Friday, September 30, 2016

இதுதான் ஸ்திதி....

ஒரு முறை பழைய ஹாலில் மராமத்து வேலைகள் நடந்தன....
அப்போது பகவான் ஆசிரமத்தின் எதிரில் உள்ள கல் மண்டபத்தில் தங்கினார்....
ஒரு நாள் காலை அந்தப் பகுதியில் ஒரு விறகு வெட்டி விறகு வெட்ட ஆரம்பித்தான்.... உச்சி வேளை வரை வேலை செய்தான்.... பிறகு தான் கொண்டு வந்த உணவை ஒரு மரநிழலை அமர்ந்து உண்டான்....
அம்மர நிழலிலேயே ஓய்வாக்ச் சாய்ந்திருந்தான்....
அதைக் கவனித்து , அருகில் இருந்தவர்களிடம் அவனைச் சுட்டிக் காட்டி , “ இந்த விறகு வெட்டி இப்போ ஓய்வாக மர நிழலில் சாய்ந்திருக்கிறான் , பாருங்கோ. இதுதான் ஸ்திதி இப்படித்தான் நான் இருக்கேன் , ” என்றார்......

திருமணமே முடிக்க வேண்டாம் ...

ஒரு தத்துவ ஞானியிடம் ஒரு வாலிபன் சென்று எனக்கு பெண் பார்க்க வேண்டும் என எனது தாய் ஆசைப்படுகிறாள் , நான் எப்படியான பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் ? என்று சொல்லித் தாருங்கள் என்றான் .


அதற்கு அவர்

அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படுவான் .

அலங்கோலமானவளை முடிக்காதே! உனக்கே அவள் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் .

உயரமானவளை முடிக்காதே! நீ எட்டி பார்க்க வேண்டி வரும் .

குட்டையானவளை முடிக்காதே! அவளுக்காக தலை குனிய வேண்டி வரும்.

பருமனானவளை முடிக்காதே !உன் மேல் முட்டினால் காயம் ஏற்படும்

மெலிவானவளை முடிக்காதே! உன் கண்ணுக்கு அவளைக் காண மாட்டாய்

வெள்ளையானவளை முடிக்காதே ! மெழுகுவர்த்தி தான் ஞாபகத்துக்கு வரும்

கறுத்தவளை முடிக்காதே! இருட்டில் பேய் என்று பயப்படுவாய்

படிக்காதவளை முடிக்காதே! நீ கூறுவதை அவள் புரிந்து கொள்ள மாட்டாள்

படித்தவளை முடிக்காதே! உன்னிடம் விவாதத்துக்கு வருவாள்

பணக்காரியை முடிக்காதே ! எடுத்ததற்கெல்லாம் எனது பணம் என்பாள்

ஏழையை முடிக்காதே! உனது மரணத்தின் பின்னர் உனது குழந்தை சிரமப்படும்

அதிகம் அன்பானவளை முடிக்காதே! உன் மரணத்தின் பின் வேறு ஒருவனிடம் அன்பு திரும்பி விடும்

கோபக்காரியை முடிக்காதே! உன் வாழ்க்கை நரகமாகி விடும்

அனைத்தும் தெரிந்தவளை முடிக்காதே! உண் பணத்தை கரைத்து விடுவாள்

ஒன்றும் தெரியாதவளை முடிக்காதே! நீ வீட்டு வேலைக்காரனாகி விடுவாய்

அமைதியானவளை முடிக்காதே! நீ செத்தாலும் அமைதியாகவே இருப்பாள்

ஆர்ப்பரிப்பவளை முடிக்காதே! ஒரு பூச்சிக்கும் ஊரைக்கூட்டி விடுவாள்

ஊருக்குள் முடிக்காதே! தாய் வீட்டில் கோழி முட்டையிட்டாலும் பார்க்கப்போவாள்

தூரத்தில் முடிக்காதே உன் வாழ்க்கை பிரயாணத்தில் கழியும்

என்று உபதேசித்தார்

வந்த வாலிபன் ஏன் பெரியவரே சுருக்கமாக திருமணமே முடிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமேஎன்றான் கோபத்துடன்..

ஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற்கான சில வழிகள்


குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு காரணம் பாதங்களில் அளவுக்கு அதிகமாக வறட்சி ஏற்படுவது தான். நம் உடலிலேயே உள்ளங்கை மற்றும் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. அதனால் தான் அவ்விடங்களில் அதிகளவு வறட்சி ஏற்படுகிறது. ஆனால் அவ்விடங்களுக்கு போதிய அளவில் ஈரப்பசையை வழங்க வேண்டியது அவசியம்.


பொதுவாக உள்ளங்கையில் உள்ள சருமம் மென்மையாகவும், பாத
ங்களில் உள்ள சருமம் கடினமாகவும் இருக்கும். எனவே பாதங்களுக்கு இன்னும் அதிகளவிலான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு அடிக்கடி பாதங்களில் உள்ள இறந்த தோல்களை நீக்கி, பாதங்களில் நேச்சுரல் மாய்ஸ்சுரைசர்களைத் தடவ வேண்டும். அதுமட்டுமின்றி குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

சரி, இப்போது பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

#வாழைப்பழம்
நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

#எலுமிச்சை சாறு
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

#சோப்புத் தண்ணீர்
குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

#கிளிசரின் மற்றும் #ரோஸ் வாட்டர்
கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும்.

#பாராஃப்பின் மெழுகு
பாராஃப்பின் மெழுகை உருக்கி, அதில் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதிகம் வறட்சியடையும் குதிகாலில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம், ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

#கிளிசரின், #ரோஸ்வாட்டர், #எலுமிச்சை சாறு
தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் தொடர்ந்து செய்வதால், பாதங்கள் மென்மையாவதோடு, நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

கர்மா..................


கர்மா என்பது மிக எளிதான, அதேவேளையில் மிக நுட்பமான வகையில் நிலைபெற்றிருக்கும் பிரபஞ்ச நியதி ஆகும். சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்றுதான் 'கர்மநியதி'.

"நல்லதை செய்தால், நல்லதே நடக்கும்.
கெட்டதை செய்தால், கெட்டதே நடக்கும்"

இது கர்மாவைப் பற்றிய எளிதான விளக்கம். நம்மில் அனைவரும் இந்த விளக்கத்தை நன்கு அறிந்திருப்போம். ஆனால், கர்மாவைப் பற்றிய நுட்பமான அறிவியல் என்ன? இதை ஆங்கிலத்தில் 'The Science of Action' (செயல் அறிவியல்) என்பார்கள். இப்போது அதை நாம் அறிவோம்.

கர்மா என்றால் செயல் அல்லது வினை எனப் பொருள்படும். 'எண்ணித் துணிக கருமம்' என்றார் ஐயன் வள்ளுவர். ஒரு செயலை செய்வதற்கு முன்னர், அச்செயலின் நோக்கத்தை நன்கு ஆராய்ந்து உணரவேண்டும். ஒரு செயலை விட அதன் நோக்கமே மிக முக்கியமாகும்.


|| காரணமும் விளைவும்

காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டு விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு கர்மநியதி இயங்குகின்றது.

* காரணம் (ஆங். cause) என்றால் ஒரு செயலின் பின்னால் இருக்கும் காரணம் அல்லது நோக்கம்

* விளைவு (ஆங். effect) என்றால் ஒரு செயலை ஆற்றிய பின்னர் அச்செயலைப் பொறுத்து வருங்காலத்தில் ஏற்படும் விளைவுகள்

|| செயலாற்ற ஆறு விதிமுறைகள்

ஒரு செயலை செய்வதற்கு முன்னர், 'இதை நான் ஏன் செய்கிறேன்?' என்று தன்னிடம் கேட்டுக் கொள்வதன் மூலமாக ஒரு செயலின் காரணத்தை நாம் அறியலாம். அந்த காரணம் ஆறு விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவை:

அ) தர்மமுடைய செயல்

ஆ) பிறர் பொருளை அபகரிக்காத செயல்

இ) சுயநலமற்ற செயல்

ஈ) தனக்கும் மற்ற அப்பாவி உயிர்களுக்கும் தீமை விளைவிக்காத செயல்

உ) விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட செயல்

ஊ) பிறருக்கு நன்மை பயக்கும் செயல்

*விதிமுறைகள் என்பவை ஒரு நாட்டின் சட்டத் திட்டங்களைக் குறிக்கும்

இவ்வாறு ஆறு விதிமுறைகளுக்கும் உட்பட்ட செயலை காலம் தாழ்த்தாமல் மன உறுதியுடன் செய்ய வேண்டும்.

உதாரணமாக, நம் தேசத்தைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளைக் கொல்கிறார்கள். கொல்வது தீவினை என்ற பட்சத்தில் அவர்களை தீவினை சூழ்வதில்லை. 'தீயவரை அழிப்பதே வீரனுக்கு அறம்' ஆகும். நம் நாட்டு மக்களைக் காக்க வேண்டிய நன்நோக்கத்தில், சுயநலமின்றி, தியாக மனப்பான்மையுடன் நம் இராணுவ வீரர்கள் செயல்படுகின்றனர். நாட்டைக் காப்பதும் கொடியவர்களை அழிப்பதும் அவர்களின் கடமையாகும். கடமையை செய்வதால் அவர்கள் கர்ம வீரர்களாகின்றனர்.

|| மூன்று வகை கர்மா

ஒரு செயலின் விளைவுகள் பெரும்பாலும் உடனுக்குடனே விளைவதில்லை. பல பிறவிகளுக்கு பின் கூட விளையலாம். ஒருவன் பல பிறவிகளில் செய்த செயல்களின் மொத்த விளைவுகள் 'சஞ்சித கர்மா' எனப்படுகின்றன. இப்பிறவியில் புதிதாக சேர்க்கும் விளைவுகள் 'ஆகாமி கர்மா' எனப்படுகின்றன. ஒருவன் தற்போதைய பிறவியில் அனுபவிக்கும் விளைவுகள் 'பிராரப்த கர்மா' எனப்படுகின்றன.

ஒரு பழமரத்தின் விதையை விதைத்த உடனே கனி கிடைத்துவிடாது. விதை முளைத்து செடியாகி, செடி மரமாகி, மரம் பூத்து அதன்பின்னரே கனி வரும். அதுபோல ஒரு செயலை செய்தவுடன் அதற்கான விளைவு, காலம் தாழ்த்தினாலும் கண்டிப்பாக விளையும். ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கு பெரும்பாலும் அவனின் முந்தைய கருமங்களே முக்கிய காரணமாகும்.

