Friday, August 31, 2018

இது தோணலியே !………………..

இன்று கல்யாணத்திற்கு சென்றேன். சொந்தம். திருமாங்கல்ய தாரணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் செய்து வைக்கும் வாத்தியார் சொன்னது. தாலி கட்டியவுடன் ஓடி வந்து மாப்பிள்ளைக்கு கை கொடுக்காதீங்க. தாலி கட்டுவது ஒரு சம்ப்ரதாயம். பானிக்ரஹணம், சப்தபதி என்பது முக்கியமானது. மாப்பிள்ளை பெண்ணின் கையை பிடித்து இந்த சடங்குகள் முடிந்த பின் மாப்பிள்ளைக்கு கை கொடுங்கன்னு சொன்னார். அப்புறம் செருப்பு காலோடு வந்து ஆசீர்வாதம் பண்ணவேண்டாம். தேவர்களும், முன்னோர்களும் வந்து வாழ்த்தும் நேரம். உங்கள் எண்ணம் அவர்கள் வாழ்வை வளமாக்கும். வெட்டி பேச்சும் வீணான சிந்தனையும் தவிருங்க. அப்புறம் கிட்டே வந்து அட்சதையை போட்டு ஆசீர்வாதம் செய்ங்க. மொய் எழுதிட்டு சாப்பாட்டுக்கு ஓடும் கூட்டத்தை பார்த்து ! ஏன் ! நானே முண்டியடிச்சிக்கிட்டு ஓடி இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணலாமே.
Image may contain: 1 person, standing

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.

420 டிடிவி தினகரன் ஆதரவு விலை. மாடுகள்..
எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வாதம் நிறைவடைந்த நிலையில், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், தமிழக முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹ்தகி ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் பதில் வாதம் நடைபெற்று வந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், "இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.-க்களும் செயல்பட்டதாக எம்.எல்.ஏ. ஜக்கையன் அளித்துள்ளதாகக் கூறப்படும் புகார் தொடர்பான ஆவணங்களை சட்டப்பேரவைத் தலைவர் எங்களுக்கு கொடுக்கவில்லை. மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான் 18 எம்.எல்.ஏக்களின் கோரிக்கையே தவிர, ஆட்சிக்கு எதிராக அவர்கள் எந்த இடத்திலும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது உள்கட்சி விவகாரம் என்றால் ஒழுங்கு நடவடிக்கைதான் எடுத்திருக்க வேண்டுமே தவிர தகுதி நீக்கம் செய்ய முடியாது' என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், "உள்கட்சி விவகாரத்தை 3-ஆவது நபரிடம் எடுத்துச் செல்லக் கூடாது. ஒருவேளை ஆளுநர், இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த முடிவுகள் விபரீதமானதாக மாறியிருக்கும். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை 18 எம்.எல்.ஏக்களும் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது. மேலும் முதல்வரை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் மட்டும் வாதிட அனுமதியளித்து, அன்றுடன் இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடையும் என நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி இந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக சட்டப் பேரவைத் தலைவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, வாதங்களை தொகுத்து முன்வைத்தார். அதனைத் தொடந்து இந்த வழக்கில் வாதங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
420 டிடிவி தினகரன் ஆதரவு விலை. மாடுகள்..
எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வாதம் நிறைவடைந்த நிலையில், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், தமிழக முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹ்தகி ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் பதில் வாதம் நடைபெற்று வந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், "இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.-க்களும் செயல்பட்டதாக எம்.எல்.ஏ. ஜக்கையன் அளித்துள்ளதாகக் கூறப்படும் புகார் தொடர்பான ஆவணங்களை சட்டப்பேரவைத் தலைவர் எங்களுக்கு கொடுக்கவில்லை. மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான் 18 எம்.எல்.ஏக்களின் கோரிக்கையே தவிர, ஆட்சிக்கு எதிராக அவர்கள் எந்த இடத்திலும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது உள்கட்சி விவகாரம் என்றால் ஒழுங்கு நடவடிக்கைதான் எடுத்திருக்க வேண்டுமே தவிர தகுதி நீக்கம் செய்ய முடியாது' என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம், "உள்கட்சி விவகாரத்தை 3-ஆவது நபரிடம் எடுத்துச் செல்லக் கூடாது. ஒருவேளை ஆளுநர், இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த முடிவுகள் விபரீதமானதாக மாறியிருக்கும். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை 18 எம்.எல்.ஏக்களும் கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது. மேலும் முதல்வரை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் மட்டும் வாதிட அனுமதியளித்து, அன்றுடன் இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடையும் என நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி இந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக சட்டப் பேரவைத் தலைவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, வாதங்களை தொகுத்து முன்வைத்தார். அதனைத் தொடந்து இந்த வழக்கில் வாதங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்…

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்
ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்க‍ப்படுவதுதான் ஜாதகம் இந்த ஜாதகத்தில்
நவக்கிரகங்களில் ஒன்றான சூரியனால் தோஷங்கள் ஏற்பட்டால் அதற்கு என்ன‍ மாதிரியான பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து, சூரிய காயத்ரி பாராயணம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு.

