to eight glass of coconut water a day. This is another effective Home Remedy for Acidity.
Some Foods to Avoid for Heartburn

There are many foods that are commonly known to cause acid in the stomach and heartburn. These are citrus fruits, tomatoes, fatty foods such as pork chops, deep fried meat, or potatoes, aerated cold drinks, coffee, hot milk and so on. These are just some of the foods one should avoid for heartburn as consuming any of these in excess can cause acute discomfort.
However, not all the items named above react in the same way on everyone. People have different reactions to different stimulants and hence, one will need to carefully watch and identify which foods cause the greatest harm. Once you have a list, eliminate those foods from your diet to the extent possible. For example if you find that hot milk causes acute heartburn, then either stop having it altogether, or have it at room temperature or ice cold.
Similarly, with fatty foods - either totally stop having them or have a Tums right before or after the meal which will neutralize the excess acid formed in the stomach.

ஒரு வங்கிக் காசாளரும்,வாடிக்கையாளரும்!

ஒரு வங்கியின் கிளை.

உணவு இடைவேளைக்கு இன்னும் ஐந்து மணித்துளிகளே பாக்கி உள்ளன.

தனது கூண்டுக்குள் அமர்ந்திருக்கும் காசாளர்,தன் கைக்கடிகாரத்தை பார்க்கிறார், சாப்பிடப்போவதற்காக.

அன்று காலை அவருக்கும் அவர் மனைவிக்கும் சண்டை.ஒரு சின்ன விஷயத்தில் தொடங்கி வெடித்து விட்டது.

மனைவியிடம் கோபித்துக்கொண்டு,”உன் சோத்தை நீயே கொட்டிக்கோ” என்று இரைந்து விட்டு,அலுவலகம்  வந்து விட்டார்.

நேரமாகி விட்ட படியால் எங்கும் சாப்பிடவுமில்லை.

காலையிலிருந்து மூன்று  (காபி)குளம்பி  குடித்து வயிறே குழம்பிப் போயிருந்தது.

இப்போது உணவகம் சென்று ஒரு பிடி பிடிக்க வேண்டும்.

இடைவேளைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

(இங்கு ஷாட்டைக் கட் செய்கிறோம்----அடுத்த ஷாட்--)

அந்தக் கிளையின் வாடிக்கையாளர் ஒருவர்.அன்றாட உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தின் மொத்தக் கொள்முதலாளர்.

ஒரு தவணை உண்டியலுக்குப்( usance bill) பணம் கட்ட இன்று கடைசி நாள்.

இன்று கட்டவில்லை என்றால் அவரது முகவாண்மை ரத்தாகி விடும்.
பெரிய இழப்பாகி விடும்.

காலை முதல் அலைந்து திரிந்து தேவையான பணத்தைச் சேர்த்து விட்டார்.
இப்போது வங்கியில் பணம் செலுத்த வேண்டும்.

(ஷாட் கட்-அடுத்த ஷாட்!)

அவர் வங்கியில் நுழையும்போது உணவு இடை வேளைக்கு 5 மணித் துளிகளே பாக்கி!

காசாளரின் கூண்டை அடைந்து பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.10,20 50 100 என எல்லா விதமான நோட்டுக்களும் இருக்கின்றன.

காசாளர் கோபமாகச் சொல்கிறார்”.மூடும் நேரம்.பில்லுக்கெல்லாம் சின்ன நோட்டெல்லாம் வாங்க முடியாது.500,1000 இருந்தால் கொடுங்கள்.வாங்கிக் கொள்கிறேன்.”அவருக்குப் பசி வயிற்றை கிள்ளுகிறது.

வாடிக்கையாளர் காலை முதல் மிகச் சிரமப்பட்டுப் பணத்தைச் சேர்த்திருக்கிறார் .இன்று கட்டா விட்டால் வியாபாரமே போய்விடும் எனும் நிலை.

“அதெப்படி  சின்ன நோட்டு வாங்க மாட்டேன்னு நீங்க சொல்ல முடியும்.நான் நேரம் முடியுமுன் வந்து விட்டேன்.நீங்க வாங்கித்தான் ஆகணும்” னச் சொல்கிறார்.

