சினிமா நடிகர் திரு சூர்யா என்னும்
சரவணன் அவர்களே..
நீங்கள் மனிதத்தை கற்றுத்தர
மதத்தை கடக்கவேண்டிய
அவசியமே இல்லை..
மதத்திற்குள் இருந்துகொண்டே
மனிதத்தை வளர்க்க முடியும்!
அன்னை தெரசா
சமூக தொண்டாற்றிய போது
தன் மதத்தை
விட்டுக்கொடுக்கவில்லை..
எந்த மிசினெரிகளும்
கல்வி கற்றுத்தரும் போதும்
தங்கள் மத சேவையை
விட்டுவிடவில்லை..
உலகில் உள்ள அனைவரையும்
தன் உடன் பிறந்தவர் எனக்கூறி
மனிதத்தை வளர்த்த
சுவாமி விவேகானந்தர்
தான் இந்து என்பதில்
பெருமைப்பட்டார்..
இந்து மதத்தில் உள்ள
உங்களைப்போன்றவர்களுக்கு
மட்டும் மனிதத்தை கற்க
மதம் இடையூறாக இருப்பது ஏன்?
ஏன் மதசார்பற்ற வேசம்
போட வேண்டும்?
தான் பிறந்து வளர்ந்து
கடைபிடித்த மதத்தை
தைரியமாக சொல்வதற்கு
தயங்கும் உங்களைப்போன்ற
மதமில்லாத வேசம் போடுபவர்கள்
தான் உண்மையான காரியவாதிகள்!!

No comments:
Post a Comment