கடந்த காலக் காயங்கள்
கைக்கொள்ளப்பட்ட
எழுதப்படாத
நியாய தருமங்களின்
வழித் தடத்தில்
இன்னமும் இன்னமும்
நெடிது நீள்கின்றன
எனது
பயணச் சறுக்கல்கள்
கையளிக்கப்பட்ட
வாழ்க்கையின் கடினத்தை
எவரிடத்தும் ஒப்புவிக்க
இசையாத நெஞ்சகத்தில்
இறுமாப்பு மட்டுமே
இன்றளவும் கவசத் துணையாக
ஒப்புக் கொடுத்தலுக்கும்
ஒப்புக் கொள்ளுதலுக்குமான
சமன்செய்தலென்பது
விருப்பப் படிநிலைகளின்
கையளிப்பில் மட்டுமே
சாத்தியம்
இருந்தும்...
எனது பயணத்தில்
எனக்கான பாதையின்
நீள அகலங்களின்
வரைவுகளை
தப்பிதமாக
வடிவமைத்துக் கொடுத்தவனிடமே
கரங்களைக் கூப்புகிறேன்
சமன்செய்தலுக்காக....
No comments:
Post a Comment