Tuesday, March 24, 2015

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு
தற்போது எங்குநோக்கினும் இட்லி கடைகளும், பெரிய உணவு விடுதி களும் வந்துவிட்டன•  அதுவும் ஒரு
இட்லி 1.50 பைசாவில் இருந்து 10 ரூபாய் மேலேயே விலை நிர்ணயிக்க‍ ப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்த இட்லி பலரது வீட்டில் அடிக்கடி சமைக்கும் எளிய அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாக வும் இருந்து வருகிறது. சரி இந்த இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? என்ற வரலாற்றை நாம் அறிவோமா?
ந‌மது பழந்தமிழ் இலக்கியங்களில் இட்லி பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை ஆனால் 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கன்னட மொழியில்எழுதப்பட்ட‍ லோகபகரா என்ற நூலில் இட்லி பற்றிய செய்தி காணப்படுவதோடு அதில் இட்லி ச மைக்கும் முறையைப் பற்றிய குறிப்புக்களும் கிடை த்துள்ள‍ன• அந்த நாட்களில், மோரில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற வைத்து பின் ஊற வைத்த அரிசி யுடன் கலந்து அரைத்து இட்லி சமைத்திருக்கிறார்க ள்  
பிறகு  12-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமது தமிழ் நாட்டுக்கு இட்லி அறிமுகமாகியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தி...

