Monday, August 10, 2020

பழமையான கட்டிடமாக இருந்தது எந்த மாளிகை????

 தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப்பட்டதல்ல! அக்பரின் அவையில் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட ஒன்பது சிறப்பு மிக்க அவை அறிஞர்களில் ஒருவரான ராஜா மான் சிங் என்பவரின் வழி தோன்றலாம் ராஜா ஜெய் சிங்கிற்கு சொந்தமான தேஜோமஹாலயா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சிவனின் ஆலயத்தை மும்தாஜின் கல்லறை ஆக்குவதாக கூறி வலுக்கட்டாயமாக பறித்து கொண்டது தான் ஷாஜஹான் செய்த சாதனை! ஆனால் உண்மையில் தனது பதினான்காவது பிரசவத்தின் போது எழுந்த சில சிக்கல்களால் மும்தாஜ் இறந்தது தற்போதைய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூர் என்ற இடத்தில். மும்தாஜின் கல்லறையும் அங்கு தான் உள்ளது. அது ஆக்ராவில் இருந்து ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இறந்தவரின் கல்லறைகளை மீண்டும் தோண்டி எடுப்பதென்பது இஸ்லாத்தின் படி ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. மேலும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சடலத்தை அடக்கம் செய்யப்பட்ட பல வருடங்களுக்கு பிறகு எடுத்து கொண்டு செல்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

ஷாஜஹான் காலத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்த ஒரு வெளிநாட்டு பயணியும் இப்படி ஓர் கட்டிடம் கட்டப்படுவதற்கான எந்த ஒரு குறிப்பையும் எழுதி வைக்க வில்லை! ஷாஜஹானின் வரலாற்றை பாதுஷா நாமா என்ற பெயரில் எழுதிய அப்துல் ஹமீது லாஹோரி இதுபற்றி தனது நூலில் ஏதும் குறிப்பிட வில்லை! மேலும் மொகலாயர்களின் வரவு செலவு கணக்கு பதிவேடுகளிலும் கூட இந்த கட்டிடம் கட்ட செலவிடப்பட்டதாக எந்த தொகையும் குறிப்பிட படவில்லை! ஷாஜஹானின் 30 ஆண்டு ஆட்சி காலத்தில் சிறியதும் பெரியதுமாய் 40 போர்கள் நடந்துள்ளது! இத்தனை போர்களில் ஈடுபட ஏராளமான நிதி செலவிடப்பட்டிருக்க வேண்டும்! அப்படி நிதி நெருக்கடியின் போது இது போன்ற கட்டிடம் கட்ட நிதி எங்கிருந்து, எப்படி கிட்டியது???? இதுமட்டுமின்றி ஆக்ராவின் ஆட்சி பொறுப்பாளராக இருந்த ஔரங்கசீப் தனது தந்ததை ஷாஜஹானுக்கு எழுதிய கடிதத்தில் 300 வருடங்கள் பழமையான இந்த கட்டிடம் மழைகாலங்களில் சற்று ஒழுகுவதாகவும் மராமத்து பணிகள் செய்ய தகுந்த நிதி ஒதுக்க வேண்டும் என்று எழுதிய கடிதம் மொகலாயர்களின் revenue recordகளில் உள்ளது. அப்படி ஷாஜஹான் காலத்திலேயே 300 வருடங்கள் பழமையான கட்டிடமாக இருந்தது எந்த மாளிகை????

ஷாஜஹான், கல்கத்தா நகரில் குடியேறி இருந்த போர்த்துகீசியர்கள் மீது படையெடுத்ததால் தனது கஜானாவை காலியாக்கினான் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஷாஜஹான் பொதுவாகவே அதீத குடிபோதையிலேயே வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஷாஜஹானின் (Harem) என்று அழைக்கப்படும் அடிமை பெண்களின் அந்தபுரத்தில் 3500 மேற்பட்ட பெண்கள் இருந்தார்கள் என்றும். புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது போன்ற ஒருவன் மனைவியின் மீது காதல் கொண்டு தாஜ் மஹால் போன்ற காதல் சின்னத்தை உருவாக்கியிருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார். இவர் True Story of the Taj Mahal என்ற புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

