Thursday, December 1, 2022

உண்மைச் சம்பவம்.

 கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.

அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு.
ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
அதற்குக் காரணம் இருந்தது.
பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?
கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று.
குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.
அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.
விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,
பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.
பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது.
இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.
ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.
அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை.
கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.
ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.
அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.
இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான்.
இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது.
அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள்.
அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.
ஆமாம். நம் பகவான் அண்ணாமலையார் தான் அந்த இளைஞன்!
எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.
கால்கள் கொடுத்தவர் இறைவன் தான்.
கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?
அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் அண்ணாமலையாரின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் இறைவன்.......
May be an image of 6 people, people standing, outdoors and text that says "DEEPAM MELUR AREA HOTOGRAPHY"

ஏன் தெரியுமா?

 திவசத்தின்போது இறந்த பெற் றோர், பாட்டனார் மற்றும் முப் பாட்டனார் ஆகிய மூவரின் பெ யர்களைச்சொல்லி அழைத்து அவர்களுக்கு பிண்டம் கொடுக் கப்படுவது வழக்கத்திலுள்ளது ..!! ஏன் தெரியுமா?

குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள ”சுக்கிலம்” எனப்படும் தாதுவாகும். இந்தத் தாதுவில்
எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ள ன. அதில் இருபத்து எட்டு அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உண வு மற்றும் அருந்தும் நீர் முதலியவ ற்றால் உண்டாவான; பெற்றோரிட மிருந்து இருபத்தியொரு அம்சமும், பாட்டனாரிடமிருந்து பதினைந்து அ ம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும், நான்காம் மூதாதை யிடமிருந்து ஆறு அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்ச மும், ஆறாம் மூதாதை யிடமிருந்து ஒரு அம்சமும் என ஆறு தலைமு றையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலைமுறை மனிதனின் சுக்கிலத்தோடு தொட ர்பு கொண்டவை.
இதில் அதிகமாக தங்கள் அம்சத் தை தங்கள் வாரிசுகளுக்குத் தரு பவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. அதனால்தான், திவசத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்க ப் படுவது வழக்கத்திலுள்ளது..!!

இனி இட்லி செய்ய அரிசி உளுந்து எதுவுமே தேவையில்லை கொஞ்சம் பாசிப்பருப்பு இருந்தால் போதும் சுவையான இட்லி ரெடி. ஒருமுறை செய்து பாருங்க இனி அடிக்கடி இந்த இட்லி தான் செய்விங்க.

 தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவே இந்த இட்லி தான். குழந்தைக்கு கொடுக்கும் முதல் உணவில் இருந்து வயதானவர்கள் கொடுக்கும் உணவு வரை எல்லாவற்றிலும் முதலிடம் இந்த இட்லிக்கு தான் உண்டு. இட்லியை வேக வைத்து உண்பதால் ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் எளிதில் ஜீரணமாக கூடியதாகவும் இருக்கும். இந்த இட்லியை இப்பொழுதெல்லாம் ஜவ்வரிசி, ரவை, சேமியா, இதெல்லாம் கூட செய்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது நாம் பாசிப்பருப்பை வைத்து செய்யும் இட்லியை தான் பார்க்க போகிறோம். இட்லி என்றாலே அரிசி ,உளுந்து இரண்டையும் ஊற வைத்து, அதன் பிறகு அரைத்து புளிக்க வைத்து செய்வது தான் நம் பாரம்பரியமான முறை. இந்த முறையில் அப்படி ஏதும் செய்யாமல் வெறும் பாசிப்பருப்பை மட்டுமே வைத்து சில மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தயார் செய்து விடலாம். அந்த முறையை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1 கப், தயிர் – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, கடுகு – 1/4 ஸ்பூன், கேரட் துருவியது – 1/4 கப், இஞ்சி – 1 துண்டு, கருவேப்பிலை – 1 கொத்து, நெய் – 1டேபிள் ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன். இந்த இட்லி செய்வதற்கு முன் பாசிப்பருப்பை மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்து அதன் பிறகு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் தனியாக ஊற்றி இத்துடன் தயிர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்த உடன், பச்சை மிளகாயும், இஞ்சியும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதையும் லேசாக வதக்கி அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவில் சேர்த்து கலந்து கொஞ்சம் ஈனோ உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து அடுப்பை பற்று வைத்து இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் சூடானவுடன் நீங்கள் எப்போதும் போல இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த வகை சட்னி என்றாலும் நன்றாகவே இருக்கும். பருப்பு,காய் சேர்த்து செய்யும் இந்த இட்லி குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு. இதை சைட் டிஷ் இல்லாமல் வெறும் இட்லியாக சாப்பிட்டால் கூட நன்றாக தான் இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இது போல உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள்.

