Wednesday, June 27, 2018

நீதிமன்றங்களைப்பற்றி கொஞ்சம் விபரமாக அறிந்து கொள்வோம்.

கிரிமினல் கோர்ட் என அழைக்கப்படும் குற்றவியல் நீதிமன்றம்.
சிவில் கோர்ட் என அழைக்கப்படும் உரிமையியல் நீதிமன்றம்.
இந்த இரண்டு வகைகளை பல பிரிவுகளாக கொண்ட நீதிமன்றங்கள் உள்ளன.
இதில், குற்றவியல் பிரிவில் மாவட்டம் மற்றும் மாநகரம் என பிரிக்கப்பட்டு அதிலும் பல பிரிவுகள் அடங்கிய நீதிமன்றங்கள் உள்ளன.
1. மாவட்ட நீதிமன்ற வகைகள்:
_______________________________
1. மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்
2. நீதித்துறை நடுவர் மன்றம்.
3. சிறப்பு நீதித்துறைக்குற்றவியல் நடுவர் மன்றம்.
4. முதன்மை குற்றவியல் நடுவர் மன்றம்.
2. மாநகர‌ நீதிமன்ற வகைகள்:
_______________________________
1. மாநகர குற்றவியல் நீதிமன்றம்.
2. மாநகர சிறப்புக்குற்றவியல் நடுவர் மன்றம்.
3. பெருநகர முதன்மை குற்றவியல் நடுவர் மன்றம்.
அது என்ன “நீதிபதி” என்றும் “நடுவர்” என்றும் இரு பெயர்கள்?
கீழமை நீதிமன்றங்களுக்கும் மேலான நீதிமன்றங்களில் நீதிபதி என்றே அழைக்கபடுவார்கள்.
கீழமை நீதிமன்றங்களில்... கிரிமினல் வழக்குகளை விசாரிப்பவர் "நடுவர்"" என்றும், "சிவில்" வழக்குகளை விசாரிப்பவர் "நீதிபதி" என்றும் அழைக்கபடுவார்கள்.

பட்டா வாங்குவது எதற்காக???

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர்
அலுவலகத்தில் பத்திரப்பதிவு
செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது
என்று நினைக்கக் கூடாது. பத்திரம்
தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே
இனி சொத்து நமக்குத்தான் சொந்தம்
என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா
வாங்குவது மிக அவசியம். அதிலும்
ஒருவரிடம் இருந்து சொத்து
முழுவதையும் வாங்காமல் ஒரு
பகுதியை மட்டும் வாங்கி இருந்தால்
உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு
விண்ணப்பித்துவிட வேண்டும்.
பட்டா பெயர் மாற்றம்;
*********************************
ஏனெனில் அவர் சொத்தின் ஒரு
பகுதியை மட்டும் விற்பனை செய்து
இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான்
இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு
தனியே பட்டா பெற வேண்டும்.
அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர்.
இந்த பட்டாவை உடனே பெறுவது
நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு
விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால்
நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து
உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து
பட்டா இருக்கும் என்பதால், சில
பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.
முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா
பெறாமல் இருந்தால், அவர்
தன்னுடைய பட்டா மூலம் நீங்கள்
வாங்கிய இடத்துக்கும் உரிமை
கொண்டாட நேரிடலாம். அவர்
வேறொருவருக்கு சொத்தை விற்பனை
செய்வதாக இருந்தாலும், அதன் மூலம்
உங்களுக்கு பிரச்சினை வரலாம்.
அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா
பெறாமல் இருப்பதால், தன்னுடைய
பட்டாவை சொத்து வாங்கும்
மற்றவரிடம் காண்பித்து முழு
சொத்தும் தனக்குரியது! என்று
சொல்லலாம்.
உட்பிரிவு பட்டா:
************************
அதன் மூலம் உங்களிடம் சொத்து
விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை
மறைக்கலாம். அல்லது நீங்கள்
வாங்கியிருக்கும் சொத்தின்
பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு
விற்றுவிட முயற்சிக்கலாம். அப்படி
விற்பனை நடந்துவிட்டால் சொத்தை
வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல்
நேரும். நீங்கள் உட்பிரிவு பட்டா
பெறாமல் இருப்பது அவருக்கு
சாதகமாக மாறி விடக்கூடும்.
அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு
பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால்,
அந்த சொத்து இரண்டு பாகமாக
பிரிக்கப்பட்டு விடும்.
உதாரணமாக சர்வே எண் 50/1–ல்
அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில்
நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும்
வாங்கினால், பட்டாவுக்கு
விண்ணப்பிக்கும்போது, சர்வே எண்
50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு
செய்து இரண்டு பட்டாவாக
மாற்றப்படும். அதாவது சர்வே எண்
50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு
ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய
மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு
உரிமையாளருக்கும், நிலத்தை
வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக
பட்டா கொடுக்கப்படும்.
கவனமாக இருக்க வேண்டும்:
******************************
***************
இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு,
தீர்வை, வரைபடம் போன்றவை
மாறுபடும். புதிய உட்பிரிவு எண்
அடங்கிய சர்வே எண் வரைபடத்தில்
குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன்
மூலம் அந்த சொத்தில் உங்கள்
எல்லைப்பகுதிகள் வரையறை
செய்யப்பட்டு இருக்கும். அதனால்
உங்கள் சொத்துக் குரிய உரிமை
உங்கள் வசம் வந்துவிடும். அதனால்
சொத்தின் ஒரு பகுதியை விற்பனை
செய்த உரிமையாளர் முழு
சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது
தவிர்க்கப்படும்.
அதே நேரத்தில் பாகப்பிரிவினை
வாயிலாக வந்த சொத்தை
வாங்குவதாக இருந்தால் பட்டா
விஷயத்தில் கவனமாக இருக்க
வேண்டும். அவர் பெயரில்தான் பட்டா
இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள்
எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக
பெயர் மாற்றம் செய்ய முடியும்.
காலம் தாழ்த்தக்கூடாது:
******************************
********
அப்படி இல்லாவிட்டால் அதுவும்
சிக்கலை ஏற்படுத்தி விடும்.
பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு
அவர் பட்டா வாங்காமல் இருந்தால்
குடும்பத்தின் உறுப்பினர்கள்
அனைவரும் உரிமை கொண்டாடும்
விதத்தில் பழைய பட்டா இருக்கும்.
அதில் இருந்து அவர் தனியாக
தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற
பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு
பரிசீலிக்க வேண்டும். அப்போது தான்
சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு
அவர் பெயரில் இருக்கும் பட்டாவில்
பெயர் மாற்றம் செய்ய சுலபமாக
இருக்கும்.
அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை
அடிப்படையில் பட்டா வாங்காமல்
இருந்தால் அத்தகைய சொத்தை
வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் பட்டாவை பிறகு
வாங்கிக்கொள்ளலாம் என்று காலம்
தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை
செய்தவர் ஒருவேளை
இறந்துவிட்டால் அவர் பெயரில்
இருக்கும் பட்டாவை உங்கள்
பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி
விடும். அவர்களுடைய வாரிசுகளின்
உதவியை நாட வேண்டியிருக்கும்.
அப்படி பெயர் மாற்றம் செய்வதும்
சிக்கலான விஷயமாகவே அமையும்.
எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும்
உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு
விண்ணப்பித்து விடுவது நல்லது.

விழித்திருப்பவனுக்கே உலகம் !

ஸ்டேட் வங்கி, ஜன தன் கணக்குகள், basic savings bank deposits (BSBD) கணக்குகள், பென்ஷன் கணக்குகள், சமூக சலுகைகளை அரசு தரும் கணக்குகள் மற்றும் மைனர் கணக்குகளுக்கு, குறைந்த பட்ச இருப்பு தொகை தேவை இல்லை என்று சொல்லி உள்ளது.
அது, குறைந்த பட்ச தொகையை அபராதமாக எடுத்து, நிறைய சம்பாதிப்பதாக வந்த செய்தியை அடுத்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், குழுவில் ஒருவர், ஒரு வயதான மூதாட்டி, தன்னுடைய பணத்தை, குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாமல், வங்கி வசம் இழந்து வருகிறார் என்று குழுவில் கட்டுரை போட்டிருந்தார். அதற்கான விளக்கம் இது.
இன்னும் விளங்க சொன்னால், basic savings bank deposits (BSBD) கணக்கு, முதலில் வங்கியில் ஆரம்பிக்க வேண்டும். அதாவது, இந்த கணக்கில் குறைந்த பட்ச இருப்பு தொகை தேவை இருக்காது. ஆனால், ATM கார்டு கொடுக்கும்போது, அதில் ஒரு நாளைக்கு 1௦௦௦௦ ரூபாய்தான் எடுக்க முடியும் என்ற நிபந்தனை வரலாம். அதனால், நம்முடைய குறைந்த பட்ச இருப்பு தொகையை ஸ்டேட் வங்கி எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால், முதலில் வங்கிக்கு சென்று, இந்த கணக்கை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின், கேஸ் agency வசம், வங்கி மானியத்தை இந்த கணக்கில் செலுத்த சொல்ல விண்ணப்பிக்க வேண்டும்( இதை உறுதி செய்து கொண்டு, புது கணக்கு ஆரம்பிக்க வேண்டும்). அது போல, வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கும்போது, எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கிறோம் என்று வங்கி மேலாளர் வசம் தெரிவித்து, தனக்கு குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாத கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னால்தான், அந்த கணக்கு ஆரம்பிக்கப்படும்.
வங்கியின், குறைந்த பட்ச இருப்புதொகை தொல்லையில் இருந்து தப்பிக்க இதுவே வழி. (இது ஸ்டேட் வங்கி மேலாளர் ஒருவர் சொன்ன தகவல்)
நம்முடைய ஸ்மார்ட் போனில், தினமும் கொடுக்கும் இலவச 1 ஜிபி டேட்டா காலியாகும்போது, மொபைல் நெட்வொர்க் என்ற ஆப்ஷனை ஆப் செய்து வைக்க பழகுவோம். அல்லது, குறைந்த பட்ச மெயின் கணக்கில் கை வைக்கும், நெட்வொர்க் கம்பெனி.
அது போல, பஞ்சாயத்து, கார்ப்பரேஷன், முனிசிபாலிட்டி தண்ணீர் இனி 5 நாள், 1௦ நாளுக்கு ஒரு முறைதான் என்று சொல்லும்போது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். அது போல, வங்கி, குறைந்த பட்ச இருப்புதொகை ஸ்கீம் கொண்டு வரும்போது, நாம் மேலே சொன்ன வழிமுறையை கடைப்பிடித்து, நம் பணத்தை, நாம்தான் காப்பாற்றி கொள்ள வேண்டும்.
விழித்திருப்பவனுக்கே உலகம் !

திட்டங்கள் மக்கள் மீது தினிக்கப்படுகின்றன...

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால் குறை ஜனநாயக அறிவை கொண்ட மக்கள் உள்ள நாடு.
*ஆண்டு 2009 நாடு சீனா...*
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்லிங் நகரில் அமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்திற்கு பயணிகள் வாகனங்களில் வந்து சேருவதற்காக விரைவு நெடுஞ்சாலை அமைக்க சீன அரசு திட்டமிட்டது.
இதற்காக அந்த பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. அரசுவிதிப்படி இழப்பீடு கொடுத்து அகற்றப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் வசித்து வந்த வாத்துப்பண்ணை உரிமையாளரான லூ பாஜென் என்பவர் தன் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டார். தான் அதிக செலவழித்து வீட்டை கட்டியதால் அதற்குரிய இழப்பீடு தேவை என வீட்டை காலி செய்ய மறுத்துவிட்டார் லூ பாஜென்
சீன அரசு அந்த வீட்டை மட்டும் அப்படியே விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் சாலை அமைக்க தொடங்கியது. லூ அந்த வீட்டிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார்.அந்த வீட்டை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டு இருபுறமும் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக அச்சாலையின் நடுப்பகுதியில் இவரது வீடு மட்டும் தனியாக உள்ளது உலகம் முழுக்க பிரபலமானது. ஆனாலும் போக்குவரத்து முறையாக தொடங்கப்படாமல் இருந்தது.
Image may contain: outdoor
*ஆண்டு2012 (3வருடங்களுக்குபிறகு)*
அக்கிராம தலைமை அதிகாரி சென் ச்செகாய் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு 2,20,000யூவான் இழப்பீட்டு தொகையை உயர்த்தி 2,60,000 னாக தர அரசு முன்வந்தது. இதனை ஏற்றுக்கொண்டு லூ பாஜென் வீட்டை காலி செய்தார். லூ பாஜென் அல்லாமல் அப்பகுதியில் வசித்து காலி செய்த அனைவருக்கும் தொகை உயர்த்தி தரப்பட்டது.
அவ்வீடு அப்புறப்படுத்தப்பட்டு நெடுஞ்சாலை நேராக போடப்பட்ட பின்னர் சாலை போக்குவரத்தை முறைப்படி தொடங்கியது சீன அரசு.
ஏன் சீன அரசு துணை வட்டாச்சியரை கொண்டோ, போலீசைக்கொண்டோ, விளம்பரவெறி கலெக்டரை கொண்டோ அவ்வீட்டை அகற்றாமல் 3 வருடம் காத்திருந்தது.?!
சீன சட்ட விதிகளின் படி "தனியார் ஒருவரின் நிலத்தை நில உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்க முடியாது.

"இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!


"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,
" தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!
"அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!
"அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!
"சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!
"அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது.
"அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!
இருந்தும் கோபம் தாளாமல்.....,
"லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.
"எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!
"அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,
"மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!
அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.
உடனே...,
" வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,
" பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!
மற்ற நாய்களும் குமயங்கியது
" இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,
" வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!
"இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!
"இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்"........,
அதற்கு புரிந்திருக்கும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1. தான் நுழைந்தது....,
" நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,
2. தன்னை சுற்றி இருந்தது........,
" தனது பிம்பங்கள் தான் என்று"....,
3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,
"தன் குரலின் எதிரொலி தான் என்று"......,
நீதி:
```````
"இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!
நாம் கோபப்பட்டால்....,
" பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!
அன்பு செலுத்தினால்.....,
" அன்பு கிடைக்கும்"......!!
"நீ எதை விதைக்கிறாயோ"....,
"அதுவே முளைக்கும்"...!!

என் தோழி, தங்கைகளுக்கு..........

உடை மாற்றும் அறையில் கேமரா இருப்பது எப்படி கண்டுபிடிப்பது??
1. உங்கள் மொபைல் போனில் யாரோ ஒருவருக்கு அழைப்பு கொடுங்கள். கேமரா இருந்தால் அழைப்பு செல்லாது 
2. உங்கள் மொபைல் போனில் வீடியோ வை ON செய்து அந்த அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்
3. உங்கள் மொபைல் போனில் யாரோ ஒருவருக்கு அழைப்பு கொடுத்து பேசி கொண்டு அறைக்குள் நுழைந்ததும் அந்த அழைப்பு நின்றாலோ, இடையூறாக ஒலி வந்தாலோ கேமரா இருப்பதாக அர்த்தம்.
உங்களை தாயாகவும், தங்கையாக, தோழியாக நினைத்து கூறுகிறேன் பாதுகாப்பாக இருங்கள்....
Respect All Women's

Great magician....

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது இந்தியா.
ஒரு வாரத்திற்கு தேவையான அந்நிய செலாவாணி மட்டுமே கையில் இருந்தது. பெட்ரோல், டீசல் தேவைகள் அதிகரிக்க தொடங்கிய காலகட்டம் அது . வரிவசூல் குறைவாக இருந்ததால் கடன் மேல் கடன் வாங்கி செலவு செய்யவேண்டிய நிலை .இந்திய பொருளாதாரம் திவால் நிலைக்கு சென்று கொண்டிருந்தது
.ஏற்கனவே இந்தியாவிடமிருந்த தங்க கையிருப்பும் காலியான சூழ்நிலையில் பொறுப்பேற்ற நரசிம்ம ராவ் தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்தி இந்திய பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டார் . இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தவாதியான
நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.

ஒரு வரி உண்மைகள்....

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…
*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!
*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!
*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!
*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!
*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!
*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!
*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!
*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!
மறுக்கமுடியாத சில உண்மைகள் !!!
மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!
👄👩👖👠👜
தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;
தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!
😇🤡😇🤡
OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!
🍿🥛🍻🥃
குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை !
😺😺😽👶
ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’
😅😆🤠😆
ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.
அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.
ஆணாதிக்கச் சமூகம் !
💃👯‍♂🕺👗
நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?
💿📽📡📽
முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.
இப்போது மழை நாட்கள் மட்டுமே !
💦🤷‍♀🏃‍♀👨‍👦🏃‍♀
ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம் !
💯🈁📶🔈
நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் !
💥🖥💥
யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள் !
🤰🙎👨‍👩‍👦‍👦🙎
நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.
📞📲📱
‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும் !
😥😥
ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம் !!
🕺🤹‍♂🕺🤹‍♂
"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!
💃👫💃👫
காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன் !
🙏🙏🙏🙏
இந்த வாட்ஸ்அப் பதிவுக்குச் சொந்தக்காரர் எங்கிருந்தாலும் வாழ்க!
மிக சிறந்த தொகுப்பு. நன்றி

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...