காசாளர்  சொல்கிறார்” நான் சொன்னாச் சொன்னதுதான்.வாங்க முடியாது”
வார்த்தை தடிக்கிறது.

காசாளர்  முகப்பை மூடிவிட்டு உணவுக்குப் புறப்படுகிறார்.

வாடிக்கையாளர் மேலாளரைப் பார்த்துப் புகார் செய்யப் போகிறார்.

முடிவு எப்படியிருக்கும்?

இதைத் தவிர்த்திருக்க முடியாதா?

முடியும். எப்படி?

காசாளர்;”சார்.சாப்பிடும் நேரம் வந்து விட்டது.இதை வாங்கினால் எண்ணி முடிக்க நேரமாகும்.கொஞ்சம் காத்திருங்கள்.நான் சாப்பிட்டு விட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்.  நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையென்றால் வாருங்களேன் இருவரும் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடலாம்.”
(அல்லது)

வாடிக்கையாளர்: காசாளரை நெருங்கியதும்”சாரி,சார் பணம் சேகரிக்க நேரமாகி விட்டது.கடைசி நாள்.நீங்கள் சோர்ந்திருக்கிறீர்கள் .நீங்கள் போய்ச் சாப்பிட்டு விட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன். இல்லையெனில் இருவரும் சேர்ந்து வெளியில் போய்ச் சாப்பிட்டு விட்டு வரலாம்”

முடியாதா?

முடியும்.
நமது பிரச்சினையில் ஒன்றிப்போகாமல் மற்றவர்க்கும் பிரச்சினை இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டால்.


முடியாதது என்று இவ்வுலகில் எதுவுமே இல்லை - எல்லாமே..., நாம் நடந்து கொள்ளும் விதம், புரிதல், விட்டு கொடுத்தல்........... இது எல்லாம் இப்ப இல்லையோன்னு தோணுதுங்க அணுகுமுறையும்,
எடுத்துச் சொல்லும் விதமும் வெற்றிதேடித்தரும்.

100 மருத்துவக் குறிப்புகள்


1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.


2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.


3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.


4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.


5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.


6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.


7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.


8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.


9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.


11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.


12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.


13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.


கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!


15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.


20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.


21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.


23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.


24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.


25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.


26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.


27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.


28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.


29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.


30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.


31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.



உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!


33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.


34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.


35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.


36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.


37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.


38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.


39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.


40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.


41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.


42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.


43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.


44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.


45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.


46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.


47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.


48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.




மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.


50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.


51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.


52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.


லப்... டப்..!


53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.


54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.


55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.


56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.


57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.



கிட்னியைக் கவனியுங்கள்


58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.


59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி - இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்... உஷார்!


60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.


61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.



பல்லுக்கு உறுதி!


62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.


63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.


64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.


65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.


66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.


67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.


68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.


69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.


70. முகப்பரு இருந்தால்... உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.


71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.


72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.


73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.


74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்


75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.



ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.


77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்... உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.


78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.


79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.


80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்... வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.


81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.


82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.


83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.


85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.



நில்... கவனி... செல்!


86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது... தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே - வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.


87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.


88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்... பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.


89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்... அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.



90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்... தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.


91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.


92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்... கறுப்பே சிறப்பு.


93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.


94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது... அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.


எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.


96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.


97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.


98. அலர்ஜி - ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.


99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.


100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

மதப்பற்று- மதவெறி என்ன வித்தியாசம்?

மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் நூலளவே வித்தியாசம் என்று சொல்வர் சிலர். இரண்டையும் சம்பந்தமே இல்லாத இரு உணர்வுகள் எனக் கூறுவர் சிலர். இரண்டையும் ஒன்றாகவே நிறுத்திப் பார்ப்பர் சிலர். இது மூன்றாமவர்களுக்கான கட்டுரை.

மத உணர்வுகள் என்றென்றும் இந்த உலகில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. மனித வரலாறின் வழி நெடுக இது மாறியதில்லை.

