Tuesday, October 31, 2023

மறுக்க முடியாத உண்மை. 🙏🙏🙏

 இப்போதெல்லாம், நாம் கேட்கும் ‘இசை’க்கும்கூட ‘ஒழுக்கம்’ என்று ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆம்,
1). பலமுறை கேட்ட பின்னும், காதுகளை மட்டும் தொட்டுவிட்டு இதயத்தை உதாசீனப் படுத்திவிட்டுச் செல்லும் இசை ‘ஒழுங்கற்றது’ என்றும்.
2). ஒருமுறை கேட்கும்போதே அது காதுகளைத் தொடுவதோடு இதயத்தையும் வருடிச் செல்லும் ஆற்றல் கொண்டதாய் இருந்துவிட்டால் அதை ‘ஒழுக்கம் நிறைந்த நல்ல இசை’ என்றும்.
- நாம் ஏற்றுக் கொள்ளலாம்தானே.
இதன் அடிப்படையில்,
‘இளையராஜா இசை’ என்பது எந்தவகையைச் சேர்ந்தது என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன.
இப்படிக்கு,
இளையராஜா இசைப்பிரியன்.
May be an image of 1 person and text that says 'V.Sivanandan ஒழுக்கம் (discipline) என்பது இவரது இசையிலும் இருக்கக் காணலாம். இளையராஜா இசைப்பிரியன்'
All reactions

"தபு"

 இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தந்தை மூன்று வயதில் விலகிப் போய் விட, மெத்தப் படித்திருந்த தாய், தாத்தா மற்றும் பாட்டியிடமிருந்து, தன் வாழ்வை நிர்ணயித்துக் கொள்வதற்கான பூரண சுதந்திரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.11 வயதாகும் போது திரையில் ஏதோ ஓரிடத்தில் பதிவாக, 14 வயதில் இந்தியில் தேவ் ஆனந்திற்கு மகளாக நடிக்கிறார்.அதன் பின்னர் சரியாக ஆறாண்டுகள் கழித்து, தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்க்கு ஜோடியாக "கூலி நம்பர் 1" படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பமைய, அங்கு தொடங்கியது அவரின் கேரியர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என நடிக்காத மொழிகளில்லை. தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது என அங்கீகாரங்களுக்கும் பஞ்சமில்லை.மனுஷிக்கு 51 வயதாகிறது.பல்வேறு சர்ச்சைகள், விவாதங்களைத் தாண்டியும் சினிமா இண்டஸ்ட்ரியில் தொடர்ந்து பயணிக்கிறார்.ஒருபுறம் அல்லு அர்ஜூனுக்கு அம்மாவாக நடிக்கும் அதே வேளையில், இன்னொருபுறம் கதை நாயகியாக இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

"Khufiya"
பாலிவுட்டில் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட விஷால் பரத்வாஜ்ஜின் இயக்கத்தில் "Escape to Nowhere" என்கிற நாவலைத் தழுவி ஸ்பை - த்ரில்லராக உருவாகி வெளியாகியிருக்கிறது. இந்திய உளவுத்துறையான "RAW"வில் ரிசர்ச் & அனைலைஸ் குழுவில் பணிபுரியும் மெஹ்ரா கிருஷ்ணா என்கிற தபுவின் கீழ், ஹீனா என்கிற வங்கதேசப்பெண், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் மிஸ்ரா பற்றிய தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியிலிருக்கிறாள். பணிச்சுமை காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மீனாட்சிக்கு, ஒரு கட்டத்தில் ஹீனாவோடு உடல்ரீதியான உறவும் ஏற்படுகிறது.ஹீனா ISIக்கும் உளவாளியாக வேலை செய்து கொண்டிருப்பது பின்னர் தெரிய வர, மீனாட்சி அவளை விட்டு விலக முற்படுகிறாள். ஆனால் மீனாட்சியின் மீதான தன் அன்பை நிரூபிக்க, வங்கதேச பாதுகாப்புத்துறை அமைச்சரை கொலை செய்ய முற்படும் "Octopus" என்கிற ஆப்ரேஷனில், ஹீனாவே சிக்கி கொண்டு உயிரிழக்க நேர்கிறது.கடைசி நிமிடத்தில் தோல்வியுற்ற இந்த ஆப்ரேஷன் குறித்து அமைச்சருக்கு தகவல் சொன்னது யாரென்று விசாரித்தால் அதே "RAW" பிரிவில் பணியாற்றும் ரவியிடம் வந்து முடிய, அவனை பின்தொடர்ந்து உளவு பார்க்கிற போது, அதன் முடிச்சுகள் ஆப்கானிஸ்தான், அமெரிக்க CIA வரை நீள்வது தெரிய வருகிறது.இப்போது "Octopus" ஆப்ரேஷன் "Brutus" என்கிற வேறு பெயரில் தொடர்கிறது. இன்னொருபுறம் ரவியின் மனைவி சாரு (வாமிகா) இதைப்பற்றி எதுவும் அறியாமல் மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னை RAW அதிகாரிகள் உளவு பார்ப்பது ரவிக்கு தெரிய வர, அங்கிருந்து தாயார், மனைவி, மகனோடு தப்பிக்க நினைக்கும் கணத்தில் எதிர்பாராத விதமாக மனைவிக்கு அசம்பாவிதம் நிகழ்ந்து விடுகிறது.மீத மூன்று பேரும் அமெரிக்காவுக்கு தப்பி போக, தபுவின் வழிகாட்டுதலில் மகனைத் தேடி அங்கும் போகிற சாரு மகனை மீட்டாளா..? "Brutus" ஆப்ரேஷன் வெற்றியடைந்ததா..? அமைச்சர் மிர்சா என்னவானார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்பை த்ரில்லர் என்ற உடனே ஜேம்ஸ்பாண்ட் மற்றும் நம்மூர் விஸ்வரூபம் 1 பாணியில் இருக்குமென நம்பி அமர வேண்டாம்.அதிரடி ஆக்சன் காட்சிகள் பெரிதாக எதுவுமின்றி அன்றாட வேலைகளை செய்யும் சராசரி பணியாளரைப் போல, இங்கும் அத்தனை யதார்த்தமாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள் அதிகாரிகள்.எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி தெளிவாக, அதே நேரத்தில் அடுத்தென்ன நடக்கப் போகிறதோ என நாம் ரசிக்கிற அளவுக்கு பரபரப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தை தபுவும், வாமிகாவும் (மாலை நேரத்து மயக்கம்) தோள்களில் சுமந்திருக்கிறார்கள்.தபுவின் நடிப்பைத் திரையில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல.பணிச் சூழலால் மகனின் சிறிய விருப்பங்களைக் கூட நிறைவேற்ற முடியாத தாய், விவாகரத்து ஆனாலும் மதிப்போடு நடத்தும் கணவனின் பரிவை புரிந்து கொள்ளும் மனைவி, உளவுத்துறையில் அதிகாரி, லெஸ்பியன் பார்ட்னர் என பல்வேறு பரிமாணங்களில் மிளிர்கிறார்.ஆஷிஷ் வித்யார்த்தி, அதுல் குல்கர்னி மாதிரியான பரிட்சயப்பட்ட முகங்கள் நம்மை ஈர்ப்பாக பார்க்க வைக்கிறது.படத்தின் பல்வேறிடங்களில் வருகிற உரையாடல்கள் வாழ்வின் யதார்த்தத்தை மிக அப்பட்டமாக உணர்த்துகிறது.நன்மை, தீமை என்கிற குணங்கள் எல்லோருக்குள்ளும் பொதுவாகவே இருக்கையில், பல சூழல்களில் பிறரை எடை போடுவதன் வாயிலாக நாம் தான் வாழ்வை மிகச் சிக்கலாக்கி கொள்கிறோமோ என படம் பார்த்த பின்னர் தோன்றியது. நெட்ஃப்ளிக்சில் தமிழிலும் கிடைக்கும் இப்படத்தை உரையாடலை அதிகம் நேசிக்கும் பார்வையாளர்கள் தவறாது பாருங்கள்..!
May be an image of 3 people and text
All reactions:

என்னத்த சொல்ல..

 கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.
என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும் போல இருக்கு கேட்கவா....
இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்
இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...
அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..
பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....
திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....
அதான்...
என்று இழுத்தாள்...
ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.
மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க
என்னத்த சொல்ல..
ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..
அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?
போடி லூசு.. அவன் சிரித்தான்.
ஆனால் அதில் உயிரில்லை.
மெதுவாய் சொன்னான்..
நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.
என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....
அவன் இல்லையென தலையாட்டியபடியே
அவனது அலுவலக பையை திறந்தான்.
ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.
என்னங்க இது ..
படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.
அவள் படிக்க தொடங்கினாள் ...
அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...
அன்புள்ள மகனுக்கு,
கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.
உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.
ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.
அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.
உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.
அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.
இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.
அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...
நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.
உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...
கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.
அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.
உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.
அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.
நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.
நாம தான் விளையாடுவோம்.
அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.
ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..
அதுல பாதி பொய் இருக்கும்..
அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.
அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..
அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.
ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.
இப்ப வெளியே போகனும்...
இப்படி வெளியே போகணும்னு..
ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......
காத்திட்டு இருப்பேன்.
நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....
நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி
இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.
அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.
காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?
அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...
இப்ப அவ எப்படி இருக்கானு கூட
அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....
ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...
உனக்கு சொல்லவே வேண்டாம்...
அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே
நீ ரொம்ப பிசியாகிட்ட..
நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...
சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.
உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..
நான் காத்திட்டு இருந்தேன்.
கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..
ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...
என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...
பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.
ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...
பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை
இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.
நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது
அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..
அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.
உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...
அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...
அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.
இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.
இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...
உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.
இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...
என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..
ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல
அதான் உன்கிட்ட சொல்றேன்.
நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...
சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..
அதனால தான் இப்ப சொல்றேன்.
உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...
காத்திட்டு இருக்காங்க...
உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..
ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.
அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....
அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..
அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல
ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..
பாத்தியா வாழ்க்கைய ?
நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத
உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...
இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.
நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.
இன்னும் சொல்லபோனா
நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..
அத கொஞ்சம் குறைச்சிக்கோ..
சீக்கிரம் வீட்டுக்கு வா.
பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...
அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....
ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...
ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?
செய்வேனு நம்புறேன்.
ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...
உன் மனைவி மகள விட்டுடவா போற...
கடிதத்தை படித்து முடிந்தாள்.
அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.
நிமிர்ந்து அவனை பார்த்தாள்....
இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.
அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....
.நான் தான்மா
.....
ஏன் சும்மா பேசக்கூடாதா?
...
என்ன செய்ற...
....
அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.
ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத் தொடங்கியது.... .
அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.
இனிமே அப்படித்தான்..
இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...