I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, January 30, 2012
Thursday, January 12, 2012
நாம் வாங்கியப் பொருள் சரியானதா,
எதனை பார்த்தாலும் எல்லாத்திலும் கலப்படம் தான் . இப்பிடியே போனால் நிலைமை என்னாவது ? அதுவும் கலப்படம் கலந்து இருப்பதை சில பொருட்களை பார்த்தால் கூட கண்டு பிடிக்க முடியாது . அவ்வளவுக்கு கலப்படம் கலந்ததே தெரிவதில்லை .
நான் யோசிப்பதுண்டு . இதென்னடா முன்னம் வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் எண்பது, எழுபது , நூறு வயது வரை இருந்தார்கள் . நோய் நொடி இன்றி இருந்தார்கள் .. இப்போது பார்த்தால் சிறு வயதிலேயே ஒவ்வொரு வருத்தங்கள் வந்து இறந்து போகிறார்கள் . வயிறில் கல்லு , கிட்னி பழுதாகி விட்டுது , இரத்த அடைப்பு என சொல்லி கொண்டே போகலாம் . இப்போது பார்த்தால் இந்த பொருட்களுக்கு சேர்க்கப்படும் கலப்படம் தான் காரணம் . அவர்களுக்கு ஒவ்வொரு வருத்தங்கள் வர காரணம் . நச்சு தன்மை கொண்டமைந்து , உடலுக்கு தீங்கு பயக்கும் பொருட்களை கலக்கின்றார்கள் . அதனால் தான் இந்த நிலைமை .
முன்னைய கால மனிதர் பச்சை பசெலேன்று நல்ல மரக்கறிகள் , பழங்கள், மீன்கள் என அன்றாட தேவைக்கு வாங்கி அன்றாடம் சாப்பிட்டார்கள் . பழங்கள் எல்லாம் மரத்தில் பழுக்கும் வரை பிடுங்காமல் பழம் நிலத்தில் விழும் வரை காத்து இருந்து உடனே உண்பார்களாம் . அதில் நல்ல ருசி இருக்கும் . பழம் கனிந்து நான்றாக தானே இருக்கும் .
ஆனால் இப்போது அப்படியா நிலைமை ?
இல்லையே . மரத்தில் மாங்காய்களை காயுடன் வாங்கி அவற்றுக்கு உடனே பழுக்க கூடியவாறு மருந்துகளை அடித்து மாங்காய்களை பழுக்க வைக்கிறார்கள் . முன்னம் எல்லாம் மாங்காய்களை பழுக்க வைக்க வைக்கோலுக்குள் தாட்டு வைப்பார்கள் . இப்போது எல்லாம் அப்பிடி வைத்தா பழுக்க வைக்கிறார்கள் .
மீன்களுக்கு எல்லாம் பல மருந்துகளை அடித்து நாறாமல் வைத்து அடுத்தநாளைக்கு விக்கிறார்கள் . பார்த்தால் புது மீன் போல் இருக்கும் . வீட்டில் கொண்டு வந்து வெட்டினால் நாறும் . அப்படி இப்படி எல்லாம் ஒன்றா , இரண்டா . சொல்லிக்கொண்டே போகலாம் இந்த கலப்படம் எவ்வளவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது என்று ........
தேனுக்குள் சர்க்கரை பாணியை கலக்கிறார்கள் , அரிசிக்குள் சிறு கற்கள் மற்றும் சில கூடாமல் போன அரிசி குறினிகள் எனவும் உப்புக்குள் சின்ன வெள்ளை கற்கள் , புளிக்குள் தண்ணீரை கலந்து பிசைவது என எல்லாமே கலப்படம் தான்.
மஞ்சள் தூளுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்… இது எப்பவாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும். இந்த மஞ்சள் தூளில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது .முழு மஞ்சளைவிட, மஞ்சள் தூள் தான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.