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! – அதிர்ச்சித் தகவல்


கோப்புப் படம்

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! – அதிர்ச்சித் தகவல்

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! – அதிர்ச்சித் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை
வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனதில் ஒரு விதக் குழப்பம், பயம் மற்றும் கவலை. இவை எல்லாம் தம் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதற்றம்தான்.
ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதைவிட அக்குழந் தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது… 2 வயது தொடங்கிய துமே அந்த குழந்தையின் பள்ளி அட்மிஷன் பேச்சு ஒவ்வொரு வீட்டிலும் எழத் தொடங்குவது இயல்பு. பெற்றோர் தவிர, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆளாளுக்கு கேட்கும் ஒரே கேள்வி, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்க்கப்போறீங்க? அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா? என்றுதான். ஆனால் ஒரு பள்ளியில் அட்மிஷன் கிடைக்க உண் மையில் என்ன தேவை என்பதை பற்றி அறிவது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
விண்ணப்ப தேதிக்குக் காத்திருக்கும் பெற்றோர்
ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற் கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான். சொல்வதைப் போல் இது சுலபம் இல்லை. தமிழக அரசு பலமுறை குறிப்பி ட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பப் படிவம் அளிக்கவேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆ ணையிட்டாலும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நேரத்தில் வெளியிடுவதுதான் வழக்கம். பள்ளியில் விண்ணப்ப தேதியைக் கண்டறிய பெற்றோர்கள் இங்கும் அங்கும் ஓடி தினம் தினம் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
சில பள்ளிகள் நேரடியாக விண்ணப்பப் படிவம் கொடு ப்பதும், சிலர் ஆன்லைனில் மட்டுமே வெளியிடுவதும் என்றும் வெவ்வேறு முறையைக் கையாளுவதால் பெற்றொர்களின் நிலை திண்டாட்டமே. நேரில் விண் ணப்பங்களை அளிக்கும் பள்ளிகளின் வாசலில் முதல் நாள் இரவிலிருந்து க்யூ கட்டி நிற்கத் தொடங்கும் பெற்றோர்களுக்கு முதல் 100 நபருக்குள் விண்ணப்பப் படிவத்தை வாங்கிவிட்டால் சீட் நிச்சயம் என்ற ஆதங்கமே காரணம். அது மட்டுமின்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கட்டுபாடு விதிக்கும சில பள்ளிகளில், கணினி தொடர்பில்லாத பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கி ன்றனர்.
குழப்பும் பள்ளிகளின் விதிமுறைகள்
முன்பெல்லாம் குழந்தை 4 அல்லது 5 வயது வரும் போது பெற்றோர்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பள்ளி யில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி எல்.கே.ஜியில் சேர்த்துவிடுவது வழக்கம். வயது வரம்பு கூட அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத காலம் அது. ஆனால் இன்றோ ப்ரி.கே.ஜி என்றால் இரண்டரை-யிலிருந்து மூன்றரை வயதுக்குள் இருக்க வேண்டும், எல்.கே.ஜி என்றால் மார்ச் 31-க்குள் 3 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று பலப்பல கட்டுபாடுகளை பள்ளிகள் வரையறுத்துள்ளன.
சரி, இது சமவயதுப் பிள்ளைகள் படிக்க நல்ல வழி என்று நினைத்தாலும் அப்படி இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி வெவ்வெறு கட்டுப்பாடுகள் வெவ் வேறு வயது வரம்பு நிலவரம். வீட்டு அருகே உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே விசாரித்து அதற்கேற்ப வயது வரம்பில் நம் குழந்தை வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் பள்ளியில் சேர்க்கமுடியும்.
இதையெல்லாம் அலசி, ஆராய்ந்து, மெட்ரிக் பள்ளியா? அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா? என்று ஒரு முடிவு எடுப்பது இன்றைய காலத்தில் அதைவிட கடினமானது. மெட்ரிக் பள்ளி என்றால் சமச்சீர் கல்வி என்று சில பெற்றோர்களுக்கு அதன் தரத்தில் சந்தேகம் ஏற்படுவதால் சி.பி.எஸ்.ஈ. பள்ளிக ளை அதிகம் நாடுகின்றனர். அதனால் அங்கு அட்மி ஷனுக்கு கடும் போட்டியே நிலவுகிறது. ஏற்கனவே பள்ளியில் சேர்த்த பெற்றோர்களும் வெளிப்படையாக சீட்டு கிடைத்தன் வழியை சொல்ல தயங்குவதால் அட்மிஷனுக்கு அலையும் ஒவ்வொரு பெற்றோரின் தவிப்பும் அலைச்சலும் அளவுக்கற்றது. ஒரு பள்ளி யில் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்பாகவே நம் சீட்டை உறுதி படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் என்ற நிலைமையே இன்று உள்ளது.
