Tuesday, May 2, 2023

மீதமுள்ள எண்பத்திரண்டு திவ்யதேசங்கள்தான் தமிழ்நாட்டில் உள்ளன.

 

🙏மிகவும் சுவாரசியமான - இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்னவென்று நீங்கள் யூகிக்க முடியுமா?...
1. கேதார்நாத்.🔥
2. காளஹஸ்தி.🔥
3. ஏகம்பரநாதன்- காஞ்சி.🔥
4. திருப்பதி.🔥
5. திருவானைகாவல்.🔥
6. சிதம்பரம் நடராஜர்.🔥
7. இராமேஸ்வரம்.🔥
8. கலேஸ்வரம் என-🔥
இந்தியா இவை அனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் வரைஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்.
இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது!.
என்பது எம்பெருமான் ஈசனே!..அறிவார்.
இவை அனைத்தும் 79 ° தீர்க்கரேகையிலேயே அமைந்துள்ளன.
இந்த கோயில்களில் உள்ள இடைவெளி பலமாநிலங்களை கடந்து பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி இந்த துல்லியமான இடங்களை ஜி.பி.எஸ் இல்லாமல் அல்லது அத்தகைய சிம்மாசனம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள்.
என்பது ஆச்சரியமானதும் ஆகும்.
1. கேதார்நாத் 79.0669 °🚩
2.காளஹஸ்தி 79.7037 °🚩
3. ஏகம்பரநாதன்-காஞ்சி 79.7036 °🚩
4. திருவாரமலை 79.0747 °🚩
5. திருவண்ணாவலை 78.7108`🚩
6. சிதம்பரம் நடராஜ 79.6954 °🚩
7. இராமேஸ்வரம் 79.3129 °🚩
8. காலேஷ்வரம் என்-இந்தியா 79.9067 🚩
அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமையப் பெற்றுள்ளது.
தமிழர்கள் மதம்🚩
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் *274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.*🎌
2. 108 திவ்யதேசங்களில் *96 வைணவக்கோயில்கள்* இருப்பது தமிழ்நாட்டில்.🚩
3. சைவம் வளர்த்த *63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.*🚩
4. வைணவம் வளர்த்த *12 ஆழ்வார்களும்* பிறந்தது தமிழ்நாட்டில்.🚩
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் *சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.*🚩
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான *திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.*🚩
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.🚩
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.🚩
9. *பதிணென் சித்தர்களும்* வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில். 🚩
10.அது மட்டுமா *பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,*🚩
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
*குறிஞ்சி➡முருகன்*🚩
முல்லை👉🏻 திருமால்🚩
*மருதம் ➡ இந்திரன்*🚩
நெய்தல் 👉🏻வருண்ன்🚩
*பாலை➡கொற்றவை*🚩
*தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி*
May be an image of 7 people and temple
All reactions

60-‌ம் திருமணம் ஏன் நடத்தப்படுகின்றது என்று தெரியுமா??

 இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்க்கு 60-ம் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நிலவுகின்றது. என்றாலும் இந்த 60-ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன், மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60-‌ம் திருமணம் ஏன் நடத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.

ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து வரும் நாள் சஷ்டியப்த பூர்த்தி நாளாகும் . அன்றைய தினம் கிரகங்கள் அமைந்திருக்கும் நிலை அந்த நாளின் சிறப்பை உணர்த்துகிறது.அதாவது அவர் பிறந்து 60 வருடங்கள் நிறை வடைந்த நாளிற்கு அடுத்த நாள், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்பு மற்றும் ஆண்டு, மாதம் ஆகியவையும் மாறாமல் இருக்கும்.
ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது . அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுத்து ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் என்பதால் திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் கூறுகிறோம்.
பூமியில் நாம் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும், வருடமும் செல்லச் செல்ல நமது நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலம் குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் இந்த விஷயத்தை நினைவின் கொண்டு ஒவ்வொரு வருடமும் நாம் இறைவனை நோக்கி முன்னேறுகிறோம் என்ற எண்ணம் வேண்டும்.
60 வயதிற்குள் எல்லா ஆசைகளையும் அறவே நீக்கிய பிறகு தான் சஷ்டியப்த பூர்த்தி என்னும் 60வது பிறந்த நாளைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறோம்.
60வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற பிறகு தான், தனது என்ற பற்றையும் துறந்து தன்னுடைய மகன், மகள், சொந்த, பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து அனைவரும் தன் மக்களே, உற்றம், சுற்றமே என்ற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தியாக வேண்டும்.அப்போது தான் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறோம் .
70வது வயதிலிருந்து நம்மை சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
சாதி, மத, இனம் , செடி, கொடி, மனிதன், விலங்கு, உயிருள்ளது, ஜடப் பொருள் அனைத்திலும் இறைவனை காணும் நிலையை 80 வயதில் பெறும்போதுதான் சதாபிஷேகம் ஏற்கும் தகுதி பெறுகிறோம்.
சஷ்டியப்த பூர்த்தியன்று செய்யப்படும் பூஜையின்போது 64 கலசங்களில் தூய நீர் நிரப்பி, மந்திரங்கள் மூலம் நீரைப் புனிதப்படுத்தி அபிஷேகம் செய்வதின் காரணம் 64 கலசங்களும் 60 ஆண்டு தேவதைகளையும் அவற்றிற்கு அதிபதிகளாகிய அக்கினி, சூரியன், சந்திரன், வாயு ஆகியோரையும் குறிக்கும் .
1. பிரபவ முதல் விரோதி கிருதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அக்கினி பகவான் அதிபதி
2. ஆங்கிரச முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரியன் அதிபதி
3.ஈஸ்வர முதல் துன்மதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திரன் அதிபதி
4.சித்திரபானு முதல் அட்சய வரையிலுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவான் அதிபதி
ஆணுக்கு 60 வயது நிறைவடைந்து 61 தொடங்கும்போது மணி விழாவும் , 71 வயது தொடங்கும் போது பவள விழாவும் , 81 வயது தொடங்கும்போது முத்து விழாவும் கொண்டாடப்படுகின்றன.
May be an image of 1 person, temple and text
All reactions

உங்களது ஓட்டம் வீண் என்று தெரியவரும்.

 படகைப் பிடிக்க எண்ணி முல்லா #நஸ்ருதீன் ஓடினார்.அவர் வெளியூர் பயணம் புறப்பட்டிருந்தார்.எனவே படகைத் தவறவிட முடியாத நிலையில் இருந்தார்.

அவர் படகுத்துறையை அடைந்தபோது படகு நகர்ந்து கொண்டிருந்தது.
கரையிலிருந்து எட்டிக்குதித்துப் படகில் காலூன்றினார்.பாலன்ஸ் தவறிவிட,படகினுள் குப்புற விழுந்துவிட்டார்.
முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.ஆடை கிழிந்து போயிற்று.ஆனாலும் மகிழ்ச்சியாக எழுந்தார்.
வியப்போடு அவரைப் பார்த்த பயணிகளிடம்,"நான் தாமதமாக வந்தாலும் படகைப் பிடித்துவிட்டேன்" என்று கூறினார்.
"உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை முல்லா.! இந்தப் படகு புறப்பட்டுப் போகவில்லை.கரையை நோக்கி அல்லவா வந்து கொண்டிருக்கிறது? அதற்குள் என்ன அவசரம்?" என்றனர் படகில் இருந்தவர்கள்.
எங்கோ சென்று சேர நினைத்து,நீங்கள் வாழ்நாள் எல்லாம் ஓடினீர்கள்.மரணம் சம்பவிக்கும் சமயத்தில் உங்களது ஓட்டம் வீண் என்று தெரியவரும்.
புறப்பட்டுச் செல்லும் படகிற்குப் பதிலாக,உங்கள் இருப்பிடம் நோக்கி திரும்பவரும் படகில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும்.

