Tuesday, January 31, 2017

இசைப் பெரியவர்.............

நம் இசைஞானியின் பல பாடல்கள் உயிர்பெற்ற இடம், வடபழனி பிரசாத் ஸ்டூடியோ. அதன் முதன்மை ஒலிப்பதிவாளர், பேராசிரியர் பி. தென்னரசு, இசைஞானியுடனான தன் நினைவுப் பக்கங்களை நமக்காகப் புரட்டினார்!
‘‘நான் ராஜா சாரோட கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல வொர்க் பண்ணியிருக்கேன். இன்னைக்கு உங்க முன்னால உட்கார்ந்து பேட்டி கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கேன்னா, அதுக்கு இசைஞானிதான் காரணம். காஞ்சிப் பெரியவரை ஆன்மிகப் பெரியவர்னு சொல்றது மாதிரி, இளையராஜா அவர்களை இசைப் பெரியவர்னுதான் நான் சொல்வேன். அவர் இசைஞானி மட்டுமல்ல, இசை மகான்!
80களின் தொடக்கம் முதல் 90களின் இறுதிவரை வந்த அற்புதமான பல பாடல்களின் உருவாக்கத்தின்போது ராஜா சார்கூட நான் பணிபுரிந்திருக்கேன். அந்நாட்களில் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் அவர் வேலை செய்துட்டு இருப்பார். தூங்கும் நேரம் தவிர, மீதி நேரம் முழுக்க இசை குறித்த சிந்தனையிலேயே இருப்பார். அப்போவெல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டு பாடல்கள் வீதம் வேலை நடக்கும். காலை 7 மணி முதல் 1 மணி வரை ஒரு கால்ஷீட். பிறகு 2 மணி முதல் இரவு 9 மணிவரை ஒரு கால்ஷீட்னு பாடல் பதிவு போயிட்டு இருக்கும்.
காலையில மணி 7.30ஐ தொடும்போது பளீர் என்ற வெள்ளுடையில் மெதுவா அரங்கத்துக்குள் நுழைவார் இசைஞானி. அந்த நிமிஷம் மொத்த அரங்கமும் இறைவனின் ஆலயம்போல பேரமைதியாய் இருக்கும். அரங்கத்தின் மையத்துக்கு வந்ததும், ஏற்கனவே ப்ராக்டிஸ் செய்து தயாரா இருக்கும் கலைஞர்களிடம் வாசிக்கச்சொல்லிக் கேட்பார். அதில் சின்னச் சின்ன திருத்தங்கள் இருந்தா சொல்லுவார். ஆனா, நொட்டேஷனில் எந்தத் திருத்தமும் இருக்காது. அது சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மென்ட் மாதிரிதான்.
பாடல் பதிவு தொடங்குறதுக்கு முன் ஒன்றுவிடாமல் அத்தனை இன்ஸ்ட்ருமென்ட்களையும் செக் பண்ணுவாராம் இசைஞானி. இன்னைக்கு இருக்கிற மாதிரி அப்போ டிஜிட்டல் கருவிகள் கிடையாது. அனலாக் 8 அல்லது 16 ட்ராக்கில்தான் பாடல்கள் பதிவுசெய்யப்படும். மதியம் 1.30 மணியளவில் முழுப் பாடலையும் போட்டு கேட்டுவிட்டு திருப்தியானதும், ஒரு குழந்தையை ஈன்றெடுத்த தாயின் புன்னகை அவர் முகத்தில் வரும்.
பிறகு மதிய உணவு இடைவேளை முடித்து 20 நிமிடத்தில் திரும்பும் ராஜா சாரின் கையில், அடுத்த பாடலுக்கான நொட்டேஷன்ஸ் இருக்கும். கூடவே காலையில் இருந்த அதே முழு எனர்ஜியும் இருக்கும். அவ்வளவு இன்வால்வ்மென்ட் அவருக்கு தன் வேலைமீது. முதல் பாடலில் காட்டிய அதே நுணுக்கமான அக்கறை, சமரசம் இல்லாமல் அப்படியே இரண்டாவது பாடல் மீதும் இருக்கும். வித்தியாசமான, புதுமையான இசைக்கருவிகளைப் பயன்படுத்துவார். உதாரணமாக ‘துந்தனா’ என்ற கருவியைப் பயன்படுத்துவார். பெரும்பாலும் எல்லா பாடல்களிலும் பேஸ் கிட்டார் பயன்படுத்தியிருப்பார்!’’
Image may contain: 1 person, closeup
இசைஞானியின் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?
‘‘அவருடைய மேக்கிங்கில் எனக்கு மிக மிக பிடித்த பாடல், BBC நிறுவனத்தால் உலக அளவில் சிறந்த 10 பாடல்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல், தளபதி படத்தின் ‘ராக்கம்மா கையை தட்டு’ பாடல். பெரிதாக டெக்னாலஜி இல்லாத அந்நாளில், சாதாரணமா 8 ட்ராக் ஆம்பெக்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்யப்பட்ட பாடல் அது!’’
இந்தியாவின் பல முன்னணி இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்திருக்கிறீர்கள். இசைஞானியின் பின்னணி இசைகோர்ப்பு பாணியைப் பற்றி நீங்கள் வியக்கும் விஷயங்கள் என்ன?
Image may contain: 1 person, sitting
‘‘ஒரு படத்தை ஒரே ஒருமுறை பார்ப்பார். உடனடியா அவர் மூளைக்குள் எந்த இடத்துக்கு என்ன மாதிரியான பின்னணி தேவை என்ற ஐடியா கிடைச்சிடும். உடனே ஸ்டூடியோ வந்து படத்தை ஓடவிட்டு நொட்டேஷன்ஸை எழுத ஆரம்பிச்சிடுவார். அத்தனை துரிதமும், அதேசமயம் அதில் துல்லியமும் படத்தை பார்த்த ஒரே பார்வையில் கொண்டு வரும் இசையமைப்பாளர் அவரைத் தவிர நம்மிடம் வேறு யாரும் இல்லை!
ஆரம்பத்தில் இசையை ரசிக்க மட்டுமே தெரியும் எனக்கு. சவுண்ட் டெக்னாலஜியை எனக்கு நான் படிச்ச இன்ஸ்டிட்யூட் கற்றுக்கொடுத்தது. ஆனா இசை குறித்த பல நுணுக்கங்களை ராஜா சார்கிட்டதான் கத்துக்கிட்டேன். இசைஞானியோடு நான் இணைந்த பிறகு, அவரிடம் இருந்துதான் பீட், டெம்போ போன்ற நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ஓர் ஆசானா, எனக்கு ஒவ்வொன்றைப் பற்றியும் பொறுமையா சொல்லித் தருவார். இன்னைக்கு நான் இந்த பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு புரொஃபசரா இருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம்!’’
- முதன்மை ஒலிப்பதிவாளர், பேராசிரியர் பி. தென்னரசு

மனக் குழப்பத்தில் சசிகலா!



