Wednesday, May 12, 2021

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் .

 #மகாபாரதம்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் :
________________________________________________
மோகத்தில்
வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய்
வீழ்ந்திடுவாய்!
சத்தியம்
செய்துவிட்டால்
சங்கடத்தில்
மாட்டிடுவாய்
முற்பகல்
செய்யின்
பிற்பகல்
விளையும்.
வஞ்சனை
நெஞ்சில்
கொண்டால்
வாழ்வனைத்தும்
வீணாகும்.
ஒவ்வொரு
வினைக்கும்
எதிர்வினை
உண்டு.
குரோதம்
கொண்டால்,
விரோதம்
பிறக்கும்.
பெற்றோர்கள்
செய்யும்
பாவங்கள்,
பிள்ளைகளை
பாதிக்கும்.
பேராசை
உண்டாக்கும்,
பெரும்
அழிவினையே.
கூடா நட்பு,
கேடாய்
முடியும்.
சொல்லும்
வார்த்தை,
கொல்லும்
ஓர்நாள் .
தலைக்கணம்
கொண்டால்,
தர்மமும்
தோற்கும்.
பலம் மட்டுமே,
பலன் தராது .
இருப்பவர்
இருந்தால்,
கிடைப்பதெல்லாம்
வெற்றியே.
சாஸ்திரம்
அறிந்தாலும்,
சமயத்தில்
உதவாது.
விவேகமில்லா
வேகம்,
வெற்றியை
ஈட்டாது.
அண்ணனாலும்
அரசனாலும்
நீதி தவறாத
தவமும்
அவமாய் போன
பிறருக்கு வழிகாட்டி
தன் மகனின்
தரம் உயர்த்தா
சிரஞ்சீவி
வரம் பெற்றும்
சின்னாபின்னமான
நிதர்சனம்
உணர்ந்தவன்,
நெஞ்சம்
கலங்கிடான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...