Tuesday, October 31, 2023

கருணாநிதி என்பவர் யார்...??

 சுதந்திர போராட்ட தியாகியா..?

செக்கிழுத்த செம்மலா...??
அல்லது, மொழிப்பொருக்காக உயிர் நீத்த போராளியா...?
ஒரு சாதாரண அரசியல்வாதி .
காசுக்காக சினிமாவில் வசனம் எழுதிய வியாபாரி..
தன் வாரிசுகள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என உச்சி முதல் உள்ளங்கால் வரை வாரிசு அரசியலை புகுத்திய ஒரு சுயநலவாதி தலைவர்.
இங்குதான் அவர் விளையாண்டார்,
இங்குதான் அமர்ந்து பொரி கடலை சாப்பிட்டார்,
இந்த தெருவுக்குத்தான் அவர் அடிக்கடி வந்து போனார்
என்று ஆரம்பித்து, கண்ணில் பட்டதை எல்லாம் நினைவு சின்னம் ஆக்குவது மிக காமெடி,.
அறிவுடைய செயல் ஆகாது.
May be an image of text that says '"கருணாநிதி விளையாடிய இடம்" திருவாளூர் கமலாலயத்தில் உள்ள குளம், கருணாநிதி விளையாடிய நெடிய வரலாற்று சிறப்புமிக்க இடம்; அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் -அமைச்சர் சேகர்பாபு'
All reaction

முக்குலத்தோர் .. #மன்னிக்க_மாட்டார்கள் !

 

♦ தேர்தல் மட்டும்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி குரு பூஜைக்கு செல்ல காரணம்.
♦ஆனால் இதை எல்லாம் முக்குலத்தோர் நம்ப மாட்டார்கள்.
♦அவர்கள் இதை எல்லாம் நம்பி வாக்கு அளிக்க மாட்டார்கள்.
♦அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
♦இதை எல்லாம் நம்பி வாக்கு கொடுக்க மாட்டோம்.
♦அவர் நம் முதுகில் குத்திவிட்டார் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
♦அதனால் எடப்பாடிக்கு இதனால் எல்லாம் வாக்கு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அங்கே அவருக்கு ஒரு சீட் கூட கிடைக்காது.
♦நேற்று பெரிய பிரச்சனை நடந்திருக்கும். குருபூஜையில் எடப்பாடியால் மோதல் வந்திருக்கும்.
♦ஆனால் தேவரை பார்க்க வந்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மீது யாரும் தாக்கவில்லை.
♦மரியாதைக்காக எடப்பாடியை விட்டு வைத்தனர்.
♦அதிமுக மீண்டும் சேர வேண்டும், தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும். அப்போதுதான் சமாதானம் செய்ய முடியும்.
♦பிரச்சனை மேல் பிரச்சனை:
♦ஆனால் அதை பற்றி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேசுவது இல்லை.
♦அவரின் நடவடிக்கைக்கு சரியான விலை கொடுக்க போகிறார்.
♦அவரின் செயலுக்கு கண்டிப்பாக சிக்கல் வரும். அவர் முக்குலத்தோரை காயப்படுத்திவிட்டார்.
♦அதற்கு பதில் தர வேண்டும். இல்லையென்றால் 2024ல் அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
♦இதே போக்கை அவர் கடைபிடித்தால் முக்குலத்தோர் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.
♦அவரை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
♦எடப்பாடிக்கு வெற்றிவாய்ப்பு இல்லாமல் போகும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
♦அவரை முடக்கி போடும் வாய்ப்புகள் உள்ளன. எடப்பாடி முக்குலத்தோரை பழிவாங்கிவிட்டார்.
♦சசிகலா யாரு என்று கேட்டவர் எடப்பாடி. அவரை எப்படி முக்குலத்தோர் மன்னிப்பார்கள். சொல்லுங்கள்.
♦அவரை பழிவாங்கியதை விடுங்கள்.. ஓ பன்னீர்செல்வத்தை பழிவாங்கி உள்ளார். டிடிவி தினகரனை பழிவாங்கி உள்ளார்.
♦முக்குலத்தோரை மொத்தமாக அவர் பழிவாங்கி உள்ளார்.
♦அவரை எப்படி முக்குலத்தோர் பிரிவினர் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்.
♦இது போக முக்குலத்தோர் இடஒதுக்கீட்டீல் பிரச்சனை செய்துள்ளீர்கள்.
♦அவர் மனசாட்சி உறுத்த வேண்டும். அந்த மக்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார்.
♦அந்த துரோகத்தை செய்துவிட்டு அவர் எப்படி குருபூஜைக்கு செல்ல முடியும்.
♦அவர் இப்போது இரட்டை வேடம் போட்டால் அதனால் பலன் இல்லை.
♦முக்குலத்தோர் எமோஷனலான மக்கள். அவர்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.
♦அவருடன் இருக்கும் ஆட்களுக்கும் கூட இது தெரியும்.
♦எடப்பாடி பழனிசாமி இதை உணர வேண்டும்,

படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன் ?

  சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இதுபோன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிரம்மதேவன் தன் மகளையே மணப்பது அக்னி தேவன் தன் மகளையே மணப்பது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது காரணம் இந்துமத எதிர்ப்பாளர்களின் குறைபட்ட சமஸ்கிருத ஞானம், இவர்கள் சமஸ்கிருதத்தை முறையாக புரிந்து கொள்ளாதது என்று கூட சொல்லலாம்.
இதை நான் என்னுடைய பாணியில் விளக்குகிறேன் .சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அதாவது ஒரே சொல் பல பொருள் பட கையாளப்பட்டிருக்கும்.
இப்போது திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம். "மகன் தந்தைக்காற்றும் உதவி என்நோற்றான் கொல் " என்று எழுதியிருப்பதை தமிழ் சரியாக படிக்காத தமிழ் மேல் துவேஷம் கொண்ட ஒரு வெளிநாட்டு அறிஞர் "மகனே தன் தந்தையை கொன்று விட வேண்டும் " என்று வள்ளுவர் கூறுகிறார் என்று அர்த்தம் கற்பித்தால் திருக்குறள் எவ்வளவு அனர்த்தம் ஆகுமோ அதேதான் சமஸ்கிருதத்தை தவறாகப் புரிந்துகொண்டு இவர்களால் எழுதப்படுவது!
சூரிய தேவன தன் இரு மனைவிகள் புணர்ந்தான் என்று மேம்போக்காக அர்த்தம் பண்ணிக் கொள்ளுtம் மேதாவிகள் அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். சூரியன் என்பது வெளிச்சத்தின் உருவகம். சாயா என்பது இருளில் உருவகம். காலை நேரம் சூரியன் இருள் மீது படர்ந்து வெளிச்சத்தை உருவாக்கினான் என்பதுதான் அதன் அர்த்தம். சூரியன் தமிழ் சினிமா ஹீரோ ஹீரோயின் மேல் விழுவது போல் விழுந்து அவன் காம இச்சையை தீர்த்துக் கொண்டான் என்று அர்த்தம் கிடையாது!
அதேபோல் பிரம்மா என்னும் ஸ்ருஷ்டி, தானே உருவாக்கிய சரஸ்வதி என்ற ஞானம் அல்லது அறிவு உள்வாங்கி சங்கமித்து மனித அறிவை படைத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும்.
அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கற்பித்தால் மேலே சொன்ன கேள்விகள் தான் உருவாகும். திருக்குறள் புருஷசூக்தம் மட்டுமல்ல.
அலையன்ஸ் என்று ஒரு ஆங்கில வார்த்தை உள்ளது. இதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது. ஹிந்து பேப்பரில் ஒரு கணவன் மனைவியை தேடுவதும் அலையன்ஸ் தான், சோனியா காந்தி கருணாநிதியுடன் செய்துகொண்டது அலையன்ஸ் தான். முன்னது வேறு அர்த்தம் பின்னது வேறு அர்த்தம். ஆனால் நான் ஆங்கிலம் மேலுள்ள அரைகுறை ஞானம் அல்லது காங்கிரஸ் மீது உள்ள துவேஷம் காரணமாகவோ சோனியாகாந்தி கருணாநிதியை திருமணம் செய்து கொண்டார் என்று மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் திமுக காரர்களுக்கு?
அதனால் மொழி பல அர்த்தங்களைக் கொடுக்கும். அந்த இடத்தில் என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொண்டு எழுத அறிவு வேண்டும். அது சத்தியமாக அம்பேத்கர்-பெரியார் புத்தகங்களை படிப்பவர்களுக்கு இருக்காது. அவர்களைச் சொல்லி குற்றமில்லை. எனக்கு முட்டாள்கள் தான் தேவை என்று பெரியாரே சொல்லிவிட்டார்! பெரியார் தேடிய முட்டாள்கள் இவர்கள்!

Monday, October 30, 2023

வைத்தியநாத ஐயர் ஆலய நுழைவு போராட்டத்தை 1939 ஆண்டு முன்னெடுத்தார்.

 தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்ட வந்த காலகட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றே என எடுத்துக் கூறி வைத்தியநாத ஐயர் ஆலய நுழைவு போராட்டத்தை 1939 ஆண்டு முன்னெடுத்தார்.

அவரது போராட்டத்திற்கு சில தலைவர்கள் ஆதரவு கொடுத்தார்கள் ஆனால் ஆதரவு கொடுத்த அவர்கள் போராட்டம் நடக்கும் தேதி அன்று ஓடி ஒளிந்து மறைந்து கொண்டார்கள்.
ஆனால் இன்றுவரை போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து போராட்டம் தேதி அன்று ஓடி ஒளிந்து கொண்ட தலைவர் தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினார் என்று ஒரு பொய்ச் செய்தி சமூகவலைதளங்களில் பரவலாக வருகிறது.
போராட்டம் நடக்கும் காலகட்டத்திற்கு மூன்று ஆண்டு முன்பே பெருந்தலைவர் காமராஜர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்து கோவில் பொற்றாமரை குளத்தில் தியாகி சத்தியமூர்த்தி ஐயர் தியாகி முனுசாமி பிள்ளை ஆகியோருடன் இருக்கும் அருமையான வரலாற்று பெட்டமாக கீழே இடம் பெற்றுள்ள புகைப்படம் இருக்கின்றது.
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பது சான்றோர் வாக்கு அதன்படி ஆலய நுழைவு போராட்டம் யாரால் நடைபெற்றது அந்தப் போராட்டம் வெற்றி பெற யார் காரணம் என்பதை தமிழ் சமுதாய இளைஞர்கள் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.
May be an image of 3 people and text that says '2. Κ. Kamaraj with his mentor S. Sathyamoorthy and V.I. Munuswamy Pillai at Madurai Mecnakshi Amman Temple Tank in 1936'
All reacti

யுகேந்திரன் எனும் ஜெண்டில்மேன்.

 +++++++++++++++++++++++++++

யுகேந்திரன் பிக்பாசில் இருந்து வெளியேறியிருக்கிறார். வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்பதே சரி.
அவர் இந்த ஆட்டத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என வெளியேற்றப்பட்டிருக்கலாம். எனக்கு தெரிந்த சிலரே “அவர் ரொம்ப டீசண்ட், சாஃப்ட்..சண்டைல்லாம் போடலைன்னா எப்படி வெச்சுருக்காங்க” என்கிறார்கள். அந்த அளவுக்கு பிக்பாஸ் பார்க்கும் நம்மையும் பழக்கி விட்டிருக்கிறார்கள்.
ஹிஸ்டரிக்கலாக கத்தினால், சூழ்ச்சி செய்தால், விஷத்தனத்தோடு ஒரு வில்லனாக இருந்தால் தான் பிக்பாஸில் இருக்க முடியுமா, வெல்ல முடியுமா? அது சரியா? முதல் சில சீசன்களில் அப்படி இல்லையே?
உதாரணத்துக்கு முதல் சீசனில் காயத்ரி, வாசு மகன், ஆர்த்தி க்ரூப் சேர்ந்து கொண்டு தாக்குவார்கள். தாக்குதலை விக்டிம் மனநிலையோடு எதிர்கொண்ட பரணி பரிதாபத்தோடு வெளியேறுவார். எதிரிகளிடம் மண்டியிட்ட ஜூலி பரிகாசம் செய்யப்பட்டார். எதிர்த்து கேள்வி கேட்ட ஓவியா இன்று வரை கொண்டாடப்படுகிறார். சொல்லிச்சொல்லி ஒவ்வொரு வாரமும் ஓவியாவின் எதிரி க்ரூப்பில் ஒருவர் வெளியேறுவார். பார்க்கும் நமக்கு வெறியேறும். அத்தனை திருப்தியோடு கமல் வரும் எபிசோடை எதிர்ப்பார்ப்போம்.
நான் பிக்பாஸ் பார்க்க ஆரம்பித்ததற்கு காரணம் இது தான். நமக்கு என்ன அநியாயம் யார் பண்ணாலும், அறம் வெல்லும் என நிறுவும் புள்ளி தான். அது அடுத்தடுத்த சீசன்களில், ஆரி என தொடர்ந்தது. ராஜூ ஜெயித்த சீசன், எச்சூழ்நிலையையும் இலகுவாக அணுகினால், டீசண்ட்டா இருந்தால் தப்பில்லை என ஒரு நம்பிக்கையை தந்தது.
அதற்கு பிறகு அசீம் ஜெயித்த பிக்பாஸ் எல்லாம் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. காசு கொடுத்து ஓட்டு, சண்டை போட்டால் மாஸ் என்றார்கள். இப்போதுள்ள சீசனில் மாயா போன்றவர்கள் ‘கண்டெண்ட்’ என்ற ஒற்றை சொல்லை சொல்லியே தங்கள் விஷத்தனத்தை தாங்கிப்பிடிக்கிறார்கள். ”வெச்சு செய்யனும்” என்கிற politically incorrect பதத்தை இருநிமிடத்திற்கு ஒருமுறை சொல்கிறார்கள். வன்புணர்வு என அதன் அர்த்தம் புரிந்து சொல்கிறார்களா என்றுகூட தெரியவில்லை.
நிற்க, என்னை பொருத்தவரை, யுகேந்திரன் எந்த தப்பும் செய்யவில்லை. பிக்பாஸ் நடத்தையை வைத்துப் பார்த்தால், வெளியில் மிகுந்த மனச்சமநிலையோடு (emotional balance) தன் வேலை, குடும்பத்தை கையாள்பவராகவே தென்பட்டார். என்ன விமர்சனம் வைத்தாலும் இடைமறிக்காது காதுகொடுப்பார். எந்த விவாதத்திலும் ஒரு அசைக்க முடியாத உறுதியும், புன்முறுவல் முகத்தில் இருக்கும், ஒரு கண்ணியம் இருக்கும். That's super impressive.
யூகேந்திரன் என்னை விட ஒருசில வருடங்கள் மட்டுமே பெரியவர். ஒரு சமகாலத்தவராக, அவரளவு மெச்சூரிட்டி எனக்கு இல்லையே என்னுமளவு ஆச்சர்யப்படுத்தினார். அதற்காக உள்ளே சும்மாவும் இல்லை. எல்லோருடனும் ஆக்டிவாக நட்பு பாராட்டி, எல்லாவற்றிலும் கலந்துகொண்டார்.
Yugendran Vasudevan உங்களிடம் யாரேனும் ஸ்பஷ்டமாக இதை சொல்வார்களா என்று கூட தெரியாது.
You did not do anything WRONG to be evicted. If any, You were Impressive and Inspirational.
நீங்கள் நன்கு ஆடினீர்கள் யுகேந்திரன்.
++++
May be an image of 1 person, beard and eyeglasses
All reactions

இது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு உணவாகும்.