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு…

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு…
பனைமரத்தை கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் சொல்லி
சென்றுள்ளனர். ப‌னம் பழம் என்பது உருவத்தில் தேங்காயைவிட பெரி யதாகவும், உருண்டையாகவும் கருப்பாகவும் இருக்கும். இப்பனை மரத்தின் பழங்களை (பனம்பழம் – Palmyra fruit ) சாப்பிட்டு வந்தால் உங்கள் கண்களில் ஏற்பட்ட‍ அனைத்துவிதமான நோய்களும் குணமா கி பார்வைத்திறன் மேம்படும் இன்னும் சொல்ல‍ப்போனால் வானில் உயர‌ வட்ட‍மடிக்கும் கருடனுக்கு பூமியில் இருக்கும் சிற்றுயிர்களை பார்த்து வேட்டையாடும் அல்ல‍வா அந்தளவிற்கு உங்கள் பார்வைத் திறன் கூடும்.
இதையும் மீறி நீங்கள் பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்க ன்னா உங்களுக்கு கண்டிப்பாக கண் நோய்கள் குணமாகாது என்பது நம் முன்னோர்கள் சொல் வழக்கு.
இது பொது மருத்துவம் – உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ள‍வும்.

Tuesday, August 28, 2018

பீஷ்மரை விட சகுனி சிறந்தவனா?

பீஷ்மரை விட சகுனி சிறந்தவனா?

பீஷ்மரை விட சகுனி சிறந்தவனா?
பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி? அது எப்ப‍டி முடியும்? பீஷ்மர் ( Bheeshma ), தனது
தந்தை சாந்தனு ( Santhanu ) மகாராஜாவுக்கான தனது வாழ்வின் சுக துக்க‍ங்கள் அனைத்தையும் இழந்து ஒரு வீர பிரம்ம‍ச்சாரியாகவே வாழ்ந்தவர். இவரோடு கேவலம் அந்த சகுனியையா ஒப்பிடுவது அதுவும், பீஷ்மரை விட சகுனி ( Shakuni )
சிறந்தவன் என்று கூறுவது முற்றிலும் அபத்த‍மான ஒன்று என்ற எண்ண ஓட்ட‍ம் உங்கள் மனத்தில் எழுவது நியாயமானதுதான். என்றாலும் இப்போதும் சொல் வேன் பீஷ்மரை விட சகுனி சிறந்தவன் என்று? கோபம் வேண்டாம் மேற்கொண்டு படித்து பாருங்க ள், பிறகு நீங்களும் எனது கருத்தினை ஒப்புக் கொள்வீர்கள்.
தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபல னைக் கண்டான் சகுனி. இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள் வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்ட வேண்டிய நிலை வந்ததே. இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார். கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீ ரோடு அமர்ந்தி ருக்கும் மகனைப் பார்த்தான்.
மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன். நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டு மொத்த மாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலே யே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஒவ்வொரு வர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொ ருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்க வேண்டும். என்றான். அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.? கேட்டா ன் சகுனி.
மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்க முயற்சி செய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூல மாக்கு உன் எதிரிகளை. இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளா க இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத் துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.
எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.
தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.?
எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.?
என் சகோதரி காந்தாரியைக்கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.?
பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.
மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப் படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார். நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.
ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் வித வையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்க ளே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனா ல் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப் பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.
உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளா மல். வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன். இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியை யும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன். தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாம ல் அலறினான் சகுனி.
தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.
மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.
நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு. எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.
தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின் காதுகளிலும் கேட் டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.
காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவ ர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.
யாகம் தொடங்கலாமே… சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா? எனக் கேட்டார்.
ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயி ற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன்.
யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..? கேட்டார் கிருஷ்ணர். குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.
வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரி ல் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.
என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.
ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.
பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி.? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா. ?. கேட்டான் அர்ஜுனன்.
அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்குநேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.
பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்க வில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன்.
போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரை யும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது.
உங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.
அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதன னுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லை யே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.
அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.
என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.
கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவ னால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர் த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.
பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு கார ணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன்.
இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.
துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.
இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதன னைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால். பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்…
தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.
என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான் தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகுவேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது ? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.
அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்.
கோபப் படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.
தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலை க்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத் தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?
போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.
பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..? கேலியாய்க் கேட்டான் பீமன்.
பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன்,
எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதன னுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.
பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப்பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த் துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழி காரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.
கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.
பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.
யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.
பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன் றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.
சகாதேவா. காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.
அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிரு ந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.
என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.
அவனை என் பக்தனாக… அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண் டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.
“என்னை விரும்பி ஏற்பதோ.. விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல. என்னை ஏற்பது என்பது மட்டுமே மு க் கி ய ம். அதுபோதும்.ஒருவனை நான் ஆட்கொள்ள..”
என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்.

