Saturday, December 31, 2011

அறிந்துகொள்ள வேண்டிய அவசர எண்கள்

போலீஸ்:
100

போலீஸ் SMS:
9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS:
9840983832

தீயணைப்புத் துறை:
101

போக்குவரத்து விதிமீறல்:
103

விபத்து:
100, 103

போக்குவரத்து விதிமீறல் SMS:
9840000103

ஆம்புலன்ஸ்:
102, 108

பெண்களுக்கான அவசர உதவி:
1091

குழந்தைகளுக்கான அவசர உதவி:
1098

அவசர காலம் மற்றும் விபத்து:
1099

மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி:
1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:
1033

கடலோரப் பகுதி அவசர உதவி:
1093

இரத்த வங்கி அவசர உதவி:
1910

கண் வங்கி அவசர உதவி:
1919

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

Wish you …. Happy New Year 2012
 
 
 
 

Nights r Dark but Days r Light, Wish ur Life will always be Bright. So my Dear don`t get Fear Coz, God Gift us a BRAND NEW YEAR.
 
Throughout the Coming Year may Ur life be filled with little celebration of Happiness..Wishes U a Bright, Happy N Prosperous New Year 2012...
 
What new year brings to us will greatly depend on what we bring in 2 the new year Let`s all start anew with lots of positivity A great 2012.....
 
Morning brings Hope,Afternoon brings Faith,Evening brings Love,Night brings Rest,Hope you will have all of them everyday.Happy New Year.
 
My wishes foryou,Great start forJan,Love for Feb,Peacefor march,No worries forApril,Funfor May,JoyforJuneto Nov,Happiness dec.Happy New Year.

நீங்க சாமியார் கிடையாது

ஒரு கார் சாமியார்களின் மடத்திற்கு அருகே வேலை செய்யாமல் நின்று விட்டது.அன்றிரவு அங்கே தங்க அவன் அனுமதி கேட்டான்.அந்த மங்க் தலைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு உணவளித்து காரையும் சரி செய்து அவனை தங்க வைத்தார்.அன்றிரவு அங்கே ஒரு வினோதமான சத்தம் கேட்டது அவன் அந்த மங்க்கிடம் “அது என்ன சத்தம்?” என்றான், அதற்கு அவர்,”அதை மங்க்களிடம் மட்டுமே பகிர்வோம் உனக்கு சொல்ல முடியாது” என்றார்.அவனுக்கு இது ஏமாற்றம் தந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..அங்கிருந்து விடை பெற்றான்.சில வருடங்களுக்கு பிறகு மறுபடியும் அவன் கார் அங்கே பிரச்னை செய்தது.

அன்றிரவும் அங்கே தங்க அவன் அனுமதி கேட்டான், அந்த சாமியார்களின் தலைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவனுக்கு உணவளித்து காரையும் சரி செய்து அவனை தங்க வைத்தார்.அன்றும் அதே வினோதமான சத்தம் கேட்டது.அதே போல அவன் கேட்க அந்த சாமியார் ,”அதை சாமியார்களிடம் மட்டுமே பகிர்வோம் உனக்கு சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டார்.“அது என்ன என்று தெரியாவிட்டால் என் தலை வெடித்து விடும், இதற்காகவே நான் சாமியார் ஆகிறேன் அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்றான்.

அவர் அதற்கு ,”நீ உலகம் முழுக்க சுற்றி எத்தனை பூவிதழ்கள் இருக்கின்றன மற்றும் எத்தனை மணல் துகள்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டும்” என்றார்.
அவன் விடை பெற்றான்.சுமார் 40 வருடங்களுக்கு பிறகு திரும்ப வந்தான்,“நான் உலகமெங்கும் சுற்றி விட்டேன் இதோ உங்கள் கேள்விக்கு பதில்: 1278954483 பூவிதழ்களும், 5769384572949050 மணல் துகள்களும் உள்ளன” என்றான்.அவர்,”வாழ்த்துக்கள் இப்போது நீ சாமியாராகி விட்டாய் உனக்கு அந்த சத்தத்தின் ரகசியத்தை காட்டுகிறேன்” என்று சொல்லி விட்டு அவனிடம் ஒரு சாவியை தந்தார் “அதோ அந்த மரக்கதவின் பின்னால் இருந்து வருகிறது அந்த சத்தம்” என்றார்.

இவன் சென்று அக்கதவை திறந்தான் அங்கே இன்னொரு பிளாட்டின கதவும் சாவியும் இருந்தது அதையும் திறந்தான் அங்கே ஒரு வைரக்கதவும் சாவியும் இருந்தது அதையும் திறந்தான், இதே போல வைடூரியம், மரகதம், கோமேதகம், பிளாஸ்டிக் எல்லா கதவுகளையும் திறந்தான் கடைசியாக தங்க கதவு இருந்தது அதையும் திறந்தான் அங்கே அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அவனுக்கு தெரிந்தது….
அது என்னவென்று உங்களுக்கு சொல்ல முடியாது
ஏனென்றால் நீங்கள் சாமியார் கிடையாது!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

HAPPY NRE YEAR 2012.......................

Wish U Happy New Year 2012

 
 
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup
 
joinGroup

Wednesday, December 28, 2011

நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் வழிப்பறிக் கொள்ளை!

அநேகமாக அரசு விரைவுப் பேருந்துகளில் வெளியூர்ப் பயணம் சென்று வரும் அனைவருமே அனுபவப்பட்ட விஷயம்தான் இது. என்றாலும் என் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்க்காமல் இருக்க முடியவில்லை.

பேருந்தில் இடம் கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கும் நேரத்தில் அடித்து பிடித்து இருக்கையில் உட்கார்ந்த பிறகுதான் உணவு ஞாபகம் வரும். சரி போகிற வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அங்கேதான் ஆரம்பிக்கிறது வினை.

