
பெருமாள்
திருச்சிக்கு அருகே திருவெள்ளரை என்ற வைணவத் தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், செந்தாமரைக் கண்ணன் என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். ஒரு முறை மகாலட்சுமி, திருப்பாற்கடலில் சயனத்தில் இருந்த ஸ்ரீமன் நாராயணனிடம் பணிவோடு வேண்டினாள். “பூவுலகில் உள்ள அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள திருக்கோவில்கள் அனைத்திலும், பெருமாளுக்கே முக்கியத்துவம் உள்ளது. எனக்கு அப்படிப்பட்ட பாக்கியம் இல்லையே” என்றாள்.
தாயாரின் மனக்குறையை உணர்ந்த பெருமாள், திருவெள்ளரை தலத்தில் செங்கமலவல்லி தாயாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வரமருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் தாயாருக்குத்தான் முன்னுரிமை. வீதி உலாவில் கூட, தாயார் முன் செல்ல, பின்னால்தான் பெருமாள் தொடர்ந்து செல்வார்.
தாயாரின் மனக்குறையை உணர்ந்த பெருமாள், திருவெள்ளரை தலத்தில் செங்கமலவல்லி தாயாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வரமருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் தாயாருக்குத்தான் முன்னுரிமை. வீதி உலாவில் கூட, தாயார் முன் செல்ல, பின்னால்தான் பெருமாள் தொடர்ந்து செல்வார்.
No comments:
Post a Comment