Sunday, June 30, 2019

செவ்வாய் +ராகு சேர்க்கை:




கிரக சேர்க்கை வரிசையில் அடுத்த படியாக செவ்வாய் ராகு சேர்க்கையை பார்ப்போம்..
செவ்வாய்க்கு என்று சில தனித்துவம் உள்ளது..வீரம்,ஆற்றல்,ஆவேசம்,உணர்ச்சி பிழம்பு, முன் யோசனையற்ற தன்மை போன்றவை அவரின் காரகத்துவம் ஆகும்...
போர் வீரன் என போற்றப்படும் செவ்வாய் எதிரியின் பலம் பலவீனம் அறியாமல் ஒரு போரில் குதிக்கும் போது வெற்றி பெறுவதில் இங்கே சிக்கல் ஏற்படும்.. ஏனெனில் அவர் இங்கே போட்டியிட்டு வெல்ல துடிப்பது ராகுவை..சூரியனையே சும்மா உட்கார வைத்து விடும் ராகுவுக்கு செவ்வாய் ஒரு பொருட்டாக இருக்க முடியுமா என்ன???செல்லா காசாக்கி விடுவார் அல்லவா???
இந்த சேர்க்கை உள்ளவர்களுக்கு எந்த விஷயத்திலும் தயக்கம் குறைவு..எதிரியின் பலம் பலவீனம் எல்லாம் பற்றி கவலை பட மாட்டார்கள்..இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு தான் செயல் படுவார்கள்...செவ்வாயே சில சமயங்களில் பின்வாங்க நினைத்தாலும் உடன் இருக்கும் ராகு அவரை உற்சாகப்படுத்தி எந்த செயலையும் (சரியா தவறா என்பது வேறொரு விஷயம்) மிக தைரியமாக செய்ய வைப்பார்...
இதில் இரு வேறு நிலைகள் உள்ளன...செயலின் நோக்கம் நல்லது என்றால் பாராட்டலாம்..உதாரணமாக யாருமே போரிட பயந்த கோலியாத் என்னும் மாமிச மலையை தாவீது என்னும் சிறுவன் போரிட்டு வெற்றி பெற்றது போன்ற விஷயங்களில் நன்றாக செயல்படும்..
ஆனால் மண்ணாசை பெண்ணாசை போன்ற விஷயங்களில் நாட்டம் செல்லும் போது பெரும் குழியை தோண்டி வைத்து கனகச்சிதமாக விழ வைத்து விடுவார் ராகு...
இருப்பினும் சுபர் பார்வை இவர்கள் மீது படும் போது மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும்...
Image may contain: 2 people
மல்யுத்த வீரர்,விளையாட்டு வீரர்களுக்கு இது போன்ற அமைப்பு சிறந்து விளங்க உதவும்..ஏனெனில் வெற்றிக்காக போராட்டத்தின் உச்சிக்கே செல்வார்கள்...அது எதிரிகளையே நிலை குலைய செய்யும் என்பதில் ஐயமில்லை... வழக்கறிஞர்களுக்கும் இது ஒரு விசேஷமான அமைப்பு தான்...
பொது பரிகாரமாக ஒரு நல்ல துறையை தேர்ந்தெடுத்து அதில் சரியாக போராடி வெற்றி கொடி நாட்ட முயற்சிக்க வேண்டும்.. பிறரை துன்புறுத்தும் நோக்கத்தோடு செயல் படுவதை தவிர்த்து விட்டு நல்ல விஷயங்களை அறிந்து அதன் வழியில் செல்ல வேண்டும்.. மனதை கட்டுப்படுத்தும் பயிற்சிகளும் அவசியம்...
செவ்வாய் கிழமை ராகு காலத்தில்(பகல் 3 முதல் 4.30 வரை) விஷ்ணு துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும்... துர்க்கை அம்மன் இருவரையும் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவர்....அவரின் அருளை பெரும் போது நற்பலன்கள் உண்டாகும்...
நன்றி..

இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை!

** திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும்.
** குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.


** 20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்.
** அசைவ உணவு உண்ணாதவர்கள்; அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.
** தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தருவது திராட்சை.
** காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி இவை தரும் தீராத தொல்லைகள் தீரும்.
** மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது நல்ல பலனளிக்கும்.

** குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவ பயன் நிறைந்தது திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து கொடுத்தால் பலன் தெரியும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியங்கள்.

சிதம்பரம் நடராஜர் கோவில் ரகசியங்கள்

















சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்களை, நம்மை வியக்க வைப்பவையாகவே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

* சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடமானது, பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது.

* மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலின் 9 நுழைவு வாசல்களும், மனித உடலில் இருக்கும் நவ துவாரங்களை குறிக்கின்றது.

* கோவில் விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டு உள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது.

* 21,600 தகடுகளை வேய, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72 ஆயிரம் என்ற எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கிறது. இதில் கண்ணுக்கு தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

* பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டு உள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். அந்த இடத்தை அடைய 5 படிகள் ஏற வேண்டும். இந்த படிகளை பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படுகிறது.

* கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. அது 4 வேதங்களை குறிக்கின்றது.

* பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளை கொண்டு உள்ளது. இது 64 கலைகளை குறிப்பதாக சொல்கிறார்கள்.

* பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கிறது.

அத்திவரதர் கோவில் திருவிழா கோலாகல துவக்கம்.

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் பக்தர்களுக்கு இன்று (ஜூலை 1) முதல் காட்சி தருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த பக்தர்கள் இன்று முதல் வரதராஜ பெருமாள் கோவில் நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்





காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று துவங்குகிறது. அனந்தசரஸ் குளத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் அத்தி வரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தினர்.




இதைத் தொடர்ந்து அத்தி வரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டன. ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு வசந்த மண்டபத்தில் இன்று காலை 5:00 மணிக்கு அத்தி வரதர் காட்சிதருகிறார். பொதுமக்கள் காலை 5:00 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 




கோவிலைச் சுற்றி பக்தர்கள் வசதிக்காக சாலையில் 'கூல் பெயின்ட்' அடிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியும், மொபைல் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. முதல் 24 நாள் சயன கோலத்தில் அத்தி வரதர் காட்சிதருவார். பின் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார்.

இது தான் மக்கள் சேவை.....

காவல்துறை இயக்குநர் திரிபாதி.. இவரது பின்னணி குறித்து தெரிந்துகொள்வோம்.

காவலர் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக உள்ள திரிபாதி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை முடித்து, பின்னர் முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியரானார்.
1983ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வை எழுதத் தொடங்கிய திரிபாதி, 1985ஆம் ஆண்டு தனது மூன்றாவது முயற்சியில் ஐபிஎஸ் அதிகாரியானார். 
முதல் முறையாக திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற திரிபாதி, பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்து மக்களிடையே பிரபலமானார். குடிசைகளைத் தத்தெடுப்பது, புகார் பெட்டிகள் அமைப்பது என பல நல்ல திட்டங்களும் அதில் அடங்கும்.
இதுமட்டுமின்றி, திரிபாதிக்கு மற்றொரு கூடுதல் சிறப்பும் உண்டு.
இரண்டு சர்வதேச விருதுகளை பெற்ற முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்திற்கான காமன்வெல்த் சங்கம், என்ற தலைப்பில் திரிபாதிக்கு தங்கப் பதக்கத்தை வழங்கியது.
வாஷிங்டனைச் சேர்ந்த சர்வதேச காவல்துறைத் தலைவர்கள் சங்கத்தின் சமூக காவல் விருதும் திரிபாதிக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் விருதை வாங்கிய முதல் காவல்துறை அதிகாரி என்ற பெருமையும் இவரையேச் சாரும்.
தனது 30 வருட காவல் பணியில் தென்மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி என பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார், திரிபாதி. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியற்றிய திரிபாதி, 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார்பிரபல ரவுடி வீரமணி வேளச்சேரி வங்கிக் கொள்ளையர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டது இவரின் பதவி காலத்தில் தான்.
கொடூரர்களை ஒடுக்க இரும்புக்கரத்தை பயன்படுத்திய அதே நேரத்தில், குற்றம் புரிந்தோர் மனம் திருந்த நல்வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.
திரிபாதி சிறைத்துறை தலைவராக இருந்தபோது, சிறைவாசிகளின் வாழ்வை மேம்படுத்தி, சமூக அந்தஸ்தைப் பெற்றுத்தர பல ;நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதற்கு உதாரணமாக சிறைச்சாலைகளில் சமூக கல்லூரியை தொடங்கிசிறைவாசிகளுக்கு கல்வி வழங்கியது, வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது, சிறைக் கைதிகளை தத்தெடுக்கும் திட்டம் உள்ளிட்டவை இன்றளவும்பாராட்டப்படுகின்றன....
Image may contain: 1 person, hat and sunglasses

தொண்டர்களுக்கு பழகி விட்டது இந்த (ஏ)மாற்றம்.

டிஆர் பாலுவே இவ்வளவு சொல்லி விட்டார், அப்படின்னா..
உதயநிதிக்கு புதிய பொறுப்பு கன்பார்ம் ஆயிடுச்சுன்னுதான் அர்த்தம் என்கிறார்கள் திமுக தொண்டர்கள்....
நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி மிக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை திமுக நிர்வாகிகளிடையே எழுந்தது.
திருச்சி கூட்டத்தில் இதற்காக ஒரு தீர்மானமே போட்டுவிட்டார்கள். இதுபோலவே பல்வேறு மாவட்ட செயலாளர்கள் உதயநிதியை திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்குமாறு கட்சி தலைவர் ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், சென்னை போரூரில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர். பாலு, உதயநிதி உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
அப்போது டிஆர் பாலு பேச ஆரம்பிக்கும்போதே, உதயநிதியை எக்கச்சக்கமாக புகழ்ந்து தள்ளிவிட்டார்.
"இயக்கத்தின் இளந்தென்றல்", "கழகத்தின் வருங்காலம்", "இயக்கத்தின் எதிர்காலம்" என்று அடைமொழி வைத்து பேசினார்.
அப்புறம் என்ன.. திமுகவின் மூத்த நிர்வாகியே, இயக்கத்தின் எதிர்காலம் என சொல்லிவிட்டதால், நிச்சயம் உதயநிதி முழு நேர அரசியலுக்கு வந்துவிடுவார் என்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்!

