Monday, May 17, 2021

நம் கண் முன்னே மக்கள் பணம் இது போல அநியாயமாக கொள்ளை போவதை பார்த்துக்கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும்?

 தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்பதற்கு 2 நாட்கள் முன்னதாக ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு வாங்குவதில் #80கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்ற மூன்று நிறுவனங்களும் கிறிஸ்டி நிறுவனங்களுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு வைத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெண்டரில் பங்கேற்ற மூவரும் சந்தை விலையை விட மிக அதிகமாக டெண்டர் கோரியுள்ளார்கள்.

இந்த கொள்ளையில் உடந்தையாக இருந்த முன்னாள் உணவுத்துறை இயக்குனர் சுதா தேவி பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார். இந்த கொள்ளையை அரங்கேற்றும் கிறிஸ்டி நிறுவனம் இன்னும் Black List செய்யப்படாமல் ரேஷன் கடைகளுக்கான கொள்முதலை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஊழல் குறித்த விளக்க வீடியோ:
Corona நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசாங்கம் முழு கவனத்தையும் செலுத்தினாலும், நம் கண் முன்னே மக்கள் பணம் இது போல அநியாயமாக கொள்ளை போவதை பார்த்துக்கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும்? தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மக்கள் பணம் கொள்ளை போவதை தடுக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
May be an image of 2 people and text that says 'ரேஷின் துவரம் பருப்பு ஊழல்: சந்தை விலை: கிலோ 100 அரசு வாங்கும் விலை: கிலோ 143.50 ரூபாய். ரூபாய் ÛPehnh 33AENPR5650Q1ZP API அறப்போர் இயக்கம் 98414 02508 Thunai BILL SRI PERIYANDAVAR DHALL MILL CHENNAI D.__ d081 BillNo. 6361 goods soldto Bil Comperative Statement TNCSC//21-22/ET/1 2021-04-27 9:00:00.0 Price Party'sGSTN 021-05-0511:00:00.0 TURDAL uskeda 28:15.2 PARTICULARS KENDRIYA BHANDAR recification Quantity 1.0MT S00ol taxes AMOUNT RasiNutriFoods NACOF 20,000.00 20,000.00 5000, Canadian Yellow usked& Rs.100/Kg Kg Rs.100 agmark Ton(inclusiveall KENDRIYA BHANDAR RasiNutrFoods Rs. 143.5 Kg 140,900.00 142,000.00 NACOF 20,000.00 14,090,000.00 139,500.00 14,200,000.00 13,950,000.0 BestDea* கிறிஸ்டி நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு பெற்று அதிக விலைக்கு டெண்டர் எடுக்க செட்டிங் செய்து ஊழல்!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...