யோசித்துப் பாருங்கள்.......
ஒன்றரை மாதங்களில் சுமார் 12 ஆயிரம் கோடிகளுக்கு விற்பனையை இழந்த ஆங்கில மருந்து ஃபார்மா நிறுவனங்கள்....!
அத்தனை மருந்துகளை உண்ணாமலும் உயிர் வாழும் மனிதர்கள்....நாம்..
நாளொன்றுக்கு குறைந்தது 10 அறுவை சிகிச்சைகளாவது செய்து வந்த மருத்துவமனைகளில் ஒரு அறுவை சிகிச்சை கூட 2 மாதங்களாக நடக்கவில்லை.
100, 200 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனைகளில் காலியாகக் கிடக்கும் படுக்கை அறைகள்.
மூடிக்கிடக்கும் மருத்துவமனைகள்.
அப்படியென்றால் 12 ஆயிரம் கோடிகளுக்கு மருந்து வாங்காதவர்கள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளாதவர்கள், மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரப்பாதவர்கள்............... பல ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்க வேண்டுமே?
ஆனால், இடுகாடு, சுடுகாடுகளிலும் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனதே.
எங்கே போனார்கள் அத்தனை பேரும் ???
ஆக, 12 ஆயிரம் கோடி ரூபாய்கள் வணிகம் நின்று போனதில் கிழிந்து தொங்குகிறது மருத்துவ வணிக நிறுவனங்களின் முகமூடிகள்.
அடப்பாவிகளா, இதெல்லாம் இல்லாமலே நல்லாதாண்டா நாங்க இருக்கோம்.
அப்போ .. தேவையையும் செயற்கையா உருவாக்கி பொருட்களை சேவைகளையும் உருவாக்கி விற்பதுதான் "நவீன மருத்துவ அறிவியலா" ?!...
மருத்துவர்களை நாம் இப்போதும் நம்புகிறோம்...அவர்களில் பலர் நியாயமானவர்கள். தர்மவான்கள். சந்தேகமில்லை. ஆனாலும் உண்மை நம் கண் முன் தெரிகிறதே...?
எந்த மருத்துவராவது பதில் சொல்வாரா...??

No comments:
Post a Comment