Thursday, March 31, 2022

வாழ்வில் எதையும் சாதிக்க நினைப்பவர்கள்..

 நாம் உதவியவர் நமக்கு நிச்சயம் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு இல்லாதவரை...

வாழ்க்கையில் நமக்கு எப்போதும் மன அமைதி உண்டு, ஏனெனில்...எதிர்பார்ப்புகளே இங்கு பெரிய ஏமாற்றங்களுக்கு முக்கிய காரணம்..
எளிதில் யாரையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள்...
ஒரு வேளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களுக்கும் கிடைத்து இருந்தால்...
உங்களை விட திறமைசாலியாக இருந்திருப்பார்கள்...
எனவே வாழ்வில் எதையும் சாதிக்க நினைப்பவர்கள்..முதலில் தங்களுடைய Comfort zone எனப்படும் வசதி வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும்..
அதற்குள்ளேயே அவர்கள் இருக்கும் வரை எதையும் அவர்களால் உருப்படியாக சாதிக்க முடியாது...

மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவர் ஒரே நாளில் மாறிய கதை..!

 கணவன் மனைவிக்கு இடையில் சிறு சிறு முரண்பாடுகள் வருவது சாதாரணமானது என்று சொல்லப்படுகின்றது. ஆனால், பெண்களை தொடர்ந்து இழிவு படுத்திக் கொண்டே இருந்தால், அவர்கள் கோபம் கொண்டு புதிய அவதாரம் எடுப்பார்கள்.

இது குடும்பத்திற்கு மட்டும் அல்ல..
சமூக கொடுமைகளுக்கும் பொருந்தி நிற்பதை அவ்வப்போது பார்த்திருப்போம்.!
அதற்கு சிறந்த உதாரணமே இந்தக் கதை..!
ஒரு கிராமத்தில் கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தனர்.
கணவன் மனைவியை அவ்வப்போது, கடுஞ்சொல்லால் திட்டித் தீர்த்துவிடுவார்.
சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிய சண்டையாக மாற்றிவிடுவார்.
பொது இடம் என்றெல்லாம் பார்க்காமல் பிறர் முன்னிலையில், தன் மனைவியை திட்டித் தீர்ப்பார். சில நேரம் அடிக்கவும் செய்வார்.
இப்படியே போய்க் கொண்டு இருந்தது வாழ்க்கை. இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தாள் மனைவி...!
ஒரு நாள் தன் கணவரிடம், “நீங்க எப்போது பார்த்தாலும் என்னைத் திட்டுவதும், அடிப்பதுமா இருக்கீங்க, அதனால் எனக்கு வாழ்க்கையில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ இல்லாமல் ஒவ்வொருநாளும் கழிகின்றது. தினமும் நரகத்தில் இருப்பதைப்போல உணருகிறேன். இந்த நிலைமை மாறவேண்டும் என்றும் நினைக்கிறேன். நீங்கள் என்னை அடிக்காமலும், திட்டாமலும் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டாள்.
“நீ என்னை அனுசரித்தும்...
புரிந்தும் நடந்து கொள்ள வேண்டும்” என்றார் கணவர்.
“நான் தவறு செய்வதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு என் மீது கோபம் கொள்வதாக தோன்றுகிறது. நீங்களும்தான் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றாள் மனைவி.
"இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். அதற்கு நீங்களே ஒரு வழியைச் சொல்லுங்கள்” என்று கூறினாள் மனைவி.
சிறிது நேரம் ஆலோசித்த கணவன், “சரி எனக்கு இணையாக நீ, வேலை செய்ய வேண்டும் அப்படி நீ செய்தால் உன்னை திட்டுவதையோ, அடிப்பதையோ நான் நிறுத்திக் கொள்கிறேன்“ என்றான்.
“சரி, அப்படியே செய்கிறேன். அதேபோல நீங்களும் எனக்கு இணையாக வேலை செய்ய வேண்டும். உங்களை விட குறைவான வேலையை நான் செய்வதாகத் தெரியவில்லை.” என்றாள் மனைவி.
'என்ன செய்யலாம் ' என இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதாவது,
ஒருநாள் கணவன் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் மனைவி செய்வது என்றும்,
மனைவி செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் கணவன் செய்வது என்றும் முடிவெடுத்தனர்.
பின்னர், என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்றும் பேசி முடிவெடுத்தனர்.
அப்போது மனைவி, உங்கள் பேச்சை நம்ப முடியாது. இதை ஒரு பொது ஆளிடம் கூறி அவர் மேற்பார்வையில் செய்யலாம் என்று கூறினாள். கணவரும் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, அந்த ஊரில் நேர்மையானவர் என பெயர் எடுத்த ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் இந்த பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த சுவாரசியமான போட்டியைக் கேட்டதுமே அவர் ஒப்புக்கொண்டுவிட்டார். பின்னர் அந்த நடுவர், இருவரிடமும் நியாயமாகப் பேசி என்னென்ன வேலைகள் இருக்கின்றன என கேட்டறிந்தார். அத்துடன், வழக்கமாக இருவரும் செய்யும் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், போட்டி என்பதால் கூடுதல் வேலைகளை சுமத்தக் கூடாது என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, அதிகாலை 5 மணிக்கு கணவர் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதில் இருந்து வேலைகள், இல்லை... இல்லை... போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
போட்டிக்கான நாளில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக, வீட்டில் என்னென்ன பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என்ற விவரத்தை மனைவி, கணவனிடம் நினைவுக்கு வந்தவரையில் அடையாளம் காட்டினாள்.
கோலப்பொடி இருக்கும் இடம் முதல், காஃபி தூள், துடைப்பம் இருக்கும் இடம் வரையில் அனைத்தையும் மனைவி அடையாளம் காட்டினாள். இப்போது கணவரின் உள்ளத்தில் லேசான பயம் ஏற்பட்டது. “நிறைய வேலைகள் இருக்கும் போல” என எண்ணினார்.
போட்டிக்கான நாள் வந்தது. கணவன் காலையில் எழுந்து கோலம் போட்டார். மனைவிக்கு காஃபி போட்டுக் கொடுத்தார். சமையல் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
மனைவியோ, 6 மணிக்குமேல் பொறுமையாக எழுந்து, பல்துலக்கி, குளித்துவிட்டு காலை உணவை எடுத்து வைக்கும்படி கூறினாள்.
பின்னர் மனைவி தோட்டத்திற்குச் சென்று வேலைகளைக் கவனித்தாள்.
அன்று, அவர்கள் தோட்டத்தில் இருந்த 7 தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க வேண்டி இருந்தது.
வீட்டிற்கு வந்து தனது கணவரின் உடையை அணிந்து கொண்டுச் சென்று மரம் ஏறினாள் மனைவி. சிரமமாக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லவா..., கடுமையான முயற்சிக்குப் பின்னர் மரத்தில் ஏறினாள். மரம் அதிக உயரம் இல்லை என்பதால், அதிக சிரமம் இன்றி தேங்காய் பறித்தாள். பின்னர், தோட்ட வேலைகளைக் கவனித்தாள்.
மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தாள். கணவர் சாப்பாடு பரிமாறினார். அதில் உப்பில்லை. காரம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த மனைவி, “நான் இப்படி சமைத்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீங்க” என்றாள்.
கணவனிடம் இருந்து பதில் இல்லை.
இப்படியாக நேரம் போய்க்கொண்டே இருந்தது.
கணவனால் சிறிதும் ஓய்வு எடுக்க முடியவில்லை.
வேலைகளை செய்து முடிக்க முடியவில்லை.
அப்போதுதான், அவருக்குத் தெரிந்தது. தன் மனைவி, ஒவ்வொரு நாளும் தன்னைவிட அதிகப்படியான வேலைகளைச் செய்கிறாள்.
ஆனால், இதைச் சொல்லி ஒருநாளும் வருத்தப்பட்டதோ, அலுத்துக் கொண்டதோ இல்லை என்பதை உணர்ந்தார்.!
இப்போது, அவருக்கு தன் மனைவியின் மீது அன்பு அதிகமானதை உணர்ந்தார். தன் மனைவி மீது கோபம் கொள்ளக்கூடாது என மனப்பூர்வமாக உறுதியேற்றார். வேலைகளை முழுமையாக செய்து முடிக்க முடியாமல் கணவர் சிரமப்பட்டார். மனைவியோ அனைத்து வேலைகளையும் செய்து முடித்தாள்.!
அந்த ஒருநாள் அவர்கள் இருவருக்கும் பல்வேறு புரிதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.!
நடுவரின் ஆசியுடன் அந்த நாள் நிறைவடைந்தது. இருவருக்கும் அது வெற்றியாகவே கருதப்பட்டது.!
அதன் பின்னர், இருவருக்கும் இடையிலான உறவு மேம்பாடு அடையத் தொடங்கியது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.
கணவன் தன் கோபத்தை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள பயிற்சி எடுத்தார். கோபம் வரும்போதெல்லாம், அதனை வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே புதைத்து, அன்பான வார்த்தைகளை பேசப் பழகினார்.
மனைவியின் சிரமங்கள் புரிந்ததால், அவ்வப்போது உதவி புரிந்து வேலைகளை எளிமையாக்கினார்.
இப்படியாக அவர்களுக்குள் அன்பு ஊற்றெடுக்கத் தொடங்கி ஆறாகப் பெருகியது.
ஆக..., மனைவியை மதிக்கப் பழகினால் வாழ்க்கை தினந்தோறும் சுவாரஸ்யம்தான்.
புரிந்து வாழும் வாழ்க்கைக்கு 'தாம்பத்தியம்' என்ற
பெயர் உண்டு...!
No photo description available.