_*படத்தை நன்றாகப் பாருங்கள்.*_

 சிலவேளை முதல் பார்வையில் ஏமாற்றமடைவோம்.

இங்கு தெரிவது மனிதர்கள் என நினைப்போம்.
ஆனால் உண்மையில் மனிதர்களல்ல.
தூண்களுக்கிடையில் உள்ள இடங்கள்தான் மனிதர்கள் போன்று காட்சியளிக்கின்றன.
இப்படம் இரண்டு விடயங்களை தெளிவாக உணர்த்துகின்றது:
1- எதிலும், எவர் விடயத்திலும் பார்த்தவுடன் எந்த முடிவுக்கும் வரக்கூடாது.
2- இங்கு தூண்களிடையே தென்படும் வெற்றிடங்களை மனிதர்களென நினைப்பது போன்றுதான் வாழ்க்கையிலும் சிலரை நாம் மனிதர்களென நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால் அவர்களது அருகில் சென்று பார்க்கும்போதுதான் அவர்கள் மனித உருவங்கள் மட்டும்தான் என்பதை புரிந்து கொள்கிறோம்.
ஒழுக்கம்,நீதி,நேர்மை,உண்மை போன்ற மனிதர்களுக்குரிய குணாதிசயங்கள் எதுவுமே அவர்களிடமில்லை...
பெரும் கவலை.
இறைவன் நேர்வழியை வழங்கட்டுமாக...
No photo description available.

*தமிழை கொன்றோம்.*

 மனைவியை ஒய்ஃப் என்றோம்

வாழ்க்கையை லைஃப் என்றோம்
கத்தியை நைஃப் என்றோம்
புத்தியை புதைத்தே நின்றோம் !
அத்தையை ஆன்ட்டி என்றோம்
அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்
கடமையை டுயூட்டி எனறோம்
காதலியை பியூட்டி என்றோம்!
காதலை லவ்வென்றோம்
பசுவை கவ்வென்றோம்
ரசிப்பதை வாவ் என்றோம்
இதைதானே தமிழாய் சொன்னோம்!
முத்தத்தை கிஸ் என்றோம் பேருந்தை பஸ் என்றோம்
அளவை சைஸ் என்றோம்
அழகை நைஸ் என்றோம் !
மன்னிப்பை சாரி என்றோம்
புடவையை சேரி என்றோம்
ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!
மடையனை லூசு என்றோம்
வாய்ப்பை சான்சு என்றோம்
மோகத்தை ரொமான்ஸ் என்றோம்
தமிழை அறவே மறந்தோம்!
அமைதியை சைலன்ஸ் என்றோம்
சண்டையை வயலன்ஸ் என்றோம்
தரத்தை ஒரிஜினல் என்றோம்
தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!✍🏼🌹

டிசம்பர் 1 முதல் 4 நகரங்களில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் .

 மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இதற்கிடையே, குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தது. இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

*திருவோணம்* - *திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் திவ்யதேசம்*

 மூலவர்:

புண்டரீகாக்ஷன்
(செந்தாமரை கண்ணன்)
தாயார்:
பங்கயற்செல்வி
மங்களாசாசனம்:
பெரியாழ்வார்,
திருமங்கையாழ்வார்
இத்தலம் திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதால் *ஆதிவெள்ளறை*!
வெண்மையான பாறையினாலான மலை என்ற பொருளில் வெள்ளறை என போற்றப்பட்டு *திருவெள்ளறை* என்று ஆனது!
இக்கோயிலில் தை முதல் ஆனி வரை *உத்தராயண வாசல்* வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை *தக்ஷிணாயண வாசல்* வழியாகவும் எம்பெருமானை சேவிக்கலாம்!
சிபி சக்கரவர்த்திக்கு "ஸ்வேத வராகனாக" இவ்வெம்பெருமான் காட்சி அளித்ததால் *ஸ்வேதபுரி நாதன்* என்றும், இத்தலத்திற்கு *ஸ்வேதபுரி* என்றும் பெயர்!
இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய-சந்திரர்கள், ஆதிசேஷன் ஆகியோர் மனித உருவில் வந்து எம்பெருமான் அருகில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு!
"இந்திரனோடு பரமன் ஈசன் இமையவர் எல்லாம்,
மந்திர மாமலர் கொண்டு மறைந்தவராய் வந்து நின்றார்,
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்"
-என்று போற்றுகிறார் பெரியாழ்வார்!
🙏🙏
No photo description available.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...