Friday, July 31, 2020

கடுமையான நோயும், அதனால் உண்டாகும் செலவும், கடனும் தீரும்.

கடுமையான நோயும், அதனால் உண்டாகும் செலவும், கடனும் தீர இன்று 1/8/2020 சனிமகா பிரதோச நேரத்தில் இந்த 108 துதியை மனமுருகி நந்திதேவரை நினைத்து சொல்லி வந்தால் கடுமையான நோயும், அதனால் உண்டாகும் செலவும், கடனும் தீரும்.

1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி

2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி

3. ஓம் அனுகூலனே போற்றி

4. ஓம் அருந்துணையே போற்றி

5. ஓம் அண்ணலே போற்றி

6. ஓம் அருள்வடிவே போற்றி

7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி

8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி

9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி

10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி

11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி

12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி

13. ஓம் ஆதரிப்பவனே போற்றி

14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி

15. ஓம் இனியவனே போற்றி

16. ஓம் இணையிலானே போற்றி

17. ஓம் இடப உருவனே போற்றி

18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி

19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி

20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி

21. ஓம் ஈர்ப்பவனே போற்றி

22. ஓம் ஈடில்லாதவனே போற்றி

23. ஓம் உத்தமனே போற்றி

24. ஓம் உபகாரனே போற்றி

25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி

26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி

27. ஓம் எளியவனே போற்றி

28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி

29. ஓம் ஐயனே போற்றி

30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி

31. ஓம் கனிவுருவே போற்றி

32. ஓம் களிப்புருவே போற்றி

33. ஓம் களங்கமிலானே போற்றி

34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி

35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி

36. ஓம் கயிலைக் காவலனே போற்றி

37. ஓம் கம்பீர உருவனே போற்றி

38. ஓம் குணநிதியே போற்றி

39. ஓம் குருபரனே போற்றி

40. ஓம் குறை களைவோனே போற்றி

41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி

42. ஓம் கோயில் நாயகனே போற்றி

43. ஓம் சிவபுரத்தனே போற்றி

44. ஓம் சிவதூதனே போற்றி

45. ஓம் சிவனடியானே போற்றி

46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி

47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி

48. ஓம் சிவஞான போதகனே போற்றி

49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி

50. ஓம் சிரஞ்சீவியே போற்றி

51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி

52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி

53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி

54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி

55. ஓம் ஞானியே போற்றி

56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி

57. ஓம் தருமவிடையே போற்றி

58. ஓம் தயாபரனே போற்றி

59. ஓம் தளையறுப்பவனே போற்றி

60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி

61. ஓம் தவசீலனே போற்றி

62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி

63. ஓம் தீதையழிப்பவனே போற்றி

64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி

65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி

66. ஓம் நந்தியே போற்றி

67. ஓம் நலமளிப்பவனே போற்றி

68. ஓம் நமனை வென்றவனே போற்றி

69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி

70. ஓம் நாடப்படுபவனே போற்றி

71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி

72. ஓம் நாதனே போற்றி

73. ஓம் நிமலனே போற்றி

74. ஓம் நீறணிந்தவனே போற்றி

75. ஓம் நீதி காப்பவனே போற்றி

76. ஓம் பராக்கிரமனே போற்றி

77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி

78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி

79. ஓம் பகை அழிப்பவனே போற்றி

80. ஓம் பதமளிப்பவனே போற்றி

81. ஓம் பர்வதமானவனே போற்றி

82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி

83. ஓம் புண்ணியனே போற்றி

84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி

85. ஓம் பெரியவனே போற்றி

86. ஓம் பெருமையனே போற்றி

87. ஓம் மஞ்சனே போற்றி

88. ஓம் மலநாசகனே போற்றி

89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி

90. ஓம் மறையே கால்களானவனே போற்றி

91. ஓம் மால்விடையே போற்றி

92. ஓம் மகாதேவனே போற்றி

93. ஓம் முனியவனே போற்றி

94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி

95. ஓம் யோகியே போற்றி

96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

97. ஓம் வள்ளலே போற்றி

98. ஓம் வல்லாளா போற்றி

99. ஓம் வித்தகனே போற்றி

100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி

101. ஓம் வீர உருவமே போற்றி

102. ஓம் வீரபத்திரனே போற்றி

103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி

104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி

106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி

107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி

108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி

பிரதோச நேரத்தில் இந்த 108 துதியை மனமுருகி நந்திதேவனை நினைத்து சொல்லி வந்தால் கடுமையான நோயும், அதனால் உண்டாகும் செலவும், கடனும் தீரும்.

ஸ்ரீ நந்திதேவர் திருவடிகளே சரணம் !சிவாயநம திருச்சிற்றம்பலம்

Image may contain: flower

இவர்கள் CBSE பள்ளியில் இந்தி கட்டாயம் ஆனால் அரசு பள்ளியில் இந்திக்கு எதிர்ப்பு ?


 தமிழகத்தை சீர்குலைத்த நாதாரி பய இவன். இவன் குடும்பத்த வாழ வச்சிட்டு, தமிழகத்த கெடுத்த நாய் இவன்.


Image may contain: 1 person, sunglasses, text that says 'நவீன தமிழகத்தை நாசமாக்கிய சிற்பி #KALAIGNAK'

பெரியார் ஏன் இந்து மதத்தை கடுமையாய் எதிர்த்தார் ?

உயர் ஜாதியாய்
ஒருவன்
தாழ்ந்த ஜாதியாய்
இன்னொருவன் இருப்பது
இந்து மதத்தில் தான்

ஊர் சேரி என
தீண்டாமைக்கு
அங்கீகாரம் தந்தது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
பெண்கள் மேலாடை அணிய
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

இறந்த கணவனை
எரிக்கும் நெருப்பில்
மனைவியையும் சேர்த்து
எரிய வைத்தது
இந்து மதத்தில் தான்

ஒடுக்கப்பட்ட சமூக
பெண்களுக்கு
பொட்டுக்கட்டி விட்டது
இந்து மதத்தில் தான்

கணவனை இழந்த
கைம்பெண்களுக்கு
மறுமணம் மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
இந்துக் கோவில்களுக்குள்
இந்துக்களுக்கே
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
தெருவில் நடக்க
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
தோளில் துண்டு போட
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
பொதுக் குளத்தில்
நீர் எடுக்க
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
காலில் செருப்பு போட
அனுமதி மறுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஜாதியின் பெயரால்
டீக்கடைகளில்
இரட்டைக் குவளை முறை
அனுமதிக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

சக மனிதனை
தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு என
சட்டங்கள் வகுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

ஒரு குலத்திற்கே
கல்வி என
வர்ணாசிரமம் வகுக்கப்பட்டது
இந்து மதத்தில் தான்

செருப்பு தைக்கிறவனின் மகன்
செருப்பு தான்
தைக்க வேண்டும் என
குலத் தொழிலை ஆதரித்தது
இந்து மதத்தில் தான்

பெண்கள்
பாவ யோனியில்
பிறந்தவர்கள் என
பெண்களை சிறுமைப்படுத்தியது
இந்து மதத்தில் தான்

Image may contain: 9 people

இன்றைய தினமணி தலையங்கம்.

Image may contain: 1 person















## முகம் சுழிக்க வைக்கிறது!

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் பொறுப்பற்றத்தனப் பேச்சு ##

தனது வரலாற்றில் இதுவரை சந்தித்திராத, எதிர்கொள்ளாத
மிகப் பெரிய சவாலை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இரண்டு உலகப் போர்கள் நடந்தபோதும், இதற்கு முன்னால் பிளேக், காலரா உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் பரவியபோதும், நிலநடுக்கம், சுனாமி, புயல்கள் தாக்கியபோதும் கூட மூன்றில் ஒரு பகுதி உலகம் இதுபோல முடக்கப்பட்டதில்லை. உயிரிழப்பும், பொருளாதார இழப்பும், பீதியும் ஒருசேர ஒட்டுமொத்த மனித இனத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஓர் அசாதாரண சூழல் இது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த செப்டம்பர் மாதமே தனது பேரழிவுப் பயணத்தை தீநுண்மி நோய்த்தொற்று தொடங்கிவிட்டது. ஏறத்தாழ எட்டு மாதங்களாகியும் இன்னும்கூட அந்த நோய்த் தொற்றை தடுப்பதற்கோ, குணப்படுத்துவதற்கோ மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படியே போனால், எத்தனை லட்சம் பேரை இந்த நோய்த்தொற்று பலிவாங்கப் போகிறதோ என்பது தெரியாது.

தீநுண்மி நோய்த்தொற்றின் ஆபத்து, அது ஏற்படுத்த இருக்கும் பேரழிவுகள் குறித்து சாமானிய மக்களில் பலருக்குத் தெரியாமல் இருப்பதில் தவறில்லை, வியப்புமில்லை.
ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த, ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பொறுப்பற்றத்தனமாகப் பேசுவதும், அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இல்லாமல் விமர்சனம் செய்வதும்தான் வேதனையாகவும், *முகம் சுழிக்க* வைப்பதாகவும் இருக்கின்றன.

ஒருமுறை இருமுறை அல்ல,
ஐந்து முறைகள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த எதிர்க்கட்சி திமுக.
அதன் இப்போதைய தலைவர், சென்னை மாநகராட்சியின் மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும்,
துணை முதல்வராகவும் இருந்தவர். எந்தவொரு கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இயற்கைப் பேரிடர்களும், நோய்த்தொற்றுகளும் வரும்போது, முதல்வர்களாக இருப்பவர்கள்தானே, அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைப்பது வழக்கம்.
நலத் திட்டங்களை அறிவிப்பதும், செயல்படுத்துவதும் அவர்களின் கடமை.

மாநில அரசிடம் போதிய நிதியாதாரம் இல்லை. இருக்கும் நிதியாதாரங்களை பயன்படுத்தித் தமிழகத்தில் உணவில்லை என்று ஒருவர்கூட இல்லை என்கிற நிலையை உறுதிப் படுத்தி இருக்கிறது தமிழக அரசு.
மருத்துவ வசதிகளைப் போர்க்கால நடவடிக்கையுடன் அதிகரித்து எந்தவிதச் சூழலையும் எதிர்கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது.

மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.3,000 கோடியும், நிவாரணப் பொருள்களுக்கு ரூ.9,000 கோடியும் மத்திய அரசிடம் கோரிய நிலையில், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.510 கோடியும், தேசிய நலவாழ்வு குழும நிதியாக ரூ.314 கோடியும்தான் மத்திய அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன. மக்களவையில் 38 உறுப்பினர்களைக் கொண்ட திமுக கூட்டணி, மத்திய அரசிடம் கூடுதல் நிதியுதவி கோர முதல்வருடன் இணைந்து கேட்காவிட்டாலும், தங்களது எம்பிக்களின் சார்பில் பிரதமரையும், நிதியமைச்சரையும் சந்தித்து வலியுறுத்துவதுதானே, பொறுப்பான எதிர்க்கட்சிக்கு அழகு. அதை விட்டுவிட்டு, விளம்பர மோகத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்துகிறார் முதல்வர் என்று அறிக்கை விடுகிறார். எதிர்க்கட்சித் தலைவரான திமுக தலைவர்
மு.க. ஸ்டாலின்.

முன்பு தனியார் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து இறந்தபோது பெற்றோருக்கு கட்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கி தவறான முன்னுதாரணம் படைத்தார். இப்போது நிவாரண வசதிகளைச் செய்து கொடுப்பதற்கே திணறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு. தீநுண்மி நோய்த்தொற்றால் மரணமடைபவர்களுக்கு ரூ. 1 கோடி இழப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறார். இதையும் திமுக அறக்கட்டளையிலிருந்து வழங்க வேண்டியதுதானே?

சுகாதார நிபுணர்களுடனும், மருத்துவ நிபுணர்களுடனும், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தும்போது, திமுகவின் கூட்டணிக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அனுமதி அளிக்காததைக் குறை கூறுகிறார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.1 கோடியை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டதாகக் குற்றஞ்சாட்டுகிறார். அரசின் அனுமதி பெற்று நிவாரணப் பணிகள் நடத்தப்பட வேண்டும் என்கிற உத்தரவுக்கும் கண்டனம் தெரிவிக்கிறார். இதெல்லாம், விவரம் தெரிந்து, பொறுப்பான பதவி வகித்த எதிர்க்கட்சித் தலைவருக்கே சரியென்று படுகிறதா?



திமுக தலைவர்தான் அப்படி என்றால், மூன்று முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஹிந்தி தெரியும் என்கிற ஒரே காரணத்துக்காக 2004-இல் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துடன் அமைச்சர் பதவி பெற்ற மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் *தயாநிதி மாறனின்* பேச்சு, எந்த அளவுக்குத் *தரம் தாழ்ந்த அரசியல்* சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என்பதன் வெளிப்பாடு. பேரிடர் காலங்களில் பிரதமர்களும், முதல்வர்களும் நிவாரண நிதி கோருவது புதிதா என்ன?
அதைப் ‘பிச்சை’ என்று வர்ணிக்கிறாரே தயாநிதி மாறன், *அவருக்கும் மூன்றாம் தரத் திமுக பேச்சாளர்களுக்கும் வித்தியாசம் இல்லை போலிருக்கிறதே...*

‘நமது நாட்டில் மட்டும்தான் பிரதமரும், முதல்வரும் பாத்திரம் ஏந்திப் பிச்சை எடுக்கிறார்கள். மக்கள் ஏற்கெனவே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களிடம் போய்ப் பிச்சை எடுக்கும் அரசுகள் நமது மத்திய - மாநில அரசுகள்தான்’ என்பதுதான் நிவாரண நிதி கேட்டது குறித்து தயாநிதி மாறன் கூறியிருக்கும் கருத்து.

*விளம்பர மோகத்தில் முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் எதிரிக் கட்சியாக இருக்காதீர்கள். கண்ணுக்குத் தெரியாத தீநுண்மியை எதிர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும்!*

-நன்றி தினமணி!


இசை குறிப்புகள் திருட்டு: போலீஸ் கமிஷனரிடம் இளையராஜா புகார்.

'பிரசாத் ஸ்டுடியோவில், தனக்கு ஒதுக்கப்பட்ட, ரெகார்டிங் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற இசை குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் திருடி விற்கப்பட்டுள்ளன' என, இசையமைப்பாளர் இளையராஜா போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இளையராஜா சார்பில், நேற்று அளிக்கப்பட்ட புகார்:சென்னை, சாலிகிராமத்தில், திரைப்பட தயாரிப்பாளர், எல்.வி.பிரசாத்திற்கு சொந்தமான, 'பிரசாத் ஸ்டுடியோ' என்ற, கட்டடம் உள்ளது. இதில், ஒரு பகுதியை, எனக்கு எல்.வி.பிரசாத், ரெகார்டிங் தியேட்டர் அமைத்து கொள்ள ஒதுக்கி தந்தார்.அதில், பல கோடி ரூபாய் செலவு செய்து, பாடல் பதிவு கூடங்கள் அமைத்தேன். ஏராளமான இசைக் கருவிகள், விலை மதிப்பற்ற, இசைக் குறிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.இந்த இடத்தில் இருந்து தான், 1977ல் இருந்து, தமிழ், தெலுங்கு என, பல்வேறு மொழி படங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன்.


latest tamil news



இந்நிலையில், 2019 செப்டம்பரில், எல்.வி.பிரசாத்தின் வாரிசான, ரமேஷ் பிரசாத் என்பவரின் மகன் சாய் பிரசாத், அந்த இடத்தில் இருந்து, என்னை வெளியேற்ற, பல வழிகளில் தொல்லை கொடுத்தார்.சட்ட விரோதமாக மின்சாரம், தண்ணீரை துண்டித்தார். தற்போது, ஊரடங்கு காரணமாக, என், 'ரெக்கார்டிங் தியேட்டர்' பூட்டப்பட்டு உள்ளது.சில தினங்களுக்கு முன், சாய் பிரசாத் துாண்டுதலில், மர்ம நபர்கள், எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள, இசைக் கருவிகள் உள்ளிட்ட பொருட்களை, சேதப்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.

அத்துடன், விலை மதிப்பற்ற, என் இசைக் குறிப்புகள் திருடப்பட்டு, வேறு நபர்களுக்கு விற்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சாய் பிரசாத் மற்றும் மர்ம நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, July 29, 2020

கால_சர்ப்ப_தோஷம்_நீங்க…..

ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகம் காலசர்ப்ப தோஷ ஜாதகம் ஆகும்.
இப்படிப்பட்ட ஜாதகம், அமைய பெற்றவர்கள் காலதர்ப்ப தோஷப் பரிகாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால், காரியத்தடைகளும் திருமணத்தடையும், புத்திர தோஷமும் ஏற்படும்.
காலசர்ப்ப தோஷம் ராகுதசை உள்ளவர்கள், கேது தசை நடப்பவர்கள், லக்னத்தில் 2ல் ராகு அல்லது கேது, லக்னத்திற்கு 8ல் கேது அல்லது ராகு உள்ளவர்களும் சர்ப்பதோஷப் பரிகாரம் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நன்மைகள் அடையலாம்.
இந்த தோஷத்திற்கு எளிய செலவில், பரிகாரம் செய்ய தமிழ்நாட்டில் புதுகோட்டை மாவட்டம் #பேரையூர் என்ற ஊரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பு மிக்க பிள்ளைப் பேறு வழங்கும் நாகநாத சிவன் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் சர்ப்பதோஷப் பரிகாரத்திற்காக ரிஷபாரூடராக காட்சி தருகிறார்கள் ராகுவும், கேதுவும்.
இத்திருத்தலத்திற்கு சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும், நீராடிய பிறகு ஈர உடைகளை கால் வழியாக கழற்றி, அங்கேயே போட வேண்டும். தலைக்கு மேல் ஈரஆடைகளை கொண்டு வரக்கூடாது, அதன் பிறகு இக்கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்து, தோஷம் நீங்கி நன்மை அடையலாம்.
திருக்கோவில் முகவரி நாகநாத சிவன் கோவில் பேரையூர், சிவபுரம் வழி - 622422
சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30க்குள் ராகுகாலத்தில் செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து, நமன சமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் பத்தாவது கிலோமீட்டரில், பேரையூர் உள்ளது.

தமிழகத்தில் ஆக., 1 முதல் பஸ், ரயில் ஓடாது?

தமிழகத்தில், ஆகஸ்ட், 1 முதல், பஸ்கள் மற்றும் ரயில்கள் இயங்குவதற்கான வாய்ப்பு குறைவு என, தகவல் வெளியாகி உள்ளது.
TamilNadu, bus, train, TNCoronaUpdates, TNHealth, TNFightsCorona, Corona, TNAgainstCorona, TNGovt,coronavirus, Covid19,StayHome, Quarantine,lockdown,

Monday, July 27, 2020

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

திருச்சி கொரோனா பரிசோதனையில் முன்னுக்கு பின் முரணான முடிவுகள் வழங்கியதாலும் விதி முறையை மீறி கட்டிடம் கட்டியுள்ளதாலும் திருச்சி உறையூரில் செயல்படும் “டாக்டர் டயக்னோஸ்டிக் செண்டர்” என்கிற பரிசோதனை மையம் மூடப்பட்டது..
இந்த கொரானா சோதனையை தனியாரும் செய்யலாம் என அனுமதி இந்த செனடருக்கு தந்த பின் இது இரண்டாவது முறையாக மூடப்படுகிறது..
கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே காரணத்தால் சீல் வைக்கப்பட்ட சென்டர் மறுபடி அனுமதி பெற்று திறந்து இன்று மறுபடி சீல் வைக்கப்பட்டது..
குறிப்பாக இந்த லேப்பில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் பாசிட்டிவ் என முடிவு கூறி சில ஆஸ்பத்திரிகளுக்கு அட்மிஷன் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இவ்வாறாக பாசிட்டிவ் என கூறி குறிப்பிட்ட சில ஆஸ்பத்திரிகளுடன் சேர்ந்து கோடிகணக்கில் டாக்டர்ஸ் டயக்கோஸ்டிக் சென்டர் வசூல் செய்து வந்துள்ளது
என்னங்க இவன் கிட்ட டெஸ்ட்க்கு போறவங்க எல்லாத்துக்குமே பாசிட்டிவ் ரிப்போர்டடா தர்றான்..நோய் இருந்தால் தானே பாசிட்டிவ் ரிப்போரட் தரனும்..
இது புதுசும் அல்ல இவர்களுக்கு...
இதே போல 2017 ல் இங்கு டெங்கு பரிசோதனைக்கு பல மருத்துவர்களும் இங்கு பரிந்துரைத்ததால் கூட்டம் அள்ளியது..டெங்கு இல்லை சாதரண பரிசோதனை என்றால் 100 அல்லது 200 தான் கிடைக்கும்...பார்த்தான் இந்த யோக்கியன்.. அள்ளி விடு என வருபவர் அனைவருக்கும் சாதரண காய்ச்சலாக இருந்தாலும் டெங்கு பரிசோதனை மேற்கொண்டதாக கூறி 2500 ரூ வசூலில் இறங்கினான்...(அப்போது அரசு இலவசமாக வழங்கும் டெங்கு ஆய்வுக்கான கிட் ரூ 140 க்கே கிடைத்தது என்பது தனி..)
அதிகம் பேரிடம் இல்லை..சும்மா 300 முதல் 400 பேரிடம்...இவர்களுக்கு டெங்கு இருப்பதாக சர்ட்டிபிக்கெட்..அதாவது இல்லாத டெங்கு இருப்பதாக கூறி...
சந்தேகத்தின் பேரில் அப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வில் இந்த விவரங்கள் கண்டறியப்பட்டு கலெக்டர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கபட்டு அப்போதே நடவடிக்கை எடுத்தனர்..
அன்று டெங்கு..இன்று கொரோனா.அவ்வளவு தான் வித்தியாசம்...
இது தொடர்கதையாக இந்த “டாக்டர் டயக்னோஸ்டிக் செண்டர்” மீது அடிக்கடி மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறது..
இந்த லேப்பின் லைசென்சை ரத்து செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்..
மாவட்ட நிர்வாகமே,
ஓன்று, சரியாக பரிசோதனை முடிவுகளை தரும்படி கடுமையாக உத்தரவு போடுங்க..
அல்லது மக்களின் உயிருடன் விளையாடும் இந்த சென்டரை நிரந்தரமாக முழுவதும் மூடிருங்க..
இந்த செனட்ர் மீது குற்றசாட்டு வருவதும் அவன் “ஏதோ “ செய்து சரிகட்டி மறுபடி திறப்பதும் சரியாக படவில்லை...
இது மளிகை கடையோ பேன்சி ஸ்டோரோ இல்லை..என்ன வேணா செய்யலாம் பணம் மட்டுமே பிரதானம் என போவதற்க்கு..
சரியான முடிவை எடுங்க...
பெரிய அளவில் பொது மக்கள் பாதிப்பதற்க்கு முன்பு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட்டே ஆக வேண்டும்..

Image may contain: one or more people, motorcycle and outdoor
Image may contain: one or more people and outdoor

மேலும் 47 சீன 'ஆப்'களுக்கு தடை.

சீனாவில் இருந்து செயல்படும், 59 மொபைல் செயலிகளுக்கு, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக, 47 செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250 செயலிகளின் பட்டியலும், தயாராகி வருவதாக தெரிகிறது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோதலாக மாறியது. எல்லையில் நடந்த மோதலில், நம் ராணுவத்தின், 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதையடுத்து, 'சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

சீனாவைச் சேர்ந்த, மொபைல் செயலிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், தகவல்கள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, 'டிக்டாக்' உட்பட, 59 சீன செயலிகளுக்கு, மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த, மேலும், 47 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட செயலிகளின் மறுவடிவமாக இருந்தவை. இது குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இவற்றைத் தவிர, சீனாவைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட செயலிகள் குறித்த தகவல்கள் ஆராயப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கும்பட்சத்தில், இவற்றுக்கும் தடை விதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காலிகள் பதுங்குகிறார்கள் தற்காலிகமாக.

சற்றுமுன் நியூஸ்7 விவாதத்தில் நெல்சன் பம்மி பதுவிசா வந்தாப்பல!
வழக்கப்படி எதையும் முழுசா படிக்காம வந்த அறிவு சீவிகள் ஒவ்வொரு பாயிண்ட்லும் கே.டி. ராகவனுடன் மோதி மூக்குடைப்பட்டனர்.
அதிசயமாக ராகவனுக்கு பதில் அளிக்க ஓரளவு வாய்ப்பு தரப்பட்டது.
மத்திய அரசின் வரைவு சட்டத்தில் சொல்லாத விஷயத்தையும் அதனால் இவர்கள் ஊகித்த விஷயத்தையும் ஒவ்வொருவரும் உண்மை போல் பேசியதை ஒவ்வொன்றாக தீர்க்கமாக முறியடித்தார்.
உதாரணமாக இலவச மின்சார விஷயத்தை மத்திய அரசு மறுக்கிறது என்பது போல பேசி ஒரு பத்திரிக்கையாளர் மூக்குடைபட்டார். நேரடியாக சொல்லுங்கள் அப்படி இருக்கிறதா? ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்டவுடன், இல்லை இல்லை.. நாளை அப்படி வரலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று ஆத்தினார்.
கடைசியில் நாங்க கேட்போம். நீங்க பதில் சொல்லணும் . ஆமா.. என்று சூனாபாணா மாதிரி போனாங்க.
இன்று நடந்த வாதத்தில் நெல்சன் மூல வியாதி வந்தவர் போல ஒரு நெளிவுடன் அமர்ந்து ஒதுங்கியிருந்தது வித்தியாசமாக இருந்தது.
மாரிதாசின் அதிரடி வேலை செய்கிறது போலிருக்கு !
பயந்துட்டாயா குமாரு.!

Sunday, July 26, 2020

திறமைமிகு நடிகை இவர்.

கலர் படங்களில் பார்ப்பதைவிட கறுப்பு வெள்ளை படங்களில் இவரின் அழகு எப்போதும் தூக்கலாகவே தான் இருக்கும்....
கண்களால் பேசும் நடிகைகள் ஒரு சிலர் தான்... அவர்களில் நளினம் ததும்பும் கண்கள் இவரோடது... இவரது பேசும் கண்கள் சிலுக்கு போல போதை தராது... மாதவி போல மயக்கம் தராது... ஆனால் நிஜமான ஒரு காதலை முன்னே நிறுத்தும்.... "எரும... நான் போதாதா ஒனக்கு....." என்று கேட்கும் கண்கள் அவைகள்...
அழகு, நளினம், நடிப்பு, அதிலும் மெஜூரிட்டி.... இப்டி எல்லாம் ஒன்றாய் சேர்ந்த நடிகைகளின் இருப்பு ரொம்ப கம்மி... இல்லையா... அதில இவங்க முதன்மையானவங்க...
பாருங்க... அந்த சின்ன வயசு கமலஹாசனோட வயது மீறியும் பொருந்தி போகும் அந்த பாந்தம்... அப்டியே ரஜினி மனைவியாகவும் சரியா செட் ஆகுற இயல்பு....
அதான் ஸ்ரீவித்யா....
இவரை எந்த இடத்திலும் பொருத்தி பார்த்துவிட முடியும்... அப்படி ஒரு ஜோக்கர் போன்றவர் இவர்... ஜோக்கருக்கு தான் எந்த இடத்திலும் பொருந்திப்போகும் திறமை இருக்கிறது என்பது தான் உண்மை.... கமலோடு அபூர்வ ராகம் பாடிய அதே ஸ்ரீவித்யா சாப்ளின் செல்லப்பாவுக்கு மேட்ச் ஆனதும் அப்டி ஒரு அதிசயம் தான்... அதே அபூர்வ சகோக்களுக்கு அம்மாவும் இவரே.... அதே நேரம் நவீன கால விஜயின் காதலுக்கு மிகப்பெரிய மரியாதை செய்ததும் இவரே....
திரைத்துறையில் எல்லாம் தெரிந்திருந்த இவருக்கு சொந்த வாழ்க்கையில் நல்லதனமாய் முடிவெடுக்க தெரியாமல் கடைசிவரை பரிதாபமாகவே வாழ்ந்து முடித்துவிட்ட ஒரு ஜீவன்.... அது ஒன்று தான் பெரும் உறுத்தல்... பாவம்...
ஸ்ரீவித்யான்னாலே அபூர்வ ராகங்கள், அபூர்வ சகோதரர்கள், நம்மவர், புன்னகை மன்னன் மாதிரியான படங்கள் நம் நினைவைவிட்டு நீங்க மறுக்கின்றன....

ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள்?

அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று.
வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகிற பாதிப்பை தடுக்கவும் தங்களை பாதுகாத்துகொள்ளவும் நோய்எதிர்ப்பு சக்திமிக்க கேழ்வரகு \ கம்பை பயன்படுத்தியுள்ளனர்.
தானியம், கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். மேலும் அந்த நோய், மழை பெய்து மண் குளிர்ந்தால்தான் குறையும். அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக் கொண்டார்கள்.
அதிலும் விவசாய வேலை இல்லாத மாதமான ஆடி மாதத்தில் உற்சவங்களை நடத்தினார்கள். சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி, ஆனி மாதம் வரை நெல்லோ, தானியங்களோ இருப்பு வைத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள். ஆடியில் அது தீர்ந்து உணவுக்குத் தடுமாறுவார்கள். பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பஞ்சத்தைத் தீர்க்கவும்தான் இந்த ஆடிமாத வழிபாடு உதவியிருக்கிறது.
அப்போதைய மக்களின் பிரதான உணவு கூழ்தான். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள் நடக்கும் ஆடி மாதத்தில்... கோயிலில் வைத்துக் கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது.
அதேபோல் கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என்று எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான்.
இப்படிச் சத்தான, நோய்களை தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும்... கஞ்சியும். பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி ஊற்றுவதை நம் தமிழகம் பலமுறை பார்த்திருக்கிறது. அதற்கு அடிப்படைகூட கோயில்களில் கஞ்சி ஊற்றுவதுதான்.
எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தை
கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!

திருப்பதி, திருமலைக் கோவில் போலவே.


Image may contain: food








தினசரி நைவேத்தியம் சமைக்க மண் பாண்டங்களை உபயோகிக்கும் கோவில் உண்டு
அது,...
பூரி ஜெகன்நாதர் கோவில்....
மாயக் கண்ணன், தினசரி ராமேஸ்வரத்தில் அதிகாலை நீராடி,
பின் துவாரகைக்குச் சென்று, அரச பரிபாலனம் செய்து,
மதிய உணவுக்கு, பூரி வருவதாக ஐதீகம்....
மகாராஜா அல்லவா...? உணவும் அதற்கேற்ப ராஜபோஜனமாக இருக்க வேண்டும் அல்லவா...??
அதனால் இவருக்கு,
தினசரி படைக்கப் படும் நைவேத்தியங்களின் எண்ணிக்கை... எண்ணிக்கை...
ஐம்பத்து ஆறு வகைகள்....
ஐம்பத்து ஆறே வகைகள் தான்....

இவைகளுக்கு மகா பிரசாதம் என்று பெயர்....
இவைகளைச் சமைக்க, பூரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள் மட்டுமே உபயோகப் படுத்த படும்....
இவைகள் மதியம் படைக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு வழங்குவார்கள்....
சுமார் 1000 மண்பாண்டங்கள் தினசரி பயன்படுத்தப்பட்டு, பின் உடைக்கப் படும்....
இங்கே இன்னொரு அதிசயம், ஒன்றின் மேல் ஒன்றாக பல மண்பாண்டங்கள் அடுக்கி வைத்து சமைப்பார்கள்...
கீழ்பாத்திரத்தில் வெந்துள்ள அளவுக்கு மேலே உள்ள பாத்திரங்களில் உள்ள உணவும் வெந்திருக்கும்...
தினமும் குறைந்தது 25,000 பக்தர்களுக்கு மகாராஜா உணவளிக்கிறார்....
நாமும் அவரிடம் கையேந்துவோம்...
ஓம் நமோ நாராயணாய...
A List of Chhapana 56 Bhoga of Lord Jagannath-Mahaprasad
MAHAPRASAD is the main offering of rice in Jagannath Temple.
In most temples of India, devotees may take "PRASAD", holy food that has been offered to the deities. But only here in Jagannath Puri is this blessed food called "MAHAPRASAD''.
The main 56 items of CHHAPANA BHOGA.or MAHAPRASAD, are as follows:
Rice Preparation
1. Sadha Anna - Simple Rice water
2. Kanika - Rice, Ghee and Sugar
3. Dahi Pakhal - Curd Rice and water
4. Ada Pakhal - Rice, Ginger and water
5. Thali Khechedi - Lentil, Rice with Sugar and Ghee
6. Ghea Anna - Rice mixed with Ghee
7. Khechedi - Rice mixed with Lentil
8. Mitha Pakhal - Rice , Sugar and water
9. Oria Pakhal - Rice, Ghee, Lemon and Salt
Sweets
10. Khaja - Made of wheat
11. Gaja - Made of wheat, sugar and Ghee
12. Ladu - Made of wheat, sugar and Ghee
13. Magaja Ladu
14. Jeera Ladu
15. Jagannath Ballav - Wheat, Sugar and Ghee
16. Khuruma - Made of wheat, Sugar and Salt
17. Mathapuli - Made of Ghee, Ginger and a kind of beans ground in to a thick paste
18. Kakara - Made of Ghee and Wheat
19. Marichi Ladu - Made of Wheat and Sugar
20. Luni Khuruma - Made of Wheat, Ghee and Salt
(Onreturn of Bahuda Yatra during Suna Vesha, Rasagolla are offered as Bhogas but on no other day Rasagollas are allowed for Bhog)
Cakes, Pancakes and Patties
21. Suar Pitha - Made of wheat and Ghee
22. Chadai Lada - Made of Wheat, Ghee and Sugar
23. Jhilli - Rice Flour, Ghee and Sugar
24. Kanti - Rice Flour and Ghee
25. Manda - Made of wheat and Ghee
26. Amalu - Made of wheat, ghee and sugar
27. Puri - Made of wheat and Ghee and deeply fried like a small thin pan cake
28. Luchi - Made of Rice, Flour and Ghee
29. Bara - Made of Curd, Ghee and a kind of beans
30. Dahi Bara - Cake made of a kind of a beans and curd
31. Arisa - A flat cake made of Rice flour and Ghee
32. Tripuri - Another flat cake made of Rice, Flour and Ghee
33. Rosapaik - A cake made of wheat and
Milk Preparations
34. Khiri - Milk, Sugar with Rice
35. Papudi - Prepared from only the cream of milk
36. Khua - Prepared out of Pure Milk slowly boiled over many hours to a soft custard like consistency
37. Rasabali - Made of Milk, Sugar and Wheat
38. Tadia - Made of fresh cheese, sugar and Ghee
39. Chhena Khai - Made of fresh Cheese, milk and sugar
40. Bapudi Khaja - cream of milk, sugar and ghee
41. Khua Manda - Made of milk, wheat and Ghee
42. Sarapulli - This is the most famous and most difficult milk dish to prepare. It is made of pure milk boiled slowly for hours and spread in to a large pizza shaped pan.
Curry with Vegetables
43. Dali
44. Biri dali
45. Urid Dal
46. Muga Dal
47. Dalama - This is one of the typical dishes in Oriya Home. It is a combination of Dahl and Vegetable. Usually eggplant, beans, sweet potato and tomatoes, although tomatoes are not used in Temple preparations. Coconuts and a dried root of vegetables known as Bodhi which looks like a mush room and is high in protein are added.
48. Maur
49. Besar
50. Sag - A spinch dish
51. Potala Rasa
52. Goti Baigana
53. Khata
54. Raita - a yogurt like dish with curd and radish.
55. Pita
56. Baigilni
OM NAMO NARAYANA!!!!!

