Wednesday, July 10, 2019

கணிப்புகளை கவிழ்த்த டி.சி.எஸ்., நிறுவனம் நிகர லாபம் 10.8 சதவீதம் அதிகரிப்பு.

:டி.சி.எஸ்., எனும், டாடா கன்­சல்­டன்சி சர்­வீ­சஸ் நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு நிதி­யாண்­டில், ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 10.8 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. சந்­தை­யின் கணிப்­பு­களை மீறி அதிக லாபம் ஈட்­டி­யுள்­ளது.

நாட்­டின் மிகப்­பெ­ரிய மென்­பொ­ருள் சேவை நிறு­வ­ன­மான, டி.சி.எஸ்., ஜூன் மாதத்­து­டன் முடி­வ­டைந்த, முதல் காலாண்­டில், நிகர லாப­மாக, 8,131 கோடி ரூபாயை ஈட்­டி­யுள்­ளது.
கடந்த நிதி­யாண்­டின், முதல் காலாண்­டில், இந்­நி­று­வ­னம், நிகர லாப­மாக, 7,340 கோடி ரூபாயை ஈட்­டி­யி­ருந்­தது. இத­னு­டன், நடப்­பாண்டு லாபத்தை ஒப்­பி­டும்­போது, 10.8 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.

நிறு­வ­னத்­தின் வரு­வாய், நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், 38 ஆயி­ரத்து, 172 கோடி ரூபா­யா­கும். இதுவே, இதற்கு முந்­தைய ஆண்­டில், 34 ஆயி­ரத்து, 261 கோடி ரூபா­யாக 
இருந்­தது.நடப்­பாண்­டில் வரு­வாயை பொறுத்­த­வரை, 11.4 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.
இது­கு­றித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலைமை செயல் அதி­கா­ரி­யும், நிர்­வாக இயக்­கு­ன­ரு­மான, ராஜேஷ் கோபி­நா­தன் கூறி­ய­தா­வது:

இந்த புதிய நிதி­யாண்­டில், ஒரு நிலை­யான துவக்­கத்தை பெற்­றுள்­ளோம். எங்­க­ளது வாடிக்­கை­யா­ளர்­கள், அவர்­க­ளது வளர்ச்சி மற்­றும் மாற்­றம் ஆகி­ய­வற்­றுக்­காக தொடர்ந்து முத­லீடு 
செய்­கின்றனர்.இத­னால், இந்த காலாண்­டில், எங்­க­ளுக்கு அதிக ஆர்­டர்­கள் கிடைத்­தன. அதன் மூலம் வரு­வா­யும் கிட்­டி­யது.மதிப்­பீட்டு காலத்­தில், நிறு­வ­னத்­தின் மொத்த வரு­வா­யில், டிஜிட்­டல் வரு­வாய், 32.2 சத­வீ­த­மாக உள்­ளது. இது, இதற்கு முந்­தைய நிதி­யாண்­டின், முதல் காலாண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, 42.1 சத­வீத வளர்ச்­சி­யா­கும்.

கடந்த காலாண்­டில், புதி­தாக பணி­யில் சேர்க்­கப்­பட்ட, 12 ஆயி­ரத்து, 356 பேர்­க­ளு­டன் சேர்த்து, மொத்த ஊழி­யர்­கள் எண்­ணிக்கை, 4 லட்­சத்து, 36 ஆயி­ரத்து, 641 பேர்­. இது கடந்த ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத எண்­ணிக்­கை­.ஒரு பங்­கின் வரு­வாய், 21.67 ரூபாய் ஆக உள்­ளது. இது ஆண்­டுக்கு, 13 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. ஜூன் காலாண்­டில், ஒரு பங்­குக்கு, 5 ரூபாய் டிவி­டெண்டு வழங்க, நிர்­வா­கக் குழு பரிந்­து­ரைத்­து உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...