நகர நெருக்கடிகளையெல்லாம் கடந்து காட்டுப் பகுதில் இருக்கும் உணவகத்தில் நிறுத்தப்படுகிறது பேருந்து. அங்கே ஒரு குரல் 'சார் வண்டி பத்து நிமிஷத்துக்கு மேல நிற்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம் சார்' ஏதோ பதிவு செய்யப்பட்ட குரல் போல ஒவ்வொரு பேருந்து நிறுத்தப்படும் போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வேகமாக உணவகத்திற்கு உள்ளே நுழைந்து ஏதாவது சாப்பிடலாம் என்று விலையைக் கேட்டால் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. நட்சத்திர உணவகங்களில் கூட கேள்விப்படாத விலை. சரி தொலைகிறது என்று அமர்ந்தால் நாம் சாப்பிட வேண்டியதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். சாதாரண தோசை வாங்கினாலும் சட்னி சாம்பாரெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அசைவ குருமாக்கள்தான் இருக்கிறதென்று எதையோ ஊற்றுவார்கள். சைவம் சாப்பிடுவோர் நிலை பரிதாபம்தான்!

சரி சாப்பிட வேண்டாம் வேறு ஏதாவது வாங்கலாம் என்று வெளியே வந்தால் குளிர் பானங்கள், பிஸ்கட்டுகள், நொருக்குத் தீனிகள் என்று எதை வாங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையைக் காட்டிலும் 50 சதவீத்திற்கு மேல் விலை. 10 ரூபாய் பிஸ்கட் 15 ரூபாய். 15 ரூபாய் குளிர்பானத்தின் விலை 25 ரூபாய். இவற்றில் பலவும் போலியான தயாரிப்புக்கள். சரி டீ காபியாவது குடிக்கலாம் என்று நினைத்தால் அதற்கு 10 ரூபாயை வாரி வழங்க வேண்டும். அப்படியே குடித்தாலும் அதற்கு வெந்நீரே தேவலை என்று நினைக்கத் தோன்றும்.

இருக்கும் வயிற்றெரிச்சலையெல்லாம் அணைத்துக் கொள்ளலாம் என்று தண்ணீர் பாக்கட் விலையைக் கேட்டால் ஒரு பாக்கட் 3 ரூபாய்! அது தண்ணீரா அல்லது பெட்ரோலா என்று சந்தேகம் வந்து விடும். எனக்குத் தெரிந்த வரை விலை அதிகம் கொடுத்தாலும் அங்கே தரமாகக் கிடைக்கும் ஒரே பானம் இளநீர் மட்டுமே. மற்ற அனைத்துமே ஏதோ கொஞ்சம் சுவையுடைய சாக்கடைக்கு சமமானவையே.

எதுவுமே வேண்டாம் சிறுநீர் பாரத்தையாவது இறக்கித் தொலைக்கலாம் என்று கழிவறை நோக்கி நடந்தால் அங்கேயும் அதிர்ச்சி காத்திருக்கும். சிறுநீர் கழிக்க 3 ரூபாயாம். வேறு வழியின்றி உள்ளே நுழைந்தால் நீங்கள் வியாதிகளை விலை கொடுத்து வாங்கப் போகிறீர்கள் என்று பொருள். அவ்வளவு சுத்தம்.. சுகாதாரம்.! சரி வெளியில் சாலையோரமாக நின்று வெளியேற்றலாம் என்று நினைத்து நடந்தால் வேகமாக வரும் விசில் சத்தம் நம்மைத் தடுக்கும். இதற்காகவே பிரத்தியேகமாக ஆட்களை நியமித்திருப்பார்கள்.

இப்படி சொல்லி மாளாத அவலங்கள் இன்னும் நிறைய உண்டு. நெடுஞ்சாலைகளில் சில நல்ல உணவகங்களும் இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் பேருந்துகள் குறிப்பாக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இது போன்ற கழிசடை உணவகங்களில் நிறுத்தப்படுவதற்குக் காரணம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு கவனிப்பு. ஒரு பேருந்து நிறைய ஏமாளிகளைக் கொண்டு வந்ததற்காக அவர்களுக்குக் கிடைக்கும் உபசரிப்பே தனிதான். அவர்களுக்கு வரவேற்பு என்ன? சிறப்பு உணவு என்ன? கடைகளில் வேண்டியதை எடுத்துக் கொள்ளும் உரிமை என்ன? அடடா.. ராஜ மரியாதை என்று சொல்வார்களே அதை நேரில் பார்க்கலாம்!

இப்படி நடுத்தர வர்க்கத்தினரிடம் பகல் கொள்ளை நடத்தும் இந்த உணவகங்களை சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஏன் கண்டு கொள்வதில்லை? எந்த ஆட்சி மாறினாலும் இந்த காட்சி மாறாமல் தொடர்வது ஏன்? மக்கள் தங்களுக்குள் புலம்பிக் கொள்வதில் சில உண்மைகள் புலப்படுகின்றன. எப்படி ஓட்டுனர்களையும் நடத்துனர்களையும் இவர்கள் கவனித்து விடுகிறார்களோ அதே போல் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை கவனித்து விடுவார்களாம். பெரும்பாலும் இதுபோன்ற உணவகங்கள் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் கைவசம்தான் இருக்குமாம்.

எது எப்படியோ, ஒரு காலத்தில் பயணிகளுக்காக மரங்களை வளர்த்து சத்திரங்கள் கட்டி இலவசமாகவோ அல்லது மலிவாகவோ உணவு வழங்கிய பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழக சாலைகள் இன்று இது போன்ற வழிப்பறிக் கொள்ளையர்களிடம் சிக்கிக் கிடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Sunday, December 25, 2011