ஜாட் இன் மக்கள் சிவனை தேஜாஜி என்று அழைப்பர். ஆக்ரா என்ற பெயரே அந்த ஊரில் இருந்த அக்ரேஷ்வர் மஹாதேவன் என்ற சிவனின் ஆலயத்தினால் தான் வழக்கத்தில் வந்தது என்றும் கூறுவர். தேஜோ மாஹாலயா என்று இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மஹாலயா என்றால் பெரிய ஆலயம் என்று அர்த்தம். இது காலப்போக்கில் மருவி மஹால் அல்லது மஹல் என்று மாறியது. இது நாகநாதர் திருக்கோயில் என்ற வாதமும் இவ்வூர் மக்களால் முன் வைக்க படுகிறது. இந்த ஆலயத்தின் உச்சியில் பூர்ண கும்ப கலசம் மற்றும் திரிசூலம் இடம்பெற்றுள்ளது. மேலும் வேத முறைப்படி பிராகாரங்களும், ஆலயத்தின் உள்ளே நுழையும் முன் நீராடுவதற்காக படித்துறைகளும் யமுனை கரையில் அமைந்துள்ளது. இந்த மாளிகை எங்கும் பாகங்களின் உருவங்கள் மற்றும் தாமரை மலரின் சித்திரங்களும் நிறைந்துள்ளது. இஸ்லாமிய வழக்கங்களின் படி இது போன்ற சித்திரங்கள் ஹராம் என்பர். நிலவறை, சுரங்க பாதைகள் கொண்ட இந்த மாளிகை கண்டிப்பாக சமாதியாக மட்டும் இருக்க முடியாது.

Image may contain: ‎text that says '‎95% 09:00 Anuradha Govindan இருக்க முடியாது. שש-ש NOT TAJ MAHAL I NOT A TOMB IT IS TEJO-MAHALAYA I A SHIV TEMPLE PRE DATES SHAHJHAN BY 300 YEARS ACCORDING TO CARBON DA TING facebook.com/Sanskr Write a comment...‎'‎

இன்று தீடீரென்று மனத்தில் ஒரு கேள்வி.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் அர்ச்சகராக உள்ளனர் நீங்களும் அர்ச்சகராக வேண்டும் என்று நம்மை துண்டுபவர்கள் ...

அதே சாதியினர் Google, Microsoft, TATA போன்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் அமர்ந்து உலகை ஆள்கிறார்களே...
அதுபோல் நீங்களும் ஆகவேண்டும் என்று ஏன் நம்மை தூண்டுவதில்லை??

இந்தியாவில் அறிவியலில் வாங்கிய மூன்று நோபல் பரிசுகளும் அவர்களே வாங்கியுள்ளார்கள்! நம் ராணுவத்தில் உயரிய விருதான பரம்வீர் சக்ராவைகூட அவர்கள்தான் முதலில் வாங்கினார்கள்! எனவே அவர்களை முறியடித்து நீங்கள் இதுபோல் விருதை அடையவேண்டும் என்று ஏன் நம்மை தூண்டவில்லை???

நாம் எல்லாம் அர்ச்சகர் ஆவதற்கு தான் தகுதியானவர்களா??

நம்மை அர்ச்சகர் ஆக வேண்டும் என்று துண்டுகிரார்களே.... அவர்கள் குழந்தைகள் எத்தனை பேர் அர்ச்சகராக உள்ளனர்??? அல்லது அர்ச்சகர் வேலைக்கு முயற்சிக்கின்றனர் ??

அர்ச்சகர் வேலை அவ்வளவு சிறந்ததென்றால் அவர்களின் குழந்தைகளையும் அர்ச்சகர் ஆக்கலாம் தானே ???

ஏன் நம்மை மட்டும் தூண்டுகிறார்கள்....
கொஞ்சம் சிந்தியுங்கள்.....
எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களிடம்...
இது போன்று பேசி அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள்.....

அதைக் கேட்டுக் கொண்டு நாமும் ஜாதியின் அடிப்படையில் பிரிந்து நிற்கின்றோம்....

இவர்களின் பிராமண எதிர்ப்பு கட்டமைப்பு பயன்படுத்தி தேர்தல் வெற்றி பெற்றார்கள்.