சிபாரிசைத் தேடி அலையும் பெற்றோர்கள்
பள்ளியைத் தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தேட வேண் டியது ஒரு சிபாரிஸை. பள்ளிக்கேற்ப இந்த சிபாரிசு மாறுபடுகிறது. அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர் கள், பிரபல பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று சிபாரிசு செய்வோரின் பட்டியல் நீண்டுகொண் டே போகிறது. அதிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ் வொரு முறை. பிரபலங்கள் சிபாரி ஸை எடுத்து கொள் ளும் சில பள்ளிகள் அரசியல் வாதியின் ரெக்கம்மண் டேஷனை மதிப்பதில்லை.
அதேபோல் சி.பி.எஸ்.இ பள்ளி என்றால் மாநில அரசி ன் உயர் அதிகாரி சிபாரிசு என்றாலும் மறுத்து விடுவர். இப்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு புலனாய்வு அதிகாரியை போலை இங்கும் அங்கும் தேடி, பலரிடம் விசாரித்து, அவமானப்பட்டு சிபாரிசு கடிதத்தை வாங்கி பள்ளியில் கொடுத்து அட்மிஷன் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
டொனேஷன் இருந்தால் அட்மிஷன் நிச்சயம்
விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளை தவிர பெரும் பாலான பள்ளிகள் டொனேஷன் இல்லாமல் எந்த குழந்தையும் சேர்த்துகொள்வதாக தெரியவில்ல. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீடிக்கும் டொனேஷன் நடுத்தர வர்கக பெற்றோர்களுக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தி கடன் வாங்கும் அளவிற்கு தள்ளிவிடுவது கொடுமை. தன் குழந்தையும் நல்ல ஒரு பள்ளியில் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் அனைவரின் நிலையுமே இதுதான்.
சுமாரான பள்ளியாக இருந்தாலும் சேர்த்துவிட வேண் டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டொனேஷன் தருவதை விட வேறு வழி இல்லை. நேரடியாக டொ னேஷனை வாங்க மறுக்கும் பள்ளிகள் இடை தரகர்கள் மூலமே பணத்தை பெற்று அட்மிஷன் தருவது இயல்பாகிவிட்டது. டொனேஷனை தர மறுத்து நியாய ம் பேசி காத்திருந்தால் மிஞ்சுவது குழந்தைக்கு பள்ளி இல்லாத நிலை மட்டுமே. பள்ளியில் குலுக்கல் முறையில் அல்லது கணினி மூலம் ராண்டம் செலக்‌ ஷன் முறையில் அட்மிஷன் நடப்பதாக கூறுவது பெற்றோரின் கண்துடைப்புக்காகவே சொல்லபடுவது என்பது அனுபவத்தில் நன்கு தெரிந்துவிடும்.
ஆர்.டி.இ. இடங்கள் குளறுபடி
பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உயரிய நோக்கத்தோடு 2009 ஆண்டு கொ ண்டுவரப்பட்ட ஆர்.டி.இ அதாவது ‘கல்வி உரிமைச் சட்டம்’ இன்று அதன் உண்மை பயனை அடைந்ததா? என்றால் அதுவும் கேள்விகுறிதான். ஒவ்வொரு பள்ளி யிலும் 25% ஆர்.டி.இ. சீட்டுகளுக்கான இடங்களுக்கு மே மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என்று பலமுறை அரசு ஆணையிட்டும் பல பள்ளிகள் அதற்கும் முன்பே எல்.கே.ஜி அட்மிஷனை முடித்துவிடுகின்றனர்.
சில பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆர்.டி.ஈ சீட்டுகான விண்ணப்ப நாட்களை அறிவிக்கின்றனர். இந்த இலவச சட்டத்தை பற்றியே சரவர தெரியாத ஏழை எளிய மக்கள் இணையத்தில் வெளியிடும் தேதிகளை அறிந்து விண்ணபிப்பது என்பது அரிது. கணக்கு காட்டுவதற்கான அறிவிப்பாகவே இதை பலரும் கருதுகின்றனர். சில பள்ளிகளிலோ ஆர்.டி.இ அடிப்படையில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி அளித்துவிட்டு, அந்த இழப்பை சரி செய்ய, மீதி உள்ள இடங்களில் சேர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 1 முதல் ஒன்றரை லட்சம் வரை நன்கொடை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இது மற்ற பெற்றோர்களின் சுமையை பெருக்கிவிடுவதால் இலவச கல்வி சட்டத்தின் சிறப்பே சிதைந்து விடுகிறது.
மாநில அரசிடம் ஈடு செய்ய வேண்டிய ஆர்.டி.இ-யின் கணக்கை பெற்றோர்களிடம் பறிப்பது நியாயமற்ற செயலாகி விடுகிறது. மொத்ததில் பிள்ளைகளை என் ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர்ப்பதை காட்டிலும் எல்,கே.ஜி சீட் வாங்குவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். குழந்தை பிறந்த உடனே பள்ளி அட்மி ஷனுக்கு பணம் சேர்க்க தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல கல்வியை அவர்களுக்கு அளிக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது.
அரசு பாடத்திட்டதை ஒரே சீராக மாற்றியதைப் போல அட்மிஷன் முறையையும் சீர்படுத்தி குறிப்பிட்ட விண் ணப்ப தேதிகளில் எல்லாப் பள்ளிகளும் ஒரே விதிமு றைகளை பின்பற்றும்படி வரையறுத்தால் மட்டுமே பிள்ளைகளின் அட்மிஷன் கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்.