|| செயல் சுதந்திரம்

தாவரங்கள், மிருகங்கள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு செயல் சுதந்திம் கிடையாது. அவை தன்னுடைய மரபணுவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 'விதிக்கப்பட்ட செயல்களை' ஆற்றிவிட்டு உடலிலிருந்து விடைபெறும். இதனால் மற்ற உயிரினங்களை கர்மநியதி சீண்டுவதில்லை. ஆனால், மனிதர்களுக்கு செயல் சுதந்திரம் உள்ளது. மனிதனுக்கு தன் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் இருக்கின்றது. அளவற்ற அறிவுத்திறன் உடைய மனிதன் பலவிதமான செயல்களை செய்கிறான். மனிதன் தன் அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி ஆக்கமுடைய செயல்களை ஆற்றவேண்டுமே தவிர அழிவை ஏற்படுத்தும் செயல்களை அல்ல. மனிதனுக்கு செயல் சுதந்திரம் இருந்தாலும் செயலின் விளைவுகளை மாற்றும் வலிமை கிடையாது. இதை தான் 'விதியை மாற்ற முடியாது' என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றான். மனிதனுக்கு 'விதி' என சொல்லப்படும் கர்ம விளைவுகளை மாற்றிட ஆற்றல் இல்லை; ஆனால் மனிதன் ஆன்மிக ஈடேற்றம் அடைந்து ஆன்மநிலை எய்துவிட்டால் கர்ம விளைவுகளை தன் பக்குவநிலையின் சக்தியால் 'சாம்பலாக்கிவிடும்' வல்லமையை அடைவான்.

பக்தி, யோகம், தியானம், ஞானம் - ஆகிய நான்கு வழிகளைப் பின்பற்றுவதால் ஒருவன் கர்மவிளைவுகளிலிருந்து மீளலாம். எப்போதும் தவறாமல் இந்த நான்கையும் பயிற்சிப்பதே கர்மவிளைவுகளிலிருந்து மீள்வதற்கான வழியாகும்.

"ஞானம் எனும் தீயில் கர்மவிளைவுகள் எல்லாம் சாம்பலாகிவிடும்" (பகவத் கீதை)

ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை...

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.



* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

நீரிழிவு நோயைக் கட்டுபடுத்தும் காய்கறிகள்:-


தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.
உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.
ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.
எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!
பாகற்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெந்தயக் கீரை
கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.
வெண்டைக்காய்
வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சுரைக்காய்
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.
லெட்யூஸ் (Lettuce)
இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.
காலிஃப்ளவர்
மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
பூசணிக்காய்
அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.
பிரெஞ்சு பீன்ஸ்
பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.

ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.!!!

 கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ புற்று நோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.

வாழைப்பழத்தின் மருத்துவ குணம்...

எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது. ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு கார்போ ஹைடிரேட்டும், 3 மடங்கு பாஸ்பரசும், 5 மடங்கு வைட்டமின் ஏ வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.

வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
====================================================

அம்மை, பரு தழும்புகளால் பிரச்சினையா?

கோடைகாலத்தில் பெரும்பாலோனோரை பாதிக்கும் நோய் அம்மை. சின்னம்மை என்றால் பெரும்பாலும் தழும்புகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேசமயம் பெரிய அம்மை ஏற்பட்டு கொப்புளங்கள் பெரிதானால் அவை குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். சருமத்தின் மறைவான இடங்களில் வடு இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே முகத்தில் தழும்புகள் இருந்தால் முகத்தின் அழகையே மாற்றி அமைத்து ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். எனவே அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி இழந்த அழகை திரும்பவும் பெற முடியும்.

கசகசா, மஞ்சள் துண்டு

2 ஸ்பூன் கசகசா எடுத்து தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகத் பூசி உலற விடுங்கள். 20 நிமிடம் கழித்து பாசிப் பருப்பு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.

எலுமிச்சை வைத்தியம்

ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். தினசரி இதனை செய்து வர அம்மைத் தழும்புகள் மறைந்துவிடும்.

கருமை நீங்க

அம்மை தழும்பு உள்ள இடத்தைச் சுற்றி கருமை படர்ந்திருக்கும். அதனை நீங்க எலுமிச்சை சாறு சிறந்த மருந்து. எலுமிச்சசம் பழம் சாறு எடுத்து ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். முகம் கருமை நிங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதை செய்து வர முகம் பளிச் ஆகும்.


முகப்பரு அகல

அம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

இதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.

Thursday, September 29, 2016

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை!

காலையில் சிறுநீரை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து, அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக் கவனியுங்கள்.
1. எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
2. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்.
3. முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப நோய்.
4. எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
5. எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாகாது.
6. எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்துவது கடினம்.

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்
புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்!

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்
1. அசுவினி - சுகந்த தைலம்
2. பரணி - மாவுப்பொடி
3. கார்த்திகை - நெல்லிப்பொடி
4. ரோகிணி - மஞ்சள்பொடி
5. மிருகசீரிடம் - திரவியப்பொடி
6. திருவாதிரை - பஞ்சகவ்யம்
7. புனர்பூசம் - பஞ்சாமிர்தம்
8. பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை)
9. ஆயில்யம் - பால்
10. மகம் - தயிர்
11. பூரம் - நெய்
12. உத்திரம் - சர்க்கரை
13. அஸ்தம் - தேன்
14. சித்திரை - கரும்புச்சாறு
15. சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)
16. விசாகம் - இளநீர்
17. அனுஷம் - அன்னம்
18. கேட்டை - விபூதி
19. மூலம் - சந்தனம்
20. பூராடம் - வில்வம்
21. உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)
22. திருவோணம் - கொம்பு தீர்த்தம்
23. அவிட்டம் - சங்காபிஷேகம்
24. சதயம் - பன்னீர்
25. பூரட்டாதி - சொர்ணாபிஷேகம்
26. உத்திரட்டாதி - வெள்ளி
27. ரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்
12 ராசி மந்திரம்
மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
MESHAM – OM AIM KLEEM SOUM
ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
RISHABAM – OM AIM KLEEM SHRIM
மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்
MITHUNAM – OM KLEEM AIM SOUM
கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
KADAGAM – OM AIM KLEEM SHRIM
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
SIMMAM – OM HREEM SHREEM SOUM
கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
KANNI – OM SHREEM AIM SOUM
துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
THULAM – OM HREEM KLEEM SHREEM
விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
VRICCIGAM – OM AIM KLEEM SOUM
தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
THANUSU – OM HREEM KLEEM SOUM
மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
MAGARAM – OM AIM KLEEM HREEM SHREEM SOUM
கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
KUMBAM – OM HREEM AIM KLEEM SHREEM
மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
MEENAM – OM HREEM AIM KLEEM SHREEM
இந்த மந்திரத்தை தினம் 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.

