Tuesday, November 29, 2022

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு .

 சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள், ஐகோர்ட்டில் நடந்து வந்தன. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி.வேலுமணி தரப்பில், "ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை" எனவும் முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும், வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானதாகவும், அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பகட்டம் என்றும், ஆரம்பகட்டத்திலேயே வழக்கை ரத்து செய்யக்கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தினார். இந்த வழக்கில் மற்றொரு புகார்தாரரான அறப்போர் இயக்கம் தரப்பில் வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை நவம்பர் மாதம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழக்கு நவம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு, சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

இனி உங்க பிரிட்ஜில் உள்ள ஐஸ் கட்டிய தூக்கி வீணா கீழே போடாதீங்க. அதை வெச்சு என்னென்ன செய்யலாம்னு தெரிஞ்சா, இனி நீங்க பிரிட்ஜி ஃபுல்லா கூட ஐஸ் கட்டியா வச்சுப்பீங்க. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்கலாம்.

 நம்ம இதுவரைக்கும் பிரிட்ஜ் காய்கறி, பழம், கூல் ட்ரிங்க்ஸ், இது போல வைக்கிறதுக்கு தான் பயன்படுத்தியிருக்கோம். ஆனா இந்த பிரிட்ஜ்ல வர ஐஸ்கட்டிய எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரிஞ்சுகிட்ட பிறகு, நம்ம பிரிட்ஜில் பொருட்களை வைத்து யூஸ் பண்ணுவதை விட மத்த பயன்பாட்டுக்கு இந்த ஐஸ் கட்டி அவ்வளவு உதவியா இருக்கு.அதை ஒவ்வொன்னா இந்த பதிவில் பாக்கலாம் பதிவை படித்து முடித்த பிறகு நீங்களே நினைப்பீங்க ஐஸ்கிரீம் கியூப் வச்சு இவ்ளோ விஷயம் இருக்கா அப்படின்னு சரி வாங்க அது என்ன என்ன டிப்ஸ் என்று பார்த்திடலாம். முதல்ல குக்கர்ல சாதம் வடிச்சு இன்னொரு பாத்திரத்துக்கு மாற்றும் போது குக்கரில் அந்த சாதம் ஒட்டி கொண்டு தேய்க்கவே கஷ்டமா இருக்கும். இது போல் ஆகாமல் இருக்க, சாப்பாட்டுக்கு அரிசி ஊற வைக்கும் போதே அதில் நாலு ஐஸ் கியூப் சேர்த்து ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு எப்பவும் போல நீங்க சாதம் வைத்து பாருங்கள் குக்கரில் ஒட்டாது.  கண்ணாடி பாட்டில் வாங்கும் போது இருக்கும் பளபளப்பு கொஞ்ச நாள் யூஸ் பண்ண உடனே அந்த கலர் கொஞ்சம் மங்களாக மாறி விடும். அப்படி மாறின பாட்டிலில் இந்த ஐஸ் கியூபையும், கல் உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு கழுவி பாருங்க புதுசா கடையிலிருந்து வாங்கி வந்த பாட்டிலுக்கும் இதுக்கும் வித்தியாசமே தெரியாது. இட்லிக்கு கொஞ்சமாக மாவு அரைக்கும் போது மிக்ஸிலேயே போட்டு எடுத்திடுவோம். அப்படி மிக்ஸியில் போடும் போது மிக்ஸி உடனே சூடாகி மாவு கெட்டியா ஆயிடும் இல்லனா, இட்லி சாப்டா வராது. அதுக்கு உளுந்து அரிசி இந்த ரெண்டு அரைக்கும் போதும் கொஞ்சம் ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்தால் மாவு சாஃப்டா இருக்கும். சீக்கிரம் புளிக்காது அதே நேரத்தில் இட்லி கல்லு போல ஆகாது. நம்ம குக்கரில் சீக்கிரம் வேலை முடியணும் செஞ்சுருவோம். ஆனா விசில் அடங்கின பிறகு தான் எடுக்கணும் அப்படிங்கிறதாலே சமைச்சு வச்சு அதுக்காக ஒரு பத்து நிமிஷமாவது நம்ம வெயிட் பண்ணுவோம். இனி அப்படி வெயிட் பண்ண தேவையே இல்லை. ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணி வச்சு ஐஸ் க்யூப் போட்டு வச்சுக்கோங்க, குக்கரை அந்த தண்ணில வச்சிருங்க அவ்வளவு தான் உடனே விசில் இறங்கிடும். நீங்க மூடியை திறந்து விட்டு வேக வைத்ததை எடுத்துரலாம். இதே முறையில் வேக வைத்த முட்டை உரிக்கவும் பயன்படுத்திக்கலாம். அதை உரிக்க கொஞ்ச நேரம் ஆற விடுவோம். அப்படி இல்லாம வேக வச்சதை எடுத்து ஸ்ட்ரைட்டா ஐஸ் கியூப் போட்டு தண்ணில போட்டுங்க முட்டை ஓடும் ரொம்ப ஈஸியா அழகா தனியா வந்துடும் நேரமும் மிச்சமாகும். இப்போதெல்லாம் ஸ்டோன் வொர்க் செய்த துணிகள் அதிகமாக வந்து விட்டது. ஸ்டோன் விழுந்த பிறகு அதில் ஒட்டி இருக்கிற கம்மெல்லாம் துணியிலேயே ஒட்டிட்டு அசிங்கமா இருக்கும். அந்த மாதிரி இடத்துல இருக்க கம் எடுக்க ஒரு ஐஸ் க்யூப்பை காட்டன் துணில சுத்தி கம் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தால் அந்த கம் தனியாக வந்து விடும். நம்ம தோசை ஊற்றும் போது கல்லு சில சமயம் ரொம்ப சூடாகி விடும். அப்படி ஆகிவிட்டால் தோசை ஊற்றவே வராது. அதுக்கு நிறைய டிப்ஸ் இருக்கு ஆனா அதுக்கு இந்த ஐஸ் க்யூபும் யூஸ் ஆகும். இதே போல தான் ஐஸ்கிரீமை ஒரு காட்டன் துணியில வச்சுட்டு கல்லு மேல தேச்சீங்கனா உடனே கல்லு நார்மல் சூடுக்கு வந்துடும். அடுத்த தோசையை சூப்பரா ஊத்திடலாம். இனி நீங்களும் இந்த ஐஸ் கட்டிய வைச்சு உங்க சமையல் வேலையை ரொம்ப ஜில்லனு சீக்கிரம் முடிச்சுடுங்க.