கேட்பரீஸ் சாக்லேட்டில் பன்றி இறைச்சி கலப்பு – உறுதிசெய்த சுகாதாரத் துறை – அதிர்ச்சித் தகவல்


எப்பொழுதுமே நல்ல‍ காரியம் செய்வதற்கு முன்பு ஸ்வீட் சாப்பிடனும்னு அம்மா சொல்லிருக்காங்க, என்ற வசனத்தோடு பின்னணியில் ஸ்வீட் எடு கொண்டாடு என்ற வாசகத்தோடும்
கூடிய கேட்பரீஸ் சாக்லேட்டின் விளம்பரம்  அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் ஒளி பரப்பாகி வரு கிறது. ஆனால் அந்த சாக்லேட் பற் றிய ஓர் அதிர்ச்சித் தகவல் தற்போ துவெளியாகியுள்ள‍து. இணையத்தி ல் உலா வந்து கொண்டிருக்க‍றிது. அதுவும் ஆதாரமான இந்த அதிர் ச்சிச் செய்தி அடங்கிய‌ செய்தித்தாள் துண்டு இணைப்புடன். . .
இதோ அந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்த செய்தித் தாளின் ஒரு பகுதி

என்னமோ போங்க, ஜனங்க எதைத்தான் சாப்பிடுறதுன்னு தெரியல . . .

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப்பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல் களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரை வில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதப்பேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.
* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.
* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். சுறுசுறுப்பாக செயல் படலாம்.

Monday, March 23, 2015

கொதித்தப் பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து குடித்தால். . .

