Friday, June 30, 2017

ஆறு சுவை அவசியம் தேவை !



நம்முடைய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறையில், அறுசுவை உணவே, சமச்சீரான உணவாகச் சொல்லப்படுகிறது. இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என ஆறு சுவை உணவுகளைச் சாப்பிடும்போது, அவை ஏழு விதமான தாதுக்களை அளிக்கும். இதில் ஏதேனும், ஒரு சுவையைத் தவிர்த்து வந்தாலும், உடலில் நோய்கள் ஏற்படும். இதனால்தான், வருடப்பிறப்பு அன்று, வெல்லம், மாங்காய், உப்பு, வேப்பம்பூ என அனைத்துச் சுவையும் கலந்த, பச்சடியை செய்வார்கள். வருடம் முழுவதும், ஆறு சுவைகளையும் சேர்த்துக்கொள்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள். உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த ஆறு சுவைகளுமே பஞ்ச பூதங்களின் தன்மையால் ஆனவை.
#இனிப்பு 
உடலுக்குச் சக்தியையும் மனதுக்கு இனிமையையும் தரக்கூடியது. இனிப்பை முதலில் சாப்பிட்டே ஆகாரத்தைத் தொடங்க வேண்டும். இதனால், கப தோஷம் உண்டாகும். கடைசியாகச் சாப்பாட்டை முடிக்கும்போது, துவர்ப்பு சாப்பிடுவதால், அது இனிப்பை பேலன்ஸ் செய்யும். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். உடைந்த எலும்பை ஒன்று சேர்க்கும். மூளையில் செரட்டோனின் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கும்.
ரிஃபைண்டு சர்க்கரை, இனிப்புச் சுவையின் பலனைத் தராது. இனிப்பு என்றால், பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை, தேன், பசு நெய் இவைதான். அளவோடு சாப்பிட வேண்டும்.
அதிகமானால்...
உடலில் கப தோஷம் பெருகும். இதனால், உடல் பருமன், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், அஜீரணம், மேக நோய், கழுத்து சுரப்பி வீக்கம். சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வரலாம். வெறும் இனிப்புச் சுவை மட்டுமே சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
குறைந்தால்...
பித்தம், சூடு அதிகரிக்கும். இதனால், சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, பனைவெல்லம், நாட்டுச்சர்க்கரை, தேன், நுங்கு சேர்த்துக்கொள்ளலாம். இனிப்புத் திராட்சை மாதவிலக்கைச் சீராக்கும். உலர் திராட்சை இதயத் துடிப்பைச் சீராக்கும். இனிப்புச் சுவையுள்ள செவ்வாழை கண் பார்வையைக் கூர்மையாக்கும். கொய்யா, எலும்பை உறுதியாக்கும்.
#புளிப்பு
ஜீரணமண்டலம் நன்கு செயல்பட, புளிப்பு தேவை. எலுமிச்சை, புளி, கொடும்புளி, மாதுளங்கம், மாங்காய், அன்னாசிப்பழம், மோர் இவற்றின் மூலம் புளிப்பைப் பெறலாம். மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றிலிருந்து பெறப்படும் புளிப்பு, உடல் வளர்ச்சிக்கு உதவும். மிதமாகப் புளித்த இட்லி, தோசை மாவு, மோர் இவற்றால், உணவை ஜீரணிக்கும் என்சைம்கள் நிறையக் கிடைக்கும்.
அதிகமானால்...
இட்லி, தோசை மாவை வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், ஒவ்வொரு நாளும் அதில், நொதித்தல் நடக்கும். இது மறைமுகமாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். இன்று அரைத்து, நாளை சாப்பிடுவதுதான் நல்லது. புளிக்குழம்பு, காரக்குழம்பு அதிகம் சேர்த்தாலும், பித்தம் அதிகரிக்கும். இதனால், ரத்தம், தசைகளில் புளிப்புத்தன்மை ஏறி, உடல் வலி, சரும வறட்சி, சரும நோய்கள் வரலாம். 
குறைந்தால்...
ஜீரண சக்தி குறையும். மந்தத்தன்மை அதிகரிக்கும். அசதி, சோர்வு இருந்துகொண்டே இருக்கும்.
#உப்பு 
உணவுக்குச் சுவை தருவது மட்டுமல்ல, எலும்பு மற்றும் மஜ்ஜைகளை வளர்க்க மிகவும் உதவியாக இருக்கும். நாட்டு மருந்துக் கடையில் ‘சைந்தலவனம்’ என்ற உப்பை வாங்கிப் பயன்படுத்தலாம். சோடியம், பொட்டாசியம் போன்ற எல்லா தாது உப்புக்களும் அதில் நிறைந்திருக்கின்றன. உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
அயோடைஸ்டு உப்பு, தாதுக்களை எல்லாம் பிரித்துவிட்டு, வெறும் அயோடினை மட்டுமே சேர்த்துத் தரும். இதைச் சாப்பிடுவதால், எந்தப் பலனும் இல்லை. கடல் ஒரங்களில் கிடைக்கும் காய்கறிகள், மீன்கள், பால் இவற்றிலேயே அயோடின் இருக்கிறது. அதனால், அயோடின் உப்பு தேவையற்றது. 
சிப்ஸ், லேஸ், குர்குரே பர்கர் போன்றவற்றைச் சாப்பிட்டாலோ, சோடா, பிரிசர்வ்டு டிரிங் குடித்தாலோ, மோனா சோடியம் குளுட்டமேட் (MSG) கலந்த உணவுகளைச் சாப்பிட்டாலோ உடம்பில் சோடியம் கலந்த உப்பு சேர்ந்துகொண்டே இருக்கும். சோடியம் உப்பு, சிறுநீரகத்தில் பிரச்னைகளை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். 
அதிகமானால்...
உடலில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். தேவை இல்லாத நீர் சேரும். ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும். பித்தத்தை அதிகரித்து, சீக்கிரமே நரை முடி, முடி உதிர்தல், கொட்டுதல், வழுக்கை போன்ற பாதிப்புகள் வரும். எனவே, உப்பை அளவோடு சேர்த்துக்கொள்ள வேண்டும். 
குறைந்தால்...
உப்பு சாப்பிட்டால் தப்பு என்று, உப்பைக் குறைத்துவிடவும் கூடாது. இதனால், எலும்பு மஜ்ஜை வலுவிழந்துபோகும். சிலருக்குக் கெண்டைக்காலில் தசைப் பிடிப்பு ஏற்படும். தசைகள் சோர்வடையும். தலைசுற்றல் வரும்.