*இரண்டிற்கும் வித்தியாசம்,* *வயது மட்டுமே...*

 பல, வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,
அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.
இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*
கண்ணன் என்பது செல்ல பெயர்.
குழந்தை பருவம்.
கிருஷ்ணன் என்பது வளர்ந்த பிள்ளை.
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்
சின்ன உதாரணம்...
ஒருநாள், நான் ...
முகம் முழுக்க சோப்பு தேய்த்து ,
குளித்துக் கொண்டிருந்தேன்.
திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல்,
இரண்டு கையாலும்,
என்னை சுற்றி , சுற்றி,
சொம்பை, தேடினேன்.
அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.
எனக்கு புரிந்து விட்டது.
சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று.
எனக்கு , கண் எரிகிறது
என்று அவளுக்கு தெரியவில்லை.
நான் , சொம்பை தேடுவதில்,
அவளுக்கு ஒரு ஆனந்தம்.
இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.
தற்போது , எனது கண்ணில் ,
ஒரு தூசி விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.
இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....
மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....
கோபிகளின் ஆடைகளை ,
மறைத்து வைத்து...
அவர்கள் தேடுவதை கண்டு
ஆனந்தப் பட்டான்.
அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....
மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து,
அவள் மனதை, காத்து நின்றான்..
இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....
கண்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது....
நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான்.
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என ,
பொய்யும் சொன்னான்...
அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....
திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது ,
என கீதை உபதேசம் செய்தார்....
இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.
அருமையான
கருத்துக்கள் செரிந்த பதிவு. *Simple but beautiful*..👌👌👌
சர்வம் *கிருஷ்ணார்ப்பணம்*..