உண்மையான ஏழை என்று...


ஒரு பணக்காரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுக்கக் கிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்துச் சென்றான். இரு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் வீட்டிற்குத் திரும்பினதும் ஏழை எப்படி வாழ்கிறான் என கேட்டதும் மகன் கூறினான்...

அப்பா நம் வீட்டில் ஒரேயொரு நாய் இருக்கிறது, கிராமத்தில் பத்து பதினைந்து நாய்கள் உள்ளன. நம் தோட்டத்தில் ஓன்று இரண்டு விளக்குகள் வைத்துள்ளோம், அந்த கிராமத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மின்னுகிறது. நமது வீட்டின் முன் வரவேற்பு அறை பெரிது, அவர்களின் வீட்டுக்கு முன்னே எல்லையே இல்லாமல் விரிந்து இருக்குறது. நாம் ஒரு நாள் கழிந்த பாலை பருகிறோம், அவர்கள் உடனடிப் பாலைக் கறந்து சாபிடுகிறார்கள். நாம் வாடிய காய்கறிகளைச் சாப்பிடுகிறோம், அவர்கள் செடியில் இருந்து பறித்துப் பச்சை பசேல் என இருக்கும் காய்கறிகளை உண்ணுகிறார்கள் . நாம் வீட்டைச் சுற்றி மதில் கட்டிப் பாதுகாக்கிறோம், அவர்களுக்கு அந்த ஊரே காவல் செய்கிறது என்று மகன் சொல்லிக்கொண்டே சென்றான்...
மகனின் பதில் தந்தையை அதிர்ச்சியடைய செய்தது.. தந்தை சிந்திக்க ஆரம்பித்தார் யார் உண்மையான ஏழை என்று...
ஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே குடி கொண்டால் என்னதான் வசதி கிடைத்தாலும் ஏழ்மையிலுருந்து விடுதலை கிடைக்காது...!
கதை பிடித்திருந்தால் பகிர மறக்காதிங்க....

எது? உலக அதிசயம்.



நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகள்.

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகள்.
1. சென்னை மாநகராட்சி 1688
2. மதுரை மாநகராட்சி 1971
3. கோவை மாநகராட்சி 1981
4. திருச்சி மாநகராட்சி 1994
5. சேலம் மாநகராட்சி 1994
6. நெல்லை மாநகராட்சி 1994
7. திருப்பூர் மாநகராட்சி 2008
8. ஈரோடு மாநகராட்சி 2008
9. வேலூர் மாநகராட்சி 2008
10. தூத்துக்குடி மாநகராட்சி 2008
11. திண்டுக்கல் மாநகராட்சி 2014
12. தஞ்சாவூர் மாநகராட்சி 2014.

Wednesday, September 28, 2016

பான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா?

பான் கார்டு வைத்திப்பவர்கள் அவசியம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா?
பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வே ண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை
தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய் வது எவ்வாறு?அதை எங்கே தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவு அபரா தம் செலுத்த வேண்டும் என் பன போன்ற பல கேள்விகள் அனைவருக்கும் எழும். இதற்குத் தீர்வளிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்க மாகும்.
1.வரி விதிக்கப்படும் அளவுக்கு வருமானம் இல்லாதவ ர்களும் கணக்கு தாக்கல் செய்ய வேண் டுமா?
பான்கார்டு வைத்திருக்கும் தனி நபர் வருமானக்காரர்கள் வரு மான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும் வரி கணக்கு தாக்கல் செய்வது நல்லது. ஒருவேளை கணக்கு தாக்கல் செய்வோர் முதலீடு செய்வது, கட்டிடம்வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் கடந்தகாலங்களில் ஈடுபட்டிருந்தால், அதுகுறித்து எதிர்காலத்தில் மதிப்பீடுசெய்வதற்கு வருமா ன வரி அதிகாரிகளுக்கு வசதி யாக இருக்கும். முதலீட்டாள ரும் வருமானம்வந்த வழி யை ஆதாரமாகக் காட்ட முடி யும்.
2.ஆடிட்டர் மூலமாகத்தான் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