மதம் என்பதை ‘கடவுளைச் சார்ந்து ஏற்படுத்தப்பட்ட ஒரு குழு’ எனக் கூறலாம். அதாவது அந்த மதத்தை பின்பற்றுவோர் எல்லாம், கடவுளைக் காரணம் காட்டி இயற்றப்பட்ட குழுவில் ஒரு உறுப்பினர்.

கடவுளைக் காரணம் காட்டாத குழுக்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன. உதாரணமாக, சமூக சேவை அமைப்புகள், கட்சிகள், அழுத்தக்குழுக்கள், போராட்டக் குழுக்கள், தீவிரவாதக் குழுக்கள், என பல பெயர்களால் இவைகள் அழைக்கப்படுகின்றன.

கடவுள் இல்லை என்பதை நாமெல்லாரும் (அறிவுள்ள மனிதர்களாகிய நாம் எல்லோரும்)  அறிந்திருந்தாலும் கூட, (கடவுள் இருக்கின்றது என்னும் நம்பும் மக்களும் கூட அதை நேரிலே கண்டிராத பட்சத்திலும் கூட), கடவுள் என்ற ஒற்றை விசை மதக்குழுக்களை இதுகாறும் பிழைக்க வைத்துக்கொண்டிருந்தது. அந்த கடவுள் என்னும் பெயர்ச்சொல்லால் இந்தக் குழுக்களை (மதங்களை) நிலையாக எதிர்காலத்துக்கும் இழுத்துச் செல்ல, அதாவது பிழைக்கவைக்க முடியாமல் போவது காலத்தின் கட்டாயம்... எல்லாரும் படிக்கிறார்கள், அறிவு கொஞ்சம் வளருகிறது அல்லவா!!

ஆக.. மதங்கள்/மதவாதிகள், தங்களது அணுகுமுறையில் சில மாற்றங்களைக் கொணர எத்தனிக்கிறார்கள். அதாவது, கடவுள் அற்ற குழுக்களின் சில அணுகுமுறைகளை தம் குழுக்களின் அணுகுமுறையோடு, சேர்த்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, காலம் மாற மாற மதத்தைப் பரப்பும் தளத்தை மாற்றிக்கொள்வது.... (தற்காலத்தில் சமூக வலைதளங்கள்!!), மத உணர்வுகளில் அறிவியல் கலந்திருப்பதாக புருடா விடுவது!!!  இதனால், தமக்கு கிடைக்கப்போவது-அந்த கொஞ்ச நஞ்சம் படித்து யோசிக்க ஆரம்பித்துவிட்ட அந்த மக்கள்- என்ற பேராசையோடு அந்த அணுகுமுறை மாற்றத்தைக் கொண்டுவந்தும் விட்டார்கள். 

மதவாதிகளின் இந்த அணுகுமுறை அவர்களுக்கு நிறைய பலன்களை தந்தது... தந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நஞ்சம் படித்த வாலிபர்கள் இந்த மாய வலையால் ஈர்க்கப்பட்டு, இவர்களும் மதம் என்ற நோயை மக்களிடையே பரப்புகிறார்கள். இதில் மிக மோசமாக பாதிக்கப்படுபவர்கள் இந்து மற்றும் இஸ்லாம் மத பசங்க தான். முகநூல் தளத்தில் இந்த இரண்டு குழுக்களும் கடவுளைப் பரப்பும் வேகம் மலைக்கவைக்கிறது. ஏன் இந்த வேகம்?? ஏன் இந்த மத உணர்வு?? ஏன் இந்த மத வெறி?? என கேள்வி எழுப்பிக்கொள்வது கட்டாயமாகிறது.

இந்த மாதிரி மதத்தைப் பரப்புபவன் எவனும் கடவுளைக் கண்டதில்லை என்பது உறுதி. என்னதான் அவன் விழுந்து விழுந்து கும்பிட்டாலும், ஒரு எழவும் நடக்கப்போவதில்லை என்பதை நாம் சொன்னாலும் அவன் நம்பப்போவதில்லை.

செத்தவன் ஒருவன் எழுந்து வந்து-இம்மையில் நான் செய்த வழிபாடுகளால் மறுமையில் எனக்கு சொர்க்கம் கிடைத்தது- என ஒரு நாளும் சொன்னதில்லை. அப்படி எவனாவது சொல்லியிருந்தால் நாம் எல்லோரும் அந்த செத்துப் பிழைத்தவனை குறுக்கு விசாரணை செய்து விட்டு பின் இம்மை, மறுமை போன்ற இழவுகளை நம்பித்தொலைக்கலாம். எவனோ ஒருவன் சொன்னானென்று நம்பும் மக்கள், கண் முன்னால் நடக்கும் அறிவியலை நம்ப மறுக்கிறார்கள்.

மதங்கள் எல்லாமே மக்களைப் பிரிக்கும் கோடுகள் என்பதை உணர்ந்து கொண்டால், மத உணர்வு வேறு, மதப்பற்று வேறு, மத வெறி வேறு என்று எவனும் சொல்லமாட்டான். இந்த மூன்று பதங்களுமே ஒன்றுதான். மதம் என்ற ஒன்று, இந்த மூன்று பதங்களுக்குமே பொதுவாக இருக்கிறது அல்லவே???! அந்த மதம்தான் மனிதர்களைப் பிரிக்கிறது! மனிதர்களைப் பிரிப்பதை விட மோசமான வக்கிரமான செயலை, வேறு எது செய்துவிட முடியும்??? 

மத வெறி என்பது வேற்று மதத்தானை கொல்லும் செயலுக்குக் காரணம்  மட்டுமல்ல. மதத்தை அடிப்படையாகக் காட்டி ஒருவன் செய்யும் தர்மம் கூட மதவெறியே.

கொல வெறியில் ஏசு கிறிஸ்து


வின்சென்ட் ஒரு ஏழை என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ‘குரூப்பில’ சொல்லி உதவி வாங்கித் தரும் ஜோசப்பும், சினிமா நடிகர் ஆர்யா, ஒரு முஸ்லிம் என்பதற்காக, அந்தப் பையனை ஏதோ மார்லன் பிராண்டோவை பாராட்டும் ரேஞ்சுக்கு பாராட்டும் முஸ்லிமும், ஆசிரியையைக் கொன்ற மாணவன் குறிப்பிட்ட மதத்தான் என்பதற்காக (கல்வி அமைப்பு, பெற்றோர் வளர்ப்பு, பாக்கெட் மணி மற்றும் சினிமாக்கள் என்று பல காரணங்கள் இருந்தும் கூட) அந்த ஆசிரியையின் நடத்தையையே  கொச்சைப்படுத்தும் மனிதனும்,  கேப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் மத நூலை மேற்கோள் காட்டிப் பேசும் மனிதனும் மதவெறி பிடித்தவனே. பின்ன.... அவனை வேறு என்னவென்று சொல்வது???

மதவெறி பிடித்து ஆயுதம் தாங்கி மற்றொரு மனிதனைக் கொல்கிறானே... அவன் என்ன 24 மணி நேரமுமா ஆயுதத்தைத் தாங்கி கொலை செய்து கொண்டா  இருக்கிறான்?? இந்த மாதிரி பேசிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் பின்னாளில் மதத்தின் காரணம் கொண்டு கொலை செய்கிறார்கள். கௌரவமான பணியில்/பதவியில் இருப்பவர்கள் கொலை செய்ய மாட்டார்கள்தான். ஆனால் கொலை செய்தவனுக்கு உதவிகள் செய்வார்கள்.


மத உணர்வு என்பதும் மதப் பற்று என்பதும், மத வெறி என்பதன் நீறு பூத்த வடிவங்கள். இது உண்மை எனத் தெரிந்தாலும் வரிந்துகட்டிக்கொண்டு விவாதிக்க வரும் சில இளங்கன்றுகள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். மதம் சாரா குழுக்களின் அணுகு முறைகளை, மதகுழுக்கள் பயன்படுத்த ஆரம்பித்ததன் விளைவுகளில் ஒன்றுதான்...... மதப்பற்று, மதஉணர்வு மற்றும் மதவெறி ஆகிய மூன்று பதங்களின் அர்த்தங்களும் ஒன்றாகிப் போன விபரீதம்!