Thursday, June 27, 2019

புதிய தலைமைச் செயலர் யார்.

தமிழக அரசின் புதிய தலைமை செயலராக சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இப்பதவியில் உள்ள கிரிஜா வைத்தியநாதன் 2016 டிசம்பரில் பொறுப்பேற்றார்; வரும் 30ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தி வந்தது. இந்த பட்டியலில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது நிதித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார். கிரிஜா வைத்தியநாதன் 2017 டிசம்பரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தலைமை செயலர் பொறுப்பை கூடுதலாக சண்முகம் கவனித்துள்ளார்.முதல்வரின் செயலராக உள்ள செந்தில்குமாரிடம் நிதித்துறை செயலர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல சட்டம் ஒழுங்கு பிரிவு புதிய டி.ஜி.பி.யாக திரிபாதி நியமிக்கப்படுவது குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன், சண்முகம்

தமிழக சட்டசபை கூடியது- மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல்.

தமிழக சட்டசபை கூடியது- மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல்
















தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற்றது. விவாதத்துக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மே 30-ந் தேதி பிறப்பித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது. 

சபை கூடியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ்சவர்ணம், ஏ.சுப்பிரமணியம், ந.செல்வராஜ், ஏ.கே.சி.சுந்தரவேல், மு.ராமநாதன், பொ.முனுசாமி, சா.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. 

மேலும், எம்.எல்.ஏ.க்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி (விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்தும், சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது. 

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்!!

கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச் 
சொன்னபோது ,
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது ,
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க...
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி என்றபோது ,
பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க.
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
பாசிப் பயறோ கடலை மாவோ
அரைத்துக்குளி என்ற போது ,
லிரில் , லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோள் சுறுங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு ,
ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
இருமலோ தும்மலோ வந்தபோது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்தபோது ,
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு ,
ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்
செடி வளர்க்க.
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள.
வயிற்று வலி என்றபோது
வெறும் வயிற்றில் வெந்தயக் களியோ கற்றாழைச் சாறோ கொண்டு வந்து தந்தபோது
சீறி தூக்கி எறிந்து ,
ப்ருஃபென்னும் பெயின்கில்லரும் போட்டு கருப்பை பளுதடைந்த பின்பு ,
ஓடுகின்றேன் கற்றாழை
வளர்க்க..
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மணமாய் தந்தபோது ,
சன்ஃபிளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக் கூறி முகத்தில் அறைய
பதிலுரைத்துவிட்டு ,
இன்று
உடல் நோய்க்கு இடமாக ஓடுகின்றேன்
செக்கு நோக்கி .
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள.
மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ,
ஆர்வோ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமானபின்பு
ஓடுகின்றேன் மண்பானை
வாங்க.....
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி ,
கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து ,
மாடிகளில்
குளீருட்டப்பட்ட அறைக்கு இலட்ச
இலட்சமாய்க் கொட்டி , நடைப்பிணமாக
வாழ்வில் எங்கே சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கெங்கோ திாிந்து அலைகிறேன்.....
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்
மூத்தோா் சொல் வார்த்தையும்
முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்
வாழ்க வளமுடன்!!

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.
*மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு,*
*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு,*
*சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு,*
*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு,*
இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்.
இதற்கான விளக்கம்:-
மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்.
மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு: வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.
சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு: ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.
எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.
சாமிதான் பொய்யானால் சாணம் பாரு: இது ரொம்ப சுவாரசியமான விஷயம். கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள்.
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும்.
விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது.
இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.

