Wednesday, February 12, 2020

`லஞ்சம் வாங்கிக் கைதான காவல் ஆய்வாளர்!' -சூடமேற்றி தேங்காய் உடைத்த சமூக ஆர்வலர்.

  • அடிதடி வழக்கிலிருந்து பெண்ணை விடுவிக்க 5,000 லஞ்சம் வாங்கிய பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
  • ஏற்கெனவே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய நிலையில் மேலும் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் ஆய்வாளர் மீது புகார் அளித்ததன் காரணமாக இந்தக் கைது நடந்தேறியுள்ளது.
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ளது பார்த்திபனூர். இங்குள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜராஜன்.
  • `அடாவடி அதிகாரி' எனப் பெயர்பெற்ற இவர் கூலித் தொழிலாளிகள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டிக்காரர்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் மாமூல் வாங்குவதையே வழக்கமாகக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
  • இந்த நிலையில், பார்த்திபனூர் இடையத்தூர் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பூமிநாதனின் மனைவி ஹேமலதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த ஜனவரி 20-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இதுதொடர்பாக பார்த்திபனூர் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.
  • இந்த வழக்கிலிருந்து ஒரு பெண்ணை விடுவிப்பதற்காக காவல் ஆய்வாளர் ராஜராஜன் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
  • அந்தப் பெண் ரூ.5,000 லஞ்சமாகக் கொடுத்திருந்த நிலையில், மீதிப் பணத்தையும் கேட்டு நச்சரித்துள்ளார்.
  • இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் (தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார்) பிரத்யேகமாக மாவட்ட பொதுமக்களுக்கு அளித்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
  • போலீஸார் கொடுத்த ஆலோசனையின்படி, பார்த்திபனூர் ஆய்வாளர் ராஜராஜன் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் தங்கவேலு என்பவர் புகாரளித்தார்.
  • ஆய்வாளர் ராஜராஜனைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனப் பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ஜனவரி 30-ம் தேதி காலை தங்கவேலுவிடம் கொடுத்து, ராஜராஜனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
  • ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ராஜராஜன் பெற்றுக் கொண்டவுடன், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், சந்திரன் ஆகியோர் காவல் ஆய்வாளர் ராஜராஜனைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
  • இதையடுத்து, ஆய்வாளர் ராஜராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினரால் ராஜராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஆர்வலரான செல்வராஜ், பார்த்திபனூர் காவல் நிலையம் முன்பாக சூடமேற்றி தேங்காய் உடைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...