I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, February 14, 2020
ஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது.
என்னதான் உடலைச் சுத்தமாக வைத்திருந்தால் தொப்புள் பகுதியை சுத்தமாக வைத்திருப்பதில் பெரும்பாலோனர் அலட்சியம் காட்டு கின்றனர். வியர்வை மற்றும் குளியல் சோப்பு மூலமாக தொப்புள் பகுதியில் அழுக்கு சேரும். இந்த தொப்புள் பகுதியை சுத்தமாக வைக்கவில்லை எனில், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும். மேலும் தொப்புள் பகுதயில் சுமார் 65 வகையான பக்டீரியாக்கள் மூல் பல்வேறு நோய் தொற்றுக்களினால் தொப்புள் பகுதியில் புண் மற்றும் சீழ்கட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும்.
ஆகவே நமது தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய, சுத்தமான பஞ்சு சிறிதளவு எடுத்து, சுத்தமான தண்ணீரிலோ அல்லது பேபி ஆயிலிலோ நனைத்து, தொப்புள் பகுதியில் அழுத்தி துடைத்து சுத்தம் செய்த பிறகும், புதிய பஞ்சை உபயோகப்படுத்தி தொப்புளில் உள்ள எண்ணெயை அல்லது ஈரப்பதத்தை நன்றாக, சுத்தமாக துடைத்து விட வேண்டும்.
சிறிதளவு உப்பை எடுத்து மிதமான சூடுதண்ணீரில் போட்டு கரைத்து அதில் சுத்தமான பஞ்சை எடுத்து அதில் நனைத்து, தொப்புள் பகுதி யை நன்றாக துடைத்த பிறகு வேறொரு பஞ்சை எடுத்து தொப்புளில் இருக்கும் ஈரத்தன்மை துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சுத்தம் செய்து வந்தால் உங்களின் தொப்புள் பகுதியில் நோய் தொற்று எதவும் ஏற்படாது. இதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன•
No comments:
Post a Comment