Tuesday, September 27, 2022

இழிந்தோர் சிலரால் இடிபட்ட யம் வரலாற்றை தட்டி எடுப்போம்..!

 உள்ளாட்சியில்

இடஒதுக்கீடு
திராவிட மாடல்
கொடுத்ததாம்…
ஆத்துகிறார்
பொன்முடி…
அளந்து
விடுகிறார்
டை அடித்த
வெண்முடி…!
எங்கப்பன்
அம்பேத்கர்
தொண்ணூறு
ஆண்டுகட்கு
முன்
தொண்டை
கிழிய
வெள்ளைக்காரனிடம்
சண்டையிட்டு
வாங்கி
வந்ததடா
இந்த
இட ஒதுக்கீடு…!
உங்கப்பன்
வாங்கித்
தந்தது
போல்
வசனம்
பேசுகிறாயே..?
உனக்கு
சவுத் போரா
கமிட்டி தெரியுமா?
சைமன்
கமிஷன் தெரியுமா?
காந்தியின்
கொட்டமடக்கிய
வட்ட மேசை
மாநாடு தெரியுமா?
அட
அதை
விடு,
இந்திய அரசியல்
அமைப்பை
எழுதியதாவது
யாரெனத்
தெரியுமா..?
எங்கப்பன்
பாபாசாகேப்
பட்டியல்
மக்களுக்கும்
பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கும்
கோட்டா
உறுதி
செய்த போது
உங்கள்
அண்ணாதுரையார்
டீசலுக்கு
காசில்லாமல்
கடன் வைத்து
கட்சி நடத்திக்
கொண்டிருந்தார்…!
பெரியாருக்கு
முன்பே
திராவிடமெனும்
பெயரில்
கழகம்
நடத்தியவன்
எம் பாட்டன்
அயோத்திதாசன்…!
தமிழ்
பேசியவனுக்கு
தமிழன்
எனும்
முதற்பெயர்
கற்பித்தவனும்
அவனே…!
சுதந்திரம்
அடைந்தால்
ஆதித்தமிழனிடமே
அதிகாரமனைத்தும்
தர
வேண்டுமென
வெள்ளையனை
ஆணையிடச்
சொன்னவனும்
அவனே..!
உம்
தலைவன்
பராசக்திக்கு
கதை வசனம்
எழுதிக்
கொண்டிருக்கையில்
எம் தலைவன்
ஆங்கே
பாராளுமன்றத்தில்
எமக்கான
மக்கள் மன்ற
இடங்களை
உறுதி
செய்து
விட்டிருந்தான்.
யாருக்கு
யாரடா
தந்தது
இட ஒதுக்கீடு…!
விடுதலை
குடியரசுக்கு
முன்பே
சூரியோதயம்
இதழ்
நடத்தி
புகழ்
அடைந்த
அறிவுப்
பரம்பரை
எம்
ஆதிப்
பரம்பரை…!
சங்கர
மடத்திற்குக்
கூட
சேரிக்காரன்
பீடாதிபதியாக
வரமுடியும்.
ஆனால்
அறிவாலயத்தில்
ஒரு
ஆ.இராசா
வர
முடியுமா..?
தனித்
தொகுதியில்
தலித்தை
நிற்க
வைப்பதையே
சாதனையென்றால்
நீ என்ன
கீழ்பாக்கம்
ஆஸ்பத்திரி
மெண்டலா..?
இது
இப்படியே
சென்றால்
ஆக்கிடுவோம்
திராவிடத்தை
கந்தல்
கந்தலா…!
எழுபத்தி
எட்டு
மாவட்டச்
செயலர்
பட்டியலில்
ஒருவன்
மட்டுமே
பட்டியல்
சமூகமாம்…!
அட
அதுவாவது
பரவாயில்லை.
அந்த
ஒன்றியச்
செயலர்
பதவியில்
ஒருவனும்
சேரிக்காரன்
இல்லையாம்…!
ஆதிக்க
சமூகங்களுக்கு
மட்டும்
அமைச்சர்
பதவிகளை
அள்ளிக்
கொடுக்கும்
திராவிடம்
தலித்தென்று
வந்தால் மட்டும்
தர்மமே
இல்லாமல்
இரண்டு
மூன்று
என
கிள்ளிக்
கொடுக்கிறது..!
விகிதாச்சாரப் படி
ஏழு
இடங்கள்
தர
வேண்டுமென்றால்
அது
ஏழேழு
ஜென்மத்திலும்
நடக்காது
என்கிறது
அந்த
திராவிடம்…!
அதிலும்
ஆதிதிராவிடர் நலத்துறை
சுற்றுலாத் துறை
தொழிலாளர் துறை
என
ஒதுக்கப்பட்டுக்
கிடக்கிற
துறைகள் தான்
இந்த
ஒதுக்கப்பட்டுக்
கிடக்கிற
மக்களுக்காம்…!
துரைமார்களுக்கு
கொடுக்கின்ற
பொதுப்பணியும்
நிதியும்
கல்வியும்
மின்சாரமும்
உள்ளாட்சி
நிர்வாகமும்
எங்கே
என்றால்
உடனே
நாங்கள் தான்
தலித்துகளுக்கு
உள்ளாடை
மாட்டி
விட்டோம்
உப்புக் கருவாடு
சோறு போட்டோம்
எனச்
சொல்லி
சீட்டுக் கம்பெனி
வீரமணிக்களை
வைத்து
அறிக்கை
தருகிறது
அம்புலி
மாமாக்களின்
திராவிடம்..!
மனுவாத
பிஜேபி
கூட
ஒரு
முருகனை
இராஜ்யசபாவுக்கு
அனுப்பி
மந்திரியாக்கி
விட்டிருக்கிறது.
ஆனால்
இட ஒதுக்கீடு
இல்லாத
இராஜ்யசாபில்
தலித்துக்கு
கோட்டா
கேட்டால்
வெளியே
தள்ளி
கேட்டை
சாத்துகிறது
கோபாலபுரம்..!
உங்கள்
சாதி
வெறி
அரசியலே
அண்ணா
காலந்தொட்டு
அங்கிங்கெணாதபடி
சந்தி
சிரிக்கையில்
நீங்கள்
எங்களுக்கு
தருகிறீர்களா
இட
ஒதுக்கீடு…?
முழுதும்
நனைந்த பின்
இனி
எமக்கெதற்கடா
திராவிடம்
தரும்
முக்காடு..?
ஆரியத்திற்கு
திராவிடமே
தீர்வு
எனும்
ஏட்டுச்
சுரைக்காயை
எட்டி
உதைப்போம்…!
இழிந்தோர்
சிலரால்
இடிபட்ட
யம் வரலாற்றை
தட்டி
எடுப்போம்..!
திராவிட மாடலுக்கு
அம்பேத்கர் மாடலே
அபயம்
என்பதை
அறுதியிட் டுரைப்போம்!
ஒழிக திராவிட மாயை!
ஒழிக திராவிட மாயை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...