*நீங்கள் யோக்கியரா?*

மதுரையில் கௌசல்யா என்னும் பெண் காணாமல் போனதாகக் கொடுக்கப்பட்டப் புகாரை சரியாக விசாரிக்க வில்லை என்று சொல்ல உயர்நீதி மன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை நாம் மறுக்க முடியாது. அதற்காக, நடிகை நயன்தாரா காணாமல் போனால் தான் சரியாக விசாரிப்பீர்களா என்று போலீஸைப் பார்த்து பொத்தாம் பொதுவில் கேட்க, அதே நீதி மன்றத்துக்குத் தகுதி இருப்பதாக நான் கருத வில்லை.
அந்த நடிகை எவ்விதத்திலும் இப்புகாரில் சம்பந்தப் படாமல் இருக்க, அவரை நீதிபதி குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
குற்றங்கள் பல புரிந்த ஓர் அயோக்கிய முன்னாள் மந்திரியின் குடும்பத்துக்கு நீதி மன்றம் 20 க்கு மேற்பட்ட சமயங்களில் முன்ஜாமீன் வழங்கி இருப்பதைப் பார்க்கிறோம். அதே நீதி மன்றம், குப்பனுக்கும், சுப்பனுக்கும், அவ்வளவு தடவை முன்ஜாமீன் வழங்கிக் கண்டிருக்கிறோமா? இந்த ‘சிதம்பர ரகஸ்யத்தின்’ காரணம் என்ன? யாரிடம் இதைக் கேட்பது?
ஊழல் புரிந்தது நிரூபிக்கப்பட்டு, ஒரு முதலமைச்சர் ஜெயிலுக்குப் போனார். அதை விட 1000 மடங்கு ஊழல் புரிந்து, இன்னும் 10 தலைமுறைக்கு சொத்தினைக் குவித்து வைத்து இருந்த இன்னொரு முதல்வர் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து தப்பித்து உள்ளார். முயலுக்குத் தண்டனை கொடுத்த அதே கோர்ட் தான் முதலையைத் தப்ப விட்டு விட்டு விட்டது! இதை யாரிடம் சொல்வது?
ஓரிரு நாட்கள் சிறைக்குச் சென்றாலே, எந்த நிறுவனத்திலும் வேலை கொடுக்க மாட்டார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேச மாட்டார்கள்!
ஆனால் ‘தீஹார்’ சிறையில் மாதக் கணக்கில் பொழுதைக் கழித்த இருவர் இப்போது வெற்றி பெற்று பாராளுமன்றம் போய் விட்டனர். இதை யாரிடம் கேட்பது? எந்தக் கோர்ட் இவர்கள் ஜெயித்தது நாட்டுக்கே அவமானம் என்று அபிப்பிராயம் சொல்லியிருக்கிறது? இன்னொரு வழக்கில், நயன்தாராவை இழுத்த நீதிபதியே, தீஹார் பற்றியும் விமரிசனம் செய்வாரா? அதற்குரிய துணிவு இருக்கிறதா?
பசியை ஆற்றிக் கொள்ள செய்யப்பட்ட ஒரு சிறு திருட்டுக் குற்றத்துக்குத் தண்டனை கொடுக்கும் கோர்ட், ஹரியானா அரசை ஏமாற்றி, கோடி கோடியாக சம்பாதித்ததாக சொல்லப் படும் ராபர்ட் வாத்ராவை வெளியில் விட்டுள்ளதை யாரிடம் கேட்பது? எந்தக் கோர்ட் முன் வந்து, அவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க சொல்லப் போகிறது? பணத்துக்கும், பதவிக்கும் ஒரு நீதி, பஞ்சத்துக்கும், பரம ஏழைக்கும் இன்னொரு நீதி! இது தானே இங்கு இருந்து வருகிறது!
முன்பு ஓர் உச்ச மன்ற நீதிபதி ஊழல் செய்ததாக பரவலாகப் பேசப் பட்டதே, அவர் மீது ஏதாவது நடவடிக்கை உண்டா? எத்தனை வழக்குகளில், 100 ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக, போலீஸ்காரர்களை, கிராம நிர்வாகப் பணியாளர்களை, இதரக் கீழ்மட்ட அலுவலர்களை, உள்ளே தள்ளுகிறீர்கள்? ஏன் இவர் தப்பிக்க, மௌனம் சாதிக்கிறீர்கள்?
நானும் போலீஸ்காரனாக இருந்தவன். கூடுமானவரை நேர்மையாக உழைத்தவன். காவல்துறையில் , ஒரு சிறு தண்டனை கூட இல்லாமல், நூற்றுக்கணக்கான வெகுமதிகள் பெற்று நிம்மதியுடன் ஓய்வு பெற்றவன். இன்று 80 வயதில் நிற்கிறவன்.
போலீஸ் துறையில் உள்ளவர்கள் செய்யும் மக்கள் சேவையை நன்கு அறிந்தவன். சமுதாயத்தால், கோர்ட் இல்லாமல் பல ஆண்டுகள் வாழ முடியும்; ஆனால் போலீஸ் இல்லாமல் 5 நிமிஷம் கூட நிம்மதியாக வாழ முடியாது. ஜட்ஜ்கள் இதனை நினைவில் கொண்டு விமரிசனம் செய்ய வேண்டும்.
அதிகாரம் இருப்பதற்காகவும், ஊடகங்களின் துணை இருப்பதற்காகவும், பொத்தாம் பொதுவில், ஒரு நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு போலீஸை இழிவு படுத்துவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. நீதி மன்றம் இந்த அபிப்பிராயத்தை ஆவணங்களிலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதே என் விண்ணப்பம்.
ஜெய் ஹிந்த்!

சாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா? -வணிக வரித்துறை நோட்டீஸ்.

சாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா? -வணிக வரித்துறை நோட்டீஸ்
















உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் உள்ளது ‘முகேஷ் கச்சோரி’. இது மிக சாதாரணமான கச்சோரி, சமோசா ஆகியவை விற்கும் சிறிய கடை ஆகும். 

இதன் உரிமையாளர் முகேஷ், 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடையை தொடங்கியுள்ளார். இந்த கடைக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இவரது கடையின் ஸ்பெஷலே, ஒரு முறை கச்சோரி  சாப்பிட தொடங்கி விட்டால் வாடிக்கையாளர்கள், தினமும் வந்து சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள்.  அந்த அளவுக்கு நேர்த்தியாகவும், ருசியாகவும் கச்சோரி, சமோசா ஆகியவற்றை தயாரிப்பதே ஆகும்.

இவர் தனது கடையின் வருமானத்தை வங்கியில் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் வணிக வரித்துறையினர் சிலர் முகேஷின் கடைக்கு அருகே உள்ள கடையில் அமர்ந்து அவரது வியாபாரம் குறித்து டிராக் செய்ய ஆரம்பித்தனர். 