அந்தக் கன்றுகளை மதமயமாக்கத்தான் இந்த அணுகுமுறை மாற்றங்களே கொணரப்பட்டன என்பதை அவர்கள் உணரவேண்டும் என இல்லாத அந்தக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!
   
   After coming into contact with a religious man I always feel I must wash my hands.
   A casual stroll through the lunatic asylum shows that faith does not prove anything 
                                                                                                -Frederich Nietczhe


மதவாதிகளுடன் ஒவ்வொரு முறை பேசி முடித்தபின்னும், என் கைகளில் கறை படிந்ததாக எண்ணி, என் கைகளைக் கழுவிக்கொள்கிறேன்!

மனநல விடுதிகளின் பக்கம் சற்று நடந்து பார்க்கும்போதுதான் உங்களுக்குப் புரியும்... கடவுள் நம்பிக்கையால் ஒன்றையும் புடுங்க முடியாது என்று!!!
- பிரடெரிக் நீட்ஷே

Tuesday, February 28, 2012

உதயகுமார் தடுமாற தொடங்குகிறார், “ஜேர்மன்காரர் உளவாளி அல்ல”

கூடங்குளம் போராட்டத்தில் ஒரு திருப்பமாக ஜேர்மன் பிரஜை Sonnteg Reiner Hermann நாடுகடத்தப்பட்ட பின், செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார்.
நாகர்கோவிலில் நடைபெற்றது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு. (ஜேர்மன்காரரும் நாகர்கோவிலில் உள்ள சிறிய லாட்ஜ் ஒன்றில் வைத்துதான் கைது செய்யப்பட்டார்)
“கைதான ஜெர்மானியருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றுதான் முதலில் தெரிவித்தார் உதயகுமார்.
ஆனால் தொடர்ந்து அவரே தனது வாயால் ஜேர்மன்காரருக்கும் தமக்கும் உள்ள தொடர்பு பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டார். “அவருடன் எனக்கு கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் உண்டு. நாகர்கோவிலில் அவர் தங்கியிருக்கும் போது, அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால், வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்பேன். நான் நடத்தும் பள்ளிக்கு, அவரை அழைத்துச் சென்றதாக நினைவு இருக்கிறது“ என்றார் உதயகுமார்.

எந்தத் தொடர்பும் இல்லாதவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுக்கும் அளவுக்கு, 4 ஆண்டு கால பழக்கம் இருந்திருக்கிறது!

கைது செய்யப்பட்ட ஜேர்மன்காரர் விசாரணையின்போது தாம் இந்தியாவில் என்ன செய்தோம் என்பதை ஒப்புக்கொண்ட காரணத்தாலேயே நாடுகடத்தப்பட்டார். அவரது விசாரணையின்போது, ஜேர்மன் தூதரக ஆட்களும் இருந்துள்ளனர். அனைத்துத் தரப்பும் ஒப்புக்கொண்டு, நாடுகடத்தல் நடைபெற்றது.
இது ஒரு சாதாரண டூரிஸ்ட் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட விவகாரமல்ல. இதனால் ராஜதந்திர ரீதியான அழுத்தங்கள் புதுடில்லிக்கு ஏற்படப் போகின்றன. அப்படியிருந்தும் ரிஸ்க் எடுத்து, நாடுகடத்தலை நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசு.
உதயகுமார் மேலும் கூறுகையில், “Sonnteg Reiner Hermann ஜெர்மனியில் கணினி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கும் எந்த உளவு நிறுவனத்துக்கோ, தொண்டு நிறுவனத்துக்கோ தொடர்பு கிடையாது. அவருக்கும், நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை” என்றார்.

சபாஷ். இவருக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. ஆனால், அவர் உளவுத்துறையின் ஆள் அல்ல என்பது, இவருக்கு தெரியுமாம்.


ஆகாது-முடியாது-நடக்காது



ஆகாது

நீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் "இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.

திடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். "ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்"

இப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் 'இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது" என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும்  NEGATIVE  மனிதர்கள் இவர்கள்.

பல பேருடைய ஆகாது-முடியாது-நடக்காது அறிவுபூர்வமான ஆராய்ச்சி மூலமாகவோ, ஆழ்ந்த அனுபவ மொழியாகவோ இருப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தங்கள் அறிவுக்கெட்டாதவைகளையும், தங்களால் சாதிக்க முடியாதவைகளையுமே இவர்கள் இப்படி சொல்லத் துவங்குகிறார்கள்.