அப்போது இங்கு உள்ள அனைத்து இந்துக்களும் ஏற்றார்கள். ஆனால் அதையே 50-வருடமாக திரும்ப திரும்ப சொல்லும் போது தான் இவர்களின் பித்தலாட்டம் வெளியே தெரிகிறது.

எது அன்று அவர்களுக்கு சரியாக பட்டதோ இன்று அது தான் சவக்குழி தெரியாமல் அரசியல் செய்கிறார்கள்.

இனிமேலாவது இது போல் பேசுபவரிடம் உங்கள் பிள்ளைகளை அர்ச்சகர் ஆக்குகங்கள் நாங்களும் அதற்கான முயற்சிகளை செய்கிறோம் என்று கூறுங்கள்...

ஏர் இந்தியா விமான விபத்திற்கு 2 மணி நேரத்திற்குமுன் அதே பிரச்சினையை சந்தித்த மற்றொரு விமானம்.

 கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் முதல்முறை தரையிறங்க முயற்சி செய்தபின் 2-வது முறையாக இண்டிகோ விமானம் தரையிறங்கியது தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்திற்கு 2 மணி நேரத்திற்குமுன் அதே பிரச்சினையை சந்தித்த மற்றொரு விமானம்
கரிப்பூர் விமானநிலையம்


















துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.41 மணியளவில் கரிப்பூர் விமான நிலையத்தின் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கும்போது சறுக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்தனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றன.

கனமழை காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமான நிலையத்திற்கு மேலே வட்டமடித்ததாகவும், இரண்டு முறை தரையிறக்க முயன்று தோல்வியடைந்து 3-வது முறையாக தரையிறக்கும்போது விபத்திற்குள்ளானதாகவும் விமான போக்குவரத்தை கண்காணிக்கும் ‘Flightradar24’ என லைவ் வெப்சைட் தகவல் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் அதே இணைய தளத்தின் தகவல்படி, ஏர் இந்தியா விமான விபத்து நடந்ததற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இண்டிகோ விமானம் பெங்களூருவில் இருந்து கரிப்பூர் வந்துள்ளது. கனமழை காரணமாக விமானியால் முதல் முறை தரையிறக்க முடியவில்லை. 2-வது முறையாகத்தான் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அமித சிங் தெரிவித்துள்ளார்.

25 வருடத்திற்கு மேல் விமானத்துறையில் அனுபவம் உள்ள அமித் சிங், ‘‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரையிறங்கிய அதே 10-வது ஓடுதளத்தில் இண்டிகோ விமானம் தரை இறங்கியுள்ளது. முதல்முறை தரையிறங்கும் முயற்சி இண்டிகோவுக்கும் தோல்வியில் முடிந்துள்ளது. கனமழை பெய்ததால் விமானத்தை தரையிறக்கக் கூடிய அளவிற்கு தெளிவான பார்வை கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது மேகங்கள் தரையிறங்கக் கூடிய ஓடுதளத்தை மறைத்திருக்கிலாம்.

கடுமையான வானிலை இண்டிகோவை குறைந்த அளவில் பாதித்திருக்கலாம். மேலும், ATR, TurboProp Aircraft என்ஜின் என்பதால் போயிங் ஜெட்-என்ஜினைவிட வேகம் குறைவு என்பதால் அதுவும் காரணமாக இருந்திருக்கலாம்’’என்றார்.

Friday, August 7, 2020

இரவு 10மணி தகவல்படி 11 பேர் மரணம்.

 கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியிருந்த 191 பேரில் 190 பேர் மீட்பு! - மத்திய தொழிற் பாதுகாப்பு படை தகவல்

இறைவா.....
கடல் கடந்து தன் தாய்நாட்டை நோக்கி ஆவலாக வந்த உறவுகளை ஏமாற்றி விடாதே இறைவா....
பல சந்தோசங்களை இழந்தவர்கள்.....
இனி அவர்களிடம் இழக்க எதுவும் இல்லை...
இவர்களுக்கு உயிர் இழப்பையும் குடுத்துவிடாதே இறைவா....
இவர்களின் பல நாள் கனவான அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைத்து விடு இறைவா......