இதில் முகேஷ், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லாபம் பார்க்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி வந்த பின்னரும் அவரது கடையினை பதிவு செய்யாமல் இருந்துள்ளார். 

உடனடியாக வணிக வரித்துறை அவருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இது குறித்து முகேஷ் கூறுகையில், ‘எனக்கு இதுப்பற்றி எல்லாம் தெரியாது. 12 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறேன். 

வாழ்வதற்காக மட்டுமே இந்த கடையை ஆரம்பித்து, மக்களின் வரவேற்போடு ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இப்படி சில முறைகள் உள்ளன என்பது பற்றி யாரும் என்னிடம் எடுத்துரைத்தது இல்லை’ என கூறினார். 

இந்த விவகாரத்தை விசாரிக்கும் மாநில புலனாய்வு பணியகம் கூறுகையில், ‘முகேஷ் தனது கடையின் வருமானம் குறித்து ஒப்புக் கொண்டார். மேலும் அவர் கேஸ், சமையல் பொருட்கள் போன்றவற்றிற்கு எவ்வளவு செலவிடுகிறார்? என்கிற முழு விவரத்தை கொடுத்துள்ளார்’ என கூறியுள்ளார். 

எண்ணங்களை ஈடேற்றும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில்.

எண்ணங்களை ஈடேற்றும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில்

















ராமபிரான் இலங்கைக்குச் சென்று, சீதை இருக்கும் இடத்தைக் கண்டுவர வேண்டி, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன் தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூற, அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோகவனத்தில் கண்டார்.

ராமபிரான் அளித்த கணையாழியை, சீதையிடம் கொடுத்து விவரங்கள் கூறினார். மகிழ்ந்த சீதாதேவி கொடுத்த சூளாமணியை பெற்றுக்கொண்டார். பின்னர் இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு, ராவண தர்பாரில் ராமபிரானின் ஆற்றலை எடுத்துக்கூறி எச்சரித்தார். அப்போது அனுமனின் வாலுக்கு அசுரர்கள் தீயிட்டனர். அத்தீயைக் கொண்டு இலங்கையை எரித்தார்.

பின்னர் அனுமன் நற்செய்தி கொண்டுவருவான் என ஆவலுடன் காத்திருந்த ராமபிரானிடம், சீதை கொடுத்த சூளாமணியைக் கொடுத்து “கண்டேன் அந்த கற்பினுக்கணியை” என்றார். அதைக் கேட்டு ராமபிரானின் முகம் மலர்ந்தது. பின்னர் ராமபிரான் தனது பரிவாரங்கள் மற்றும் வானர வீரர்களின் உதவியோடு, கடலில் பாலம் அமைத்து இலங்கைக்குச் சென்று போர் தொடுத்தார். அந்தப் போரின் இறுதியில் ராவணன் கொல்லப்பட்டான்.

இதையடுத்து ராவணனின் தம்பி விபீஷணனுக்கு முடிசூட்டி விட்டு, புஷ்பக விமானத்தில் சீதாதேவி, தம்பி லட்சுமணன் ஆகியோருடன் அயோத்தி புறப்பட்டார் ராமபிரான். அங்கு சீதாதேவி, அனுமன், தன் சகோதரர்கள், சுக்ரீவன், விபீஷணன் உள்ளிட்டோர் சூழ்ந்திருக்க ஸ்ரீராமர் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.

மேற்கூறியவை தான் ராமாயணம் சுந்தர காண்டத்தின் ரத்தினச் சுருக்கமாகும். சுந்தர காண்டத்தின் அனைத்துச் சர்க்கங்களையும் பாராயணம் செய்ய இயலாதவர்கள், சுந்தர காண்டச் சுருக்கத்தை அனுதினமும் தொடர்ந்து ஒரு மண்டலம் காலை, மாலை பாராயணம் செய்து வந்தால் எந்த நற்காரியத்தை மனதில் நினைத்திருந்தாலும், அது தடங்கலின்றி சுபமாக விரைவில் நிறைவேறும்.

வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், துளசிதாசர் எழுதிய ராமசரித மானஸ், ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தி திருமகன் என ராமாயணம் பற்பல பெரியோர்களால் எழுதப்பட்டதை அறிந்திருப்போம். அகத்திய மாமுனிவராலும் ராமாயணம் எழுதப்பட்டது. ஆம்! இதனைப் பற்றிய புராணக்குறிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவண்பரிசாரம் திருத்தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

விடிந்தால் திருக்கயிலை மலையில் உலகாளும் ஈசனுக்கும், அன்னை உமையவளுக்கும் திருக்கல்யாணம். அங்கே தேவர்களும், முனிவர்களும் மட்டுமன்றி உலகமே திரண்டிருந்தது. அதுசமயம் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. தன் திருமணம் காண வந்த அன்பர்களின் கனம் தாங்காது, பூமி தாழ்ந்து விட்டதை உணர்ந்த சிவபெருமான், அகத்தியரை அழைத்தார். பூமியை சமப்படுத்த வேண்டி தென்பகுதிக்குச் செல்ல ஆணையிட்டார்.

