Sunday, July 23, 2023

இதயத்திற்கு ரத்தம் எடுத்துச்செல்லும் குழாய்களில் மட்டும் அடைப்பு ஏற்படுவது ஏன்?

 தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர். Powered By PauseUnmute Loaded: 0.35% Fullscreen கொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம்,ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதய ரத்தக்குழாய்களில் மட்டும் அல்ல, உடலுக்குள் செல்லும் எல்லா ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. உதாரணமாக, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பக்கவாதம் உண்டாகிறது. சிறுநீரக ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது, சிறுநீரக செயலிழப்பு நேரிடுகிறது. கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது கால் அழுகும் நிலை ஏற்பட்டு காலையே இழக்க நேரிடுகிறது.  ஆனால், மற்ற உறுப்புகளை விட இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது பாதிப்புகளும், உயிர் ஆபத்தும் அதிகம் நேரிடுகிறது. இதனால் தான் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மனித உடல் முழுவதும் ரத்தம் கொண்டு செல்லும் பணியை இதயம் செய்கிறது. அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அது உடல் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்ற ரத்தக்குழாய் அடைப்பு பாதிப்புகள் வராமல் தடுப்பது மிகவும் அவசியம் ஆகும். அதனால் தான் "வரும் முன் காப்போம்" என்ற நிலைப்பாட்டில் இதய பராமரிப்பு மிக முக்கிய இடம் வகிக்கின்றது. சரிவிகித உணவு உண்பது, மது-புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்ப்பது, மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக்கொள்ளாமல் மன அமைதியை பராமரிப் பது அவசியம். மேலும், முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவரின் ஆலோசனைகள் போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான இருதய நலத்தையும், உடல் நலத்தையும் பெறலாம். இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..

அசைவம் சாப்பிடலாமா இறை நம்பிக்கை உள்ளவர்கள் ??? அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????

 இந்த கேள்வியை

கேட்காத மனிதர்கள் இல்லை
இதற்கு
பதில் தராத
குருவும் இல்லை
ஆயினும்
கேள்வி தொடர்கிறது
...
பதில்
...
உணவுக்கும்
இறைவனுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை..
...
உணவுக்கும்
கடவுள் கோபிப்பார் என்பதற்க்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...
....
உணவுக்கு
கடவுள் தண்டிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை.
...
உணவுக்கும்
உடலுக்கும்
சம்மந்தம் உண்டு..
..
உணவுக்கும்
கர்மாவிற்கும்
சம்மந்தம் உண்டு
..
உணவுக்கும்
குணத்திற்க்கும்
சம்மந்தம் உண்டு
..
உணவுக்கும்
அவன் வாழ்விற்க்கும்
சம்மந்தம் உண்டு...
..
உணவுக்கும்
அவன் ஆயுளுக்கும்
சம்மந்தம் உண்டு
..
உணவுக்கும்
மனதிற்க்கும்
சம்மந்தம் உண்டு..
..
மனதிற்க்கும்
இறைவனுக்கும்
சம்மந்தம் உண்டு..
--------------
பாவத்தின் காரணமாக
பிறவி எடுத்தவன் மனிதன்..
அந்த பாவத்தை
சரி பண்ணவே
மனித பிறவி...
அவன்
சொந்த கடனை அடைப்பதே
அவனுக்கு திண்டாட்டமே
இதில்
தாவர உயிரினங்களுக்கு
பாவ கணக்கு குறைவு
மாமிச உயிரினங்கள்
அதற்கு
பாவ கணக்கு அதிகம்
எந்த
உணவை
மனிதன் உண்டாலும்
அந்த
உணவான
உயிர்களின்
பாவ கணக்கை
அந்த
மனிதனே அடைக்க வேண்டும்.
----------- ------------
அதிக பாசம் உள்ள
ஆடு கோழி மீன்
இவைகளை
மனிதன் உண்பது
பாச தோஷம் ஆகும்.
..
அம்மாவை தேடி அலையும்
குஞ்சுகள் குட்டிகள்
ஆனால்
அதன்
தாயை கொன்று தின்னும்
மனிதன்
உணரவேண்டியது
தாயின் மனம்
அந்த குட்டியின் மனம்
எவ்வாறு
தேடி தவித்து இருக்கும்
அந்த தோஷத்தை
மனிதன்
அடைந்தே தீருவான்
அந்த
பாவத்தையும் சேர்த்து அடைக்க
ஒருவன்
தைரியமாக முன்வந்தால்
அவன்
தாராளமாக
அசைவம் உண்ணலாம்
இதில்
கடவுளுக்கு என்ன பிரச்சனை ???
------------------ --------------
ஒருவர்
வங்கியில்
ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்
மற்ற ஒருவர்
ஒரு கோடி வாங்குகிறார்
இதில்
மேனேஜருக்கு என்ன பிரச்சனை
கடன் வாங்கியவனே
கடனை கட்ட வேண்டும்.
------- -------- ---------
சில நேரங்களில்
விரதம் இருப்பது
உடலுக்கு மட்டும் நல்லதல்ல
பிறந்த பிறவிக்கும் நல்லதே
அந்த விரத நாளில்
மனிதனால்
எந்த உயிரும் பாதிக்காததால்...
--------- ----- -------------
காட்டில் கூட
ஆடு மாடு
யானை குதிரை ஒட்டகம்
இவைகளை
மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.
புலி சிங்கம்
போன்ற அசைவ உணவு உண்ணியே
மிருகமாகிறது
சைவ உண்ணிகளுக்கு
மிருகம் என்ற பெயர்
காட்டில் கூட இல்லை..
------ ------- ------
உடலால்
மனித பிறவி சைவம்...
உயிரால்
மனித பிறவி சைவம்...
குணத்தால்
மனித பிறவி
அசைவம் மற்றும் சைவம்.
ஆடு மாடு மான் யானை
போன்றவை
உடலால் சைவம்
உயிரால் சைவம்
மனதாலும் சைவம்.
---- ----- ----
மனித பிறவியின்
உணவு
சைவமாக இருத்தலே தர்மமாகிறது
என்பதால்
அறிவில் சிறந்த
நம்
முன்னோர்கள்
மனித பிறவிக்கு
சிறந்தது சைவம்
என வழிகாட்டி சென்றார்கள்.