கருப்பர் கூட்டத்திற்கு நிதி தந்தது யார்? செந்தில்வாசனிடம் தீவிர விசாரணை.

கருப்பர் கூட்டம் சேனலுக்கு நிதி அளித்து வந்தவர்கள் யார் என்பது குறித்து செந்தில்வாசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில் ஹிந்துக்களின் மனம் புண்படும்படியான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. சமீபத்தில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிடப்பட்டது. இது தொடர்பான புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் 49; போரூர் சுரேந்திரன் நடராஜன் 36 உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் செந்தில்வாசனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

கருப்பர் கூட்டம், கந்த சஷ்டி கவசம், விசாரணை

சேனலின் நிதி சார்ந்த விஷயங்களை செந்தில்வாசன் தான் கையாண்டுள்ளார். இவர் வாயிலாகவே சேனலுக்கு நிதி வந்துள்ளது.சேனலுக்கு பணம் எங்கிருந்து வந்தது யாரிடம் இருந்து வந்தது என்பது குறித்து செந்தில்வாசன் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளிக்கிறார். ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகள் நிதி அளித்து வந்துள்ளன. அவர்கள் யார் என்பது குறித்து தெரிவிக்க மறுக்கிறார்.

செந்தில்வாசன் அவரது கூட்டாளி சுரேந்திரன் நடராஜன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. முழுமையான விசாரணைக்கு பின்னரே இவர்களின் சதி திட்டம் தெரியவரும் என காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தி.மு.க., முயற்சிக்கு முருகன் முட்டுக்கட்டை.

தமிழக பா.ஜ., தலைவர் பதவியை எதிர்பார்த்த, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு, துணை தலைவர் பதவி வழங்கியதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, அவர், தி.மு.க.,வில் சேருகிறார் என்ற, தகவல் பரவியது. இதையடுத்து, தமிழக பா.ஜ., தலைவர் முருகன், அவரை சந்தித்து சமரசப்படுத்தியதால், தி.மு.க.,வுக்கு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ., தலைவர் பதவியை, நயினார் நாகேந்திரன் எதிர்பார்த்தார்; அப்பதவி கிடைக்கவில்லை. தமிழக பா.ஜ., நிர்வாகிகள் பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தலைவர் பதவிக்கு அடுத்ததாக, பொதுச்செயலர் பதவி தான், அக்கட்சியில் முக்கியமாக கருதப்படுகிறது. அதாவது, தமிழக பா.ஜ., எடுக்கும் முக்கிய முடிவுகளை ஆராய்வதற்கான, மையக் குழுவில் பங்கேற்க வேண்டும் என்றால், பொதுச்செயலர் பதவியில் இருக்க வேண்டும். எனவே, மற்ற பதவிகளை விட, பொதுச்செயலர் பதவியை பெறுவதில், கட்சியினர் ஆர்வம் காட்டுவர்.

நயினார் நாகேந்திரன் எதிர்பார்த்த தலைவர் மற்றும் பொதுச்செயலர் பதவி கிடைக்கவில்லை.அவருக்கு, துணை தலைவர் பதவி தான் வழங்கப்பட்டது. இதனால், அவர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தி.மு.க., துணைப் பொதுச்செயலராக இருந்த, வி.பி.துரைசாமி, பா.ஜ.,வில் இணைந்தார். அவரது வாயிலாக, தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலை விரிக்கப்பட்டது. அதேபோல், பா.ஜ.,வில் உள்ள அதிருப்தியாளர்களை இழுக்க வேண்டும் என, மாவட்டச் செயலர்களுக்கு, தி.மு.க., மேலிடம் உத்தரவிடப்பட்டது.

latest tamil news


சமீபத்தில், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதரத்தினம் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த, பா.ஜ., நிர்வாகிகள் சிலர், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த வரிசையில், நயினார் நாகேந்திரனையும் இழுக்க முயற்சி நடந்தது. இத்தகவல், தமிழக, பா.ஜ., தலைவர் முருகனுக்கு தெரிய வந்ததும், அவர், திருநெல்வேலிக்கு சென்று, நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது, முருகனுக்கு தடபுடல் விருந்து அளித்து உபசரித்தார், நயினார் நாகேந்திரன்.