முக்கிய விரதங்கள் கடைபிடிக்கும் முறை :

அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை.விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல.
உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன. எல்லாவிரதங்களிலுமே பொதுவான பல விஷயங்கள்தான் தொடக்கம் முதல் முடிக்கும் வரை கடைப்பிடிக்கப்படுகின்றன. அந்தப் பொதுவான விதிகளோடு எந்தக் கடவுளுக்கான விரதமோ அந்த தெய்வத்திற்கான வழிமுறையும் துதிகளும் சேர்த்துக் கொள்ளப்படும்.
விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து எண்ணற்ற நற்பலன்களைப் பெறுங்கள். எந்த ஒரு விரதமானாலும், முதல் நாளே வீட்டைக் கழுவி தூய்மைப்படுத்துங்கள். பூஜைகளின்போது கோலம் இரு இழைகளால் அமையவேண்டும் என்பது பொதுவான விதி!
விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள். வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள்.
(சில தெய்வங்களை குறிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன்தரும். உதாரணமாக, துர்க்கைக்கு செவ்வரளிப்பூ). அனைத்து பூஜைகளுக்குமே தூய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும்.
மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும். விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலேயே சரியான இடத்தில் வைத்துவிடவேண்டும். ஒருமுறை வைத்துவிட்டால், விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம்.
அதற்கு முன் நகர்த்தக் கூடாது. ஆணோ பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும், குடும்பத்துப் பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கைத் துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால் விரதகாலத்தில் பிறரால், எதிர்பாராத மனவருத்தங்கள் வராமல் இருக்கும்.
விரதகாலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அதேசமயம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். எனவே உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற விரதத்தினை அனுசரிப்பதே நல்லது.
விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். விரதம் இருக்கும் தினங்களில் முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரதகாலத்தில் எவர்மீதும் கோபப்படுவதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பூஜைக்கு உரிய தெய்வத்தின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்வது நல்லது.
தெரியாதவர்கள் அந்தக் கடவுளின் பெயரையே திரும்பத்திரும்ப சொன்னாலும் போதும். விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்குச் செய்யுங்கள்.

வாய்ப் பேச்சில் ஜாலம் செய்து மக்களை முட்டாள் ஆக்க நினைக்கும் ஒரே கட்சி இந்தியாவிலே திமுகதான் !

ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக எம்எல்ஏக்களின் ஊதியம் ₹55,000/- திலிருந்து, ₹1,05,000/- ஆக உயர்த்தப் பட்டது. எதையுமே அரசியலாக்கத் துடித்த திமுக "போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை தீரும்வரை" நாங்கள் பழைய ஊதியத்தை மட்டுமே பெறுவோம் என்று ஸ்டண்ட் அடித்தது.
இன்று ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் திமுக பொருளாளராகவும் பதவியேற்றதும், துரைமுருகன் சட்டமன்றச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து, இனி திமுக உறுப்பினர்களும் புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, திமுக உறுப்பினர்களின் ஊதிய நிலுவைத் தொகையைக் கோரி, பெற்றனர்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த கருணாநிதியின் ஊதிய நிலுவைத் தொகையும் பெறப்பட்டது.
அப்படியானால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை அரசால் தீர்த்துவைக்கப் பட்டுவிட்டதா....???
அல்லது, இவர்கள் செய்தது அரசியல் ஸ்டண்ட் வேலையா....???

ஒரு கதை கேள்விப்பட்டிருப்பீங்க...!