எல்லா நல்ல காரியங்களும், சாதனைகளும், இவர்களைப் பொருட்படுத்தாமல் முயல்வதாலேயே நடக்கிறது. யாராவது இவர்களைப் பொருட்படுத்தி தயங்க ஆரம்பித்தால் அவர்கள் சாதனைகள் குறைப் பிரசவத்தில் உயிரிழக்கின்றன. எத்தனை அருமையான எண்ணங்கள், அருமையான திட்டங்கள் இப்படி மற்றவர்களது எதிர்மறை நோக்குகளாலும், பேச்சுகளாலும் விதையிலேயே கருகி விடுகின்றன என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

பெரிய சரித்திரம் படைக்கும் விஷயங்களில் மட்டுமல்ல, சின்னச் சின்ன தினசரி வாழ்க்கை விஷயங்களில் கூட இந்த மனிதர்கள் மற்றவர்கள் வாழ்க்கையைத் தேக்கமடையச் செய்து விடுகிறார்கள். மற்றவர்களது திறமைகளை 'இது பெரிய விஷயமில்லை, இதனால் பெரிய பயன் இல்லை' என்றெல்லாம் சொல்லி முளையிலேயே கிள்ளி விடும் இவர்கள் சில சமயங்களில் தயாராக சில உதாரணங்களையும் வைத்திருப்பதுண்டு. "இப்படித் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்...."

தங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. அப்படி உறுதியாக இல்லாதவர்கள் போகின்ற பாதை சரியாக இருந்தாலும், தங்கள் பாதையில் சந்தேகம் கொண்டு பயணத்தை நிறுத்தியோ, மாற்றியோ தங்கள் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.

எனவே இப்படி எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இருப்பது மிக நல்லது. அவர்களுக்குப் புரிய வைக்கவோ, உங்கள் தரப்பு வாதங்களை தெளிவு படுத்தவோ முயலாதீர்கள். அது வீண். எதையும் திறந்த மனதோடு கேட்டு தீர்மானிப்பவர்களாக இது போன்ற மனிதர்கள் என்றும் இருப்பதில்லை. முன்பே தீர்மானித்து விட்டவர்களிடம் நீங்கள் விளக்க முயல்வது கவிழ்த்து மூடிய குடத்தில் தண்ணீர் நிரப்ப முயல்வதற்கு சமம். உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தந்து விடாதீர்கள்.

இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான நோயாக எய்ட்ஸை சொல்வார்கள். நம் உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை முற்றிலும் அழித்து எல்லா நோய்க்கிருமிகளின் தாக்குதல்களுக்கும் நம் உடலை எதிர்ப்பில்லாத இரையாக்குகின்றது இந்த நோய். இந்த அவநம்பிக்கையும் அதைப் போலவே கொடுமையானது. வாழ்க்கையில் சாதிக்கத் தேவையான நம்பிக்கையையும் கனவுகளையும் அழித்து எந்த சவாலையும் சந்திக்க முடியாத நிராயுதபாணியாக நம்மை ஆக்கி விடுகிறது இந்த அவநம்பிக்கை என்னும் நோய்.

கடைசியாக ஒரு வார்த்தை- இந்த ஆகாது-முடியாது-நடக்காது என்னும் அவநம்பிக்கை சொற்களை நீங்களும் மற்றவர்களிடம் எப்போதுமே கவனக் குறைவாக பயன்படுத்தாதீர்கள். அந்த நோயை இந்த சமுதாயத்தில் பரப்பும் சாதனமாக என்றுமே மாறி விடாதீர்கள்.

Saturday, February 18, 2012

நண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள்

பொங்கலுக்கு வந்த நண்பன் திரைப்படம் நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள், விமர்சனமும் படித்து இருப்பீர்கள். இது விமர்சனம் அல்ல. 

தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப விசயங்களை மிக அற்புதமாக கையாளும்  சங்கர் செய்த சில தொழில் நுட்ப தவறுகளை சொல்வது மட்டுமே இந்தப் பதிவு. 