#காரம் 
காரம் என்றாலே, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் என்று ஆகிவிட்டது. மிளகு, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கடுகு போன்றவையும் காரச்சுவைதான். காய்ந்த மிளகாயைத் தவிர்த்து, மற்ற காரப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. காரச் சுவை, உடல்பருமனைக் குறைக்கும். மலத்தை இளக்கும். உடலைத் தூய்மையாக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். வலிமையைப் பெருக்கும். குடல் புழுக்களை அழிக்கும்.
அதிகமானால்...
உடலில் காரத்தன்மை அதிகமாகும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிக்கலாம். பலத்தைக் குறைத்து, பலவீனத்தை அதிகப்படுத்தும். இடுப்பில் தேவையற்ற வலிகள் உண்டாகும். மிளகு, பெருங்காயம், இஞ்சி, சித்திரமூலம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் காரம் உடலுக்கு நல்லது.
குறைந்தால்...
சின்ன வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் காரத்தைக் கொடுத்து வளர்க்க வேண்டும். நிறையப் பேர் “என் குழந்தை காரமே சாப்பிட மாட்டா” என்று பெருமையாகச் சொல்வார்கள். இது தவறான பழக்கம். இனிப்பு மட்டுமே சாப்பிடும் குழந்தைகளுக்கு, குடல் புழுக்கள் உருவாகும். இதனால், சரும நோய்கள், சரியான வளர்ச்சியின்மை, சளி, இருமல், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வரும். அந்த மாதிரி குழந்தைகளுக்கு இனிப்பு சுவையைக் குறைத்து, மிளகு போன்ற காரச்சுவையை அதிகரித்து வந்தாலே, நல்ல பலன் கிட்டும். மிதமான அளவு உண்ண வேண்டும்.
#கசப்பு 
முகத்தைச் சுளிக்கவைக்கும் சுவை. ஆனால், உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படும். ரத்தத்தை சுத்திகரிக்கும். நன்னாரி, சந்தனம், வேம்பு, சீந்தில் மற்றும் பாகற்காய், வெந்தயம், சுண்டைக்காய் போன்றவற்றின் மூலம் கசப்புச் சுவையைப் பெறலாம். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். தாய்ப்பால் அதிகரிக்கும். தொண்டைப் புண்களை ஆற்றும். தோல் நோய்கள், குடல் புழுக்களுக்குக் கசப்பு சிறந்தது. நரம்புத் தளர்ச்சி மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் கை, கால்களில் எரிச்சல் இருக்கும். அந்த எரிச்சலைக் கசப்புத்தன்மை தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். 
அதிகமானால்...
உடலில் தாதுக்களைக் குறைக்கும். வாயுவை அதிகப்படுத்தும். இதனால் வாயுத் தொல்லை ஏற்படலாம். கசப்பு உணவுகளை அதிகம் வறுத்துச் சாப்பிட்டால், உடல் முழுவதும் வலிகள் வரலாம். கசப்புச் சுவை அளவோடு இருக்க வேண்டும். 
குறைந்தால்...
ரத்தம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
#துவர்ப்பு
பெரிய நெல்லிக்காய், வாழைப்பூ, நாவல்பழம், அத்தி, கடுக்காய், தாமரைத்தண்டு, சீரகம், புதினாவிலிருந்து இந்தச் சுவையைப் பெறலாம். பித்த கபத்தைச் சரிசெய்யும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். அனைத்து புண்களையும் ஆற்றும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். 
அதிகமானால்...
உடலில் வாயு அதிகரிக்கும். இதயத்தில் வலி ஏற்படலாம். கழுத்து, பின்புறத் தோள்பட்டைக்கு நடுவில் வலி வரலாம். உடல் எடையைக் குறைக்கும். ஆண்மைத்தன்மை குறையும். மலச்சிக்கல் பிரச்னை வரும்.
குறைந்தால்...
இரும்புச்சத்து கிரகிக்கும் தன்மையை இழக்கும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.
உடலே உணர்த்தும்!
‘புளிப்பா சாப்பிடனும் போல் இருக்கு. ஒரு எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமே; என்று தோன்றும். நாக்கு ஏங்கும்போது, வாயில் எச்சில் ஊறும். வாந்தி, சோர்வு, வயிறு மந்தமாக இருக்கும்போது உப்பில் போட்ட எலுமிச்சை, நார்த்தங்காய், மாங்காய் சாப்பிட்டால் நன்றாக பசி எடுத்து ஜீரணமாகும். உடலில் எனர்ஜி குறையும்போது, சோர்வா இருக்கும்போது இனிப்புச் சுவை சாப்பிடத் தோன்றும். அப்போது உடனடியாக உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். இப்படி உடலானது உணர்வின் மூலம், தன்னைத் தானே ‘ஹீல்’ பண்ணிக் கொள்ளும்.
காலத்துக்கேற்ற உணவு!
குளிர் காலத்தில், வெளியில் அதிகக் குளிர் இருப்பதால், உடலினுள் அக்னி கொழுந்துவிட்டு எரியும். இதனால், பசி அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இனிப்பு ஆகாரங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் கொடுத்தால், நன்கு ஜீரணமாகும். வெளியில் சுட்டெரிக்கும் வெயில் இருந்தால், உடலில் வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் அதிகம் பசி எடுக்காது. எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.
சாப்பாட்டின் மீதான ஆர்வம் குறைந்து, உடலில் உப்புச் சத்து வெளியேறுவதால், தண்ணீர், பழச்சாறு, மோர் குடித்தாலே போதும் என்ற மனநிலை ஏற்படும். இந்தத் தருணத்தில் கோடை காலப் பழங்கள், நீராகாரங்கள் சாப்பிடலாம். எந்தெந்த காலகட்டத்தில் என்ன மாதிரியான நோய்கள் வரும் என்பதை அறிந்து, அதற்கேற்ப சாப்பிட்டாலே, உடல் சீராக இருக்கும்.