*💪வரலாறு📜

 அமெரிக்காவில் ஒரு ஏழைத் தொழிலாளின் மகனுக்கு புத்தகம் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். ஆனால் புத்தகம் வாங்குவதற்கு உண்டான பணம் இல்லை

.அவன் தந்தையோ மிகுந்த ஏழை. அவரால் எப்படி இதற்கு எல்லாம் செலவு செய்ய முடியும்.?
அவனோ புத்தகம் படிக்கும் ஆசையில் வெகுதுாரம் சென்று பலரை கெஞ்சி கேட்டு புத்தகங்கள் வாங்கி வருவான்.
ஒருநாள் அவன், ‘அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன்’ பற்றிய புத்தகத்தைப் படித்து வந்தான். உறக்கம் வரவே, புத்தகத்தை ஜன்னல் ஓரத்தில் வைத்து விட்டான்.
அன்று பெய்த மழையில் அப் புத்தகம் நனைந்து விட்டது. ஐயோ! இதன் உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது?’’ என்று தவித்தான்..
பின் ‘‘ஐயோ! இந்தப் புத்தகம் எனது அஜாக்கிரதையால் நனைந்து விட்டது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.’’ என்று கேட்டுக்கொண்டான்.
ஆனால் அவரோ ‘‘அதெல்லாம் முடியாது..இந்த. புத்தகத்திற்கான விலையை நீ தர வேண்டும்’’என்றார். ‘ஐயா! என்னிடம் பணம் இல்லை’’ என்றான்.
அப்படியானால் நீ என் வயலில் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்’’ என்றார்..
.
‘சரி! அப்படியே செய்கிறேன். ஆனால் தாங்கள் இந்தப் புத்தகத்தை எனக்கே தர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு அப் புத்தகத்தைப் பெற்றுச் சென்றான்.
இப்படிப் புத்தகத்தை வாங்கிப் படித்த அச்சிறுவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் திகழ்ந்தார்..
ஆம்! *அடிமைத் தளையை அறுத்து எறிந்த ஆபிரகாம் லிங்கன்தான் அந்த சிறுவன்..* அவனது நுாலறிவு அவனை எவ்வளவு உயர்ந்த பதவியில் வைத்திருந்தது..
🌹🌻🌷🌺🌹🌻🌷🌺

ஹோரை;

 ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர் வாக்கு, இங்கே 6 மணி என பொதுவாக கொடுத்தாலும் அன்றைய நாளின் அந்தந்த ஊர் சரியான சூரிய உதய நேரமே ஆரம்பம் அன்றைய சூரிய அஸ்தமன கால நேரம் வரை 12சம பாகமாக பிரித் astrosoft கொண்டு மொபைலில் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்,