ஊரில் யாரும் ஜெயிக்க முடியாத மிகப் பெரிய பயில்வான் இருந்தானாம். அவனை ஜெயித்தால் தன் பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதாக மன்னர் அறிக்கை விட்டிருக்கிறார். அந்தப் பொண்ணுக்கு பயந்தோ, இல்லை பயில்வானுக்கு பயந்தோ யாரும் போட்டியை ஏற்றுக் கொள்ளவில்லை. பெரிதாக சண்டைப் பயிற்சி இல்லாத சுமாரான உடல்வாகுள்ள ஒருத்தன் போட்டிக்கு நான் தயார். ஆனால், எனக்கு ஒரு மாதம் அவகாசம் வேண்டும். ஒரு மாதம் கழித்த பின் நான் சண்டைக்குக் கூப்பிடும் போது ஏதேனும் காரணம் சொல்லி போட்டியை விட்டு பயில்வான் விலகக் கூடாது என்று நிபந்தனை போட்டானாம். பயில்வானும் மன்னனும் ஒப்புக்கொண்டனர்.
நண்பர்களெல்லாம் துக்கம் விசாரிச்சிருக்காங்க... உனக்கு அறிவிருக்கா? அவனிடம் மோதி உயிரோட எப்படி வருவெ?
நான் ஜெயிப்பது உறுதி. நான் சொல்வது போல் நீங்கள் எனக்கு உதவி செய்தால் என்றானாம் இளைஞன். நண்பர்கள் ஒப்புக் கொண்டனர்.
முதல் வாரம் :
சில நண்பர்களை விட்டு வேறு வேறு சூழ்நிலையில், பயில்வானைத் தற்செயலாகப் பார்க்கச் செய்து என்ன பயில்வான்... கண்ணு ஏதோ மஞ்சளா இருக்கே உடம்புக்கு முடியலையா? என்று கேட்கச் செய்தான். பயில்வான் அடிக்கடி கண்ணாடியைப் பார்க்க ஆரம்பித்தான். லேசாக வருத்தமும் பட்டான்.
இரண்டாம் வாரம்:
என்ன பயில்வான் உங்க உடம்பு பழைய மாதிரி இல்லையே? உடம்புக்கு முடியலையா? தளர்ச்சியா இருக்கீங்களேனு சிலரை விட்டு கேட்கச் செய்தான்.
மூன்றாவது வாரம்:
பயில்வானுக்கு மஞ்சள் காமாலை. உடல்நலம் இன்றி மெலிந்து விட்டார். பழங்களைத் தவிர வேறேதும் சாப்பிடக் கூடாதுனு மருத்துவர் சொல்லி விட்டார் என்று ஊர் முழுவதும் பரப்பி விட்டான்.
நான்காவது வாரம் :
மஞ்சள்காமாலை மிகவும் முற்றி விட்டது. இனி பயில்வான் பிழைப்பதே கடினம் என்று பயில்வான் உட்பட எல்லோருக்கும் செய்தியை நம்பும்படி செய்தான்.
விளைவு....? பயில்வான் நிஜமாகவே அதை நம்பி மிகவும் தளர்ந்து போட்டிக்கு வராமலேயே தோற்று விட்டார்.
ம்ம்ம்... அப்புறம் முக்கியமான ஒரு விஷயம்... இதையும் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் யாரும் கற்பனை செய்து ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்...

#பயன்உள்ளதகவல் #

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்எனக்கு மிகவும் பிடித்தது நிதான்
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்
19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

மக்கள்திலகத்தின் பெருந்தன்மைக்கு இன்னுமொரு சான்று... இதோ...

"அன்பே வா"விற்காக சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தார்.

அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார்.

அந்த வீரர், தான் இங்கே 'மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும்' என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர் அவர்களிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

பின் அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

'நாமாக இருந்தால் ஆகட்டும்' என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை.

சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் அந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார்.

அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்த்ததில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி. ஆனால், அதே சாவிதான் பின்னாளில் தீயச‌க்தியுட‌ன் சேர்ந்துகொண்டு எம்ஜிஆரை கண்ட‌ப‌டி வ‌சை பாடினார். அப்ப‌டியும் மக்கள் திலகம் இவ‌ரை வெறுத்தோ, க‌டுஞ்சொல் கூறவோ செய்ததில்லை. மாறாக, ஒரு முக்கிய பிர‌ச்ச‌னையில் சாவி த‌வித்த போது எம்ஜிஆர்தான் அவ‌ருக்கு உத‌வினார். 

கணையம் என்றால் என்ன?