நல்ல யோசனை தான்..

 முதல்வருக்கும் விளையாட்டு துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற கற்பனை உரையாடல்..

முதல்வர் அவர்களே ஒரு சின்ன செய்தி சொல்லலாமா?
நீதான் விளையாட்டு மற்றும் இளைஞர்நலத்துறை அமைச்சர் தானே சொல் என்ன செய்தி?
ஒண்ணுமில்லே இந்த விளையாட்டை பார்க்க இவ்வளவு பேர்கள் வந்திருக்கிறார்காள் இங்கே அமைதி நிலவு கிறது.ஒரு கிக் வேண்டாமா?ஒரு மதுக்கடையை திறக்கலாமா?
நல்ல யோசனை தான்..உடனேஅமைச்சர் செந்தில் பாலாஜியை வரச்சொல.
முதல்வர் அவர்களே ஏன் கூப்பிட்டீர்கள்.
கூட்டத்தை பார்த்தாயே இந்த கூட்டத்தில் ஒரு மதுக்கடையை திறந்தால் நல்ல விற்பனை நடக்கும்.
சரிங்க உடனே ஏற்பாடு செய்கிறேன்.
May be an image of 4 people and text that says 'Polimer NEWS นน CSK vs SRH போட்டியை குடும்பத்துடன் கண்டுகளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! Polimernews 21 APRIL 2023'
All reactions:

பதினெட்டாம்படி சடைச்சி:-

 