ராகு காலம், எமகண்டம், குளிகையுடன் ஓரை அறிந்து செயல்பட ஏற்றம் உண்டு,
சூரிய ஓரை; அரசு வேலை, அரசு அதிகாரியை சந்தித்தல், பதவி ஏற்க, மருந்துண்ண, உயில் எழுத, தகப்பன் உதவி, சிவதரிசனம் செய்ய நலம்,
சுப நிகழ்ச்சி, சொந்த வாடகை வீட்டில் முதல் முறையாக பால் காய்ச்ச கூடாது,
சந்திரன் ஓரை; வளர்பிறை காலத்தில் மட்டும் பயணம், புது வியாபாரம், திருமணம் , சீமந்தம், மொட்டை அடித்தல், காது குத்தல், பெண் பார்ப்பது, பதவி ஏற்பது, அம்மன் தரிசனம், தாயார் உதவி,, வங்கி கணக்கு, பெண்கள் தொடர்பு காரியம் ஏற்றது,
சொத்து சம்பந்தமாக பேசுவது கூடாது,
செவ்வாய் ஓரை; நிலம் வாங்க விற்க, சொத்து பிரித்தல், விவசாயம் வீடு தோட்டம் பார்வை, சகோதரர் உதவி, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவி, முருகன் வழிபாடு, ஆயுத பிரயோகம், கடன் அடைக்க ஏற்ற காலம்,
கடன் வசூல் செய்ய போக கூடாது, கடன் கொடுக்ககூடாது, வீண் வாக்குவாதம், கடன் வாங்குதல், பெண் பார்ப்பது கூடாது,
புதன் ஓரை; ஜோதிடம், கல்வி பயில, சுப காரியம், பயணம்மேற்கொள்ளல்,
வங்கி கணக்கு, மாமன் உதவி, வக்கீல் உதவி, தூது போதல், பெருமாள் தரிசனம் ,
பெண் பார்ப்பது, வீடு நிலம் சொத்து பற்றி பேசுதல் பார்வையிடல் கூடாது,
குரு ஓரை; அனைத்து சுபம், வியாபாரம், விவசாயம்,, தங்க நகை,, குழந்தைகள் படிப்பு, பிரம்மன் தட்சணாமூர்த்தி வழிபாடு, குரு சந்திப்பு , வீடு மனை , கொடுக்கல் வாங்கள் சிறப்பு,
முதல் முறை விருந்து வைத்தல் அதுவும் புது தம்பதிகளுக்கு கூடாது, கடற்பயணம் கூடாது, சட்டத்திற்க்கு புறம்பான காரியம் கூடாது,
சுக்கிர ஓரை; பெண் பார்க்க, சுப காரியம், ஆடை வெள்ளி ஆபரண சேர்க்கை, அம்மன், ஆண்டாள் வழிபாடு, காதல், விருந்து. வாகனம். வீடு கட்ட, சாந்தி முகூர்த்தம், பயணம் ஏற்றது,
நகை இரவல் கூடாது, துக்கம் விசாரித்தல், பணம் கொடுத்தல் கூடாது
சனி ஓரை; விவசாயம், இரும்பு, சுத்தம் செய்தல், நவகிரக ,,ஊழ்வினை பாவம் போக்கும் வழிபாடு நலம். சுபம் தவிர்க்க நலம்,
No photo description available.

ஒரு ஆண் விரும்பும் பெண்ணின் குணங்கள்.

 1. அதிகம் கோபப்படாதவள்

2. அதிகம் இரக்கம் கொண்டவள்
3. துன்பத்தில் துணை நிற்பவள்
4. நல்ல விடயங்களைக் கேட்டு நடப்பவள்
5. மரியாதையுள்ளவள்
6. தன் தாய் தந்தையிலும் அன்பு செலுத்துபவள்
7. தன் குழந்தையை முகம் சுளிக்காமல் பார்த்துக் கொள்பவள்
8. அதிகம் ஆடம்பரத்தை விரும்பாதவள்
9. தனக்கு விருப்பான உணவை சுமாராவாவது தன் கையாள் சமைத்துத் தருபவள்
10. தன்னை எப்போதும் விட்டுக் கொடுக்காதவள்
11. குறை கூறாவதள்
12. சுறு சுறுப்பானவள்
13. மென்மையானவள்
14. சிரித்த முகமுடையவள், வந்தாரை வரவேற்று உபசரிப்பவள்
15. மனம் விட்டுப் பேசக் கூடியவள்
16. நகைச்சுவையானவள்
17. தன் முயற்சிக்குத் துணை நிற்பவள்
18. ஆரோக்கியமானவள்
19. மார்க்கப் பற்றுள்ளவள்
20.சின்ன சின்ன அன்பு சண்டை செய்து அன்றிரவே மறந்து பேசக் கூடியவள்.
இந்த மாதிரியான பெண்கள் "டைனோசர் " அழிந்த காலத்திலயே அழிந்து விட்டதாக " போதி தர்மர் " கூறி உள்ளார்......
ஆக மொத்தம் என்னை மாறி ன்னு போதி தர்மர் சொல்லி இருக்கார்..🚶🚶🚶🚶

*உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்க* மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணம் !

