Tuesday, September 29, 2020

ஆன்மீகச் சான்றோர்.

 இன்று நாம் பார்க்கப் போவது திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாயகர்களில் ஒருவரான அதிபத்த நாயனார் எண் 1

மீனவ சமுதாயத்தை சேர்ந்த அந்த சிவபக்தர் செய்து வந்த இறை பணி அளப்பரியது பொதுவாக நாம் இறைவனுக்கு காணிக்கை செலுத்துவது என்றால் எவ்வாறு செலுத்துவோம் ஒரு சிறு தொகையை அல்லது நமக்கு கிடைக்கும் லாபத்தில் ஒரு சிறு பங்கை யோ காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக் கொண்டு செலுத்துவோம்
ஆனால் உண்மையான சிவனடியார்கள் சற்று வேறுபட்டவர்கள் அவர்கள் தன்னலம் கருதாத அப்படிப்பட்ட ஒரு சிவபக்தர் தான் அதிபத்த நாயனார் ஆதலால்தான் சிவபெருமானே நேரடியாக வந்து அவரை ஆட்கொண்டார்
நாகப்பட்டினம் பகுதியில் சேர்ந்த குப்பத்தில் வசிக்கக்கூடிய மீனவரான அதிபத்த நாயனார் தினமும் மீன் பிடிக்கச் செல்வார் தனக்கு கிடைக்கும் மீன்களில் மிகப் பெரிய மீனை தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறி அவருக்கு அர்ப்பணிப்பதாக எண்ணிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுவார்
இதை தினம் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார் மீனவ சமுதாயத்தின் ம‌க்க‌ள் இடையே இவருடைய செய்கை கேலிக்குரியதாக பார்க்கப்பட்டது
யாராவது இவ்வாறு செய்வார்களா கிடைக்கும் மீன்களில் பெரிய மீனை மீண்டும் கடலில் விட்டு விடுகிறான என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் என்று கூறிவந்தனர் இவ்வாறு பல ஆண்டுகளாக அவரு‌க்கு இருந்த வறுமை நிலையிலும் இதை அவர் செய்து வந்தார்
இதைக்கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருடன் ஒரு திருவிளையாடலை மேற்கொள்ள எண்ணினார்
ஒரு நாள் முழுக்க எவ்வளவோ முயற்சித்தும் ஒரு மீன் கூட கிடைக்கவில்லை பொழுது சாயும் நேரம் வந்துவிட்டது கடைசி நேரத்தில் ஒரே ஒரு பெரிய மீன் மட்டும் சிக்கியது ஆனாலும் தினம் ஒரு பெரிய மீனை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த அதிபத்த நாயனார் அந்த ஒரு மீனையும் காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு கரைக்கு திரும்பினார்
அவரது குடும்பத்தினர் மிகவும் வருந்தினர் அவரது செய்கைக்காக அந்த ம‌க்க‌ள் அவரை கேலி பேசினார்கள் இருந்தாலும் அவர் அதை பெரிதுபடுத்தவில்லை
இரண்டாம் நாள் கடலுக்குச் சென்ற அவருக்கு அதே நிலை தொடர்ந்தது
ஒரு மீன் கூட பிடிக்க முடியவில்லை நாளின் இறுதியில் ஒரே ஒரு மீன்தான் சிக்கியது அதையும் வழக்கம்போல் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டார் இப்படியாக ஒரு வாரம் கழிந்தது குடும்பத்தில் மிகவும் வறுமை உண்ண உணவு கூட கிடைக்காமல் மொத்த குடும்பமும் தவித்து வந்தனர் இருந்தும் தளர்ச்சி அடையாமல் அவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார்
அன்றைய நாள் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது வழக்கம்போல நாளெல்லாம் எந்த மீனும் கிடைக்காத நிலையில் நாளின் இறுதியில் அவரது வகையில் ஒரு மீன் சிக்கியது அதுவும் சாதாரண மீன் அல்ல தங்கத்தை போல மின்னும் வைரங்கள் பதித்த மிகவும் அரிதான ஒரு மீன்
அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் கூத்தாடினர் நண்பா உனக்கு இன்று முதல் அதிர்ஷ்டம் வந்துவிட்டது இந்த ஒரு மீனை வைத்து உன் வாழ்வில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் போக்கிவிடலாம் உன் குடும்பமும் மிகவும் சீரும் சிறப்புமாக இருக்கும் என்று கூறி மகிழ்ந்தனர்
ஆனால் அதிபத்த நாயனார் சிரித்துக்கொண்டே நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் ஆனால் இன்று கிடைத்திருப்பது இந்த ஒரு மீன் தான் இது இறைவனுக்கு ஆனது எனக்கானது அல்ல என்று கூறி இறைவனை வேண்டி கடலுக்குள் மீண்டும் விட்டுவிட்டார்
விட்ட மறுகணம் ஆகாயத்தில் ஜோதி வடிவமாய் சிவன் காட்சியளித்தார் உனது தொண்டுக்கு மகிழ்ந்தேன் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டார்
பரவசப்பட்டு போன அந்த நாயனார் எனக்கு எதுவும் தேவையில்லை ஐயனே உமது அருள் மட்டும் இருந்தால் போதும் என்று கூறினார் அவரது பக்திக்கு மெச்சிய ஈஸ்வரன் உன் வாழ்நாள் முழுக்க செல்வ செழிப்புடன் வாழ்ந்து உனது காலம் முடிந்ததும் என்னை வந்து அடைவாய் என்று வரம் கூறி மறைந்தார்
ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது.
அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது.
இ‌ந்த தலைமுறை பிள்ளைகளுக்கு நாயன்மார்கள் பற்றிய கதைகளை கூறி இறை நம்பிக்கையை வளர்க்க என்னால இயன்ற ஒரு முயற்சி
உங்களுடைய மேலான கருத்துகளை எதிர் பார்கிறேன்
நன்றி.
Image may contain: one or more people and people sitting

