Saturday, May 7, 2022

கோடைகாலத்திற்கு ஏற்றரெடிமேட் ஆர்கானிக் வாட்டர்"

 RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம், தண்ணீரில் உள்ள நமது உடலுக்குத் தேவையான தாது பொருட்களை வெளியேற்றிவிட்டு எந்த ஒரு சத்துக்களுமே இல்லாத, ஒரு கடுகுவிதைகூட முளைத்து வேர்விட்டு வளர்வதற்கு உதவாத உயிரற்ற நீரை பாட்டில், பாக்கெட், கேன் போன்றவற்றில் அடைத்து அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் "பாதுகாக்கப்பட்ட குடிநீர்" என்று விளம்பரபடுத்தி விற்பனை செய்கிறது.

எனவே இதனை தவிர்த்து நமது வீட்டில் உள்ள நிலத்தடி நீரை நல்ல உயிரோட்டமுள்ள குடிநீராக மாற்றி பயன்படுத்துவோம்.
*வெட்டிவேர் - இரண்டு கைப்பிடி,
*தேற்றான் கொட்டை - 10,
*நன்னாரி வேர் - இரண்டு கைப்பிடி,
நறுக்கிய *தர்பை புல்- இரண்டு கைப்பிடி. இவைகளை பருத்தி துணியில் சம அளவில் இரண்டு மூட்டைகளாக கட்டி இரண்டு மண்பானைகளில் அல்லது செம்பு பாத்திரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி பயன்படுத்துவதற்கு ஏதுவாக 20லி தண்ணீரில் போட்டு ஒரு நாள் ஊற வைத்து பயன்படுத்தவும்.
நீர் கடுப்பு, சிறுநீர்தாரை எரிச்சல், அழற்சி,
அதிக தாகம், உடலில் அரிப்பு நீக்கிஉடல் சூட்டை தணிக்கும்,சளியை குணப்படுத்தும், நாவறட்சி குணமாகும்,வயிறு சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும், வாந்தி பேதி காய்ச்சல் நீங்கி
உடல் எரிச்சலை குணமாக்கும்
இரத்தத்தை சுத்தப்படுத்தும்,
சிறுநீரை பெருக்கி கழிவுகளை வெளியேற்றும்,
தோல் நோய் குணமாகும், மூட்டுவலி குறையும்,
இளநரை, இருமல் போக்கும்,பித்தம் குறையும்,
ஆண்மை அதிகரிக்கும்,பாரிச வாயு குணமாகும்.
உப்பு நீரை தாதுக்கள் நிறைந்த நல்ல நீராக மாற்றுகிறது, தேறாத உடலையும் தேற்றி
சிறுநீரகத்தை பலப்படுத்தும், சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். நீரழிவை கட்டுக்குள் வைக்கும், கண்களுக்கு நல்லது, அதிக சூட்டை தணிக்கும், மேக வெட்டையை குணமாகும்.
உடலில் உள்ள தோஷங்கள் நீங்கும், எதிர்மறை ஆற்றல் அல்லது கதிர்வீச்சுகளும் தாக்காது, நோய் தொற்று ஏற்படாது, நீரழிவு நோயின் தாக்கம் குறையும், கல்லீரல், சிறுநீரகம் பலப்படும், வயிற்றுபுண்கள், வாய்புண்கள் ஆறும்,
மன உளைச்சல் நீங்கும், நல்ல உறக்கம் வரும்,
சிறுநீரக கற்கள் உருவாகாது, ரத்தத்தில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றும், வாத பித்த கபத்தை சீராக்கும் இந்த ஆற்றல் மிகுந்த
RO ரெடிமேட் ஆர்கானிக் வாட்டர்.
May be an image of indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...