அப்படியொன்றும் அவசியமில் லை. கணக்கு தாக்கல் செய்வ தற்கு உதவி புரிபவராகத்தான் ஆடிட்டர்கள் உள்ளனர். வரி தொடர்பான விவரங்கள் தெளி வாகத்தெரிந்து அதன் நடைமு றைகள் புரிந்திருந்தால் அவரவரேகூட வரி கணக்கு தாக்கல் செய்யலாம். ஆண்டு வரு மானம் ரூ.1 கோடிக்குமேல் இருந் தால் அவரது கணக்குகள் ஆடிட்ட ரால் தணிக்கைச் செய்யப்பட்டிரு க்க வேண்டும்.
இத்தகைய கணக்கு விவரம் வருமான வரித்துறை குறிப்பிடும் காலத்திற்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யத் தவறினா ல் வருமானவரி அலுவலகம் மொ த்த வருவாயில் அரை சதவீதத் தை அபராதமாக விதிக்கும். அல் லது ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதில் எது குறை வான தொகையோ அத்தொகை அபராதமாக விதிக்கப்படும்.
3.சென்னை வருமான வரி அலுவலகத்தில் எத்தனை சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின் றன? பிற இடங்களில் எத்தனை திறக்கப்படும்?
குறிப்பிட்ட பகுதியில் எத்தனை பேர் கணக்கு தாக்கல் செய்வார்கள் என் ற அடிப்படையில் கவுன்டர்கள் திற க்கப்படும். இது தேவைக்கு ஏற்றாற் போல வருமான வரித்துறை அதி காரிகளால் தீர்மானிக்கப்படும்.
4.சிறிய நகரங்களில் உள்ளவர்கள் எவ்விதம் வரிக்கணக்கைத்தாக்கல்செய்வது? மாவட்டத் தலைநகரங்களில் தான் செலுத்த வேண்டுமா? அல்லது வேறிடங்கள் உள்ள னவா?
வரி செலுத்துவோருக்கு தாம் எந்தவார்டில் வருகிறோம் என்பது தெரியும். அதை www.incometax india.gov.inஇணையதளம்மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆடிட்டரா ல் தணிக்கை செய்யப்படாத வரு மான வரிக்கணக்குகளை அதற்குரிய விண்ணப்பத்தை ப் பூர்த்தி செய்து தாக்கல் செய் யலாம். மின்னணு(ஆன் லைன் ) மூலமாக தாக்கல் செய்வதற் கான வழியும் உள்ளது.
மின்னணு முறையில் நிர்வகிக் கப்படும் வரிக் கணக்கு களைக் கொண்டவர்கள் மின்னணுமுறையில்தான் கணக்கை த் தாக்கல் செய்யவேண்டும். மின்னணு முறையில் வரி கணக்கு தாக்கல் செய்வதே சிறந்தது. செலுத்திய வரிபோ க உங்களுக்கு திரும்ப வர வேண்டிய தொகை எவ்வித இடையூறும் இன்றி உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும்.
5. இப்போது வரியைச் செலுத்திவிட்டு பிறகு வரிக்கண க்கைத் தாக்கல் செய்யலா மா?
2014-15ம் ஆண்டுக்கான கணக்கை வருமானவரித் துறை குறிப்பிடும்  தேதிக் குப் பிறகு தாக்கல் செய்தால் அதற்கு எவ்வளவு அபரா தம் செலுத்த வேண்டும். பொதுவாக மாதச் சம்பளம் பெறுவோர், வருமா ன வரிக் கணக்கை வருமானவரித் துறை குறிப்பிடும் தேதிக்குள் தாக்க ல் செய்யவில்லை யென்றால் அடுத் தநாளே வருமான வரித்துறை அதி காரிகள் தங்கள் வீட்டுக் கதவை தட்டுவர் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
காலதாமதமாக ஓராண்டு வரை கணக்கை தாக்கல்செய்யலாம். ஆனால் அதற்கு 234 ஏ பிரிவின்படி அபராதம் செலுத் தவேண்டும். குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் தொகையை, உரிய நிதி ஆண்டில் செலுத்தத் தவறிய தற்காக கட்டநேரிடும். வருமான வரிக் கணக்கு செலுத்தத் தவறிய தற்கு ஏற்கத்தக்க விளக்கத்தை அளித்தால் அந்த அபராதமும் செலுத்தத் தேவையில் லை.

சண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்?

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்? ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....
பின்னர்.. சீடர்களில் ஒருவர் கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!
துறவி ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்! நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துரைக்கலாமே!
ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்...... ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!
கடைசியாக துறவி பதில் கூறுகிறார்.....
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்! மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்! அப்பொழுதுதானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!
ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!
துறவி தொடர்ந்து கூறுகிறார்.....
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்? அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!
துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்........
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள்.
அப்படி செய்யாமல் போனால், "ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்...!

நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்ச‍ரிக்கும் ஆய்வறிக்கை


நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்ச‍ரிக்கும் ஆய்வறிக்கை

நீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா? – உங்களை எச்ச‍ரிக்கும் ஆய்வறிக்கை
ராத்திரி லேட்டா சாப்பிடும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று புதிய
ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. துருக்கி பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், 700 ஆண் கள் மற்றும் பெண்களிடம் ஓர் ஆய்வை மேற் கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் , இரவு 8 மணிக்குப்பிறகு உணவு உண்ணும் நபர்களு க்கு எளிதில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா கவும், உணவு சாப்பிட்ட 2 மணிநேரத்துக்குள் தூங்கும் நபர் களுக்கு இதயம் தொடர்பான பிற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்தது.
இரவு உணவருந்தியதற்குப் பின் தூங்கும்போது நமது ரத்த அழுத்தமானது 10% அளவுக்குக் குறைய வேண்டும். ஆனால், 8 மணிக்குப்பிறகு சாப்பிட்டு விட்டு 2மணிநேரம் இடைவெளி இல்லாமல் உடன டியாகப் படுக்கைக்குச் செல்லும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் குறையாதது தெரிய வந்துள்ளது.
மேலும் இரவில்தாமதமாக உணவு சாப்பிடும் நபர்களு க்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் எனவும் இந்த ஆய்வி ல் தெரியவந்திருக்கிறதாம். இரவில் தாமதமாகச் சாப் பிடுவது தொடர்ந்தால் அவர்கள் எளிதில் மாரடைப்பா ல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tuesday, September 27, 2016

கேவலமான உண்மைகள்

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால்
 கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

உங்களுக்குத் தெரியுமா?