ராஜகனி அழுகிரும் பேலதேரியதே.

 2ஜி அலைக்கற்றை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி விடுவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி அமலாக்கப் பிரிவும், 20-ம் தேதி சிபிஐ அமைப்பும் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கின் விசாரணையைக் கவனித்து வரும் டெல்லி உயர்நீதிமன்ற பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுகிறார்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பு தனது வாதத்தைக் கடந்த ஜனவரி 15-ம் தேதி முடித்துக்கொண்டது. ஆனால், அதன்பின் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வழக்கின் விசாரணை நடக்கவில்லை.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஸ் சேத்தி வரும் நவம்பர் மாதத்தோடு ஓய்வு பெறுவதால், அதற்குள் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றினால் இன்னும் தாமதமாகலாம் எனக் கூறி சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பில உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி சிபிஐ, அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Saturday, September 19, 2020

2008ல் ரூ.3 லட்சம் கோடி: இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி.

 கடந்த, 2008ல், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், உலகின் ஆறாவது பணக்காரராக இருந்த, ரிலையன்ஸ் கம்யூ., குழும தலைவர் அனில் அம்பானி, இன்று சொந்தமாக 1 ரூபாய் கூட இல்லை என, தெரிவித்துள்ளார்.இவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமம், 69 லட்சம் கோடி ரூபாய் கடனை மறுசீரமைக்க, சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளிடம், 51 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. இதற்கு, அனில் அம்பானி தனிப்பட்ட உத்தரவாதம் அளித்திருந்தார்.

2008ல் ரூ.3 லட்சம் கோடி, இன்று ஒரு ரூபாய் இல்லாத அனில் அம்பானி



நீதிமன்றத்தில் வழக்கு



இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமம் கடனை திரும்பத் தரத் தவறியதால், சீன வங்கிகள், உத்தரவாதம் அளித்த அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்கக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.இந்த வழக்கு, கடந்த பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அனில் அம்பானிக்கு என, தனிப்பட்ட சொத்து எதுவும் இல்லை' என, அவர் தரப்பு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த, வங்கிகள் தரப்பு வழக்கறிஞர், அனில் அம்பானிக்கு, கார்கள், தனி விமானம், மனைவி டினா அம்பானிக்கு பரிசளித்த ஹெலிகாப்டர், மும்பையில் இரண்டடுக்கு சொகுசு பங்களா ஆகியவை உள்ளதாக தெரிவித்தார். இதற்கு, ''அந்த சொத்துக்கள், ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானவை; அனில் அம்பானியிடம் ஒரு சொத்தும் இல்லை,'' என, ஹரிஷ் சால்வே வாதிட்டிருந்தார்.