கொதித்தப் பாலுடன் ‘குங்குமப் பூ’வை சேர்த்து குடித்தால். . .
கொதித்தப் பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமு ம் குடித்து வர சரும
ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கு ம்.
மேலும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து க் கொண்டு, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிக ரித்து முகம் பொலிவடையும்.
கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்துகொடுத்து வர, தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.
மேலும் குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து சீராக்கும் சக்தி உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் என்று சிலர் கூறுவது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

அழகு குறிப்பு – கருத்த‍ முகம் சிவக்க‍வும், பருக்களால் வந்த தழும்புகளை போக்க‍வும் சில குறிப்புகள்

முகத்தில் உள்ள கருமையைப்போக்க குங்குமப்பூவை யூஸ் பண்ணு ங்க…
குங்குமப்பூவை பாலில் போட்டு கர்ப்பிணிக ள் குடித்தால், வயிற்றில் வளரும் சிசு நல்ல நிறத்தில் பிறக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். இது கர்ப்பிணிகளுக்கு மட்டு மின்றி, அனைவருமே பின்பற்றலாம். ஆனால் அத்தகைய குங்குமப்பூவை வேறு எப்படியெல்லாம் பயன்ப டுத்தலாம் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இந்த குங்கு மப் பூவைக் கொண்டு பல ஃபேஸ் பேக்குகள் போடலாம். அதிலும் வாரம் முழுவது ம் நன்கு அலைந்து முகத்தில் உள்ள பொலிவு நீங்கி, கருமையானது சூழ்ந்து இருக்கும். இத் தகைய கருமையைப்போக்கி, முகத்தைப் பொலிவோடும், கருமையை நீக்கி நல்ல நிறத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக குங்குமப்பூ மிகவும் விலைமதிப்பான து. ஆனால் அதன் நன்மை உண்மையிலேயே மிக வும் சிறப்பானது. இருப்பினும், அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே, அதன் பலன் கிட்டும். என வே சீக்கிரம் வெள்ளையாக ஆசைப்படுபவர்கள், குங்குமப்பூவைக் கொ ண்டு ஃபேஸ் பேக்குகள் மற்றும் பல செயல்களை மேற் கொண்டு வந்தால், எளிதில் நல்ல நிறத்தைப் பெற லாம்.
சரி, இப்போது அந்த குங்குமப்பூவை எப்படியெல் லாம் பயன்படுத்தி னால், சருமத்தில் உள்ள கரு மை நீங்கி, சருமம் பொலிவோடும், அழகாகவும் இருக்கும் என்று பார்ப் போம்.
குங்குமப்பூ மற்றும் பால்
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்கி, முகம் பொ லிவடையும்.
குங்குமப்பூ மற்றும் க்ரீம் ஃபேஸ் பேக்
ப்ரஷ் க்ரீம் உடன் சேர்த்தும் ஃபேஸ்பேக் போடலாம். அதற்கு க்ரஷ் க்ரீமுடன் குங்குமப்பூவை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து, பின் அதன் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலசினால், சருமம் மென்மையாகவும், வெள்ளையாகவும் மாறும்.
குங்குமப்பூ மற்றும் மஞ்சள்
மஞ்சள் ஒரு சிறந்த அழகுப் பொருள். இது முகத்தை அழகாக வைக்க உதவுவதோடு, சருமத்தி ல் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். எனவே அத்தகைய மஞ்சளுடன் குங்குமப்பூவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெது ப்பான கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாகும்.
உணவில் குங்குமப்பூ…
குங்குமப்பூவை உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உணவு சுவையுடன், இருப் பதோடு சருமத்திற்கு நல்ல பலனும் கிடைக்கும்.
குளிக்கும் நீரில்…
குங்குமப்பூவில் உள்ள நன்மை கிடைக்க வேண்டு மெனில், அதற்கு ஈரப்பசையானது தேவை. எனவே தினமும் குளிக்கும் போது, வெதுவெ துப்பான நீரில் சிறிது குங்குமப்பூவை தூவி 20 நிமிடம் ஊற வை த்து, பின்னர் குளித்தால், முகம் மட்டுமின்றி, உடல் முழுவதுமே நல்ல நிறத்தைப் பெறலாம்.
குங்குமப்பூ ஸ்கரப்
குங்குமப்பூவை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து, அந்த கலவையைக் கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள் ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
குங்குமப்பூ மற்றும் ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரில் குங்குமப்பூவை ஊற வைத்து, அந்த கலவையைக்கொண்டு சருமத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவினாலும், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
சந்தனப் பொடி மற்றும் குங்குமப்பூ
குங்குமப்பூவானது உடலின் வெப்பத்தை அதிகரி க்கும். இதனால் முகத் தில் பருக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதனை குளிர்ச்சி மிகுந்த சந்தனப் பொடியுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, சருமத்திற் கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாகவும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.
குங்குமப்பூ, பால் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போ ட்டு, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், சருமமானது வெள்ளையாகும்.
குங்குமப்பூ மற்றும் எலுமிச்சை சாறு
எண்ணெய் பசை சருமம் உள்ளவரா? அப்படியெ னில், குங்குமப்பூவை எலுமிச்சை சாற்றில் கலந் து மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்து காணப்படும்.
பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் சில‌ குறிப்புகள்!!!
டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவதுசகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறி த்து சரியான பராமரிப்புக்களை மேற் கொண்டிருக்க மாட்டோம். மேலும் அப்போது சருமத்தின்மீது அதிக அக்க றை எடுத்து கவனித்திருக் கமாட்டோ ம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப் போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டி ருக்கும்.
