Tuesday, May 12, 2015

மறைத்து வைக்கப்பட்ட (உளவு) கேமராக்களை கண்டறிவது எப்படி?

மறைத்துவைக்கப்பட்டிருக்கும் (உளவு)கேமராக்களை கண்டறிவது எப்படி?
கேமரா இல்லாத ஆட்களைக் காண்பதே கடினம் என் றாகி விட்டது. அந்தளவிற்கு
மொபைல்ஃபோன் போல கேமரா மோகமும் இன்றைய தலைமுறையினரை ஆட்டிப்படைக் கின்றது. இந்த கேமராக்களில் பல வகை உள்ளன. அவை பயனாளிக ளைப் பொறுத்து வேறுபடுகின்றது. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சமயத் தில் அதன் பயன்பாடு அனைவரை யும் கவர்ந்ததோடு, அதன் தேவையு ம் அதிகரித்த‌து. ஆனால், தற்போது இருக்கும் விஞ்ஞா ன உலகில் கேமரா பல முன்னேற்றங்கள் அடைந்து ள்ளது. முதன் முதல் கண்டு பிடிக்கப்பட்ட கேமரா பெரிய அளவில் இருந்தது. தற்போது கடுகளவு வரை கேமராக்களி ன் அளவு குறைந்துவிட்டது.
இவற்றை முதலில் புலனாய்வுத் துறையினர், தாங்கள் சந்தேகிக்கும் நபர்களை உளவு பார்க்க கண்டுபிடித்தன ர். ஆனால், அதை சிலர் தீய வழிகளில் பயன்படுத்துவது கேமரா மீது நமக்கு இருக்கும் அச்சுறுத்தலை மேலும் அதிகரி க்கின்றது. பொது இடங்கள், ஜவுளிக் கடைகள் போன்ற இட ங்களில் உடைமாற்றும் அறைக ளிலோ, இல்லை கழிப்பிடங்க ளிலோ இம்மாதிரியான கேமரா க்களை பதுக்கி வைத்து தகாத செயல்களில் ஈடுபடுகி ன்றனர்.
அதனைத் தடுக்க மறைத்து வைக்கப்ப ட்டிருக்கும் கேமராக்களை கண்டறிவது எப்படி என்று நாம் இங்கு கா ணலாம் – இம்மாதிரியான சில கேமராக்கள் செய ல்படும்போது குறைந்த அளவு சத்தம் கொடுக்கும், அத னால் கூர்ந்து கவனித்தால் அவற்றை எளிதாகக் கண்டுபிடி த்து விடலாம்.
நீங்கள்இருக்கும் அறையில்உள்ள அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பார்க்கவும், சில கேமராக்களில் சிறிய சிவப்பு அல்லது பச்சை நிற எல்ஈடி விள க்குகள் இருக்கும், இதன்மூலம் கேமராக்களை கண்டு பிடிக்கலாம்.
மேலும், இருட்டாக இருக்கும் அறையில் டார்ச் லைட் மூலம் அறையில் இருக்கும் கண் னாடிகளில் பார்க்கவும். பின்ஹோ ல் கேமராக்களில் சிசிடி இருக்கும், அத னால் டைர்ச் லைட் கொண்டு தேடும்போது எங்காவது வெளிச்ச ம் பிரதிபலித்தால் அங்கு நிச்சயம் கேமரா இருக்கின்றது உஷார்.
Radio Frequency(RF) சிக்னல் டிடெக்டர் வாங்கி முயற் சி செய்யலாம். உங்கள் அருகில் இருக்கும் கேமராக்க ளை இது காட்டி கொடுத்து விடு ம். மறைத்து வைக்கப்பட்டிருக் கும் கேமராக்களை கண்டறிய உங்க செல்போனையும் பயன்ப டுத்தலாம். உங்க செல்போன் மூலம் யாருக்கேனும் கால் செய்து நீங்க சந்தேகிக்கும் இடத்தில் அதை காண்பிக்கவும், அப் போது விநோதமான சப்தம் உங்களுக் கு கேட்டால் அங்கு கேமரா இருக்கின் றது.

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செய்தியை . . . !- உலுக்கும் உண்மை இது!

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செய்தியை . . . !- உலுக்கும் உண்மை இது!

அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இந்த அதிர்ச்சியான செய்தியை . . . !- உலுக்கும் உண்மை இது!
ஒரு நாள் காலை தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலை வனமாய் மாற்ற கூடிய
மீத்தேன் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்திற்கு செல் லும் வாய்ப்பு கிட்டியது..ஏற்கனவே இது பற்றி அறிந்திருந்தாலும் மேலும் அது பற்றிய விளக்கங்கள் தெளிவாய் அறியவேண்டி கலந்து கொண்டேன்.
ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல் அல்ல இது…அனைவரையும் அதாவது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்க கூடிய கொடிய அரக்கன் இது எனபது அறிந்து பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டது. அனை த்து நட்புகளுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள் ….பொறுமையாய் படித்து அறிந்து இதை முடிந்த அளவுக்கு பகிருங்கள் என்பதே. முற்றி லும் பாலைவனமாய் மாறப்போகும் தமிழகத்தின் நெற்களஞ்சிய மாம் தஞ்சை மாவட்டம் என்றும் அதோடு சேர்ந்து பாதிக்கப்படப் போகும் மாவட்டங்கள் திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய இரண்டும் தான் என்பதே நான்
இதுவரை அறிந்த விபரம்…உண்மை அதுவல்ல என்பதை பல தகவல் களோடும் , நடந்த உண்மைகளோடும் ஒப்பிட்டு அன்று நடந்த கருத் தரங்கில் பொறியாளர்கள் கூறியது மனதை பதைபதைக்க வைத்தது. தஞ்சை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு மூலம் மீத்தேன் எடுக்க ……..என்ற விபரம் தான்.சற்றே அதிர்ச்சியோடு அவரை நோக்கி விபர ம் கூறி, இங்கு இருப்போற்க்கே சரிவர தெரியாத ஒரு செய்தி என்ப தே உண்மை..இதே கருத்தை இன்றைய கருத்தரங்கிலும் பகிர்ந்தன ர். இன்னும் அதிகளவில் இது மக்களைஅடைய வேண்டும் …எதிர்ப்பு வலுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்..
எங்கேயோ போடப்போகும் ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன வந்தது என்று எண்ண வேண்டாம் தோழமைகளே..
1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில் நிலக்கரியோடு இருக்கும் மீத்தேனை எடுக்க நிலக்கரி இருக்கும் மட்டம் வரை நிலக்கரிப் படிவத்தில் இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.
2.கடும் உப்பும், பிற மாசுகளும் நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும் தாவர உயிரியல் மற்றும் நுண்ணுயிர்களைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது.
3.அதோடு நிலம் சுடுகாடாய் மாறும்.
4.கடல் நீர் உள் நுழையும்.
5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.
6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள் சிதையும் .நிலநடுக்கங்கள் ஏற்படும் .
7.குடிநீர் , பாசன நீர் தரும் நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப் போகும்.
8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும் ஆழ்துளை குழாய் இட பயன் படுத்திய ரசாயனங்கள், மீத்தேன் ஆகியவை கலக்கும். இச்செயல் முறை மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக நாசம் செய் யும். ஒப்பந்தம் போட்டிருக்கும் ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்க போ கும் இடம் 691 சதுர கிலோமீட்டர் .ஆனால் பாதிப்பு ஏற்படபோகும் மூன்று மாவட்டங்களின் பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர் அதாவது 21 லட்சம் ஏக்கர் நிலங்களை நாசம் செய்யும். மொத்த ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை 2000. அடுத்த கட்ட மாய் பாதிக்க போகு ம் மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூரும் தான்.
இதனால் காற்றும் மாசுபட போவதால் அது ஒட்டுமொத்த தமிழகத் தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம். ஒட்டுமொத்தமாக இப்பகுதி பாலைவனமாய் மாறப் போவதால் 50 லட்சம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாய் நிற்கிறது..சென்ற அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடை பெறும் போராட்டம் காரணமாய் இந்த அரசு தற்காலிகமாய் நிறுத்தி வைத்துள்ளது.இந்த ஒப்பந்தம் மட்டும் மீண்டும்  தொடர்ந்தா ல் …………… தமிழகத்தை யாராலும் காப்பாற்ற இயலாது..அதற்கு முன் மக்கள் விழித்தெழ வேண்டியது மிக
அவசியம் மற்றும் அவசரமும் கூட.
(ஒரு வேண்டுகோள் – ஷேர் செய்)
PLEASE SHARE IT.
THANK YOU.
SAVE TAMILNADU.

ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவல்

ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவல்

ஆப்பிள் போன், நீங்க வைத்திருப்பவரா? உங்களை அதிர வைக்கும் எச்ச‍ரிக்கைத் தகவல்
ஆப்பிள் போன் நிறுவனம் ios 8 (mobile operating system) எனப்படும் மென்பொருளை(software) 17 செப்டம்பர் 2014அன்று வெளியிட்டது.  பின்பு விற்பனைக்கு வந்த
அனைத்து ஆப்பிள் போன்களிலும் இந்த மென்பொருளையே பயன்படுத்தபட்டது.
தற்பொழுது அந்த மென்பொருள் பயன்படுத் துவதால் ஏற்படும் பின் விளைவுகளை ஸ்கைகியூர் (skycure) eஎனும் நிறுவனம் எடுத்து காட்டியுள்ளது.
அதன் விவரம்:
1. இந்த ios 8 மென்பொருளின் பயன்பாட்டில் உ ள்ள போனில் உள்ள தகவல் பாதுகாப்பு முறை முழுமையான பாதுகாப்பு உடையதாக அல்ல, hackers எனப்படும் தகவல் திருடுபவர்களால் போனில் உள்ள ரகசிய தகவல்களை எளிதில் திருடிவிடமுடியும் என் அறிவித்தது.
2. இது தொடர்ந்து நடைபெற்றால் போனில் உள்ள SSL(Secure Sockets Layer) முதலில் ios 8 மென்பொருளுக்கு பாதிப்பு உண்டாகும் பின்பு போனிnன் OS(operating system) முற்றிலும் அழிய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
3. இவ்வகையான திருட்டு network (internet) ma மற்றும் WiFi network மூலமாகவே நடக்கிறது என்று ம் கூறியுள்ளது.
மேற்கண்ட அனைத்து புகார்களையும் அலசி ஆராய் ந்த ஆப்பிள் நிறுவனம் அதற்கு மாற்று வழியாக ios 8.3(version) மென்பொருளை 8 ஏப்ரல் 2015 அன்று சந்தையில் அறிமுகம் செய் தது.
இது தகவல்களை முழுமையாக பாதுகாக்கும் வ கையில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் hackers -சால் திருடமுடியாத படியும் வடிவமைக்கப்பட் டுள்ளது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
ஆகவே ios 8 பதிலாக ios 8.3 பயன்படுத்துமாறு தனது வாடிக்கை யாளர் அனைவருக்கும் ஆப்பிள் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள் ளது.

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீட்டு பாலிசி

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விபத்து காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால், அதற்கேற்ப பலன் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.
சமூகப் பாதுகாப்பின் அடிப்படையில், வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு, 12 ரூபாய் கட்டணத்தில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு செய்யும் திட்டம், 'பிரதமர் ஜன்தன் யோஜனா' மூலம் அமலுக்கு வந்துள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட யுனைடெட் இந்தியா, ஓரியண்டல், நேஷனல், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வங்கி கிளைகளிடமிருந்து கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டு, வங்கி கிளையின் பெயருக்கு காப்பீட்டு பாலிசியை, காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கின்றன. ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்கில் இருந்தும், 12 ரூபாயை பிடித்தம் செய்து, வாடிக்கையாளரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, காப்பீட்டு நிறுவனத்துக்கு  பிரிமியம் தொகையை, வங்கிக் கிளை அளிக்கும். இத்திட்டத்தில், காப்பீடு செய்யும் நாளில் இருந்து, ஓராண்டுக்குள் விபத்தில் சிக்குபவர்களுக்கு, காப்பீட்டு நிறுவனம், இழப்பீட்டுத் தொகையை அளிக்கும். காப்பீட்டு பாலிசி, வாடிக்கையாளர்களின் பெயருக்கு அளிப்பதில்லை. வங்கிக் கிளையின் பெயருக்குத் தான் அளிக்கப்படுகிறது. எனவே, விபத்தில் வாடிக்கையாளர் பாதிக்கப்பட்டால், அவருக்கான இழப்பீட்டைவங்கி மூலமே கோர முடியும். வங்கியின் அன்றாடப் பணிகளுக்கிடையே, வாடிக்கையாளரின் காப்பீட்டு தொகையை பெற்றுத் தருவதில், போதிய கவனம் செலுத்த முடியாது. இதற்கென, தனி பணியாளர் இல்லை என்று வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர் ஒருவருக்கு காப்பீடு செய்வது குறித்த தகவலை, வங்கி தனியாக அளிப்பதில்லை. காப்பீட்டு பாலிசியும்; வாடிக்கையாளர் பெயரில் இருப்பதில்லை. இதனால், பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு, விபத்து காப்பீடு செய்த தகவலே தெரிவதில்லை. இதனால், விபத்தில்  பாதிக்கப்பட்டவர், இழப்பு காப்பீடு கோருவதே இல்லை என்றும் கூறுகின்றனர்.

விபத்து காப்பீட்டு விவரத்தை, வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதில், எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை, காப்பீடு செல்லும்; பாலிசி எண் போன்றவற்றை தெரிவிக்கவேண்டும். காப்பீடு செய்யப்பட்ட வாடிக்கையாளர் விவரங்களை, வங்கிகள் எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். இதே தகவல்களை, காப்பீட்டு நிறுவனங்களும் பராமரிக்க வேண்டும் என, வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். விபத்து காப்பீட்டின் மூலம் சமூக பாதுகாப்பு அளிப்பது, வரவேற்புக்கு உரியது. வாகன நெரிசல் அதிகரித்தபடி இருக்கும் இந்த காலத்தில், இது போன்ற திட்டம் மிகவும் பயனுள்ளது. ஆனால், இவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், வங்கி வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

Monday, May 11, 2015

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள, சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் …

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங் குறைகளை நிறையாக்கிக் கொண் டால், அவர்களுக்கு வெற்றி என் பது எளிதாக கிடைக்கும். உங்க ளுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.
உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப் பட்டுள் ளன. அதற்கு மூன்று பதில்களும்வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றியபதில்களை டிக் செய்யுங்கள். இறுதி யில் அதற்கான மதிப் பெண் களை கூட்டி… அதற்கான முடிவை… அதா வது உங்களைப் பற்றிய பலம், பலகீன ங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? 
அ) காலை 
ஆ) மதியம், மாலை 
இ) இரவு.
2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்?
அ) மெதுவாக… தலைகுனிந்தபடி… 
ஆ) வேகமாக… 
இ) தலையை உயர்த்தியவாறு விரைவாக…

3. நீங்கள் பேசும்போது உங்களுடைய செயல் எப்படி இருக்கும்? 

அ) விரல்களை இணைத்துக் கொண்டு… அல்லது கையை பிசைந்தபடி… 
ஆ) கைகளை இடுப்பில் வைத்த படி பேசுவேன். 
இ) எதிரில் இருப்பவரை தொட்டு தொட்டு பேசுவேன் அல்லது அவரது விரல்களைப் பிடித்தபடி… பேசுவேன்.

4. நீங்கள் தரையில் அமர்ந்தி ருக்கும்போது… எப்படி? 
அ) கால்களை நீட்டிக் கொ ண்டு… 
ஆ) இரண்டு கால்களையும் ஒரே திசையில் மடக்கி வைத் திருப்பேன். 
இ) சம்மணம் போட்டு உட்கா ர்ந்திருப்பேன்.
5. உங்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? 
அ) லேசான புன்னகை 
ஆ) நன்றாக சிரித்து வெளிப்படுத்துவேன்.
இ) விழுந்து விழுந்து சிரிப்பேன்.
6. கேளிக்கையில் இருக்கும்போது… எப்படி?
அ) யாருடனும் பேசாமல்… சேராமல் மூலையில் தனித்து இருப்பேன். 

ஆ) அறிமுகமானவர்களிடம் நானே போய் பேசுவேன். 
இ) அங்கிருக்கும் அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்புகிற மாதிரி நடப்பேன்.
7. மிகவும் அவசர வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்போது யாராவது உதவி கேட்டால்..? 
அ) அப்புறம் பார்க்கலாம்… நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லுவேன். 
ஆ) அவருக்கு என்ன உதவியோ… அதையும் நிறைவேற்றாமல்… என்னுடைய வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடு வேன். 
இ) கட்டாயம் உதவி செய் வேன் என்று உறுதி கூறு வேன்.
8. உங்களுக்கு பிடித்த நிறம் எது? 
அ) வெள்ளை, பிரவுன் மற் றும் காபி கலர். 
ஆ) மஞ்சள், நீலம் மற்றும் பச் சை. 
இ) கருப்பு
9. படுக்கையில் படுத்திரு க்கும் போது எப்படி படுத் திருப்பீர்கள்? 
அ) ஒரு பக்கமாக சரிந்து, வளைந்த நிலையில் படுத்தி ருப்பேன். 
ஆ) கால்களை நீட்டியபடி… கவிழ்ந்து படுத்திருப்பேன். 
இ) மல்லாந்த நிலையில் படுத் திருப்பேன்.
10. உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு? 
அ) சந்தோஷமான கனவு… 
ஆ) அடிக்கடி கீழே விழுவது போல் கனவு வரும். 
இ) கனவு காணும் பழக்கம் கிடையாது.

என்னங்க… எல்லாத்தையும் படிச்சு… உங்களுக்கான பதிலை `டிக்’ அடிச்சிட்டீங்களா…? 

அ – 2 மதிப்பெண் 
ஆ – 4 மதிப்பெண் 
இ – 6 மதிப்பெண் 
இப்போது அதற்கான மதிப்பெ ண்களை கூட்டுங்கள்.
50-க்கும் அதிகமான மதிப்பெண்: 
நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈஸியாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களிடம் எப்போது வந்து கேட்டாலும், மறுக்காமல் உதவி செய்வீர்கள் என்பதால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தி. அதே மாதிரி, நண்பர்களிடம் காரியம் சாதிப்பதிலும் நீங்கள் கில்லாடி!
41-லிருந்து 50- மதிப்பெண் : 
உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசி யே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக் கல்களுக்கு தெளிவாக ஆலோ சனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியா மல் குழப்பம்… அதனால் தடு மாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்!
31 -லிருந்து 40-மதிப்பெண்:
நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அத னால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொ டுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக் கும்.
21-லிருந்து 30-மதிப்பெண்: 
நீங்கள் சரியான கறார் பேர்வழி… `வெட்டு ஒண்ணு… துண்டு ரெண்டு’ என்று பேசுவதால் உங்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் கம்மியாக இருக்கும். அப்படியே யாராவது நெருங்கி வந்தால்கூட அவர்களை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள். எப்போதும் காரி யத்திலேயே கண்ணாக இருக்கும் உங்களுக்கு பண ஆசையும் அதிகமாக இருக்கும். உங்களுடன் இருப்பவர்களும் சீரியஸாக இரு க்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.
21-க்கும் கீழான மதிப்பெண்:
நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாரும் கூடி கும்மாளமிட்டாலும் உங்களிடமிருந்து ஒரு சத்தமும் வராது. காடு, மலை என்று சுற்றித் திரியத்தான் உங்களுக்கு ஆசை வரும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே ரவுண்ட்ஸ் வரும் உங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை வராது. மேலும் நண்பர்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்காது. உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி என்பது கம்மிதான்!

( இணையத்தில் இருந்ததை இயத்துடன் இணைக்கிறோம் )

கொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்கு, க‌வலை உனக்கெதற்கு??

கொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்க, க‌வலை உனக்கெதற்கு??

கொழுப்பைக் குறைக்க‍ எளிய உணவு இருக்க, க‌வலை உனக்கெதற்கு??
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. கொழுப்பைக் குறைக்கும் எளிய
உணவா? என்றும் அது என்ன‍ உணவு என்றும் தெரிந் து கொள்ள‍ ஆவலாக இருக்கும். அந்த உணவு என்ன‍ தெரியுமா? அது நிலக்கடலைதான், இந்நிலக் கடலை ஏழைகளுக்கும் எளிதில் கிடைக்கும் உணவல்லா?
சரி இந்த‌ நிலக்கடலை சாப்பிட் டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பல ரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையி ல்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழு ப்புதான் நிலக்கடலையில் உள்ளது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்கு கிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன்சாச்சுரேட்டேட் வகை கொழுப்புள்ளது. பாலிஅன் சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்பு மே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பா தாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும்கொ ழு ப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கி றது. கொழுப்பைக் குறைக்கிறது என் பதற்காக அளவுக்கதிகமாக நிலக்கட லையை உண்டால் பித்தம் வரும். அ தனால் தினந்தோறும் குறிப்பிட்ட‍அளவு நிலக்கடலை உட்கொண்டு வந்தாலே நமது உடலில்உள்ள‍கெட்ட க்கொழுப்பு கறைந்து, உடலை பல ப்படுத்தும். மேலும் வெறும் நிலக் கடலையைவிட பர்பி அல்ல‍து கட லை உருண்டையை வாங்கி சாப் பிடலாம்.

வாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் படி ந‌டந்தாலே போதும்! – வாழ்வியல் விதைகள்

வாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் படி ந‌டந்தாலே போதும்! – வாழ்வியல் விதைகள்

வாழ்வில் தொடர்வெற்றி பெற‌, நீங்கள் இந்த 19 படிகள் படி ந‌டந்தாலே போதும்! – வாழ்வியல் விதைகள்
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத
உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானா லும் பரவாயில்லை. விருப்பமா ன துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளி ல் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும்முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள் ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செ லவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லா மலே சர்க்கரை, உப்பு ஆகிய வற்றை கணிசமாகக் குறை த்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க் காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசு கையில் கண் களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல் புகளாகவே இருக்கட்டும்.
11.வாரம் மூன்று முறையாவது உடற்பயிற் சி செய்யு ங்கள். முடிந்தவரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம்செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்க ளையே பேசுங்கள்.
14.அரட்டைப்பேச்சுக்களையும் அபவா தங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங் கள் முடிந்தவரை குறைவாகவே இரு க்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகு திகளையும் தவறுகளையும் பட்டியல் இடு ங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்க ள்மேல் உங்களுக்குஇருக்கும் அக்கறை யை உணர்த்துங்கள்.

ஜெயலலிதா விடுதலை: கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
 இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார்.
 இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தண்டனை, அபராதத்தை ரத்து செய்யக் கோரியும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர். 
 இந்த வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையில் சிறப்பு இருக்கை அமைக்கப்பட்டது.
 கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை திங்கள்கிழமை அறிவித்தார். 
தீர்ப்பு விவரம்:
 மொத்தம் 919 பக்கங்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:
 மேல்முறையீடு செய்திருப்பவர்களின் வழக்குரைஞர்கள், பிரதிவாதி வழக்குரைஞர்கள், சிறப்பு அரசு வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா, சுப்பிரமணியன் சுவாமி, க.அன்பழகன் ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதங்களைப் பரிசீலித்த பிறகு, ஒருசில கேள்விகள் எழுகின்றன.
 மேல்முறையீடு செய்துள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான குற்றங்களும், தண்டனையும் சரியானவை தானா? ஜெயலலிதா பெயரில் சொத்துகள் குவிக்கவும், பண ஆதாயம் பெறவும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அவருடன் குற்றவியல் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்களா?
 இந்தக் கேள்விகளுக்கு என்னுடைய பதில் வருமாறு: 
 சட்டப் போராட்டம் என்ற போர்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுக்கப்படுவதை ஊக்குவிக்கக் கூடாது. சட்ட நடைமுறைகள், அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் நடைமுறைகளுக்கு உள்பட்டு குற்றவாளிகளின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது.
 வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாகக் கூறப்படும் கணக்குகளை ஆராய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணை அதிகாரி வாய்ப்பளிக்க வேண்டும். 
 அரசு ஊழியர்களின் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துக் குவிப்பைக் கணக்கிடும்போது, தெரிந்த வருமானத்தின் மொத்தத் தொகையில் 20 சதவீத கூடுதல் வருமானத்தை அனுமதிக்கலாம் என்று 1989-இல் காவல் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு வழங்கிய வழிகாட்டுதலில் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
 வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து என்பதை வரையறுக்கும் விகிதம் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எனவே, தெரிந்த வருமானத்தைக் காட்டிலும் கூடுதலாக உள்ள சொத்துகள் குறித்து சொந்த நிலைப்பாட்டை எடுக்க நீதிமன்றத்துக்கு சுதந்திரம் உள்ளது.
 சொத்துகளைக் குவிப்பதற்காக ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவியல் கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது.
 கட்டுமானம் தொடர்பாக பொதுப் பணித் துறைப் பொறியாளர்களின் மதிப்பீடுகள் அதிகப்படியாக உள்ளன என்று மேல்முறையீடு செய்துள்ளவர்களின் வழக்குரைஞர் கூறுகிறார். பொதுப் பணித் துறையினரின் மதிப்பீடுகள் அளவுக்கு அதிகமாக உள்ளன. எனவே, மொத்தக் கட்டுமானச் செலவினங்களை ரூ. 5,10,54,060 என மதிப்பிட்டுள்ளேன்.
 திருமணச் செலவினங்களும் சரியாக மதிப்பிடப்படவில்லை. திருமணச் செலவினங்களுக்கு மணமகள் வீட்டார்தான் பொறுப்பாவார்கள்.
 போயஸ் தோட்டத்தில் 4 பேரும் ஒன்றாகக் குடியிருந்ததை அரசுத் தரப்பு சுட்டிக் காட்டுகிறது. சொத்துகளின் பத்திரப் பதிவுகள் ஜெயலலிதாவின் வீட்டில் நடந்ததாகவும், அந்த வீட்டில் 4 பேரும் ஒன்றாகக் குடியிருந்ததாகவும் கூறுவதை ஏற்க இயலாது. 
 4 பேரும் அரசுடைமை வங்கியிலிருந்து ரூ. 24,17,31,274 கடனாகப் பெற்று, அசையாச் சொத்து வாங்கியதை சட்ட விரோதம் என்று கூற முடியாது. 
 சொத்துக் குவிப்புக்கு ஜெயலலிதா உடந்தையாக இருந்தார் அல்லது கூட்டுச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சரியான ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது.
 இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைச் சரியான முறையில் கணிக்க விசாரணை நீதிமன்றம் தவறி விட்டது.
 கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் வகுக்கப்பட்ட விதியின்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது நிறுவனங்களின் மொத்த சொத்துகள், வருமானத்தைக் கணக்கிட்ட பிறகு, வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துகளைக் கணக்கிட முடியும். 
 தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறையின் மதிப்பீட்டின்படி 4 பேர் மற்றும் நிறுவனங்களின் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து மதிப்பு ரூ. 66,44,73,573. கட்டுமானச் செலவை ரூ. 22,69,34,885 ஆகவும், திருமணச் செலவை ரூ. 6,16,36,222 ஆகவும் மறு மதிப்பீடு செய்ததில் மொத்த பொருந்தாத சொத்து மதிப்பு ரூ. 37,59,02,466.
 4 பேர் நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ. 34,76,65,654. அப்படியானால், மொத்த சொத்தில் மொத்த வருமானத்தைக் கழித்தால் வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து மதிப்பு ரூ. 2,82,36,812 ஆகும். இது 8.12 சதவீதமாகும்.
 கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்குப்படி, வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து மதிப்பு, மொத்த வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யத் தகுதியுடையவர்கள் ஆவர்.
 வருமானத்துக்குப் பொருந்தாத சொத்து விகிதம் 8.12 சதவீதம் என்பது மிகவும் குறைவாகும். எனவே, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்கிறேன். இவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது. 
 கீழமை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானதாகும். எனவே, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்கிறேன்.
 கீழமை சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் விதித்த தண்டனையும், அபராதத் தொகையும் ரத்து செய்யப்படுகின்றன. 4 பேரின் பிணைப் பத்திரங்களையும் விடுவிக்கிறேன். 
 இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும், அசையாச் சொத்துகள் குறித்து கீழமை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த, 919 பக்க தீர்ப்பின் முக்கிய பகுதிகள்: சொத்துக்களின் மொத்த மதிப்பு, 37.59 கோடி ரூபாய். மொத்த வருமானம், 34.76 கோடி ரூபாய். சொத்துக்களின் மொத்த மதிப்பில் இருந்து, வருமானத்தை கழிக்கும்போது, 2.82 கோடி ரூபாய் அதிகமாக வருகிறது. இதை சதவீத கணக்கில் பார்த்தால், 8.12 சதவீதம். கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், 'வருமானத்திற்கு அதிகமாக, 10 சதவீத அளவில் சொத்துக்கள் இருந்தால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை பெற உரிமை உள்ளது' என, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு பிறப்பித்த சுற்றறிக்கையில், 'வருமானத்திற்கு அதிகமான சொத்து, 20 சதவீதம் அளவிற்கு அனுமதிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களின் மதிப்பு, 10 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தால், அதை அனுமதிக்கப்பட்ட வரம்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Thursday, May 7, 2015

மூக்கு! – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள்!- கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு!

மூக்கு! – நீங்கள் அறிந்திடாத மருத்துவத் தகவல்கள் – கொஞ்ச அதிர்ச்சியாகவும் இருக்கு!

மனிதன் உயிர் வாழ அடிப்படை யான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாக வும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே
ருவாகிறது. நடுச் சுவர் எலும்பு மூக்கை இருபாக மாக பிரிக்கிறது. மேல் பாகத்தில் `நேசல் போன்’ என்ற எலும்புள்ளது. உள் பக்ககுழாய்போன்ற அமை ப்பின் இரு பக்கமும்தசை இடம் பெற்றிருக்கிறது. இந்த தசை ` ஏ.சி’ மெஷின்போல் செயல்படும். அதா வது சுவாசிக்கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந் த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத்தில் பெரிதாகும். ஜலதோ ஷம் ஏற்படும் போது தொற்றுக்கிருமி களின் தாக்குதலால் தசை வீங்கிவிடு ம். காற்று செல்லும் வழியை அடைத் து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக் கடைப்பு என்கிறோம்.
மூக்கின் இருபுறத்தையும், கண்களின் மேல் பகுதியை யும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும் பால் ஆன`ஏர்பில் கேவிட்டி’ என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கு ம். கிருமித்தொற்று எதுவும் இல் லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். ஆஅச் என்ற தும்மலோடு ஜலதோஷம்வந்தால், அத்திரவத்தின் அட ர்த்திஅதிகரிக்கும். வெளியேவராமல்சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொ ந்தரவு தரும் இதற்கு ஆன்டிபயாடிக் மாத்தி ரைகள் கொடுப்போம். இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத் தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங் கள் இருக்கக்கூடும். அந்த காரணத் தைக் கண்டறிந்து சிகிச்சை தரவேண்டும்.
ஜலதோஷத்திற்கு முறையான சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள் பட `இன்பெக்டிவ் சைனசைட்டீ ஸ்’ஆக மாறியிருக்கலாம். உணவாலோ, சுற்றுப்புறசூழ லாலோ, வேறு காரணங்களா லோ அலர்ஜி தொடர்புடைய`ரைனோ சைனசைட்டீஸ்’ தோன்றும். அடிக்கடி தும்மல்ஏற்படுத ல், தலைபாரம், மூக்குஒழுகுதல், காதி ல் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போ ன்றவை இதன் அறிகுறியாகும். இதற்கு சரியான சிகிச்சையை பெறாவி ட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக் கை அடைக்கும். சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதிவரை வளர்ந்து அதி க தொந்தரவு தரும்.

இந்த நோயின் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய பொதுவாக எக்ஸ்ரே எடுக்கப்படு வதுண்டு. சிடி.ஸ்கேன் எடுத்தால் மூக்கின் மேல் எலு ம்பு, நடுச்சுவர், தசை வளர்ச்சி, சைனஸ் பாதிப்பு போ ன்ற அனைத்தையும் கண்டறிந் து துல்லியமான சிகிச்சை பெறலாம். சைனஸ் பகுதி யில் சளி அடைப்பு இருந்தால் `என்டோஸ்கோபிக்

endoscopic sinus surgery
சைனஸ்சர்ஜரி’ தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலா ம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து- மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத் தலாம்.
தற்போது மக்களை அச்சுறுத்தும் விதமாக அதிகரித்து வருவது, குற ட்டை! இதன் கொர்.. கொர் .. ஓசை இரவில் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால்,அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட் டைக்கு சரியான சிகிச்சை பெறாவிட் டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் . தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணி க்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கி றது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டானபெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத் தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிரு க்கிறார்கள்.
இப்போது சிறுவர் சிறுமியர்க ள் மைதானங்களுக்கு சென்று ஓடிஆடிவிளையாடுவதில் லை. உட்கார்ந்து டி.வி. பார்ப் பது, கம்ப்யூட்டரில் விளையா டுவது- வறுத்த, பொரித்த உ ணவுகளைஉண்பது போன்றவைகளால் இளையதலை முறை குண்டாகிவருகிறது. எதிர்காலத்தில் அவர்க ளும் குறட்டையால் பாதிக்கப் படும் சூழல் உருவாகும்.
தூங்கும்போது சுவாசப்பாதை யில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம்தா ன் குறட்டை சத்தமாக வெளி வருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண் டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரண ங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் கா ற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெரு க்கடி ஏற்படும். அந்த நெருக் கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற் று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்த மாக வெளிவருகிறது.
ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளை க்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இய ற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்க ட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து,சுவா சத்தை சரிசெய்து விடும். இது இயல்பான, இயற் கையான நிகழ்வு. ஆனா ல் குறட்டை விடுபவர்க ளுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கா னிசம் சரியாக செயல்ப டாது. அப்படியிருக்க, அ வர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிகளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் வி ழிப்புநிலை மிகவும் குறைந்து விடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சு விட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்தி லே உயிர் பிரியும் சூழல் ஏற்பட லாம்.
குறட்டை விடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முத ல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப் போதுதடைபட்டு அவர்க ள் தூங்கும் நேரம் குறையு ம். மறுநாள் சோர்வுடன் இரு ப்பார்கள்.
இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகி யவைகளால் `ஸ்லீப் அப்னீயாசி ன்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படு ம். இந்த பாதிப்பு வந்து விட்டால் மூளைக்குசெல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்ப ன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால்மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆ கியவற்றின் செயற்பாடுகளும் பாதி க்கும். ஞாபகமறதி, ரத்த அழுத்த நோ ய்கள், ஆண்மைக்குறைவு போ ன்ற பிரச்சனைகளும் தோன்றக்கூடு ம்.
குறட்டை விடுபவர்களுக்கு அதன் பாதிப்பு எந்த அள விற்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக `ஸ்லீப்ஸ்டெ டி ’ செய்யவேண்டும். வீட்டிலே அவர்களை தூங்க வைத்து ` பாலிசோம்னா கிராபி’ என்ற கருவி மூலம் பாதிப்பை அளவி டலாம். ஆஸ்பத்திரியில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து, `ஸ்லீப் எம்.ஆர்.ஐ.’ செ ய்து குறட்டையின் பாதிப்பை அறிந்து அதற்கு தகுந்த படியும் நவீன சிகிச்சைகள் கொடுக்கலாம்.
சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச் சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ள மான க ழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திண றல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கி னா ல் மூச்சு திணறலோ, குற ட்டை தொந்தரவோ ஏற்படாது.
குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல்பரும னை கட்டுக்குள்கொண்டு வரவேண்டும். அதற்காக உட ற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவ னம் செலுத்தவேண்டும். பஞ்சுவைத் த தலையணையை சற் று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித் து அவர்கள் தூங்கவேண்டும்.
நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கி றோம். அதனால் மூக்கில் ஏற் படும் நோய்களையும், குறட் டையையும் அலட்சியம் செய் யாமல் அவ்வப் போது அதற்கு ரிய சிகிச்சைகளை பெற்று விட வேண்டும். நோய் வரும் முன்பு காக்கும் விழிப்புணர் வும் மனித சமூகத்திடம் வளர வேண்டும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...