மீட்கப் பட்ட அனைவரும் பூரண குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!! இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்!! மிக பெரிய துயர சம்பவம்!!!

#Pilot | #AirIndia | #KeralaFlightAccident | #AirIndiaExpress

Image may contain: one or more people and crowd

புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்.

 சிவப்பு அரிசியில் புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.

புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்


















தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - ஒரு கப்
உளுந்து - கால் கப்
வெங்காயம் - ஒன்று
கேரட் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

சிவப்பு அரிசி

செய்முறை:


வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு... மாவுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை கனமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும்.

சட்னியுடன் பரிமாறவும்.

சத்தான சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் ரெடி.

அரண்மனை அரசியல்.

#குகசெல்வம்

இவர் ஒரு காலத்து ஜேப்பியாரின் சீடர். அந்த காலத்து ரவுடி என்று சொல்லலாம். பின் திமுக வுக்கு வந்து ஸ்டாலின் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தார். இவருக்கு ஜாதி ஓட்டுகள் உண்டா என்று தெரியவில்லை. இவரின் அடையாளம் திமுக தான். மற்றப்படி இவர் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை. சொன்னதை செய்து வந்திருப்பார் போலிருக்கு !

தென் சென்னை மாவட்ட செயலாளர் பதவி கேட்டு 15 வருடமாக காத்திருந்தார். இப்போது ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகும கிடைக்காத துக்கத்தில் வெளியேறுகிறார்.

இவர் வெளியேறியதால் திமுக கலகலத்தெல்லாம் போகாது. ஆனால் திமுக வில் எல்லாம் சரியாக இருப்பது போன்ற தோற்றத்தை உடைக்க உதவும்.
திமுக வில் கடுமையான பலப் பரீட்சை சண்டை நடக்கிறது. அரண்மனை அரசியல்.

ஒரு வயதான ராஜா இறந்தவுடன் அரண்மனையில் நிச்சயம் யாருக்கு அதிக செல்வாக்கு என்று சண்டை தொடங்குவது சகஜம். முறையாக இளவரசர் பதவி ஏற்றாலும் பழைய அல்லக்கைகள் மெல்ல பின்னுக்கு தள்ளப்படும். இந்த திமுக விலோ இப்போது புதிதாக ஒரு பேரனும் நுழைந்து அவரது ஜாலராக்களை உள்ளே கொண்டு வருகிறார். (இங்கு இளவரசே 70 வயது)

இந்த அரண்மனை சண்டை ஒரு வழியாக சில பல தலைகள் உருண்ட பின் நிற்கும்.

எனவே மக்களே இந்த கு.க. செல்வம் விஷயம் ஒரு "தேநீர் கோப்பையில் விளைந்த புயலே" !!
இவருக்கு பின்னாடி பெரிய அளவில் ஆட்கள் வெளியேற வாய்ப்பு மிக குறைவு.

இந்த நபருக்கு இதுநாள் வரை அரசியலில் இருந்ததற்கு இன்று கிடைத்த விளம்பரம் தான் அதிக பட்சம். His 15 minutes Popularity is over.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்.. இவரும் இவரது தலைவரை போலவே துண்டு சீட்டு குடுத்து படிக்க சொன்னாலும் தடுமாறுகிறார். இவர் ஒரு மக்கள் பிரதிநிதியாம். காலக் கொடுமை.

இந்த கூட்டமே தற்குறி கூட்டம் போலிருக்கு.

போங்க .. போங்க.. பஞ்சாயத்து முடிஞ்சது...

Image may contain: 2 people, people sitting

பாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது - தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

 இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது - தயாரிப்பாளர் சிங்காரவேலன்

இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து கூறும்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த சங்கத்தில் 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை. இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. 

பாரதிராஜா சில தயாரிப்பாளர்களை சேர்த்துக் கொண்டு புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில் தாணு அவர்கள் பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்தில் வாருங்கள்... உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என்று கூறினார். 

யாரிடமும் எந்த கருத்தும் கேட்காமல் தாணு அவர்கள் அவரது சொந்த கருத்தை கூறினார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதலால் தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம். தேர்தலில் களமிறங்க இருக்கிறோம் என்றார்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...