 ஷவர்மா என்பது ஒரு கம்பியில் மசாலா தடவிய இறைச்சியை ஒன்றின் மேல் ஒன்றாக அடிக்கி வெப்பத்தில் நன்றாக வேக வைத்து பிறகு அதை துருவி அதனுடன் மயோனைஸ், முட்டைக்கோஸ் இவற்றையெல்லாம் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ரொட்டியில் வைத்து கொடுப்பதே ஷவர்மா என இன்று அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு உணவாகும்.
இதில் சிக்கன் ஷவர்மா, மட்டன் ஷவர்மா, ஃபிஷ் ஷவர்மா, எக் ஷவர்மா,என்று பல வகைகள் இருந்தாலும் சிக்கன் ஷவர்மாவையே அதிகம் விரும்பி அனைவரும் சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு தயாரிக்கப்படும் இந்த ஷவர்மா நம் உயிரையே கொல்லும் அளவிற்கு கேடு விளைவிக்கக் கூடியது.
அதாவது சாதாரணமாக ஒரு இறைச்சியை வெளியில் வைத்த சில மணி நேரத்திலேயே கெட்டுவிடும். இந்த ஷவர்மா செய்வதற்காக இறைச்சியை பல மணி நேரமாக வெளியிலே வைத்து அதை சமைத்துக் கொடுக்கின்றனர். எனவே அந்த இறைச்சி கெட்டுப் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.
சாதாரண இறைச்சியை 45 நிமிடங்கள் ஆவது வேகவைக்க வேண்டும். ஆனால் ஷவர்மா செய்யும் இடத்தில் கூட்டத்தின் காரணமாக அவசரமாக செய்வதால் வேகாத இறைச்சி கலப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இது போன்ற வேகாத இறைச்சியை உண்பதால் நமக்கு கேன்சர் நோய், செரிமான கோளாறு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஷவர்மாவில் இருக்கும் இறைச்சி கெட்டுப் போனதா என்று கண்டுபிடிக்க முடியாத அளவில் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் பச்சை காய்கறிகளையும் சேர்த்து தருவதால், வாங்குபவர்கள் அது கெட்டுப் போயிருந்தாலும் அதைப்பற்றி அறியாத அளவிற்கு ரசித்து சாப்பிடுகின்றனர்.
ஷவர்மா கடைகளில் தரப்படும் மயோனைஸ் அவர்களே தயாரிப்பது. இது பச்சை முட்டை, வெள்ளைப் பூண்டு, எண்ணெய், மைதா போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
பச்சை முட்டையால் செய்யப்பட்ட மயோனைஸ் பலமணி நேரம் இருப்பதால் இதுவும் உடம்பிற்கு கெடுதல் விளைவிப்பதாகவே கூறப்படுகிறது.
ஷவர்மா செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரொட்டியின் பெயர் கூபுஸ் என்பார்கள். இதை மைதா மாவு, கோதுமை மாவு, ஈஸ்ட், மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யக் கூடியது.
மேலும் இதில் கோதுமை மாவை விட மைதா மாவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. மைதா நம் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
ஷவர்மாவில் உள்ளடக்கி இருக்கும் ஒரு உணவுப் பொருள் கூட நம் உடம்பிற்கு நல்லதல்ல என்றும் இதையெல்லாம் நாம் தவிர்த்து விட்டு பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தப் படுகிறது........
May be an image of 3 people, burrito, gyro and text
All reactio

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...