Friday, April 30, 2021

30 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!

 அந்தந்த விஷயங்களை அந்தந்த வயதில் அனுபவித்துவிட வேண்டும். காலம் கழித்து அதை அனுபவிக்கலாம், ஆனால், சமூகம் நம்மை கோமாளி போல பார்க்கும். ஐந்து வயது வரை மூன்று சக்கர சைக்கிள் ஓட்டலாம், 20 வயதிலும் ஓட்டலாம், ஆனால், இவ்வுலகின் பார்வை வேறுவிதமாக இருக்கும்.

அதே போல தான், பதின் பருவம், இளம் பருவம் என அந்தந்த பருவத்தில் சிலவற்றை நீங்கள் அனுபவித்துவிட வேண்டும். இல்லையேல் அதன் சுவாரஸ்யம் பிறகு எப்போது அனுபவித்தாலும் கிடைக்கவே கிடைக்காது. அந்த வகையில், 30 வயதை தாண்டுவதற்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டியவை பற்றி இனிக் காணலாம்…
அனுபவம் #1
சொந்த காலில் நிற்க வேண்டும்!
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.
அனுபவம் #2
உலகம் சுற்றும் வாலிபன்!
குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியா-வாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.
அனுபவம் #3
பேரார்வம்!
பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.
happy young man in sea and sunrise
அனுபவம் #4
தோல்வி!
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான். ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.
அனுபவம் #5
முதலீடு!
சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.
அனுபவம் #6
நிப்பாட்டு
ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது. எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா, நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.
அனுபவம் #7
உண்மையான நட்பு!
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அனுபவம் #8
பிடிக்காவிடில் பிரிவு!
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா? வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.
அனுபவம் #9
சேமிப்பு
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.
அனுபவம் #10
கைதேர்ந்தவர்!
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.
அனுபவம் #11
ஆராய்ந்து செயல்படுதல்!
கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை. மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
அனுபவம் #12
நேரம் பொன் போன்றது!
நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.
அனுபவம் #13
நெட்வர்க்!
ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள். ஆம், 30 வயதுக்கு மேல் நீங்கள் ஓர் நெட்வர்க் போல, பணியிடம், வாழ்விடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும். இது உங்களை பல நிலைகள் உயர உதவும்.
அனுபவம் #14
நீங்களாக இருங்கள்!
மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.
அனுபவம் #15
படிப்பில் உயரம்!
உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை. இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

 தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறிய தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது
வாக்குப்பதிவு எந்திரம்


















தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது.

மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சென்னையில் உள்ள 3 மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக அதிகபட்சமாக 4 மேஜைகள் போடப்படுகின்றன. ஒரு மேஜையில் 500 தபால் வாக்குகள் வரை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மின்னணு வாக்குகள் 14 மேஜைகள் போடப்பட்டு எண்ணப்படும். ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர் வீதம் இருப்பார்கள். சென்னையில் மட்டும் ஆயிரத்து 248 ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.

காலை 9.30 மணிக்கு முதல் சுற்று முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் வாக்குகள் எண்ணப்படுவதால் இந்த முறை முழு முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையில் 98.6 டிகிரி பதிவானால் அனுமதி அளிக்கப்படாது.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முகவர்கள் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிருமிநாசினி, முக கவசம் வினியோகம் செய்ய சுகாதார குழுவினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணும் அறைகளுக்கு முகவர்கள் செல்ல பிரத்யேகமாக தடுப்பு கட்டைகள் மூலம் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை பார்வையிடவரும் உயர் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அமர்வதற்காக வரவேற்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கையை பதிவு செய்ய வரும் நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், தொலைக்காட்சியினருக்கு பிரத்யேக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில் எல்.இ.டி. டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை ராணிமேரி கல்லூரியில் கட்டுப்பாட்டு அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை காணலாம்

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவர்கள் செல்போன்களை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அவர்களின் செல்போன்களை பாதுகாத்து வைக்க தொகுதி வாரியாக செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முகவர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் பயன்படுத்துவதற்காக தற்காலிக நகரும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் வாகனங்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்தின் குறிப்பிட்ட பகுதி வரை செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி, முகவர்களின் வாகனங்கள் வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் வெளிப்புற பகுதியில் விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

களத்தில் உள்ள 3 ஆயிரத்து 998 வேட்பாளர்களில் வெற்றி பெறுகிறவர்கள் யார் என்பது நாளை (ஞாயிற்றுக்கிழமை) தெரிய இருக்கிறது. அதுவரையில் வேட்பாளர்களுக்கு திக்... திக்... தினமாக சனிக்கிழமை இருக்கப்போகிறது. தமிழக அரசியல் வரலாற்றில், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை பொதுத்தேர்தல் என்பதால் இதன் முடிவை அறிய தமிழகமே ஆவலோடு காத்திருக்கிறது.

செரிமான பிரச்சனை, உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்.

 கத்தரிக்காய் என்பது இந்திய சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எளிதான காய்கறியாகும். இது நார்ச்சத்து நிறைந்தது, மேலும் இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

செரிமான பிரச்சனை, உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்
கத்தரிக்காய்


















கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்

எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

நமது உடல் பலம் பெற்றிருக்கவும், ரத்தத்தில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால்   நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.

பலர் கூறக் கேட்டது.

