Thursday, June 30, 2022

5 நாட்களில் வீட்டிற்குள் இருக்கும் கண்திருஷ்டி அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவிடும். 1 டம்ளர் தண்ணீரை மட்டும் இப்படி வைத்துப் பாருங்கள்.

 எவ்வளவு தான் பரிகாரங்களை தொடர்ந்து செய்து கொண்டு வந்தாலும், இந்த கண் திருஷ்டி மட்டும் மீண்டும் மீண்டும் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மாதத்தில் ஒரு நாளோ அல்லது வாரத்தில் ஒரு நாளோ இந்த கண் திருஷ்டியை கழிக்க கூடிய பரிகாரத்தை செய்து கொண்டே இருங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய முன்னேற்றம் தடைபட குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியம் கெட்டுப் போக, குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு, இந்த கண்திருஷ்டி ஒரு பெரிய காரணம். ஏவல் பில்லி சூனியத்தை விட எல்லாம் பொல்லாதது இந்த கண் திருஷ்டி. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குடும்பத்தின் சந்தோசத்தை அழித்து சீர்குலைத்து விடும். ஆக கண் திருஷ்டியில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நம்மை சுற்றி அக்கம் பக்கம் இருப்பவர்களுடைய கண் திருஷ்டி நம் மீது விழுவது ஒரு ரகம். இதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டிற்கு வந்து செல்பவர்களுடைய வயிற்றெரிச்சல் பொறாமை குணம் இவை எல்லாம் சேர்ந்து நெகடிவ் எனர்ஜியாக மாறி நம்மை தாக்கி நமக்கு கஷ்டத்தை தரும். இதை தடுப்பதற்கு நம்முடைய வீட்டில் என்ன பரிகாரம் செய்யலாம். தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டு வரவேற்பறையில் இப்படி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டியையும் அடுத்தவர்களுடைய வயிற்றெரிச்சல் பொறாமை எண்ணத்தையும் அப்படியே இந்த தண்ணீர் ஈர்த்து உறுஞ்சி கொள்ளும்.  ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதில் வரமிளகாயிலிருந்து எடுத்த விதை 7, பச்சை மிளகாய்க்கு உள்ளே இருக்கும் விதை 7, சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகு 7, கல் உப்பு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கண்ணாடி தம்ளரை அப்படியே வரவேற்பறையில் யார் கண்ணுக்கும் தெரியாமல் கூட வைத்துக் கொள்ளலாம். கீழே ஊற்றாமல் இருக்கும்படி பத்திரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் இந்த தண்ணீரை உங்களுடைய வீட்டு வரவேற்புரையில் தயார் செய்து வைத்தால், மறுநாள் காலை பழைய தண்ணீரை எடுத்து கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் புதிய தண்ணீரை நிரப்பி மீண்டும் மேல் சொன்ன பொருட்களை அதில் போட்டு வைக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த தண்ணீர் உங்களுடைய வீட்டில் இருக்கும்போது, உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை எனர்ஜியை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். வீடு கண் திருஷ்டியில் இருந்து விலகி சுத்தமாக மாறிவிடும். (ஐந்து நாட்களும் தினமும் தண்ணீரை மாற்ற மறந்து விடாதீர்கள்.) ஐந்து நாட்கள் இந்த பரிகாரத்தை செய்த பின்பு தினமும் இந்த டம்ளர் தண்ணீரை வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு நாளோ, ஒரே ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். வீடு மீண்டும் மீண்டும் சுத்தமாகி கொண்டே இருக்கும். உங்கள் வீட்டிற்கு எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பொறாமை என்னும் கொண்டவர்கள் யார் வந்து சென்றாலும் சரி அந்த கண் திருஷ்டியால் எந்த ஒரு பிரச்சனையும், குடும்பத்திற்கு வராது. இது ஒரு சுலபமான பரிகாரம்தான். எல்லோராலும் செய்ய முடியும். நிச்சயமாக உங்கள் வீட்டில் வரக்கூடிய குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். மன நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவு குறையும். கண் திருஷ்டியில் இருந்து கவனமாக குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ள இது ஒரு சக்தி வாய்ந்த சுலபமான பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சிந்தியுங்கள் தொழிலாளிகளே.

 இனி திருந்துமா இந்தியா?

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில்
வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில்
சென்னை வந்திருந்தார். பெங்களூர்
தான் அவரது சொந்த ஊர்.
ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு 'பென்ஸ்'தொழிற்சாலையில்
பொருத்துனர் (fitter)ஆக வேலை
செய்கிறார்.அரைகுறை தமிழில் பேசுவார்.
பிட்டராக இருந்தாலும் விவரமானவர் ; பல துறைகளில் ஞானம் உள்ளவர் அவரிடம் பேசிக்
கொண்டிருக்கையில் பல அரிய தகவல்கள் கிடைத்தன.
அவர் கூறியது;
சார்.... இப்போது இந்தியாவிலே 'பென்ஸ்' கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது.... அஹா.... ஜெர்மன் நாட்டு கார் ன்னு
பணக்காரர்களும், பெரிய
தொழிலதிபர் களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்குறாங்க. இந்த கார்ல இருக்கற பல முக்கியமான பாகங்கள், கியர்பாக்ஸ் உள்பட, இந்தியாவில், இருக்கும்'
டாடா'(TATA) கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது.... நாங்க அதை அங்கே பொருத்தி,பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!
இதுக்கு காரணம் என்ன தெரியுமா?
ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு கூட ஆகாது நம்
நாட்டில்..நாங்கள், எங்களுக்கு தேவையான டிசைன் மற்றும் மூல பொருட்களைக்கொடுத்து விடுகிறோம்....
இங்கே இந்தியாவில் லேபர், ரொம்ப
"சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு
பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிவிடுகிறது.
இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' எனபதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்குங்க சார்....' என்றவர், தன் சட்டைப்பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்து படித்துக்காட்டினார். அப்படியே ஒரு கனம் அதிர்ந்து போனேன்!
ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு
குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமேரிக்க தொழிலாளியை வேலைக்கு அமரத்தலாம்.
இல்லையென்றால், தைவான் நாட்டு தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ
வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்....
ஆனால், இந்தியத் தொழிலாளியின்
நிலையோ பரிதாபம் ?
..ஒரு ஜெர்மன் தொழிலாளியின்
சம்பளத்தில் "128" இந்திய
தொழிலாளர்களை(வெட்ககேடு)
வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்
என்றால் பாருங்கள்.
இந்திய தொழிலாளியின் சம்பளம்
மணிக்கு 25 ரூபாய் என்றால் ,ஜெர்மன் தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம்
மணிக்கு 1,150 ரூபாய்!
அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில்
அதிபர்கள் , புதிய பொருளாதாரக்
கொள்கை வந்த பின்னே இங்கே
மூலதனத்தைக் கொட்ட தயங்கப்
போறாங்க! கடந்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்...
ஆனால், இதில் சோகமான விஷயம்
என்னவென்றால், சுற்றுப்புறச்
சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்க்கும் (கேன்ஸர்,ஆஸ்துமா போன்று)கேடு விளைவிக்க கூடிய
பாதுகாப்பு அம்சம் குறைந்த, ஜெர்மனி நாட்டு சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இந்தியாவிற்கு வந்துள்ளன; என்றார் அந்த நண்பர்.
புதிய பொருளாதார கொள்கை என்கிற பேரில் வெளிநாட்டு குப்பைகளை கொட்ட இந்தியா என்ன குப்பை தொட்டியா?
நம் நாடு அந்நிய நாட்டின் குப்பை கொட்டும் கிடங்கு ஆகாமல்
பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொரு
இந்தியனின் கடமை அல்லவா. ...நண்பர்களுக்கும் பகிருங்கள்...

"இந்தத் தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.

 அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது.

தந்தையை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக மேற்படிப்புக்காக
கல்வி உதவி தேவைப்பட்டது.
தற்செயலாக இதை பார்த்தார் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன்.
பலரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நவீன், நடிகர் பிரகாஷ்ராஜிடமும் இந்த செய்தியை சொன்னார்.
அப்போதுதான் பிரகாஷ்ராஜ் கேட்டார். "நீங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மைதானா ?"
"உண்மைதான் சார். நான் விசாரித்து விட்டேன். அந்தப் பெண்ணின் உறவினரிடமும் தொலைபேசியில் பேசி,
அந்த மாணவியின் நம்பரை கூட வாங்கிவிட்டேன்."
பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணிடம் பேசினார். கன்ணீரோடு அந்த மாணவி சொன்ன விஷயம் இதுதான்.
அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு தன் மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க. இப்போது அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் இங்கிலாந்து செல்வதற்கான செலவு, பல்கலைக்கழக கல்விக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எதையுமே அந்தப் பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம்.
அமைதியாக இதை கேட்டுக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நல்ல முடிவை எடுத்தார்.
இது 2020 இல் நடந்தது. இப்போது அந்தப் பெண் ஸ்ரீ சாந்தனா
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் வாங்கிவிட்டார்.
இன்னொரு காரியத்தையும் கூட செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
அந்தப் பெண்ணின் உயர் படிப்புக்கு ஏற்ற நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு, தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.
அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் எல்லையற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜையும் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை சொல்லி இருக்கிறார்கள்.
மனநிறைவோடு அந்தப் பெண்ணை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
இந்தத் தகவலை பிரகாஷ்ராஜ் கவனத்துக்கு கொண்டு போன இயக்குனர் நவீன், ட்விட்டர் மூலம் பிரகாஷ்ராஜுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.
அதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்:
"இந்த உலகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான்."
அந்த மனசு தான் கடவுள்.
May be an image of 2 people, beard and people standing

சரோஜாதேவி..............

 1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோஜாதேவி 2022 ஜனவரி ஆறாம் தேதியுடன் 84ஆண்டுகள் ஆகிறது

தென் இந்தியாவில் பிரபல ஹீரோயின்கள் எல்லாரும் சரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
ஓஹோவென்று ஓடிய அவரது எந்தப் படத்திலும் மற்றொரு நாயகியின் பங்களிப்பால், சரோஜாதேவி அவரது தனித்துவத்தையோ, நன்மதிப்பையோ, இழந்தது கிடையாது. அதுவே சரோவின் மிகப் பெரிய பலம்!
அநேகம் பேர் சரோவுடன் தங்கள் நடிப்பு தொடங்கி புகழ் பெற்றிருக்கிறார்கள். சரோவுடன் சங்கமித்தவர்கள்-
1.விஜயகுமாரி (கல்யாணப்பரிசு, பெண் என்றால் பெண்) 2. சவுகார் ஜானகி (பாலும் பழமும், புதிய பறவை, கண் மலர்) 3.வைஜெயந்திமாலா (இரும்புத்திரை, பைகாம் இந்தி)
4.சாவித்ரி (பார்த்தால் பசி தீரும்) 5. தேவிகா (ஆடிப்பெருக்கு, குலமகள் ராதை) 6. ஷீலா - அறிமுகம் (பாசம்)
7. ஜோதிலட்சுமி, 8.மணிமாலா - அறிமுகம் (பெரிய இடத்துப்பெண்) 9. சாரதா - அறிமுகம் (வாழ்க்கை வாழ்வதற்கே)
10. ரத்னா (எங்க வீட்டுப் பிள்ளை) 11. கே. ஆர். விஜயா (நான் ஆணையிட்டால்) 12. பாரதி - அறிமுகம் (நாடோடி)
13.காஞ்சனா (பறக்கும் பாவை) 14. ஜெயலலிதா (அரச கட்டளை) 15. விஜய நிர்மலா (பணமா பாசமா, அன்பளிப்பு) 16. வாணிஸ்ரீ (தாமரை நெஞ்சம்)
17.லட்சுமி (அருணோதயம், உயிர்) 18. பத்மினி (தேனும் பாலும்) 19. பானுமதி-20.ராஜஸ்ரீ (பத்து மாத பந்தம்) 21. ஷோபனா (பொன் மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம்) 22. சிம்ரன் (ஒன்ஸ்மோர்) 23. நயன் தாரா (ஆதவன்)
தன்னுடைய திரையுலகத் தோழிகள் பற்றி சரோஜாதேவி..
சவுகார் ஜானகியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நிறையவே நடித்திருக்கிறேன்.
‘சரோஜாவையும், சவுகாரையும் ஜோடியாக சேர்த்துக் கொண்டால் அந்தப்படம் நிச்சயமாக வெற்றி அடையும்’ என்பார் சிவாஜி.
ஆலயமணி படத்தில் நானும் விஜயகுமாரியும் போட்டி போட்டு நடிப்போம். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு எப்போதும் உண்டு. நாங்கள் ஒரு குடும்பம் போல் அன்பு காட்டி, அதையே திரும்பப் பெறுகிறோம். ’ -சரோஜாதேவி.
சரோவின் நடையழகு தனித்துவம் வாய்ந்தது. அதை வர்ணித்து மூவேந்தர்களும் பாடியவை சூப்பர் ஹிட் ஆயின.
1.ஆஹா மெல்ல நட- புதிய பறவை 2. இந்த பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும் - எங்க வீட்டுப் பிள்ளை 3. மெல்ல... மெல்ல... என் மேனி நடுங்குது மெல்ல - பணமா பாசமா.
சரோவுடன் ஜோடி சேராத ஒரே ஹீரோ ஜெய்சங்கர்!
நடிகர் திலகத்தின் நாயகிகளில் அநேகம் பேர் அவருக்கு அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, மகளாக, மருமகளாக, மாமியாராகக் கூட நடித்திருப்பார்கள்.
‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே! அது ஓர் இனிய அதிசயம்! ’
கின்னஸ் சாதனை புரிந்துள்ள பி.சுசிலாவின் கான சமுத்திரத்தில், சரோவின் உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் நதியாக சங்கமிக்கும்.
தேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், ஏவி.எம்., ஆர்.ஆர். பிக்சர்ஸ் என எவர் படமெடுத்தாலும் பி. சுசிலாவின் குரலில், ஓபனிங் மற்றும் சோலோ சாங்கில் சரோ கொடி கட்டிப் பறந்ததற்கு இணையாக இன்னொருவரைச் சொல்லவே முடியாது.
இன்று வரையில் நித்தம் நித்தம் சலிக்காமல் அனைத்து ரேடியோ, டிவி சேனல்களில் ஒலிக்கிறது... புதிய பறவையின் ‘சிட்டுக்க்குருவி முத்தம் கொடுத்து... ’
விடியலின் அழகோடு தாம்பத்யத்தின் இனிமையையும் சேர்த்துச் சொல்ல, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ஒன்று போதுமே. அதில் தோன்றும் சரோவைப் போன்ற எழிலான இளம் மனைவிக்கு, 1961ல் எத்தனை இளைஞர்கள் ஏங்கினார்களோ...!
தேவர் படங்கள் ஒன்று தவறாமல்
காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை, காட்டுக்குள்ளே திருவிழா, காடு வெளைஞ்ச நெல்லிருக்கு என்று தொடங்கி, மூலிகையின் பெருமை பேசும் நீண்ட பயனுள்ள பட்டியல்...
‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்’ பாடலில் திருநாவுக்கரசரின் தேவாரம் எதிரொலித்து கண்ணதாசனின் இலக்கிய செழுமை நங்கூரம் பாய்ச்சும்.
பணத்தோட்டம் படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவில்’ கேட்டுக் கொண்டே செத்து விடத் தோன்றும்!
‘திருடாது ஒருநாளும் காதல் இல்லை என்பேன்
எனையே அவன் பால் கொடுத்தேன்
என் இறைவன் திருடவில்லை’
அதில் மேற்கண்ட வரி வைரமுத்துவால் முரளி நடித்த ‘ஊட்டி’ சினிமாவில் மீண்டும் கையாளப் பட்டது.
‘தாய்ச் சொல்லைத் தட்டாதே’யில் பிரிவாற்றாமையைப் பிரசவிக்கும்
‘பூ உறங்குது பொழுதும் உறங்குது’ வைரமுத்துவை உலுக்கிய பாடல்.
டி.ஆர். ராமண்ணாவின் படங்களில் எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி பங்கேற்ற ஒவ்வொரு டூயட்டும் அவற்றின் மாறுபட்ட காட்சி அமைப்புகளுக்காகவும் நெஞ்சில் நிலைத்தவை.
1. பெரிய இடத்துப் பெண் - மேற்கத்திய நடனம் ஆடியவாறு ‘அன்று வந்ததும் அதே நிலா’
2. பணக்கார குடும்பம் - டென்னிஸ் மட்டையோடு ‘பறக்கும் பந்து பறக்கும்’
3. அதிலேயே இன்னொரு இனிய கீதம் - ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா... ’ - கொட்டும் மழையில் கட்டை வண்டிக்கு அடியில்.
4. பறக்கும் பாவை - சர்க்கஸ் வலையில் - ‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... ’
5. மற்றொன்று பாத்ரூமில் குளித்தவாறே, ‘உன்னைத் தானே ஏய்
சரோவின் பாட்டு ராசி எண்ணற்றக் கவிஞர்களின் அழியாப்புகழோடு ஒன்று கலந்தது.
உவமைக்கவிஞர் சுரதாவை மறக்க முடியாமல் நினைவு படுத்துவது
நாடோடி மன்னனின் எம்.ஜி.ஆர். -சரோ இடம் பெற்ற ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ எனத் தொடங்கும் டூயட்.
அதில்‘எழில் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை’ போன்ற வரிகள் இலக்கியத்தேன் ஊறிய பலாச் சுளைகள்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கல்யாணப் பரிசு படப் பாடல்கள் இன்னமும் பன்னீர் தெளிக்கின்றன.
பாகப்பிரிவினையின் ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’ ஒலித்த பிறகே கண்ணதாசன் வீட்டில் பண மழை பெய்யத் தொடங்கியது.
கே. டி. சந்தானம் மிகச் சிறந்த கவிஞர் மற்றும் நடிகர். சிவாஜியின் முதல் குரு. ரகசிய போலீஸ் 115ல் அம்முவின் அப்பாவாக நடித்திருப்பார். ‘என்ன பொருத்தம்’ என்ற பாடல் காட்சியில் அவரைக் காணலாம்.
அவரது புகழுக்குக் கலங்கரை விளக்கமாக ஆடிப்பெருக்கு படத்தின்
1.தனிமையிலே இனிமை காண முடியுமா 2. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...என்றும் நிலைத்திருக்கிறது.
தெய்வத்தாய், படகோட்டி, அன்பே வா படப் பாடல்களால்
வாலியின் வசந்தம் நிரந்தரமானது
.இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.
‘அன்னக்கிளி’ படப் பாடல்களுக்கு முன்பு அவருக்கு விலாசம் தந்தவை கலங்கரை விளக்கம் படத்தில் ஏக்கத்தின் ஊஞ்சலாக பி. சுசிலாவின் குரலில் பவனி வந்த
1.என்னை மறந்ததேன் தென்றலே, மற்றும்
2. சரோ சிவகாமியாகவும் எம்.ஜி.ஆர். நரசிம்ம பல்லவனாகவும் காட்சி தந்த ‘பொன் எழில் பூத்தது புது வானில்’ என்கிற ஏழு நிமிட டூயட்.
தாய்ச் சொல்லைத் தட்டாதே படத்தின்
பட்டுச் சேலை காற்றாட’ இன்னமும் பரவசமூட்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
May be an image of 2 people and people standing