பலருக்கும் கணையம் என்றால் என்ன? அதன் பணி என்னவென்று தெரியாது. ஆனால் உடலிலேயே மிகப்பெரிய சுரப்பி தான் கணையம். அதேப்போன்று இதன் பணியும் மிகப்பெரியது. அது என்னவெனில், கணையம் தான் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரக்கிறது. மேலும் இது தான் உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்புவதும் கூட.
அதுமட்டுமின்றி, கணையம் தான் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. இவ்வளவு வேலையை செய்யும் கணையத்தில் நச்சுக்கள் சேராமலா இருக்கும். எனவே கணையத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவும், கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருசில உணவுப் பொருளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
இல்லாவிட்டால், கணைய அழற்சி, வலி மற்றும் வீக்கம் கொண்ட கணையம், கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரி, இப்போது கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்த்து, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வோமா!
ப்ராக்கோலி ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேல் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது கணையத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் கணைய புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
பூண்டு பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பயோஆக்டிவ் பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும், காயங்களும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பு தரும். எனவே முடிந்த வரையில் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.
சிவப்பு திராட்சை சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரோட்ரோல் என்னும் பொருள், ப்ரீ ராடிக்கல்களால் கணைய செல்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும். ஒருவேளை உங்களுக்கு சிவப்பு திராட்சை சாப்பிட பிடிக்காவிட்டால், ரெட் ஒயின் குடிக்கலாம். ஆனால் கணைய அழற்சி இருந்தால், ரெட் ஒயின் குடிக்கக்கூடாது.
ப்ளூபெர்ரி மற்றும் செர்ரி இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. இவை கணைய புற்றுநோய் அண்டுவதைத் தடுக்கும். ஏனெனில் அந்த அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதேப்போல் ஆப்ரிகாட், கேரட், சோளம் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளி தக்காளியில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கி, கணைய புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
பசலைக்கீரை பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற கணையத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் 2-3 முறை பசலைக்கீரையை உட்கொண்டு, கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
டோஃபு டோஃபுவில் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே டோஃபுவை பிடித்தவாறு சமைத்து உணவில் சேர்த்து வாருங்கள்.
தயிர் ஆம், தயிர் கூட கணையத்திற்கு நல்லது. தயிர் சாப்பிட்டால், கணையத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமைப் பெறும். ஆனால் தயிரை உட்கொள்ளும் போது, அவற்றில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.........கணையம் காக்க வழிமுறைகள்
இன்சுலின் போதுமான அளவில் சுரக்கவில்லை எனில், கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும். இன்சுலின் என்ற நாளமில்லா சுரப்பையும், சில என்சைம்களையும் சுரக்கும் மிக முக்கிய வேலைகளை கணையம் செய்கிறது என்பதால், நம் உடலின் மிக முக்கிய பாகம் கணையம்.உணவைச் செரிக்க, சில வகையான என்சைம்களை கணையம் சுரக்கிறது. இதை ஆல்கஹால் தடுத்துவிடுகிறது. இதனால், கணையத்தில் சுரக்கப்படும் என்சைம்கள் கணையத்திலேயே தங்கி, அதன் செல்களைப் பாதிக்கிறது. மது அருந்துவதால் அதிக அளவில் கணைய அழற்சி ஏற்படும். ஆல்கஹால் கணையத்துக்கு அரக்கன் என்பதை உணர வேண்டும்.சிகரெட் புகைப்பதால் நுரையீரல் மட்டுமல்ல, கணையமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. கணையத்தில் உற்பத்தியாகும் என்சைம் சிறுகுடலுக்குச் சென்றபிறகுதான், செயல்திறன் பெறும். ஆனால், புகைப் பழக்கமானது கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி, என்சைம்களை கணையத்தில் இருக்கும்போதே செயல்படத் தூண்டி, பாதிப்பை ஏற்படுத்தும். புகை கணையத்துக்குப் பகை.அதிக உடல் எடை, உடல் பருமன் கணைய பாதிப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருப்பதன் மூலம் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யும்போது, உடல் உறுப்பு, செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் நுண்ஊட்டச்சத்துக்கள் சென்று சேருவது எளிதாகும். இதனால், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாகச் செயல்படும்.ரத்தத்தில் டிரைகிளசரைட் அளவு அதிகரிப்பதால், கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, கொழுப்பு குறைந்த உணவுகள், கொழுப்பு இல்லாத கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை எண்ணெய் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடலாம். ரெட் மீட் எனப்படும் ஆடு, மாடு போன்ற இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட, மைதா, சர்க்கரை போன்ற அதிகம் சுத்தகரிக்கப்பட்ட, நிறம் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இந்தச் செயல்பாடு காரணமாக, கணையம் பாதிக்கப்படலாம். கிளைசமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன்) குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.கார்போஹைட்ரேட் போலவே, புரதச்சத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஒருநாளைக்குத் தேவையான அளவு மட்டுமே புரதச்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகப் புரதத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதைச் செரிப்பதற்கு, கணையம் அதிகப்படியாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது.பித்தப்பை கல்கூட கணையத்தைப் பாதிக்கலாம். பித்தப்பை கல் காரணமாக, கணையத்தில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கணைய நீரானது மீண்டும் கணையத்துக்கே செல்லத் தூண்டப்படும். இதனால், கணைய செல்கள் பாதிக்கப்பட்டு, கணைய அழற்சி ஏற்படலாம். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் பிரச்னையை முன்கூட்டியே கண்டறிந்து, பாதிப்பைத் தவிர்க்க முடியும்.விலங்குக் கொழுப்பு, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்த காய்கறி, முழுதானியம், தேன் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மாட்டுப் பாலுக்குப் பதிலாக, தாவரங்களிலிருந்து பெறப்படும் பாலை பயன்படுத்தலாம்......... வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ..... ஓம் நமசிவாய ..... 

