Wednesday, August 26, 2020

உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச்சட்டிணியா..

 எப்பா தினமலரு!!..

நீயே இப்டி பண்ணா மீம்ஸ் கிரியேட்டர்ஸலாம் எங்க போறது!!??👌👌

செம்ம..😂😂


Image may contain: text that says '35 வயதா... இடமில்லை...! தி.மு.க., இளைஞர் அணியில்... 41 வயது உதயநிதி அதிரடி -நமது சிறப்பு நிருபர்- 35 வயதை தாண்டியவர்களுக்கு திமுக இளைஞர் அணியில் இடமில்லை என்று 41 வயதான உதயநிதி, நேற்று தீர்மானம் நிறைவேற்றினார்.'

குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

 *பிரான்சில் நடந்தது, 18 வயது வாலிபன் ஒரு வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகின்றான். அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் தவறுதலாக Vacuum cleaner போடும் போது wifiஐ துண்டித்து விட்டார்.*

*அதனால் வாலிபன் சண்டையிட்டு, வீட்டில் இருந்த அனைவரையும் கொன்று போட்டான்.* *இவரது தாய், தந்தை, சகோதரர், சகோதரி, வீட்டு பணியாளர்..*

*குற்றம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்த பொழுது அவன் விளையாடுவதைக் கண்டனர். அவரது குடும்பத்தினர் சுற்றி கொல்லப்பட்டு இருந்தனர்.*
*அவன் காவல் துறையினரிடம் காத்திருக்க சொல்லி தொடர்ந்து விளையாட அனுமதிக்கும்படி கூறினான்.*
*மொபைல்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜேட்டுகளின் அதிகபடியான பயன்பாடு காரணமாக மனநோயாளியாக மாறுவதற்கு முன்பு, குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கவனமாக இருக்கவேண்டும்..*

வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்....

 எஸ்பி பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் உள்ளார். உடல்நிலை சீராக உள்ளது. - மருத்துவமனை அறிக்கை....


Image may contain: text that says 'Print MGM HEALTHCARE Report MGMHC/SPB/11 August 26, 2020 6:30 PM Health Bulletin Thiru S P Balasubrahmanyam who had been admitted at MGM Healthcare due to COVID-19 continues be on Ventilator and EcMO support in the Intensive Care Unit (ICU). His current clinical condition is stable. He is conscious & responsive and continues to be closely monitored by our multidisciplinary clinical team. Anuradha. B Dr. Anuradha Baskaran Assistant Director- Medical Services MGM Healthcare MGM HEALTHCARE PVT LTD Aminjikarai Chennai 600029 info@mgmhealthcare.in mgmhealthcare.in'

Monday, August 10, 2020

இதெல்லாம் திராவிட பகுத்தறிவு பண்ணாடைகள்..

 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 அந்த மாய‌ கண்ணன் ஒரு தந்திரகாரன் என எல்லோரும் அறிவர், ஆனால் பின்னாளைய தமிழக இம்சைகளை குழப்பத்தில் விடும் அளவு அவன் மாபெரும் தந்திரகாரன் என்பது இப்பொழுதுதன் புரிகின்றது

கிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான்

அவர்கள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான்.

இதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் அவன் என்பதால் அவனை சமூக நீதி போராளிகள் எதிர்க்க முடியாது.

பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே. இதனால் கருப்பர் கூட்டமும் சத்தம் போட முடியாது

பூனூல் எல்லாம் போட்டதாக தகவல் இல்லை, அதனால் திராவிட போராளிகளுக்கும் அவனை எப்படி எதிர்ப்பது என தெரியவில்லை

அவன் பாஞ்சாலிக்கு நீதி செய்தான் இதனால் பெண்கள் வன்கொடுமையிலும் வரமாட்டான்.

இது போக கம்சன், சிசுபாலன், ஜெயரதன், துரியோதனன் என ஒரு டஜன் கோஷ்டிகளை அவன் அழித்து போட்டிருப்பதால் இது கம்சன் மண்ணா?, சிசுபாலன் மண்ணா? துரியோதனன் மண்ணா? என குழம்பி நிற்கின்றது அக்கோஷ்டி

ஒரே நேரத்தில் அவர்கள் மண் என சொல்லவும் முடியாது, ஒரே நேரத்தில் பல முப்பாட்டன்கள் வரவும் முடியாது

இதனால் சமூக நீதி, பார்பானியம், கருப்பபு கூட்டம், முப்பாட்டன், மண் என எந்த ரகத்திலும் கண்ணனை சேர்க்க முடியாமல் வாயில் துண்டு வைத்து அழுது கொண்டிருகின்றது அக்கோஷ்டி

பகவான் கண்ணன் அன்றே எல்லோரையும் சுற்றலில் விட்டவன், அவன் ஜெகஜால கில்லாடிகளான தமிழக இம்சைகளையும் கதற வைத்து கொண்டிருக்கின்றான் என்பதுதான் சுவாரஸ்யம்.

பழமையான கட்டிடமாக இருந்தது எந்த மாளிகை????

 தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப்பட்டதல்ல! அக்பரின் அவையில் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட ஒன்பது சிறப்பு மிக்க அவை அறிஞர்களில் ஒருவரான ராஜா மான் சிங் என்பவரின் வழி தோன்றலாம் ராஜா ஜெய் சிங்கிற்கு சொந்தமான தேஜோமஹாலயா என்று அழைக்கப்பட்டு வந்த இந்த சிவனின் ஆலயத்தை மும்தாஜின் கல்லறை ஆக்குவதாக கூறி வலுக்கட்டாயமாக பறித்து கொண்டது தான் ஷாஜஹான் செய்த சாதனை! ஆனால் உண்மையில் தனது பதினான்காவது பிரசவத்தின் போது எழுந்த சில சிக்கல்களால் மும்தாஜ் இறந்தது தற்போதைய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூர் என்ற இடத்தில். மும்தாஜின் கல்லறையும் அங்கு தான் உள்ளது. அது ஆக்ராவில் இருந்து ஏறக்குறைய ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இறந்தவரின் கல்லறைகளை மீண்டும் தோண்டி எடுப்பதென்பது இஸ்லாத்தின் படி ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று. மேலும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சடலத்தை அடக்கம் செய்யப்பட்ட பல வருடங்களுக்கு பிறகு எடுத்து கொண்டு செல்வது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

ஷாஜஹான் காலத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்த ஒரு வெளிநாட்டு பயணியும் இப்படி ஓர் கட்டிடம் கட்டப்படுவதற்கான எந்த ஒரு குறிப்பையும் எழுதி வைக்க வில்லை! ஷாஜஹானின் வரலாற்றை பாதுஷா நாமா என்ற பெயரில் எழுதிய அப்துல் ஹமீது லாஹோரி இதுபற்றி தனது நூலில் ஏதும் குறிப்பிட வில்லை! மேலும் மொகலாயர்களின் வரவு செலவு கணக்கு பதிவேடுகளிலும் கூட இந்த கட்டிடம் கட்ட செலவிடப்பட்டதாக எந்த தொகையும் குறிப்பிட படவில்லை! ஷாஜஹானின் 30 ஆண்டு ஆட்சி காலத்தில் சிறியதும் பெரியதுமாய் 40 போர்கள் நடந்துள்ளது! இத்தனை போர்களில் ஈடுபட ஏராளமான நிதி செலவிடப்பட்டிருக்க வேண்டும்! அப்படி நிதி நெருக்கடியின் போது இது போன்ற கட்டிடம் கட்ட நிதி எங்கிருந்து, எப்படி கிட்டியது???? இதுமட்டுமின்றி ஆக்ராவின் ஆட்சி பொறுப்பாளராக இருந்த ஔரங்கசீப் தனது தந்ததை ஷாஜஹானுக்கு எழுதிய கடிதத்தில் 300 வருடங்கள் பழமையான இந்த கட்டிடம் மழைகாலங்களில் சற்று ஒழுகுவதாகவும் மராமத்து பணிகள் செய்ய தகுந்த நிதி ஒதுக்க வேண்டும் என்று எழுதிய கடிதம் மொகலாயர்களின் revenue recordகளில் உள்ளது. அப்படி ஷாஜஹான் காலத்திலேயே 300 வருடங்கள் பழமையான கட்டிடமாக இருந்தது எந்த மாளிகை????

ஷாஜஹான், கல்கத்தா நகரில் குடியேறி இருந்த போர்த்துகீசியர்கள் மீது படையெடுத்ததால் தனது கஜானாவை காலியாக்கினான் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஷாஜஹான் பொதுவாகவே அதீத குடிபோதையிலேயே வாழ்ந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஷாஜஹானின் (Harem) என்று அழைக்கப்படும் அடிமை பெண்களின் அந்தபுரத்தில் 3500 மேற்பட்ட பெண்கள் இருந்தார்கள் என்றும். புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது போன்ற ஒருவன் மனைவியின் மீது காதல் கொண்டு தாஜ் மஹால் போன்ற காதல் சின்னத்தை உருவாக்கியிருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார். இவர் True Story of the Taj Mahal என்ற புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

ஜாட் இன் மக்கள் சிவனை தேஜாஜி என்று அழைப்பர். ஆக்ரா என்ற பெயரே அந்த ஊரில் இருந்த அக்ரேஷ்வர் மஹாதேவன் என்ற சிவனின் ஆலயத்தினால் தான் வழக்கத்தில் வந்தது என்றும் கூறுவர். தேஜோ மாஹாலயா என்று இந்த ஆலயம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மஹாலயா என்றால் பெரிய ஆலயம் என்று அர்த்தம். இது காலப்போக்கில் மருவி மஹால் அல்லது மஹல் என்று மாறியது. இது நாகநாதர் திருக்கோயில் என்ற வாதமும் இவ்வூர் மக்களால் முன் வைக்க படுகிறது. இந்த ஆலயத்தின் உச்சியில் பூர்ண கும்ப கலசம் மற்றும் திரிசூலம் இடம்பெற்றுள்ளது. மேலும் வேத முறைப்படி பிராகாரங்களும், ஆலயத்தின் உள்ளே நுழையும் முன் நீராடுவதற்காக படித்துறைகளும் யமுனை கரையில் அமைந்துள்ளது. இந்த மாளிகை எங்கும் பாகங்களின் உருவங்கள் மற்றும் தாமரை மலரின் சித்திரங்களும் நிறைந்துள்ளது. இஸ்லாமிய வழக்கங்களின் படி இது போன்ற சித்திரங்கள் ஹராம் என்பர். நிலவறை, சுரங்க பாதைகள் கொண்ட இந்த மாளிகை கண்டிப்பாக சமாதியாக மட்டும் இருக்க முடியாது.

