Saturday, August 7, 2021

விடுங்க சகோ ......... சில்ற பயலுக ......

 இந்திய தேசத்திற்காக, ஒலிம்பிக்ஸில் சாதனை செய்தவனை பாராட்டக்கூட வேண்டாம்.. ஆனால், நீரஜ் சோப்ரா ஒரு சங்கி போல் தெரிகிறது, அந்த ஆள் ஆர்மி ஆசாமி கூட, அதனால் பாராட்ட மாட்டேன், வெறுக்கிறேன் என்கிற அளவிற்கு தெளிவாய் வெறுப்பை உமிழும்.. கொழுப்பெடுத்த குந்தாணிகளால் இந்த தேசத்திற்கு, ஒரு கால் தூசு கூட பிரயோஜனம் கிடையாது. உன்னைப்போன்றவர்களின் எழுத்துக்களை பார்த்தபின்தான்.. கண்டமேனிக்கு, கழற்றி விட்டதை எடுத்து ஒரு சாத்து சாத்த தோன்றுகிறது, முடிகிறது..

ஒவ்வொருவருக்கும் அரசியல் சார்பு இருக்கத்தான் செய்கிறது. இருக்க வேண்டும். அது ஜனநாயகம். அது வேறு. ஆனால் அப்படி சார்பாய் ஒருத்தர் இருந்து இந்த தேசத்திற்கான ஒலிம்பிக்ஸ் சாதனை செய்து பதக்கத்தை வாங்கியதை உன்னால் தாங்க முடியவில்லை, எனும்போது, நீ எழுதும் சகிப்புத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை இதெல்லாமுமே பலவீனமான தர்க்கங்கள் என்று உன்னாலேயே சொல்லப்படுவது கொடுமை... அருகாமையில் உள்ள அரபிக்கடலிலோ, இந்தியப்பெருங்கடலின் நடுவிலே இப்படியானவர்களையும், அவர்களின் எண்ணத்தையும் எழுத்தையும் இறக்கிவிடலாம்... நீரஜ் தொட்ட இப்படியான ஒரு உயரத்தை இவர்களால தொட முடியுமா? அவர்களின் பேட்டையில் விடாமல் குலைக்க மட்டுமே இவர்களால் முடியும்.
இந்த தேசத்திலுள்ள சிலரின் எண்ண ஓட்டங்கள், மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. தங்கம் வெல்ல நினைப்பதுகூட பிராமணீயம் என்கிற அளவிற்கு பைத்தியம் வேறு சிலருக்கு பிடித்தும் விட்டது... இப்படி எழுதுவது பகடியாகவே கூட இருந்தாலும், சிலரின் உண்மை முகமே அப்படித்தான் என்று சொல்லவே இது எழுதப்படுகிறது. அப்படியானவர்கள் இந்த தேசத்திற்கு ஒரு அலுமினிய டம்ளர் வெல்ல லாயக்கில்லாத ஜந்து என்பதை காலங்காலமாய் சந்தேகமின்றி தலைமுறை தலைமுறையாய் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கு விளையாட்டில் ஆர்வமில்லை, அதனால் தங்கம் வென்றதை பற்றி எழதவோ படிக்கவோ தெரியாது என்கிற, எழுத்தாளர் பெருமகன்களுக்கு ஒரு தங்க மெடல் இல்லையென்றாலும், ஒரு தகர கம்பியாவது கொடுத்துத்தொலையுங்கள். டீவி பார்க்கும்போது முதுகாவது சொறிந்து கொள்ளட்டும். இல்லை தினம் மோதியை பற்றி எழுதும் போது உடலின் தூரதேச பாகங்களை, அழுத்தமாய் சொறிந்து கொள்ளவாவது அது உபயோகப்படும்.
தேசமே இப்படியான வெற்றியை கொண்டாடும்போது, நம்ம கண்ணுக்குத்தான்யா இப்படியான எல்லா லூசுங்களும் துடைச்சுவிட்ட மாதிரி தெரிவது கூட நாம் வாங்காமல் வாங்கி வந்த வரம்.
இதையெல்லாம் கண்டுக்காமல் வெற்றியை கொண்டாடுங்கள்...!💪🎊🎊

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...