சுயேச்சை சின்னத்தில் அ.தி.மு.க.,வினர் போட்டியிடும் நிலை!

  உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ADMK, election, அதிமுக சின்னம்


தமிழகத்தில் காலியாக உள்ள 510 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 12 பதவிகளுக்கும் ஊரக உள்ளாட்சியில் 22 பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிட அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியினர் மனு தாக்கல் செய்தனர். அவர்கள் அ.தி.மு.க., வேட்பாளர்கள் என்பதற்கு அடையாளமாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், 'படிவம் ஏ, பி' ஆகியவற்றில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும்.


latest tamil news



அவ்வாறு கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும். தற்போது கட்சி தலைமைப் பதவி தொடர்பாக, பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் கட்சி வேட்பாளர்களுக்கு உரிய படிவம் வழங்கப்படவில்லை. அதனால் மனு தாக்கல் செய்த அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சுயேச்சை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.

Wednesday, June 29, 2022

கட்சி பாகுபாடின்றி செயல்படுவது தான் #நாட்டு_பற்று..!

எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை...,
நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய #ஜனாதிபதி"
அரசியல் வேறுபாடுகளை கடந்து...
காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக செயல்பட்ட பண்பாளர் #வாஜ்பாய்.
இந்திய பிரதமராக #நரசிம்மராவ்
செயல்பட்ட போது...
எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார்.
அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், #ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது.
அப்போது,
"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டு''மென்ற மசோதாவை ஐநாவில் வல்லரசு நாடான #அமெரிக்கா #பாக்கிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது..!
அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர். ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் #சரியாக_அமையாத காரணத்தால்...அந்த மசோதா வெற்றிபெற்று விடும் என்பதையும், அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்னும் தகவல் இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக #இந்திய_ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவும்,
''ஐநா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவரான #வாஜ்பாயே சிறந்தவர்'' என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று...குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை, தனி விமானத்தில் #ஐநா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
வல்லரசு நாடுகளில் அமெரிக்கா மற்றும்
#சீனா மசோதாவிற்கு ஆதரவு.
#ரஷ்யா_மட்டுமே மசோதாவிற்கு எதிர்ப்பு.
பிரான்சும் பிரிட்டனும் முடிவெடுக்காத நிலை. இந்த நிலையில் ஐநா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை #அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதியது. பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின..
அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம், #அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன...
வாஜ்பாயி -
"எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை #வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு... அமெரிக்காவால் கொண்டுவரப் பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால்...
இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு #இந்தியா ஆதரவளிக்கும்"..என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
பத்திரிகைகள் -
"எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை #இந்திய அரசு ஏற்குமா"..? - என்று வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பினர்...
வாஜ்பாயி -
"நான் எதிர்கட்சித் தலைவராக இங்கு வரவில்லை... இந்தியாவின் #தலைமைப் #பிரதிநிதியாக வந்துள்ளேன்... ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள்... எனது முடிவே இந்தியாவின் முடிவு" என்று கூறினார்.
வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி
வெளியான சில மணி நேரங்களில்... பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக #நேசக்கரம் நீட்டின. காரணம், அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது.
அடுத்த நாள்,
இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா #தோல்வியடைந்து விடுமென்பதை உணர்ந்த அமெரிக்கா அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது.
மாபெரும் வெற்றியாளராக இந்தியா திரும்பிய வாஜ்பாயை.... வழக்கத்திற்கு மாறாக... விமான நியைத்திற்கு சென்று இந்திய #ஜனாதிபதி வரவேற்றார்.
இந்தியாவை எந்த கட்சி வேண்டும் என்றாலும் ஆட்சி செய்யலாம்...அந்த ஆட்சியை குறை சொல்லலாம் ஆனால் ஆளும் கட்சியை விமர்சிப்பதற்காக #இந்தியாவை விமர்சிக்க கூடாது...
பாஜக அரசை பாசிச அரசு என்று நீ தரம் குறைக்கும் போது வருத்தம் இல்லை...
இந்திய அரசை #ஒன்றியரசு என்று
தரம் குறைக்கும் போது வேதனையாக உள்ளது...
பாஜவை விமர்சிக்கலாம்..
மோடியை விமர்சிக்கலாம்... ஆனால்
#ஜெய்ஹிந்த் என்ற தேசிய முழக்கத்தை விமர்சிக்க கூடாது
மோடி அரசை விமர்சிக்கும் போது
நீ எதிர்கட்சி... #ஜெய்ஹிந்த் என்ற நமது தேசிய முழக்கத்தை விமர்சிக்கும் போது நீ தேசதுரோகி....
பாரத் மாதா கி ஜெய்..!
May be an image of 6 people, people standing and text

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...