விழித்துக் கொண்டார் ஜெ விரட்டப்பட்டார் சசிகலா

உடன் பிறவாச் சகோதரி சசிகலா உட்பட 14 பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் ஜெயலலிதா இப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஜெயலலிதாவின் நிழல் போல கடந்த 20 வருடங்களாகச் செயற்பட்டு வந்த சசிகலாவுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அரசியல் தலைவர்களினால் சம்பாதித்த நல்ல பெயரை அவர்களது வாரிசுகள் சந்தி சிரிக்க வைப்பதே வழøயான சம்பவம் ஆனால் ஜெயலலிதாவின் வாழ்வில் இது நேர்மாறாக நடந்துள்ளது. சசிகலாவும் அவரது பரிவாரங்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் போயஸ் கார்டனிலும் ஆடிய ஆட்டத்தால் பொசுங்கிப்போன எம்.ஜி.ஆர். விசுவாசிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி இன்னொரு அரசியல் கட்சியில் சேர்ந்தனர். இன்னும் சிலர் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அழகிரியின் பெயர்தான் அதிகம் அடிபட்டது. அழகிரியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று மக்கள் குமுறினார்கள். நான் முதல்வரானதும் அழகிரியிடமிருந்து மதுரையை மீட்பேன் என்று ஜெயலலிதா சபதமிட்டார். அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்து மதுரையை மீட்டார். கருணாநிதியால் செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து காட்டினார். அழகிரியைக் கருணாநிதி அடக்கி வைத்திருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் நேரான பாதையில் சென்றிருக்கும்.
ஸ்டாலின், அழகிரி, கருணாநிதி அபிமானிகள் என திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்துள்ளது. அன்புமணியின் பின்னால் நிற்பவர்கள் தவிர பாட்டாளி மக்கள் கட்சியில் நீடிக்கமுடியும். தமிழக காங்கிரஸில் எத்தனை கோஷ்டி இருக்கிறöதன்று தலைவி சோனியாவுக்கே தெரியாது. மாவட்டம் தோறும் கோஷ்டிகள் உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மட்டுமே நீடிக்கலாம். அதுவும் எத்தனை நாட்கள் என்று சரியாக கணிப்பிடற முடியாது. புதிய பதவிக்கு ஒருவரை ஜெயலலிதா நியமிப்பார். அடுத்த நொடியே அவர் தூக்கி எறியப்படுவார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் வெளியேற்றப்பட்டார்கள். சசிகலாவின் வட்டத்துக்குள் இருப்பவர்கள் மட்டும் பதவியில் நீடித்தார்கள். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவந்ததும் சசிகலா உட்பட 14 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
கட்சித் தலைவர் அவரின் பிள்ளைகள் இரண்டாம் கட்டத் தலைவரின் பிள்ளைகள், மாவட்ட செயலாளர்களின் வாரிசுகள் இவர்களின் உறவினர்கள் ஆகியோரின் ஆதிக்கமே அரசியல் கட்சிகளுக்குள் உள்ளன. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்தத் தொல்லைகள் இல்லை. சசிகலாவின் கையே அங்கு மேலோங்கி இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் அதிகமானோர் சசிகலாவுக்கு வேண்டப்பட்டவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோகமாக வெற்றி பெற்றதற்கு வேட்பாளர்கள் முக்கிய காரணமல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மாபெரும் தவறினாலேதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றது.

சசிகலாவையும் அவருடைய உறவினர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கான உண்மையான காரணத்தை ஜெயலலிதா வெளியிடவில்லை. பெங்களூரில் நடைபெறும் வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியானால் யாரை முதல்வராக்குவது, உளவுத்துறையின் அறிக்கைகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு நேரடியாக சமர்பிக்கப்படுவதில்லை. சசிகலா பார்வையிட்டு கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் பாதகமான அறிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன. சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் தவறுகள் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்படுவதில்லை போன்ற காரணங்களினால் சசிகலா விரட்டப்பட்ட செய்திகள் உலா வருகின்றன.
மக்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஜெயலலிதா தயாராக இருந்ததாகவும் சசிகலா அதற்கு தடையாக இருந்தார். அத்துடன் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியாது அதிகாரிகள் தவித்தனர். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுபோல இது பற்றி ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வந்தது யார் என்ற கேள்விக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சோ, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஆகிய இருவரின் பெயர் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதாவின் பிரசாரங்களை வீடியோவாகத் தயாரிப்பதற்காக அன்றை ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மூலம் அறிமுகமானவர் சசிகலா. அவருடைய நிறுவனம் ஜெயலலிதா பிரபல்யமாவதற்கு உதவியது. அந்த நன்றிக் கடனுக்காக தன் அருகிலே சசிகலாவை வைத்து அழகுபார்த்தார் ஜெயலலிதா. அதிக நெருக்கமும் அளவுக்கு மீறிய அதிகாரத் துஷ்பிரயோகமும் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்துவிட்டது.
சசிகலா, சசிகலாவின் கணவர் எம். நடராஜும், நடராஜனின் தம்பி எம். ராமச்சந்திரன், சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன்கள் டிவி.மகாதேவன், தங்கமணில, சசிகலாவின் அக்காவின் மகன் டி.டி.வி. தினகரன், அவருடைய தம்பி சுதாகரன் இவரையே தனது தத்துப் பிள்ளையென ஜெயலலிதா அறிவித்தார். நடராஜனின் தம்பியின் மகன் கணக குலோதுங்கன், ராஜராஜன், சசிகலாவின் தம்பி திவாகழரன், சசிகலாவின் சித்தப்பாவின் மருமகன் ராவணர் ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஆவர்.
சசிகலாவுடனும் ஏனைய பதின்மூன்று பேருடனும் நெருங்கிய தொடர்புடையவர்களை பற்றிய அறிக்கையை தயாரிதக்கப்படுகிறது. அவர்களின் செல்வாக்கினால் அமைச்சர்களானவர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஜெயா ரி.வி. யிலும் சசிகலா குழுவின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. டி.வி.டி. தினகரனின் மனைவி அனுராதாதான் ஜெயா ரி.வி. யின் நிர்வாகப் பொறுப்பாளராக இருக்கிறார். சன் ரீ.வி. கலைஞர் ரீ.வி. ஆகியவற்றுக்குப் போட்டியாகாத? நிலையில் முடங்கிப் போயுள்ளது ஜெயா ரீ.வி. ஆகையினால் ஜெயா ரீ.வி. யிலும் அதிரடி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் சில புலனாய்வுப் பத்திரிகைகள் சசிகலாவைப் பற்றிய தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தன. அவற்றைப் படித்திருந்தால் இப்படிப்பட்ட நடவடிக்கையை ஜெயலலிதா முன்னதாகவே செய்திருப்பார். 1991 ஆம் ஆண்டு தன் உடன் பிறவாச் சகோதரி சசிகலாவை விரட்டினார் ஜெயலலிதா. மூன்று மாதங்களில் மீண்டும் பூரண கும்பம்? வைத்து சசிகலாவை வரவேற்றார்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்பது ஜெயலலிதாவின் பொன்மொழி.

Saturday, December 24, 2011

முல்லைபெரியாறு அணையும் அற்பதனமான அரசியலும்



சிவகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் முல்லை ஆறும், சதுரகிரி மலையில் உற்பத்தி ஆகி வரும் பெரியாறும் ஓர் இடத்தில் கலக்கும் இடத்தில் அணை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. அதுதான், முல்லைப் பெரியாறு அணை. இதற்கு முன்னிலை வகித்தவர் ஆங்கிலப் பொறியாளர் ஜான் பென்னி குக். 1886-ல் சென்னை ராஜதானி கவர்னர் ஹாமில்டன் முன்னிலையில் தமிழகம் மற்றும் கேரளமும் இணைந்து 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதனால் ஓர் ஆண்டுக்கு ஏக்கருக்கு ஐந்து ரூபாய் வீதம் 8,000 ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை தமிழகம் கேரளாவுக்குக் கட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை பொறியாளர்கள் ரியாஸ், ஸ்மித் லோகன்பால் இவர்களோடு தலைமைப் பொறியாளர் பென்னி குக் முன்னிலையில் 1886-ம் ஆண்டு அணை கட்டத் தொடங்கி 10-10-1895 அன்று திறப்பு விழா நடந்தது.

இந்த அணை கட்டுவதற்கு ஏகப்பட்ட பொருட் செலவும் உயிர் சேதமும் ஏற்பட்டது. காலரா, பூச்சிக் கடி, யானை மற்றும் புலி போன்ற வன விலங்குகளால் 422 பேர் கொல்லப்பட்டதாக அரசுப் புள்ளி விவரங்கள் கூறுகிறது. அணையைக் கட்டிய கிழக்கிந்திய கம்பெனி போதுமான நிதி இல்லை என்று கைவிட்ட நிலையில், பென்னி குக்,  'நான் பிறந்தது ஒரு முறைதான். அதற்குள் என் லட்சியத்தை அடைவேன்என்று தன்னுடைய நாட்டுக்குச் சென்று மனைவியின் நகைகள், சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுப் பணம் கொண்டுவந்து அணையைக் கட்டி முடித்தார்.  

அதனால்தான் அவரது பெயரை.. லோகன், லோகி, லோக நாயகன், லோகநாயகி, பென்னிகுக் என்று இப்பகுதி மக்கள் சூட்டுகிறார்கள். அவர்கள் உருவில் பென்னி குக் இன்றும் வாழ்கிறார். கடைகள், வீதிகள், மன்றங்களுக்கும் அவர் பெயர் வைத்து நன்றி செலுத்துகிறார்கள். நீர் இருக்கும் வரை அவர் பெயர் இருக்கும்.

சமீப காலம் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. '999 ஆண்டு ஒப்பந்தம் பழமையானது. அதனால் புதிய ஒப்பந்தம் போடவேண்டும். புதிய அணை கட்ட வேண்டும்என்று கேரள அரசு 2006-ம் ஆண்டு சட்டசபையில் கேரள அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்று ஒரு மசோதாவை உருவாக்கியது. அதனால், தமிழக அரசு வழக்கமாக கொடுக்கும் 2.40 லட்சம் ரூபாயைப் பல கோடிகளாக உயர்த்தலாம் என்றும், புதிய அணை கட்டினால் மின்சாரம், சுற்றுலா பெருகும் என்றும் யோசித்தது கேரள அரசு.


தமிழகத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர் பாயும் வழித்தடங்களில் சுமார் 26 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கேரளா மக்களுடையது. இது வரை தமிழகம் முல்லைப் பெரியாறு தண்ணீரைப் பயன்படுத்தியதற்காக 27 கோடியே 8 லட்சம் ரூபாய் கட்டியுள்ளது. இது போக கேரள மின்சாரத்திற்கு உத்தேசமாக சுமார் 116 கோடி செலவழித்துள்ளது. 1961 முதல் 2001 வரை கேரள போலீஸாருக்கு 1:4 என்ற விகிதத்தில் 50 ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் சம்பளத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.


1979-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் அணையில் விரிசல் என்று கூறியது கேரள அரசு. அதனால் அணையைப் பலப்படுத்த தமிழக அரசு சுமார் 26.75 கோடி செலவிட்டது.


இப்போது விரிசல், நில நடுக்க ஆபத்து என்று கேரள மக்கள் இடையே வீண் பீதியைக்கிளப்புவதற்குக் காரணம் இருக்கிறது. அது, கேரளாவில் தற்போது நிகழும் அரசியல் சூழ்நிலைதான். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த கேரள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும், இடதுசாரிகள் (கம்யூனிஸ்ட்) 68 இடங்களையும் கைப்பற்றினார்கள். இதனால், காங்கிரஸ் கட்சியின் உம்மண் சாண்டி முதல்வரானார்.


காங்கிரஸ் அமைச்சர் ஜேக்கப் கடந்த அக்டோபரில் இறந்ததால், விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 140 இடங்களைக்கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 71 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சட்டசபைத் தலைவர் ஒருவர் போக 70 என்று பலம் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் தோற்றுவிட்டால், இடது சாரிகள் சம பலம் பெற்றுவிடுவார்கள். அதனால் எப்படியும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் உம்மண் சாண்டி, இந்த முல்லைப் பெரியாறு விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார். இதற்கு எதிர்ப்பு அரசியல் பண்ணவே, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்,  

நடக்கவே முடியாத நிலையிலும் வந்து அணையைப் பார்வை​யிட்டு, 'கேரள மக்களின் உயிருக்​கும் உடைமைக்கும் பாதிப்புஎன்று பொய்ப் பிரசாரம் செய்தார். அடுத்த நாளே, கேரள சட்டசபை பேச்சாளர் கார்த்திகேயன், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஜோசப் உள்ளிட்டோர் வந்து அணையைப் பார்வையிட்டு, 'அணையில் நீர்க் கசிவு, விரிசல், நிலநடுக்கம்என்று பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் அணை வீக் இல்லை. கேரள அரசியல் கட்சிகள்தான் வீக்.


முல்லைப் பெரியாறு அணையின் உண்மை நிலை தெரியும் என்பதால், கேரள உயர் அதிகாரிகள் மௌனம் காக்கின்றனர். கடந்த வாரம் கேரள உயர் நீதிமன்றம், 'அணை உடையப்போகிறது என்கிறீர்கள், மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியது. அப்போது, 'அணை உடைந்தால் 480 வீடுகள்தான் பாதிக்கும்என்று பதில் தந்தது கேரள அரசு. 'அணை உடைந்தால் ஐந்து மாவட்டங்கள், 45 லட்சம் மக்கள் கொல்லப்படுவார்கள்என்று கூறப்பட்ட கருத்தை கேரள அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நிராகரித்த காரணத்தால்தான், அவரது உருவ பொம்மையை எரித்து வருகின்றனர் கேரள அரசியல்வாதிகள்.


முல்லைப் பெரியாறு அணை இரு புறமும் மலைகளால் சூழ்ந்துள்ளது. அதனால் அணை உடைந்தால், உப்புத் துறையில் 420 குடும்பங்களும், சப்பாத்துப் பகுதியில் 580 குடும்பங்களும் மட்டுமே பாதிப்பு அடையும். அந்த இரண்டு கிராமங்களுக்கும்கூட, பாதுகாப்பாக 36 அடி உயரத்தில் கரை கட்டப்பட்டு உள்ளது. இந்த உண்மையை எடுத்துக்கூறிய பொறியாளர்களையும், அங்கு உள்ள அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். முன்பு அணை உடைவது போலவும், வெள்ளத்தால் மக்கள் அடித்துச் செல்லப்படுவதாகவும் குறும் படம் இயக்கினார்கள். இப்போது அதையே டேம் 999 என்ற பெயரில் படம் எடுத்து, கேரள மக்களின் உணர்வுகளைத் தூண்டுகிறார்கள்.


ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 236 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ காய்களுக்கு 86 லிட்டரும் ஒரு கிலோ பழத்துக்கு 112 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. கேரளத்தில் இருந்து ஓர் ஆண்டிற்கு 12 முதல் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் வாங்குகிறது. ஆனால், இங்கே உற்பத்தி செய்த 3.26 லட்சம் டன் காய்கள், பழங்களை ஆண்டுதோறும் கேரளாவுக்கு அனுப்புகிறது. 2,000 மெட்ரிக் டன் பால் அனுப்புகிறது. இது வாங்கும் தண்ணீரைவிட அதிகம். 

ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்றால் 48% உணவுப்பொருளை கேரளாவுக்கு அனுப்புகிறது தமிழகம். ஆனாலும் தமிழன் வஞ்சிக்கப்படுவதுதான் வேதனை''

மோசடி விழாவில் பிரதமர் ஏமாற்றும் ப.சிதம்பரம்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு சென்னை வருகிறார். திங்கட்கிழமை காலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடக்க இருக்கும் கணித மேதை ராமனுஜத்தின் 125-வது பிறந்த தின விழாவில் பங்கேற்கிறார்.

தமிழக பயணமே ஒட்டுமொத்த மோசடி பயணம். அரசு விழாக்களுக்கு இடையே இரண்டு தனியார் விழாக்கள் நடக்கிறது. அதற்குதான், இரண்டு அரசு விழாக்களையே ஏற்பாடு செய்திருக்கிறார் சிவகங்கை சின்னபையன்ப.சிதம்பரம்

காரைக்குடி செல்லும் பிரதமர் அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரைக்குடியில் கட்டப்பட்டிருக்கும் அப்பல்லோ மருத்துவமனை, வாசன் மருத்துவமனை ஆகிய இரண்டையும் திறந்து வைக்கிறார். ஏற்கனவே, திறந்து வைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இரு மருத்துவமனைகளை மீண்டும் திறப்பதற்கு வருகை தந்திருப்பது ஒரு மோசடி தானே.

எப்படி இந்த மோசடி நடக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் இடங்கள் அனைத்தும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் சகோதரிக்கு சொந்தமானது. கிட்டத்தட்ட 80 ஏக்கர் நிலத்தை, வங்கியில் கடன் பெற்று திவால் ஆனவர் என்று சொல்லப்பட்ட நபரிடமிருந்து சிதம்பரத்தின் சகோதரியும், சகோதரியின் மகனும் வாங்கியிருக்கிறார்கள். அதை விசாரித்தால், பல விவகாரங்கள் அம்பலத்துக்கு வரும்.

இந்த நிலத்தில்தான் 9 ஏக்கர் நிலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. ஒன்றரைஏக்கர் நிலம் வாசன் கண் மருத்துவமனைக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு மருத்துமனைகளும் சிதம்பரத்தின் குடும்பத்திற்காக கட்டப்பட்டவை

சிதம்பரத்தின் மருமகள் டாக்டர் ஸ்ரீநிதிக்காக அப்பல்லோ குழுமம் காரைக்குடியில் அப்பல்லோ மருத்துவமனையின் கிளையை கட்டிக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மளமளவென உருவாகி வரும் வாசன் கண் மருத்துவமனையின் குழுமத்தையே கார்த்திக் சிதம்பரம் தான் நடத்துகிறார்

இந்த இரு மருத்துவ மனைகளைத் திறப்பதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங்கை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அழைத்துவந்திருக்கிறார். காரணம், மத்திய அமைச்சரவையிலிருக்கும் ப.சிதம்பரம் தொடர்ந்து அமைச்சராக நீடிப்பாரா இல்லையா என்ற கேள்வி நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தனது இமேஜை நிலை நிறுத்திக் கொள்ள இப்படியொரு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைத்து வருகிறார் என்று காங்கிரஸ்காரர்களே குற்றம் சாட்டுகிறார்கள்.

ஏன் பிரதமரை அழைத்து தாஜா செய்கிறார் என்றால், காங்கிரஸில் நடக்கும் உள்குத்து மோதலில் ப.சிதம்பரத்தை காலி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ப.சி.க்கு யாருமே ஆதரவு அளிக்க வரமாட்டார்கள். தனக்காக சோனியாவிடம் பேசக்கூடியவர் மன்மோகன் சிங் மட்டுமே, என்பதால், அவரை தாஜா செய்துக் கொண்டிருக்கிறார்

Friday, December 23, 2011

மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்கும் உளவுப் பிரிவு ?

போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட, சசிகலா கும்பலின் நடவடிக்கைகள் அனைத்தையும் உளவுப் பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், கண்கொத்தி பாம்புபோல், சசி கூட்டணியின் அனைத்து நடமாட்டங்களையும் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.


நிலைமை தலைகீழ்: சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்கள் கார்டனுக்குள் இருக்கும் வரை, யார் பார்க்க வந்தாலும், அவ்வளவு சுலபமாக முதல்வரை பார்த்து விட முடியாது. முதல்வரை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்கக் கூடாது என்பதை அவர்கள் தான் முடிவு செய்யும் நிலை இருந்தது. ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. மன்னார்குடி கும்பல் விரட்டியடிக்கப்பட்ட பின், கார்டனில் பாதுகாப்பு போலீசார் வரை மாற்றப்பட்டு, அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கார்டனுக்கு வரும் மனுதாரர்கள் அனைவரும் கடும் சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டு, அனைவருடைய மனுவும் பெறப்பட்டு, உரிய கிளைத் தகவல்களுடன் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், மனு கொடுத்தவரின் பிரச்னைகள் உடனுக்குடன் கவனம் செலுத்தப்படுவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வருக்கு போலீஸ் தரப்பில் இருந்து வரும் தபால்கள் அனைத்தும் நேடியாக பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது. முதல்வரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தகவல் சொல்ல ஆர்வம்: இதற்கிடையில், மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், கட்சியில் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் உன்னிப்பாக இருக்கும்படி, மூத்த தலைவர்களுக்கு முதல்வர் கட்டளையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிப் பொறுப்பில் இருந்த மகாதேவன், தினகரன் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது தகவல்கள் உரிய இடத்திற்கு தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களே, இவர்களை கண்காணித்து அவ்வப்போது தகவல்களை அனுப்ப தயாராகிவிட்டனர். மேலும், மன்னார்குடி கும்பல் சேர்த்த சொத்துக்கள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் சில வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இரும்பு கழிவுகளை பெற்று வெளியேற்றும் ஒப்பந்தத்தை, முந்தைய ஆட்சிக்காலத்தில் பெற்றிருந்தவரே, இந்த ஆட்சிக்காலத்திலும் பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதற்காக அவர் கவனிக்க வேண்டியவர்களை கவனித்துள்ளார். ஆனால், அவர் பணிகளை துவக்கிய ஒரு மாதத்திலேயே மீண்டும் மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் நுழைந்து அதிக தொகை பார்த்ததாகவும், தற்போது அவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை போலீசில் சில முக்கிய வழக்குகள் விசாரணையிலும் மன்னார்குடி கும்பலைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு, தடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களும் தற்போது, தோட்டத்தில் நடவடிக்கைக்காக காத்திருக்கின்றன.

Who is SONIA GANDHI? ( Every Indian Should Know This )

Who is SONIA GANDHI? ( Every Indian Should Know This )

 
Who is Sonia Gandhi:

Ther...e is officially no Sonia Gandhi. Her real name in passport is neither Gandhi nor Sonia. Its Edvige Antonia Albina Maino. Sonia is a Russian name and not italian. However, Antonia is an italian name and her passport is italian. Though she has married Rajiv Gandhi* she never accepted change of title officially. ( recall the time of turmoil in indian politics when Sonia Gandhi was trying to be the prime minister, but ultimately ManMohan Singh became her toy)
See full size image
*Rajiv Gandhi: Actually Rajiv Khan being the son of Firoz Khan and Indira Priyadarshani. Gandhi is an assumed title to sentimentally lure indians for their political benefit. They are muslims by religion.

Father:
Stefano Eugene Maino is socially the father of Sonia. Her father was a German(hitlers army). When Hitlers army went to russia they were captured and imprisoned. He was captured near St. Petersburgh and was imprisoned for 20 years. But he became a member of KGB and his imprisonment was limited to 4 years. When he came back from prison he gave russian name to his daughters. Social father because when she was born her father was in jail for 4 years. Biological father is unconfirmed.
Mother:
Paula Maino.
Family:
She had 2 sistersin Orbassano, italy
Birthplace
Sonia claims she was born in Besano, near Turin in italy. However, as per her birth certificate, She is actually born is Luciana, in the borders of Switzerland. A resort town for German soldiers during war.
Education:
She initially put forward to Indian Govt. that she studied in Cambridge University which proved to be fake. She submitted an affidavit that she studied english in Bell Education trust at Cambridge. Even this was proven to be fake and was found she never got any education after class five. She was a young girl with no formal education living five years in england. How did she support her livelihood for 5 years? Any wild guesses?
Citizenship:
She has not given off her italian citizenship. Indira Gandhi used her power to issue her an Indian Citizenship so that she can join Indian politics. She is holding an illegal citizenship in India. No action is being taken by Home Minister.
Religion:
Cristianity.
Bank Balance:
Rajiv Gandhi and his family owned 2 billion USD in Swiss Bank as of November,1991. Benefitiary of death of Indira Gandhi and Rajiv Gandhi was Sonia Gandhi.
Family:
Sonia's sister Alexandria(or Anuska) has 2 shops in Italy selling antiques stolen from India. Sonia used her power to smuggle indian artifacts through Air India flights uninspected.

Sonia's son Rahul Gandhi, whose real name is Raul Vinci. He got admitted to Harvard in quota but was thrown off soon because he was incompetant. He has italian citizenship since his mother never gave up her citizenship. He cannot officially become the citizen of india or any politician in india as long as he doesnt give up his italian citizenship. Arrested in Boston airport for carrying 160,000 dollars cash, accompanied by Veronique (spanish). veronique is the daughter of Drug mafia leader. Rahul has also been accused for gang raping Sukanya Devi, whose petition to all courts in India have been rejected due to their political hold and the whereabouts of the family is unknown. However, the information is widely available online.

