Monday, October 31, 2016

*முழுமையாக படித்துவிட்டு பின் முடிவெடுக்கவும்*


ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ கோவமா?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி *ஹெல்மெட்*
வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.
Point no.1
பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
Point no.2
ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.
Point no.3
ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?
Point no.4
ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
Point no.5
Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
Point no.6
அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
Point no.7
Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?
Point no.8
ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
Point no.9
பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
Point no.10
30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...
*கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை*
*பண்ணாணாம்*
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...
ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது.
அட கழுத்த திருப்ப முடியலங்க...
பின்னாடி வரவன் ஹாரன் அடிச்சா தா தெரியுது,
ஏதோ வண்டி வருதுன்னு..
தும்மல் வந்தா கூட வண்டிய ஓரங்கட்ட வேண்டியிருக்கு..
கடைசியா என்ன சொல்ல வரன்னா..
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போங்க...
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...??????????????????????????????????????

பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.......இரவு வணக்கம்
நீங்கள் சூடான உணவை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் நண்பர்களே அதுவும் உங்கள் உயிருக்கு ஆபத்தே நன்றாக கவனிக்கவும்
நீங்கள் சூடான உணவுப் பொருட்களை(வெண்ணீரும் சேர்த்து தான்) பிளாஸ்டிக் பொருட்களில் அடைக்கும் போது அல்லது வைக்கும் போது(பிளாஸ்டிக் பேப்ரில் உணவு வைக்கும் போது)
வெப்பம், பிளாஸ்டிக், உணவு மூன்றும் வினைபுரிந்து ஒரு இரசாயன பொருள் உண்டாகிறது
அந்த இரசாயனம் உடலுக்குள் சென்றால் விளைவு உங்களுக்கே தெரியும்
ஆதலால் பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள் நண்பர்களே.

நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.



முருகனருள் பெற்றதால் சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் மூவரும் முறையே தேவதேவர், முனி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று போற்றப்படுகின்றனர்.
12 ஆண்டுகள் முருகனை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.
முருகனின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய் தருளினான்.
பழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக்கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவ ருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.
பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து, ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்து ஆட்கொண்டான் முருகன்.
தனக்கு ஏற்பட்ட காச நோயை ஆதிசங்கரர் திருச்செந்தூர் செந்திலாண்டவனை சுப்ரமண்யபுஜங்கம் பாடித் துதித்து நீக்கிக் கொண்டார்.
திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகன் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று போற்றப்படுகிறார்.
வள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகன் தரிசனமளித்து ஆட்கொண்டார்.
திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு கற்கண்டை வாயில் போட்டு ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ’ எனும் கீர்த் தனையைப் பாட வைத்தார்.
ஊமையாக பிறந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகன் அருளால் உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.
மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின் முருகன் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.
மதுரை மீனாட்சியின் அருளாணைப்படி சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனைமரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து முருகனருள் பெற்றார்.
திருப்புகழை உலகில் பரப்பவே பிறப்பெடுத்தவர் வள்ளிமலை சுவாமிகள். முருகனின் திருவருளால் பொங்கி எனும் பெயரில் வள்ளிநாயகியை வழிபட்டு வள்ளியை நேரில் தரிசித்த பெருமையும் பெற்றவர்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகனின் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர். பற்பல துதிகளை முருகன் மேல் இயற்றியவர்.
பெங்களூரு அல்சூர் பகுதியில் ஏரிக்கரை ஓரம் உள்ள முருகன் ஆலயத்தில் ஒடுக்கத்தூர் சுவாமிகள் எனும் மகானின் சமாதி உள்ளது. ஒடுக்கத்தூர் சுவாமிகள் இத்தல முருகனின் பேரருளைப் பெற்றவர்.
முருகனின் திருவருளைப் பெற்று வாழ்ந்த மகான் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். வயலூர் கந்தவேளை எந்த வேளையும் போற்றிப் புகழ்ந்த புண்யமூர்த்தி இவர்.
தன் கால் எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவர்கள் கை விட்டு விட, முருகனை பிரார்த்தித்து ஷண்முக கவசம் பாடினார், பாம்பன் சுவாமிகள். அப்போது இரு மயில்கள் பறந்து வந்து தம் தோகைகளால் அவர் கால்களை தடவ, அவர் எழுந்து நடந்ததை மருத்துவ உலகமே வியப்புடன் பார்த்தது.
பழநி முருகனின் பேரருளைப் பெற்று, பல சித்திகள் பெற்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு தந்தவர் பன்றிமலை சுவாமிகள்.
முருகப்பெருமான் தன்னை எதிர்த்த சூரபத்மனை சேவலாகவும் மயிலாகவும் ஆக்கி தன் கொடிகளாக்கிய கருணை வள்ளல். எனவே சூரபத்மனும் முருகனருள் பெற்றவனே.
கந்த புராணத்தை எழுத கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முதல் அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமானை காஞ்சி கந்தகோட்டத்தில் தரிசிக்கலாம்.
இட்லி வைத்து கம்யுனிஷம் சொல்ல முடியும் என்றால்
இட்லி வெந்திருக்கு= Optimism...
இட்லி வேகலை= Pessimism...
இட்லியெல்லாம் சுட முடியாதுன்னு பொண்டாட்டி சொல்வது =Feminism...
இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்புவது =Journalism...
இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்கு =Imperialism...
இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சது =Postmodernism...
இட்லி மேல made in Indiaன்னு சீல் = Nationalism...
இட்லி உனக்கு கிடையாது = Pacism...
இட்லி ஒரு ரூபா அம்மா மெஸ்ல= Socialism.
இட்லி சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா =Racism.
இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும் = Realism..
.
இதுக்கு மேல இட்லி கிடையாது= Capitalism.
இட்லியே வேணாம்= escapism!!!!!

ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் சுவாசத்தை உள்ளே இழுத்துப் பயிற்சியை தொடக்க வேண்டும்.

என் மனம் தொடர்ந்து அடுத்தவர்களை எடை போட்டுக் கொண்டே இருக்கிறது.முக்கியமில்லாத சின்னச்சின்ன விஷயங்களையே என் மனம் நாடுகிறது?
அடுத்தவரை எடை போட வேண்டும் என்று தோன்றும்போது நீங்கள் சுவாசிக்கும் முறையை மாற்றுங்கள்.

உடனே உங்களுக்குள் ஒரு மாற்றம் உண்டாகும்.அடுத்தவர்களை மதிப்பீடு செய்வது மறைந்துவிடும்.
மனதில் இருக்கும் பலநாள் பழக்கத்தை மாற்ற விரும்பினால் நன்றாகச் சுவாசிப்பதுதான் சிறந்த வழி.மனதின் எல்லா பழக்கவழக்கங்களும் சுவாசிக்கும் முறையை ஒட்டியே இருக்கிறது.சுவாசிக்கும் முறையை மாற்றுங்கள்.மனம் உடனே மாறிவிடும்.
அடுத்தவரை மதிப்பீடு செய்யும் உந்துதல் வரும்போது உடனே மூச்சை வெளியே விடுங்கள்.
உங்கள் தீர்ப்பையும் அதனுடன் சேர்த்து வெளியே எறிந்து விடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மூச்சுக்காற்றை தீர்க்கமாக வெளியே விடுங்கள்.உங்கள் வயிறை எக்கிக்கொண்டு வேகமாக சுவாசத்தை வெளியே விடுங்கள்.
உங்கள் மதிப்பீடுகளும் அந்தக் காற்றுடன் வெளியே போவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அதன்பின் நல்ல காற்றை இரண்டு மூன்று முறை தீர்க்கமாக உள்ளே இழுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
உங்களுக்குள் ஒரு புத்துணர்வு ஏற்படும்.பழைய பழக்கவழக்கங்கள் உங்களை ஆட்கொள்ளாது.
சுவாசத்தை வெளியே விடுவதுதான் இந்தப் பயிற்சியின் ஆரம்பம்.உள்ளே இழுப்பது அல்ல.
ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் சுவாசத்தை உள்ளே இழுத்துப் பயிற்சியை தொடக்க வேண்டும்.
ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டுமென்றால் சுவாசத்தை வெளியே விட்டுப் பயிற்சியைத் தொடக்க வேண்டும்.
இதனால் மனதில் உடனே மாற்றங்கள் வருவதைப் பார்ப்பீர்கள்.இந்தப் பயிற்சியை எல்லாப் பழக்கங்களுக்கும் செய்யலாம்.
ஆன்மீக மாற்றத்திற்கு இது ஒரு வலிமையான கருவி.முயற்சி செய்துதான் பாருங்களேன்.

