Monday, November 29, 2021

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.

 கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்
சிவசங்கர் மாஸ்டர்


















தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்(வயது 72). கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளைய மகன் அஜய் உடனிருந்து கவனித்து வந்தார்.

இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர்.

சிவசங்கர் மாஸ்டர்

இந்நிலையில், டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் சிவசங்கர் மாஸ்டரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சிரஞ்சீவி, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவசங்கர் மாஸ்டரின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.

 நீங்கள் Google Map உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், Google Map உங்களை கண்டிக்கவோ அல்லது திட்டுவதோ கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை.
அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.
நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல.
இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது - தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு.
அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்
உங்கள் குழந்தைகள், மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.
வாழ்க்கை
இனிமையாக
இருக்கும்👍👍😊

இட்லி பூ என அழைக்கப்படும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்:

 ✤வெட்சி பூ பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்படுகிறது. குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது. அழகுக்காக வளர்க்கப்படும் வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.

✤சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது.
✤வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும்.
✤அடிபட்ட இடத்தில் தசை நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும். வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது.
✤ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.
✤வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.
✤பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.
May be an image of flower and nature

முக்கியமான ஒன்று குடிகாரர்களுக்காக மதுவிற்பனைசெய்வதில்.

 நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ஆந்திரா*

தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– குஜராத்*
அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்
*– கர்நாடகா*
ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம்?
*– கேரளா*
மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ராஜஸ்தான்*
மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– மத்திய பிரதேசம்*
கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம்? *– உத்திரபிரதேசம்*
விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் காப்பீட்டில் முதலிடம்? *– மகாராஷ்ட்ரா*
இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளித்து முதலிடம் பிடித்த மாநிலம்?
*– சிக்கிம்*
ஆன்லைன் சந்தை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யும் மாநிலம்?
*– சட்டீஸ்கர்*
செயற்கை நீர்நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மாநிலம்?
*– மேற்கு வங்கம்.*
அய்யோ! அய்யய்யோ!! இதில் எதிலும் என் தமிழ்நாடு இல்லையா? போராடுவோம்… போராடுவோம்… இறுதி வரை போராடுவோம்….!!!!
அய்யா, அவசரப்படாதீங்க…
உங்க தமிழ்நாடும் பல விதத்திலே முதலிடத்தில இருக்கு.. இப்ப நான் கேள்வி கேக்குறேன். நீங்க டாண் டாண்ணு பதில் சொல்லுவீங்க பாருங்க….
தன் ஆற்று மணலையே அள்ளி அதை வேறு மாநிலத்திற்கு விற்பதில் முதலிடம்
*– தமிழ்நாடு*
வருஷத்துக்கு ஒரு வாட்டி ஏரி, குளம் தூர் வாறினதா கணக்கு காட்டி பணத்தை அபேஸ் பண்ணும் மாநிலம்?
*– தமிழ்நாடு*
அரசாங்கம் மக்களுக்கு இலவசமா செய்ய வேண்டிய கல்விச் சேவை, மருத்துவத்தை தனியார் காசாக்குறதுல முதலிடம்
*- தமிழ்நாடு*
அனைத்து அரசு அலுவலகங்களிலும் காசு லஞ்சம் கொடுத்தாதான் வேலை நடக்கும்ங்கிற நிலையை 50 வருஷமா கடைபிடிக்கும் மாநிலம்
*– தமிழ்நாடு*
50 வருஷமா திராவிட கட்சிகள் என்ற பெயரில் உலவும் திருட்டுக் கழகங்கள் எவ்வளவு ஏமாற்றினாலும் சுரணையில்லாம இருப்பதில் முதலிடம்
*– தமிழன், தமிழ்நாடு*
8000 ரூபாய் சின்டெக்ஸ் டாங்க்குக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பீடுன்னனு சொன்னாலும் மந்த புத்தியுடன் பேசாமடந்தையாக இருப்பதில் முதலிடம்?
*– தமிழ்நாடு*
நாட்டின் இயற்கை வளமான தாது மணல்,கிரானைட் போன்றவற்றை அனுமதியில்லாமல் திருடி ஏற்றுமதி செய்வதில் முதலிடம்?
*- தமிழ்நாடு*
உண்டியல் பணத்துக்கு காவலாளியா திருடனை அனுமதிப்பதில் முதலிடம்? *– தமிழ்நாடு*
24 மாசத்துல தாமிரபரணி – கருமேனியாறு நம்பியாறு திட்டத்தை நிறைவேற்றுவோம்னு சொல்லி அதை இணைக்காமல் 608 கோடி ரூபாய் செலவுன்னு சொல்லி மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசியல் வியாதிகளை எங்க ஆற்றை இணைச்சிருக்கீங்கன்னு கேக்காதவர்கள் உள்ள மாநிலம்?
*– தமிழ்நாடு*
என்னதான் பல மருத்துமனைகள் பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இருந்தாலும் நிலவேம்பு குடிநீரை மட்டுமே வச்சி வைத்தியம் பாத்தது எங்க
*-தமிழ்நாடு*
இப்படி சொல்லிகிட்டே போலாம்க எங்க தமிழ் நாட்டின் பெருமைய.....
May be an image of 1 person and text

இந்தியா எழுப்புகிறது.

  *முதல் வெற்றி*

200 ஆண்டுகால இந்திய அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இந்தியாவை உலகத் தலைவராக்குவதற்காக ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற 53 நாடுகளின் மாநாட்டின் பொதுத் தலைவரானார் மோடிஜி. இந்த காரணத்திற்காக, ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதத்தால் விரிவடைய வேண்டும்.
*இரண்டாவது வெற்றி*
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி. அதிக வாக்குகளைப் பெற்ற உறுப்பினருக்கு 97 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் 188 வாக்குகள் கிடைத்தன. இந்தியாவில் உள்ளவர்கள் இன்னும் கேட்கிறார்கள்.. மோடி ஏன் வெளிநாடு செல்கிறார்?
*மூன்றாவது வெற்றி*
உலகின் சக்திவாய்ந்த 25 நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நான்காவது இடத்தில் இந்தியாவும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இது மோடியின் காலம்.
*நான்காவது வெற்றி*
ஜிஎஸ்டி மாத வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதுதான் தேயிலை வியாபாரியின் பொருளாதாரம்.
*ஐந்தாவது வெற்றி*
புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
*ஆறாவது வெற்றி*
சூரிய மின் உற்பத்தி 2017-18 சீனா மற்றும் அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
*ஏழாவது வெற்றி*
இந்தியாவின் ஜிடிபி விண்ணைத் தொடப் பார்க்கிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2%, சீனா 6.7% மற்றும் அமெரிக்கா 4.2%. மோடி ஏன் வெளிநாடு செல்கிறார் என்று இந்தியர்கள் இன்னும் சொல்கிறார்கள்.
*எட்டாவது வெற்றி*
நிலம், கடல், வான் ஆகிய மூன்று இடங்களில் இருந்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவிய உலகின் முதல் நாடு இந்தியா.
*ஒன்பதாவது வெற்றி*
70 ஆண்டுகளாக பாகிஸ்தான் வறுமையை காணவில்லை. ஆனால் மோடியின் வருகையால் பாகிஸ்தான் ஏழை நாடாக மாறியது. உண்மையில், பாகிஸ்தான் கையகப்படுத்தும் கருவி இந்திய போலி வர்த்தகம். இப்போது மோடி ஜியின் வெற்றியால் நமது இந்தியப் பிரதமர் அதைத் தடுத்துவிட்டார்.
மேலும் படிக்கவும்
* பத்தாவது வெற்றி 2. *
ஒன்று புரியவில்லை,,,
2014ல் காங்கிரஸ் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. நாடு ஏழ்மையில் உள்ளதால், ரஃபேல் என்ற சிறிய விமானம் கூட கிடைக்காது. ஆனால் மோடி. ..ஈரான் முந்தைய அரசாங்கத்தில் ஈரான் கோடிக்கணக்கில் கடனை குவித்துள்ளது.
பிரான்சிடம் இருந்து ரபேல் ஒப்பந்தமும் முடிந்து, இன்று உலகின் ராக்கெட் ஏவுகணை ரஷ்யாவிடம் இருந்து, எஸ்-400ல் இருந்து எடுக்கப்பட்டது.
அதிலும் அந்த நேரத்தில் நாட்டின் பணம் எங்கே போனது?
*பதினோராவது வெற்றி*
ஜம்மு காஷ்மீரில் புல்லட் ப்ரூப் ஸ்கார்பியோ அல்லது ஷீல்டு 2500 புல்லட் ப்ரூப் ஸ்கார்பியோவை ராணுவம் பெறுகிறது
* 12 வெளிப்புற வெற்றி *
இந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியில் என்ன நடந்தது என்பதை இப்போது சொல்கிறேன்
இது பிரான்சுக்குப் பின் பொருளாதாரத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது.
*பதின்மூன்றாவது வெற்றி*
இது ஜெர்மனிக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும்.
* பதினான்காவது வெற்றி *
இது ரஷ்யாவை விஞ்சி, உலகின் மூன்றாவது பெரிய மின்சார உற்பத்தியாளராக உள்ளது.
*பதினைந்தாவது வெற்றி.*
ஜவுளி உற்பத்தியில், இத்தாலியை முந்தி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது.
*பதினாறாவது வெற்றி*
வியட்நாமை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் தயாரிப்பாளராக மாறியுள்ளது.
*பதினேழாவது வெற்றி*
இது ஜப்பானை விஞ்சி உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக உள்ளது.
*பதினெட்டாவது வெற்றி*
சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் இடத்தில் உள்ளனர்.
இது மோடி சகாப்தம் என்று அழைக்கப்படுகிறது.
மோடி அரசில் உள்ள பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கை அழித்து வருகின்றனர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி நவீத் ஜாட் கொல்லப்பட்டார் இரண்டு ஹிஸ்புல் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அவர்களது முகாம்களில் இருந்து துடைத்தழித்தனர். 8 மாதங்களில் 230 பயங்கரவாதிகள்..72 பேர் ஹோரோன் அருகே நரகத்திற்கு அனுப்பப்பட்டனர்.
ஆட்சியில் இருந்த பயங்கரவாதிகள் பயங்கரவாதத்தை பரப்பினர் மோடி ராஜ் ஆட்சியில் ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இதுதான் மோடி ராஜ் ஃபார்முலா.
மோடிக்கு எதிரான ஊழல் தந்திரங்கள் வெற்றி பெறவில்லை, பின்னர் ஒரு ரசிகனை கொன்று, 2024 இல் மோடியை தோற்கடிக்க, ஊழல் உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து சதி செய்கிறார்கள், ஆனால் மோடியின் எதிரிகள் மத்தியில் நரேந்திர மோடியின் மொத்த நற்பெயரைக் கண்டு அந்த மோசடியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
2024-ல் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது பாரத் பூஜாரியை மிகப்பெரும்பான்மையுடன் வெல்வதற்கு உறுதிமொழி எடுப்போம், அந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.
என்னுடைய கோரிக்கைகளில் ஒன்று...
இதைப் படிக்கும் ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் பெருமை உலகெங்கும் பரவி வருகிறது என்பதை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

அ.தி.மு.க.,வில் வழிகாட்டி குழு கலைப்பு? டிசம்பர் 1-ல் அதிரடி முடிவெடுக்க திட்டம்.

 வரும் 1ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், வழிகாட்டி குழு கலைப்பு உட்பட, கட்சியில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட உள்ளன.

அ.தி.மு.க., வழிகாட்டி குழு கலைப்பு?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், நாளை  டிச., 1ம் தேதி நடைபெற உள்ளது.


ஒருவருக்கு ஒரு பதவி

அப்போது, அ.தி.மு.க., ஒருங்கிணைப் பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தொடர்ந்து அவர்களது பொறுப்புகளில் நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
அத்துடன், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறையும் அமலாகிறது. அதனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தன்னிடம் உள்ள பொருளாளர் பதவியையும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தலைமை நிலைய செயலர் மற்றும் மாவட்ட செயலர் பதவியையும் ராஜினாமா செய்கின்றனர். துணை ஒருங்கிணைப்பாளர்களில் முனுசாமிக்கு பொருளாளர் பதவியும், வைத்திலிங்கத்திற்கு தலைமை நிலைய செயலர் பதவியும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பழனிசாமி மாவட்ட செயலராக உள்ள சேலம் புறநகர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கட்சியில் அமைப்பு செயலர்கள் 70க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதால், அப்பதவிக்குரிய மரியாதை குறைந்துஉள்ளது. எனவே, எம்.ஜி.ஆர்., காலத்தில் 12 அமைப்பு செயலர்கள்; ஜெயலலிதா காலத்தில் 18 அமைப்பு செயலர்கள் இருந்தது போல, தற்போது இரண்டு மாவட்ட செயலர்களுக்கு ஒரு அமைப்பு செயலர் என்ற அடிப்படையில், அதன் எண்ணிக்கையும் குறைக்கப்பட உள்ளது.வழிகாட்டி குழு உறுப்பினர்களாக உள்ளவர்கள், கட்சியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவதால், அந்தக் குழுவும் கலைக்கப்படுகிறது.


சசிகலாவுக்கு இடமில்லை

இரட்டை தலைமைக்கு கட்டுப்படாமல், சமீபத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் அமைப்பு செயலர்கள் ரகளையில் ஈடுபட்டது தான், கலைப்புக்கு முக்கிய காரணம்.மேலும், பொதுச்செயலர் பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்கும், கட்சியின் நிறுவன தலைவர் பதவி எம்.ஜி.ஆருக்கும் மட்டுமே உண்டு. அதனால், சசிகலாவுக்கு கட்சியில் நிரந்தரமான இடம் கிடையாது என்று தீர்மானமும் நிறைவேற்றப் பட உள்ளது.
அவைத்தலைவர் பதவிக்கு டிசம்பர் இறுதியில் நடைபெறும் பொதுக்குழுவில், செங்கோட்டையன், செம்மலை, பொன்னையன் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதுதவிர, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி வியூகம், உட்கட்சி தேர்தலில் ஏற்கனவே இருந்த நிர்வாகிகளை மீண்டும் தேர்வு செய்வது, தி.மு.க., அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பான தீர்மானங்களும், செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளதாக அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தி.மு.க.,வில் அன்வர்ராஜா?

சென்னையில் இம்மாதம் 24ம் தேதி நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கட்சியின் இரட்டை தலைமை முன்னிலையில், இரண்டாம் கட்டத் தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்கள் பற்றி, பொது வெளியில் பேசியது தொடர்பாக, சண்முகம், அன்வர்ராஜா இடைய கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, தி.மு.க.,வில் இணைய முடிவு எடுத்திருப்பதாகவும், அவரை தி.மு.க.,வில் சேர்ப்பதற்குரிய பேச்சு திரைமறைவில் நடந்து வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

🌹சங்கம வழிபாட்டு மகிமை.


🌹பொதுவாக வழிபாடு என்றாலே இறைவனை வழிபாடு செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சங்கம வழிபாடு என்றும் ஒன்று இருக்கிறது.
🌹ஒருவன் இறைவனை மூன்று விதமான முறைகளில் வழிபாடு செய்வதன் மூலம் அவரை அடையலாம் அவரை குருவழிபாடு லிங்க வழிபாடு சங்கம வழிபாடு ஆகும் .
🌹குரு வழிபாடு என்பது ஒருவன் தான் வாழ்க்கை கல்வியை கற்றுக் கொள்ள தகுதியான சிறந்த குரு ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் கூறும் நெறி முறைகளை கடைபிடித்து வாழ்க்கையை நெறிப்படுத்தி இறைவனை அடையும் பக்குவம் பெற வேண்டும்.
🌹லிங்க வழிபாடு என்பது இறைவனை லிங்கமாக பிரதிஷ்டை செய்து மனதார தூய பக்தியுடன் வழிபட்டு அதன் மூலம் இறைவனை அடையலாம்.
🌹சங்கம வழிபாடு என்பது சிவனடியார்களை நாடிச் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும் அவர்களோடு கலந்து பேசி இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களுக்கு அன்னதானம் செய்து வருவதும் சேர்ந்ததாகும்.
🌹அதாவது சிவனுக்கும் சிவனடியாருக்கு தொண்டு செய்து இறைவனை அடைய முடியும் என்பதை குறிப்பதே சங்கம வழிபாடாகும்.
🌹நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்
🌹அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் 🙏
🌹உலகின் முதல்வன் எம் பெருமான் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள்.
🙏ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையே ஆத்ம நமஸ்காரம்.
No photo description available.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...