 தினமும் 3 நிமிடம்

தோப்புக்கரணம் உடலை
வலுவாக்கும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும்
யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும்
கிடைத்துவிடும். நமது முன்னோர்கள்
வழிபாட்டின் ஒரு பகுதியாக
தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப்
பிடித்துக் கொள்கிறோம். காது
மடல்களில் உடலின் எல்லா
உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள்
இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம்
போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும்
செயல்படுவதற்கான தூண்டுதல்
கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர்,
ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை
அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக்
கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச்
சேர்த்து வைத்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட வேண்டும்.
வலது கை
விரல்களால் இடது காது மடல்களையும்,
இடது கை விரல்களால் வலது காது
மடல்களையும் பிடித்துக் கொண்டு
உட்கார்ந்து எழ வேண்டும்.
உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து
வெளிவிடுவதால், நமது
தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் -
சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,
காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க
இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த
சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும்
ரத்த ஓட்டம் சீராகும்.
மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத்
தொடர்ந்து செய்தால் வேறு
எந்த உடற்பயிற்சியும் செய்ய
வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று
நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில்
செய்ய முடியாது என்பதே உண்மை.உண்மை.
No photo description available.

ஒரு வீட்டில் தினமும் இந்த ஒரு வேலையை ஆண்கள் செய்து வந்தாலே போதும். அந்த குடும்பத்திற்கு கஷ்டமே வராது. கண்ணுக்கே தெரியாத சாபத்திற்கும் விமோசனம் கிடைக்கும்.