Image may contain: ‎text that says '‎95% 09:00 Anuradha Govindan இருக்க முடியாது. שש-ש NOT TAJ MAHAL I NOT A TOMB IT IS TEJO-MAHALAYA I A SHIV TEMPLE PRE DATES SHAHJHAN BY 300 YEARS ACCORDING TO CARBON DA TING facebook.com/Sanskr Write a comment...‎'‎

இன்று தீடீரென்று மனத்தில் ஒரு கேள்வி.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் அர்ச்சகராக உள்ளனர் நீங்களும் அர்ச்சகராக வேண்டும் என்று நம்மை துண்டுபவர்கள் ...

அதே சாதியினர் Google, Microsoft, TATA போன்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் அமர்ந்து உலகை ஆள்கிறார்களே...
அதுபோல் நீங்களும் ஆகவேண்டும் என்று ஏன் நம்மை தூண்டுவதில்லை??

இந்தியாவில் அறிவியலில் வாங்கிய மூன்று நோபல் பரிசுகளும் அவர்களே வாங்கியுள்ளார்கள்! நம் ராணுவத்தில் உயரிய விருதான பரம்வீர் சக்ராவைகூட அவர்கள்தான் முதலில் வாங்கினார்கள்! எனவே அவர்களை முறியடித்து நீங்கள் இதுபோல் விருதை அடையவேண்டும் என்று ஏன் நம்மை தூண்டவில்லை???

நாம் எல்லாம் அர்ச்சகர் ஆவதற்கு தான் தகுதியானவர்களா??

நம்மை அர்ச்சகர் ஆக வேண்டும் என்று துண்டுகிரார்களே.... அவர்கள் குழந்தைகள் எத்தனை பேர் அர்ச்சகராக உள்ளனர்??? அல்லது அர்ச்சகர் வேலைக்கு முயற்சிக்கின்றனர் ??

அர்ச்சகர் வேலை அவ்வளவு சிறந்ததென்றால் அவர்களின் குழந்தைகளையும் அர்ச்சகர் ஆக்கலாம் தானே ???

ஏன் நம்மை மட்டும் தூண்டுகிறார்கள்....
கொஞ்சம் சிந்தியுங்கள்.....
எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களிடம்...
இது போன்று பேசி அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள்.....

அதைக் கேட்டுக் கொண்டு நாமும் ஜாதியின் அடிப்படையில் பிரிந்து நிற்கின்றோம்....

இவர்களின் பிராமண எதிர்ப்பு கட்டமைப்பு பயன்படுத்தி தேர்தல் வெற்றி பெற்றார்கள்.

அப்போது இங்கு உள்ள அனைத்து இந்துக்களும் ஏற்றார்கள். ஆனால் அதையே 50-வருடமாக திரும்ப திரும்ப சொல்லும் போது தான் இவர்களின் பித்தலாட்டம் வெளியே தெரிகிறது.

எது அன்று அவர்களுக்கு சரியாக பட்டதோ இன்று அது தான் சவக்குழி தெரியாமல் அரசியல் செய்கிறார்கள்.

இனிமேலாவது இது போல் பேசுபவரிடம் உங்கள் பிள்ளைகளை அர்ச்சகர் ஆக்குகங்கள் நாங்களும் அதற்கான முயற்சிகளை செய்கிறோம் என்று கூறுங்கள்...

ஏர் இந்தியா விமான விபத்திற்கு 2 மணி நேரத்திற்குமுன் அதே பிரச்சினையை சந்தித்த மற்றொரு விமானம்.

 கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் முதல்முறை தரையிறங்க முயற்சி செய்தபின் 2-வது முறையாக இண்டிகோ விமானம் தரையிறங்கியது தெரியவந்துள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்திற்கு 2 மணி நேரத்திற்குமுன் அதே பிரச்சினையை சந்தித்த மற்றொரு விமானம்
கரிப்பூர் விமானநிலையம்


















துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.41 மணியளவில் கரிப்பூர் விமான நிலையத்தின் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்கும்போது சறுக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்தனர். அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். 140-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றன.

கனமழை காரணமாக விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விமான நிலையத்திற்கு மேலே வட்டமடித்ததாகவும், இரண்டு முறை தரையிறக்க முயன்று தோல்வியடைந்து 3-வது முறையாக தரையிறக்கும்போது விபத்திற்குள்ளானதாகவும் விமான போக்குவரத்தை கண்காணிக்கும் ‘Flightradar24’ என லைவ் வெப்சைட் தகவல் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் அதே இணைய தளத்தின் தகவல்படி, ஏர் இந்தியா விமான விபத்து நடந்ததற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இண்டிகோ விமானம் பெங்களூருவில் இருந்து கரிப்பூர் வந்துள்ளது. கனமழை காரணமாக விமானியால் முதல் முறை தரையிறக்க முடியவில்லை. 2-வது முறையாகத்தான் தரையிறக்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் அமித சிங் தெரிவித்துள்ளார்.