1. நீங்கள் வெளியில் அழகாக உடையுடுத்தி செல்லும் போது ,
மக்கள் உங்களை கவனிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
அவர்கள் அவர்களையும் அறியாமல் உங்கள் காலணிகளைத் தான் முதலில் பார்க்கிறார்கள் என்று தெரியுமா?
( இது " Bata "கடை விளம்பரம் இல்லை. உளவியல் உண்மை . நம்புங்கள்)
2. நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவரா?
ஒரு நாளைக்குப் பதினோரு மணி நேரம் இப்படியே உட்கார்ந்திருந்தால்
கண்டிப்பாக இன்னும் மூன்று வருடங்களில் உங்களுக்கு ஏதாவது வியாதி வந்தே தீரும் .
(நான் சொல்லவில்லை. ஆய்வறிக்கை சொல்கிறது. )
3.உங்களைப் போல் அச்சு அசலாக இன்னும் ஆறு பேர் உலகில் உள்ளனர்.
( போதும் நீ விடும் ரீல் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.) ஆனால்
நீங்கள் ஆறுபேரில் ஒருவரையாவது உங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக சந்திக்கப் போகிறீர்கள்.
சந்தித்தால் என்னிடம் சொல்லுங்கள்.
இது சாத்தியம் தானா என்று அறிய எனக்கும் ஆவல்.
4." முதுகெலும்பில்லாத கோழையா? " என்று யாரும் உங்களைப் பார்த்து கேட்கக் கூடாதென்றால் ,
தூங்கும் போது தலையனை வைத்துக் கொள்ளாதீர்கள்.
முதுகுவலியும் வராது, முதுகெலும்பும் உறுதி படுமாம்.
5. ஒருவரின் உயரத்திற்கு அவர் தந்தையும், அவருடைய எடைக்குத் தாயும் காரணம்.
( சான்றோனாக்கி உயர்த்துதல் தந்தையும், ருசியான உணவளிப்பதும் தாய் தானே)
6.அலுவலக மீட்டிங்கில் இருக்கும் போதே கண்ணை செருகிக்கொண்டு தூக்கம் வருகிறதா?
கவலை வேண்டாம். தலையை இடமும் வலமுமாக ஆட்டுங்கள் .
தூக்கம் கலைந்து விடும்.
(ஆனால் தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தால் , உங்கள் பாஸ் , கண்டு பிடித்து விடுவார். ஜாக்கிரதை)
7. நம் மூளை நம்மை ஏமாற்றாது .
நல்ல உணவு,
கவர்ச்சியான, அழகான மனிதர்கள்,
ஆபத்து நெருங்குதல்.
இவை மூன்றையும் உங்களுக்கு கண்டுபிடித்துக் காட்டிக் கொடுத்து விடும்.
8.நீங்கள் டீ பேக்ஸ் உபயோகித்து டீ குடிப்பவரா??
அப்படியென்றால் உங்கள் ஷூ வில் துர்வாசனை வராது.
(டீக்கும் ஷூக்கும் என்ன சமபந்தம் என்று யோசிக்க வேண்டாம்.)
டீ குடித்த பின்பு,
அந்த டீ பேகை ஷூவிற்குள் போட்டு வைத்தால், துர்நாற்றத்தை அது உறிஞ்சிக் கொள்ளும்.
9. தேனீக்களை நம்பி தான் மனித இனமே இருக்கிறது.
தேனீக்கள் உலகை விட்டு அழிந்து விடுமானால்
நான்கு வருடங்களுக்குள் மனித இனம் பூண்டோடு அழிந்து போகும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நம்மை எச்சரித்து விட்டு சென்றிருக்கிறார்.
ஆனால் நாம் கேட்பதாயில்லை.
தேனீக்கள் அழிந்து வரும் உயிரின வகையில் சேர்ப்பதில் படு தீவிரமாக இருக்கிறோமே!
10. உலகில் எத்தனை வகை ஆப்பிள்கள் இருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான ஆப்பிளை சாப்பிட்டுக் கொண்டே வந்தால் எல்லா வகையான ஆப்பிள்களையும் சாப்பிட சுமார் இருபது வருடம் ஆகும்.
11. உண்ணா விரதம் இருக்கப் போகிறீர்களா?
பயம் வேண்டாம்.
உண்ணாமல் பல வாரங்கள் வரை நாம் உயிர் வாழலாம்.
சாப்பிட்டா விட்டாலும் பரவாயில்லை. தூங்காமல் இருக்க வேண்டாம்.
உறங்காமல் பதினோரு நாட்களுக்கு மேல் ஒருவரால் உயிர் வாழ முடியாது.
12. அதிகமாக சிரிப்பவர்கள்
அதிக நாட்கள் உயிர் வாழலாம் .
அதனால் சிரித்துக் கொண்டேயிருங்கள். ( உங்களை " ஒரு மாதிரி " என்று யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல)
13. நம் மூளையின் சக்தி எவ்வளவு என்று தெரியுமா?
விக்கிபிடீயாவைப் போல் ஐந்து மடங்கு விஷயங்களை சேகரித்து வைத்துக் கொள்ளும்,என்கிற செய்தி ஆச்சரியமளிக்கிறது இல்லையா!
14.நம் மூளைக்கும் மின்சாரம் தேவைப்படுவது தெரியுமா? 
பத்து வாட் பல்ப் எரிவதற்குத் தேவையான மின்சாரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறது. 
நம் மூளை . 
ரகசியமாக இருக்கட்டும் இந்த செய்தி.
இல்லையென்றால் மின்சார வாரியம் அந்த மின்சாரத்திற்கும் கட்டணம் கேட்கும் . .
15. மன உளைச்சலுக்கு ஒரு மாமருந்து இருக்கிறது.
என்ன என்கிறீர்களா?
புன்னகை. முடிந்தவரை புன்னகைத்துக் கொண்டே இருங்கள்.
மன உளைச்சல் உங்களை விட்டு ஓடியே போய் விடும்.
சில விஷயங்களை கேள்விப்படும்போது
அட அப்படியா என கேட்கத் தோன்றும். அப்படிப்பட்ட சில வியப்பூட்டும் உண்மைகள் உங்கள் பார்வைக்காக:
1. ஆப்பிள், உருளைக் கிழங்கு, வெங்காயம் இவை மூன்றையும் உங்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிட்டால் மூன்றும் ஒரே சுவையுடையதாகவே இருக்கும். அதாவது இனிப்புச் சுவை.
2. ஒரு மனிதன் புகைபிடிப்பதை விட்டு விட்ட பின் 3 வருடங்கள் கழிந்துவிட்டதென்றால் அவனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு, இதற்கு முன் புகைபிடிக்கும் பழக்கமே இல்லாத மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புக்கு சமமாகவே இருக்கும்.
3. ஐஸ்லாந்து, அண்டார்டிகா, கிரீன்லாந்து இந்த மூன்று பகுதிகளிலும் எறும்புகளே கிடையாது.
4. தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள், தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிட இயல்பாகவே 7 புள்ளிகள் அதிகமாக ஐ.க்யூ-வைப் பெற்றுள்ளன.
5. மூங்கில்கள் ஒரு நாளைக்கு 36 இன்ச் உயரம் வளர்கின்றன.
6. ஷாங்காய் நகரத்திலுள்ள சில மருத்துவமனைகள் வேலை பார்க்கும் நேரத்தில் நர்ஸ்கள் கண்டிப்பாக லிப்ஸ்டிக் போட்டிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன.
7. வாழைப்பழத்தில் ஒரு மனிதனை சந்தோஷ உணர்வுடையவனாக மாற்றும்
சில இரசாயனங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன.
8. இன்றைக்கு உலகத்தில் இருக்கிற அத்தனை அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் அழிவை விட, 10 நிமிடத்தில் ஒரு சூறாவளிக் காற்று அதிக அழிவை உண்டாக்க முடியும்.
9. தாமஸ் ஆல்வா எடிசன் இருட்டைக் கண்டு மிகவும் பயப்படுவாராம்.
10. பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட அதிக வேகமாக துடிக்குமாம்.

வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் நீங்கள் . . .

நீங்கள் வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா?
கிரிடிட் கார்டு பயன்படுத்து பவரா?
பங்கு சந்தையில் முதலீடு செய் பவரா?
சொத்துக்கள் வாங்குபவரா?
அப்படியானால், நீங்கள் வரு மான வரித்துறையின் கண்கா ணிப்பு வளையத்துக்குள் வருவ து நிச்சயம்.
கணக்கில் வராத பணபரிமாற் றத்தை கட்டுக்குள் கொண்டு வர வருமான வரித்துறை உங்கள் நடவடிக்கைகளை கண்காணி க்கலாம்.
அதுசரி…, உங்களைப் பற்றிய ரகசியங்களை வருமான வரி துறைக்கு கசிய விடுவது யார்? என்ற சந்தேகம் வருகிறதா?
இதில் முதலில் வருவது உங்கள் பான் எண். பொதுவாக எந்த பணப்பரிமாற்றத்தின் போதும் பான் கார்டு எண் விவரங்க ளை தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. எனவே நீங்கள் எந்த பிரிவி ன் கீழ் பணப்பரிமாற்றம் செய் தாலும் அதன் விவரங்கள் உங்கள் பான் எண்ணுடன் தொகுக்க ப்பட்டு விடும்.
மேலும், நீங்கள் பணப்பரிமாற்றம் செய்யும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகளில் செய்யும் முதலீட்டு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை வெளியிடும் வர்த்தக நிறுவன ங்கள், சொத்து விவரங்களை பதிவு செய்யும் பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் இவர்கள் தான் உங்கள் நிதி நடவடிக்கை கள் குறித்த தகவல்களை வருமான வரித்துறைக்கு தெரிவி ப்பவர்கள். தனித்தனி யாக வரும் இந்த தக வல்கள் அனை த்தும் உங்கள் பான் எண் அடி ப்படையில் தொகுக்கப் பட்டு உங்கள் நிதி பரி மாற்றங்கள் அனை த்தும் கண்காணிக்கப்ப டும்.
சரி, எப்போதெல்லாம் நீங் கள் இந்த கண்காணிப்பு வளைய த்துக்குள் வருகிறீர்கள்? என்று தெரிந்து கொள்ள விரும்பு கிறீர்களா?… இதோ அதன் விவரங்கள்:-

வங்கி சேமிப்பு கணக்கு:

உங்கள் வருமானத்துக்கு அதிகமாக வங்கி சேமிப்பு கணக் கில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்கிறீர்களா? அப்போது நிச்சயம் கண்காணி ப்புக்கு ஆளாவீர்கள். இந்த பணத்தை மொத்தமாக டெபாசிட் செய்தாலும் சரி அல்லது ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ் சமாக 10 லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்தாலும் சரி.
அதே நேரம், ஆண்டொன்றுக்கு நீங் கள் டெபாசிட் செய்யும் தொகை ரூ 10 லட்சமாக இருந்து, எடுக்கும் தொ கையும் ரூபாய் 10 லட்சமாக இரு க்கும் பட்சத்தில் நீங்கள் கண்கா ணிப்பு வளையத்திற்கு வெளியே வந்து விடுவீர்கள்.
மேலும் உங்கள் வருமானம் எவ்வ ளவு?, அந்த வருமான த்துக்கு அதிக மான பணம் உங்கள் வங்கிக் கண க்கில் உள்ளதா? அப்படி பணம் இருந் தால் அந்த பணம் எவ்வாறு வந் தது? அந்த பணத்திற்கு உரிய கணக்கு உள்ளதா? அந்த பண த்தை எடுத்து நீங்கள் என்ன செலவு செய்கிறீர்கள்? என்று வருமான வரித்துறை விசாரிக்கலாம்.
எதற்கு இந்த பிரச்சனை? பேசாமல் பணத்தை கிராமங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் போட்டு வைத்தால் என்ன?, யாருக்கு தெரியப்போகிறது என்று எண்ணுகிறீர்களா? அப்போது ம் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். அ தாவது, வருமான வரி துறையின் விதிகளுக்கு கூட்டுறவு வங்கிகளு ம் விலக்கல்ல. அந்த வங்கிகளும் தங்களிடம் கணக்கு வைத்திருப்ப வர்கள் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என் பது விதியாகும்.

கிரிடிட் கார்டு:

ஆண்டொன்றுக்கு ரூபாய் 2 லட்சத்திற்கும் அதிகமாக கிரி டிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்கிறீர்களா?. அப்படி என்றா ல் உங்கள் கிரிடிட் கார்டு செலவு குறித்த தகவல்களை, உங்களு க்கு கார்டு வழங்கிய வங்கி அல் லது நிறுவனம் உங்களை பற்றிய தகவல்களை வருமான வரி துறைக்கு தெரிவித்துவிடும்.
இதன் மூலம் உங்களது கிரிடிட் கார்டு செலவு கள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத் துக்குள் வந்துவிடும். கிரிடிட் கார்டு மூலம் செலவு செய்த பணத்தை எவ்வாறு திரு ப்பி செலு த்துகிறீர்கள். இதற்கான பணம் எங்கிருந்து, எப் படி வந்தது என்ற தகவல் களை வருமான வரித் துறை கிளற ஆரம்பித்து விடும்.

அசையா சொத்துக்களில் முதலீடு:

து எதற்கு வம்பு, பேசாமல் கையில் உள் ள பணத்தை அசையா சொத்துக்களில் முத லீடு செய்தால் என்ன… ? என்று நீங்கள் நினைக் கலாம்.
30 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சொத் துக்களை வாங்கினா லும், விற்றாலும் சம்பந்தப்பட்ட பதிவாளர் மூலமாக உங்கள் பணப்பரிமாற்ற விவரங்கள் வருமான வரித் துறையை சென்றடைந்துவிடும்.

பங்கு சந்தை முதலீடு:

பங்குச்சந்தையில் பல் வேறு பிரிவுகளில் நாம் முதலீடு செய் ய முடியும். அதாவது நேரடி பங்கு முதலீடு, கடன் பத்திரங் களில் முதலீடு, குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அமலில் இருக் கும் பாண்டுகளில் முதலீடு என்று ஒருவர் முதலீடு செய் யலாம்.
இதில், நேரடி முதலீட்டு பங்குகளிலோ அல்லது உரிமை பங் குகளிலோ முதலீடு செய்கிறீர்களா? அப்படியானால் ரூபாய் 1 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.
அதேபோல கடன் பத்தி ரங்கள், பாண்டுகளில் முத லீடா?… ரூபாய் 5 லட்சம் வரை தகவல் பரிமாற்ற பிரச்சனை யிலிருந்து விடுதலை.
பங்கு சந்தை மூலமாக நடைபெறும் அனைத்து வர்த்தகமும் ஏற்கனவே இந்த வளையத்துக்குள் வந்துவிட்டது.

மியூச்சுவல் பண்டு

மியூச்சுவல் பண்டு யூனிட்டுகளில் முதலீடென்றால் ரூபாய் 2 லட்சம் வரை என்றால் தப்பித்தீர்கள்.
அதே நேரம், பங்கு சந்தை மூல மாக பரிவர்த்தனையாகும் மியூச் சுவல் பண்டு யூனிட்டுகளில் முத லீடு செய்தாலும் நீங் கள் கண் காணிப்பு வளையத்துக்கு வரமா ட்டீர்கள்.
அடுத்து, ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன் பத்திரங்களில் ரூபாய் 5 லட்சம் வரை முதலீடு செய்தாலும் வருமான வரித் துறையின் ராடாருக்குள் சிக்க மாட்டீர்கள்.
இதை எல்லாம் படித்த பின்னர், எந்த முறை யில் உங்கள் வருமானம் இருக்கிறது என்பதை யும், அதை எப்படி, எந்த துறையில் முதலீடு செ ய்ய வேண்டும் என்ப தை யும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
எது எப்படி இருந்தாலும், அரசின் விதிமுறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு நமது பணப்பரிமாற்றம் இருந் தால் நிம்மதியாய் இரவு உறக்கம் வரும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...