சிவகங்கையில், குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான 3.50 கோடி ரூபாய் டெண்டர் ஏலத்தில், தி.மு.க.,வினர் இடையே தகராறு ஏற்பட்டது.

தி.மு.க., தரப்பினரும் பங்கு பெற்றனர்.டெண்டர் ஏலம் முடிந்து மாலை 4:00 மணிக்கு வெளியே வரும்போது, தி.மு.க., மாவட்ட துணைச் செயலர் சேங்கை மாறன், கோவானுார் பகுதியைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர் சோமன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.சேங்கை மாறன் தரப்பு தாக்கியதில், சோமனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சோமன் தரப்பினர், சேங்கை மாறன் தரப்பினரின் காரை தாக்கினர். போலீசார் வந்ததும், அங்கிருந்து சென்றனர்.சோமன் கூறுகையில், ''என்னை கொல்லும்படி சேங்கை மாறன் தரப்பினர் கூறியதோடு, சேங்கை மாறனும் தாக்கினார்,'' என்றார்.
சேங்கைமாறன் கூறுகையில், ''டெண்டர் முடிந்து, மாலை 3:30 மணிக்கு அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை,'' என்றார்.குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஐனான் கூறுகையில், ''சிவகங்கை, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பில், 33 பணிகளுக்கான டெண்டர் நடந்தது. ''எந்த பிரச்னையும் ஏற்படாமல் டெண்டர் நிறைவு பெற்றது,'' என்றார்.
No comments:
Post a Comment