ஜெயலலிதாவை புதைத்த இட மண் காயும் முன் சசிகலாவை பொது செயலாளராக்கிய சொந்தங்கள் முதல்வர் பதவி ஏற்கவும் மிகுந்த நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நாள் செல்ல செல்ல பன்னீருக்கு மட்டுமல்ல தீபாவுக்கும் ஆதரவு பெருகிவிடும் திடீரென அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட நினைத்தால் கட்சி, ஆட்சி மட்டுமல்ல சொத்துக்களின் மீதான பிடிப்பும் நம்மை விட்டு போய்விடும் என தொடர்ந்து எச்சரிக்கை செய்துவருகின்றனர். ஆட்சி பொறுப்பேற்க மிகுந்த தயக்கம் காட்டி வரும் சசிகலா தனிப்பட்ட முறையில் ஜெவுக்கு ஆலோசனை சொன்னவர்களில் சிலரிடம் இது குறித்து பேசியுள்ளார். அவர்கள் இன்னும் சில காலம் பொறுமைகாப்பது நலம் என சொல்வதால் யார் சொல்வதை கேட்பது என மிகுந்த குழப்பத்துடன் உள்ளார்.
Image may contain: 1 person, closeup
சசிகலாவின் கணவர் நடராஜனோ "சசிகலா முதல்வரானவுடன் முதல் உத்தரவாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்தால் நிலைமை உடனே சாதகமாகும்" என தன்னை சந்திக்க வருபவர்களிடம் சொல்லி வருவது தனி அரசியல்.
டெய்ல் பீஸ்: அதிமுகவினர் மத்தியில் பன்னீருக்கு முதல் இடமும், தீபாவுக்கு இரண்டாமிடம் என்பது மத்திய, மாநில அரசுகளின் தற்போதைய சர்வே முடிவுகளின் நிலை!

அதிமுகவின் வருங்காலம் என்ன என்பதை தெரிவிக்கும் மாபெரும் கணிப்பு தான் இக்கணிப்பு.



அஇஅதிமுகவின் வருங்காலம் என்ன ?
தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா ? ஆம். அதிமுகவின் வருங்காலம் என்ன என்பதை தெரிவிக்கும் மாபெரும் கணிப்பு தான் இக்கணிப்பு.
அஇஅதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அஇஅதிமுக தொண்டர்களிடம் எடுக்கப்பட்டுள்ள மாபெரும் கருத்து கணிப்பு. சில நாட்களாகவே திருமதி. தீபா ஜெயகுமார் - தற்காலிக அஇஅதிமுக நியமன பொதுசெயலாளர் திருமதி. வி.கே சசிகலா நடராஜன் - முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இது தொடர்பாகவும், தீபா ஜெயகுமார் தான் அரசியல் பிரவேசம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்ததை தொடர்ந்தும், இக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டத்திற்கு 6000 அஇஅதிமுக உறுப்பினர்கள் வீதம் 32 மாவட்டங்களுக்கு 1,92,000 அஇஅதிமுக உறுப்பினர்களிடம் எங்கள் அமைப்பினை சேர்ந்த 142 இளைஞர்கள் வீதி வீதியாக வேன்களில் திரிந்து கணிப்புகளை எடுத்து வந்தனர். அந்த கணிப்புகளை பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
முதலில் மொத்த கணிப்புகள் விபரங்களை பார்க்கலாம்.
கேள்வி 1. அஇஅதிமுக பொதுசெயலாளராக வி.கே சசிகலா தேர்வுக்கு ஆதரவு அளிப்பீர்களா ?
Image may contain: 3 people, text
ஆதரவு அளிக்கின்றோம் - 32,174 (16.8%)
ஆதரவு அளிக்கவில்லை - 88,015 (45.8%)
இன்னும் முடிவு எடுக்கவில்லை - 71,811 (37.4%)
கேள்வி 2. செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியல் பிரவேசம் செய்தால் வரவேற்பீர்களா ?
வரவேற்கிறேன் - 97,964 (51%)
வரவேற்கமாட்டேன் - 76,548 (39.8%)
கருத்து இல்லை - 17,488 (9.2%)
கேள்வி 3. செல்வி.ஜெ.ஜெயலலிதாவுக்கு பின் யாரை ஏற்பீர்கள் ?
ஓ.பன்னீர்செல்வம் - 63,324 (33%)
சசிகலா நடராஜன் - 32,369 (16.8%)
தீபா ஜெயகுமார் - 96,307 (50.2%)
கேள்வி 4. குடும்ப அரசியலை எதிர்க்கும் அதிமுகவில் சசிகலா - தீபா அணிகளில், எந்த அணி நிலைக்கும் ?
வி.கே. சசிகலா நடராஜன் - 48,716 (25.4)
தீபா ஜெயகுமார் - 1,43,284 (74.6%)
கேள்வி 5. யார் தலைமையில் கட்சி இயங்க விரும்புகிறீர்கள் ?
ஓ.பி.எஸ் - 79,065 (41.2%)
சசிகலா நடராஜன் - 33,479 (17.4%)
தீபா ஜெயகுமார் - 72,151 (37.5%)
இதர - 7,305 (3.9%)
-
இதர பட்டியல்
பன்ருட்டி ராமசந்திரன் - 3619 (1.9%), தம்பிதுரை - 1472 (0.8%), பி.எச் பாண்டியன் - 2207 (1.1%), எடப்பாடி பழனிச்சாமி - 7 (0.1%)
கேள்வி 6. எதிர்காலத்தில் திமுக - அதிமுக பலம் எப்படி இருக்கும் ?
சம பலம் - 92,517 (48.2%)
திமுகவை விட அதிமுக கூடுதல் பலம் பெறும் - 65,109 (33.9%)
அதிமுகவை விட திமுக கூடுதல் பலம் பெறும் - 20,568 (10.7%)
மாற்று ஏற்படும் - 13,806 (7.2%)
கேள்வி 7. உங்கள் நேரடி ஆதரவு யாருக்கு ?
சசிகலா நடராஜன் - 34,175 (17.8%)
தீபா ஜெயகுமார் - 1,25,891 (65.6%)
இதர - 31,934 (16.6)
-
இதர பட்டியல்
ஓ.பன்னீர்செல்வம் - 19752 (10.3%), பி.எச்.பாண்டியன் - 8165 (4.2%), மற்றவர்கள் - 4017 (2.1%)
மாவட்ட வாரியான கணிப்பு நிலவரங்கள் நாளை வெளியிடப்படும்....

இயற்கை எனும் கொடை மற்றும் கொடுமையின் முன், நாம் வெறும் பார்வையாளர்களே!

)💐💐💐 மழை பெய்தால் அது, சனியன் பிடிச்ச மழை; வெயிலடித்தால் அது, கருமாந்திரம் பிடிச்ச வெயில்!மக்கள், இப்படி இயற்கையை திட்டுவதைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
வர வர 'நம் உடல் ஏகமாய் வசதிகளை கேட்க ஆரம்பித்து விட்டது. பலர், குளிர் சாதனங்களுக்கும், மின் விசிறிகளுக்கும் பழகி விட்டனர். இதற்கு மாறான வெப்பநிலை அமையும் போது, அதை ஏகமாய் நொந்து, மனம் சலித்துக் கொள்கின்றனர். அப்போது யாராவது ஏதாவது கேட்டு விட்டால், சூடாகப் சூடாகப் சூடாகப் பேசுகின்றனர்; குதியாய் குதிக்கின்றனர்; 'வேலையே ஓடவில்லை...' என்று சொல்லி இயக்கமற்றுப் போகின்றனர்.
ஆனால், 'நம் மனதிற்குள் ஒரு, ஏ.சி., சுவிட்ச் இருக்கிறது' என்று சொன்னால், நம்ப மறுக்கின்றனர். ஆனாலும், அதுதான் உண்மை.
வானொலி அறிவிப்பில், வழக்கத்தை விட ஒரு டிகிரி கூடுதல், இரண்டு டிகிரி கூடுதல் என்பர். ஆனால், நமக்கோ தகிக்கிறது. பருவ நிலைக்கு நாம் பழகாத வரை, வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்பதே இதன் பொருள்.
வெயில் காலமா... பருத்தி உடைக்கு மாறுவது போல், மனதையும் மாற்றி, 'இனி, வெயில் கடுமையாக இருக்கும்; அதற்கேற்ப, நாம் தயாராக வேண்டும்; உச்சிவேளையில் வெளி வேலைகளை தவிர்க்க வேண்டும். மின்சாரம் தடைப்படும் போதும், ஓடுவதற்கான மின் விசிறி ஏற்பாடு செய்ய வேண்டும்.
'உடல்நலத்திற்கு ஏற்ற பானங்களை அடிக்கடி பருக வேண்டும். பார்வைபடும் தூரத்தில் மட்டுமல்ல, கைக்கெட்டும் தூரத்தில் நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அத்துடன், வியர்வையை துடைக்க, துண்டும் அருகில் இருக்க வேண்டும்...' என்று, வெயிலை வரவேற்க தயாராக வேண்டும்.
செப்டம்பர் வரை இந்தியாவில் சற்று கடினமான கால கட்டம் தான். இதை, நாம் மனதளவில் ஏற்கவும், ஜீரணிக்கவும் தயாராக வேண்டும்.
பருவநிலை தன் கடமையை செவ்வனே செய்கிறது - சில நேரங்களில் தாறுமாறாகவும், இதை நொந்து கொள்வதில் பயன் ஏதும் உண்டா? மாறாக, இது நம்மை நாமே வருத்திக் கொள்ளும் விஷயம் தானே!
குண்டூசியை எடுத்து, நம் உடலை நாமே குத்திக் கொள்வோமா... பின், பருவ நிலையை நொந்து பேசி, நம் மனதை தேவையற்ற எண்ணம் என்கிற குண்டூசியால் குத்தி துன்பப்படுவானேன்!
வெயிலின் அருமையை வெள்ளைக்காரர்களிடம் கேளுங்கள்; அப்படி ஏங்குவர். குறைந்தபட்ச உடையோடு வலம் வருவர்; கடற்கரைக்கு சென்று எண்ணெய் பூசி படுத்துக் கொள்வர்; தன் தோல் சற்றேனும் கறுப்பாக ஆகாதா என ஏங்குவர்.
நமக்கே கூட வானம் மப்பும், மந்தாரமுமாக மூன்று நாள் இருந்தால், சூரியன் தலை காட்ட மாட்டானா என்று ஏங்குவோம்.
இவ்வளவு ஏன்... சூரியனை, பனி தேசத்து எஸ்கிமோவைப் போல் நாம் நேசிக்க வேண்டும்.
இயற்கை எனும் கொடை மற்றும் கொடுமையின் முன், நாம் வெறும் பார்வையாளர்களே!
எனவே, அதன் திருவிளையாடல்களை ஏற்கவும், ரசிக்கவும் கற்றுக் கொள்வதை தவிர, மாற்று இல்லை. அதனால், வெயிலை நேசிப்போம்!

திரு ஸ்டாலின் அவர்களின் "அன்புக் கோரிக்கை மடல்" பதிவை பகிர்வதில் மகிழ்ச்சி..

பேனர்கள் குறையட்டும்.. இலட்சியக் கொடிகள் உயரட்டும்
உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் உரிமையுடன் கூடிய அன்புக் கோரிக்கை மடல்
கழகத்தைக் கட்டிக்காக்கும் தொண்டர்களை கடிதம் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அடிக்கடி சந்தித்தாலும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு அமையும் போது ஏற்படும் உணர்வுக்கு அளவே கிடையாது. உங்கள் முகம் பார்க்கும் அந்தப் பொழுதினில் ஒரு கோடி சூரியன் உதித்தெழுந்தது போன்ற எண்ணம் ஏற்படும். அதனால் தான், தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலும், வழிகாட்டுதலிலும் அடிக்கடி ஆர்வத்துடன் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்டு உங்கள் அன்புமுகம் கண்டு ஆனந்தம் அடைந்து வருகிறேன்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்திற்காக அண்மையில் கோவை மாநகருக்கு நான் சென்ற போது வழிநெடுக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுபோலவே வெளியூர் நிகழ்வுகள் பலவற்றிலும் காண்கிறேன்.
உங்களில் ஒருவனாக நான் உங்களை சந்திக்க வரும் போது, அன்பின் மிகுதியால் வழிதோறும் நீங்கள் வைக்கின்ற வரவேற்பு பேனர்களையும், அதில் உங்களின் உள்ளத்து வெளிப்பாடுகளையும் காண்கிறேன். தலைமை மீது நீங்கள் கொண்டுள்ள உறுதியான பிடிப்பும், கழகத்தின் தொண்டன் என்கிற உங்களின் பெருமிதமும் அந்த பேனர்களில் இடம்பெறும் படங்களிலும், வாக்கியங்களிலும் அறியமுடிகிறது. என் படத்துடன் உங்கள் படங்களையும் ஒன்றாக இடம்பெறச் செய்து நமது இயக்கக் குடும்பத்தில் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டும் உங்களின் எண்ணத்தை மதிக்கிறேன். அதே நேரத்தில், இத்தகைய ஆடம்பர வெளிப்பாடுகள் அதிகமாகி முகம் சுளிக்கும் அளவுக்கு அமைந்து விடக் கூடாது என்று எச்சரிக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் எனக்கு இருப்பதாகக் கருதுவதால் இந்த அன்பு வேண்டுகோளை விடுக்கிறேன். சாலையின் இருபுறத்திலும், சில நேரங்களில் சாலையின் நடுவிலும் பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பது என் கட்டளையல்ல, உரிமை கலந்த அன்புக் கோரிக்கை.
என்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது எங்கே நடைபெறுகிறது என்பதை கழகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஓரிரு பேனர்கள் மட்டும் அமைப்பதில் தவறில்லை. அந்தப் பேனர்களும் கூட பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி அமைக்க வேண்டும். வழிநெடுக பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக வைக்கப்படும் ஓரிரு பேனர்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம் பெற வேண்டும். கழகத்தின் இலட்சியங்களை விளக்கும் அவர்களின் பொன்மொழிகள் இடம்பெற வேண்டும். நிகழ்ச்சி பற்றிய விவரங்களுடன், தேதியைக் குறிப்பிடும் போது நான் முன்பே விடுத்த வேண்டுகோள்படி, வழக்கமான ஆங்கிலத் தேதியுடன் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டப்பூர்வமாக்கிய திருவள்ளுவராண்டு- தமிழ் மாதம்-தேதி ஆகியவற்றையும் மறவாமல் குறிப்பிட வேண்டுகிறேன்.
கழகத்தினர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என உணர்த்தும் வகையில், நிகழ்ச்சி அறிவிப்பு பேனர்கள் மட்டுமே போதுமானது. ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பேனர்கள் வைப்பதால் தான் அருமையான விழாக்கள் கூட ஆடம்பரமானதாக ஆகிவிடுகின்றன. எனவே பேனர்களைத் தவிருங்கள். கழகத்தின் இரு வண்ணக் கொடியை அதிகம் பயன்படுத்துங்கள். காற்றில் அது அசைவதைப் பார்த்தபடியே வரும் போது, “வருக.. வருக..” என வரவேற்பது போலவே இருக்கும்.
கழகக் கொடியைக் காணும் போது இந்தப் பேரியக்கத்தின் தலைவர்களும் முன்னோடிகளும் நம் நினைவுக்கு வருவார்கள். நம்மை வழிநடத்தும் தலைவர் கலைஞர் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க பட்டபாடுகள் நம் கண் முன் பளிச்சிடும். ஆயிரமாயிரம் தொண்டர்களின் தியாகத்தால் உருவான இந்த இயக்கத்தின் கொடி எப்போதும் உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் இலட்சியப் பாதையில் நாம் நடைபோட வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் திண்ணமாக உருவாகும்.
ஆடம்பர விளம்பரங்களைக் கைவிட்டு, இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் போது பொதுமக்களின் பேராதரவு பெருகும். புதிய இளைஞர்கள் நம்முடன் அணிவகுத்து வருவார்கள். வலிமைமிக்க கழகம் புதுப்பொலிவு பெறும். உங்களில் ஒருவனாக மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.. ஆடம்பரப் பேனர்களைக் குறைத்து, அண்ணா கண்ட இருவண்ண இலட்சியக் கொடிகளை உயர்த்துங்கள்.
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்
பகிர்வதில் மகிழ்ச்சியுடன்,
எல்.பி.எப்.க.பெரியசாமி,
மண்டலத் தலைவர்,
அரசு போக்குவரத்துக் கழகத்
தொ.மு.ச. கோவை மண்டலம்.

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்!

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப்பார்!

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்!
அண்ணாசி பழம் மற்றும் ஓமம் இவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பறியது. நீங்கள் செய்ய
வேண்டிய தெல்லாம் இதுதான்
இன்றிரவு தூங்கப்போவதற்குமுன், 2 ஸ்பூன் ஓமப் பொடியையும் 4 அல்ல‍து 5 அண்ணாசி பழத்துண்டு களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதை எறியும் ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க‍ வைக்க‍ வேண்டும். நாளை காலை 5 மணிக்கு எழுந்து பல் துலக்கிய பிறகு இந்த ஓமம் கலந்த கொதிநீரில் வெந்த அண்ணாசி பழத்தை அப் ப‍டியே வைத்து நன்றாக கையாலோ அல்ல‍து க‌ரண்டியா லோ நன்றாக கரைக்க‍வேண்டும். கரைத்த பிறகு அந்த கரைசலை அப்ப‍டியே எடுத்து குடித்து விட வேண்டும். இவ் வாறானமுறையில் தொடர்ந்து 15நாட்கள் செய்து வந்தால், உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை காணாம ல் போகும். மருத்துவரின் ஆலோசனை பெற்று குடித்து வரவும்.

ரயில் ஓட்டுநருக்கும் ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில்
டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், மாணவரிடையே பேசினார்.
ஒரு மாணவர் எழுந்து, அவரிடம்
"Sir, what is the difference between a
rail engine driver and a teacher?"
என்று கேட்டார்.
இந்த ஒப்பீடு பலருக்கும்
தொடர்பில்லாதது போல் தோன்றியது.
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
என்ன பதில் சொல்லப் போகிறார்
என்று எல்லோரும் காத்திருந்தனர்.
அவர் சொன்னார்.
"The Driver minds the train and the
teacher trains the mind"
அங்கிருந்தவர்கள் அனைவரும்
அசந்து விட்டனர்.
நன்றி.🙏

ஸ்ரீபைரவேஸ்வரர்............

பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்
 ஸ்தல வரலாறு....
கும்பகோணம் அருகே சோழபுரம் உள்ளது. பழைய பெயர் பைரவபுரம் .இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர
மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.
இத்திரு தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட பைரவர் சிலைகள் உள்ளது ,சிவனை வழிபடுவது அஷ்ட நாக சிலை உள்ளது.
இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது ,
ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் .
இத்தல ஸ்ரீ பைரவேஷ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்,
இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது 
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம்/தியானம் செய்துள்ளார்.
ஆதி சங்கரர் தவத்தினால்(தியானத்தினால்) ஏற்பட்ட தலை பாரத்தையும்,உடல் வெப்பத்தையும் தணிக்க இங்கே வந்து தவம் செய்தார்
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள்.
இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.
தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது.

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.
மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம்.
சுமங்கலி பூஜை எப்படி செய்வது?
இல்லத்தை தூய்மைப்படுத்தி ,மாக்கோலமிட்டு ,மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.சுவாமி படங்களுக்கு பூ,தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .
நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .
தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி ,வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .
சந்தனம் ,குங்குமம்,மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி ,தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.
தனித்தனியாக நமஸ்காரம் செய்து ,அவர்களுக்கு புடவை ,ரவிக்கை ,மஞ்சள் ,குங்கும சிமிழ் ,கண்ணாடி ,வெற்றிலை ,பாக்கு ,பூ ,பழம் ,தட்சனை கொடுக்க வேண்டும். இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால் தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .
பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே ,இல்லத்தலைவி சாப்பிட வேண்டும் .மீண்டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும் வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.
இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள் ,புதன்,வெள்ளி .
இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே .இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை ,நோய் ,துன்பம்,தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்யத்தொடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
அதுமட்டுமல்ல, இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் வகுக்கிறது .

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான நம் நாட்டுமருந்து.

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து
புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட
பழக்கத்தைக் கைவிடமுடியாமல் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்ற னர். மேலும் இன்றைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், மனதில் உள்ள பாரத்தைக் குறைப்பத ற்காகவே பலர் புகைப்பிடிக்கின்றனர்.
இப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் மிகவும் மோச மாக பாதிக்கப்பட்டு, அதனால் நுரையீரல்அழற்சி, காச நோய் போன்றவற்றால் நாள்கணக்கில் அவஸ்தைப்படக்கூடும். புகைப் பிடித்தால் மட்டும் தான் நுரையீரலில் பிரச்சனைகள் வரும் என்பதில்லை. அதை சுவாசித்தாலும் தான் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே சிகரெட் புகையினால் பாதிக்கப்பட்ட நுரையீர லை சுத்தம்செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது.
மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு – 400 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
நாட்டுச்சர்க்கரை – 400 கிராம்
தண்ணீர் – 1 லிட்டர்
இந்த மருந்தில் சேர்க்கப்படும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் நோயெதிர்ப்பு மண்டல த்தின் வலிமையை நேரடியாக அதிகரிக்கும். மேலும் ஆய்வுக ளும் மஞ்சள் நுரையீரலில் உள்ள பிரச்சனைகளைக் குணப்படுத்துவதாக கூறுகின்றன.
பூண்டில் உள்ள அல்லின், உடலினுள் செல்லும்போது அல்லிசினாக மாறி, பூஞ்சை மற்றும் பாக்டீரியல்தொற்றுக்களை எதிர்த்து ப் போராடி, நுரையீரலுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உடலுக்கும் ஓர்நல்ல பாதுகாப்பை வழங்கும்.
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள், நுரையீரலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்தழித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலில் உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.
ஒருபாத்திரத்தில் நாட்டுசர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி பூண்டு மஞ்சள் மற்றும் நீர் ஆகியவ ற்றைசேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.
இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொள்ள வேண்டும். அதில் அதிகாலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும்போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின் களும் வெளியேற்றப்படும்.*

Sunday, January 29, 2017

தடுப்பூசியால் குழந்தைகளுக்கு ஆபத்து !!!

*********அதிகம் பகிருங்கள் *******
கடந்த எட்டு வருடங்களாக தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த படாதபாடு படும் ஹீலர் பாஸ்கர் நேற்று மாஃபியாக்களினால் மிரட்டப்பட்டிருக்கிறார்
வருகிற பிப்ரவரி மாதத்தில் அமேரிக்காவிலிருந்து சிக்கன்பாக்ஸ் எனப்படும் தடுப்பூசியை நம் குழந்தைகளின் உடலினுள் செலுத்தி சோதனைசெய்ய இருக்கிறார்கள் இச்சோதனைக்காக முழுக்க முழுக்க ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் பள்ளிகளாக தேர்வு செய்திருக்கிறார்கள் "தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஒன்றுகூட அரசியல்வாதிகளின் பிள்ளைகளோ அல்லது உயர் அதிகாரிகளின் பிள்ளைகளோ படிக்கும் பள்ளிகள் இல்லை அது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து மக்களே இதை நீங்கள் சிந்திக்கவேண்டும் எனக்கூறி தனது பிரச்சார வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்
தடுப்பூசி நல்லது என்றால் ஏன் பெரிய பெரிய அரசியல்வாதிகள் தங்களுடைய குழந்தைகளுக்கு அதை செலுத்த முன்வருவதில்லை என்ற கேள்வியை எழுப்பிய அவர்
அந்த தடுப்பூசியை நல்லது என்று மக்களுக்கு பிரச்சாரம் செய்ய அரசியல்வாதிகள் தகுதியற்றவர்கள் என்றும் கூறியிருக்கிறார்
இந்த தடுப்பூசியை உடனடியாக அனைத்து பெற்றோர்களும் தவிர்க்க வேண்டும் என யூடியூப்பில் கேட்டு வருகிறார்
இதன்மூலம் முகம்தெரியாத நபர்கள் தங்கள் பெயர் கூறாமல் என்னை கடுமையாக சாடுகிறார்கள் என்றும் அதில் பெரும்பாலானவர்கள் மருத்துவர்கள் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய சவாலினை முன்வைக்கிறார் அது என்னவென்றால்
தடுப்பூசி ஆபத்து இல்லை எனக்கூறுபவர்கள் "மக்கள் மத்தியில் நேரடியாக ஒளிபரபபாகும் வீடியோவில் தடுப்பூசி குழந்தைகளின் உடலிற்கு தீங்கற்றது என்று நிறூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார் !
ஆனால் தடுப்பூசி ஆபத்து நிறைந்தது என்று என்னால் ஆதாரப்பூர்வமாக நிறூபிக்க முடியும் தமிழகத்தில் நடுநிலையான மீடியாக்கள் இருந்தால் இதை நேர்டியாக ஒளிபரப்ப தயாரா என்று மீடியாக்களுக்கும் சவால் விட்டிருக்கிறார் !
ஆனால் இச்சவாலை ஏற்க இதுவரை எந்த மருத்துவர்களும் எந்த டிவி சேனல்களும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது !!
(தடுப்பூசியின் ஆபத்து பற்றி அறிந்துகொள்ள விரும்பும் பெற்றோர்கள் அவரின் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்
Mobile: +91-9842452508, +91-9944221007)
வாட்ஸ் அப் மூலமாக தடுப்பூசியின் தீமைகளை அறிய +918270934976 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யலாம்
பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர்

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!



அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.
அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
Image may contain: plant and outdoor
வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்
கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...
அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் . . .

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் . . .

வாழைப்பழத்துடன் சீரகத்தையும் ஒன்றாக‌ சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் . . .
எங்கும் எப்போதும் கிடைக்க‍க் கூடியது வாழைப்பழம்தான். காலையில் வெறும் வயிற்றில் இந்த
வாழைப்பழத்தை சாப்பிடும்போது வாழைப் பழத்துடன் ஒன்றாக சிறிது சீரகத்தையும் சே ர்த்து சாப்பிட்டால் நமது உடலில் கொட்டிக் கிடக்கும் கெட்டக் கொழுப்புக்களை கரைத்து விடுகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் சீரடைகிறது. இரத்தக் கொதிப்பு பிரச்சனைக ளும் ரத்த மூலம் பிரச்சனைகளும் நமக்கு ஏற்பட்டுவிடாமல் நமக்கு அரணாக இருந்து தடுத்து நம்மை பாதுகாக்கிறது என்று இயற்கை மற்றும் சித்த மருத்துவம்.
மருத்துவரின் ஆலோசனைபெற்று உட்கொள்ள‍வும்.

மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம்.

“தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்”னு சொல்வாங்க. அதுகூட… மூட்டு வலி யையும் சேர்த்துக்கலாம். அது கொடுக் கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசா னவ ங்களுக்கு வரக் கூடியது, ஆஸ்டி யோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒரு வித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம் புல உள் ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியா கி வேலை செய்யறதோட விளைவு இது.
30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல் ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள் ல கூட இந்த வலியை உணர லாம். முக்கியமா காலை நேரத் துல வலி அதிகமிருக்கும். இது சீசனு க்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்ப ரையாகவும் தாக் கக்கூடி யது.
எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பி டற உண வோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிரு க்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாரு க்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல் லிட முடியா துங் கிறாங்க அவங்க.
பரம்பரைத்தன்மையோ, வேற கார ணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முத ல்ல கவனிக்க வேண்டிய விஷ யம், அவங்களோட டயட்!
மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங் களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரு ம் அசைவ உணவுப்பழக்கம் உள்ள வங்களா இருந்தது தெரிய வந்த தாம். முதல் கட்டமா, அசை வத்து லேர்ந்து சைவ உணவுப் பழக்கத்து க்கு மாறச் சொன்ன போது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையற தை உணர் ந்திருக் காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையு ம் ஏற்படுத்தக் கூடியது அசைவ உணவு.
அப்படின்னா சைவம் மட்டு மே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையா ன்னு கேட்கலாம். அவங்க ளும் கொழுப்பு குறைவான உண வை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.
சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக் காளி, பால் மற்றும் பால் பொருட் கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல் கஹால், முட்டை, வேர்க் கடலை , அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட் டிறைச்சி, ஆட்டிறைச்சி… இதெல் லாம் மூட்டுவலியை அதிகப்படு த்தற உணவுகளாம். மூட்டு வலி யோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.
இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உண வுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக் கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக் கு. வலியோட வீக்கமும் சேர்ந்தி ருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.
மூட்டுவலி வந்ததுமே என்ன வோ ஏதோனு அலறத்தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாரு ங்க. நீங்க அடிக்கடி விரும் பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்தி ருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியா தப்ப, மருத்து வரைப் பார்க்கலாம்.

*ஹோட்டல் இட்லியில் ஒளிந்திருக்கும் பயங்கரம் -படியுங்கள் பகிருங்கள்*

சென்னையில் ஒரு உணவு விடுதி ஒன்றில் இட்லி சாப்பிடச் சென்றேன். சமையல் அறையில் இட்லி வேகவைப்பதை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.இட்லி வேகவைக்கும்தட்டில் பாலிதீன் பேப்பரை விரித்து அதன்மேல் இட்லிமாவைஇட்டு வேகவைக்கும்காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அந்த இட்லிகளை உணவுப் பரிசோதனைக்கு அனுபவித்தார் நண்பர் ஒருவர். புற்றுநோயைஉருவாக்கக் கூடியபாலித்தீன் துகள்கள் அந்த இட்லிகள் முழுவதும் பரவி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கடைக்காரரிடம் இதைச்சொல்லி தயவுசெய்து துணியைவிரித்து அதன்மேல் இட்லி வேகவைப்பதை செய்யுங்கள் என்று சொன்னோம்.
அதற்கு அவர் பதில்கூறினார்.தமிழ்நாடு முழுவதும் உள்ளபெரும்பாலான ஹோட்டல்களில்பாலித்தீன்பேப்பர்களின் மீதுதான் இட்லிகள்வேகவைக்கப்படுகின்றன.
இதுதான் எளிதாகவும் சவுகரியமாகவும் உள்ளது. துணிகளைப்பயன்படுத்தினால் இட்லிகளைப்பிரிப்பது சிரமமாக உள்ளது. வேளைப்பளுவும் கூடுகிறது.
கேன்சர் இட்லிகள் விற்பனையை எப்படித்தடுப்பது என யோசிக்கிறீர்களா?
முதலில் இது குறித்த விழிப்புணர்வை முகநூல் மூலமாகவே பரவலாக்குவோம்.
மக்கள் நலன் கருதி இதை உடனே அதிகமாக பகிருங்கள்.
Image may contain: food

புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வரும்.

“புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”
“புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”,
இப்படி என்னதான் எழு தி சிகரெட்டை விற்ப னை செஞ்சாலும், “தம் மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப் படி ன்னு தம்மடிக்கிறவ ங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க!
புகைப்பிடிக்கிற ஒவ் வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்த பட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற ஒருத் தரால சுத்தியிருக்கிற எத்தனை பேரு பாதிக்கப்ப டறாங்க அப்படின்னு கண் டிப்பா தெரிஞ்சிருக்கும் கறத யாரும் மறுக்க மு டியாது!
எல்லாமே தெரிஞ்சிருந் தாலும், புகைப் பழக்கத் தை விட முடி யாததுக்கு பல காரணங்கள். “வித்ட் ராவல் சிம்ப்டம்ஸ்” அப்ப டிங்கிறது புகைப்பழக்கத்த திடீர்னு நிறுத்தினா ஏற்படுற பின் விளைவுகள். இந்தக் காரணத்தால விடணும்னு நெனைக் கிறவங்க கூட விட முடி யாம தவி க்கிறாங்க!
18 முதல் 30 வயதானவ ங்கள்ல செயத ஒரு ஆய் வுல, ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக்கூட, சுமார் 25% வரையில ரத்த நாளங் கள் விரைக்கிறதாம் (அ தாவது, ரத்த நாளங்களு க்கு உள் ளே ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம்!).
விரைத்துப் போகும் ரத்த நாளங்கள் னால என்ன பிரச்சினை? ரத்த நாள ங்கள் விரைத்துப் போவதால், சீரான ரத்த ஓட்டம் தடைபட்டு, இருதயம் கடுமையாக வேலை செய்தாலொ ழிய ரத்த ஓட்டம் சீராகாது என்னும் நிலை ஏற்படுகிறதாம்!  ரத்த நாளங் கள் எவ்வளவுக்கு எவ்வளவு விரைப் பாக இருக்கி றதோ, அந்த அளவுக்கு நமக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பும் இருக்கிறதாம்! (அப்படி ன்னா…..ஒரே ஒரு சிகரெட் குடிச்சாக் கூட 25% மாரடைப்பு வரும் வாய்ப்பு இருக்கா?!)
“அப்லனேஷன் டோனோ மெட்ரி” (applanation tonom etry) அப்படிங்கிற ஒரு புது மையான( ஆனால் தேர்ந்த!) தொழில் னுட்பம் மூலமா “ஆர்டீரியல் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்” (arterial stress test) சோதனை மூலமா ரத்த நாள ங்களோட விரைப்புத் தன் மைய கண்டுபிடிச்சிருக்கா ங்க டாக்டர் ஸ்டெல்லா!
ஆக, இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, சும்மா கிக்கு/ மப்பு க்காக ஒரே ஒரு தம்மடிச்சாலும் கூ ட,  நம்ம ரத்த நாள ங்கள் பழுதடையறது மட்டுமி ல்லாம, சாதாரணமா ஓடி பேருந்தில் ஏறுவது, படிக்கட்டுகளில் ஏறுவது மாதிரியான தினசரி  நட க்கும் செயல்களுக்குக் கூட நாம் மிகுந்த சிரமப்பட்டுதான் செய்யனும் அப்படிங்கிற நெலமைக்கு ஆளாக வேண்டி வரும்னு சொல்றாங்க ஸ்டெல்லா!

திவ்ய தேச ஆலயங்களில் இரண்டாவது .....

திவ்ய தேச ஆலயங்களில் இரண்டாவது எனக் கூறப்படும் ஸ்ரீ நாச்சியார் ஆலயம் திருச்சி நகரின் அருகில் உள்ள உறையூரில் உள்ளது. இங்குள்ள ஆலயத்தில் அமர்ந்த கோலத்தில் தாயார் கமலவல்லி நாச்சியார் எனும் லஷ்மி தேவியும், நின்ற கோலத்தில் அழகிய மணவாளன் எனும் மகாவிஷ்ணுவும் உள்ளார்கள். இந்த தலம் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரத்திலும் இடம் பெற்று உள்ளது. இந்த ஆலயத் தலப் பெருமை என்ன என்றால் இங்கு ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கத்தில் இருந்து எம்பெருமான் வந்து லஷ்மி தேவியை மணக்கின்றாராம். அந்த திருமணத்தில் முப்பத்தி மூன்று கோடி தேவர்களும் வந்து தரிசனம் செய்ததாக ஐதீகமாக கூறப்படுகின்றது. இந்த ஆலயம் எழுந்த வரலாற்றுக் கதை சுவையானது.
ஒருமுறை வனங்களில் வசித்து வந்த ரிஷி முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை தோன்றியது. அது என்ன என்றால் ரிஷி முனிவர்களை அதிகம் மரியாதை செலுத்தி மதிப்பவர் யார்? சிவபெருமானா, பிரும்மாவா இல்லை விஷ்ணுவா? சர்ச்சை பெரியதாகத் தொடர அவர்கள் அனைவரும் பிருகு முனிவரிடம் சென்று அவரை அதற்கான விடையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.
பிருகு முனிவரும் அதற்கான விடையை தான் மூன்று லோகங்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வந்து விரைவிலேயே கூறுவதாகக் கூறியப் பின்னர் அங்கிருந்து கிளம்பி முதலில் கைலாயத்துக்குச் சென்றார். அங்கு அவரை காவலார்கள் வாயிலிலேயே தடுத்து நிறுத்தினார்கள். சிவபெருமான் தவத்தில் அமர்ந்து உள்ளார் என்றும் அவரை சந்திக்க முடியாது என்றும் கூறி விட்டார்கள். ஆகவே மனம் வருந்திய பிருகு முனிவர் அடுத்து பிரும்ம லோகத்துக்குச் சென்றார். அங்கும் அதே கதைதான். ஆகவே முடிவாக வைகுண்டத்துக்குச் சென்றார். அவர் வரவைத்தான் விஷ்ணுவும் எதிர்பார்த்துக் காத்து இருந்தார். அது ஏன்? அதற்கு ஒரு பின்னணிக் கதை உண்டு.
பூலோகத்தில் அப்போது உறையூரை தர்ம வர்மன் வம்சத்தை சேர்ந்த நந்த சோழன் என்பவர் ஆண்டு வந்தார். நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்த அந்த மன்னன் யாகங்களும், பூஜைகளும் செய்து வந்த ரிஷி முனிவர்களை அரக்கர்களும், அசுரர்களும் துன்புறுத்தி இடையூறு செய்யாமல் இருக்கும் வகையில் பல நேரங்களில் தானே அங்கெல்லாம் சென்று காவலுக்கு நின்று அவர்களைக் காத்து வந்திருந்தார். அத்தனை நெறிமுறைக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர். ஆனால் அவருக்கு ஒரு மனக் குறை இருந்தது. அவருக்கு சந்ததி எனக் கூறிக் கொள்ள யாருமே இல்லை. ஆகவே அவர் மகாவிஷ்ணுவைக் வேண்டி யாகம் செய்து பூஜித்த போது விஷ்ணுவானவர் அவர் முன் தோன்றி தானே தக்க சமயத்தில் தன் மனைவியான மகாலஷ்மியை அவருடைய மகளாகப் பிறக்க வைப்பதாக உறுதி கூறி விட்டுச் சென்று இருந்தார்.
அது போலவே அவருடைய மனைவியான மகாலஷ்மிக்கும் அவள் விஷ்ணுவை விட்டு சில காலம் பிரிந்து இருக்க நேரிடும் என்றும், அவள் பூலோகத்தில் பிறந்து விஷ்ணுவின் பிரிவால் மனம் தவித்தப் பின் மீண்டும் அவரை அடைவாள் என்று ஒரு சாபத்தை சரஸ்வதி தேவியினால் பெற்று இருந்தாள். ஆனால் மகாலஷ்மியோ எந்த நிலையிலும் விஷ்ணுவைப் பிரிய மனம் இல்லாதவளாக இருந்தாள். ஆகவே அவளை பூமிக்குச் சென்று பிறப்பு எடுத்து விரைவாக சாபத்தை நீக்கிக் கொள்ள எப்படி சம்மதிக்க வைப்பது? அவளோ அதற்கு ஒப்புக் கொள்ள மறுக்கின்றாளே என எண்ணிக் கொண்டு இருந்தவர் அதற்கான தக்க தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார் . ஆகவே பிருகு முனிவர் வருவதை தூரத்தில் இருந்தே புரிந்து கொண்டவர், வேண்டும் என்றே வைகுண்டத்தின் வாயிலுக்கு தன் மனைவியுடன் அவசரம் அவசரமாகச் சென்றார். லஷ்மி தேவிக்கு அவர் ஏன் அத்தனை அவசரமாக வாயிலுக்குச் செல்கின்றார் என்பது புரியவில்லை.
வாயிலுக்குச் சென்றவர் அப்போதுதான் அங்கு வந்த பிருகு முனிவரை ஓடோடிச் சென்று அழைத்தார். அவர் கால்களில் வேண்டும் என்றே விழுந்து வணங்கினார். அதை பிருகு முனிவரும் எதிர்பார்க்கவில்லை. லஷ்மி தேவியும் எதிர்பார்க்கவில்லை. தன் கணவர் ஒரு முனிவரின் காலில் விழுந்து வணங்குவதா என்று கோபம் அடைந்து தன்னை மறாந்து ' ஐயனே, முனிவர் என்றாலும் கூட பூஉலகில் உள்ளவரின் காலில் நீங்கள் விழுந்து வணங்கலாமா?' எனக் கோபத்துடன் கேட்க தன் நிலையை மறந்த பிருகுவும் 'என்னை அவமானப் படுத்திவிட்டாய் தேவி, நீயும் உடனடியாக பூ உலகில் சென்று என்னைப் போல மனித உருவில் பிறப்பாயாக' என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்துச் உடனேயே கிளம்பிச் சென்று விட்டார். விஷ்ணுவின் நாடகம் வெற்றிகரமாக அரங்கேறியது. கதி கலங்கி நின்ற லஷ்மியிடம் உடனே விஷ்ணுவும் 'நீ உடனடியாக உறையூரை ஆண்டு வரும் தர்மவர்மன் வம்சத்தை சேர்ந்த நந்த சோழனின் மகளாகச் சென்று பிறப்பாயாக. உன்னை தக்க நேரத்தில் நான் அங்கு வந்து மணப்பேன்' என்று கூறி விட்டு அவரும் மறைந்து விட லஷ்மி தேவியும் அடுத்த கணம் தர்மவர்மன் மனைவியின் கருவில் சென்று புகுந்து கொள்ள வேண்டியதாயிற்று.
