Wednesday, March 31, 2021

மாவட்ட வாரியாக தமிழக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் விவரம்.

 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த பறக்கும் படையினர் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில போலீசார் உதவியுடன் அதிரடி சோதனைகள் நடத்தி, உரிய ஆவணமின்றி முறைகேடாக கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26-ந் தேதி முதல் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க நடத்தப்பட்டுவரும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட வாரியாக தமிழக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட  ரொக்கம் மற்றும் இதர பொருட்களின் விவரம் பின்வருமாறு:-




தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா.

 திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.

தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா
தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் தேர் திருவிழா


















திருச்சி தென்னூர் உக்கிர மாகாளி அம்மன் கோவில் வருடாந்திர தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு காளி வட்டம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று காலை சுத்த பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அம்பாள் தேரில் வீதி உலா வந்தார்.

தேர் தென்னூர் காவல்கார தெரு, அண்ணாநகர், லட்சுமிபுரம், ராமச்சந்திரா தெரு, மல்லிகைபுரம் உள்பட முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்போது பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.இன்று (வியாழக்கிழமை) தென்னூர் பிடாரி மந்தையில் எல்லை காவல் தெய்வமாகிய சந்தன கருப்பு சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் அதனைத்தொடர்ந்து மருளாளி அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடர்ந்து அம்பாள் தேரில் முக்கிய வீதிகளில் வலம் வருவார். நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடலும் அம்பாள் வீதி உலாவும் நடைபெறும்.நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி கோவிலுக்கு குடிபுகுதல் நிகழ்ச்சியும், 4-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெற உள்ளது.

ஒரு தலைவனுக்கு தகுதி என்ன?

 முதலமைச்சர் திரு.காமராஜ் வீட்டிற்கு, ராஜா சமூக குடும்ப நண்பர் வருகிறார். வணங்கிவிட்டு, சிறிது நேரம் ஊர் நிலவரம், தாயைப் பற்றி பேசுகிறார்கள்.

மெதுவாக வந்த விஷயத்தை கேடாகிறார், காமராஜ்.
"ஊர்ல ஒரு‌ மில்லு கட்டலாம்னு இருக்கேன். நீங்க பர்மிஷன் குடுக்கணும்".
"எங்க கட்டப் போறீங்க?"
"நம்ம நிலமே டவுனுக்கு பக்கத்துல ஒரு 80ஏக்கர் இருக்கு. ஆளுங்களும் டவுன்லேந்து வர்ரது ரொம்ப ஈ.சீ. உள்ளேயே ஒரு பள்ளிக்கூடம், குவார்ட்டர்ஸ் னு எல்லாமே சௌகரியமா இருக்குங்க"
"சரி, புராஜக்ட கொண்டு வந்துரிக்கியா?"
"ஐயா சொன்னீங்கன்னா ரெடி பண்ணிற்றேங்க."
"குடுங்க. பாத்துட்டு சொல்றேன்."
விடைபெற்று செல்கிறார்.
ஒரு வாரம் கழித்து அதே ராஜா சமூகத்திலிருந்து பெரிய தனவந்தர் வருகிறார். அவரும் ஒரு மில் கட்டப் போவதாக தெரிவிக்கிறார்.
"உங்களுக்கென்ன? நீங்க நெனைச்சா ஊருக்கு ஒரு மில்லு கட்டலாமே? எங்க கட்டப் போறீங்க?
"நமக்கு புல்லு மொளைக்காத இடம் ஒரு 38ஏக்கர் (ஊர் பெயரைச் சொல்லி) இருக்கு. அங்கதான் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்."
"அது வறப்பட்டிக்காடுல்ல? அங்கியா? டவுன்லேந்து எத்தனை மைல்? பஸ் வசதி இருக்கா?"
"இப்ப சின்னதா அரம்பிக்கிறேங்க. பின்னாடி பெரிசா பாக்கலாம்னுட்டு"
என்று இழுத்தார்.
"சரி, பர்மிஷன் குடுத்தா எப்ப மில்லு ஒடும்?"
"ஒரு ஆறு, ஏழு மாசம் அவுங்க.'
"சரி. நீ வேலைய ஆரம்பி. நான் பர்மிஷன் குடுத்தா நினைச்சுக்கோ.ஆனா ஒரு வேலை செய்யணுமே. பக்கத்துல உன் செலவுல ஒரு பள்ளிக்கூடம் கட்டித்தரணும். செய்வியா?"
"அதுக்கென்ன கட்டிட்டா போச்சி. அப்ப நா போயி வேலைய பாக்குறேன்."
மிகுந்த சந்தோஷத்துடன் புறப்பட்டார்.
இந்த இரு சம்பாஷணையின் போதும், கூட இருந்த தொழில்துறை செகரெட்டரி,
"சார், முன்னாடி வந்தவரு பெரியமில்லு கட்டினா ஒரு 50, 100 பேருக்கு வேலை கெடைக்கும். பள்ளிக்கூடமும் பெரிசா கெடைக்கும். டவுனும் விஸ்தாரமாவும்.
ரெண்டாவது புராஜக்ட் ஊருக்கு தள்ளி ரொம்ப அநதுவானமா இருக்குது. பஸ் வசதி கூட கம்மிய்யா."
"செகரெட்டிரி சார், இந்த ரெண்டாவது புராஜக்ட் வழியில எத்தனை கிராமம் இருக்கும், சுமாரா?"
"ரெண்டு பக்கமும் ஒரு 35 கிராமம் இருக்கும்யா."
"கேளுங்க. இந்த ரெண்டாவது புராஜக்ட் காரனுக்கு மில்லு ஒட்ட கரண்ட்டு அவசியம். அத அவனே இழுத்துக்குவான். அப்ப வழியெல்லாம் போஸ்ட் கம்பத்த அவனே போடணும். நமக்கு செலவு மிச்சம். அதுலேந்து இந்த 35 கிராமத்துக்கும் நம்ப கரண்ட்டு குடுக்கலாம்ல? அரசாங்கத்துக்கு பணம் மிச்சமாவுதுல்ல. அதான் ரெண்டாவது புராஜக்ட்க்கு சரின்னு சொன்னேன்."
வாயடைத்துப் போனார், செகரெட்ரி.
--------------------------------------------------------------------
இந்த உன்னத தலைவரை, தோற்க்கடித்த நாடார் குல மக்கள், இன்று மதத்தால் பிரிந்து, அவர் அழிய காரணமாயினர்.
அந்த தலைவனின் ஆன்மா உண்மையில் சாந்தி அடைய வேண்டுமென்றால், ஒன்றுபட்டு திருடர்களையும், கோள்ளைக்காரர்களையும் அரசியலிலிருந்து அகற்றுங்கள்.
பிறகு நாடாண்ட பரம்பரை என்று கூவலாம்.
வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்.

எம்.ஜி.ஆரைச் சுற்றி மக்கள் கூட்டம் தான்!

 எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த, எச்.வி.ஹண்டே, எம்.ஜி.ஆரின் நல்ல குண இயல்புகளை கூறுகிறார்: 

 எம்.ஜி.ஆரைச் சுற்றி மக்கள் கூட்டம் தான்!