“தென்பகுதிக்கு நான் சென்றுவிடுவதால் தங்களின் திருமணக்கோலத்தை தரிசிக்க முடியாமல் போகுமே” என அகத்தியர் சொல்ல, அகத்தியர் விரும்பும் தலங்களில் எல்லாம் தமது திருமணக்கோலத்தை காட்டியருளுவதாக கூறியருளினார் சிவபெருமான். அதன்பிறகு அகத்தியர் தென்பகுதிக்குப் புறப்பட்டார். பூமி சமன் ஆனது.

அப்படி அகத்தியர், பொதிகையை கடந்து தெற்கில் வந்தபோது குமரியில் சிவலிங்கம் ஸ்தாபித்து ஈசனை வழிபட்டார். அங்கேயே மீண்டும் ஈசனின் திருமணக்காட்சியை காணவேண்டி அகத்தியர் ஈசனை வேண்ட, அங்குள்ள அத்திமரத்தின் கீழ் அகத்தியருக்கு ஈசன் தமது திருமணக் கோலக் காட்சியை காட்டியருளினார்.

பின்னாளில் வந்த பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபன் இங்கு கோவில் எழுப்பினான். அகத்தியர் வழிபட்ட ஈசன் ‘அகஸ்தீஸ்வரர்’ என்றும், இத்தலம் ‘அகத்தீஸ்வரம்’ என்றும் அழைக்கப்படலாயிற்று. அகத்தியர் இத்தலம் வந்தபோது அவரை, அருகிலுள்ள திருவண்பரிசாரம் எனும் திருப்பதிச்சாரம் திருத்தலத்தில் அனுமன் சந்தித்தார். பின்னர் அகத்தியரிடம், ராமாயணம் இயற்றுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அகத்திய மாமுனிவர், திருப்பதிச்சாரம் திருத்தலத்தில் ராமாயணம் இயற்றியருளினார்.

அகத்திய முனிவர் எழுந்தருளிய அகஸ்தீஸ்வரம் திருத்தலத்தில் ராமபிரானுக்கும் தனித் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ராமர் ஆலயமும் பல ஆண்டுகள் கடந்த பழமையானது ஆகும். கோவில் கருவறையில் ஸ்ரீராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் சமேதராக நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் அனுமன் கண்டிப்பாக அருள்பாலிப்பார். இங்கு பக்தர்கள் ‘அனுமன் சாலிசா' மற்றும் ‘சுந்தர காண்டம்', ‘ஸ்ரீராம நாமம்’ ஆகியவற்றை பாராயணம் செய்து வழிபடுகிறார்கள். இங்கும் சுந்தரகாண்டம் கூட்டுப் பாராயணம் மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திர நாட்களில் வெகுச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் அஷ்டமி, ஏகாதசி, நவமி திதி நாட்களிலும், புதன்கிழமைகளிலும் பக்தர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்தும், சுந்தரகாண்டம் பாராயணம் செய்தும் வழிபட்டு தத்தமது கோரிக்கைகள் நிறைவேறப் பெறுகிறார்கள்.

இங்குவந்து சுந்தரகாண்டம் பாராயணம் செய்து, கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வழிபட்டு வந்தால் எளிதில் எண்ணங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

ராமாயணத்தின் பெருஞ்சிறப்புகளை வளரும் தலைமுறையினர் எளிதில் அறிந்துகொள்ளும் பொருட்டு, ஆண்டுதோறும் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவிலில் ‘ராமாயண ஞானவேள்வி' தொடர்ந்து பத்து நாட்கள் நடத்தப்படுகிறது. விழாநாட்களில் தினமும் மூலவர் ராமபிரானுக்கு திருமஞ்சனமும், சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. அதோடு தினமும் ராமாயணத்தின் அனைத்து காண்டங்களையும் சுருக்கி, பக்தர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் பேருரையும் நிகழ்த்துகிறார்கள்.

அமைவிடம் :

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் இருந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டாரம் என்னும் ஊர் வரும். அங்கிருந்து தெற்கில் 2 கிலோமீட்டர் தூரத்தில் அகஸ்தீஸ்வரம் ஸ்ரீராமர் திருக்கோவில் அமைந்துள்ளது.

*_திமுக தலைமை இடத்துக்கு கருணாநிதி எப்படி வந்தார் என்கிற வரலாறு தெரியாமலேயே இருக்காங்க பரம்பரை அடிமைகள்... ஞாபகப்படுத்துவோமே…_*



1. பெரியாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 17.09.1949 அன்று ராபின்சன் பூங்காவில், திமுக என்கிற கட்சி அண்ணாவினால் ஆரம்பிக்கப்படுகிறது, அப்போது கருணாநிதி அங்கு இருந்தாரா?இல்லை.
2.1956 ல் திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில், அண்ணா, 'தம்பி வா, தலைமையேற்க வா' என்று சொன்னது கருணாநிதியையா? இல்லை, நாவலர் நெடுஞ்செழியனை தானே!!
3.திமுக வளர்ந்து வந்தபோது ஐம்பெரும் தலைவர்களாக இருந்தது அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத், மதியழகன் மற்றும் என்.வி.நடராஜன். இதுலயும் கருணாநிதி இல்லயே!
4. அண்ணா, தன் வாரிசாக கருணாநிதியை எப்போதும் சொன்னதே இல்லை. அவர் மறைவுக்குப் பிறகு தற்காலிக முதலமைச்சர் ஆனது கருணாநிதியா? நாவலர் நெடுஞ்செலியன் தானே முதலமைச்சர் ஆனார்.
5. எம்ஜிஆர் உதவியோடு, பின்வாசல் வழியாக மற்ற எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று நாவலர் நெடுஞ்செலியனை ஓரங்கட்டி தானே முதலமைச்சர் ஆனார்?
6. அத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தந்து தன்னை முதலமைச்சராக ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினாரே கலைஞர்! எதற்காக? கட்சியில் ஊழல் நடக்கிறது, சரியான கணக்கு சொல்லுங்களென அவரை கேட்டதற்கு!!
7. திமுக தொடங்கப்பட்டபோது, திமுகவின் தலைவர் தந்தை பெரியார் தான் என சொல்லி, அறிஞர் அண்ணா பொதுச்செயலாளராகத்தான் இருந்தார், அவருக்குப்பின் வந்த கருணாநிதி பொதுச்செயலாளராகத்தானே இருந்திருக்க வேண்டும், எப்படி தனக்குத்தானே தலைவர் பதவி கொடுத்துக்கொண்டார்?!
8. ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது நம் அப்பழுக்கற்ற கலைஞருடைய ஆட்சிதான் (1976). அதில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்திருக்கிறார் என சர்காரியா கமிஷனே தலைவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. ஊழல் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்காமல், தான் குற்றமற்றவன் என நிருபிக்காமல், இந்திராவுடன் கூட்டணி பேரம் பேசி, வழக்குகளை தவிடுபொடியாக்கிய தன்மானத் தலைவர் கலைஞர் தானே?
10. அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தேர்தலில் வென்று எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார். அவர் இறக்கும்வரை கலைஞருக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவே இல்லையே!!
11. எம்ஜிஆர் மறைவிற்குப்பின் 1989ல் நடந்த தேர்தலிலும் அதிமுக இரண்டாக உடைந்ததால் தானே திமுக ஆட்சிக்கு வர முடிந்தது!!
12. தன்னுடைய மகனுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாதென வைகோ மீது 'என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்’என பழி சுமத்தி 1993ல் கட்சியை விட்டு நீக்கியவர் தானே இந்த கருணாநிதி?!
13. தன் மகன்களின் அதிகாரப்போட்டிக்கு கட்சியின் மூத்த தலைவர் தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது கருணாநிதிக்கு தெரியாது தானே?
14. அடுத்த தலைவர் யார் என கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதும், மூன்று பேர் கொல்லப்பட்டதும் அதற்கு காரணமானவர் யாரென்று அவருக்கு தெரியாது தானே?
15. இப்போது திமுகவில் ஐம்பெரும் தலைவர்களாக இருப்பது யார்? கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி கலாநிதி தானே!! இவர்கள் அனைவரும் திடீரென வந்துவிட வில்லையே, அடிப்படை உறுப்பினர்களாக இருந்து வளர்ந்து வந்து, திமுக சங்கர மடமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் தானே?
16. எந்த வித தேர்வுமின்றி என் காலத்துக்குப் பிறகு ஸ்டாலின் தான் தலைவர் என அறிவித்தது இதில் வராது தானே?
17. கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஈழ துரோகம் மட்டுமல்லாமல், நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, அனைத்திலும் மலிந்து போன லஞ்சம் ஊழல், ராசா கனிமொழி ஊழல் வழக்குகள், அதன்பிறகும் காங்கிரஸுடன் கூட்டணி என கற்றுணர்ந்த திறமை அத்தனையும் மொத்தமாக இறக்கியும், இரண்டு தேர்தலில் தொடர்ந்து தோற்றது ஏனென்று அவருக்கு மட்டும்தான் தெரியும் போல..
இத்தனை இருந்தும் கலைஞர் தலைவர் பதவி ஆசையே இல்லாத ஒப்பற்ற அப்பழுக்கற்ற தலைவர் என்பதில் சந்தேகமே வரக்கூடாது தானே!.
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
திருக்குறள் 654
Image may contain: text

சூரிய பகவானின் அம்சங்கள்.

சூரிய பகவானின் அம்சங்கள்

















வான் மண்டலத்தில் சூரியனின் சுற்றுப் பாதையும் சந்திரனின் சுற்றுப் பாதையும் ஒன்றையொன்று வெட்டும் புள்ளிகளே ராகு மற்றும் கேது ஆகும். மொத்தம் 9 கிரகங்கள் உலக இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. சூரியனிடம் இருந்து ஒளியை பெற்றே மற்ற கிரகங்கள் பிரதிபலிக்கின்றன. சூரியனிடம் இருந்து மற்ற கிரகங்கள் இருக்கும் தூரத்திற்கு ஏற்ப ஒளியளவு மாறுபடும்.