நான் யார் தெரியுமா ❓❓❓

 

💁ஆடு மாடு🐮 கோழி🐔 மீன்🐟🐬 லாம் செத்தா அதோட பிணத்தை எவ்வளவு காசு கொடுத்தும் வாங்க ஆட்கள் இருக்கு
ஆனால்
நீ செத்தா சும்மா கொடுத்தாக் கூட எவனும் உன் பிணத்தை வாங்கமாட்டான்🙅
😭நீ ஆசையா கட்டிய சொந்த வீட்டிலேயே அதிகபட்சம் 24 மணிநேரம் தான் உன்னோட பிணம் கிடக்கும்
😢நீ வாங்கிய Bathroom cleaner கூட வீட்டுக்குள்ள இருக்கும் ஆனா உன்னோட பிணம் வெளிய கிடக்கும்
💏நீ தொட்டு தாளிகட்டிய மனைவியும் உன் பிணத்தை தொட சங்கடபடுவா
🙏விதிவிலக்கு தாய்🙏
இப்படி யாருமே விரும்பாத உடலை வெச்சிக்கிட்டு என்னவெல்லாம் ஆட்டம் போடுகிறோம்
😏நான் யார் தெரியுமா ❓❓❓
நான் அப்படி நான் இப்படி என்று சுயதம்பட்டம் அளப்பரைகள்
👉விதவிதமான ஆடைகள்
1000, 2000, 25000த்தில் 1,00,000த்தில் 10 லட்சம் மதிபுள்ள ஆடைபோட்ட உடல் என்பதர்க்காக புதைக்காமலோ எரிக்காமலோ விட்டுவிடுவார்களா ❓
👉விதவிதமான உணவுகள்
3 Star 5 Star 7 Star Hotel ல் சாப்பிட்டு வளர்ந்த உடலடா என்றால் மட்டும் வீட்டில் வைத்து பூட்டிக்கொள்வார்களா
💃உலக அழகியே ஆனாலும் அந்த உடலைவிட்டு உயிர் போய்விட்டால் அது பிணமென்று தான் கூறுவார்கள் அதிபட்சம் 24 மணிநேரத்தில் சொந்தவீட்டிலிருந்து வெளியே கிடத்திவிடுவார்கள்😠
💁பெரிய பெரிய பிரபலங்கள் பயன் படுத்திய ஆடை உபகரணங்களை போட்டி போட்டு வாங்க ஆட்கள் உண்டு
ஆனால்
அந்த பிரபலங்களின் பிணத்தை வாங்க யவர் உண்டு🙅
இதைத்தான் பாம்பாட்டிச் சித்தர் இவ்வுடலானது அரைக்காசுக்கு ஆகாதென்று ஆடு பாம்பே என்று பாடுகிறார் 😭❣️❣️❣️
May be an illustration

மகா பெரியவாளும் யோகியாரும்...

 ராம நாம மகிமை.........

அது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில் இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரை அழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்த உதவியாளர். மகானின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் தெரியுமோ உனக்கு ?”
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும் பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காக திருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவை அவரை நான் சேவிச்சிருக்கேன்.”
“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப் போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி, உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.
“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டு அந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினார.
திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்று அவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்த உதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும் பயணமானார்கள்.
அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹா பெரியவாளின் முன்னே இருந்தார் யோகி ராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழே தரையில் அமர்ந்தார்.
யோகியும் சுவாமிகளுக்கு முன்னால் அதாவது அவரை நேர் பார்வை பார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடைய அதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்து விழவில்லை.
யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த உதவியாளருக்கு வியப்பு. ‘
ஏதோ பெரிய விஷயம் பேசப் போகிறார்கள்’ என்று ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக் காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டே இருக்கிறார்களே என்று குழம்பினார்.
சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப் புன்னகைத்தார் பெரியவா.
‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப் போகிறார்கள் போலிருக்கிறது’ என்று தீர்மானித்தார் உதவியாளர்
அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார் பெரியவா.
உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாக நின்றார்.
“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா” என்றார்.
உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவே இல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்து விட்டது என்கிறாரே ?’ என்று குழம்பி நின்ற போது, யோகி எழுந்து விட்டார்.
இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.
பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?
விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?
மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர் தவித்துப் போனார்.
‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகி ராம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்தி இருப்பார்கள்.
இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது.
அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வா என்கிறாரே மஹா பெரியவா ?’
உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள் இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார் யோகி. “என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம் என்று யோசிக்கிறாயா ?” என்று மெள்ளக் கேட்டார்.
“ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே?” என்றார் படபடப்பாக உதவியாளர்.
“ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகி சொல்ல…. உதவியாளர் விழித்தார்.
பிறகு, யோகியே ஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில் கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்து வந்தார்.”
யோகி: “ஆம்….”
பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும் பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்கு அடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு, கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின் மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாம ஜபம் உச்சரிக்கச் செய்தார்.
“யோகி: “ராம்…. ராம்…
“பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல் பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாம ஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறதுஎன்று பிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”
பெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிற இடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்து கொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடி கொண்டிருக்கிற இடமே — கோவிந்தபுரமே ராம நாம பூமியாக இருக்கிறது.”
யோகி: “ராம்…. ராம்… “
பெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராம நாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாக இருந்து விடேன்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத் திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயே தங்கி விடுகிறேன்.”
பெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.”
யோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.
பெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச் சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பிய வேலை பூர்த்தி ஆகி விட்டது.
நீ புறப்படு.”
இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம் சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய் மூடவில்லை.
மௌனத்தின் மூலமே மிகப் பெரிய சம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பது உதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..
May be an image of 2 people and people sitting