#சஸ்டி #விரதம் #இருப்பதன் #வழிமுறைகள்


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.
விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்

வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .


வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .

வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .
வாழ்வில் வெற்றி பெற தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் !!
ஒருவன், தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டு, கடவுளை வேண்டி
தவமிருந்தபின் அவன்முன் கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம், “என்னை ஏன் இப்படி படைத்தீர்? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன?” என கேட்டான். கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து, “இதன்மதிப்பை அறிந்துவா?” ஆனால் விற்கக்கூடாது என்றார்.
அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு,அக்கல்லுக்குபதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூட்டை கிழங்கு தருவதாக சொன்னான்.
நகைக்கடையில் காண்பித்ததற்கு 50,000 பொற் காசுகள் தருவதாக சொல் லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன்மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு, “இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை” என்று கூறினார்.
குழப்பமடைந்த நம் நண்பன், கடவுளை பார்த்து நடந்த தை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், “பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர்தான் சொன்னார். அதேபோல் உன்னை ஒவ்வொரு வரும் ஒவ்வொருமாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெ ல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!*
இதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

Sunday, October 30, 2016

#குங்குமம்_இட்டுக்கொள்வது_எதற்காக? #வசியம்_செய்யமுடியாது

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.
அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் #பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் #சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் #சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
குங்குமம் அணிந்த எவரையும் #வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் #குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் #சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.
#திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, #மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது #தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த #துணிவைக்கொடுக்கும்.
11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், #ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது #தீர்காயுளைக்கொடுக்கும்.
குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, #உடல்குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

நரம்புகள்.........................

மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல் நிலையும் ஆரோக்கியமாகவே இருக்கும். எந்த நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லையோ அந்த நரம்பு எந்த உடல் உள் உறுப்புகளுக்கு தொடர்பு உடையதோ அந்த உறுப்புகள் பாதிப்பு அடையும். அந்த உறுப்பு எந்த நோய்க்கு தொடர்பு உடையதோ அதை சார்ந்த நோய்களும் உருவாகும்.
ரத்த அழுத்தம் அதிகம் ஆனால் ரத்த குழாய்கள் சுருங்கி விடுவதோடு ரத்த ஓட்டம் தடைபடவும் செய்யும். இதன்காரணமாக இதயம், சிறுநீரகம் போன்றவைகள் பாதிக்கப்படக் கூடும். பக்கவாதமும் ஏற்படும்.
பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது ரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது.
மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். ரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது.
அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது.

தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது. ஏனெனில் . . . .

