கண்ணதாசனைக் கொஞ்சுவார்
எம்.எஸ்.விஸ்வநாதன்
கண்ணதாசனோ, எம்.எஸ்.வி.யைக் கெஞ்சி மிஞ்சுவார்.
இருவருக்கும் அப்படியொரு பந்தம்.
கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்களின் பட்டியல் நீண்டுவிடும் என்பார்கள்.
நம்மையும் பாடம் படிக்க வைத்துவிடுவார்.
விஜயகுமாரியின் எதிர்காலம் நன்றாக வேண்டும், சிவாஜி நினைத்தது நடக்கவேண்டும் எனும் பிரார்த்தனை நமக்குள்ளே ஓடும்.
டி.எம்.எஸ்.சையும் பிபிஸ்ரீநிவாஸையும் சேர்ந்து பாட வைக்கும் போது, ரொம்பவே குஷியாகிவிடுவார் எம்.எஸ்.வி.
பி.பி.எஸ். தனியே பாடுகிறார் என்றால் ஒரு விசில் சத்தத்தை துணைக்கு அனுப்பிவிடுவார்.
அந்த ‘ஹம்’தான் பாடலுக்கு இன்னும் ஜீவனைக் கொடுத்து, நம் தூக்கத்தையெல்லாம் விரட்டிவிடும். துக்கத்தையும்தான்!
பாடலை டி.எம்.எஸ். பாட,
நடுநடுவே எல்.ஆர்.ஈஸ்வரியை விட்டு, ஓர் ஹம்மிங் இசைத்திருப்பார்.
அது நம்மை கட்டிப்போட்டுவிடும்.
வண்ண மலர்க் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ
சித்திரப் பூம் பாவை தன்னை
அதுதான் மெல்லிசை மன்னர்; அதனால்தான் மெல்லிசை மன்னர்
இந்தக் கால பாஷையில்... கெமிஸ்ட்ரி!
எம்.எஸ்.வி.யின் பாடல்கள் தனித்துவமும் மகத்துவமும் வாய்ந்தவை. அதுவும் வாத்தியக் கருவிகள் குறைவாக வைத்துக்கொண்டுதான்சாதனை
செய்தவர்.

No comments:
Post a Comment