அமெரிக்காவில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை எடுத்து, சென்னை திரும்பி, மூன்றாவது முறையாக முதல்வர் ஆனதில் இருந்து, அவரின் உடல்நலப் பொறுப்பு, அவரின் குடும்ப மருத்துவரான, டாக்டர் பி.ஆர்.சுப்ரமணியம் வசம் விடப்பட்டது. ஒரு முறை, அமெரிக்க டாக்டர் பிரட்மன், எம்.ஜி.ஆரை பரிசோதனை செய்ய சென்னை வந்திருந்தார். அவரை வழியனுப்பி வைக்க, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு, அவருடன் என்னை, எம்.ஜி.ஆர்., அனுப்பியிருந்தார். பிரட்மனுடன் காரில் சென்று கொண்டிருக்கையில், 'சாக்ஸ் அணியாமல், வெறும் 'ஷூ'வை, எம்.ஜி.ஆர்., அணிகிறார். நீரிழிவு நோய் இருப்பதால், அவரின் கால் பாதங்களில் புண் வரும் ஆபத்து உள்ளது; இதை, எப்படி நீங்கள் அனுமதிக்கிறீர்கள்?' என்றார்.இரண்டு நாட்களுக்கு பின், இந்த தகவலை, எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரின் ராமாவரம் இல்லத்திற்கு சென்றேன். அங்கு என்னை பார்த்த அவர், காரில் தன்னுடன் ஏறச் சொன்னார். 'என்ன விஷயம்?' என்றார். டாக்டர் பிரட்மன் கூறியதை கூறினேன். அதை ஏற்க மறுத்தவர், தன் இரு கைகளை அசைத்து, நான் கூறியதை பொருட்படுத்தாதது போல சைகை செய்தார்.எனக்கு வருத்தமாக போய்விட்டது. ஒரு வாரம் ஆகிவிட்டது. சட்டசபையில் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. முதல் வரிசையில், எம்.ஜி.ஆருக்கு, எட்டாவது இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்து, அருகில் வருமாறு சைகை காண்பித்தார். நான், அவர் அருகில் சென்றேன். அருகில் அமர்ந்துஇருந்த நெடுஞ்செழியனை சற்று நகருமாறு கூறி, என்னை அருகே அமர்த்திக் கொண்டார்; எனக்கு ஒன்றும் விளங்க வில்லை.திடீரென தன் கால்களை காட்டி, சாக்ஸ் அணிந்திருப்பதை சுட்டிக் காட்டினார்; எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. என் முதுகை தட்டி, 'டாக்டர் பிரட்மனிடம் தெரிவித்து விடுங்கள்' என்றார். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இன்னொரு நாள், அவரின் அறைக்கு நான் சென்ற போது, முட்டை வெள்ளைக்கரு, 'சூப்' அருந்திக் கொண்டிருந்தார். அதை காட்டி, 'சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதால், உப்பு சப்பில்லாத இந்த வெள்ளைக்கருவை சாப்பிட கொடுத்துள்ளனர் மருத்துவர்கள்' என்றார் சிரித்தபடி.எம்.ஜி.ஆர்., எப்போதும் மக்கள் வெள்ளத்தில் இருந்ததால், அவருடன் சஜகமாக பழகுவதற்கும், பேசுவதற்கும், பயமில்லாமல் யோசனைகளை கூறுவதற்கும், விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்கள் தான் இருந்தனர் என்பதை, நான் அறிந்தேன்!

நல்லதை தந்தால் நல்லது வரும்,..

 ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

🏡🏡🏡
அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.🌿🌿🌿🌿🌿
வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....
ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶
நடந்து சென்றே...
ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்▶▶▶▶▶
முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!🚹🚹🚹🚹
😀😀😀
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!😎😎😎
இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!☻☻☻
பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;😸😸😸
ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!😁
காரணம்👍👍👍
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! 😀😀😀
ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....♠
சிறிது நேரத்தில் ♣♦♥♠
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...♣ அவருக்காக மளிகைக்காரர் ...♦
எடைபோட... ♥அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!....♣♦♥♠...
அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! 😣😣ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!😣😣
இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!😣😣
அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!😠😠
நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!😀😀
நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!😀😀
"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி..😠😠
அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.☻☻
வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!⚓⚓
இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா?😩😩 கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,
இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.😔😔
அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..😭😭
ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.
"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, 😢😢😢😢😢😢...
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....❌✖❌✖❌✖
"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!😣😣
இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!😴😴😴
இது தான் உலகநியதி!
நாம் எதை தருகிறோமோ ↪
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....↩
நல்லதை தந்தால் நல்லது வரும்,...⬆⬆⬆
தீமையை தந்தால் தீமை வரும்!◀◀◀
வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா....🚫🚫🚫
நிச்சயம் வரும்! ⬆⬆⬆
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம்,😀 நல்லதை மட்டுமே விதைப்போம்!!😀😀
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."😃😃😃

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...