வாழ்வில் தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக்  கூடாது. ஏனெனில் எந்த உயிர்க் கொல்லி  நோ யைவிடவும் மிகக் கொடியது தாழ்வு 
மனப்பான்மை. ஒருவனை ஒன்றுக் கும் உதவாதவனாய் ஆக்குவ தும் இது தான், பித்துப் பிடித்தவனைப் போல் அவனை உளற வைப்பதும் இதுதான்.
நாள் முழுக்க வஞ்சமின்றி உழைக்கிறான். கொஞ்ச வருமானம் தா ன், ஆனால் மனநிறைவு சாதாரண உணவு தான். ஆனால் ஆரோக் கியம் குடியிருப்பது குடிசைதான். ஆனால் மன்னனைப் போல் வா ழ்கிறான். அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையே கியைடாது. வெளி ச்ச மனதுடனும் முகமலர்ச்சியுடனும் இருப்ப வர்களைக் கவனி யுங்கள், 
எப்போதும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்பார்கள். நல்ல விடயங் களையே பேசுவார்கள். மற்ற வர்களின் நற்பண்புகளை, திற மை களைப் பாராட்டுவார்கள். உறவுகளை மதிப்பார்கள், அவர் களின் உள்ளம் உயர்ந்திருப்பதி னால் அவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதே இல் லை.
வீணான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் முழுக் கவனத்தை யும் தங்கள் பணியில் செலுத்துவார் கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் புதிய இலக்கை நிர்ணயித்து அதற்கு நேராய் செயல்படு வார்கள். உடனிருப்போரை யெல்லாம் மகிழ்ச்சியடையச் செய்வா ர்கள். அப்படிப்பட்டவர்களின் சிந்தையு ம் செயலும் ஆரோக்கியமாகஇருப்பதா ல் தாழ்வு மனப்பான்மை என்னும் நோய் அவர்களைத் தாக்குவதில்லை. நல்லவ ர்கள் நல்லவர்களாகத்தான் இருக்கிறார் கள். நல்லவர்களேதைரியசாலிகளாக வும் இருக்க முடியும். நேர்மையற்றவர் கள் வீராதி வீரர்களைப் போல தங்களை க் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் கோழைகள். அத்தகைய கோ ழைகளுக்குத்தான் தாழ்வு மனப்பான் மை வந்து விடுகிறது.
வேலையும் இருக்காது. வருமானமும் இருக்காது. சும்மா சுற்றிக் கொண்டிருப்பான், சம்பாதிக்கின்றவ னைப் பார்த்தால் அவனுக்குப் பொறுக்காது. அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்லி நோகடி ப்பான், அதில் ஓர் அற்ப சந்தோஷம். வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குட்டைபோல் தேங் கிக் கிடப்பான். முன்னே றிக்கொண்டிருப்பவனைப் பார்த்து விட்டா லோ வயிறெரிவான், வசைபாடித் தீர்ப்பான், காரணம் அவனுக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மை.
பிரேசில் நாட்டில் ஈல் என்னும் மின் அதிர் ச்சி தரும் மீன்கள் ஆறடி நீளத்தில் காண ப்படுகின்றனவாம். தலையிலிருந்து வால் வரை மின்சாரம். அந்த  மீனை நாம் எங்கே தொட்டாலும் உடனே மின்சாரம் பாய்ந்து நம்மை நிலைகுலையச் செய்துவிடுமாம். ஒரு வகையில், தாழ்வு மனப்பான்மை உடையவர்களும் அப்படித்தான். அவர்க ளிடம் நீங்கள் நல்லபடியாக பேசினாலும் கூட தாறுமாறாக எகிறிக் குதிப்பார்கள். நாகரிகமற்ற வார்த்தைகளால் உங்கள் மனதைப் புண் படுத்தி விடுவார்கள். அவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக நாம் விலகியிருப்பது நல்லது.
தன்னுடைய குறை பாடுகளை அல்லது பலவீனங்களையே நினைத்துக் கொண்டி ருப்பவர்க ளுக்கு மனச் சோர்வு உண்டாகிறது- அந்த மனச்சோர்விலிருந்துதான் தாழ்வு மனப்பான்மை பிறப்பெடு க்கிறது. தன்னிடம் இருப்பவைகளை மறந்துவிட்டு இல்லாததை எண்ணி வருத்தமடைகிறவன் தன் வாழ்வைத் தொலைத்து விடு கிறான்.
பலவீனனாக தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. மகிழ்ச்சியுடன் வாழ முடியாது, பெரிதாக எதை யோ செய்வது போல வெளியே காட்டிக் கொண்டாலும் உள்ளே பூஜ்ஜியம்தான்.
தாழ்வு மனப்பான்மை என்னும் நோயினால் பீடிக்கப்பட்டவர்க ளின் பேச்சும் செயலும் கோமா ளித்தனமாக இருக்கும். மற்ற வர்களுக்கு முன்னால் அவர்கள் எப்போதும் வெற்றுத் தம்பட்டத் துடன்தான் பேச ஆரம்பிப்பார் கள். அடுத்தவர்களை அநாவசிய மாக மட்டம் தட்டுவார்கள். தங் கள் முட்டாள்தனம் மற்றவர்களுக்குத்தெரிந்து விடுமோ என்ற பய த்தில், மேதைபோல் தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிப்பார் கள்.
தாழ்வு மனப்பான்மை யாரிடம் இல்லையோ அவர்கள்தாம் பிற ரின் சிறப்பை  சிலாகித்துப் பேசி உற்சாகப் படுத்துவார்கள். துரி யோதனன் எப்ப டிப்பட்டவனாகஇருந்தாலும்கூட அவன் தாழ்வு மனப்பான்மை கொண் டவன் அல்ல. அதனால் தான் முதலில் பாண் டவர் சேவையின் தலைசிறந்த வீரர்களைப் பற்றி துரோணா ச்சாரியரிடம்  புக ழ்ந்து பேசுகிறான்.
எவனுக்குத் தன்மீது நம்பிக்கை இருக்கிறதோ, எவன் தன்னுடைய ஆற்றலில் கடுகளவும் சந்தேகமின்றி இருக்கின்றானோ அவன் தான் தயக்கமின்றித் திறந்த மனதுடன் மற்றவர்களைப் புகழ முடி யும். தன்மீது அவநம்பிக்கை உடையவன் தன்னைத்தானே சபித் துக் கொள்கிறான். அவனால் எப்படி மற்றவர்களை வா ழ்த்த முடியும்! பொய்யடா பேசும் புவியில் மடமாதரை விட்டு உய்யடா உய்யடா உய் என்றார் பட்டினத்தார். பாவம் அவருக்கு அப்படி யொரு பாதிப்பு. ஆனால், தாழ்வு மனப்பான்னையை விட்டு உய்யடா உய்யடா என் றால் இன்னும் சிறப்பாக இருக்கும். 
ஏனெனில் அந்தக் கொடிய நிலை யிலிருந்து மீள முடியாமல்தான் பலர் அழிவின் பள்ளத்தாக்கிற்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனோநிலையில் உறுதியும் இருக்காது. உண்மையும்இருக்காது. இந்த இரண்டும் இல்லாத மனம்எவ்வளவு மோசமாக இருக்கும்!
உண்மையும் நேர்மையும் எங்கே காணப்படு கிறதோ அங்கே புத்தி க்கூர்மையும் காணப்படும். புத்திக் கூர்மை துலங்கும் இடத்தில் நேர்மையைக் காணலாம்.
முதலில் ஒருவன் தனக் குத்தானே உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். அவன்தான் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியு ம். பல விடயங்களை அறியும் ஆற்றலுடையவன்  தனக்குத் தானே நேர்மையாக நடந்து கொள்வான். அவன் தன்னையும் திதி ப்பான்: மற்றவர்களையும் மதிப் பான், அவனிடத்தில் தாழ்வு மனப்பான் மை என்ற பேச்சுக்கே இடமிருக் காது.
நாம் எந்தச் சூழ்நிலையிலும் உய ர்ந்த சிந்தனைகளுடன் வாழ முடி யும். எத்தனைமுறை விழுந்தா லும் எழுந்து நிற்க முடியும். தே வையெல்லாம் எழுச்சிமிகுமன ப்பான்மையே! கனபூசியஸ் பிற ந்து மூன்றாண்டுகளுக்குள் அவ ருடைய தந்தை காலமாகி விட்டார். எனவே வறுமையிலும், தா யின் கண்டிப்பிலும்தான் அவர் வளர வேண்டியதாயிற்று. ஆறு வயது சிறுவனாய் இருக்கும் போதே அக்கம்பக்கத்திலுள்ள சிறுவ ர்களை கூட்டி வைத்து ஞானிகள் விளையாட்டு விளையாடுவா ராம்.
இளம் வயதிலேயே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலை. எனி னும் அவர் நாட்டமெல்லாம் கல்வியின் மீதுதான். தமது பதினை ந்தாவது வயதுக்குள் ஞானியாகிவிட வே ண்டும்என்று முடிவு கொ ண்டார். ஆனால் பதினைந்தாவது வயதிலிருந்துதான் மு றையாகக் கல்வி பயிலத் தொடங்கிய தாக வரலாறு கூறுகிறது. எனினும் மிகக் குறுகிய காலத்திற்குள் பல துறை களில் அறிவு வளர்ச்சி பெற்றுவிட்டார். என்னு டைய இளம் பிராயத்தில் நான் மிகவும் தாழ்வான நிலையில் அடங்கியிருந்தேன். அதனால்தான் எதையும் அனுசரித்து பல தர ப்பட்ட விடயங்களிலும் என்னால் திற மை பெற முடிந்தது என்று