ஆனால் பலரும் கவனிக்காத விஷயம், நாம் வாங்கியப் பொருள் சரியானதா, தரமானதா, கலப்படம் இல்லாததா, எங்கே தயாரிக்கப்பட்டது அல்லது போலி பெயர்களின் உருவானதா என்பதைத்தான். இவற்றை எல்லாம் நாம் கவனிப்பதில்லை . கடைக்கு சென்றோமா , பொருட்களை வாங்கினோமா என்று இருப்போமே தவிர இவற்றை எல்லாம் எல்லோரும் கவனிப்பதில்லை . இதனால் தான் மோசடி வேலை பார்ப்பவர்களும் அதிகரிக்கிறார்கள் . இப்படி செய்தால் எவர்கள் என்ன கவனிக்கவா போகிறார்கள் என்று பாலுக்குள் தண்ணீர் கலக்கிறார்கள் , எண்ணைக்குள் கூடாமல் போன எண்ணைகளை கலக்கிறார்கள் .
நாம் வாங்கும் கடுகில் இருந்து புடவை முதல் தங்கம் வரை எல்லாவற்றிலும் கலப்படம் இருக்கிறது . பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் தான் எல்லோரும் அறிந்த விடயம் . இன்னும் பல பொருட்களில் இந்த கலப்பட வேலை நடைபெறுகிறது . அது எல்லோருக்கும் புரிவதில்லை .
பாலுக்குள் தண்ணீர் , அரிசிக்குள் கல்லு , பருப்புக்குள் கேசரி பருப்பு , மிளகுக்குள் பப்பாளி விதைகள் , மிளகாய் தூளுக்குள் செங்கட்டி தூள் , தேயிலைக்குள் அரைத்த உளுத்தம் தோல் , எப்படி ஏராளம் .
இப்படி எல்லாம் எதற்காக என்றால் ? அவர்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்தும் உக்தி தான் . நல்லா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் . இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இருக்காதா? அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? இதை எல்லாம் ஏன் அவர்கள் உணர்வதில்லை ? இவர்களை எல்லாம் என்ன செய்வது ? திருந்த மாட்டார்களா ?
தேங்காய் எண்ணெயுடன், பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் ஆயில் கலக்கப்படுவதும் உண்டு.
அதேப்போல நல்லெண்ணெயுடன் விலை குறைந்த பாமாயில் அல்லது தவிட்டு எண்ணெய் கலக்கப்படுகிறதும் பலரும் அறிந்ததே. இவற்றால் எல்லாம் உடம்புக்கு பாதிப்பு தானே ? இப்படி எல்லாம் நடந்தால் உடம்பில் பாதிப்பு வரத்தான் செய்யும் .
கலப்படம் செய்பவர்கள் திருந்தினால் தான் உண்டு . அல்லாவிடில் ஒவ்வொரு நோய்களால் மனிதர்கள் இறப்பது தொடர்ந்த வண்ணமே இருக்கும் . ஒன்றும் செய்ய முடியாது .
நான் யோசிப்பதுண்டு . இதென்னடா முன்னம் வாழ்ந்த மனிதர்கள் எல்லோரும் எண்பது, எழுபது , நூறு வயது வரை இருந்தார்கள் . நோய் நொடி இன்றி இருந்தார்கள் .. இப்போது பார்த்தால் சிறு வயதிலேயே ஒவ்வொரு வருத்தங்கள் வந்து இறந்து போகிறார்கள் . வயிறில் கல்லு , கிட்னி பழுதாகி விட்டுது , இரத்த அடைப்பு என சொல்லி கொண்டே போகலாம் . இப்போது பார்த்தால் இந்த பொருட்களுக்கு சேர்க்கப்படும் கலப்படம் தான் காரணம் . அவர்களுக்கு ஒவ்வொரு வருத்தங்கள் வர காரணம் . நச்சு தன்மை கொண்டமைந்து , உடலுக்கு தீங்கு பயக்கும் பொருட்களை கலக்கின்றார்கள் . அதனால் தான் இந்த நிலைமை .
முன்னைய கால மனிதர் பச்சை பசெலேன்று நல்ல மரக்கறிகள் , பழங்கள், மீன்கள் என அன்றாட தேவைக்கு வாங்கி அன்றாடம் சாப்பிட்டார்கள் . பழங்கள் எல்லாம் மரத்தில் பழுக்கும் வரை பிடுங்காமல் பழம் நிலத்தில் விழும் வரை காத்து இருந்து உடனே உண்பார்களாம் . அதில் நல்ல ருசி இருக்கும் . பழம் கனிந்து நான்றாக தானே இருக்கும் .
ஆனால் இப்போது அப்படியா நிலைமை ?
இல்லையே . மரத்தில் மாங்காய்களை காயுடன் வாங்கி அவற்றுக்கு உடனே பழுக்க கூடியவாறு மருந்துகளை அடித்து மாங்காய்களை பழுக்க வைக்கிறார்கள் . முன்னம் எல்லாம் மாங்காய்களை பழுக்க வைக்க வைக்கோலுக்குள் தாட்டு வைப்பார்கள் . இப்போது எல்லாம் அப்பிடி வைத்தா பழுக்க வைக்கிறார்கள் .
மீன்களுக்கு எல்லாம் பல மருந்துகளை அடித்து நாறாமல் வைத்து அடுத்தநாளைக்கு விக்கிறார்கள் . பார்த்தால் புது மீன் போல் இருக்கும் . வீட்டில் கொண்டு வந்து வெட்டினால் நாறும் . அப்படி இப்படி எல்லாம் ஒன்றா , இரண்டா . சொல்லிக்கொண்டே போகலாம் இந்த கலப்படம் எவ்வளவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது என்று ........
தேனுக்குள் சர்க்கரை பாணியை கலக்கிறார்கள் , அரிசிக்குள் சிறு கற்கள் மற்றும் சில கூடாமல் போன அரிசி குறினிகள் எனவும் உப்புக்குள் சின்ன வெள்ளை கற்கள் , புளிக்குள் தண்ணீரை கலந்து பிசைவது என எல்லாமே கலப்படம் தான்.
மஞ்சள் தூளுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்… இது எப்பவாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும். இந்த மஞ்சள் தூளில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாது .முழு மஞ்சளைவிட, மஞ்சள் தூள் தான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.
ஆனால் பலரும் கவனிக்காத விஷயம், நாம் வாங்கியப் பொருள் சரியானதா, தரமானதா, கலப்படம் இல்லாததா, எங்கே தயாரிக்கப்பட்டது அல்லது போலி பெயர்களின் உருவானதா என்பதைத்தான். இவற்றை எல்லாம் நாம் கவனிப்பதில்லை . கடைக்கு சென்றோமா , பொருட்களை வாங்கினோமா என்று இருப்போமே தவிர இவற்றை எல்லாம் எல்லோரும் கவனிப்பதில்லை . இதனால் தான் மோசடி வேலை பார்ப்பவர்களும் அதிகரிக்கிறார்கள் . இப்படி செய்தால் எவர்கள் என்ன கவனிக்கவா போகிறார்கள் என்று பாலுக்குள் தண்ணீர் கலக்கிறார்கள் , எண்ணைக்குள் கூடாமல் போன எண்ணைகளை கலக்கிறார்கள் .
நாம் வாங்கும் கடுகில் இருந்து புடவை முதல் தங்கம் வரை எல்லாவற்றிலும் கலப்படம் இருக்கிறது . பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் தான் எல்லோரும் அறிந்த விடயம் . இன்னும் பல பொருட்களில் இந்த கலப்பட வேலை நடைபெறுகிறது . அது எல்லோருக்கும் புரிவதில்லை .
பாலுக்குள் தண்ணீர் , அரிசிக்குள் கல்லு , பருப்புக்குள் கேசரி பருப்பு , மிளகுக்குள் பப்பாளி விதைகள் , மிளகாய் தூளுக்குள் செங்கட்டி தூள் , தேயிலைக்குள் அரைத்த உளுத்தம் தோல் , எப்படி ஏராளம் .
