Thursday, April 18, 2019

விஜயகாந்த்.............

என்ன ஒரு ஆளுமை. ரஜினி, கமல் இருக்கும் போதே தனக்கும் ஒரு மார்க்கெடை உருவாக்கி கொண்டார். சலியாத உழைப்பாளி. தயாரிப்பாளகளின் நம்பிக்கை நட்சத்திரம். யாரையும் ஏமாற்றியதில்லை. அனைவருக்கும் மதிப்பும் மரியாதை கொடுப்பவர்.
நட்புக்கு இலக்கணம். மதம் ஜாதி பார்க்காதவர். இவருடைய கால்ஷீட்க்கு ஏங்காத தயாரிப்பாளரே கிடையாது. நஷ்டம் தராத ஹீரோ.
பல ஹீரோ, வில்லன்களுக்கு அறிமுகம் கொடுத்தவர். விஜய், சூர்யா சரத்குமார் என பட்டியல் நீளும்.
நடிகர் சங்கம் கடனை முன்னின்று அடைந்தவர்.
அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போதே கட்சி ஆரம்பித்து 10 சதவீதம் வாக்கு வாங்கி இருவருக்கும் கிலி உண்டாக்கினார். அவருடன் கூட்டணி வைக்க இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இருந்தனர்.
தைரியமான மனிதர். இவருடைய தேர்தல் அறிக்கையை அனைத்து கட்சிகளும் பயன்படுத்தி கொண்டனர்.
இன்று அவர் வாக்கு செலுத்த வரும் போது பார்க்க மனசு கஷ்டமாக இருந்தது.
என்ன ஒரு ஆளுமை.
மீண்டு வரவேண்டும்...
மீண்டும் வரவேண்டும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...