பிற்காலத்தில் தமது சீடர்களிடம்  கன்பூசியஸ் சொல்லி யிருக்கிறார். வாழ்வில் மிகவும் தாழ்வான நிலையிலிருந்த கன் பூசியஸ் சீனத்துப் பெருஞானியாக  உயர்ந் தாரே எப்படி? தெளிந்த மனதின் உயர்ந்த சிந்தனைக ளால் அல்ல வா! நாம் எப்போதும் மேலானவைக ளையே சிந்திக்க நம்மைப் பழக்கப்படுத்திக் கொ ள்ளவேண்டும். அப்படி யானால்தான் தாழ் வான நிலையிலும் தளராத மனதுடன் முன்னேற்ற த்தின் படிக் கட்டுகளைக் காண முடியும். எதையும் கோணலா கச்சிந்திக்கின்றவன் வாழ்க்கை  கோண லாகத்தான் இருக்கும். குழப்பத்தை ஏற்படு த்துவத ற்கென்றே இருக்கின்றவன் ஒரு நாளும் உருப்படி யாக 
எதையும் செய்ய மாட்டான். எதைப் பேசினாலும் தலை கீழாகப் பேசுவான். தன்மை  இல்லாமல் வாதிடுவான், தாழ்வு மனப் பான்மை அவனைத் தரைமட்டமாக்கிவிடும். நல்ல மனிதர்கள் அப்படி அல்ல. முதலில் அடிப்படையை சரியான விதத்தில் அமை த்துக் கொள்வதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அடிப்படை சிறந்த முறை யில் அமைந்து விட்டால் பி ற விடயங்கள் யாவும் தாமா கவே சிறந்த வகையில்இய ங்கத் தொடங்கி விடும். தங் கள் வாழ்வில் நிலையான முன்னேற்றத்தைக் காண விரும்புகிறவர்கள், செல்கி ன்ற இடமெல்லாம் சிறப்பை ப்பெற எண்ணுபவர் கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண ஆசைப்ப டுபவர்கள், முதலில் தங்களுக்குள்ளிருக்கும் தாழ்வு மனப்பான் மையை அடியோடு நீக்கி விட வேண்டும். நல்வாழ் விற்குத் துணை புரியக்கூடிய எண் ணங்களை வளர்த்துக் கொள்ள வே ண்டும்.
தாழ்வுநிலை ஏற்படக் கூடும்: சோர் ந்துவிடக் கூடாது. வழியில் பிரச்சி னைகள் நேரிடும்: மனம் கலங்கி வி டக் கூடாது. இடியும் மின்ன லும் வரத்தான் செய்யும்: வானம் சேதா ரமடை வதில்லை.
தங்கத்தின் தூய்மையைத்தான் கரட் என்கிறோம். மிகவும் தூய்மை யான தங்கம் 24 கரட் அது வளையும், என வே அதில் நகைகள் செய்ய முடியாது. அதனுடன் கொஞ்சம் செம்பு சேர்த்தால்தான் வித விதமாய் நகைகளைச் செய்ய முடியும். அது போல் தான் வாழ்க்கை அவ்வப்போது துன்பங்கள் சேரும்; தோல் விகள் நேரும். ஆனால் அ வைதான் வாழ்வை உறுதி ப்படுத்தும்.
தர்மம் என்கிறோமே அந்த சமஸ்கிருதச் சொல்லின் பொ ருளென் ன? எப்போதும் மாறாமல் நிலைத்து நிற்ப தே தர்மம். மக்களின் உன் னத வாழ்விற்காக வகுக்கப் பட்ட விதி முறைகளை தர்மம் என்கிறோம். உண்மைக்குத் தர்மம் என்று பொருள், தெய்வீக நெறியை தர்மம் என்பர்.
விஞ்ஞான விதிகளும் மெய்ஞான விளக்கங்களும்கூட தர்மம் என்ப தற்குப் பொருந்தும். விரும்பும் பொருளை நேர்மையான வழி யில் அடையும் வழிமுறைக்கும்  தர்மம் என்று பெயர். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்று வாழ்வின் மேன்மை களை எய்துவதற்கான முயற்சிக்களுக்கும் தர்மம் என்றுதான் பெயர்.தர்மத்தை கைக்கொண்டால் வாழ்க்கை நிலை நிறுத்த ப்படும்.
இராமனுடைய குருவும் அத்வைத வேதாந்த விளக்க நூலின் ஆசிரியரு மான மகரிஷி வசிஷ்டர் நாட்டியக் காரியான ஊர்வ சியின் வயிற்றில்தானே பிறந்தார். தேவரிஷியான நாரதரை ஒரு தாசிதானே பெற்றெடுத்தாள். இராமாயணத்தை எழுதிய வால்மீகி வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத்தானே தன் வாழ்வைத் தொட ங்கினார்.இவர்கள் அனைவருமே பிரம்ம ரிஷிகள். எல்லோராலும் உயரிய இடமளித்து போற்றப்படுபவர்கள்.
இந்த வாழ்க்கை அற்புதமானது: மிக மிக அழகானது. தாழ்வு மனப் பான்மைக்கு இடமளித்து விடாதீர்கள். உயர்ந்து பறக்க ஆசை கொள்ளுங்கள். எப்போதும் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள்?

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் !
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது தான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே
பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அத னால் அந்தத் தெருக்காரர்கள் எல் லாம் போகும் போதெல்லாம் திரும் பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போ வார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டு மென்றால், அவர்களுடை ய ஒட்டுமொத்த சிந்தனையும், பார் வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண் டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார் ப்பவர்களுக்கு அதிலேயே அவர்க ளுடைய சிந்தனை போய்விடும். அ ந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல்போய்விடும். இது போன்ற எளிமையான சில பரிகார ங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தா வரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட் கள் உள்ள செடி. அது போன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக் கலாம். இந்த மாதிரி எ ளிய பரிகாரங்கள் நிறை ய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளை யாரை வைத்திருப்பார்கள். இன் னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இது போன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இரு க்கும். சாதாரணமாகப் பார்த்தீர்க ளென்றால் பிள்ளையார்பட்டி கற் பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சில ரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்பு வதற்கு ஏதேனும் ஒரு பொரு ளை வாசலிலேயே தொங்கவி டுவது நல் லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலா ம். குறிப்பாக இயற்கைத் தாவர ங்கள், செடிகொடிகள் போன்ற வற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச்சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர் த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்ப வே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தா ல் இன்னும் நல்லது.

மனதைப் பற்றி ஓஷோ ஓர் அலசல்,,,

கடந்த காலத்தின் செயல் தொகுப்பே மனம்.....!!!
மனதை விட்டு மனமில்லா நிலையை அடையுங்கள்.....!!!
மனம் எப்போதும் சலிப்படையும்....!!!
மனம்தான் பிரச்சினைகளை உருவாக்கும்.....!!!
மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும்......!!!
கவலைக்கும் துக்கத்துக்கும் மனம்தான் காரணம்.......!!!!
மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக பாருங்கள்.......!!!
மனம் ஓய்வு பெறும் நிலைதான் தியானம்......!!!
மனம் சலனமற்ற நிலையில் கடவுட் தன்மை தானே உண்டாகும்.....!!!!
காலம் இன்றி மனம் உயிர் வாழ்வது இல்லை.......!!!
மனம் இன்றி காலம் கிடையாது......!!!
நம்பிக்கை என்பது மனதின் வெளிப்பாடே......!!!
தினமும் மனதைக் கழுவி துடையுங்கள்.......!!!!
எண்ணங்கள் நிறைந்த மனம் தெளிவாக இராது.......!!!
மனம் ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள்ளும்......!!!
மனம் எப்போதும் பிடிவாத குணமுடையது.......!!!
தியானத்தில் மனம் இல்லாமல் போய் விடும்.......!!!
மனம் நின்றால் ஷணக்காட்சி தெரியும் .........!!!!

Saturday, October 29, 2016

எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவல்

எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவல்

எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவல்
எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவலைத்தான்
இங்கு படிக்க‍விருக்கிறீர்கள்.
கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான். அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.
புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார் கள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உண ர்ந்தார் நாராயணன். உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந் தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச் மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.
அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.
யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.
கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.
வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை. எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான்.

சரி கேள்… என்ன வரம் வேண்டும்?
நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.
இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?
பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.
சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.
அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.
கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...