இப்படி எல்லாம் எதற்காக என்றால் ? அவர்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்தும் உக்தி தான் . நல்லா சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான் . இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இருக்காதா? அதே கலப்பட பொருட்களை அவர்களின் குடும்பத்தினரும் தானே சாப்பிடுவார்கள்? இதை எல்லாம் ஏன் அவர்கள் உணர்வதில்லை ? இவர்களை எல்லாம் என்ன செய்வது ? திருந்த மாட்டார்களா ?
தேங்காய் எண்ணெயுடன், பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் ஆயில் கலக்கப்படுவதும் உண்டு.
அதேப்போல நல்லெண்ணெயுடன் விலை குறைந்த பாமாயில் அல்லது தவிட்டு எண்ணெய் கலக்கப்படுகிறதும் பலரும் அறிந்ததே. இவற்றால் எல்லாம் உடம்புக்கு பாதிப்பு தானே ? இப்படி எல்லாம் நடந்தால் உடம்பில் பாதிப்பு வரத்தான் செய்யும் .
கலப்படம் செய்பவர்கள் திருந்தினால் தான் உண்டு . அல்லாவிடில் ஒவ்வொரு நோய்களால் மனிதர்கள் இறப்பது தொடர்ந்த வண்ணமே இருக்கும் . ஒன்றும் செய்ய முடியாது .
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !!!

தமிழர் பண்பாடு, கலாசாரம் என்பதை கட்டி காக்க வேண்டியது நம் தமிழர்கள் அனைவரினதும் கடமை . விழாக்கள் , பண்டிகைகள் என்பன நம் அடையாளங்கள் . தை மாதம் வந்தால் தை பொங்கலும் , தை பூசமும் விசேசம் . மாசி மாதம் வந்தால் மாசி மகம் . இப்படி எமது கலாசாரத்தில் ஒவ்வொரு விழாக்களும் , பண்டிகைகளும் வந்து போகின்றன. அதுபோல் தை பொங்கலும் விசேசம் .

தை பொங்கலுக்கு எல்லோர் வீட்டிலும் புதிய பானை வாங்கி பொங்கல் பொங்கி , வெடி கொளுத்தி எல்லோரும் சந்தோசமாக , குடும்பத்துடன் தை பொங்கலை கொண்டாடுவார்கள் . மனதில் உள்ள துக்கங்கள் நீங்கி சந்தோசம் உண்டாகி எல்லோரிடனும் அன்பாக கொண்டாடுங்கள் தை பொங்கலை எல்லோரும் . குடும்பத்தினருடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு நல்ல காரியங்களை செய்யலாம் .


எனது நண்பர்களுக்கும் , அவர்களது உறவினர்களுக்கும் எனது தை பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . இந்த தை பொங்கலை எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக கொண்டாடுங்கள் . சந்தோசமாக இருங்கள் . அனைத்து நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

Subscribe to:
Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...

நீங்கள் 150 கிராம் கடல் மீன்/கடல் உணவு சாப்பிட்டால், அது உங்களின் ஒரு நாளைய புரத தேவையின் 50 -60%த்தை நிறைவு செய்துவிடும். அனைத்துவித கடல் உணவுகளும், இறால் தவிர, குறைவான கொழுப்பு உள்ளவையே..! கடல் மீனில் 5%கும் குறைவான கெட்ட கொழுப்பே உள்ளது. இவைகளில், அதிக கொழுப்பு இருந்தாலும், அதனை இதிலுள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் ஆல்பா லினோலினிக் அமிலம் ( DHA - α-linolenic acid (ALA),எபிகோசாபெண்டானாயிக் அமிலம் ( EPA -eicosapentaenoic acid (EPA) ஈடுகட்டிவிடுகின்றன. வாரம் இருமுறை மீன் சாப்பிட்ட மாதவிடாய் நின்று போன சுமார் 3 ,500 பெண்களிடம் ஆய்வு செய்ததில் இவர்களின் கருப்பை புற்றுநோய் விகிதம் குறைந்துள்ளதாம். கருவுற்ற காலத்தில் நிறைய மீன் உண்டதால், குறைமாத குழந்தை பிறப்பும், எடை குறைவான குழந்தை பிறப்பும் குறைந்துள்ளதாம்.