 பெண்_பார்க்கும்_படலத்தில்

அனுபவப் பட்டவர்களின் சர்வே ரிப்போர்ட்.
பலர் கூறக் கேட்டது.
கொஞ்சம் படித்து, ரசித்து வாய்விட்டுச் சிரித்துத்தான் பாருங்களேன்! வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்! நிச்சயமாக ஆயுளும் கூடும்!
1 மாப்பிள்ளயின் உயரம் ஒரு சென்டிமீட்டர் கம்மியா இருக்கு- வேண்டாம்!
2 போலீஸ் மாப்பிள்ளை – வேண்டாம்!
3 வக்கீல் மாப்பிள்ளை – வேண்டாம்!
4 சொந்த பிசினெஸ்ஸா ? ஏகப் பட்ட கடன் இருக்கலாம் – அதனால் வேண்டாம்!
5 எட்டாம் தேதியில் பிறந்திருக்கார் – அதனால் வேண்டாம்!
6 தலைப் பையனுக்கும் தலைப் பெண்ணிற்கும் ஆகாது- வேண்டாம்!
7 விசாகம் நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது – வேண்டாம்!
8 மூலம் கண்டிப்பாய் ஆகாது- வேண்டாம்!
9 பையன் ரொம்ப கட்டையா இருக்கான் – வேண்டாம்!
10 காக்கா கருப்பு பரவாயில்லை , அதை விடக் கருப்பா இருக்கார்- வேண்டாம்!
11 மாப்பிள்ளை சிவப்பு தான் , ஆனால் லட்சணம் இல்லை- வேண்டாம்!
12 ஜாதகம் சரியில்லை , அதனால் வேண்டாம்!
13 சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கு – அதனால் வேண்டாம்!
14 ராகு கேது தோஷம் இருக்கு – வேண்டாம்!
15 கால சர்ப்ப தோஷம் கடுமையாய் இருக்கு – வேண்டாம்!
16 குண்டு உடம்பாய் இருக்கு – அதனால் வேண்டாம்!
17 வயசு வித்தியாசம் ரொம்ப சாஸ்தியா இருக்கு – வேண்டாம்!
18 ஒரே பையன் தான் , அம்மா செல்லம் போல – அதனால் வேண்டாம்!
19 ரொம்பப் பெரிய இடமா இருக்கு – அதனால் வேண்டாம்!
20 குடியிருக்க வீடு கூட இல்லை – அதனால் வேண்டாம்!
21 பையன் வாங்கிற சம்பளம் வாடகைக்கே பத்தாது – அதனால் வேண்டாம்!
22 குடும்பப் பின்னணி சரியில்லை – அதனால் வேண்டாம்!
23 நாங்க சைவம் – நீங்க அசைவம் – அதனால் இப்போது ஐடியா இல்லை!
24 நம்மள விட ஜாதி அந்தஸ்த்தில் கொஞ்சம் கம்மி – வேண்டாம்!
25 படிப்பு பத்தாது – அதனால் வேண்டாம்!
26 ஒல்லிக் குச்சியா இருக்கார் – ஆகாது!
27 இந்தப் பையனை ஏற்கனவே பாத்திட்டோம் – வேண்டாம்!
28 ஒரு பொண்ணு அவங்க வீட்டில திரும்பி வந்துடுச்சு – அதனால் வேண்டாம்!
29 சும்மா தான் பதிவு பண்ணி வச்சோம்- அவசரம்னா வேற இடம் பார்த்துக்குங்க!
30 கப்பலில் வேலை ? எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியாது – வேண்டாம்!
31 மாப்பிள்ளையோட அப்பா சுத்த தண்ணீர் வண்டி போல வேண்டாம்!
32 ஒரு சில பொண்ணு வீட்டுக் காரங்க தங்களைப் பற்றிய விவரம் கொடுக்கும் போது , நிபந்தனைகள் மற்றும் சில விதிகள் கூறி ஜாதகம் கொடுப்பார்கள்.
லக்கினத்தில் சனி செவ்வாய் சேரக் கூடாது ., இரண்டில் சனி, ஐந்தில் சனி , ஏழில் சனி , சனி – செவ்வாய் சேரக் கூடாது ., சூரியன் -செவ்வாய் எந்தக் கட்டத்திலும் சேரக் கூடாது. இரண்டு-எட்டில் ராகு கேது இருக்கக் கூடாது!
33 தமிழ் நாட்டு எல்லை தாண்டித் தர மாட்டோம் -வேற இடம் பார்த்துக்கோங்கோ!
34 ஜாதகத்தை மாற்றிக் கொடுத்திட்டாங்க – ஆரம்பமே இப்படியா ?
35 ரொம்ப காலமாய் ஜாதகம் மார்க்கெட்டில் சுத்துது – வேண்டாம்!
36 படிப்பிலே பொய் சொல்லிட்டாங்க – வேண்டாம்!
37 மாப்பிள்ளை வீட்டார் வருமானம் இன்றி இருக்கும் போது பெண்ணின்!
வருமானத்தில் காலம் ஓட்டினால் கண்டிப்பாய் பெண் தர மாட்டோம்!
38 பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்கிட்டுத் கொடுப்போம்- சம்மதமா?
39 மாப்பிள்ளை கொஞ்சமாகத் தான் குடிப்பானாம் – அதனால் வேண்டாம்!
40 பழைய காதலி இன்னும் தொடர்பில் தான் இருக்கிறாள் – அதனால் வேண்டாம்!
41 ஜாதகத்தில் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கு – அதனால் வேண்டாம்!
42 பெண்ணின் படிப்புக்கு மாப்பிள்ளை படிப்பு கம்மியாக இருக்கு – வேண்டாம்!
43 பெண் வீட்டில் நல்ல வசதி -பையன் வீட்டில் கம்மி- வேண்டவே வேண்டாம்!
44 தை மாசம் தலைக் கல்யாணம் செய்ய மாட்டோம்!
45 பிறந்த மாசத்தில் கல்யாணம் ஆகாது – வேண்டாம்!
46 அக்கினி நட்சத்திரம் கல்யாணம் ஆகவே ஆகாது!
47 கார்த்திகை தீபம் வந்துருச்சு -அப்புறம் பாத்துக்கலாம் – அதனால் வேண்டாம்!
48 இதை எல்லாம் தாண்டி வருபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு உண்டு!
49 அரசு உத்தியோகம் மற்றும் வங்கி வேலையைத் தவிர மற்றவர்கள் அணுக வேண்டாம்!
50 வாடகை நிறைய வருதுன்னு சொல்லிட்டு வண்டி ஒட்டுகிறவர்கள் வரவே வேண்டாம்!
51 விவசாயத்தை நம்பி பெண் கொடுக்கிற மாதிரி ஐடியா இல்லை!
52 கோவிலில் பூ கேட்டுப் பார்த்தோம் , சாமியே சம்மதிக்க வில்லை என்று மொத்தத்தையும் ரிட்டன் செய்து விடுவார்கள்!
53 இன்னும் விட்டுப் போன விஷயங்கள் நிறைய உண்டு – அதை நீங்கள் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
54 எங்க ஜாதி தவிர வேற ஜாதிக்கு இட ஒதுக்கீடு இல்லை ( இங்கேயும் வந்துட்டிங்களா ?)
55 ரொம்ப தூரமா இருக்கு ? நாங்க இங்க பக்கத்தில தான் பார்க்கிறோம்
56 இந்த பொண்ணு வீட்டுக் காரங்கிட்ட பேசிப் பேசியே ., அப்படி என்ன கேட்டுப் போய்ட்டாங்க! இந்தப் பையனின் கல்யாணம் முடிந்தவுடன் பாகப் பிரிவினை பண்ணி சொத்தை மாத்திக் கொடுத்திருவீங்களா ?🍁🍁🍁🍁

பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை.

 ஒரு பணக்காரனும் அவன் பெண்டாட்டியும் ஒரு பூசணித் தோட்டம் வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். அந்தம்மாவுக்கு பூசணிக்காய் மேல ஆசைவந்துச்சாம். இப்பவே வேணும்னு அடம் புடிசாங்களாம். சுற்றும் முற்றும் பார்த்திட்டு ஒரு காயை அந்த பணக்காரர் பறிச்சுகிட்டு வீட்டுக்கு போய் குழம்பு வச்சுசாப்பிட்டாங்களாம். ஊரில் அரசால் புரசலாக பணக்காரர் பூசனிக்காயைத் திருடி விட்டார் என்று பேசிக் கொள்ளஆரம்பித்தார்களாம். இதை மறைக்க ஊரில் உள்ள எல்லோரையும் அழைத்து வடை பாயசத்துடன் சுவையான விருந்து ஒன்றை அந்த பணக்காரர் வைத்தாராம். “இவ்வளவு பணம் செலவு செய்து விருந்து வைக்கும் இவரா கேவலம் ஒரு பூசணிக்காயைப் போய்த் திருடியிருப்பார், இருக்கவே இருக்காது” என்று பேசிக்கொண்டார்களாம். இதுதான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை....

😂😂
May be an image of food

மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்.

 இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன.

ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன.
இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும்.
மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை.
நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை.
நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள்.
வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள்.
ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள்.
இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது.
நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.
உடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது.
இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள்.
சாவு நேரிடும் வரையில் நரம்பு தளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள்.
ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள்.
உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள்.

*காலம் மாறிவிட்டது* 🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀

 *ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது.*

*காரணம் 🤔🤔🤔*
*மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,*
*உறவினர்களுக்கு உரிமை இல்லை,*
*ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,*
*தான் பெற்ற பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லை*
*மெஷின் போன்ற வாழ்க்கை,*
*மெஷின்னுடன்📲 தான் வாழ்க்கை,*
*மனைவி இல்லையென்றாலும்* *பரவாயில்லை மொபைல் இருக்கிறது,*
*உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,*
*நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது.*
*அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காத காரணம் மொபைல் தான்.*
*உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.*
*நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூகுளிலில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.*
*ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எறிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.*
*எப்போதும் போல பார்வேர்ட் மெஸெஜ் என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.*
*உன் வாழ்க்கை உன் மொபைலில் இல்லை
உன் அன்பு பேச்சில்*
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...