**********Friends PLEASE DO SHARE this information with the people because only general awareness can cure this nation and the corrupt government will never reveal the truth ************

Monday, December 19, 2011

பஸ் கட்டணம் உயர்வு,பால்விலை உயர்வு.விஜயகாந்த் எதிர்ப்பு ஏன்?.

ஜெயலலிதா துக்ளக் ஆட்சி நடத்துகிறாராம்!! அன்று ஆமாம் சாமி போட்ட இந்த விஜயகாந்த் இன்று உள்ளாட்சியில் தோல்வி மண்ணை கவ்வ வைத்ததால் போராட்டம் நடத்த போகிறாராம் இது பச்சோந்தியான வேலை இல்லையா,  

ஆசிரியர்கள் நேரத்திற்கு வந்து வேலை பார்!! உன்னுடைய வருகை பதிவை ஒழுங்காக  தாருங்கள் என்றால் துக்ளக் ஆட்சியா!!

தி.நகர் வரம்பு மீறி கட்டிய வணிக கட்டிடங்களை சீல் வைத்தால் துக்ளக் ஆட்சியா

மதுரை கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்களை சீல் வைத்தால் துக்ளக் ஆட்சியா

தனியாருக்கு கொடுக்கும் எழுநூறு கோடி ரூபாய் தடுத்து அதனை அரசு மருத்துவமனை சரி படுத்தி இருக்கும் சேவைகளை நவீன படுத்துவது துக்ளக் ஆட்சியா!!

பலான படங்கள் கூட வரி விலக்கு என்று அனுபவித்ததை தடை செய்தது துக்ளக் ஆட்சியா

நில விற்ப்பனையில் குறைந்த விலை காட்டி ஸ்டாம்ப் வரி குறைவாக அரசிற்கு கட்டியதை தடுத்தது துக்ளக் ஆட்சியா

வாரம் வாரம் அரசிற்கு சொந்தமான வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா நடத்தாமல் இருப்பது துக்ளக் ஆட்சியா  

இலவச பொருட்களை அரசு செலவு செய்து ஒவ்வொரு கவுன்சிலரும் கொடுத்தது தடுத்தது துக்ளக் ஆட்சியா!!

திமுக ஆட்சியில் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக இருநூறு சதவிதம் ஏற்றினார்கள்!! அதனை மக்களுக்கு தெரியுமாறு வெளிப்படையாக ஐம்பது சதவிதம் ஏற்றினால் துகளக் ஆட்சியா!!

அரிசி கடத்தலை ஓரளவிற்கு தடுத்து!! லாரி டிரைவர் பிடித்து போட்டு கணக்கு காட்டியதை மாற்றி லாரி உரிமையாளர் மீதும் குண்டாஸ் சட்டம் போட்டது துக்ளக் ஆட்சியா!!

மணல்கட்த்தல் மாபியா வை தடுத்து குண்டாஸ் சட்டம் போட்டது துக்ளக் ஆட்சியா!!

கந்து வட்டி வாங்குவோர் மீது குண்டாஸ் சட்டத்தை புதுப்பித்தது துக்ளக் ஆட்சியா!!

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயபடுதுவது துக்ளக் ஆட்சியா!!

ஏழை மக்கள் பிறர் கை ஏந்தி வாழும் நிலை மாற வேண்டும் என்ற ஓர் அற்புதமான எண்ணத்தில் இலவச மாடு , ஆடு திட்டம் துக்ளக் ஆட்சியா!!

எத்தனையோ ஏழை மாணவர்கள் படிப்பினை முடித்து தொழில் சார்ந்த அனுபவத்தை படிக்காமல் வேலைக்காகக் திரிந்தவர்களின் நிலை மாற்ற இலவச கணினி கொடுத்தது துக்ளக் ஆட்சியா!!

கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் மட்டும் போன கேபிள் வருமானத்தை அரசிற்கு திருப்பியது துக்ளக் ஆட்சியா

முதல்வன் படத்தில் இது மாதிரி காட்சி வந்தால் ரசித்து இது மாதிரி நடக்காதா என்று சொல்கிறோம்!!

இந்தியன் படத்தில் வந்தால்!! நடக்காதா என்று ஏங்குகிறோம்!!

ஆனால் நிஜத்தில் அது நடக்கிறது!

Saturday, December 17, 2011

கருப்பு பணத்தை மீட்டால் கரென்ட் பில் கட்டவேண்டாம் !

 


இந்தியாவிலிருந்து       வெளிநாடுகளில்   பதுக்கப் பட்டுள்ள   கறுப்புப் பணம்
ரூ 1,456 லட்சம் கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது .இந்த பணம் முழுவதையும் மீட்டால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா
 




1 .உலக பொருளாதாரத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும்
 
2 .இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளர்ச்சி நிதியாக 60,000 கோடி வழங்கலாம் ஒவ்வொரு கிராமத்திற்கும் 100  கோடி வழங்கலாம்


3 .20  வருடங்களுக்கு யாரும் வரி செலுத்தவேண்டாம்
 
4 .பெட்ரோல் ,டீசல் ,மற்றும் பால் ஆகியவற்றை முறையே லிட்டருக்கு  ரூ  20,15,8 க்கு வழங்கலாம்
 
5 .இந்தியாவில் இனி யாரும் கரென்ட் பில் கட்ட வேண்டாம்
 
6 .சீனப் பெருஞ்சுவரை விட உறுதியாக இந்தியாவின் எல்கைகளை அமைக்கலாம்
 
7 .ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்திற்கு இணையாக 1500  பலகலைக் கழகங்களை புதிதாக நிர்மாணிக்கலாம்
 
8 .28,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எளிதில் இற்றுப் போகாத ரப்பர் சாலைகள் அமைக்கலாம்
 
9 .சகல வசதிகளும் நிறைந்த 2000  மருத்துவ மனைகள் கட்டி இலவச மருத்துவ வசதியளிக்கலாம்
 


10  .இந்தியாவில் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்கும்

முல்லைப் பெரியாறு கேரளத்தின் உள்நோக்கங்கள்


முல்லைப் பெரியாறு அணையில் 155 அடி நீர் தேக்கப்பட்டால், தென் தமிழகத்தில் 2.23 லட்சம் ஏக்கர்கள் பாசனம் பெறும். 10 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்தப் பாசனப் பகுதி முழுவதும் நெல் விளைவிக்கப்படுவதாகக்கொண்டால், அதிகபட்சம் அதன் விளைச்சல் 10 லட்சம் டன்களாக இருக்கலாம். கேரளத்தின் தேவை 50 லட்சம் டன்கள். இதில், வெறும் 10 லட்சம் டன்களை மட்டுமே கேரளத்தால் உற்பத்தி செய்ய முடிகிறது. எஞ்சிய தேவையில், பாதிக்கும் மேல் தமிழகத்தாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.