கடனாளி



கடந்த, 2012ல் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட சரிவால், ரிலையன்ஸ் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன. இதையடுத்து, அனில் அம்பானி, தனிப்பட்ட வகையில், 2,200 கோடி ரூபாய் கடனாளியானார். அந்தாண்டு, 52 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக இருந்த அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு, தற்போது பூஜ்யமாகி விட்டது என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை இன்னும் நீதிமன்றம் ஏற்கவில்லை. கடந்த, 2008ல், 3 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், உலகின் ஆறாவது பணக்காரர் என, அனில் அம்பானியை, 'போர்ப்ஸ்' பத்திரிகை பாராட்டியிருந்தது. இதை, 12 ஆண்டுகளில் இழந்ததுடன், தன்னிடம் எந்த சொத்தும் இல்லை என, அனில் அம்பானிஒப்புக் கொண்டுள்ளார். இவரது சகோதரர், முகேஷ் அம்பானி, 6 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன், உலக பணக்காரர்களில் நான்காவது இடத்திலும், இந்தியாவில் முதலிடத்திலும் உள்ளார்.

Sunday, September 6, 2020

ஊழல்,பதவி வெறி அரசியல் வியாதிகளை வேரறுத்து நல்லவர்களை தரங்கண்டு ஆட்சியில் அமர்த்துவோம்...

 நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள்.

அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ்.

சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும்.

அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார்.

நீண்ட காலம் அப்படி நீடித்தது.

ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது.

பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.

“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்

பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.

இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .

"சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார் காமராஜர்.

வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார்.

தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு,

‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார்.

வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன்.

பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்.

சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும்.

எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று.

அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார்.

விலை பேசினார்.

காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை.

அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார்.

பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார்.

யார் பெயரில் என்று கேட்கிறார்.

உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன்.

மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார்.

எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து.

யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள்.

அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை.

கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

’தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள். 

Image may contain: 1 person, sitting

பார்...தமிழகமே... பார்... !!

 *எவ்வளவு கீழ்த்தரமான அரசு ஊழியர்கள்...*

“பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.”

அவர்கள் விரும்புவதெல்லாம்,
பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான இவர்கள் முன் போய் கை கட்டி நிற்க, அவர் நம்மை உட்கார வைத்து,

முதலில் எந்தவிதமான பட்டா?
1. Simple Transfer Patta அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா?
2. RPT பட்டாவா ?
3. Sub-Division பட்டாவா?
என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு,

யார் யாருக்கு எவ்வளவு?
அதாவது VAO க்கு எவ்வளவு, R.I க்கு எவ்வளவு, சர்வேயருக்கு எவ்வளவு, ஹெட் சர்வேயருக்கு எவ்வளவு, A.T க்கு ,D.T க்கு எவ்வளவு, கடைசியாக தாசில்தாருக்கு எவ்வளவு என கூட்டல் கணக்கெல்லாம் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டு,

அப்பாவியாய் முகத்தைக் காட்டி பேரம் பேசிப் பேசி, சொத்தின் மதிப்புக்கும், விஸ்தீரணத்திற்குத் தக்க லஞ்சத் தொகையை அவர் நிர்ணயம் செய்து நம்மிடம் கோரிக்கை வைக்க, நாமும் உள்ளுக்குள் மனம் நொந்து, வெந்து, சகித்து பணிவுடன் பேரம் பேசி,

அவர்களது மனம் நோகா வண்ணம் சில/ பல ஆயிரங்களைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, அழுகையுடன் அட்வான்ஸ் கொடுத்து விட்டு, அவர்களின் பின் நடையாய் நடந்து செருப்பு தேய்ந்த பின் அவர்கள் நம் மீது கருணை காட்டி காசைக் கறாராக கறந்து கொண்டு, நம் சொத்துக்கு, நம் பெயரில் பட்டாவைத் நம் கையில் திணித்து அனுப்புவதுதான் VAO க்கள் விரும்பும் சிறந்த முறையாம்.

அதை விடுத்து பத்திரப் பதிவு முடித்த உடன் பட்டாவைக் கைமேல் பெறலாம் என்று மக்களுக்கு வசதி செய்தால், லகரங்களில் அவர்கள் இழக்கும் லஞ்ச வருவாயை எவ்வாறு ஈடு செய்வது ?

தங்கள் தினசரி வருமானத்தை விட்டுக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் அளவுக்கா அரசு ஊழியர்களை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்?

ஆனாலும் மக்கள் நலனுக்கான அரசு திட்டத்தை லஞ்சம் கிடைக்காது என்ற காரணத்தால் எதிர்க்கும் அளவுக்கு VAO க்கள் தைரியசாலிகளாக இருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும் !

மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !!
நம்மிடம் கொள்ளையடிக்க vao க்கள் வெளிப்படையாக அரசின் மக்கள் நலத்திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றால் யார் ஏமாளிகள் என்று புரிந்து *VAO போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள். சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிருங்கள்....*

நியூஸ்18 தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் ஏற்கிறார் ரங்கராஜ் பாண்டே.! விரைவில் ஒப்பந்தந்தில் கையெழுத்திடுகிறார்.!.

 

Image may contain: 1 person, text that says 'நியூஸ் 18ல் இனி பாண்டே வின் காரசார விவாதம்.. பேச்சுவார்த்தை முடிந்தது.. NEWS 18 தமிழ்நாடு'









நியூஸ்18 தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் அடிப்படையில் வேலை செய்வதாகவும், குறிப்பாக திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கருப்பர் கூட்டம் பின்னணியில் நியூஸ்18 ஊழியர்கள் இருப்பதாக எழுத்தாளர் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்திய சீன எல்லையில் உள்ள கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

அதின் பிறகு மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அதில் ஒன்று சீனாவிற்கு சொந்தமான தொலைபேசி செயலிகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக நியூஸ்18 தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றிய செந்தில், தனது ட்விட்டர் பதிவில் “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா” என பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் நியூஸ் 18 தொலைக்காட்சி தலைமை அலுவலகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு புகார்கள் சென்றதை தொடர்ந்து, நியூஸ் 18 ஊழியர்களை களையெடுக்க தொடங்கியது அந்த நிர்வாகம்.
விசாரணையில் குற்றங்கள் நிரூபணம் ஆனதை தொடர்ந்து நியூஸ் 18 தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து குணசேகரன் நீக்கப்பட்டார். மேலும் சில நிர்வாகிகளை பணியில் இருந்து தூக்கியது நிர்வாகம். மேலும் பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே நியூஸ் 18 தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பு ஏற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனை அறிந்த குணசேகரன், செந்தில் போன்ற முன்னணி நெறியாளர்கள் ரங்கராஜ் பாண்டே தலைமை பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்து ஒவ்வொருவராக வேலையை ராஜினாமா செய்து வந்தனர்.
இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே உடன் தொடர்ந்து நியூஸ்18 தொலைக்காட்சி நிறுவனம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு விரைவில் நியூஸ்18 தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் ரங்கராஜ் பாண்டே ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் விரைவில் ரங்கராஜ் பாண்டே கையொப்பம் இடுவார் என நியூஸ்18 தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இந்நிலையில் அதற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரங்கராஜ் பாண்டே முழு பொறுப்பையும் அடுத்த மாத தொடக்கத்தில் ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பெரும்பாலான ஊழியர்கள் நியூஸ்18 தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டும், ராஜினாமா செய்தும் வெளியேறியுள்ளதால், ரங்கராஜ் பாண்டே பொறுப்புக்கு வந்ததும் அவர் ஆலோசனை படி புதிய ஆட்களை தேர்வு செய்ய நியூஸ் 18 நிர்வாகம் முடிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுக்கு பதவியும்,பணமும் தான் வேண்டும்.மனசாட்சியாம்! கொள்கையாம்!! மண்ணாங்கட்டி.

 ஏன்பா ஜாமீன் சிதம்பரம் , உன் மனைவியே நீட் தேர்வுக்கு #ஆதரவாக வாதாடி , நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை வாங்கி கொடுத்த பிறகு உன் சீடன் ஜிப் வாயன் கே .எஸ் .அழகிரி அதற்கு எதிராக நீங்கள் (காங்கிரஸ் ) எல்லோரும் திமுகவின் அடிமைகளாக இப்போது கோஷம் போடுகிறீர்களே இது நியாயமா , இந்த கேவலமான பிழைப்பு உங்களுக்கு தேவையா . சீ , சீ , த்தூ , த்தூ நீங்களும் ஒழுங்கான அரசியல் வாதிகள் என்று கூறிக்கொண்டு எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்ற முடியும் . இந்த மாதிரி அடிமை நாய் பிழைப்பிற்கு பதில் நாண்டு கிட்டு சாகலாம் . நீங்கள் தனியாக தேர்தலை எதிர் கொண்டால் டெபாசிட் மட்டுமல்ல நோட்டா விற்கும் கீழே போய்விடுவீர்கள் . நீங்கள் பெரும் தலைவர் காமராஜை கொண்டாடிக்கொண்டு , அவர் வாழ்நாள் முழுதும் எதிர்த்த திமுகவின் அடிமையாக இருப்பதுஏம்பா பீட்டர் அல்போன்ஸ் உங்களுக்கு கேவலமாய் இல்லையா?

Image may contain: 1 person, eyeglasses and closeup

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...