💢💢💢💢💢பதினெட்டாம்படி சடைச்சி:-
சிவன்மலை சென்று வரும் நம்மில் எத்தனை பேரூக்கு இந்த சடைச்சியை தெரியும்??
சிவபக்தியால் பேயாய் சிவபிரான் காலடியில் இருக்கும் வரம் பெற்ற காரைக்கால் அம்மையாரை போல முருக பக்தியால் சிவமலை ஆண்டவர் பாதத்தில் இருக்கும் வரம் பெற்ற சடைச்சியை யாருக்கு தெரியும்??
💢💢🙌சிவன்மலை:-
பெயரை கேட்டதும் நினைக்க செய்வது சிவபெருமான் இருக்கும் மலை என்று. ஆனால் இருப்பதோ குமார கடவுள். சிவகிரி, சிவமலை , சக்தி சிவமலை, சிவாத்ரிநயினம், சிவசைலம், சேமலை என்று எத்தனை பெயர்கள் இம்மலைக்கு!!
பதினான்கு பழமையான ஊர்களை கொண்ட காங்கேய நாட்டின் பொதுத்தலம் சிவமலை. இந்த பதினான்கு ஊர்காரர்களும் சிவமலை தேர் திருவிழாவை நடத்துவதும், அவர்கள் பரிவட்டம் கட்டி சிறப்பிக்க படுவதும் இன்றும் உண்டு.
சிவமலையின் செல்வாக்கினை மடவளாகம் இலட்சுமணபாரதி இயற்றிய சிவமலை குறவஞ்சி இலக்கியம் புகழ்கிறது. அருணகிரிநாதர் சிவமலை ஆண்டவரை வணங்கி சந்தப்பாடல் பாடினார். சிவ வாக்கியர் என்னும் சித்தர் இங்கு வாழ்ந்தவர்.
சிவமலை அதனை சுற்றி எட்டு திசையிலும் சக்தியை காவலாக கொண்டது ( மடவளாகம் அங்காள பரமேஸ்வரி அதில் ஒன்று). சிவமலை அடிவாரத்தில் முன்பு ஊர் கிடையாது. சிவமலைக்கு உரிய ஊர் பாட்டாலி. சிலமலை நாதனை பாட்டாலி பால் வெண்ணீசுவரர் பாலன் என்று இலக்கியங்களில் கூறுவதை காணலாம்.
இத்தல முருகனுக்கு காரணாமூர்த்தி என்றும் பெயர். தன் பக்தர் கனவில் தோன்றி தனக்கு இன்ன பொருள் வேண்டும் என சொல்வது சிறப்பு. அப்படி உத்தரவு ஆகும் பொருள் கண்ணாடி கதவு கொண்ட ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கபடும். அப்பொருளால் உலகில் மாற்றம் வரும் என்பது நியதி.
💢💢💢சடைச்சி:-
பாட்டாலி நகரிலே கொங்கு வெள்ளாளர் குடியில் கன்னந்தை கோத்திரத்தில் அரசப்ப கவுண்டர் என்பாருக்கு வள்ளி என்னும் பெண் குழந்தை பிறந்தது. வள்ளி என்னும் பெயருக்கேற்ப சிவமலை முருகன் மீது அதீத பக்தி. தினமும் சிவமலை நாதன் பாதத்தை தொழாமல் வேலைகள் செய்வதில்லை.
திருமண வயது வந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இறை பக்தியால் சடை விழுந்தது. சடாமுடியோடு இருந்தவளை சடைச்சி என்று அழைத்தனர். தன் தோட்டத்து எருதுகள் மீது கோணிப்பைகளை இருபுறமும் கட்டி பக்கத்து ஊர்களுக்கு சென்று தானியங்கள் மக்களிடம் வாங்கி வந்து இறைவனுக்கு படைத்தாள்.
மலைக்கு படிகளை அமைத்தாள். இளைப்பாற்று மண்டபம், தண்ணீர் பந்தல் என தொண்டுகள் ஏராளம். சடைச்சி மடமும், நந்தவனமும் அமைத்து தினமும் ஆண்டவனுக்கு பூமாலை அளிக்க செய்தாள்.
சிவனும் பார்வதி தேவியும் இருக்கும் கையிலையை காண விரும்பினாள். அக்கணமே அசரீரியாக " அம்மா! சடைச்சி! சிவமலையிலேயே உமக்கு காட்சி தருகிறோம்" என சொல்லி, காட்சியும் தந்தார் சிவபிரான்.
பின்னர் உலக வாழ்க்கையை வெறுத்து எந்நேரமும் சிவமலையாண்டவரை சேருகிறேன் என்று சொல்லிகொண்டே இருந்தாள்.
ஒருநாள் முழுநீறு பூசிய மேனியாக, மஞ்சள் உடையாய் மாலையுடன் சிவன்மலை ஆண்டவன் சந்நிதி நுழைந்த சடைச்சி திரும்பவில்லை!! எங்கே போனாள் என்று தேடியவர்க்கு அசரீரியாய் " நான் இங்கேயே சிவமலையாண்டவன் பாதத்தில் சேர்ந்தேன்" என்று வாக்கு கிடைத்தது.
மக்களின் மனதில் நீங்காத சடைச்சி, சிலையாய் சிவன்மலை நாதன் பாதத்தருகில் நீண்டகாலமாய் இருந்தாள்.
"பக்தி பிடித்த சடைச்சியம்மாளை-தன்
பாதங்களில் வைத்திருக்கும் சிவமலையாண்டவர்"
என்று சிவமலை குறவஞ்சி கூறுகிறது. இன்று சிவமலையில் சடைச்சி சிலை இல்லை. வெளியேறிவிட்டது. பின்னாளில் வந்தவர்களுக்கு சடைச்சியின் பக்தி புரியவில்லை.
மலைக்கோவில்களில் 18வது படி சிறப்புடையது. சிவமலையில் 18வது படியை புராண படி என்பர். அது சடைச்சி கட்டியது. அங்கே சடைச்சி இருப்பதாக நம்பிக்கை.
" பத்தினி பெண் சடைச்சியம்மாள் பதினெட்டென்னும் புராணபடியில் குடியிருப்பாள்", சிவமலை குறவஞ்சியில்.
சக்தி சிவமலை நாதன் பாதமே துணை!!
பேரூர் பெரியநாயகி அம்மன் துணை!!.. 💕 💕 💕💕
May be an image of temple and text that says 'சடைச்சி'
All reactions:

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...