நிறம் - சிவப்பு

குணம் - தாமஸம் (குரூரன்)

மலர் - செந்தாமரை

ரத்தினம் - மாணிக்கம்

சமித்து - எருக்கு

தேவதை - சிவன்

பிரத்யதி தேவதை - ருத்திரன்

திசை - நடுவில்

ஆசன வடிவம் - வட்டம்

வாகனம் - தேர் மயில்

தானியம் - கோதுமை

உலோகம் - தாமிரம்

பிணி - பித்தம்

சுவை -காரம்

ராகம் - சவுராஷ்டிரம்

நட்பு கிரகம் - சந்திரன், குரு, செவ்வாய்

பகை கிரகம் - சுக்ரன், சனி, ராகு, கேது

சம கிரகம் - புதன்

ஆட்சி வீடு - சிம்மம்

நீச வீடு - துலாம்

உச்ச வீடு - மேஷம்

மூலத் திரிகோணம் - சிம்மம்

உறுப்பு - தலை, இருதயம், வலது கண்

நட்சத்திரங்கள் - கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

பால் - ஆண்

திசை காலம் - 6 ஆண்டுகள்

கோசார காலம் - 1 மாதம்

உடற்சூட்டுக்கு.........

வெந்தயம் சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனால் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ உடற் சூடு உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.
குறிப்பாக நீரிழிவு நோயுள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் பருகி வர நல்ல மாற்றம் கிட்டும். பொதுவாக பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும்.
இவற்றோடு காய்ச்சல், சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கும் நிவாரணியாகக் காணப்படுகின்றது இந்த வெந்தயம். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வறுத்தோ அல்லது சாதாரணமாகவோ வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும். மொத்தத்தில் வெந்தயம் என்பது நன்மை தரும் பொருளாகக் காணப்படுகின்றது.
பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. தலை முடி கொட்டுவதை நிறுத்த, வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போல அரைத்து, தலையில் தேய்த்து, அரைமணி நேரம ஊற வைத்து குளிக்க வேண்டும்.

இரங்கல் செய்தி..

குமரி மக்களால் டாக்டர் என்று அன்போடு அழைக்க பெற்று,
இன்று குமரி மாவட்டத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள், எம்எல்ஏ'க்களை உருவாக்கிய அரசியல் குருநாதர்,
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை தொடர்ந்து எம்எல்ஏ டாக்டர் குமாரதாஸ் அவர்கள் காலமானார்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...

தி.மு.க. நெருக்கடி: கராத்தே 'சஸ்பெண்ட்'.

தி.மு.க. மூத்த எம்.பி. ஒருவர் காங்கிரஸ் மேலிடத்திற்கு கொடுத்த நெருக்கடி காரணமாக தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 21ல் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் கராத்தே தியாகராஜன் பேசியதாவது:கடந்த 2016ல் உள்ளாட்சி தேர்தல் அறிவித்தபோது சென்னையில் உள்ள 200 வார்டுகளில் காங்கிரசுக்கு 4 வார்டுகள் தான் தி.மு.க. ஒதுக்கீடு செய்தது. மீண்டும் தி.மு.க.விடம் பேச்சு நடத்திய பின் 10 வார்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.எனவே இந்த தேர்தலில் தென் சென்னை மாவட்டத்தில் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டால் உள்ளூர் 
t
தி.மு.க. நெருக்கடி: கராத்தே 'சஸ்பெண்ட்'
கட்சிகளின் புரிந்துணர்வுடன் 35 வார்டுகளில் வெற்றி பெற முடியும். எனவே தி.மு.க. மாவட்ட செயலர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்தாமல் ஸ்டாலினிடம் பேசி கணிசமான பங்கீட்டை காங்கிரஸ் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு 'உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்தே போட்டியிட வேண்டும். எவ்வளவு நாளைக்குத் தான் காங்கிரசுக்கு பல்லக்கு துாக்குவது' என்றார்.அதற்கு கராத்தே தியாகராஜன் 'சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைகிறது. நாங்கள் யாரையும் பல்லக்கு துாக்க சொல்லவில்லை' என்றார். இதனால் தி.மு.க. - காங்கிரஸ் உறவில் உரசல் ஏற்பட்டது.இதையடுத்து நேரு வெளியிட்ட அறிக்கையில் 'கூட்டணி தொடர்பாக நான் கூறியது என் தனிப்பட்ட கருத்து' என்றார். உடனே கராத்தே தியாகரஜனும் 'உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நேரு சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்றால் நான் கூறியதும் முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்து' என்றார்.இந்த விளக்கத்தை தி.மு.க. மேலிடம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி அக்கட்சியின் மூத்த எம்.பி. ஒருவர் டில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை சந்தித்து கராத்தே தியாகராஜன் மீது புகார் கூறி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.தி.மு.க. நெருக்கடியை தொடர்ந்து கராத்தே தியாகராஜன் நேற்று கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டார்.இது தொடர்பாக கராத்தே தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில் ''மேலிடத் தலைவர்களை நான் எதிர்த்து பேசவில்லை. இப்போது எதற்காக நீக்கினர் என்றே தெரியவில்லை. கட்சிக்குள் எழுந்த அழுத்தமா; வெளியில் இருந்து வந்த அழுத்தமா என்பதும் தெரியவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்தவுடன் அவரை சந்தித்து இதுபற்றி பேசுவேன்'' என்றார்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...