உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது, அதிலிருந்து ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு, டீ யை குடித்து விட்டு, எதேச்சையாய் கவனிக்கிறேன், அந்த வெல்ல உருண்டையின் மேல் அவ்வளவு எறும்புகள்...!!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, August 10, 2022
*நாம் - தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்.*
இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கை தான் என்று எடுத்துக் கொண்டாலும்...
அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும், சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம். அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டு இருந்த இடம்.
இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம், வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்தது., என்பது ஆச்சர்யமான ஒன்று..!
யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!!
இங்கு தான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.
*எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை... உணவும் எறும்பை தேடியிருக்கிறது..!*
தோற்றத்தில் இவற்றுள் ஒன்று ஜீவனாகவும்,
மற்றொன்று பொருளாக இருந்தாலும், இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும்.
அந்த *புள்ளியிலிருந்து எழுந்த அலையே ஒன்றையொன்று ஈர்த்திருக்கின்றன.*
*நீ எதைத் தேடுகிறாயோ, அதுவும் உன்னைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறது.*
என்று ஞானியர்கள் கூறுவது எவ்வளவு பேருண்மை..!!!
இதை படிக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் நிச்சயமாக இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படும்...
எறும்பு தேடியது விரைவாக கிடைத்து விடுகிறது, நாமும் தேடுகிறோம், ஆனால், நமக்கு அப்படி கிடைப்பதில்லையே...அல்லது காலதாமதமாகிறதே...?!
ஒரே ஒரு வித்தியாசம் தான்...
*எறும்பு - தனது தேவைக்கு மட்டுமே தேடுகிறது...*
*நாம் - தேவைக்கும் மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்.*
நமக்குத் தேவையானது ஆல்ரெடி நம்மிடம் இருக்கிறது, அல்லது தேவைப்படும் நேரத்தில் அது கிடைத்து வருகிறது.
நமது முயற்சிகள் மேற்கொண்டு தேடுவதிலேயே இருப்பதால், தேவைக்கு நம்மிடம் உள்ள இருப்பு, நம் கவனத்திற்கு வருவதில்லை...!
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment