இந்தியாவில் நெருக்கடி நிலை. 1971 ல் உத்திரப்பிரதேச ரெபரேலி தொகுதியில் இந்திராகாந்தி போட்டியிட்டார். எதிர்த்து போட்டியிட்டவர் ராஜ்நாராயணன் .இந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்திராகாந்தி வெற்றி பெற்றார். இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று அலகபாத் உயர்நீதிமன்றம் முன்பாக ராஜ்நாராயணன் வழக்கு தொடர்ந்தார். இந்திராகாந்தியின் தனி செயலாளர் யஷ்பால் கபூர் தேர்தல் முகவராக தொகுதிக்கு நியமித்தார்கள். அரசு ஊதியம் பெறும் தனிச்செயலர் தேர்தல் பணிகளில் செயல்பட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 தடை விதித்து உள்ளது. ஆதாரங்கள் அடிப்படையில் அலகபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக் மோகன்லால் சின்ஹா இந்திராகாந்தி வெற்றி செல்லாது என்பதுடன் ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்க இயலாது என்று தீர்ப்பளித்தது. இதுவே அவசரநிலை பிறப்பிக்க காரணம். அவசரநிலை சட்டத்திற்கு கையெழுத்திட்ட ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது .இந்தியாவில் இரண்டு சக்தி வாய்ந்த பெண்மணிகள் அரசியல் வாழ்வில் இரண்டு தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று இந்திராகாந்தி இரண்டாவது ஜெயலலிதா. ஒரு நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா ஒரு நீதிபதி மைக்கேல் டி ஜான் குன்ஹா.

No comments:
Post a Comment