வாரம் ஒருமுறை பசலைக்கீரையை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்.



கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்குமே தெரியும். கீரைகளில் நிறைய உள்ளன. அனைத்திலும் சத்துக்கள் ஏராளமாக இருந்தாலும், பசலைக்கீரையில் சற்று அதிகமாகவே சத்துக்கள் நிறைந்துள்ளன.
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், பசலைக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து, உடலில் இருக்கும் பிரச்சனைகளைப் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
எடை குறையும் :-
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் பசலைக்கீரையை வாரத்திற்கு 3 முறை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும், குறைவான கலோரிகளும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்து, உடல் எடையைக் குறைக்கும்.
புற்றுநோய் :-
பசலைக்கீரையில் உள்ள வளமான ப்ளேவோனாய்டுகள், உயிரைப் பறிக்கும் கொடிய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் அபாயத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.
கண்களுக்கு நல்லது :-
ஒருவர் பசலைக்கீரை யை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான லுடீன் மற்றும் ஜியாஜாந்தின், கண்புரை வருவதைத் தடுத்து, முதுமை காலத்தில் ஏற்படும் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கும்
இரத்த அழுத்தம் குறையும் :-
பசலைக்கீரையில் உள்ள பெப்டிடைடுகள், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.
ஆரோக்கியமான எலும்பு :-
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள், பசலைக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இதய ஆரோக்கியம் :-
பசலைக்கீரையின் மற்றொரு நன்மை, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதற்கு பசலைக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களில்மிருந்து இதயத்தைப் பாதுகாக்கும்

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??

இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.
ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.
அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.
மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.
பூக்களின் பயன்கள்:
.
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
.
பூக்களைச் சூடும் முறை:
.
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
மனம் அமைதி பெற உதவும்.
.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
.
முல்லைப்பூ, வில்வப்பூவை
குளித்த பின்பு சூடலாம்.
.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
.
தலையில் பூ வைப்பது,
மனமாற்றத்துக்கு உதவும்.
.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.
.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.
மனமாற்றத்துக்கு உதவுகிறது.
.
மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

பயனுள்ள தகவல்...



தலைமுதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புத சக்தி கிர்ணிப்பழத்திற்கு உண்டு. இந்த பழத்தில், புரதமும், கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும், சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது.
ஐம்பது வயதுக்கு மேல் தோலில் எண்ணெய் பசை குறைந்து, வறண்டு இருப்பவர்கள் பியூட்டி பார்லரில், வேக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச் செய்து கொண்டால், தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும், இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும், சமஅளவு கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.
நூறு கிராம் கிர்ணிப்பழ விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு முடியின் பளபளப்பும் கூடும்.
கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர், ஓட்ஸ் பவுடர் இரண்டையும், சமஅளவு எடுங்கள். இதை பேஸ்ட் போல கலக்கும் அளவுக்கு வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இது எண்ணெய், தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து, தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணிப்பழ விதை தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராகவும் செயல்படும்.
Image may contain: food

இளநீர்☘️*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

சோரியாசிஸ் குணமாகும் !!!!

சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்.
Image may contain: one or more people
சோரியாசிஸ் சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:
சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.இதில் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பற்றி பார்ப்போம்.
முதலில் நாம் என்ன செய்கின்றோமோ இல்லையோ ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதிலேயே பாதி ஆரோக்கியம் நமக்கு கிடைத்து விடும்.அடுத்ததாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நாம் யாரும் அதிகமாக தண்ணீர் குடித்து நம்முடைய வயிற்றை சுத்தமா வைத்து கொள்வதில்லை.நாம் எப்படி வகை வகையாக சாப்பிட்டு விட்டு அடுத்த முறை சாப்பிடுவதற்கு தட்டினை கழுவிகின்றோமோ அது போலவே தான் நம்முடைய வயிறும்.முதல் நாள் நாம் சாப்பிட்ட உணவுடன் கலந்தே அடுத்த நாளைக்கான உணவு ஜீரணிக்க படுகின்றது.காலையில் நமக்கு தண்ணீர் தாகம் இருக்காது.முதன் முதலாக குடிக்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.ஆனால் போக போக சரி ஆகிவிடும். தண்ணீர் குடிக்க பழகி கொண்டால் அதன் பின்னர் உங்களுக்கே சில உடல் ஆரோக்கிய மாற்றம் தெரிய வரும்.
அடுத்ததாக யோகா.சில அறிவாளிகள் யோகாவையும் உடற்பயிற்சியையும் சேர்ந்து செய்வர்.யோகா என்பது உடற் சக்தியை சேர்ப்பது.உடற் பயிற்சி என்பது சேர்த்து வைத்ததை வீணாக்குவது.இந்த இரண்டும் சேர்ந்து செய்தால் பளு தாங்காமல் ஸ்ப்ரிங் அறுந்த கதை தான்.அதனால் இதில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும்.
காலையில் யோகா செய்தவுடன் மூலிகை சாறு குடிக்க பழக வேண்டும்.கத்தாழை (சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.தோலில் மட்டுமே கசப்பு தன்மை இருக்கும்),வேப்பங் கொழுந்து(சிறிது சேர்த்தல் போதும்),துளசி (சற்று அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் வேப்பிலை கசப்பு தன்மையை குறைக்க உதவும்.அதை விட பல மருத்துவ குணங்களை கொண்டதும் கூட ),அருகம் புல்.(நம்முடைய உடம்பை ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்).
அடுத்தாக யோகா செய்ய வேண்டிய நேரங்கள் என்று பார்த்தால் காலை சூரிய வெளிச்சம் நம் மீது பட தொடங்கி அது நமக்கு சுடுவதாக உணரும் வரை(அதற்காக சூரிய வெளிச்சம் எனக்கு சுடவில்லை என்று நண்பகல் வரை உட்கார்ந்து இருக்க கூடாது).மாலையில் அது போலவே சூரியன் சூடு குறைந்த பின் மாலை வெயில் முதல் மறையும் வரை இருக்கும் நேரத்தினை எடுத்து கொள்ளலாம்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுடும் சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பது நல்லது.காலை மாலை வெயில் வெயிலில் நன்றாக செல்லலாம்.முடிந்த வரை தவிர்த்தால் சோரியாசிஸ் கூடுவதை தவிர்க்கலாம்
சோரியாசிஸ் - குணமாக ஒரு விடிவு காலம் :
முன்குறிப்பு :
சோரியாசிஸ் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்கி வைத்து இருக்கும் மருந்துகளை முதலில் குப்பையில் போட்டு விட்டு வந்து இந்த மருந்தினை உபயோகிக்க வாருங்கள்.இந்த மருந்தினை பற்றி என்னுடைய முதல் பதிவில் இதுதான் மருந்து என்று கூறி இருக்கலாம்.ஆனால் அப்படி நான் கூறபோய் இதை பார்த்து நீங்கள் இது ஒரு விளம்பர தளம் என்று நினைத்து விட கூடாது அல்லவா!.அதனால் தான் சில அடிப்படை கருத்துகளை கூறிவிட்டு கூறலாம் என்று இருந்தேன்.இப்போது என்னை நம்பி பதிவிற்கு வந்து கேட்பதால் சொல்கிறேன்.இதை நீங்களே தயாரித்து கொள்ளலாம்.
சோரியாசிஸ் குணமாக:
சோரியாசிஸ் குணமாக சித்தாவிலும் ஹோமியோபதியிலும்(உட்பிரிவு மலர் மருந்து)மருந்து உண்டு.சித்தவில் பார்த்தால் அது உடல் சம்பந்தபட்டது.ஆனால் ஹோமியோபதியை எடுத்து கொண்டால் அது மன சம்பந்தபட்டது.அதனால் நாம் உடலுக்கு மருந்து கொடுக்கும் சித்தா எடுத்து கொள்வோம்.ஏன் என்றால் ஹோமியோபதியில் அந்த நோய்க்கு சம்பந்தபட்டவர் நேரில் வரவேண்டி வரும்.அதையும் மீறி நான் அதை பற்றிய பதிவாக இட்டால் அதனை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.சரி இனி சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.இந்த மருந்தினை பற்றி கூறும் முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் இந்த மருந்தினை தைரியமாக பரிந்துரைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
என்னடைய தோழி ஒருத்திக்கு சோரியாசிஸ் வந்து அவளுக்கு தலையில் இருந்து ஆரம்பித்து தற்போது நான் யூகித்தபடி அவளுக்கு இடுப்பு வரை வந்து இருக்க வேண்டும்.ஆனால் அவளை
ஒரு இரண்டு மாதங்கள் கடந்து அவளை பார்த்தேன்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏன் என்றால் அவளுக்கு சோரியாசிஸ் முற்றிலுமாக மறைந்து போய் தழும்பு கூட தெரியவில்லை.அவள் இந்த மருந்தை பற்றி கூறினாள்.அடுத்ததாக என்னுடைய சித்தா மருத்துவ நண்பர் நான் இந்த மருந்தை பற்றி அவரிடம் கூறிய போது அவருடைய மருந்துகளில் வெட்பாலையின் இலைகளை கொண்டு தான் மருந்து தயாரித்து வந்து கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டேன்.அவர் இந்த வெட்பாலை உட்பொருளாக கொண்டு சோரியாசிஸ்சிற்காக மருந்து தயாரித்து இதுவரை அவர்களிடம் சென்றவர்கள் மீண்டும் சோரியாசிஸ் வந்ததாக யாரும் இல்லை என்பதை கூறினார்.சரி இனி இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.
வெட்பாலை -(Holarrhena Antidysenterica):
முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும்.தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.
எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறுது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும்.இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.அப்படி கிடைக்காவிட்டால் எதாவது ஒரு சித்த மருத்துவரிடம் கேட்டால் அவர் கூறிவிடுவார்.மதுரையில் நான் இருப்பாதால் இங்கு வெட்பாலை செடி கிடைக்கும் இடம் தெரியும்.மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள யானைமலையின் உச்சியில் இந்த செடி அடர்ந்து கிடக்கும்.அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.
அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கிழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.
*பால்
*மது
*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது.சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.
இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும்.சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை.இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது.அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேட்கலாம்.
சோரியாஸிஸ் எளிய மருத்துவம் !!!
கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும்.
தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிர்க்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.
அகத்தி மருத்துவம்!!!
சோரியாஸிஸ் குணமாக: !!!
சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.
அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

தொற்றுநோய்களை விரட்டும் மகா சுதர்சன மாத்திரை !!!



தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள்.
சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது.
மலிவு விலை மருந்து
தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தொற்றுநோய் ஏற்பட்டாலோ, விஷக் காய்ச்சல் வந்தாலோ என்ன செய்வார்கள்? எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்?
பயப்படத் தேவையில்லை. இதற்கு மிக மலிவான சித்த மருந்து உள்ளது. தொற்று நோய்கள் தாக்காமலும், விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் வராமலும், டெங்கு, சிக்குன் குன்யாவை விரட்டவும், சளி, இருமல், தும்மலைத் தடுக்க இருக்கவே இருக்கிறது மகா சுதர்சன சித்த மாத்திரை. இந்த மாத்திரையில் 45 வகை மூலிகைகள் மற்றும் படிகாரம் கலந்துள்ளது.
\தீரும் நோய்கள்
அனைத்து வகை காய்ச்சல் (விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குன்யா, டைபாய்டு, மலேரியா, குளிர் காய்ச்சல்), சளி, இருமல், தும்மல், மூச்சடைப்பு, உடல்வலி, தலைவலி, தலை பாரம், மூட்டு வலிகள், தொற்று நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக, ஆஸ்துமா, நாள்பட்ட சர்க்கரை நோய், தோல் நோய்கள், எய்ட்ஸ், புற்று நோய் ஆகிய அனைத்துக்கும் தீர்வு தரும் ஒரே மருந்து, இந்த மகா சுதர்சன சித்த மாத்திரை.
\மாத்திரை அளவு
ஒரு வயதிலிருந்து ஐந்து வயதுவரை ½ மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். ஐந்து வயதிலிருந்து 15 வயதுவரை ஒரு மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். 15 வயதிலிருந்து எந்த வயதினருக்கும் இரண்டு மாத்திரை மூன்று வேளை. ஆகாரத்துக்குப் பிறகு வெந்நீரில் சேர்த்துச் சாப்பிடவும். நோயின் தீவிரத்துக்கேற்ப ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை தரலாம். இதனுடன் மருத்துவரின் ஆலோசனை பெற்று நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்ளவும்.
\உணவு
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இட்லி, இடியாப்பம், அரிசிக் கஞ்சி, பருப்பு கலந்த சாதம் போன்றவை. தேவைப்பட்டால் ஆங்கில மருந்தைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். பலன் அதிகம், பக்க விளைவு தடுக்கப்படும். அனைத்துச் சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கிறது.
விலை மிக மிகக் குறைவு.
உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வேறு பல நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து மகா சுதர்சன மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர் ஆலோசனை பெற்று அனைவரும் காலை இரண்டு மாத்திரை, இரவு இரண்டு மாத்திரை உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல், சகல நோய்களையும் கட்டுப்படுத்திச் சங்கடங்களை நீக்கும்.

பூசணி விதைகளும்: அதில் இருக்கும் மருத்துவ குணங்களும்.



பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதனுள் இருக்கும் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.
இது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும் அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள்.
அதில் இருக்கும் மருத்துவகுணங்களை பற்றி பார்ப்போம்..
பூசணு விதையில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.
இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும்.
Image may contain: food
இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.
தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.
பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.

குதிகால் வெடிப்பை மறையச் செய்யும் உபயோகமான 5 குறிப்புகள்.



ஒரு கலனை எடுத்துகொண்டு, அதில் இரண்டு லிட்டர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு நிரப்பி கொள்ளுங்கள்.
அத்துடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து...உங்கள் வெடிப்புற்ற குதிகாலை அதில் ஊற வையுங்கள். அதன்பின், பதினைந்து நிமிடங்கள் கழித்து...அதாவது தண்ணீர் சூடு குறையும் வரை வைத்திருந்து எடுத்து, நிவாரணத்தை பெற்று மகிழுங்கள்.
தேனில் இருக்கும் நுண்ணுயிரிகள், உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்துகொள்வதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.
இரண்டு 200 மில்லிகிராம் வைட்டமின் E மாத்திரையை எடுத்து (மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டாக நறுக்கிகொண்டு...உங்கள் கால்களில் அந்த எண்ணெய்யை கொண்டு தடவிகொள்ள வேண்டும்.
உங்கள் குதிகாலில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். உங்களுடைய இரண்டு கால்களிலும் 400 மில்லிகிராம் வைட்டமின் E எண்ணெய் சேர வேண்டியது அவசியமாகும். அந்த எண்ணெய்யை, உங்கள் சருமம் எளிதாக உறிஞ்சிவிட...சிறிது நேரத்துக்கு வைத்திருக்க வேண்டும். அதன்பின்னர், நல்ல சுத்தமான பழைய சாக்ஸ் அணிந்துகொண்டு இரவு முழுக்க ஓய்வில் இருக்க வேண்டும்.
ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை, உங்கள் குதிகாலில்...தூங்க செல்லும்முன் தேய்த்துகொள்ள வேண்டும்.
சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள ஒருபோதும் மறவாதீர்கள். இதனால், மஞ்சளும், அந்த எண்ணெய் கலவையும் உங்கள் கால்களில் இருக்கும் சாக்ஸின் சணல் நூலில் (கைத்தறி) படுவதில்லை.
இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அது போதுமான அளவில் சூடாக இருக்கும்போது, அதனைகொண்டு உங்கள் கால்களை ஊற வையுங்கள். அந்த எண்ணெய்யை அதிகம் கொதிக்க வைத்துவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, வெப்ப நிலையை பரிசோதித்து, அதன் பின்னர் தான் உங்கள் கால்களை அதில் ஊற வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்து வர, நல்லதோர் பலனை அது உங்களுக்கு தருகிறது.
ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்துகொண்டு, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீமை சேர்த்துகொள்ளுங்கள். அதனை நன்றாக கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு அந்த சூப்பர் ஈரப்பதம் கொண்ட கலவையை பயன்படுத்தி வாருங்கள்.
இந்த DIY தீர்வுகள், இன்றே உங்களை முயற்சி செய்ய சொல்ல, குதிகால் வெடிப்புக்கு குட்பை சொல்லி தூர விரட்ட நீங்கள் ரெடியா?

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - ராமதாஸ்!

அடே முட்டா பயலே
பல முறை சொல்லிவிட்டோம், எங்கள் புரட்சிதலைவி அம்மா விஷயத்தில் மீண்டும் மீண்டும் தேவையில்லாத பேச்சுக்களை பேசி எங்களிடம் செருப்படி வாங்கிக்காதே,சட்டமே சொல்லிவிட்டது எங்கள் அம்மா நிரபராதி என்று நீ என்னடா சொல்லுரது..
அவர் மறைந்தும் அவர் மீது உனக்கு என்னடா கோபம்...
#அம்மா #உயிரோடு #இருக்கும் #எதிர்த்து #பேச #கூட#பயந்தவன் #நீ,இன்று அம்மா உயிரோடு இல்லை அவர் திரும்பி வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் பேசாத
உன் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கி தந்தவர் எங்கள் அம்மா அதை மறந்து பேசாதே!!நன்றி மறந்து பேசுபவர்கள் விரைவில் அழிவார்கள்...,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இந்த அரசாங்க அதிகாரி செய்கிற காரியங்களைப் பாருங்கள்...

நள்ளிரவு 12 மணியில் இருந்து இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமுல்படுத்தப்படுகிறது.பல வணிகர்களுக்கு இன்னமும் ஜிஎஸ்டி குறித்த தெளிவான புரிதல் இல்லை.எங்கு சென்று எந்தத் தொழில் செய்பவரைப் பார்த்தாலும்,எவ்வளவு நேரம் பேசினாலும்,அந்தப் பேச்சில் முக்கால்வாசி நேரம் ஜிஎஸ்டியே ஆக்கிரமித்துக் கொள்கிறது.அந்த அளவிற்கு ஒருவித சொல்ல முடியாத பதட்டத்தையும் ஜிஎஸ்டி உருவாக்கி விட்டுள்ளது.பெரிய பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி,மிகச் சிறிய பெட்டிக்கடைகள் வரையிலும் கூட இந்த ஜிஎஸ்டி பேச்சுக்கள் தான்.
இப்படியான ஒரு சூழ்நிலையில் மக்களின் சந்தேகங்களைப் போக்கும் அரும்பணியைச் செய்கிறார் ஒரு அரசு அதிகாரி.
அவர் பெயர் கேசவன்.சாத்தூர் வட்டத்தில் வணிக வரித்துறை ஆய்வாளராக இருக்கிறார்.அதாவது Commercial Tax Officer.சொந்தத் தொழில் செய்பவர்களுக்குப் புரியும் CTO என்றால் யார்,அவரது அதிகாரங்கள் எத்தகையன என்பது.இனி அந்த CTO அதிகாரி செய்யும் காரியத்தைப் பற்றி சொல்கிறேன்.
சாத்தூர் வட்டத்தில் தொழில் செய்பவர்களை எல்லாம்,அது பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி,மிகப் பெரிய பேப்பர் தயாரிப்பு தொழிற்சாலையாக இருந்தாலும் சரி-எந்தப் பாகுபாடும் இன்றி அவர்களை எல்லாம் இணைத்து,சாத்தூர் வட்டத்தில் இருக்கும் ஆடிட்டர்கள்,அக்கவுண்டன்டுகள் என சகலரையும் இணைத்து "சாத்தூர் ஜிஎஸ்டி" என்ற பெயரில் ஒரு வாட்சப் குழுவை உருவாக்கி,அதில் ஜிஎஸ்டி குறித்து சகல தகவல்களையும் மிக எளிதில் புரியும்படி அதுவும் தமிழிலேயே பதிகிறார்.வாட்சப் பகிர்தலோடு நின்றுவிடாமல்,தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை வேறு நடத்துகிறார்.தன்னை நேரில் சந்திக்கும் பொது மக்களுக்கும்,வணிகர்களுக்கும் அவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கங்களைத் தருகிறார்.எந்த நேரத்தில் எவர் தொடர்பு கொண்டாலும் அவர்களது சந்தேகம் தீரும் வரையில் பொறுமையாகப் பதில் சொல்கிறார்.சில வருடங்களுக்கு முன் VAT எனும் மதிப்புக் கூட்டு வரி அறிமுகப் படுத்தப்பட்ட போது-தனியொரு நபராக 350 நபர்களுக்கு தன் சொந்த முயற்சியில் பயிற்சி தந்துள்ளார்.பணியிலோ படுசுத்தம்.தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் எவரும்,அவர்கள் எந்தப் பகுதியில் தங்கள் நிறுவனத்தைத் தொடங்குகிறார்களோ,அந்த சரக வணிக வரித்துறை அலுவலகத்தில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.நிறுவனங்கள் தரும் தகவல்களைச் சரிபார்த்து-அதற்கு ஒப்புதலைத் தரும் இடத்தில் இருக்கும் அதிகாரி தான் CTO.அந்த நிலையில் இருந்தாலும்,இவர் எந்த நிலையிலும்,எதற்காகவும் ஒரு பைசா கூட லஞ்சம் பெறுவதில்லை.சாத்தூர் சரகத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்வது தொடர்பாக இவரைச் சந்தித்த போதுதான் முதன்முறையாக எனக்கு இவரது அறிமுகம் ஏற்பட்டது.
எதை எதையோ எழுதுகிறோம்,பகிர்கிறோம், பரப்புகிறோம்.,
கடைமையைச் செய்...அதையும் அனுபவித்துச் செய்...இயன்றவரை நேர்மையாக இரு..என்றளவில் இயங்கும் சாத்தூர் வணிகவரி அதிகாரி திரு.கேசவன் அவர்களைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.எழுதிவிட்டேன்.கேசவன் சார் இந்தப் பதிவைப் படிப்பாரா என்பது கூட எனக்குத் தெரியாது.அது தேவையும் இல்லை.
நேர்மையான,பொது மக்களிடம் அன்பாகப் பழகும் அரசு அதிகாரிகள் எல்லாம் கதைகளில் மட்டுமே இருப்பார்கள் என்ற நிலையில்,நம் கண் முன்னமே இருக்கும் கேசவன்களைப் பாராட்டியேத் தீர வேண்டும்.........

பாலில் ஒரு பூண்டு போதும்: நிகழும் அற்புதம் தெரியுமா?



ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார்.
பாலில் பூண்டு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.
பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.
ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
பூண்டு பாலை குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
முகப்பரு பிரச்சனைகள் வராமல் தடுக்க, பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவி, கழுவ வேண்டும். அல்லது அந்த பாலை குடித்து வரலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.
பூண்டு பாலானது நாம் சாப்பிடும் உணவுகளை ஜீரணமாக்க உதவும், செரிமான திரவத்தை தூண்டி, உணவுகளை எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
பூண்டு கலந்த பாலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.
Image may contain: one or more people, drink, food and indoor

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்.

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்…

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்…
பெருங்காயம் (Asafoetida) வெப்பத் தன்மையுடன் (Heat) கூடிய‌ கரகரப்புச்சுவை கொண்டது. எண்ணற்ற
மருத்துவ பண்புகள் இந்த பெருங்காயத்தில் இருந்தாலும், அளவோடு இருந்தால் மருந்தாகவும், அளவுக்கு மிஞ்சினாலும் நோயாகவும் பய ன்படுகிறது.
ஆகையால் வயிற்றுப் பொருமல் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்ப ட்ட‍வர்கள் யாராக இருந்தாலும், பொரித்த பெருங்காயம் (Asafoetida) அரை கிராம் எடுத்துக் கொண்டு அத்துடன் சிறிது பனை வெல்லத்தை (Palm Cheese) சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் (Abdominal Fatigue), வயிற்று வலி (Stomach Pain) போன்றவை வந்த அடையாளம் இன்றி ஓடி மறையும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.

🌸அஞ்ஞானம்🌸

🌺கிடைத்த எதுவும் மகிழ்ச்சி தருவதில்லை. மாறாக ஏதோ ஓன்று கிடைக்கவில்லை என்ற ஏக்கம்தான் எல்லோரையும் கொல்லாமல் கொல்கிறது. துக்கம் பலரையும் பீடித்திருக்கிறது. எப்போதும் துக்கமின்றி இருப்பது தான் உண்மையான ஞானம் என்பது பலருக்கு புரியவே இல்லை.
🍀துக்கத்திற்கு காரணமான நிகழ்வுகள் பெரிதும் வெளியிலிருந்து தான் நம் மீது திணிக்கப்படுகிறது. ஆனால் அதை துக்கமாக எடுத்துக் கொள்வதா இல்லையா என தீர்மானிக்கிற உரிமை நம்மிடம் தான் இருக்கிறது. அதை தான் ஞானம் என்று ரமணர் ராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் புரிய வைக்கிறார்கள். ரமணருக்கும், ராமகிருஷ்ணருக்கும் கடுமையான நோய் தாக்கியபோதும் அது தாங்க முடியாத வேதனை என்று புலம்பவில்லை. கடவுளை சபிக்கவில்லை. மாறாக அவை இறைவன் கொடுத்த ப்ரசாதம் என ஏற்றுக் கொண்டு விட்டார்கள். துக்கம் வெளியில் இருந்து தாக்கினாலும் அதை துக்கமாக அவர்கள் கருதவில்லை.

அவர்களது வித்தியாசமான மனோநிலை அவர்களை துக்கத்திலிருந்து மீட்டு விட்டது. ஆனால் இன்று மனிதர்கள் இதற்கு நேர்மாறாக இருக்கிறார்கள். இயல்பாக நிகழும் சின்ன சின்ன நிகழ்வுகளை கூட தங்கள் அஞ்ஞானத்தால் துக்கமாக்கி கொள்கிறார்கள்.
🌻இன்று நாமோ பாயசமே கொடுத்தாலும் கூட அதில் முந்திரி பருப்பு குறைவாக இருந்தது என்று துக்கம் தொண்டையை அடைக்க வேதனை அல்லவா அடைகிறோம். என்றும் அஞ்ஞானம் துக்கத்தில் சிக்க வைக்கிறது. ஞானமோ அதிலிருந்து விடுவிக்கிறது. துக்கத்தால் நாம் துக்கப்படுவதில்லை. அஞ்ஞானத்தால் தான் துக்கப்படுகிறோம்.