25 வருடத்திற்கு மேல் விமானத்துறையில் அனுபவம் உள்ள அமித் சிங், ‘‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரையிறங்கிய அதே 10-வது ஓடுதளத்தில் இண்டிகோ விமானம் தரை இறங்கியுள்ளது. முதல்முறை தரையிறங்கும் முயற்சி இண்டிகோவுக்கும் தோல்வியில் முடிந்துள்ளது. கனமழை பெய்ததால் விமானத்தை தரையிறக்கக் கூடிய அளவிற்கு தெளிவான பார்வை கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது மேகங்கள் தரையிறங்கக் கூடிய ஓடுதளத்தை மறைத்திருக்கிலாம்.

கடுமையான வானிலை இண்டிகோவை குறைந்த அளவில் பாதித்திருக்கலாம். மேலும், ATR, TurboProp Aircraft என்ஜின் என்பதால் போயிங் ஜெட்-என்ஜினைவிட வேகம் குறைவு என்பதால் அதுவும் காரணமாக இருந்திருக்கலாம்’’என்றார்.

Friday, August 7, 2020

இரவு 10மணி தகவல்படி 11 பேர் மரணம்.

 கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியிருந்த 191 பேரில் 190 பேர் மீட்பு! - மத்திய தொழிற் பாதுகாப்பு படை தகவல்

இறைவா.....
கடல் கடந்து தன் தாய்நாட்டை நோக்கி ஆவலாக வந்த உறவுகளை ஏமாற்றி விடாதே இறைவா....
பல சந்தோசங்களை இழந்தவர்கள்.....
இனி அவர்களிடம் இழக்க எதுவும் இல்லை...
இவர்களுக்கு உயிர் இழப்பையும் குடுத்துவிடாதே இறைவா....
இவர்களின் பல நாள் கனவான அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைத்து விடு இறைவா......

மீட்கப் பட்ட அனைவரும் பூரண குணம் அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!! இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்!! மிக பெரிய துயர சம்பவம்!!!

#Pilot | #AirIndia | #KeralaFlightAccident | #AirIndiaExpress

Image may contain: one or more people and crowd

புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்.

 சிவப்பு அரிசியில் புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது.

புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்


















தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - ஒரு கப்
உளுந்து - கால் கப்
வெங்காயம் - ஒன்று
கேரட் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் உப்பு - தேவையான அளவு.

சிவப்பு அரிசி

செய்முறை:


வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

சிவப்பு அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவிட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு... மாவுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி மாவை கனமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு ஊத்தப்பமாக சுட்டு எடுக்கவும்.

சட்னியுடன் பரிமாறவும்.

சத்தான சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம் ரெடி.

அரண்மனை அரசியல்.

#குகசெல்வம்

இவர் ஒரு காலத்து ஜேப்பியாரின் சீடர். அந்த காலத்து ரவுடி என்று சொல்லலாம். பின் திமுக வுக்கு வந்து ஸ்டாலின் பின்னாடி சுற்றிக் கொண்டிருந்தார். இவருக்கு ஜாதி ஓட்டுகள் உண்டா என்று தெரியவில்லை. இவரின் அடையாளம் திமுக தான். மற்றப்படி இவர் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை. சொன்னதை செய்து வந்திருப்பார் போலிருக்கு !

தென் சென்னை மாவட்ட செயலாளர் பதவி கேட்டு 15 வருடமாக காத்திருந்தார். இப்போது ஜெ.அன்பழகன் மறைவுக்கு பிறகும கிடைக்காத துக்கத்தில் வெளியேறுகிறார்.

இவர் வெளியேறியதால் திமுக கலகலத்தெல்லாம் போகாது. ஆனால் திமுக வில் எல்லாம் சரியாக இருப்பது போன்ற தோற்றத்தை உடைக்க உதவும்.
திமுக வில் கடுமையான பலப் பரீட்சை சண்டை நடக்கிறது. அரண்மனை அரசியல்.

ஒரு வயதான ராஜா இறந்தவுடன் அரண்மனையில் நிச்சயம் யாருக்கு அதிக செல்வாக்கு என்று சண்டை தொடங்குவது சகஜம். முறையாக இளவரசர் பதவி ஏற்றாலும் பழைய அல்லக்கைகள் மெல்ல பின்னுக்கு தள்ளப்படும். இந்த திமுக விலோ இப்போது புதிதாக ஒரு பேரனும் நுழைந்து அவரது ஜாலராக்களை உள்ளே கொண்டு வருகிறார். (இங்கு இளவரசே 70 வயது)

இந்த அரண்மனை சண்டை ஒரு வழியாக சில பல தலைகள் உருண்ட பின் நிற்கும்.

எனவே மக்களே இந்த கு.க. செல்வம் விஷயம் ஒரு "தேநீர் கோப்பையில் விளைந்த புயலே" !!
இவருக்கு பின்னாடி பெரிய அளவில் ஆட்கள் வெளியேற வாய்ப்பு மிக குறைவு.

இந்த நபருக்கு இதுநாள் வரை அரசியலில் இருந்ததற்கு இன்று கிடைத்த விளம்பரம் தான் அதிக பட்சம். His 15 minutes Popularity is over.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால்.. இவரும் இவரது தலைவரை போலவே துண்டு சீட்டு குடுத்து படிக்க சொன்னாலும் தடுமாறுகிறார். இவர் ஒரு மக்கள் பிரதிநிதியாம். காலக் கொடுமை.

இந்த கூட்டமே தற்குறி கூட்டம் போலிருக்கு.

போங்க .. போங்க.. பஞ்சாயத்து முடிஞ்சது...

Image may contain: 2 people, people sitting

பாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது - தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

 இயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாரதிராஜாவை அன்னபோஸ்ட் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது - தயாரிப்பாளர் சிங்காரவேலன்

இந்நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இதுகுறித்து கூறும்போது, தயாரிப்பாளர் சங்கத்தில் 1351 பேர் வாக்களிக்கும் தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். இந்த சங்கத்தில் 10 ஆண்டுகளாக சரியான நிர்வாகிகள் தேர்வாகவில்லை. இதனால் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. 

பாரதிராஜா சில தயாரிப்பாளர்களை சேர்த்துக் கொண்டு புதிய சங்கம் ஆரம்பித்து இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில் தாணு அவர்கள் பேசும் போது, பாரதிராஜா மீண்டும் சங்கத்தில் வாருங்கள்... உங்களுக்கு அன்னபோஸ்ட்டாக தலைவர் பதவி கொடுக்கிறோம் என்று கூறினார். 

யாரிடமும் எந்த கருத்தும் கேட்காமல் தாணு அவர்கள் அவரது சொந்த கருத்தை கூறினார். இதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆதலால் தொடர்ந்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம். தேர்தலில் களமிறங்க இருக்கிறோம் என்றார்.

Thursday, August 6, 2020

ஓம் கருப்பண்ண சாமியே சரணம்.

 கடும் கோடையிலே சொட்டு தண்ணீருக்கே வழி இல்லாத நேரத்திலே வீசுகின்ற அனல் காற்றினிலே வாடுகின்ற பறவையாக இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்ல முடியாமல் தவிக்கின்ற பறவைகள் போல வாடி நிற்கின்றோம் அய்யா.

புலம்பெயர்ந்து நாங்கள் செல்லயில் உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் கடும் வறட்சியில் என் அய்யா உனக்கு நான் செவ் இளநீர் தேடி காடு மேடெல்லாம் சுற்றித் கலைத்து நிற்கின்றேன் ஐயா

பாவி மக்கள் நாங்கள் உனக்கு என்ன செய்ய இயலும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிற பிள்ளைகளை கையில் பிடித்துக்கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கிட்டு கண்ணீரை மட்டும் சிந்திவிட்டு எங்கள் கண்ணீரில் உன் தாகத்தை தனித்து விட்டு உன்னை பிரிய முடியாமல் ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க சென்றோம் அய்யா.

என் பிள்ளைகள் பசியால் வாடி நிற்பதை கண்டு பசியை போக்க நீ இருக்கும் பணை மரத்திலிருந்து பணபழம் ஒன்றைக் கீழே விழ செய்து என் பிள்ளைகள் பசி அடக்கி எங்களை வழி அனுப்பி வைத்தாயே.

அந்த நிமிடத்திலேயே என் குடும்பமே உன் பாதத்தில் விழுந்து கதறி அழுது எவ்வளவு பஞ்சம் வந்தாலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம் ஐயா மீண்டும் உங்களிடமே வந்து சேருவோம் என்று சபதமேற்று சென்றோம் அய்யா.

தன் பிள்ளையின் பசியறிந்து உணவுக்கு படியளக்கும் என் தெய்வமே உன்னை விட்டு நாங்கள் எங்கு சென்றாலும் உன் நினைவாகவே தான் நாங்கள் இருப்போம் என்று எங்கள் கூடவே வந்தாயோ ஐயா.

ஊரைக் காலி செய்து நடைவழி பயணமாய் காடு மலைகளை கடந்து பஞ்சம் பிழைக்க ஒரு இடத்தை கண்டோம் அய்யா. பிள்ளைகள் பசியார எங்களுக்கு கூலி வேலை கிடைத்தது ஐயா.

நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்து வந்த துக்கம் தாங்காமல் எங்களின் பாதுகாப்பிற்காக நீங்களும் எங்களுடன் ஒரு பிடி மண்ணில் பயணித்து வந்துவிட்டீர்கள் அய்யா.

எவ்வளவு பெரிய பாசக்காரன் நீ உன் பிள்ளைகளின் கஷ்டத்திற்காக அவர்களுடனே நீயும் சேர்ந்து கஷ்டப்பட்டு அவர்களை பாதுகாத்து நீ நிற்கிறாய்.

உங்கள் பிரிந்து வந்து உன் திருமுகத்தை காணாத நிற்கையில் இரவு சொப்பனத்தில் உன் வெள்ளை குதிரையுடன் வீச்சருவாள் உடன் கையில் சாட்டை உடன் காட்சி கொடுத்தது ஆசீர்வதிப்பாய்

அந்த வருடமே மழை மும்மாரி பொழிந்து ஊரில் நல்ல செழுமை நிலையை ஏற்படுத்தி விட்டு அனைவரின் சொப்பனத்தில் ஊருக்கு திரும்ப உத்தரவிட்டு எங்கோ இருக்கும் எங்களை ஊருக்கு வர செய்தாய்.

வந்து பார்த்தால் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தை கண்டு வியந்தோம் நிரம்பாத ஏரி நிரம்பி வழிகிறது வற்றி கிடந்த கிணறுகள் நீரில் மூழ்கி கிடக்கிறது.

அப்போதுதான் புரிந்தது தன் பிள்ளையின் பாசத்தை கண்டு ஐயா கருப்பன் அனைத்தையும் செய்துள்ளான் என்று கருப்பன் பாசத்தை அளந்து பார்க்க முடியாது என்பது உண்மைதான்.

Image may contain: one or more people and people standing

இன்று சங்கடஹர சதுர்த்தி.

 விநாயகரை வழிபட உகந்தது சதுர்த்தி தினம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் சதுர்த்தி திதி வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது.

வாழ்க எல்லா வளங்களுடன்.

No photo description available.

தமிழக அரசு தவறாக பாதையில் செல்லுகிறது.

 திமுக ஏன் இந்த மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. எது வந்தாலும் எதிர்ப்பது என்பது அவர்கள் நிலை.

ஆனால் அதிமுக?? அடுத்த தேர்தலை மனதில் கொண்டு முட்டாள்தனமாக திமுகவின் வீரியத்தை முனை மழுங்க செய்வதாக நினைத்து கொண்டு தவறு செய்து விட்டது.

திமுக வை முந்திக் கொண்டு செயல்பட்டு தான் அதற்கு பயப்படுவடுவதை ஒத்துக் கொண்டு விட்டது.

இப்போது என்ன நடக்கும்? திமுக வழக்கம் போல் "பார்த்தியா!! பயந்துட்டாங்க!" என்று மார் தட்டும்.

எவனாவது இதற்காக ஒட்டை மாத்தி அதிமுகவுக்கு குத்த போறானா?

வாய்ப்பேயில்ல ராசா!
எப்படியும் ஜாதி பார்த்து காசு வாங்கிட்டு குத்த போறானுங்க

ஆக தோற்றாலும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் வகையில் இது ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு இல்லை, மாறி வரும் உலகுக்கு ஏற்ப தமிழக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் திட்டம் இது என்ற உண்மையை உரத்து கூறி செல்லும் வாய்ப்பை இழந்து நிற்கிறது.

அது சரி! அதுக்கெல்லாம் முதுகெலும்பு வேணுமே!

நெல்லி மரம் வளர்த்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

 செல்வாதிபதி '#குபேரனே #வறுமையில்_வாடிய_போது_மீண்டும்_பணக்காரனாக_செய்த_பரிகாரம்_என்னன்னு_நீங்களும்_தெரிஞ்சிக்கனுமா?

சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும் பொழுது அந்த குபேரனுக்கு கூட ஒரு முறை வறுமை ஏற்பட்டது என்று சொன்னால் அதிர்ச்சியாக தானே இருக்கும்? அவருக்கு ஏன் இந்த நிலைமை? குபேரனுக்கு எப்படி வறுமை ஏற்பட்டது? அதற்காக அவர் என்ன செய்தார்? மீண்டும் அவருக்கு எப்படி பணக்காரன் ஆகும் வாய்ப்பு கிட்டியது? இது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

ஸ்ரீமன் நாராயணருக்கே திருமண உதவி செய்ய குபேரன் கடன் கொடுத்ததாக புராண குறிப்புகள் உள்ளன. திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவிலில் இருக்கும் உண்டியலுக்கு குபேர காணிக்கை என்பது தான் பெயர். கலியுகம் முடியும் வரை அதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை குபேரனுக்கு வட்டியாக மகாவிஷ்ணு செலுத்தப்படுவது என்பது நிபந்தனை. இதில் அதர்ம வழியில் சம்பாதிப்பவர்கள் பணமெல்லாம் வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதித்து காணிக்கை செலுத்துபவர்களின் பணமெல்லாம் அசலின் ஒரு பகுதியாகவும் ஏழுமலையான் நம்மிடம் வசூலிக்கிறார். இவ்வாறு இருக்கும் பொழுது அந்த குபேரனுக்கு எப்படி வறுமை ஏற்பட்டு இருக்கும்? என்கிற கதையை பார்ப்போம்.

ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் நாடு, நகரங்களை எல்லாம் பெரும்பாலானோர் இழந்து நிற்கதியாய் நின்றனர். அவர்களில் ஒருவர் குபேரன். போரின் பொழுது இழந்த தன்னுடைய நாடு, நகரமெல்லாம் திரும்ப கிடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் குபேரர்.

அந்த சமயத்தில் தீவிர சிவபக்தரான குபேரர் சிவபெருமானிடம் சென்று ஆலோசனை கேட்டார். அதற்கு சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீர் உமது வீட்டில் நெல்லி மரங்களை வளர்த்து வருவாயாக’ என்று கூறினாராம். சிவபெருமான் வாக்கை வேதவாக்காக எண்ணிய குபேரனும் அப்படியே வளர்த்து வந்தாராம்.