1. படத்தில் ஒரு காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் கரும்பலகையில் தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அதில்தான் ஆரம்பிக்கிறது எல்லா பிரச்சினையும்


இதில் உள்ள தேதி 3/6/98. சரி இதற்கு மேல் விஷயத்துக்கு வருவோம். 

பொறியியல் என்பதால் நான்கு ஆண்டு காலம் படிப்பின் கால அளவு.
2. படத்தில் இலியானா பயன்படுத்தும், இரு சக்கர வாகனம் "ஸ்கூட்டி பெப் பிளஸ்" (Scooty Pep+ ) இது 2005 ஆம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்பட்டது.(நான்கு ஆண்டு என்றால் 2002 தானே?)


3. அடுத்து அனுயாவுக்கு பிரசவம் பார்க்கும் போது youtube ஆனது பயன்படுத்தப்படும்(Vacuum Cup Tutorial). youtube ஆனது 2005 இல் இருந்துதான் இயங்குகிறது.

4. அடுத்து படத்தின் காஸ்டியூம். விஜய், இலியானா உடைகள், விஜய் பயன்படுத்தும் bag ஆகியவை அப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை. (கீழே உள்ளது Superdry)


5.படத்தில் பயன்படுத்தப்படும் 1100 அலைபேசி(சில இடங்களில் மட்டும் ) ஆனது 2003 இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

வேறு ஒரு இயக்குனர் என்றால் இவை போகிற போக்கில் மறந்து இருக்கலாம். ஆனால் சங்கர் எனும் போது தான் எனக்கு இது கவனிக்க தோன்றியது.

இவை அனைத்துக்கும் மிக மிக மிக முக்கிய காரணம் முதல் பாயிண்ட், ஆண்டை குறிப்பிட்டது. 3 Idiots படத்தில் இது இருக்காது.

இன்னொரு விஷயம் சேத்தன் பகத் பெயரையே படத்தில் காணோம். அவர்தானே இந்தக் கதையின் பிரம்மா? சங்கரை விட, ராஜ்குமார் ஹிரானியை (ஹிந்தி இயக்குனர்) அவர்தானே பெரிய ஆள்.

சிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு

உலகத்தில் உள்ள 196 நாடுகளில் தமிழர்கள் இல்லாத நாடே இருக்காது என்றே கூறலாம். இந்தியாவை தவிர,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், கனடா போன்ற நாடுகளில் அதிகளவு தமிழர்கள் வசிக்கிறார்கள்.

இதில் சிங்கப்பூரில் 9.2 சதவீத(4.67 லட்சம்) இந்தியர்கள் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள் தான். மலேசியாவில் 7.1 சதவீத இந்தியர்கள் உள்ளனர், அதாவது 20 லட்சம் பேர்.


சிங்கப்பூரில் இதுவரை 6 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். அதில் 6 வது அதிபர் தான் திரு S.R. நாதன் எனப்படும் செல்லப்பன் ராம நாதன். இதற்கு முன்பும் ஒரு இந்தியர் (மலையாளி), சிங்கப்பூரின் 3 வது அதிபராக பதவியில் இருந்துள்ளார். அவர் திரு தேவன் நாயர்.

1924 சூலை 3 ஆம் தேதி திரு செல்லப்பனுக்கும் அபிராமிக்கும் மகனாக பிறந்தார். வேலை நிமித்தமாக நாதனின் குடும்பம் மலேசியாவில் உள்ள ஜோகூர்-க்கு இடம் பெயர்ந்தார்கள். அப்போது சிங்கப்பூரும் மலேசியாவுடன் தான் இருந்தது. அங்கு நாதனின் தந்தைக்கு ரப்பர் தோட்டத்தில் குமாஸ்தா வேலை. 1930 களில் ரப்பர் தோட்டம் பெரும் சரிவைக்கண்டது. குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டதால் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தன்னை தானே மாய்த்துக்கொண்டார் நாதனின் தந்தை.

