‘நாட்டிலுள்ள, 21 பிராந்திய கிராமப்புற வங்கிகள், ஒன்றிணைக்கப்பட்டுள்ளன,’’ என, நிதித்துறை இணையமைச்சர், அனுராக் தாகூர், லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:பிராந்திய கிராமப்புற வங்கிகளில், 21 வங்கிகள், அவற்றுக்கான ஆதார வங்கிகள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துகளின் அடிப்படையில், ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. பிராந்திய கிராமப்புற வங்கிகளில், நிர்வாகச் செலவை குறைக்கும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்தவும், மூலதனத்தை அதிகரிக்கவும் ஒரு செயல்திட்டம், நபார்டு வங்கியின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டது.
அதன்படி, மாநிலத்திற்குள் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனவும், மொத்தம் உள்ள, 56 வங்கிகளை, 38 ஆக குறைக்க வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:பிராந்திய கிராமப்புற வங்கிகளில், 21 வங்கிகள், அவற்றுக்கான ஆதார வங்கிகள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துகளின் அடிப்படையில், ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. பிராந்திய கிராமப்புற வங்கிகளில், நிர்வாகச் செலவை குறைக்கும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்தவும், மூலதனத்தை அதிகரிக்கவும் ஒரு செயல்திட்டம், நபார்டு வங்கியின் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டது.
அதன்படி, மாநிலத்திற்குள் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் எனவும், மொத்தம் உள்ள, 56 வங்கிகளை, 38 ஆக குறைக்க வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment