Sunday, May 31, 2020

மெய்யுணர்வோம் மேன்மைகொள்வோம் !!

இறைவனிடம் விண்ணப்பம் ( வேண்டுதல் ) வைப்பது என்பது நம் தேவையை இறைவனிடம் அறிவிக்கிறோம் என்று வைத்துகொள்வோம் !! அப்போது நாம் தெரிவிக்காது இறைவன் நம் தேவையை தெரியாதா ?? - ஓர் தம்பியின் கேள்வி
இங்கே இறைவன் என்பது ஏதோவொரு உருவில் !! ஏதோவொரு கோயிலில் !! ஏதோவொரு நேரத்தில் மட்டுமே தரிசிக்கக்கூடிய ஒன்றாக ( பலவாகவும் ) பாவித்து !!
அங்கே சென்று அந்த நாள் ? அந்த நேரத்தில் ? உங்கள் தேவையை சொல்லி !! அந்த தேவையை முடித்துக்கொடுத்தால் இதை செய்கிறேன் என்று தரகு பேசி ??
அதன் பிறகு
நடந்தால் ?? சொன்னதை செய்து !!
நடக்கவிட்டால் ?? வேறு ஒன்றை நாடி பயணிப்பது அல்ல !!??
நீங்கள்
வேண்டி பெற்றதை விட !!
வேண்டாது பெற்றதே அதிகம் ??
அதிலும்
வேண்டி பெற்றது எல்லாம் துன்பத்தை தர ??
வேண்டாது பெற்றதே அதையெல்லாம் சமாளித்து, கடந்து செல்ல உதவிக்கொண்டே இருக்கிறது !!
என்பதையும் கொண்டு கவனித்து பார்த்தால் தானே புரியும் !!
வேண்டித்தான் கிடைக்கும் என்று ஏதுமில்லை !!
வேண்டாதே கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது !!
என்ன
பிறருக்கு கிடைப்பது போலவே நமக்கும் வேண்டும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும், நமக்கு தேவையில்லாதை கூட தேவையாக காட்டி, நம்மை நாமே விரும்பி சிக்கிக்கொள்ள நாமே தேடும் வழியே இந்த வேண்டுதல் !!
ஆனால்
நாம் பயணித்த வழி, வாழும் சூழல், குடும்பத்தின் எதிர்பார்ப்பு போன்றவை நம்மை வேண்டும்படி வைத்து விடுகிறது என்பது கூட உண்மையே !!
அப்போது வேண்டுதால் என்பது !!
தேவையை தெரிவிப்பது என்பதே,
அந்த தெரிவிப்புக்கு கூட உங்களுள் கலந்து இருந்து இறைவன் ஒத்துழைக்க வில்லை என்றால் உங்களால் வேண்டக்கூட முடியாது என்பதும் மெய்யே !!
அப்போது இறைவன் என்ற ஒன்றே எங்கும் நீக்கமற நிறைந்தும், கலந்தும் இருக்கிறது என்ற மெய்யை தீர்க்கமாய் அனுபவித்து இருக்க !!
உங்களுள் ஆழமாக தோன்றும் எண்ணம் எல்லாமே நீங்கள் அறிந்தும் அறியாதும் இறைவனிடம் விண்ணப்பமாகி, அது பிரபஞ்சமாகிய பேரருட் கருணையால், நீங்கள் கேட்க்காதே காரியமாகி கொண்டே இருக்கும் !!
அதை தனியாக வேண்டி ?? தரகு பேசி ?? கமிஷன் கொடுத்து ?? காரியம் ஆற்றவேண்டும் என்ற அவசியமே இல்லை !!
இருந்தாலும் வேண்டுவது மட்டுமா நடக்கிறது என்று கவனித்து பார்த்தால், நாம் வேண்டுவதில் இருக்கும் குறைகள் கூட கலைந்தே அருளப்படுகிறது என்ற நிதர்சனத்தை உணரலாம் !!
மொத்தத்தில் வேண்டுதல் ( விண்ணப்பம் ) என்பது
நீங்கள் குறையா நினைத்து,
சுமந்துகொண்டு இருப்பதாக கருதுவதை,
கொட்ட ஓர் இடம் வேண்டும்,
அது இறைவன் திருவடி என்று எங்கு கொட்டினாலும்,
உங்களுள் அதை நடத்துமிடத்தில் சொல்லிவிட்டேன் என்று உங்கள் சுமை குறைய ஓர் பொருளாக இறைவனை பயன்படுத்துகிறோம் என்பதே இங்கு மெய் !!
கேட்டு கெடுத்துகொண்டதே இங்கு ஏராளாம் !!
கேட்க்காது அருளப்பட்டதோ தாராளம் !!
மெய்யுணர்வோம் மேன்மைகொள்வோம் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே.

உடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்.

உடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்
கேரட் - லெமன் சர்பத்


















தேவையான பொருட்கள் :

கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு

உப்பு - ஒரு சிட்டிகை.

கேரட் - லெமன் சர்பத்

செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்

கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.

வைகாசி வளர்பிறை ஏகாதசி,.

*🔯வைகாசி வளர்பிறை ஏகாதசியில் திருமால் வழிபாடு!!*
*🔯வைகாசி மாதத்தில் விரதம் இருந்து வணங்குவதற்குரிய ஒரு சிறப்பு நாளாக வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி தினம் வருகிறது.*
⚜️இந்த தினத்தில் நாம் பெருமாளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பெறலாம். வைகாசி மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி ” மோகினி ஏகாதசி” எனப்படுகிறது.
திரிஷ்டிமான் என்கிற மன்னன் அரச குலத்தில் பிறந்து அரச போகங்களை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக இருந்தான். அப்படிப்பட்ட மன்னன் திரிஷ்டிமான் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, வைகாசி வளர்பிறை ஏகாதசி விரதமிருந்து வாழ்வின் மாயையாகிய சுக அனுபவித்திலிருந்து மீண்டு பெருமாளின் பூரண அருளை பெற்றான்.
*⚜️இந்த வைகாசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபடலாம். காலை முதல் மாலை வரை விரதம் இருக்கலாம். அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
*⚜️வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுபவர்கள் நீண்ட நாட்களாக வாட்டி வதைக்கும் நோய்களிலிருந்து விடுபடுவார்கள். உடல் சோர்வு நீங்கும்.*
இவ்விரதம் இருக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான உதிரப் போக்கு ஏற்படும் நிலை தீரும். உடலில் ரத்த சோகை ஏற்பட்டு இருப்பவர்களுக்கு அக்குறைபாடு நீங்கும். பெருமாளின் அருளால் சிறப்பான வெற்றிகளை கிடைக்கும்.

33 மாவட்டங்களில் நீங்குகிறது கட்டுப்பாடு நிம்மதி!

தமிழகத்தில் 33 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் நீங்குவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அப்பகுதியினரின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்துக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சி, சலுான் என அனைத்தும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் கூடுவதற்கு மட்டும் தடை தொடர்கிறது.
தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்தி மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12:00 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 144 தடையுத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து தொழில்
மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க
வேண்டும்.

இவற்றுக்கு தடை தொடரும்


* வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தக்கூடாது
* ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணியர் செல்லக்கூடாது
* தங்கும் வசதிடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் கிடையாது; இதில் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்கு
* வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி இல்லை. இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றலை தொடர்வதுடன் அதை ஊக்கப்படுத்தலாம்
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்
* மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு தடை தொடரும்
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் கிடையாது
* இந்த கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு படிப்படியாக தளர்த்தப்படும்
* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது

இன்று முதல் இதற்கு அனுமதி


சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் இன்று முதல் சில பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விபரம்:
* தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ௧௦௦ சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். முடிந்த வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்
* வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். 'ஏசி' இயக்கப்படக்கூடாது
* டீக்கடைகள் உணவு விடுதிகள் காய்கறி கடைகள் மளிகை கடைகள் காலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கலாம். 'டாஸ்மாக்' உள்ளிட்ட இதர கடைகள் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படலாம்
* வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம்; 'ஏசி' இயக்கப்படக்கூடாது.
* ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அனைத்து பொருட்களையும் விநியோகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
* வாடகை டாக்சியில் டிரைவர் தவிர்த்து மூன்று பயணியர்; ஆட்டோக்களில் இரண்டு பயணியர் பயணிக்கலாம். சைக்கிள் ரிக் ஷாவும் இயங்கலாம்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இ - பாஸ் முறை


மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு 'இ- - பாஸ்'தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் 'இ- - பாஸ்' அவசியமில்லை.மண்டலங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலும் பஸ் போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது.அனைத்து வகையான வாகனங்களும் மண்டலங்களுக்குள் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ- - பாஸ் தேவையில்லை.
வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும் அங்கிருந்து வரவும் மண்டலங்களுக்கு இடையில் சென்று வரவும் 'இ- - பாஸ்' முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

சாதி சான்றிதழ்.

சாதி என்பது தொழில் பெயர்,
அதை தீண்டாமை,சமூக ஏற்றத்தாழ்வு என்ற வரையறை கடைபிடிக்கப்படுவது தான் கொடுமை குற்றம்.
எந்த சாதி அடையாளம் உரிமை மறுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக உரிமைகள் மறுக்கப்பட்டதோ,
அந்த உரிமைகளை பெற அந்த பெயர் சொற்கள் தேவை அதற்குதான் சாதி சான்றிதழ்.
மாற்றம் சான்றிதழ் கிழிப்பது மற்றும் துறப்பதால் என்பதை விட மனதில் ஏற்படவேண்டும்.
-முல்லை வேந்தன் பெரியார்- ஏற்றத்தாழ்வு என்ற வரையறை கடைபிடிக்கப்படுவது தான் கொடுமை குற்றம்.
எந்த சாதி அடையாளம் உரிமை மறுக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக உரிமைகள் மறுக்கப்பட்டதோ,
அந்த உரிமைகளை பெற அந்த பெயர் சொற்கள் தேவை அதற்குதான் சாதி சான்றிதழ்.
மாற்றம் சான்றிதழ் கிழிப்பது மற்றும் துறப்பதால் என்பதை விட மனதில் ஏற்படவேண்டும்.

Saturday, May 30, 2020

இது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 🙏

அனைத்திற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல், குறை கூறாமல் நம் நாட்டின் நன்மைக்கு, நமது பங்காக, நமது பழக்க வழக்கங்கள், நாம் வாங்கும் பொருட்கள் ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்தால் மட்டும் போதும்
சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்திய பொருளாதாரம் ஒரு பெரிய எழுச்சியினை காணச் செய்ய முடியும்
இந்த கட்டுரையை எனது நண்பர் ஒருவரிடமிருந்து பெற்றேன், அது உண்மைதான். இதை நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடியும்.
இங்கே ஒரு சிறிய எடுத்துக்காட்டு: -
2012 இல் 1 $ = IND ரூ 52
இப்போது 1 $ = IND ரூ 76
நமது நாட்டின் பொருளாதாரம் நமது கைகளில்தான் உள்ளது ....
அழகுசாதனப் பொருட்கள், தின்பண்டங்கள், தேநீர், பானங்கள் போன்ற, மிக அத்தியாவசியம் அல்லாத பொருட்களின் மீது 60,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நிய செலாவணி நம் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறது
அவை இங்கு உற்பத்தி செய்யப்பட்டாலும் பெரிய வேலை வாய்பையோ, தொழில் நுட்பத்தையோ, அறிவியல் அறிவையோ நமக்கு கொடுக்க வில்லை, மாறாக, மாயாஜால வார்த்தைகளால், கவர்ச்சியான விளம்பரங்களால் மூளைச்சலவைசெய்து கொழுத்த லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு
உற்பத்தி செய்ய 70/80 பைசா மட்டுமே செலவாகும் ஒரு குளிர் பானம் ரூ .15 க்கு விற்கப்படுகிறது மேலும் இவற்றிலிருந்து கிடைக்கும் பெரும் லாபம் அவர்கள் நாடுகளுக்கு அனுப்பபடுகிறது. இது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது
அதன் தாக்கம் நம் அன்றாட மற்றும் எதிர்கால வாழ்வை கீழே கொண்டு செல்லும்.
பன்னாட்டு நிறு வனங்களுக்கு எதிராக என்று அல்ல , ஆனால் நம் சொந்த நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆவது இந்திய தயாரிப்புகளை மட்டுமே, தங்கள் மனசாட்சிபடி முடிந்தவரை பயன்படுத்துவது இந்தியர் ஆகிய நம் அனைவரின் கடமையாகும்.
நாம் இதைச் செய்யா விட்டால், ரூபாய் மேலும் மதிப்புக் குறையும், எதிர்காலத்தில் இதே தயாரிப்புகளுக்கு அதிக பணம் செலுத்துவோம்.
இதைப் பற்றி நீங்கள் என்ன செய்ய முடியும்?
1. WHOLLY OWNED INDIAN COMPANIES தயாரிக்கும் தயாரிப்புகளை மட்டுமே வாங்கவும்
2. இந்த முயற்சியில் முடிந்தவரை பலரைச் சேர்க்கவும் .....
ஒவ்வொரு நபரும் இந்த விழிப்புணர்வுக்கு ஒரு தலைவராக மாற வேண்டும். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மையும், நம் நாட்டையும் காப்பாற்ற இது ஒன்றே நம் எல்லோராலும் இயன்ற ஒரே வழி.
உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் கைவிட தேவையில்லை. நீங்கள் ஒரு மாற்று தயாரிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
ஏற்க மற்றும் தவிர்க்க வேண்டிய தயாரிப்புகளின் பட்டியல், ஒரு புரிதலுக்காக:
குளிர்பானம்:-
எலுமிச்சை சாறு, இளநீர், புதிய பழச்சாறுகள், குளிர்ந்த லாசி , பட்டர் பால், தேங்காய் நீர், ஜல் ஜீரா, மசாலா பால், மோர்
தவிர்க்க வேண்டியவை
கோகோ கோலா, பெப்சி, லிம்கா, மிரிண்டா, ஸ்பிரைட்......
பாத் சோப்: -
சிந்தோல் மற்றும் பிற கோத்ரேஜ் பிராண்ட்ஸ், சாந்தூர், விப்ரோ ஷிகாக்கி, மைசூர் சந்தல், மார்கோ, நீம், எவிடா, மெடிமிக்ஸ், கங்கா, நிர்மா பாத் மற்றும் சந்திரிகா ஆகியவை.....
தவிர்க்க வேண்டியவை
LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, LESANCY, CAMAY, PALMOLIVE.......
டூத் பேஸ்ட்: -
NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MESWAK , pathanjali products பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.
டூத் பிரஷ்: -
PRUDENT, AJANTA, PROMISE ஐப் பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B
சவரக்குழைவு:-
கோத்ரேஜ், எமாமியைப் பயன்படுத்துங்கள்
தவிர்க்க வேண்டியவை
பாமோலிவ், ஒல்ட் ஸ்பைஸ், கில்லட்..
பிளேட்: -
சூப்பர்மேக்ஸ், டோபாஸ், லேசர், அசோகா ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்
தவிர்க்க வேண்டியவை
செவன்-ஓ-க்ளாக், 365, கில்லெட் .....
டால்கம் பவுடர்: -
சாந்தூர், கோகுல், சிந்தால், விப்ரோ பேபி பவுடர், போரோப்ளஸ்... ஆகியவற்றைப் பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
ஓல்ட் ஸ்பைஸ், ஜான்சன் & ஜான்சன் பேபி டால்க், ஷவர் டு ஷவர்.....
பால் பௌடர்:-
இந்தியா, அமுல், அமுல்யாவைப் பயன்படுத்துங்கள்
தவிர்க்க வேண்டியவை
அனிக்ஸ்ப்ரே, மில்கானா,
எவ்ரிடே மில்க், மில்க்மெய்ட்.....
ஷாம்பு: -
LAKME, NIRMA,, VELVETTE ஐப் பயன்படுத்தவும்
தவிர்க்க வேண்டியவை
ஹாலோ, ஆல் கிளியர், நைல், சன்சில்க்,
ஹெட் & ஷோல்டர்ஸ், டோவ் ,பாண்டீன்...
மொபைல் தொடர்புகள்: -
பிஎஸ்என்எல், ஏர்டெல்... ஜியோ, பயன்படுத்தவும்.
உணவு பண்டங்கள்:-
தந்தூரி சிக்கன், வட பாவ், இட்லி, தோசை, பூரி, உப்புமா.... சாப்பிடுங்கள்
தவிர்க்க வேண்டியவை
KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W....
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இந்திய தயாரிப்புக்கும், நமது பொருளாதாரம் மிகப் பெரிய வித்தியாசம் காணும். இது இந்தியாவை வீழ்ச்சியில் இருந்து காக்கும். இன்று ஒரு உறுதியான முடிவை எடுப்போம்.
இந்தியராக இருக்க, வாங்க, நாம் வெளிநாட்டு தயாரிப்புகளுக்கு எதிரானவர்கள் அல்ல.
நாம் நம்மை மற்றும் நம் தேசத்தை காப்பாற்ற முயற்சிக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒரு உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பல உயிர்களை இழந்து, தியாகங்கள் பல செய்து,மிகுந்த முயற்சிக்குப் பிறகு நாம், நம் விருப்பத்தை அடைந்தோம்.
நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு வாழ்கிறோம் என்பதை உறுதிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு. தற்போதைய போக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தில் உலகமயமாக்கலை நுழைக்கின்றன.
நம் நாட்டை பொறுத்தவரை, இது இந்தியாவின் மறு-காலனித்
துவமாகும். காலனிஸ்ட்டுகள் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர், ஆனால் பொருளாதார காலனிஸ்ட்டுகளாக களம் இறங்கி உள்ளனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: பொருளாதார சுதந்திரம் இல்லாமல் அரசியல் சுதந்திரம் பயனற்றது
ருஷியா, தென்கோரியா, மெக்ஸிகோ...... பட்டியல் மிக நீண்டது !! அவர்களின் அனுபவத்தில் இருந்தும் மற்றும் நம் வரலாற்றில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு உண்மையான இந்தியனும் தன் கடமையை செய்யட்டும்.
நமக்காக, நம் நாட்டிற்காக குறைந்த பட்சம் வெளிநாட்டுப் பொருட்கள் வாங்குவதை விட்டுக் கொடுங்கள். இந்த விழிப்புணர்வை உருவாக்க இந்த குறிப்பை உங்கள் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து, செயல் படுத்தி பயனுற செய்யுங்கள் ... !!
சிறு துளி,பல சேர்ந்தால் பெரு வெள்ளம்,ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
ஒரு இந்தியராக முயற்சி செய்யுங்கள், முயன்றால் முடியும்! 🙏🙏
மெட்ராஸ் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத, எந்த ஒரு படிப்பறிவும் இல்லாத, நாலாம் கிளாஸ் கூட போகாத, 80 வயது மூதாட்டி தான் இட்லி சுட்டு சிறுது சிறிதாக சேத்து வைத்திருந்த பணத்தில் ஒரு 60 லட்சத்தை எடுத்து போட்டு 60 சதவீத பங்குகளுடன் வெறும் ஒரு கோடியில் ஆரம்பித்த( கலைஞர் ) நிறுவனத்துக்காக முன் பின் தெரியாத , தமிழே தெரியாத ஒரு வட நாட்டு காய்கறி கடைகாரனின்
எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் 200 கோடி கடன் வாங்கி விட்டு
( அதை சிபிஐ கண்டு பிடித்து கேட்ட உடன் )
வட்டி உடன் திருப்பு செலுத்தும் அளவுக்குஅதாவது
"ஒரு கோடியை வைத்து ஒரே ஆண்டில் 214 கோடி" அளவுக்கு லாபம் ஈட்டும் அளவுக்கு
இந்த நாட்டில்
பெண்கள் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கியது
கலியக நரகாசுரன் #கருணாநிதி ஆட்சியில் தான்.
ஒன்றிணைவோம் வா.
Image may contain: 1 person, sky and closeup

வைரஸுடன் வாழப் பழகிக் கொள்ள ( கொல்ல ) வேண்டும்... வாங்க பழகலாம் ...

பழகுவதில் நம்மை மிஞ்ச யார் இருக்கா இந்த பூமியில் ?
இது என்ன புதுசா நமக்கு ?
என்னமோ , இந்த நோய்க்கு மட்டும் தான் மருந்து ( அல்லோபதி) கண்டு பிடிக்கவில்லை என்பது போலவும் , இந்த ஒரு நோயை மட்டும் தான் குணமாக்க வழியே இல்லை என்பது போலவும் ஒரு மாயை உருவாக்கப் படுகிறது - எதிலும் , எப்போதும் அரசியல் !!!
ஏற்கனவே பழகி பழகி , நம்முடன் நட்புடன் இருக்கும் நோய்கள் பலவுண்டு. மருந்தே இல்லை- இல்லவே இல்லை ...
குணப்படுத்தவே முடியாது - கூடவே வைத்துக் கொள்ளலாம்.
1. இரத்த அழுத்த நோய் (BP ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
2. நீரிழிவு நோய் ( Diabetic ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
3. தைராய்டு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
4. சிறுநீரக கோளாறு - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
5. இருதய நோய்கள் - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
6. வயிற்றுப புண் ( Ulcer ) - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
7. ஆஸ்த்மா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
8. டெங்கு , சிக்கன் குன்யா - மருந்தில்லை ; நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்.
இப்படி எதற்குமே மருந்து இல்லாமல் , நோயுடன் வாழப் பழகிக் கொண்டோம்...
காரணம் - மருத்துவம் என்றாலே ஆங்கில மருத்துவம் - நவீன மருத்துவம் - ஆதாரப் பூர்வமானது - உயிர் காக்கும் மருத்துவம் என்று மக்கள் நம்பியது . மருத்துவம் தவறான பாதையில் பயணிக்கிறது , நாமும் அதன் தோளில் ஏறி சவாரி செய்கிறோம் என்பதை உணர்த்தும் தருணம் இது ...
மருந்து என்றால் குணப்படுத்த வேண்டும் - கட்டுப்படுத்த கூடாது.
இரத்த அழுத்தம் - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
சர்க்கரை அளவு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
கொலஸ்ட்ரால் அளவு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
இதயத்துடிப்பு - கட்டுக்குள் இருக்க வேண்டும் - தினமும் மாத்திரை...
இந்த அளவீடுகள் எல்லாம் ஏன் அதனதன் இயல்பு நிலையில் இருந்து மாறுபடுகின்றன. என்ன காரணம் ? யோசிக்க நமக்கு ஏது நேரம் . ஒரு பிரச்சினைக்கான (நோய் ) காரணத்தைக் கண்டுபிடித்து, அதற்கான தீர்வை (மருத்துவம்) தேடாமல் - பிரச்சினையை (நோயை) கட்டுக்குள் வைப்பது என்ன விதமான வைத்திய முறை.
சந்தையில் (Market) விற்பதை எல்லாம் நாம் வாங்கிக் கொள்வது இல்லை ...நமக்கு என்ன தேவையோ அதை தான் தேடி வாங்கி வருகிறோம். அது போல எதை அதிகமாய் கேட்கிறோமோ (Demand ) அது தான் சந்தைப்படுத்த பட வேண்டும். நமது அவசர ( சோம்பேறித்தனமான) வாழ்க்கை முறை - அதை அனுமதிப்பதில்லை. மக்கள் காரணமும் , விளக்கமும் , தீர்வும் தேட ஆரம்பித்தால் - ஒரு வேளை , நிலைமை மாறலாம். மருந்து மட்டும் அல்ல... எல்லாப் பொருட்களும் , நமக்கு தேவையோ இல்லையோ - நம்மிடம் விற்கப்படுகின்றன.
நோயுடன் மட்டுமா வாழப் பழகிக் கொண்டோம்...
பண மதிப்பிழப்பு - வாழப் பழகிக் கொண்டோம்...
பெட்ரோல் விலை உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
சுங்கச்சாவடி கட்டண உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
மின் கட்டண உயர்வு - வாழப் பழகிக் கொண்டோம்...
கூடங்குளம், ஸ்டெரிலைட், LG பாலிமெர்ஸ் - வாழப் பழகிக் கொண்டோம்...
லஞ்சம் கொடுக்க பழகிக் கொண்டோம்
இன்னும் இன்னும் ....
நமக்கா சொல்லித் தர வேண்டும் - பழகிக் கொள்ள ...
வைரஸுடன் பழகி - கொல்வோம் !!!
வெல்வோம் !!!

*‘’குறிக்கோளற்ற வாழ்க்கை"*

நம்முடைய கனவு மற்றும் கற்பனைக்கு தெளிவான செயல் வடிவம் கொடுக்கும் போது குறிக்கோளால் ஆகிறது.
நமக்கான குறிக்கோளை ஒன்றை வகுத்துக் கொண்டு அந்த இலக்கை அடைய நாம் வழி காண வேண்டும்.
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டு கொண்டு இருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; அந்த கனவை நோக்கி பயணம் செய்ய வேண்டும்.
நம் இலக்குகளில் இருந்து பின்னோக்கி நகர்த்த பல இடையூறுகள் வர நேரிடும். நம் கனவுகளையும் சாத்தியமாக்க முடியாமல் போகும்.
குறிக்கோளற்ற வாழ்க்கை, நூலறுந்த பட்டம் போல, துடுப்பு இழந்த படகு போல, எந்தத் திசையில் வேண்டும் என்றாலும் செல்லலாம். ஆனால், ஆசைப்படும் இலக்கை அடைய இயலாது.
*என் குறிக்கோள் இதுதான்* என நமக்கு நாமே பிரகடனம் செய்யும்போது, அதை அடைவதில் முனைப்பும், மன உறுதியும் பிறக்கும்
விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு, பல நூறு மைல்கள் தூக்கிச் செல்ல, ராக்கெட்டில் உள்ள எரிசக்தியை பயன் படுத்துவது போல,
நம் குறிக்கோளை அடைவதற்கு உந்து சக்தியாக இருப்பது, அதன் மேல் வைத்து இருக்கும் தீவிர ஆசைதான்.
குறிக்கோளின் மீது நீங்கள் வைத்திருக்கும் ஆசை, உங்களை ஓய்வெடுக்க விடாது, உறங்க விடாது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் அலுப்புத் தட்ட விடாது.
எத்தனை மணி நேரம் உழைத்தாலும் சோர்வடைய விடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அவமானப் படுத்தினாலும், இளக்காரமாகப் பேசினாலும் மனதைத் தளர விடாது.
கனவுகளை சாதித்துக் காட்டிய பல சாதனையாளர்கள் இந்த உலகை இன்னும் ஆண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களின் வார்த்தைகளும், செயல்களுமே நமக்கு எப்போதும் உந்துதல் சக்தி ஆகும்.
அப்படி உங்களை ஈர்த்த தலைவர்கள், சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள்.
அவர்களின் உழைப்பு, துயரங்கள், பொறுமை, அவமானம், இறுதியில் அவர்கள் எட்டிய வெற்றி போன்ற விதம் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
சோர்வாக இருக்கும்போது, அவர்களின் சாதனைகள், கடந்து வந்த பாதைகளை ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.
ஆம்..
நண்பர்களே...
நமது வாழ்வில் வெற்றி பெறக் குறிக்கோள் மட்டும் போதாது. அதை அடைய வேண்டும் என்ற தாளாத ஆர்வமும் இருக்க வேண்டும்.
எந்த செயலும், நம்மால் உறுதியாக செய்ய முடியும் என்று நம்முடைய மனதில் மேலோங்கி நிற்க வேண்டும்.
அந்த நம்பிக்கைதான் *குறிக்கோளின் வெற்றி''யை நம் வசமாக்கும்.*

கட்டுப்பாடு அல்லாத பகுதிகளுக்கு வரும் 8 முதல் பல தளர்வுகள்...

 நாளை முதல், ஜூன் 30 வரை, பொது ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், ஷாப்பிங் மால், வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், வரும், 8ம் தேதியிலிருந்து திறக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளியூர் செல்வதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பெற்றோர் சம்மதத்தை கேட்டு, பள்ளி, கல்லுாரிகளை திறப்பது குறித்து, ஜூலையில் முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும், தொற்று பரவல் நிலைக்கேற்ப, எந்தெந்த இடங்களில் தளர்வுகளை அறிவிக்கலாம், எங்கு கட்டுப்பாட்டை தொடர வேண்டும் என்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும், மத்திய அரசு கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, மார்ச், 24ல், நாடு தழுவிய பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அடுத்தடுத்த நாட்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. நான்காம் கட்ட ஊரடங்கின்போது, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த ஊரடங்கு இன்று முடிவடையும் நிலையில், அதை நீட்டிப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன், சமீபத்தில் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்; பின், முதல்வர்கள் தெரிவித்த கருத்துக்களை பிரதமர் மோடியிடம் விளக்கினார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக அதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதன் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பாக புதிய விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய சட்டத்தின் கீழ், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், ஜூன், 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

* கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில், வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால், விருந்தோம்பல் துறை ஆகியவை, ஜூன் 8ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவை செயல்படும்போது, போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு அம்சங்கள், சமூக விலகல் ஆகிய நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

* பள்ளி, கல்லுாரி, பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை துவக்குவது குறித்து, சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் ஆலோசித்து, நிலைமைக்கு ஏற்றபடி, ஜூலை மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும்.

* மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. இதற்காக, தனியாக அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை.
அதேநேரத்தில், வைரஸ் பாதிப்பின் அடிப்படையில், மாநில அரசுகள் மற்றும் சுகாதார அதிகாரிகள், போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்க விரும்பினால், அது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான சரக்கு போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை.

*வைரஸ் பரவலின் சூழலை அடிப்படையாக வைத்து, நிலைமைக்கு ஏற்ப, எதிர்காலத்தில், சர்வதேச விமான போக்குவரத்து, மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பொழுது போக்கு பூங்கா, கருத்தரங்கு கூடம், சமூக கூடங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

* வைரஸ் பாதிப்பு பகுதிகளில், தனிநபர் நடமாட்டத்துக்கு, இரவு, 7:00 மணியிலிருந்து, காலை, 7:00 மணி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது தளர்த்தப்பட்டு, இரவு, 9:00 லிருந்து, அதிகாலை, 5:00 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.

* தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதற்கான சிறப்பு ரயில், உள்நாட்டு விமான போக்குவரத்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான விமான போக்குவரத்து ஆகியவை வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்.


வைரஸ் பாதிப்பு சூழலை அடிப்படையாக வைத்து, கட்டுப்பாட்டு பகுதிகளை, அந்தந்த மாவட்ட அதிகாரிகளே வரையறை செய்யலாம். கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த பகுதிகளில், பரிசோதனை, கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைளை தீவிரப் படுத்த வேண்டும்.
வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதி, குறைவாக உள்ள பகுதிகளை, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே அடையாளப்படுத்தலாம். பாதிப்பு எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து, எந்தெந்த தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது குறித்து, மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.
முக கவசம் அணிவது, சமூக விலகல் நடைமுறை ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோர் மீது, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோருடன் ஆலோசிக்க உத்தரவு


ஆகஸ்டில் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஜூலையில் பெற்றோருடன் கலந்தாலோசனை நடத்தி, அவர்கள் சம்மதம் பெற்ற பின்னரே திறக்கும் தேதியை முடிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியே வராதீங்க


ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Friday, May 29, 2020

நமது மக்கள் உழைத்து வாழ விரும்புவதில்லை.

சேலத்தில் நல்ல பிரபலமான ஹோட்டல்!
நடத்துபவர் தமிழர், சப்ளை மற்றும் கிளீனிங் ஒருவர் கூட தமிழ் ஆட்கள் இல்லை, ஆர்டர் எடுப்பவர்கள் மட்டும் தமிழர்கள்!
ஏங்க இப்படி?
நம்ம ஆட்கள் இந்த வேலைகளுக்கு வரமாட்டேங்குறாங்க, வந்தாலும் ஒழுங்கா வேலைக்கு வருவதில்லை!
சிமெண்ட் மற்றும் கம்பிகள் கடை!
இதே நிலை, நம்ம ஆளுங்க வெயிட் தூக்க சலிப்பு, வேலைக்கு ஒழுங்கா வருவதில்லை!
இதே போல பற்பல சிறுதொழில் நிறுவனங்கள் வடநாட்டான் 6 நாள் வேலை செய்கிறான், நம்ம ஆளுங்க நாலு நாள் கூட வருவதில்லை, தொழில் பக்தியும் இல்லை! ஓவரா கடன் கேட்டு தொல்லை செய்கிறார்கள் என தமிழ் முதலாளிகளே புலம்புகிறார்கள்!
அப்படியே இஸ்லாமிய நிறுவனங்கள், கடைகள் எப்படி என்று பார்த்தால் வேலை செய்பவர் அனைவரும் இஸ்லாமியர்களே, மதச்சார்பற்ற தமிழனுக்கு கூட அங்கே வேலை இல்லை!
ஆனால் இங்கே தொழிலை வடநாட்டான் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துவதாக மேடையில் தூண்டி விட்டால் கை தட்டி விசிலடித்து வாய்ப்பு கிடைத்தால் வடநாட்டானையும் அடிக்கலாம்னு வன்மத்தோடு ஒரு கூட்டம்!
எவனும் ஏன் வேலைக்கு போகலை, ஒழுங்கா வேலைக்கு போ, சம்பாதி, குடும்பத்தை காப்பாத்துனு மேடை போட்டு சொல்ல வக்கில்லை!
போதாக்குறைக்கு குடிப்பழக்கம் பெருகிவிட்டது, குடியும், சினிமாவும் சேமிப்பு காசை சீரழிக்கின்றன!
இப்பவே திருந்தினால் உண்டு, இல்லையேல் ரொம்ப கஷ்டம் !

*ஜெயலலிதா சொத்து: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு*

*வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றிக்கொள்ள உயர்நீதிமன்றம் பரிந்துரை*
*மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை*
*மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை*
*ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு*
*ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்தது*
*பரிந்துரை குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு*

சில நியாயங்களும், சில தர்மங்களும்..

மெட்ராஸ் ஏர்போட்டைவிட்டு லக்கேஜ் உடன் வெளியே வந்து ஆட்டோ பேசினேன் பெருங்களத்தூருக்கு...
காரணம் கோயம்பேட்டில் இருந்து வரும் வெளியூர் பஸ் எல்லாம் பைப்பாஸ் வழியே கின்டி வராமல் நேராக பெருங்களத்தூர் செல்கிறது..
நான் சிதம்பரம் போகவேண்டும்..
ஆட்டோ....பெருங்களத்தூர் எவ்ளோப்பா..? என்றேன் 500-ரூபாய் என்றான்...
400-ரூபாய்க்கு வருவியா என்றேன்,.. சா....ர் கேட்டுப்பாருங்க சார்..
சரி சார் 450-ரூபாய் ஏறுங்க சார் என்றான்...
மெட்ராஸ்க்கே உரிய ஸ்டைலில் ஆட்டோ பறந்தது... பல்லாவரம் தாண்டியது...
ஏம்பா தம்பி நீ இந்த வழியா சவாரி போனா எங்க காலை டிபன் சாப்பிடுவ...? என்றேன்... ரோட்டுக்கடைத்தான் சார் என்றான்..
அப்ப நீ சாப்பிடும் கடை எதுவோ அங்க நிறுத்து டிபன் சாப்பிட்டு போவோம் என்றேன்...
இரண்டு கிளோமீட்டர் தாண்டி ஒரு புளியமர ஓரமா இருந்த தள்ளுவண்டி கிட்ட ஆட்டோ நின்றது..
ஒரு நடுத்தரவயது அம்மா.. நெற்றி நிறைய திருநீறு.. பொட்டு இல்லை...கழுத்தில் தாலி இல்லை விதலை என சொல்லியது தோற்றம்... வாங்க சார் என்றாள்.
இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பன்னாது என்றான்....
இட்லி... வடை... பொங்கள்... பூரி... மசாலா டீ.. என கட்டினோம்..
எவ்ளோம்மா என்றேன்..?
150-ரூபாய் சார் என்றாள் 200-ரூபாய் கொடுத்தேன்...
மீதி சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா...ஞாயிற்றுகிழமை ஆபீஸ், கடை, பேக்டரி எல்லாம் லீவுனால வியாபாரம் இன்னிக்கு டல் சார் என்றாள்...
சரிம்மா 50-ரூபாய வச்சிக்க, நாளைக்கு இந்த பக்கமா வருவேன் வாங்கிக்கிறேன்.. என்று கூறி புறப்பட்டோம்...
ஆட்டோக்காரர் கேட்டார்..! சார் நீங்க சிதம்பரம் போறீங்க.. நாளைக்கு வருவேன்னு 50-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க என்றான்..?
தம்பி இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹேட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 500-ரூபாய் அப்புறம் டிப்ஸ், டாக்ஸ் என 600-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா....?
எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்தமாதிரி ஆளுங்களுக்கு நாம உதவனும் தம்பி.. என்றேன்.
_சங்கம் அமைப்பது.. வசூல் செய்வது... அதன்மூலம் பொதுசேவை செய்வது.. புண்ணிய தலங்கள் செல்வது, நன்கொடை கொடுப்பது.. உண்டியலில் போடுவது என இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை..தம்பி நடைமுறை வாழ்க்கையிலே இப்படியும் தேடலாம்பா என்றேன்..
ஹைவேயில் ஓரமாய் மரங்கள்... தெடர்ந்து வரும் ரயில்வே லைன்.. பயணிகள் பஸ்.. லாரி.. கார்... அத்துடன் இளங்காலை காற்று இதமான சவாரி கடந்து..._
பெருங்களத்தூர் வந்தது... இந்தாப்பா நீகேட்ட 450-ரூபாய் என எடுத்துக்கொடுத்தேன்..
400-ரூபாய் போதும் சார் என்றான்....!
ஏம்பா என்றேன்...?
அந்த 50-ரூபாய் உங்கக்கிட்ட இருந்தா நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி செய்வீங்க சார், அதன்மூலம் எனக்கும் புண்ணியம் கிட்டட்டும் சார் என்றான்...!
நான் போடும் புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு...!
"தொடரட்டும் நமது புண்ணிய கணக்குகள்"
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள்.

நாம் சொல்லவந்தது காமராஜர் எனும் அந்த அபூர்வ முதல்வர்.

ஜெயலலிதாவின் வீடு தீபாவுக்கு என்பதையும், ஒரு பகுதி அவர் நினைவகம் என்பதையும் சொல்லிவிட்டு தீர்ப்பை முடித்துவிட்டது நீதிமன்றம்
முன்னாள் முதலமைச்சர் வீடு பேசபடும் பொழுது அதற்கு முந்தைய முதல்வர் ஒருவரின் வீடும் நினைவுக்கு வரும்
அது கோபாலபுரம் வீடு அல்ல, அது வில்லங்கமான அறிவிப்பு, எனக்கு பின் இந்த வீடு மருத்துவமனைக்கு என எழுதி வைத்து கருணாநிதி வாசித்ததெல்லாம் வழக்கமான திராவிட புரட்டு
ஆம், அவருக்கு பின் அந்த வீடு முரசொலி அறக்கட்டளைக்கு செல்வதாகவும் அதில் மருத்துவமனை இயங்கும் என எழுதிவைத்துவிட்டார் கருணாநிதி
கருணாநிதிக்கு பின் அது எங்கே போனது? முரசொலி அறக்கட்டளைக்கு போனது, அதன் நிர்வாகி யார்? உதயநிதி
ஆக தாத்தா பேரனுக்கு எழுதி வைத்த சொத்துதான் அந்த அறிவிப்பு, அதையும் வீட்டையும் தமிழ்நாட்டுக்கு கொடுத்தார் கருணாநிதி என சொல்லி கொள்ளும் உடன்பிறப்புக்கள்
நாம் சொல்லவந்தது காமராஜர் எனும் அந்த அபூர்வ முதல்வர்
அவருக்கு சென்னையில் வீடு கிடையாது, அப்பொழுது கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனும் கிடையாது
அரசியல் நாடோடியான காமராஜர் சென்னையில் அவர் குரு சத்தியமூர்த்தி வசித்த வீட்டில் வசித்திருக்கலாம், அப்படியே நிச்சயம் அபகரித்திருக்கலாம் , ஆனால் அங்கு ஒரு நாள் கூட காமராஜர் தங்கியதில்லை
மாறாக எங்காவது கட்சிக்காரர் வீட்டு திண்ணையில் தங்குவதும், இல்லை "எக்ஸ்பிரஸ்" பத்திரிகை
அலுவலக மாடியில் இருந்த கட்சி அலுவகத்தில் தங்குவதுமாக காலம் கழிந்தது
அவர் என்ன நடித்து சம்பாதித்துவிட்டு, எழுதி சம்பாதித்துவிட்டு இல்லை ரியல் எஸ்டேட் நடத்திவிட்டு அரசியலுக்கு வந்தாரா?
காலமெல்லாம் கட்சி, காந்தி, நாடு, விடுதலைபோராட்டம் , மக்கள் சேவை என வாழ்ந்த ஆண்டியிடம் என்ன இருக்கும்?
1946ல்தான் இப்போதுள்ள வீட்டில் காமரஜர் கட்சிக்காரர்களால் தங்க வைக்கபட்டார், காரணம் அவர் அப்பொழுது காங்கிரஸ் தலைவர், அவருக்கு உதவியாக சமையல்காரன் வைரவனும் அமர்த்தபட்டார்
காமராஜர் வாரத்தில் பல நாட்கள் பரதேசியாக சுற்றுவார் , எப்பொழுதாவதுதான் வருவார். வீட்டு வாடகையினை கட்சி செலுத்தி வந்தது
1954ல் முதல்வரானதும் அரசு சார்பில் வீடு ஒதுக்கபட்டது, அது புறநகரில் இருந்ததாலும் சென்றுவர நேரம் என்பதாலும் மறுத்து இந்த வீட்டிலே இருந்தார் காமராஜர், வாடகையாக 160 ரூபாய் கொடுக்கபட்டது
இந்நேரம் வீட்டு உரிமையாளருக்கு சிக்கல் வந்தது, அந்த பங்களா வீடு பெரும் வாடகைக்கு செல்ல கூடியது, அக்கம் பக்கம் 800 ரூபாய் வாடகை வந்தபோதும் காமராஜருக்காக 250 ரூபாயாக உயர்த்தினார் அவர்
அவருக்கும் 800 ரூபாய் வாங்க ஆசைதான், அரசு சம்பளக்காரன் இவ்வளவுதான் கொடுக்கமுடியும் , வாடகை படி அவ்வளவுதான் என சொல்லி அரசு பணத்திலும் சிக்கனம் பார்த்தார் காமராஜர்
அரசு பணத்தை அள்ளி எறியும் தமிழகத்தில் அன்று அப்படியும் ஒரு அரசியல்வாதி இருந்திருக்கின்றான்.
பின் 1956ல் அந்த வீட்டை அரசுக்கே விற்க முன்வந்தார் கோவிந்த ராஜூ எனும் அதன் உரிமையாளர், விலை 60 ஆயிரம் ரூபாய்
காமராஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா "இவ்வளவு ரூபாய்க்கு எனக்கு வீடா? இதற்கு பதில் பத்து பள்ளி திறக்கலாம், வீடு வேண்டாம்"
அந்த வீட்டு உரிமையாளர் பாடு திண்டாட்டமாயிற்று, காமராஜரை தவிர யாருக்கும் விற்க மனமில்லை ஆனால் சொந்த சிக்கல்கள் அவரை விற்கும் முடிவுக்கு தள்ளின , முடிவில் அடமானம் வைத்தார்
அதை எடுத்தவர் பாப்பா லால் எனும் மார்வாடி, அவனுக்கோ வீட்டில் காமராஜர் இருப்பது தெரியாது, சென்னையினை அதிகம் அறிந்தவனுமல்ல , சொத்து அடமானம் வந்தது வாங்கினான்
வாடகையினை காமராஜர் கட்டி கொண்டிருந்தார்
அப்பொழுது திமுகவின் பிரச்சாரம் என்ன தெரியுமா?
"மாடி வீட்டு கோமான் காமராஜரின் சொந்த பங்களாவினை பாருங்கள், இவரா எளியவர் கஷ்டம் அறிவார், பார்ப்பண கோடீஸ்வரர்கள் விருந்துண்ணும் அரண்மனை அது"
காமராஜர் கண்ணீர் விட்டார், "இது வாடகை வீடு, யாரும் வந்தால் சாப்பிட கூட சொல்லமுடியா வசதி இல்லா வீடு"
ஆனால் அதை யார் பொருட்படுத்தினார், திமுக கடும் அழிச்சாடியம் செய்தது
1972ல் நாகர்கோவில் இடைதேர்தலில் இந்த வீட்டு படமே வடசேரி நுழைவாயிலில் கருணாநிதியால் வைக்கபட்டு "ஏழைபங்காளனின் வீட்டை பாருங்கள்" என பிரச்சாரம் செய்தது
இவ்வளவு நடந்தும் முக ஸ்டாலின் திருமணத்துக்கு முதல் ஆளாக வந்திருந்தார் காமராஜர்.
1973ம் வருடம் அப்பொழுது காமராஜர் பதவியில் இல்லை, வீடு ஏலத்துக்கு வந்தது, அப்பொழுது வீடு காமராஜருக்கு என அறிந்த அந்த வடநாட்டு மார்வாடி இலவசமாக காமராஜருக்கே விட்டுகொடுக்க முன்வந்தார், ஆனால் மறுத்தார் காமராஜர்
ஆம் வடநாட்டு மார்வாடியே காமராஜருக்கு இலவசமாக வீடு வழங்க முன்வந்தபின்புதான் காங்கிரஸ் சிங்கங்களுக்கு ரோஷம் வந்தது
வீட்டின் விலை 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், இதை தமிழ்நாட்டில் வசூலித்து கொடுக்க குழு அமைக்கபட்டது
காமராஜர் தெளிவாக சொன்னார், என் பெயரில் வீடுவேண்டாம் அப்படி இருந்தால் என் தங்கை குடும்பம் வாரிசாக வரும், கட்சி பெயரில் இருக்கட்டும் எனக்கு பின் வைரவன் அங்கே உரிமையாக தங்கட்டும், எனக்கு சோறு போட்டவன் அவனே
என் அன்னை கையினை விட அவன் கைகளே அதிக காலம் சோறு போட்டது, அவனை அனாதையாக விட்டுவிடாதீகள்"
காங்கிரஸில் வசூல் நடந்தது 1 லட்சம் திரட்டி கொடுக்கபட்டு, மீதி திரட்டும் முன் காமராஜர் மரித்தார்
ஆம் வாடகை வீட்டில் ஒரு பரதேசி கோலத்தில் செத்துகிடந்தார் காமராஜர்
எந்த வீட்டில் வாடகைக்கு சில வேட்டி சட்டையுடன் மட்டும் வாழ்ந்தபோதும் திமுகவினரால் சொந்தவீட்டில் சொகுசு வாழ்வு என பழிக்கபட்டாரோ? அங்கேயே செத்து கிடந்தார்
அவர் நினைத்தால் அந்த வீட்டை வாங்கியிருக்கலாம், அரசு பணத்தில் அல்ல, தனக்கு நன்கொடையாக கிடைத்த பணத்தில் வாங்கியிருக்கலாம்
ஆனால் தனக்கு எதுவும் அடையாளமாகிவிட கூடாதென நினைந்து அந்த நன்கொடை பணத்திலும் கட்சிக்கு நிலம் வாங்கி போட்டார், அதுதான் இன்றிருக்கும் சத்யமூர்த்தி பவன்
துறவிகள் தங்கள் கையில் எதுவும் வைத்திருக்கமாட்டார்கள், திருவோடு கூட சிலருக்கு இருக்காது
காமராஜர் அவ்வகையில் அரசியல் துறவி, அந்த கர்ம துறவியினை பழித்தே வளர்ந்த திமுகவுக்கு மோடி எம்மாத்திரம்?
அந்த வாடகை வீட்டிலும் தன் அன்னையினையோ உறவுகளையோ தங்க அனுமதிக்கவில்லை அந்த காமரஜர், எங்கே அவர்களால் தங்கள் மனம் மாறிவிடுமோ என அஞ்சினார்
அப்படியும் ஒரு துறவி இருந்திருக்கின்றான்
வாழும்பொழுது சொந்த வீடு அறியா காமராஜருக்கு எமர்ஜென்ஸி காலம் முடிந்து ராமசந்திரன் ஆட்சியில் இந்திரா மேலாதிக்கத்தில் அந்த வீடு வாங்கபட்டு காமராஜர் நினைவாலயம் ஆயிற்று
அவர் வீடு சொந்த வீடு என பொய் பிரச்சாரம் செய்த திமுக , தமிழக அரசு அந்த வீட்டை விலை கொடுத்து வாங்கி அது வாடகை வீடு என நிரூபித்தபொழுது கனத்த மவுனம் காத்தது
மவுனம் அவர்களின் தற்காப்பு ஆயுதம்
பின் காமராஜருக்கு மண்டபம், கல்வி நாள் என அவருக்கு செய்த கடும் துரோகத்துக்கும் வலிக்கும் பரிகாரம் தேடியது கருணாநிதியின் திமுக.
தன் குடும்பத்தின் 7 கிளைகளுக்கும் 7 தலைமுறைகு சேர்த்துவிட்டபின் 2012ல் கருணாநிதி சொன்னார் "காமராஜரை எதிர்த்து அரசியல் செய்ததற்கு நான் வருந்துகின்றேன்"
இந்த ஞானம் 1960லே இருந்திருந்தால் தமிழகம் எப்படி இருந்திருக்கும்?
ரமாவரம் தோட்டம் , கோபாலபுரம் வீடு, போயஸ் கார்டன் என எல்லாவற்றையும் நோக்கிவிட்டு காமராஜர் வாழ்ந்த அந்த வீட்டையும் நோக்குங்கள்
உங்களை அறியாமல் கண்ணீர் வரும்
மிகபெரும் தியாக வரலாற்றை தாங்கி நிற்கின்றது அந்த வீடு, இனிவரும் காலமெல்லாம் அந்த மனிதன் எவ்வளவு உன்னத தூய வாழ்வினை வாழ்ந்தான் என சொல்லிகொண்டே இருக்க போகும் வீடும் அதுதான்
காமராஜர் எனும் தியாக சுடரின் பெருமைகளை எந்நாளும் வீசிகொண்டிருக்கின்றது அந்த விளக்கு.
Image may contain: outdoor

நாய் நாய் ஊருக்குதான் உபதேசம் பொறம்போக்கு நாய்.

தினத்தந்தி முதல் பக்க விளம்பரம் என்றால் பல லட்சங்கள் ஆகும்.
இந்த பணத்தை வைத்து பள்ளிகளுக்கோ.. மருத்துவமனைக்கோ செலவு செய்திருக்கலாமே.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...