நெல்லி மரங்கள் அனைத்தும் நெடு நெடுவென வளர்ந்து பூக்கள் பூத்து, காய்க்க துவங்கியது. பின்னர் காய்கள் அனைத்தும் கனிகளாக மாறி நெல்லி மரங்கள் செழித்து பசுமையாக வளர்ந்து நின்றன. இந்த நெல்லி மரங்கள் எந்த அளவிற்கு பசுமையாக வளர்ந்து வந்ததோ அதே போல குபேரன் இழந்த நாடு நகரம் எல்லாம் இழந்தது இழந்த படியே திரும்பவும் அவருக்கு கிடைத்ததாம். இதனால் மனம் மகிழ்ந்த குபேரன் சிவபெருமானிடம் ஓடிச்சென்று தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்கு முனைந்தார்.

ஈசனே நீங்கள் கூறியபடி நான் வளர்த்த நெல்லி மரங்கள் வளர வளர என்னுடைய செல்வ வளமும் விரைவாக வளர்ந்து வந்தது. அது எப்படி சாத்தியமானது இறைவா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே என்று கேட்டாராம். அதற்கு பதிலளித்த சிவபெருமான் கூறியது இது தான்.

நெல்லி மரம் என்பது மகாலட்சுமியின் சொரூபம். நீ தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது நெல்லிமரங்களை அல்ல, லக்ஷ்மி தேவிகளை தான் என்றாராம். எந்த அளவிற்கு லக்ஷ்மி தேவிகள் வளர்ந்து உன் வீட்டில் நெல்லி மரங்களாக கனிகளை கொடுத்து பெருகி நின்றதோ அதே போல் உன்னுடைய செல்வ வளமும் பெருகியது. மகாலட்சுமி இருக்கும் இடத்தில் வறுமைக்கு இடம் இல்லை அல்லவா? அதனால் தான் இந்த பரிகாரத்தை உனக்கு உபதேசித்தேன் என்றாராம்.

எனவே நெல்லி மரம் வளர்த்து வந்தால் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுவது உண்மையே. செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் குபேரனுக்கு வறுமை ஏற்பட்ட பொழுது சிவபெருமான் பரிகாரமாக செய்ய சொன்னது நெல்லி மரங்களை வளர்த்தால் தான். அது குபேரனுக்கு மட்டும் அல்ல. மனிதர்களாகிய நமக்கும் கூறப்பட்ட எளிய பரிகாரம் தான். ஒவ்வொரு வீட்டிலும் நெல்லி மரம் வளர்ப்பது மகா லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது ஆரோக்கியம் சார்ந்த விஷயம். நெல்லி மரத்தை வளர்த்தால் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் கிடைக்கும். செல்வதற்கு செல்வமும் பெருகும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

Image may contain: 1 person

#அயோத்தியா...

 அயோத்தியாவில் இருந்து 7 கிமீ தூரத்தில் இருக்கும் Faizabad ல் நிலம் இந்துக்களால் ஆக்ரமிக்கப்பட்டதாக எழுதுகிறார்கள்.

அயோத்தியில் கோயிலை கட்டி
அந்த இடத்தை வியாபார ஸ்தலமாக்க நடக்கும் முயற்சியே இந்த கோயில் என எழுதுகிறார்கள்.

அங்கிருக்கும் நிலம் இந்துக்களால் விலைக்கு வாங்கப்பட்டதாக வருத்தப்படுகிறார்கள்.

Faizabad ன் பெயர் SAKET - means heaven!!

கோசல நாட்டின் முக்கிய இடமாக இருந்தது முன்பு Saket எனப்பட்ட Faizabad.

Awadh ன் நவாப் Faiz Baksh இறந்த பின் தான் இந்த இடம் Faizabad என பெயர் மாற்றம் ஆனது.

1722 ல் Sadat Ali khan 1 தலைமையில் அவுத் Faizabad தலைநகரால் முகலாயர்கள் காலத்தில் ஆளப்பட்டது.
முகலாயர்களின் அவுரங்கசிப் காலத்தில் இருந்து அந்த ஊரில் இருந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன.

அயோத்தியாவின் பக்கத்தில் அரண்மனை கட்டினான் Sadat Ali Khan . இவனின் தாத்தா ஈரானில் இருந்து ஷாஜஹான் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பணக்கார வியாபாரி!!

இந்த நவாப் காலத்தில் தான் நாதிர்ஷா என்னும் ஈரானிய மன்னன் டில்லி வரை வந்து முகலாயரை தோற்கடித்து 1739 ல் Faizabad ன் நவாப்பை கொன்றான்.

எத்தனை முறை இந்த Faizabad ன் நிலம் முகலாயர்களால், ஈரானியர்களால் பறிக்கப்பட்டன.

எத்தனை இந்து மக்கள் கொல்லப்பட்டனர்?? எத்தனை இந்துக்களின் நிலங்கள் கால காலமாக முகலாயர்களால் ஆளப்பட்டன??

HISTORY REPEAT ITSELF!!