ஒருவரின் வாழ்வும் தாழ்வும் இயற்கை என்பது பொதுவானது.

 இல்லற வாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.

அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர் தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார். தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார். விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.
திரும்பும் வழியில் அவர் ஒரு துறைவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்.
இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்.
சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத்துறவி யாரென்று பார்த்தபோது அங்கு சிவ ஒளி சித்தரை கண்டார்.
இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர், அவர் சிவ ஒளி சித்தரை வணங்கினார். பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.
புன்னகை புரிந்த சிவ ஒளி சித்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.
இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார். ஆனால் சிவ ஒளி சித்தர், அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை அப்படியே சிவ ஒளி சித்தரிடம் கொடுத்தார். சிவ ஒளி சித்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.
அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான். மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார். அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.
(ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார். சாதுக்கள் தொடர்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்)
மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். மரணங்கள் வந்தாலும் நாம் அதை எதிர்த்து நிற்கலாம்...
May be an image of temple and text

மழைக்கு ஒதுங்கக்கூடாது.

 திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது

திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும்
காரணம் இது...
மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ,இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன்
மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான்.
அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத்தலமாகத் தேடினாள் லீலாவதி.
அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள்
நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை
திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம்ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு
நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரிமந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.
அதன்படிதிருவண்ணாமலையில் காயத்ரிமந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம்
வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழைபொழியத் தொடங்கியது.
பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள்அனைத்தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள்.
அப்படிப்பட்டபூமாதேவியைச் சாந்தப்படுத்தஇப்படிப்பட்ட மழை பொழியுமாம்.
இந்தமழைப்பொழிவுஇறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத்துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே
இறங்கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ,அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர்.
விவசாயம் செழித்து வளரும்.
அமைதிநிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத
புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம்தோன்றும்.
மழைத் துளிகள் கனமாக விழவே, பாறைஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி.
எனினும், விடாமல் காயத்ரி மந்திரம்ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத்துளிபாறையில் பட்டு, அதில்அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும்
அடைந்தது.
அதைக் கருவிலிருக்கும்
பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில்அமுத புஷ்ப மூலிகை தோன்றியது.
அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள்
இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம்
சொல்லி, அந்த மூலிகையைப் பறித்தசித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும்
லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள்.
அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்கஇருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக்
கொண்டாள் லீலாவதி. அதனால் அந்தமூலிகையின் சக்தி கருவை அடைந்தது.
அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின்
உக்கிரத்தைத் தாங்கும் சக்தியைபிரகலாதனுக்கு வழங்கியது.
மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போதுஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால்நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம்.
மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள்ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம்பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும்என்பது விதி.
May be an image of temple and text
All reactions

சில இந்து விரோதிகள் மீடியாக்களில் அவர்களை தரக்குறைவாக விமர்சித்து வன்மத்தை விதைத்து வருகிறார்கள்.

 வடசென்னை வண்ணாரப்பேட்டையில் ஓர் ஏழை புரோகிதருக்கு மகளாகப் பிறந்த பவானிதேவி ஒலிம்பிக்கில் கத்திச்சண்டைக்கு இந்தியா சார்பாக தேர்வாகியுள்ளார்...

பிராமண பொண்ணை விளையாட விடாம வீட்டுக்குள்ளேயே வெச்சிருக்காங்கனு பிகில் படத்துல அக்னிச் சிறகே எழுந்து வானு புரட்சி பாட்டெல்லாம் பாடுனாங்க. நிஜத்தில் ஒரு பிராமண பெண் ஒலிம்பிக்ஸ்ல விளையாட போகுது...
பிராமணசங்கமாக நாம் வாழ்த்துவோம்.
May be an image of 2 people and people smiling
l reactions

மகளிர்_உரிமைத்தொகை_பரிதாபங்கள்.

 இன்று மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கும் போது நாம் கண்ட காட்சிகள் சில...

♦️ மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீடு, அதில் இரண்டு, மூன்று ஏசி ரூம்கள், கணவருக்கு வெளிநாட்டில் வேலை. எனக்கு ஏன் விண்ணப்பம் தரவில்லை, எனக்கும் விண்ணப்பம் வேண்டும் என ஓடிச்சென்று வாங்கிச் செல்கிறார் அந்த பெண். வீடு மாமானார் கட்டியது, எங்கள் சொந்த வீடு இல்லை. கணவர் கூலி வேலைதான் செய்கிறார் என்று கூறிவிடலாம். ஆனால் மின்சார இணைப்பு காட்டிக் கொடுத்து விடுமே. மாதம் 300 யூனிட்க்கு மேல் பயன்படுத்துகிறவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காதே..!
♦️ கணவர், வயதுக்கு வந்த வேலைக்குச் செல்லும் திருமணமாகாத இரண்டு மகன்கள். பெரியவரை விட்டுவிடலாம். இரண்டு மகன்கள் தினக்கூலி, தினமும் 500 ரூபாய்தான் சம்பளம் என்று எழுதிக் கொடுத்தாலும் மாதம் 13,000 × 2 = 26,000, குடும்பத்தின் மொத்த வருட வருமானம் மூன்று லட்சத்தை தாண்டுமே...! இதுவும் #ரிஜெக்ட் ஆகும்.
அரசு வழங்குவது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்தானே தவிர பொங்கல் பண்டிகை தொகுப்பு இல்லை.
ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுப்பதில் என்னவாகிவிடபோகிறது. கிடைத்தால் கிடைக்கட்டும் என்ற ரீதியில் தகுதியில்லாத எல்லோரும் விண்ணபித்தால். இத்திட்டத்திற்காக அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் பணியாட்களுக்கு பணிச்சுமை கூடும்.
அதிக விண்ணப்பங்கள் குவியும் போது பணியாட்கள் சலிப்படைந்து ஏனோதானோ என்ற ரீதியில் பயனாளர்களை தேர்வுச் செய்யலாம், இல்லை அலட்சியமாக விண்ணப்பங்கள் சிலவற்றைத் தூக்கி குப்பையில் எறியலாம். இதனால் உண்மையிலயே தகுதியானவர்கள் கூட பாதிக்கப்படலாம்.
திட்டத்தின் விதிமுறைகளைத் தெரிந்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பபிபது எல்லோருக்கும் நல்லது.

தன்னைச்சுடும் – ஒரு குட்டிக் கதை.

 ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..


அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .


வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை


நடந்து சென்றே... ரெகுலராக ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!


முருங்கை காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்  !!


கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்  !!


இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்  !!


பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை  !!


கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்  !!


காரணம் கந்தசாமி யின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!


ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....


சிறிது நேரத்தில்....


பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ


மட்டுமே இருந்தது  !!


அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே  !!


இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே  !!


அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்  !!


நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்  !!


நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்  !!


‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...


அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .


வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார்  !!


‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .


அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...


ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.


‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .


மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....


தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்  !!


இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...


அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது  !!


இது தான் உலகநியதி  !!


நாம் எதைத் தருகிறோமோ


அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....


நல்லதை தந்தால் நல்லது வரும்,...


தீமையை தந்தால் தீமை வரும்  !!


வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,


ஆனா....


நிச்சயம் வரும்  !!


ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்  !!


மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும் !!

கோவிலில் சாமி முன் இந்த முறை படி பிராத்தனை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்...

 நமக்கு எப்பொழுது எந்த பிரச்சனை எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அந்த பிரச்சனைகளை முடிக்கவும் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு வெளியே வருவதற்கும் நாம் செய்யும் முதல் வெளியே தெய்வத்திடம் சரணடைந்து பிரார்த்தனை செய்து நம் குறைகளை கூறி, வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வோம் அது மட்டும் இல்லாமல் நமது வாழ்க்கையில் செய்யும் சில சிறிய தவறுகளுக்கும் தெய்வத்திடம் சென்று அதற்கான பரிகாரங்களையும் செய்து புண்ணியத்தை தேடி கொள்வோம். ஆனால் கோவிலில் சாமியிடம் வேண்டுவதாக இருந்தாலும் பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு முறை இருக்கிறது அந்த முறைப்படி நீங்கள் இறைவனிடம் வேண்டினால் கண்டிப்பாக அது நிறைவேற்றப்படும். அந்த முறைப்படி பரிகாரம் செய்தாலும் தெய்வம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். அதனால் இன்று கோவிலில் தெய்வத்தின் முன் எப்படி பிரார்த்தனை செய்வது, வேண்டுவது பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காண இருக்கிறோம்...

கோவிலில் சாமி முன் இந்த முறை படி பிராத்தனை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்! கோவிலில் சாமி முன் இந்த முறை படி சாமி செய்யுங்கள் நினைத்தது நடக்கும் நமக்கு எப்பொழுது எந்த பிரச்சனை எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அந்த பிரச்சனைகளை முடிக்கவும் அதிலிருந்து முழுமையாக விடுபட்டு வெளியே வருவதற்கும் நாம் செய்யும் முதல் காரியம் தெய்வத்திடம் சரணடைந்து பிரார்த்தனை செய்து நம் குறைகளை கூறி, வேண்டிய வரங்களை பெற்றுக் கொள்வோம் அது மட்டும் இல்லாமல் நமது வாழ்க்கையில் செய்யும் சில சிறிய தவறுகளுக்கும் தெய்வத்திடம் சென்று அதற்கான பரிகாரங்களையும் செய்து புண்ணியத்தை தேடி கொள்வோம். ஆனால் கோவிலில் சாமியிடம் வேண்டுவதாக இருந்தாலும் பரிகாரம் செய்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு முறை இருக்கிறது அந்த முறைப்படி நீங்கள் இறைவனிடம் வேண்டினால் கண்டிப்பாக அது நிறைவேற்றப்படும். அந்த முறைப்படி பரிகாரம் செய்தாலும் தெய்வம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளும். அதனால் இன்று கோவிலில் தெய்வத்தின் முன் எப்படி பிரார்த்தனை செய்வது, வேண்டுவது பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காண இருக்கிறோம். கோவிலுக்கு சென்றால் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டு என்ற நிறைய பேர் சொல்லி நாம் கேட்டிருப்போம் ஆனால், நம்மில் எத்தனை பேர், இந்த முறையில் தெய்வம் முன் மண்டியிட்டு வேண்டி உள்ளனர் என்பது தெரியாது. ஆனால் அடுத்தமுறை நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றாலும் அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த தெய்வத்துடைய கோவிலுக்கு சென்று வேண்டினாலும் தெய்வத்தின் முன் முட்டி போட்டு உங்கள் பிராத்தனைகளை வையுங்கள். நீங்கள் தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பு மண்டி போட்டு இரு உங்கள் இரு கைகளையும் ஏந்தி உங்களுடைய பிரச்சனையை மற்றும் குறைகளை கடவுளிடம் சொல்லி வேண்டிய வரங்களை பெற்று கொள்ளுங்கள். இப்படி முட்டி போட்டு வேண்டினால் தெய்வம் நாம் கேட்டதை உடனே கொடுக்கும் என சொல்லபடுகிறது.
இப்படி நீங்கள் எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்றாலும் முழங்கால் போட்டு மண்டி இட்டு, உங்களின் இரு கைகளையும் ஏந்தி வேண்டுதல் வைக்கும் போது உங்களுடைய வேண்டுதலை வேண்டுதல் சீக்கிரம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் அந்த வேண்டுதல் சீக்கிரம் தெய்வத்தால் நிறைவேற்றியும் தரப்படும் என்பது காலம் காலமாக மக்களிடம் உள்ள நம்பிக்கை. நீங்கள் நிறைய கோவில்களில் சிலர் தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்து முழங்கால் மண்டியிட்டு கோவிலை சுற்றி வளம் வருவார்கள் அல்லது கோவில் படி ஏறி, தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இப்படி எல்லாம் கூட தெய்வத்திற்கு பிராத்தனை செய்யாலாம் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகிறது....
இருந்தாலும் உங்களுடைய உடம்பை பிராத்தனை செய்கிறேன் என்ற பெயரில் வருத்திக் கொண்டு நீங்கள் முழங்கால் இட்டு கோவிலை சுற்றியோ அல்லது கோவில் படிகட்டிலோ நடக்க வேண்டும் அல்லது அவசியம் இல்லை. தெய்வத்தின் சன்னிதானத்திற்கு முன்பே மண்டியிட்டு தெய்வத்ததை முழு நம்பிக்கையோடு நினைத்து மனதார வேண்டிக் கொண்டாலே போதும். நீங்கள் நினைத்தது நிச்சயமாக ஒரு மண்டலத்தில் நடக்கும் அதாவது 48 நாட்களுக்குள் அது நடக்கும். நீங்களும் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து முழு நம்பிக்கையோடு வேண்டுங்கள்.

*உதவியதும் நான் அல்ல...*

 பாரதப்போர் முடிவில் கிருஷ்ணர் தேரில் அமர்ந்தபடி,""அர்ஜூனா! போர் தான் முடிந்து விட்டதே! இனியும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். தேரை விட்டு இறங்கு!'' என்றார்.

""மைத்துனா! நீ என்னை போரில் வெற்றி பெறச் செய்தாய். மகிழ்ச்சி! ஆனால், வெற்றி பெற்றவனை, தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கி விட வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டே! அதை மறந்து விட்டாயே! அப்படி செய்வது எனக்கும் பெருமை அல்லவா! நீயோ என்னைக் கீழே இறங்கு என்று ஆணையிடுகிறாய். இது என்ன நியாயம்? ''
அர்ஜுனனின் வார்த்தைகளை கிருஷ்ணர், காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ""தேரை விட்டு இறங்கு!'' என்றார் கண்டிப்புடன்.
வருத்தத்துடன் அர்ஜுனன் கீழிறங்கினான்.
அப்போது அவர்,"" தேரின் பக்கத்தில் நிற்காதே! சற்று தள்ளி நில்!'' என்றார் அதட்டலுடன்!
அர்ஜூனனால் கிருஷ்ணரின் அதட்டலைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. வெற்றி பெற்ற மகிழ்ச்சி கூட மனதை விட்டு அகன்றுவிட்டது. ஒன்றும் புரியாதவனாய் தள்ளி நின்றான்.
வாடிய முகத்துடன் நின்ற அவனைக் கண்டு புன்னகைத்த கிருஷ்ணர், தேரிலிருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ஜுனனை இறுகக் கட்டியணைத்துக் கொண்டார். அந்த கணமே தேர் தீப்பற்றி எரிந்தது.
""பார்த்தாயா? தேர் எரிகிறது! அதனால் தான் உன்னை இறங்கச் சொன்னேன்!,'' என்றார் புன்முறுவலுடன்.
"தேர் ஏன் எரிந்தது?' அர்ஜுனன் ஏதும் புரியாமல் கேட்டான்.
""அர்ஜூனா! போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவுநேரம் அதை தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன.
தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்துஅனுமனும் புறப்பட்டு விட்டான். அஸ்திரங்களின் சக்தி தலைதூக்கியது. தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது.
உண்மை இப்படி இருக்க, நீயோ போரில் வெற்றி பெற்ற உன்னைக் கவுரவிக்கவில்லை என்று வருத்தப்படுகிறாய்.
வெற்றி பெற்றதும் "நான்' என்னும் ஆணவம் உனக்கு வந்து விட்டது. ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்து விடாதே,'' என்று அறிவுரை கூறினார்.
தேர் பற்றி எரிந்ததுபோல, அர்ஜுனனிடம் இருந்த ஆணவமும் பற்றி எரிந்து சாம்பலானது.
இறைவன் காரணமில்லாமல் நமக்கு கஷ்டம் எதையும் தருவதில்லை !
CA*யார் கடவுள்..*
????????????????
மணி இரவு 8...
பசி வயிற்றைக் கிள்ளியது...
இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை... சமையல்காரியும் வரவில்லை...
எனக்கு சமைக்க மூடும் இல்லை..
இது மாதிரி நேரங்களில்...
ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு..
இன்று அதற்கும் மூடு இல்லை...
வெளியே வீசிய குளிர் காற்று, என்னோடு சற்று உறவாடு, என்று என்னை அழைக்க....
டூ வீலர் ஸ்டார்ட் செய்து பார்த்தேன்...
மூன்று நாட்கள் டூவீலரை எடுக்கவில்லை...
என் மேல் அதற்கு கோபம் போல...
எனது உதை...
பயனற்று போனது...
ஒரு நல்ல டிபன் சாப்பிட
வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்...
சின்னதாக ஒரு உரத்த சிந்தனை....
பிறகு...
ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...👨🏼‍🦯
இன்று ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்க வேண்டும்?
வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது?
இரவு 8 மணிக்கு ...
ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம்.
சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம்.
அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும் .
எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது .
இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா?
கொஞ்ச நேரம் நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது.
அருகில் சென்றதும் தான் தெரிந்தது....
அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று..
4x4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை.... அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது.
கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்....
இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது....
என் மனதில் தோன்றியவைகளைத் தான்,
நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ...
உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன்.
உனக்குள்ளே இவ்வுலகம்...
ஆனால்...
நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே...
*எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா*...
என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை.
கம்பிக்குள் சிறை வைக்கப்பட்ட நீ,யாருக்கு உதவப் போகிறாய்?
நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்?
சரி...யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்.
என்னைப் பற்றி பேசுகிறேன்.
இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்?
இந்தக் கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன?
என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
அந்த மதில் சுவரின் மூலையில்....
பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன்.
அது துணி மூட்டை அல்ல ஒரு மூதாட்டி.
பூச்சி... புழு... (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்... சரமாரியாக வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள்.
யாரைப் பெற்ற தாயோ...
ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே அடைக்கலம் வந்து இருக்கிறார் .
அவர் ஏதோ முனகுவது போல் இருந்தது.
உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.
*என்னமா வேணும்?*
பணிவுடன் நான்.
*ஐயா.. சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா*
அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது.
அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது.
இந்த மழையில்...
இந்த இரவில் ...
ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன் ) நானே இவ்வளவு தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது...
இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி.
*இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க.... தண்ணி பாட்டில் கூட இருக்கு...*
நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன்.
*கிருஷ்ணா நல்லாருப்பா*
என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள்.
என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள் ...
*அவள் கிருஷ்ணரிடத்தில் உணவை கேட்டிருப்பால் போலும்... ஆதலால் யார் கொடுத்தாலும் கொடுப்பவன் கிருஷ்ணன் தான் என்ற நம்பிக்கை போலும் அவளுக்கு* என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்..
இப்போது எனக்குள் திடீரென்று ஒரு பொறி தட்டியது...
*எனக்கு எந்த ரூபத்தில் வந்து நீ உதவி செய்யப் போகிறாய் என்று நான் உன்னை கேட்டேன்*.
இப்பொழுது புரிகிறது...
*உதவி தேவைப்பட்டது எனக்கல்ல...*
*அந்த மூதாட்டிக்கு* என்று...
*உதவியதும் நான் அல்ல...*
*என் ரூபத்தில் நீ* என்று...
இப்போது கிருஷ்ணரை பார்க்கிறேன்...
*இத் தருணத்தில் மூதாட்டிக்கு நீ தான் நான்....*
*கம்பிக்குள் இருக்கிற நான் .*.
*கம்பிக்கு வெளிய இருக்கிற உன்னை வைத்து பாட்டிக்கு எப்படி உணவை வர வைத்தேன் பார்த்தாயா* என்று அவர் கேட்பது போல் இருந்தது..
*யார் கடவுள் புரிகிறதா...*
🙏🏼 வணக்கம் 🙏
May be an image of 2 people, temple and text
All reaction

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...