Wednesday, January 8, 2020

*நிகழ்காலம் தான் முக்கியம்*

பக்தி ஒருபோதும் நம்மைக் கைவிடுவதுஇல்லை. இறைவன் மீது ஆழமான நம்பிக்கை வைக்கும் போது தான் மனம் வலிமை பெறுகிறது.
துன்பம் நேருமானால் இறைவன் அளித்த வரமாகக் கருது. அது அப்படியே வரமாக மாறிவிடும்.
இறையருள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நேர்மையுடன் இருக்கும்போதே நம்மால் அதை உணர முடியும்.
கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனையும் செய்யாதே. நிகழ்காலம் ஒன்றே முக்கியமானது.
விழிப்புடன் இருந்தால் காலம் சிறிதும் விரயமாவதுஇல்லை. ஆண்டுக்கணக்காகச் செய்யும் பணியைக் கூட மாதக்கணக்கில் செய்து விட முடியும். விழிப்புடன் இருப்பவன் குறிக்கோளை நோக்கி விரைவாக முன்னேறுகிறான்.
இறைபக்தியும், நம்பிக்கையும் மட்டும் தான் உனக்குக் கிடைக்கும் உண்மையான உதவி. அது தான் உண்மையான மகிழ்ச்சியும் கூட.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...