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்.

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்

இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்தாலே போதும்
எந்த பிணியும் நம்மை அண்டாமல் இருக்க‍வும் நீண்ட நாட்கள் இளமையுடன்
இருக்க‍வும், இந்த ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால் போதும். பழங்களில் நமது சீரண சக்திக்கு சிறந்த பழம் என்றால் அது பப்பாளி பழம்தான்.
இந்த பப்பாளி பழத்தை உங் கள் தினசரி உணவில் சேர்த்து வரும்போது நமது சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். இந்த ஏழு காரணத்து க்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…
பயன்கள்
பப்பாளி சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும்கூட. உங்க ள் அழகையும் சேர்த்து மெருகேற்றுகிறது. உங்கள் சருமத்தின் நிறத்தி ற்கு மற்றும் வடிவத்திற்கு உதவுகிறது. முடி வளர்ச்சிக்கும் பயன்படுகி றது.
ஊட்டச்சத்துகள் ( Nutrients )
பப்பாளி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ( #AntiOxidants ), விட்டமின்கள் ( vitamins) மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வை க்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள் ( #Enzymes ), காரோட்டீனாய்டு ( #carotenoids ), ப்ளோனாய்டுகள் ( #flavonoid ), விட்டமின் சி ( #Vitamin C ), விட்டமின் பி Vitamin B ), விட்டமின் ஏ (Vitamin A), மக்னீசியம் ( #Magnesium ), பொட்டாசியம் ( #Potassium ), கால்சியம் ( #Calcium ), கார்போ ஹைட்ரேட் ( #Carbohydrates ), புரோட்டீன் ( #Protein ), நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
உடல் எடை குறைதல்
பப்பாளி ( Papaya ) பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக் காமல் இருக்க உதவுகிறது. எனவே இதனால் நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களு க்கு இது ஒரு நல்ல உணவாகும்.
நோயெதிர்ப்பு சக்தி
பப்பாளி பழத்தில் கரோட்டீனாய்டுகள், ப்ளோனாய்டுகள், விட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். இதனால் எந்த நோயும் நம்மை அணுகாது.
கண்கள் ஆரோக்கியம்
பப்பாளிபழத்தில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஏ உள்ளது. இது மக்குலார் டிஜெனரேஷன் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
எலும்பு வலுமைக்கு
பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவு ம் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை போக்க வல்லது. இதிலுள்ள விட்ட மின் சி ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
சீரண சக்தி
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்ற என்சைம் சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள நார்ச்சத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. எனவே இந்த ஒரு பழத்தை உங்கள் தினசரி டயட்டில் சேர்த் தாலே போதும் ஏராளமான நன்மைகளைப் பெற முடியும்.
#பப்பாளி, #பப்பாயா, #பழம், #Papaya #ஆன்டிஆக்ஸிடன்ட்கள், #AntiOxidants, #விட்டமின், #vitamins) #தாதுக்கள், #ஊட்டச்சத்து, #என்சைம்கள்,  #Enzymes, #காரோட்டீனாய்டு, #carotenoids ), ப்ளோனாய்டுகள், #flavonoid , விட்டமின் சி, #Vitamin, #மக்னீசியம், #Magnesium, #பொட்டாசியம், #Potassium, #கால்சியம், #Calcium, #கார்போஹைட்ரேட், #Carbohydrates ), #புரோட்டீன், #Protein, #நார்ச்சத்து, #லைக்கோபீன், #Fruit

Monday, August 27, 2018

நாமஏமாறும்போதுதான்அந்தவலியும்வேதனையும்புரியும்.....

3மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர்.
படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர்.
அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்...
வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்...
எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார் என்றனர்.
ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார்.மூண்று நாள் கழிச்சு மூண்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க.
மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்.
கேள்வி தாள்ல நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு.
1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்)
2.கல்யாணம் எங்க நடந்துச்சு?(25 மார்க்)
3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்)
4.எந்த பைக்ல போனீங்க?(25 மார்க்)
கண்டிசன்: பதில்லெல்லாம் ஓரே மாதிரி இருக்கனும்..........

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? – எச்சரிக்கும் நிபுணர்கள்,

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? – எச்சரிக்கும் நிபுணர்கள்

இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? – எச்சரிக்கும் நிபுணர்கள்
கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டுக் கடன், வாகனக் கடன் என எந்தக் கடனை
வாங்கவேண்டும் என்றாலும், வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர்தான் முதல் தகுதியாகப் பார்க்கப்படுகிறது. கிரெடிட் ரிப்போர்ட்டில் கடன் கேட்டு வருபவரின் ஸ்கோர் எவ்வளவு என்பதைப் பார்த்தே அவருக்குக் கடன் தரலாமா, எவ்வளவு கடன் தரலாம், வட்டி விகிதம் என்ன என்கிற விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
இலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்! ( Free Credit Score Report ) 
சமீபகாலமாக ‘உங்களது கிரெடிட் ஸ்கோரைத் தெரிந்துகொள்ளுங்கள்’ அல்லது ‘உங்களது கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் உங்களது கடன் தகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என SMS மூலமாகவும், இமெயில் மூலமாகவும் பல்வேறு தனியார் கிரெடிட் ஏஜென்சிகள் தகவல் அனுப்பிவருகின்றன. ‘இலவசமாக கிரெடிட் ஸ்கோரா? வாங்கித்தான் பார்ப்போமே!’ என்று இந்த நிறுவனங்கள் அனுப்பும் லிங்கை (Link) நாம் க்ளிக் செய்தால், பல பிரச்னைகளை மாட்டிக்கொள்ள வேண்டி யிருக்கும் என்பது பலருக்கும் தெரிவதேயில்லை.
இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்கள் அளிக்கும் லிங்கைச் சொடுக்கி னால், முதலில் நம் பான் நம்பர் கேட்கும். இங்கேதான் நாம் உஷாராக வேண்டும். இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுக்காக மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் (Third Party) நமது முக்கிய விவரங்களைத் தெரிவிக்கும்போது அந்த நிறுவனங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெ ரிந்து கொள்ள வேண்டிய அவசியமோ அல்லது விருப்பமோ உங்களுக்கு இருந்தா ல், அவசரப்பட்டு இதுபோன்ற மூன்றாம் தரப்பிடம் நம்மைப் பற்றிய விவரங்களை அளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, கடன் தகவல் நிறுவனங்களிடமிருந்து (Credit Information Companies – CIC) அதனை நீங்கள் நேரடியாகவே பெறலாம். டிரான்ஸ்யூனி யன் சிபில் (Trans Union CIBIL), ஈக்­யூஃபேக்ஸ் கிரெடிட் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் (Equifax), எக்ஸ்­பீ­ரியன் (Experien) மற்றும் ஹை மார்க் (High Mark) ஆகிய கிரெடிட் ஏஜென்ஸி நிறுவனங்கள்மூலம் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகவே நீங்கள் கடன் ஸ்கோரைப் பெறலாம்.
ஏற்கெனவே கிரெடிட் கார்டுமூலம் கடன் வாங்கியவர்கள், இதர தனிநபர் கடன், கார் கடன், வீட்டுக் கடன் ( Home Loan )  வாங்கித் திரும்பச் செலுத்தியவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் கிரெடிட் ஸ்கோர் ( Credit Score ) என்ன என்கிற அறிக்கையை கிரெடிட் ஏஜென்ஸி ( Credit Agency ) நிறுவனங்கள் மூலம் இலவசமாகப் பெறுவதற் கான உத்தரவை ரிசர்வ் வங்கி ( Reserve Bank ) கடந்த 2017 ஜனவரியில் நடை முறைப்படுத்தியது.