இழந்தவனுக்கு எத்தனை ஆண்டுகளாயினும் இழந்தவை திரும்ப கிடைக்கும். அது தான் கர்மா.

கர்மாவிற்கு மன்னராட்சி, மக்களாட்சி என்ற வித்யாசம் தேவையில்லை!!!

2018 நவம்பரில் யோகியின் அரசு Faizabad மாவட்டத்தை அயோத்தி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்தது.

பல வருடங்களாக இந்துக்கள் இழந்த நிலங்களை, உயிர்களை பற்றி யார் எழுதுவது??

உயிருக்கு உத்ரவாதம் இல்லாத நிலையிலும் அத்தனை அட்டூழியர்களையும் மீறி உயிர் பிழைத்து இருப்பவன் தான் இன்றைய இந்து.

இப்ப Faizabad ல், அயோத்தியாவில் கோயில் சார்ந்த வியாபாரத்திற்கு நிலம் பணம் கொடுத்து தான் வாங்கி இருக்கான். யாரிடமும் இருந்து பிடுங்கவில்லை.

எந்த மதம் தான் வியாபாரம் செய்யவில்லை!!
ஆமாம், கோயில்களுக்கான பூஜை சாமான் விற்பவர் இந்துக்கள் மட்டுமா??
அயோத்தியில் அனைத்து மத வியாபாரிகளும் உண்டு!!!

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான கோயில்களை சுற்றி கோயில் சார்ந்த வியாபாரிகள் அனைத்து மதத்தையும் சார்ந்தவர்களே.

இந்துக்களின் உரிமையை, உணர்வை கிண்டல் செய்வது அளவுக்கு அதிகமான நடுநிலையை பொது வெளியில் காட்ட நினைப்பவர்களே.

இதன் பெயர் நடு நிலைமையாம்!! அதே நடுநிலையோடு மற்ற மதத்தையும் கிண்டல் செய்து பாருங்களேன்!!
பிற மத வியாபாரத்தையும், அது சார்ந்த வெளிநாட்டு பயணத்தையும் பற்றி யாராவது பேசுவார்களா??

உள்குத்தோ??

 ஸ்டாலின் திமுக வில் இருக்கும் 90% (!) இந்துக்களை சமாதானப் படுத்த முயலும் போது... ஆ.ராசா சட்டென்று வந்து ஆட்டதை ஏன் கலைக்கிறாரு?

அக்கா கனிமொழி ஏவி விட்டுச்சோ,? உள்குத்தோ??

குத்துனது நண்பனா இருந்தா உயிரே போனாலும் வெளியே சொல்ல கூடாதுப்பா. ... 

Image may contain: 2 people, people sitting

புத்தகம் எப்போது வெளியீடு !

 நிகழ்கால தமிழகத்தை கட்டியமைத்த கடவுள் கருணாநிதி என்று ஒரு கூட்டம் சொல்லி திரிகிறது.

இது எத்தனை பெரிய பம்மாத்து?

இதற்கு பதில் சொல்லலாம் என்று எழுத உட்கார்ந்த பிறகுதான் நான் ஒரு புத்தகம் எழுத வேண்டியுள்ளது என்று உணர்கிறேன்.

இதான் திமுக வின் டெக்னிக். போகிற போக்கில் ஒரு பெரும் பொய்யை சொல்லி செல்வார்கள்.
அவர்கள் எழுதுவது வெறும் இரண்டு வரிகளே!

ஆனால் அது பொய் என்று நிறுவ நாம் ஒரு புத்தகமே எழுத வேண்டும்.

அவ்வளவு கஷ்டப்பட்டு ராவும் பகலுமாக எழுதி முன்னே கொண்டு வைத்தால் இதெல்லாம் ஜாதி காழ்ப்புணர்வில் சொல்கிறீர்கள் என்று ஒற்றை அடியில் சொல்லி நகர்ந்து விடும் மூடர்களை கொண்ட கூட்டம் இந்த திமுக.

ஒரே ஒரு உதாரணம். கடந்த 4 மாதங்களில் மட்டும் பாருங்கள். இவர்கள் மீது வைக்கப்படும் எந்த குற்றசாட்டுக்கும் பதிலே சொல்ல மாட்டார்கள்.
மேலே மேலே சம்பந்தமில்லாமல் விஷயங்களில் தாவி தொடர்ந்து பொய்களை சொல்லிக் கொண்டே செல்வார்கள்.

தமிழக மக்களில் 70% மக்களின் மூடத்தனத்தின், சுயநலத்தில் ஜாதி அபிமானத்தின் மீது வைத்திருக்கும் அசாத்தியமான நம்பிக்கை !

இது ஒன்றே இவர்களை இத்தனை நாள் வாழ வைத்திருக்கிறது. வளர வைத்திருக்கிறது.
ஒரு நல்லாட்சி எப்படி இருக்கும் என்பதை மறந்தே போன ஒரு கூட்டம் நாம். மறக்கடித்த கூட்டம் இவர்கள்.

ஒரு 50 ஆண்டுகால தவறுகளை களைய சரியான தலைமை இல்லையென்றால் இன்னும் 100 வருடங்கள் ஆகலாம்.

Image may contain: one or more people

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...