 பெரும்பாலும் எல்லா கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் பூஜை புனஸ்காரங்களும் செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு பெண்களுக்கு கூடுதலாக இருந்தாலும், ஆண்கள் செய்ய வேண்டிய கடமைகளும் சில உள்ளது. ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து ஒரு வீட்டில், ஒரு ஆண் கடைபிடித்து வந்தால், அந்த குடும்பம் சீரும் சிறப்புமாக செல்வக் கடாட்சத்துடன் இருக்கும். குறிப்பிட்டு சொல்லப் போனால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று தரக்கூடிய ஒரு செயல்பாடுதான் இது. பதிவிற்கு சென்று விரிவாக பார்ப்போம் வாருங்கள். காகத்திற்கு சாதம் வைப்பது. இந்த வேலையை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம். குழந்தைகளும் செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் வீட்டில் இருக்கும் ஒரு ஆண், காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, காகத்திற்கு சாப்பாடு வைக்க வேண்டும். சாப்பாடு என்றால் வடித்த சாதம் தான் என்று அர்த்தம் கிடையாது. பிஸ்கட் மிக்சர் அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருள் வீட்டில் வாங்கி வைத்து, தினமும் அந்த உணவு பண்டத்தை காகத்திற்கு வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் தண்ணீரை வைத்து விட்டு ஒரு நிமிடம், உங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை மனதில் நினைத்து, உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த ஒரு விஷயத்தை ஆண்கள் பின்பற்றி வந்தாலே அந்த குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். முன்னோர்கள் விட்ட சாபம் இருந்தாலும் அல்லது நம்முடைய குடும்பத்திற்கு ஏதேனும் கண்ணுக்குத் தெரியாத தோஷம் இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் தவறு செய்து வந்திருந்தாலும், அந்த துன்பத்திலிருந்து விடுபட ஆண்கள் செய்யக்கூடிய இந்த பரிகார முறை நல்லதொரு பலனை கொடுக்கும். ஏன் இதை பெண்கள் செய்ய கூடாதா என்று சிலர் கேட்கலாம். பெண்கள் இதை செய்யலாம் தவறு கிடையாது. இருப்பினும் ஆண்கள் இதை செய்வது இரட்டிப்பு பலனை தரும் என்று சொல்கிறது சாஸ்திரம். அடுத்தது பெண்களுக்கு. பெண்கள் தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு, வீட்டில் இருக்கும் ஆண்களை அந்த விளக்கை மலையேற்றி விடு என்று சொல்லவே கூடாது. பெண்கள் விளக்கு ஏற்றி, பெண்கள் தான் அந்த விளக்கை மலை ஏற்ற வேண்டும். வீட்டில் பெண்கள் இருக்கும் போது, விளக்கு ஏற்றும் வேலையை ஆண்கள் செய்யக்கூடாது. விளக்கு ஏற்றும் வேலை என்பது பெண்களுக்கு உரியதான விஷயம். எந்த ஒரு வீட்டில் தினமும் பெண்கள் விளக்கு ஏற்றி இறைவழிபாடு செய்கிறார்களோ, குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்கிறார்களோ, அந்த குடும்பம் சுபிட்சம் பெறும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆண்கள் இந்த விளக்கு ஏற்றும் வேலையை செய்யக்கூடாதா. செய்யலாம். பெண்கள் வீட்டில் இல்லாத சமயம் ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது. சூழ்நிலை காரணமாக ஆண்கள் காகத்திற்கு வைக்க கூடிய சாப்பாட்டை பெண்கள் வைப்பதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் சூழ்நிலை காரணமாக பெண்கள் ஏற்றக்கூடிய விளக்கை ஆண்கள் ஏற்றும் போது எந்த ஒரு பாதிப்பும் வந்து விடாது. ஆனால் சோம்பேறித்தன பட்டு என்னால் முடியாது இந்த வேலையை நீ செய் என்று நம்முடைய கடமையை அடுத்தவர்கள் கையில் கொடுக்கும்போது தான், சில பிரச்சனைகள் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

நாற்பதாவது வயது ஆரம்பத்தில்.

 உடம்பின் நடுப்பகுதி வயிறு.

அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.
இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,
நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.
😊
தொந்தி கனக்க விடாதீர்கள்.
தொந்தரவு வரும்.
மனம் கனக்க விடாதீர்கள் மரணம் வரும்.
😊
ஒரு மனிதன்
வியாதியுடன் வாழப்போகிறானா,
வீரியமுடன் வாழப்போகிறானா,
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா என்பதைத் தீர்மானிக்கும் வயதுதான் இந்த நாற்பது.
😊
நிறைய வேலை செய்வதால்
நமக்கு நிம்மதி போவதில்லை.
உடம்பு உருக்குலைவதில்லை.
😊
என்ன நடக்குமோ என்ற பயமும் கவலையும்தான்
மனிதன்மீது பாரமாக இறங்கி
அவனை நொறுக்கிவிடுகின்றன.
😊
பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.
ஆரவாரம் வேண்டாம்.
அலட்டிக் கொள்ளாதீர்கள்.
பொறுப்புக்களை
சீராக நிறைவேற்றுங்கள்.
😊
அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
😊
தினசரி மத்தியானம்
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்
எக்காரணத்தை முன்னிட்டும்
விழித்திருக்காதீர்கள்.
😊
பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.
😊
ஆண்டவனை நினையுங்கள்.
இன்று முழுக்க என்னுடன் இருந்து என்னை ஆண்டுகொள் அப்பா.
நான் தப்பு பண்ண விடாதே அப்பா."
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
😊
முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.
😊
டென்ஷன் இல்லாமல் இருங்கள்.
பென்ஷன் வாங்கலாம்.
😊
ஸ்ட்ரஸ் உண்டாக்கிக் கொண்டால்,
அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.
😊
அதனால்தான் சொல்லுகிறேன்.
கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் .

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...