இந்த சந்திப்புக்கு பின், நயினார் நாகேந்திரன், தி.மு.க.,வில் இணைய போகிறார் என்ற செய்திக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, July 25, 2020

வெறுக்கத்தக்க சில மனிதர்கள்...*

வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உள்ளார்கள், மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க மனிதர்கள் உள்ளனர், அவர்கள் யார் என்பதை நாம் அறியவேண்டும்,
அத்தகைய மனிதர்களிடம் நாம் எப்போதும் கொஞ்சம் பாதுகாப்புடனேயே நடந்து கொள்ள வேண்டும்.
அம் மனிதர்கள் யார் என்று பட்டினத்தார் சொல்கிறார்,
அனைவருக்கும் புரியும் விதமாக மிகத்தெளிவாக அம்மனிதர்கள் பற்றிச் சொல்கிறார்.
வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள், வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம், என்றாலும், விடமாட்டார்கள் , வலிய இழுப்பார்கள்.
நன்மைக்கு உதவி செய்யார், தீமை என்றால் அதற்கு உதவ தயங்கமாட்டார்.
தினந்தோறும், துன்பப்பட்டு வஞ்சகம் செய்து பணம் சேர்ப்பார், அந்தப் பணத்தை தான் விரும்பும் ஒரு பெண்ணுக்கு கொடுத்து அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர்.
அதாவது தான் சாகும் வரை இப்படியே நாளைப் போக்குவர். இப்படிப் பட்ட மனிதர்கள் இவ்வுலகில் ஏன் பிறந்தார்கள், இறைவனே என்று பாடுகிறார்.
வாதுக்குச் சண்டைக்குப் போவார். வருவார் வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடு வார்தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளந்து மயங்கிடு வார்விதி மாளும்மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏம்பனே.” (பட்.பா.18)
சிலமனிதர்கள் உண்மை என்பதையே பேசி அறிய மாட்டார்கள், நல்லவர்களை ஒருநாளும் போற்ற மாட்டார்கள்.
நல்லோரை நிந்திப்பதையே கொள்கையை இருப்பார்கள்.
வசை பாடுவதற்கு இன்னார் என்று பாராமல் தன்னைப் பெற்று வளர்த்த தாயையே திட்டுவார்கள்,
வணங்க வேண்டிய தாயையே பழித்துப் பேசும் இவர்கள் பயங்கரமானவர்களே.
நல்ல செயல்களைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்களை எந்த வம்பில் மாட்டி விடலாம் என்று சதா சதி திட்டம் போடுவார்கள்.
தமக்காக உளைத்தவர்களுக்குக் கூட உபகாரம் செய்யாத இவர்கள் இருப்பதால் எவருக்கும் லாபமில்லை, இவர்கள் இறந்தாலும் நட்டமில்லை என்கிறார் பட்டினத்தார்.
”ஓயாமல் பொய்சொல்வர் நல்லோரை நிந்திப்பர் உற்றுப்பெற்ற
தாயாரை வைவர் சதி ஆயிரம் செய்வர் சாத்திரங்கள்
ஆயார் பிறர்க்கு உபகாரம் செய்யார் தடை அண்டினர்க்கு ஒன்று
ஈயார் இருந்து என்ன போய் என்ன காண கச்சி ஏகம்பனே.” (பட்.பா.18)
ஆகவே , இவ்வாறான மனிதர்களிடமிருந்து விலகி, மனித சமுதாயத்திற்கு உதவும் உத்தமர்களா வாழுங்கள், பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்! என்கிறார் பட்டினத்தார்.
”உணர்ந்து திருந்து என்கிறார் வேதாத்திரியார்.
”பெருந்துன்பம் உனக்கோ பிறருக்கோ உன்னால் வந்தால்
வருந்து. நீ முயற்சி செய்!
வழிகாண்! ஈடாற்றிடத்
திருந்திடு, பிறரையும்
திருத்திடு, உலகுக்கு
விருந்திடு. நல்வாழ்வின்
வித்தாம் இவ்வொழுக்கத்தால்” (ஞானகளஞ்சியம் பாக.1.பா.622)
திருந்தி வாழவும் வழிகாட்டுகிறார் வேதாத்திரி மகரிசி.
”பழக்கமே பற்றாக! பாசமாக!
பரிணமித்துச் சிக்கல் வாழ்விலாச்சு.
இழக்கின்றோம் இயற்கைவள இன்பமெல்லாம்.
இதையுணர்ந்து ஏற்றபடித் திருந்தி வாழ்வோம்.”
நன்றி. பட்டினத்தாரும் வேதாத்திரி மகரிசியும்….

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது.

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.
2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.
3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.
4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"
5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!
6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.
7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.
8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.
9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.
10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.
11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.
12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.
13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.
14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.
15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.
16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.
17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.
18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.
19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*
20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் *மற்றவர்களுக்கும்* பயன்தரும் என்றால் நன்றி

அம்மா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையாகப் பட்டது ரைட்டு ....

ஆட்சி மாறி,அரசாங்கம் வேறு கட்சியிடம் சென்றாலும் அம்மா இல்லம் ஒழுங்காக பராமரிக்கப் படுமா?????
அப்படி ஒரு சூழ்நிலை அமையும் பட்சத்தில், நிச்சயமாக வாய்ப்பு இல்லை, வேண்டுமென்றே பராமரிப்பு இல்லாமல் புறக்கணிப்பார்கள், மெரினாவில் நினைவில்லம் அமைக்கவும், சட்டமன்றத்தில் புகைப்படம் திறக்கவும் நீதிமன்றம் சென்றவர்கள், ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் சும்மா இருப்பார்களா??? தற்போது உள்ளவர்கள் யோசித்து பார்க்க வேண்டும், அப்படி ஏற்படும் பட்சத்தில் இதற்கு யார் அப்போது பொறுப்பேற்க்க போகிறார்கள்??
(தயவுசெய்து மீண்டும் நமது ஆட்சி தான் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டாம், ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றி வாக்களித்ததை போல இம்முறையும் அந்த துர்பாக்கிய நிலைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது, யார் பொறுப்பு என்று சிந்தித்து பதில் சொல்லுங்கள்)

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...