காகம் சுயநலம் சிறிதும் இல்லாத பறவை 🙏

 காகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத்திய குணங்கள் பல தெய்வ ரகசியங்கள் அதற்கு உண்டு என்றும், மனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் பறவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பல பிரபஞ்ச ரகசியங்களை அறிய, இயற்கையின் பூரண அறிவை பெற இன்று காகங்களை பற்றி பல அபூர்வ சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.
காகம் ஒரு உயர்ந்த ஒழுக்க நெறி கொண்ட பறவை. கற்புக்கு உதாரணமாக காகத்தை சொல்லலாம். தனது ஜோடியுடன் மட்டுமே இனை சேறும்.
கூச்ச சுபாவம் கொண்டது காகம். மனிதன் கூட விலங்குகள் போல பொது இடத்தில் காதல் என்கின்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வான். அந்தரங்கத்தை படம் பிடித்து வியாபாரம் செய்வான்.
பெரும்பாலும் மாலையில் நீர் நிலைகளில் குளித்துவிட்டு தான் தன் கூட்டுக்கு செல்லும் வழக்கம் உடையது காகம்.
உணவை ஒருபோதும் தனியாக சாப்பிடவேண்டும் என்கிற சுயநலம் சிறிதும் இல்லாத பறவை. உணவு கிடைத்தால் கரைந்து தன் சகாக்களையும் அழைத்து பகிர்ந்து சாப்பிடும் சிறந்த குணம் காக்கைக்கு உண்டு.
சிறந்த தாய் காக்கைக்கு இது தன் முட்டை இல்லை என்று தெரியும். தெரிந்தும் குயிலின் முட்டையை அடை காக்கும். குயில் குஞ்சுக்கும் தன் குஞ்சு போலவே பறக்கும் வரை உணவளித்து பராமரிக்கும். "உலகில் மிகச்சிறந்த மாற்றந்தாய் காகம் தான் என்பதை உங்கள் அனுபவத்தில் உணரலாம்.
தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.
மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள் தான், ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை.
ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது உங்கள் முன்னோர் வழிபாடு தான்.
உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற் அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி காக்கை இனம்.
குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.
திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கி கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா…கா….கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.
அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள் அன்னங்களை சுவைக்கும். அப்படி சுவைக்கும் போது அந்த காக்கைகள் கா... கா... என்ரு கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டு சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.
காக்கை சனி பகவானின் வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம் பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.
காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்த பறவைகளிடமும் காண முடியாது. எம தர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.
எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.
தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் கா கா என்று பல முறை குரல் கொடுக்கும். இந்த பழக்கம் இன்றும் உண்டு.
காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.
எனவே காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான் எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.
தமிழர்களுக்கும் காகத்துக்கும் உள்ள தொடர்பு..
ஒவ்வொரு நாளும் பழந்தமிழர் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காகம் கரைதல் வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில் இருந்தே இருப்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது.
காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் மேலே சொன்ன பாடலில் அழகாகச் சொல்லுகின்றனர்:
காலை எழுந்திரு. மாலையிலும் குளி.
கிடைக்கும் உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை).
எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).
தமிழ் வேதமாகிய திருக்குறளில்
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள” (குறள் 527)
காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும் என்கிறார் வள்ளுவர்.
காக்கையை பற்றி வேறு ஒரு இடத்தில் “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (குறள் 481)
பொருள்:-
பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், மஹாபாரதத்தில் அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு காக்கைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் குறிப்பு உள்ளது.
No photo description available.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...