அவரது 8 வயதில் அவரின் தாயார் குடும்பத்துடன் மீண்டும் சிங்கப்பூருக்கே இடம்பெயர்ந்தார். பின்பு சிங்கப்பூரின் Anglo- Chinese பள்ளியில் தொடக்கப்பள்ளி மற்றும் நடு நிலை பள்ளியை முடித்து, பிறகு விக்டோரியா பள்ளியில் மேல் நிலைப்பள்ளியை கற்றுக்கொண்டிருந்தார். மேல் நிலை கல்வி படிக்கும்போதே ஒரு ஜப்பான் நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். அப்போது தான் இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் தான் வங்காளப் பெண்ணான ஊர்மிளாவிடம் காதல்வயப்பட்டார். பிறகு அவருக்கு 34 வயதாக இருக்கும்போது தான் ஊர்மிளா(29)வை திருமணம் செய்துக்கொண்டார்.


தனக்கு 28 வயதாக இருக்கும் போது படிப்பை தொடர்ந்த திரு. நாதன்,

1954 ல் மலாயா பல்கலைக்கழகத்தில் Diploma in social science with Distinction உடன் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

1955 ல் சிங்கப்பூர் Civil Service ல் Social worker ஆக வேலைக்கு சேர்ந்தார்.

1956- 1962 வரை கப்பலில் பணிசெய்பவர்களுக்கான நலவாரிய அதிகாரியாக பணியாற்றினார்.

1962- 1965 வரை மனிதவள அமைச்சக ஆராய்ச்சி பிரிவில் முதலில் உதவி இயக்குனராகவும், பின்பு பதவி உயர்வுபெற்று இயக்குனராகவும் பணிபுரிந்தார். பின்பு இதன் அறங்காவளராகவும் 1988 வரை தொடர்ந்தார்.

1966 - 1971 வரை வெளியுரவு துறை அமைச்சகத்தில் உதவி செயலாளராகவும், பின்பு பதவி உயர்வுபெற்று துணை செயலாளராகவும் பணியாற்றினார்.

1971 ல் உள்துறை அமைச்சில் நிரந்தர செயலாளர் ( பொறுப்பு) ல் பணியாற்றினார். பின்பு அதே வருடம் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டார்.

1971- 1979 வரை பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை இயக்குனராகவும், மற்றும்  
பாதுகாப்பு துறை நிரந்தர செயலாளராகவும் பணியாற்றினார்.

1973 ல் கூடுத்ல் பொறுப்பாக MITSUBISHI SINGAPORE HEAVY  INDUSTRIES (PTE) LTD -ல் தலைவராகவும் பணியாற்றினார்.

1974 ல் ஜப்பானின் சிவப்பு ரானுவம் பொதுமக்களை பணய கைதியாக பிடித்து வைத்திருந்தபோது, தன்னை பணய கைதியாக வைத்துக்கொண்டு பொதுமக்களை விடுவிக்க செய்தார்.

1979 -1982 வரை வெளியுறவுதுறையின் முதல் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1980 -1988 வரை கூடுதலான பொறுப்பாக சிங்கப்பூர் எண்ணெய் நிறுவன இயக்குனராக பணிபுரிந்தார்.

1982 -1988 வரை STRAIT TIMES பத்திரிக்கையின் செயல் தலைவராக பணியாற்றினார்.

1988-1900 வரை மலேசியாவுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

1990 -1996 வரை அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதரக அதிகாரியாக பணிபுரிந்தார்.

1996 - 1999 ஆகஸ்ட் வரை பாதுகாப்பு மற்றும் யுத்த தந்திர நிறுவன உயர் தூதரக அதிகாரியாக பணியாற்றினார்.

1999 ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரு நாதன் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி சிங்கப்பூரின் 6 வது அதிபராக திரு நாதன் பதவியேற்றுக்கொண்டார்.

2005 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக திரு நாதன் போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவது முறையாக தான் போட்டியிட விரும்பவில்லை என கூறும் 87 வயது இளைஞர், சிங்கப்பூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமானவர் ஆவார். அதே போல திரு நாதனுக்கும் குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். திரு நாதன் தம்பதியினருக்கு ஜோதிகா என்ற மகளும், ஆசித் என்ற மகனும் உள்ளனர்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...