முதலில் இந்த ரத்னாங்கியை வழங்கியது யார் என்று அறிந்து கொள்வோம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனுக்கு சாற்ற பெறும் ரத்னாங்கி ராணி மங்கமாளின் காலத்தில் வழங்க பெற்ற அறிய ஆபரணம் முழுவதும் ரத்தினங்களாள் ஏற்படுத்த பெற்ற அங்கி 1900 ங்களில் சற்று மலினம் ஏற்பட்ட படியால் பாகவதர்களாள் திருத்தி செப்பனிடப்பட்டது.
அறிவோம் அறிய விடயத்தை, அரங்கம் என்பதற்கு ஏற்றார் போல் திருவரங்கத்தில் இந்த இரா பத்து, பத்து நாட்களும் அரங்கன் ஒரு நாடகத்தினை தினம் நடிக்கின்றான்.புறப்பாடு முதலே அந்த நாடகத்தை காண்போம் அரங்கன் மூலஸ்தானத்திலுந்து கிளம்பும் பொழுது சாதார போர்வை அணிந்து (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக ) இரு கரங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் எழுந்தருளுவார்
பின்னர் மேல படியில் மரியாதையாகி உத்தமநம்பி அவர்களுக்கு பரிவட்டம் வழங்க பெற்று. இந்த நாடகத்தை நடத்திவைக்க பணிப்பார் ஸ்தானிகர் .
அதன் பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு மரியாதைகள் வழங்கிய பின்பு நாழி கேட்டான் வாயிலை அடைவார் ,
அதன் பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு மரியாதைகள் வழங்கிய பின்பு நாழி கேட்டான் வாயிலை அடைவார் ,
அது என்ன நாழி ? கேட்டான் ? அந்த கதவுகளின் அருகில் வந்தவுடன் சரியான நேரம் தானா என்று கேட்க படும் நாழி பண்டைய காலங்களில் நாழி என்னாச்சு னு நம்மிடையே கேட்கும் வழக்கமும் இருந்தது. நேரத்தை நாழி என்று குறிப்பிடுவோம் நாழிக்கு 24 நிமிடம் என்பது இன்னும் சரியான ஒன்று , அங்கு நாழிகேட்கப்படுவதின் ரகஸ்யம் அரங்கன் புறப்படாகிய பொழுதே சாற்றியிருந்த போர்வைக்கு அர்த்தம். தான் ஒரு ஜீவாத்மாவை போல் இரு கரங்களை தெரிய புறப்பட்டது . அந்த ஜீவாத்மா தான் கிளம்ப வேண்டிய நேரத்தினை அறிந்து புறப்படுகின்றது .
ஒரு ஆத்மாவின் ஜீவதசைக்கு பின்பு 2 வகையான பாதைகளிலில் பயணிக்கும் ஒன்று முக்திக்கு செல்ல கூடிய பாதை இன்னொன்று எம தர்மலோகமாம் எம பட்டினம் செல்லும் பாதை , முக்திக்கு செல்லும் பாதையினை #அர்ச்சிராதி மார்க்கம் என்று கூறுவார் .இனொன்றை துமாதி மார்க்கம் என்பார்கள் இப்பொழுது அரங்கன் அர்ச்சிராதி மார்கத்தினை தான் காட்ட போகின்றான் நாழி கேட்டனை அடைந்த பிறகு அரங்கன் துறை பிரகாரம் என்னும் பிரகாரம் கடப்பான் அந்த பிரகாரம் மட்டும் சற்றே மாறுபட்டது நடுவினில் முழுதும் தொடர்ச்சியான மண்டபம் இருமருங்கும் வெற்றிடம் ஏன் இப்படி என்றால் அந்த மண்டபத்திற்கு வெளிச்சம் என்றிட என்பீர்கள். ஆம் அற்சிரதி மார்கத்தினை அடையும் ஜீவன் முதலில் விதியுத் அதாவது மின்னல் உலகம் பின்பு சூர்ய லோகம் சந்திரா லோகம் என ஒளிபொருந்திய லோகங்களை கடந்தே செல்லும் அதற்க்கு தான் இந்த மண்டபம் வரிசை கட்டுஇருக்க வேண்டும் என்பது என் அனுமானம்
பின்பு விராஜா மண்டபம் அடைவார் அரங்கன் அங்கு வேத பாராயண கோஷ்டி முதலியன நடை பெறும் ஏன் அங்கு? இந்த ஜீவன் விரஜை என்னும் பேரெழில் ஆற்றை அடையும் அதுவே வைகுண்டத்தின் கரை அந்த ஆற்றை அடைந்த பிறகு அங்கு வேத கோஷங்கள் முழக்க தேவ மங்கையர்கள் நம்மை நீராடிடுவார்கள் நம்ம மரியாதையை செய்வார்கள் இது வரை அந்த ஜீவனுக்கு சூக்ஷும சரீரமே இருக்கும் .
கடைசியாக விரஜையில் அந்த ஜீவன் முழ்கி எழுந்த உடன் அந்த ஜீவன் நான்கு காரமும் கஸ்தூரி திருமண் காப்போடு துலங்கும் அந்த மேனியினை வார்த்தையால் வர்ணிக்க ஒண்ணா ஒளிபொருந்திய மேனியாய் துலங்கும் வைகுண்ட ஏகாதசி நீங்கலாக மற்றைய நாட்களில் வைகுண்ட வாசல் அருகில் வந்த உடன் அரங்கனின் போர்வை கலையப்பெற்று கஸ்தூரி திருமண் காப்பு சாற்ற பெற்று நான்கு காரத்துடன் அவர் உயர்த்தி காண்பிக்க படுவார் பின் அந்தமில் பேரின்ப நாடாம் வைகுண்டம் அடைவார்
அதனால் தான் அந்த பேரெழில் ஒளி பொருந்திய மேனியினை காட்ட அரங்கனுக்கு ரத்னஅங்கி சாற்ற பெறுகின்றது .விவரிக்க ஒண்ணா காந்தியினை கூறவே உலகில் கிடைக்கும் இயற்கையான ஒளி பொருந்திய கற்களால் ஆனா அங்கி
#வைகுண்டதாமம் 1000 கால்களையுடைய மண்டபத்தின் நடுவே திருமாமணிமண்டபத்தில் இறைவர் எழுந்தருளி இருப்பார் அந்த இறைவனோடு என்றும் ஆனந்த பரவசத்தில் இந்த ஆத்மா திளைப்பதை தாம் நாம் அரங்கன் பரமபத வாசல் கடந்து ஆயிரம் கால் மண்டபமான லீலா விபூதி அதாவது இந்த அவன் தற்காலிகமாக ஏற்பட்டுத்திருக்கும் இந்த வைகுண்டம் அடைகிறார்
இப்படி இந்த ஜீவனின் வழியை தானே நடித்து அதன் தன்மையினை அணிந்து காட்டுகின்றார். இந்த ஒரு அறிய நாடகம் அறிந்து நாம் இந்த சர்வ முக்கோடி வைகுண்ட ஏகாதசி திருநாளை அனுபவிப்போம் - அரங்கனின் அருள் பெறுவோம் 🙏
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள்.
No comments:
Post a Comment