Rasi Biriyani Mix...



Guru Rasi Biriyani Mix........

Measure Rasi  biryani mix in a cup. Add two times of water and 500g vegetable or half cooked mutton or chicken. Pressure cook. Add ghee before serving. (add salt and chilly to 
non veg)

Biryani rice, vegetable oil, garlic, mint, dry ginger, clove,cardamom, cinnamon, salt,spices and condiments.

Rasi Badam Mix with Nuts...

Guru Rasi Badam Mix with Nuts...

Add one or two teaspoon of natural badam mix powder to a cup of hot or cold  milk and stir well.already contains sugar. However add more sugar if desired.
Sugar, milk solids, nutmeg, clove, starch, badam essence contains permitted synthetic food colours and flavor.

Calories443.26 K cal
Total FAT2.52 g
Saturated FAT1.50 g
Poly Unsaturated FAT0.62 g
Mono Unsaturated FAT0.40 g
Trans FAT0 g
Cholestrol0 mg
Protein15.92 g
Carbohydrate80.37 g
Dietary Fiber2.10 g

Rasi Health Mix...

Guru Rasi Health Mix..............

To have combination of all the essential nutrients in one meal, Rasi Health Mix is the ideal family porridge. Rasi Health Mix, a Perfect blend of cereals, pulses and nuts is best suited for today's health-conscious consumers. It is an excellent source of high quality proteins and Vitamins that helps in preventing various nutrient deficiency disorders. Rasi Health Mix promotes overall health of the family.
Add enough quantity of Rasi health mix. Add milk or water and mix well. (3 tablespoon Rasi health mix for 300ml milk/water). Boil this mixture stirring frequently for 3 minutes to make porridge. Add sugar or salt for taste and serve. Rasi health mix is the ideal nutritious food.

Ragi, bajra, jowar, maize, wheat, Bengal gram,fried gram, red rice, green peas, green gram,  barley,soyabean, sago, cashew nut, almond and cardamom.

Thursday, June 29, 2017

<<<<<<<<<<<<<<,GST>>>>>>>>>>>>>>>

📦📦📦📦📦📦📦📦📦📦📦
GST - ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.
1. Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.
2. Online மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
3. உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.
4. Aggregated turnover என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim செய்ய முடியும்.
6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.
- 1)CGST - Central goods and service tax.
- 2)SGST -State goods and service tax.
- 3)IGST - Integrated goods and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும். IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும். IGST =CGST +SGST.
IGST என்பது IT based centrally managed automated mechanism to monitor the "Inter state sales and supply of goods and services.
7. வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.
8. Invoice ல் விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல் காண்பிக்க முடியும். Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது சேர்க்க தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.
9.Invoiceகள் 3 copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம். Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும். Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.
10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்.
11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை "aggregated turnover" உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள். ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம். வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.
12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால் turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள் composition scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.
14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.
16. Job work கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.
17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
B2B means supplies to registered person. (i. e.)business to business men.
18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
19. வரி செலுத்தும் போது கீழ் கண்ட GST account code எழுத வேண்டும்.
CGST -Tax 00010001,
 IGST -Tax-0002 0001
SGST -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.
20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம் படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.
21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in FORM GSTR-9B,electronically through a common portal.
22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண் ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.
23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.
24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter கொடுக்கும் invoice ல் உள்ள tax யை ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.
25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4 A ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.
26. ஒரு வியாபாரி வேறு மாநில Consumer அல்லது unregistered person க்கு விற்றால், அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000 க்கு குறைவாக இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.
27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும். அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும் form உடன் பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.
28. GST slab rates are 5%,12%,18%,28%.
29. Job work "service " என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.
30. ஒரு unregistered jobworker - யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.
31. நாம் அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். நம் பார்ட்டியும் அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.
32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.
33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.
34. நாம் வாங்கிய Raw Material (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.
35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது
36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை turnover செய்பவர்கள் Invoice ல் HSN code குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை turnover செய்பவர்கள் முதல் 2 degit HSN code குறிப்பிட வேண்டும்.
37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.
38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.
39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும் உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.
41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு "reverse charge "முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.
42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு ஆகு‌ம். Commission,freight, packing charges சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.
43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
44. GST நம்பர் எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம் இல்லை என்றாலும் nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).
46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.
47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும். அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.
48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் ஏதாவது தவறு அல்லது விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக எடுத்துச் கொள்ளப்படும். வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36
50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
51. ரூபாய் ஒன்றறை கோடி வரை டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில் ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63
53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
55. GST சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் GST அதிகாரிகளுக்கு உதவ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். Section 85
57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு இருந்தால் திருத்திக்கொள்ள அபராதம் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. Section 86
58. GST சட்டத்தின்படி முறையான ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை கொண்டு செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89
59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90 நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் .Section 167.
61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.
62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2
63. "Mutatis mutandis" means "the necessary changes having been made ".
Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.
64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு கிடைத்தால் GST சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில் பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிட்டால் mismatch என இருவருக்கும் notice வரும்.
65. வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் போது "time of supply "என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல் முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.
66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் "Aggregated turnover "கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.
67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.
68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை ஏற்கனவே கொடுத்த invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28
69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும். Section 68
70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும். Section 64.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...