இதனால் அந்த தழும்புகளால் அழகு பாழாகிறது என்று பலர் வருத்தப் படுவதுண்டு. அதனால் கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்தி, அதனைப் போக்குவதற்கு முயற்சி ப்பதும் உண்டு. இருப் பினும், அவற்றால் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. ஆகவே அவ் வாறு க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிப்பதை விட, இயற்கைப் பொரு ட்களைக் கொண்டு முய ற்சித்தால், பருக்களும், அவற்றால் ஏற்பட்ட தழு ம்புகளும் மறைவதோடு, முகமும் நன்கு பொலி வோடு காணப்படும். இப்போது அந்த பருக்களை யும், அதனால் ஏற்பட்ட கருமையான தழும்புகளையும் போக்கும் சில அழகுக் குறிப்புகளைப் பார்ப்போமா!!!
சந்தன ஃபேஸ் பேக்
சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகிய வற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண் ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
வெந்தயக்கீரை ஃபேஸ் பேக்
சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசி க் கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விடுங்கள்.
வெந்தய ஃபேஸ் பேக்
சிறிது வெந்தயத்தை எடுத்துக் கொண் டு, அவற்றை தண்ணீரில் போட்டு நன் கு கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்பு ள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்க வேண்டா ம். அப்படியே காற்றினால் உலரவிடுங்கள்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் கொண்டு பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின்மீது தடவி மசாஜ் செய்யு ங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல் லை தனியே எடுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரத் தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள். இவற்றால் முகத் தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
தேன் மகத்துவம்
கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்று நேரம் வைத் திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். இதனால் தேனி ன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பா ன தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்கு வதைக் காண்பீர்கள்.
எலுமிச்சை மருத்துவம்
எலுமிச்சைச் சாறு சிறிது எடுத்து முகத்தில் தடவு ங்கள். அதிக நேரம் வைத்திருக்காமல், நல்ல தண் ணீரைக் கொண்டு கழுவி விடுங்கள். பள பளப்பான முகம் உங்களுடையதாகும்.
பன்னீர்/ரோஸ் வாட்டர்
சிறிதுபன்னீர் எடுத்துக்கொள்ளுங்கள். பன்னீர் கிடை க்கவில்லையென் றால், புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொ திக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத் துக் கொள்ளலாம். இந்த பன்னீரை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு
ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சன்னமாகத் துருவிக் கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு மைப்போல அரைத்துக் கொள்ளுங்கள்.பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன் றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.
உடலில் நீர்ச்சத்தினை ஏற்றிக்கொள்ளுங்கள்
எப்பொழுதெல்லம் நேரம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் சிறிது சிறி தாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். போதுமான நீர்ச்சத்து உடலில் இருந்தால், முகம் பொலிவோடு இருக்கும், முகத் தழு ம்புகளும் மறைந்து காணப்படும்.
காய்கறி ஜூஸ் அருந்துங்கள்
ட்டச்சத்துக்களும், புரதமும் நிறைந்துள்ள காய்கறிகளை ஜூஸாக்கி அருந்துங்கள். வாரத்தி ற்கு 3 அல்லது 4 முறையாவது காய்கறி ஜூஸ் அருந்தி வாருங்கள். இதனால் சருமம் பொலிவுட ன் பளபளப்பதைக் காண் பீர்கள்.
க்ரீன் டீ
உடலில் உள்ள நச்சுக்களை இயற்கையான வழி யில் நீக்க சிறந்த வழி க்ரீன் டீ அருந்துதலே ஆகு ம். தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் க்ரீ ன் டீ அருந்தி வந்தால், முகத்தில் உள்ள கருப்பான தழும்புகள் மறைந்து விடும்.
தக்காளி
ஒரு தக்காளியை எடுத்துக் கொண்டு சிறிய சிறிய துண்டுகளாக வெட் டிக் கொள்ளூங்கள். அதனை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். நன் றாகக் காய்ந்ததும் தண்ணீரால் கழுவுங்கள்.
ஐஸ் கட்டிகள்
சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அவ ற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவ றாமல் இதனை செய்யுங்கள். பின்அதன் பலன் தெரியும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற் பயிற்சி செய்வதால், தேவை யற்ற சதைகள் குறைந்து, எடை குறைவ துடன், பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.
டீ-ட்ரீ ஆயில் (Tea tree oil)
கொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளை யும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.
முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந் த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்க ள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக் குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக் கும்.
மேக் அப்புகளை உடனே நீக்கிவிடுங்கள்
தினந்தோறும் மேக் அப் போடும் பழக்கம் உள்ளவரா? அப்படியென்றால், வீடு திரும்பியதும் உடனடியாக அவற்றைக் களை ந்து விட்டு, முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். ஒரே வகையான அழகு சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக எண்ணெய் சார்ந்த மேக்அப் சாதனங்களைத் தவிர்த் திடுங்கள்.
முகத்தை கைகளால் தொடாதீர்கள்
முகத்திலுள்ள பருக்களையும் தழும்புகளையும் நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டு தொட்டுத் தொட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தா ல், அவை பெருகும். அதோ டு, நகம் பட்டு அவை செப்டிக் ஆகக்கூடும். எனவே பருக்கள் மீது விரல் களைக் கூடப் படவிடாதீர்கள். குறிப்பாக பருக்களை பிதுக்காதீர்கள்.
சமையல் சோடா ஃபேஸ் பேக்
சிறிது சமையல் சோடா வை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதுதண்ணீரை சேர்த்து பசை போல கலக் கவும். இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் இருக்க விடுங்கள். பிறகு சற்று வெதுவெதுப்பான நீரில் முகத் தை நன்கு கழுவிடுங்கள். இதனாலும் பருக்களும், தழு ம்புகளும் மறையக்கூடும்.

காலத்திற்கேற்ற‌ நவீன சமையலறைகள் (உங்கள் பார்வைக்கு)


பெண்களுக்கு வீட்டிலேயே மிகவும் பிடித்த இடம் என்றால் அது கிச்சன் தான். ஏனெனில் அவர்கள் தான் அங்கு நீண்ட நேரம் இருந்து,சாப்பிட உணவுகளை தயார் செய்கிறார்கள். ஆகவே வீட்டி ல் உள்ள எந்த அறை வேண்டு மானாலும் எப்படிவேண்டுமா னாலும் இருக்கலாம், ஆனா ல் அவர்களுக்கு கிச்சன் மட்டு ம் அழகாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதி லும் சமையலுக்குத் தேவை யான பொருட்களை எந்த இட த்தில் வைத்தால், சுலபமாக இருக்கும் என்பதைப் பற்றியும் நிறைய ப்ளான் போடுவார்கள். அதிலும் அபார்ட்மெண்ட் செல்பவர்கள் போ டும் ப்ளானிற்கு அளவே இருக்காது.
ஆகவே புது வீட்டிற்கு செல்லும்போது எந்தவிதமான கிச்சன் வேண் டும் என்று, இங்கு குறிப்பிட்டுள்ள கிச்சனை படித்து தெரிந்து கொண்டு, அவ்வாறு உங்கள் புது வீட் டையும் அழகாக உங்களுக்கு பிடித்தாவாறு அமைத்து, சந் தோஷத்துடன் சமைத்து உண் ணுங்கள். இப்போது அந்த வித விதமான கிச்சன் டிசைனை பார்த்து, உங்கள் கிச்சனை நீங் களே அலங்கரியுங்களேன்…
விண்டேஜ் சமையலறை
தோற்றம் மட்டுமே பழங்கால அமைப்பு கொண்டது ஆனால் இது ஒரு நவீன சமையலறை ஆகும். இது ஒரு பெரிய மாளிகை அல்லது வில்லா போன்ற வீடுகளுக்கு பொருத்தமாக இருக்கும். அலமாரிகள்டார்க் நிறத்தில் இருப்பதோடு, அதற்கு பயன்படுத்தபட்ட மரம் நல்ல தரமானதாகவும் இருக் கும். இந்த சமையலறையின் வடிவமைப்பு உயர்சீலிங் மற் றும் உயர் அலமாரிகள்கொ ண்டது. மேலும் இச்சமயல றைக்கு கருப்பு நிற மைக்ரோ ஓவன் மிகுந்த அழகை சேர்க் கும்.
வருங்காலத்தில் சமையலறை
இந்த சமையலறையின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஒருரோபோசமையலறை போன்று காணப் படும். அடுத்து வரும் 10 ஆண்டுக ளில் நவீன சமையலறையின் வடிவமைப்பு, இது போன்றுதான் இருக்கும். இதன் சிறப்பான அம் சம் என்னவென்றால், எந்த ஒரு குறிப்பிட்ட நிறம் இல்லாமல், திரும்பி பார்க்கும் இடம் அனை த்தும் உலோகத்தால் பளிச்சிட அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமையலறை அதன் தனிப் பட்ட ஒரு வித்தியாசமான டிசைனால் அனைவரையும் கவர்ந்து விடும் தன்மையை கொண்டுள்ளது.
சிறிய குடும்பத்திற்கு ஏற்ற சமையலறை
ச்சமையலறையும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நவீன சமையலறை வடிவமை ப்புடையது. இந்த சமையலறை யின் சிறப்பு என்னவென்றால் இது ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்றது. மேலும் இந்த சமையல றையில் பூ ஜாடிகள் மற்றும் அழகான மரத்திலான டைனிங் டேபிள் என்று அலங்கரிக்கப்ப ட்டு, குடும்பத்தினர் அனைவரு ம் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு சிறந்த சமையல றையாக இருக்கும்.
சிவப்பு நிறத்தாலான சமயலறை
வண்ணங்களில் சிறந்ததாக கருதப்படுவது சிவப்புதான். இந் த சிவப்பு நிறத்தை அதிக நேரம் பார்க்க பசியும் அதிகமாகும். அதனால்தான் பல புகழ்பெற்ற ஹோட்டல்கள், தங்கள் லோ கோ மற்றும் அலங்கா ரத்திற்கு சிவப்பு நிறத்தை பயன்படுத்துகி ன்றனர். மேலும் ஒரு சிறிய அறையில் அனைத்து அலமாரி களும் பளபளப்பான சிவப்பு நிற த்தால் பெயிண்ட்செய்து, சரியான இடத்தில் பொருத்தப்பட்டு, மைக் ரோ ஓவனை சரியான இடத்தில் வைத்திருப்பது மிகவும் சுவாரசிய மான விஷயம்.
கிளாசிக் மரத்தாலான சமை யலறை
இந்த சமையலறை அழகான உறுதியான கிளாசிக் மரத்தா ல் செய்யப்பட்டுள்ளது. மேலு ம் இந்த அறையில் நவீன குளிர்சாதனபெட்டி, மைக் ரோவேவ், புகைபோக்கியுட ன் எரிவாயு அடுப்பு போன்ற அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய நவீன சமையல் அறை யை போன்று முழு அளவில் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதும ட்டு மல்லாமல், இந்த டிசைன் சமையலறையில் பளிங்கு பலகைக ள் மற்றும் பளிங்கு டைனிங் டேபிள் சரியாக ரசனையுடன் பொருத் தப்பட்டிருப்பது சிறப் பம்சமாக உள்ளது. அதிலும் இது மிகவும் ஆடம் பரமாக இல்லாமல் ஒரு வசதியான நவீன சமையலறை வடிவ மைப்பு கொ ண்டுள்ளது.
ஆகவே மேற்கூறிய ஏதேனு ம் ஒரு சமையலறை டிசைனை உங்கள் வீடுகளில் அமைத்து, மகிழ் ச்சியாக சமைத்து சாப்பிடுங்கள். என்ன நண்பர்களே! உங்களுக்கு எந்த டிசைன் பிடிச்சிருக்கு?

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...