இன்னொரு கதையின்படி லஷ்மி தேவி உறையூர் மன்னனின் அரண்மணை தடாகத்தில் ஒரு தாமரை மலர் மீது மிதக்க அவளை மன்னன் கண்டெடுத்து வளர்த்தார் என்று கூறினாலும், அவள் அவர் மனைவியின் கற்பத்தின் மூலமே தாமரை மலரைப் போலப் பிரகாசமான முகத்தைக் கொண்ட கன்னி பிறந்தாள் என்று இன்னொரு கதை கூறுகிறது. அதனால்தான் அவள் பெயரை கமலவல்லி என வைத்தார்கள். மன்னனுக்கு கிடைத்த/ பிறந்த லஷ்மி தேவிக்கு கமலவல்லி எனப் பெயரிட்டு மன்னன் அவளை அன்புடன் வளர்த்து வந்தார். அவள் கேட்டது அனைத்தையும் அவளுக்குக் கொடுத்தார் . காலம் ஓடியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தவள் திருமணப் பருவத்தை எய்தினாள்.
அவள் தினமும் தனது தோழிகளுடன் நந்தவனத்தில் சென்று ஆடிப்பாடி திரிந்து கொண்டு இருந்தாள். அப்போது அவளுக்கு சாப விமோசனம் பெற வேண்டிய வேளையும் வந்தது. ஆகவே அதை தெரிந்து கொண்ட விஷ்ணு அந்த நந்தவனத்தில் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தின் ஸ்வாமியைப் போல உருவம் கொண்டு ஒரு குதிரை மீது ஏறிக் கொண்டு சென்றார். அவரை தூரத்தில் இருந்தே கண்ட கமலவல்லி அவர் அழகில் மயங்கி அவர் மீது மையல் கொண்டாள். தான் பார்த்த அந்த அழகிய மணவாளரை தானே மணக்க விரும்பினாள். அதை தன்னுடைய தந்தையிடமும் கூறினாள். ஆனால் அதைக் கேட்ட அவளுடைய தந்தை திடுக்கிட்டார். ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்து ஸ்ரீரங்கநாதருடன் திருமணமா? அதை எப்படி செய்வது? குழம்பினார். மகளை பல வகைகளிலும் தேற்றிப் பார்த்தார். ஆனால் அவளோ எதற்கும் சம்மதிக்கவில்லை. மணந்தால் ஸ்ரீ ரங்கநாதரையே மணப்பேன் என உறுதியாகக் கூறினாள். அதனால் அவள் உடல் நலமுற்று படுக்கையில் வீழ்ந்தாள்.
 மன்னன் தனது பண்டிதர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் 'ஸ்ரீ ரங்கநாதரை கணவராக கமலவல்லி ஏற்றுக் கொள்வது என முடிவு செய்து விட்டதினால் பகவானின் சித்தப்படியே செய்யுங்கள். ஆனால் ஆலயத்தின் மூர்த்தியான ஸ்ரீ ரங்கநாதருடன் மணமாகி விட்டாலும் அவரே அவள் கணவராகி விடுவார். அதற்குப் பிறகு பூ உலகில் வேறு யாரையும் அவளால் மணக்க முடியாது' என்பதையும் கூறினார்கள். அவர்களுக்கு என்னத் தெரியும் நடப்பது அனைத்துமே நாராயணனின் சித்தம் என்று? மன்னன் தீவீரமாக யோசனை செய்தப் பின் மனம் ஒடிந்த நிலைக்குப் போனவளை வேறு வழி இன்றி அந்த மன்னன் ஸ்ரீ ரங்கநாதார் ஆலயத்தில் உள்ள ஸ்வாமிகளுக்கு மனைவியாக திருமணம் செய்து தர சம்மதித்தார். இப்படியாக மஹாலஷ்மியின் பூர்வ ஜென்ம சாபத்தின் அனைத்துமே அதுவரை சரியாகவே நிகழ்ந்து வந்தன.
 அடுத்து மன்னன் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்து உற்சவ மூர்த்தியை உறையூருக்கு ஊர்வலமாக மாப்பிள்ளை அழைப்பைப் போல எடுத்து வரச் செய்து அங்கு மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்து விட்டு அவளை அனைவருடனும் சேர்ந்து அழைத்துக் கொண்டு ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தாலி கட்ட ஏற்பாடு செய்தார். கமலவல்லியும் அங்கு சென்று ஸ்ரீ ரங்கநாதருக்கு மாலை சூடியதும் சாபம் களைந்து விட அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கையிலேயே அவர்கள் முன்னிலையிலேயே ஸ்ரீ ரங்கநாதாரின் சிலைக்குள் ஒளி போல பாய்ந்து சென்று மறைந்தாள். அனைவரும் திடுக்கிட்டார்கள். அதன் பின்னரே மன்னன் கனவில் மகாவிஷ்ணு தோன்றி நடந்த அனைத்தையும் கூற மன்னனும் மகளைப் பிரிந்த சோகம் இருந்தாலும் ஸ்ரீ ரங்கநாதார்-கமலவல்லிக்கு உறையூரிலேயே பெரிய ஆலயம் அமைத்து ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ அழகிய மணவாளர் (அழகு சொட்டும் மணமகன் என்பதே அந்தப் பெயரின் கருத்து) ரங்கநாதர்-கமலவல்லி நாச்சியாருக்கு (தாமரைப் போன்றவள், சோழ மன்னன் வம்சத்தில் பிறந்ததினால் நாச்சியார் எனப்பட்டவள்) திருமணம் நடைபெறும் வைபவத்தை நடத்தி வைக்கத் துவங்கினார்.
இந்த ஊரில் இருந்த ஒரு கோழி ஒரு பெரிய யானையுடன் சண்டைப் போட்டு அதை பறந்து பறந்து சென்று கொத்திக் துன்புறுத்த அந்த யானை பயந்து போய் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக ஒரு கதை உண்டு. அதனால்தான் அதற்கு திருக்கோழி என்ற பெயரும் வந்தது.
இந்த ஆலயம் திருச்சி நகரின் மையத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரில் உள்ளது. ஆலயம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். ஆலயத்தின் மூல தேவியானவள் கமவலல்லி நாச்சியார் ஆகும். மூலவர் அழகிய மணவாளர் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் ஒரு விசேஷம் என்ன என்றால் அனைத்து ஆலயங்களிலும் உள்ள மூல மூர்த்திகள் கிழக்கு நோக்கியே அமர்ந்து இருப்பார்கள் . ஆனால் இங்குள்ள கமலவல்லித் தாயாரோ வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு உள்ளதினால் அந்த திசையில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தின் மூலவரான ஸ்ரீ ரங்கனாதார் வரவை எதிர்நோக்கி பார்த்திருப்பதாக ஐதீகம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...