அதாவது, முல்லைப் பெரியாறு மூலம் பெறப்படும் விளைச்சலைப் போல, இரு மடங்கு நெல்லை நாம் அவர்களுக்குத் தருகிறோம். தவிர, காய் கனிகள், முட்டை, இறைச்சி என்று சகல மும் ஒவ்வொரு நாளும் 11 ஆயிரம் லாரி களில் தமிழகத்தில் இருந்து செல்கின்றன.

தமிழகத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், இது ரூ. 1,780 கோடி வணிகம். கேரளத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அவர்களுக்கு உணவு அளிப்பவர்கள் தமிழர்கள். கேரளத்திடம் இந்தப் பார்வை இல்லாததே பிரச்னையின் அடிநாதம்!

முல்லைப் பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 4867 மில்லியன் கன மீட்டர். இதில் கேரளம் பயன்படுத்திக் கொள்வது 2254 மில்லியன் கன மீட்டர். கடலில் கலப்பது 2313 மில்லியன் கன மீட்டர். தமிழகத்தின் பங்கு - அணையின் நீர் மட்டம் 152 அடியாக இருந்தாலும்  126 மில்லியன் கன மீட்டர்தான்  எனில், கேரளம் ஏன் எதிர்க்கிறது?
தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை.

இடுக்கி அணைகூட நீர்வரத்தை அதிகமாகக் கணக்கிட்டு கட்டிவிட்டது கேரளம். 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கோடு கட்டப் பட்ட இந்த மின் நிலையம், முழு அளவில் இயங்க விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் பாய வேண்டும். அது சாத்தியப்படவில்லை. முல்லைப் பெரியாறு அணை இல்லை என்றால், தமிழகத்துக்கு நீர் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றால், அது சாத்தியம் ஆகும் என்று கேரளம் நினைக் கிறது

அணையின்நீர்மட்டத்தை142அடியாகஉயர்த்தஉச்சநீதிமன்றம் 
 உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது.
''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்.

ஆனாலும், இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாக, அணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா?

உங்கள் வருத்தங்களை நிராகரிக்கிறோம், ப.சிதம்பரம்!


இந்நேரம் என்.டி.டிவியில் ஹாட் நியூஸ் இதுவே. “நான் மிகவும் ஆழமாக காயமடைந்திருக்கிறேன்” என்று  பாராளுமன்றத்தில் திருவாளர் பரிசுத்த சிதம்பரம் ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார்.

புதுதில்லியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீதான வழக்கில் அவரை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திலிருந்து பரிந்துரை செய்ததாகவும், நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும்  பாராளுமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் அல்லது, பிரதமர் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாராளுமன்றம்  களைகட்டியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளை  முற்றிலுமாக தான் நிராகரிப்பதாக் கூறிய பரிசுத்த சிதம்பரம்தான்  இன்றைக்கு மேற்படி தன் வருத்தங்களையும்  இப்படியாகத் தெரிவித்திருக்கிறார். அவர் மீது 2ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பிருப்பதாக கடுமையான குற்றச்சாட்டு எழுந்தபோது அமைதியாய் இருந்தார். திகார் சிறையிலிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கும் இவருக்குமான தொடர்பு மற்றும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இவர் பற்றி எழுதிய குறிப்புகள் எல்லாம் வண்டவாளமாய் வெளிப்பட்டபோது கூட, குடும்பத்தோடு ஓய்வெடுக்கப் போய்விட்டார். ஆனால் இப்போது  தாங்க முடியாமல் வெடித்து பீறிட்டிருக்கிறார்.

அவர் ரொம்ப யோக்கியமாம். மயிர் நீப்பின் உயிர் நீக்கும் வழிவந்த அவரால் இதுபோன்ற அவதூறுகளைத் தாங்கிக்கொள்ள முடியாதாம். அன்னாரின் நேர்மையை இப்படியெல்லாம் யாரும் சந்தேகிக்கக் கூடாதாம். இப்படியெல்லாம் சீன் காட்டுகிற வேலைதான் “நான் ஆழமாய் காயமடைந்திருக்கிறேன்” என்பதில் வெளிப்படுகிறது.

அட்ரஸ் இல்லாத கட்சியொன்றை வைத்து, அதில் ஒரு எம்.பியாகி, பிறகு நாட்டுக்கே நிதிமந்திரி ஆன கதையெல்லாம் எவ்வளவு நேர்மையானது? சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தனது தோல்வியை வெற்றியென அறிவிக்க வைத்ததில் எவ்வளவு தருமம் ஓளிந்திருந்தது?  முதலாளிகளைப் பார்த்ததும் பல்லிளித்து,   பலகோடி எழை மக்களின் வாழ்க்கையைக் கெடுத்து சீரழித்த உங்கள் கொள்கை எவ்வளவு அறம் சார்ந்தது?  நாக்கு எப்படியெல்லாம் புரண்டு பேசும் என்பதற்கு புது அகராதியே வகுத்த தங்கள்  அரசியல் எவ்வளவு அப்பழுக்கற்றது? அமெரிக்காவுக்கு சேவகம் செய்வதற்காக பிறவியெடுத்த உங்கள் வாழ்க்கை எவ்வளவு ஒழுக்கமானது?

ஐயா பரிசுத்த சிதம்பரம்!  உங்கள் வருத்தங்களை மக்களாகிய நாங்கள் நிராகரிக்கிறோம். உங்கள் தடித்த தோல் நாடறிந்தது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...