இந்தியாவில் இயங்கும் ஒவ்வொரு கிரெடிட் ஏஜென்சி நிறுவனமும் தனித்தனியே ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக கிரெடிட் ரிப்போர்ட் தரவேண்டும் என்பதால், ஒருவர் ஓராண்டில் மொத்தம் நான்கு ரிப்போர்ட்டுகளை இலவசமாக பெற முடியும்.
அதேசமயம், சில மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு க்கு ஒருமுறைக்குமேல் இலவச கிரெடிட் ரிப்போர்ட்டுடன், மேலும் சில சேவைக ளையும் சேர்த்து வழங்குகின்றன. “வாடிக்கையாளர்கள் அவர்களது கிரெடிட் நிலை மையைப் புரிந்துகொள்ளும் விதத்திலும், அவர்களது கிரெடிட் ஸ்கோரை உயர்த்து வதற்கான வழிகாட்டுதலையும் அளிக்கின்றன. ஆனால், கடன் தகவல் நிறுவனங் கள் (CIC) இந்தச் சேவையை அளிப்பதில்லை. மேலும் தேர்டு பார்ட்டி நிறுவனங்கள், நீங்கள் உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டைத் தெரிந்துகொள்ள எத்தனை முறை வேண் டுமானாலும் அவர்களது தளங்களுக்குச் செல்ல அனுமதிக்கின்றன. இதற்குக் கட்டு ப்பாடு எதுவும் விதிப்பதில்லை.
எச்சரிக்கையான அணுகுமுறை அவசியம்
இத்தகைய வசதிகள் ஒருபக்கமிருந்தாலும், மூன்றாம் தரப்பு நிறுவனங்கள், வாடிக் கையாளர்கள் கேட்கும் கிரெடிட் ஸ்கோரை தெரிவிப்பதற்காகக் கேட்டு பெறும் அவ ர்களது பான் எண், அடையாள சான்று, முகவரி, மொபைல் எண் மற்றும் இ-மெயில் விவரங்களை மற்றவர்களுக்கு ரகசியமாகத் தெரிவிப்பதாகவும், அவற்றைத் தவ றாகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இக்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. ஏனெனில், இன்றைய உலகம் டேட்டா உலகம். வாடிக்கை யாளர்களின் டேட்டாக்களைப் பெறுவதற்காக த்தான் இன்று பல பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இத்தகைய சூழலில் நமது தகவல்கள் பிற நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சம்மதம் இருந்தால்தான் அவர்களது கிரெடிட் ரிப்போர்ட்டை, தாங்கள் தொழில் தொடர்புகள் வைத்துள்ள மூன்றாம் தர ப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்வதாகக் கடன் தகவல் நிறுவனங்கள் (CIC) தெரிவிக்கின்றன. அதேசமயம், நீங்கள் ஒருமுறை அந்த சம்மதம் தெரிவித்துவிட் டால், அதன்பின்னர் உங்கள் தகவல்கள் மூன்றாம் தரப்பு நிறுவனத்தால் தவறாக பயன்படுத்தப்பட்டால், அதற்கு நீங்கள் கடன் தகவல் நிறுவனங்களைக் குறைகூற முடியாது.
இலவச கிரெடிட் ஸ்கோர் அளிக்கும் நிறுவனங்களிடம் நமது முக்கிய விவரங்க ளை அளித்தால், நமக்குத் தேவையற்ற இ-மெயில்கள், எஸ்.எம்.எஸ்-கள், போன் கள் வரவாய்ப்புள்ளன. எனவே, இத்தகைய நிறுவனங்களின் சேவையைப் பெறும் முன் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை களை நன்கு படித்துத் தெரிந்து கொ ண்டு, அதன்பின்னரே அந்த நிறுவனங்களின் தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.
உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்முன், அந்த மூன்றாம் தரப்பு நிறுவனம் ஏதாவது கடன் தகவல் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதா என்ப தை உறுதி செய்துகொள்ள வேண்டும். எந்தக் கடன் தகவல் நிறுவனத்துடன் அது தொடர்பு வைத்துள்ளது, வாடிக்கையாளர்கள் விரும்பா விட்டால், எந்த நேரத்திலும் அதன் சந்தா பதிவை ரத்து செய்துவிட்டு விலகவோ அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களை அந்தத் தளத்திலிருந்து நீக்கவோ செய்வதற்கான வாய்ப்புள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆக, சிபில் தவிர எந்த நிறுவனமாக இருந்தாலும், அந்த நிறுவனம் அளிக்கும் இலவச கிரெடிட் ஸ்கோரைப் பெற நாம் முயற்சி எதுவும் செய்ய வேண்டியதில்லை. அப்படி வாங்கப் போய், சிக்கலிலும் மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை!
#FreeCreditScoreReport

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...